அந்தணர் என்போர் அறவோர்.

நேற்றை விஜய் டீவியின் மதன் திரைப்பார்வையில் எவனோ ஒருவன் திரைப்பட விமர்சனத்தில் மாதவன் பிராமணர் என்றால் சாதுவானவர்கள் யாருக்கும் எந்தக் கேடும் விளைவிக்கமாட்டார்கள் என்றார். அதாவது இந்தப்படத்தின் கதாநாயகன் ஸ்ரீதர் வாசுதேவன் பாத்திரத்தை ஏன் பிராமணராகக் காட்டினீர்கள் என மதன் கேட்ட கேள்விக்கு மாதவன் அளித்த பதில்.

இந்தியாவில் எத்தனையோ பிரச்சனைகளுக்கு காரணம் பிராமணர்கள் என்ற உணமை மாதவனுக்கும் தெரியவில்லை, மதனுக்கும் தெரியவில்லை.

ஆனால் ஈழப்பிரச்சனையில் அப்பாவித் தமிழர்களையும் புலிகளாக்கும் ஹிந்து ராம், மணி சங்கர் ஐயர், சோ, தினமலர் குருமூர்த்தி, ஈழத்தமிழர்களின் பாஸ்போர்ட்டைப் பார்க்க விரும்பும் மாலன் போன்றவர்கள் சாதுவான அந்தணர்களா?

என்ன கொடுமை சார்?

6 கருத்துக் கூறியவர்கள்:

மு. மயூரன் சொல்வது:

சே...

இந்த நேர்காணலை பார்க்காமல் விட்டுவிட்டேனே!


மாதவன் ஒரு பிராமணர். அப்படித்தான் கூறுவார்.

இது ஒருவகை மூளைச்சலவை. பிராமணர்கள் பற்றிய ஒரு பொய்யான பிரசாரத்தினுள் பிராமணர்களே மூழ்கடிப்பட்டிருக்கும் நிலை.

ஆனாலும் எனக்கு மாதவனின் அழகும் மென்மையும் பிடிக்கும்.

இதைச் சொன்னால் என் நண்பரொருவருக்கு (பெண்) கோபம் வரும். கமல்ஹாசன், மாதவன் என்று இரண்டு பிராமணர்களைத்தான் நீ வடிவென்று சொல்லுவாய் என்று. பிராமண வடிவுதான் வடிவென்று போதிக்கப்பட்ட மூளைச்சலவை நிலைக்கு நானும் ஆளாகிப்போய்விட்டேன் என்பதுதான் கோபத்துக்கு காரணம்.

T.V.ராதாகிருஷ்ணன் சொல்வது:

Brahmanan sattaththukku bayandhavan,samoogaththukku bayandhavan.Iyalbahave udal balam kuraindavan.Oru vibaththai paarhthal kooda bayandhu oodubavan.Avanai paavam en ellorum seendugireergal

ROSAVASANTH சொல்வது:

இந்த சீமான் என்ற பெரியார் பெயரை சொல்லிக்கொண்டிருக்கும் உயிரினத்திற்கும், இந்த படத்திற்கும் என்ன சம்பந்தம்? அன்னியன் மாதிரி ஒரு படத்தில் பங்கு வகிக்க அவருக்கு என்ன மெண்டலா?

கோவி.கண்ணன் சொல்வது:

//அந்தணர் என்போர் அறவோர். //

திருவள்ளுவர் 'அந்தணர்' என்று 'பார்பனர்களைக்' குறித்து எழுதவில்லை. அந்தணர் என்றால் சான்றோர் என்று பொருள், சாதி தொடர்புடையது அல்ல.

இடுகைக்கு பொறுத்தமில்லாத தலைப்பு.

பாரதி சொன்னதை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளூங்கள்.

"பார்ப்பானை ஐய்யர் என்ற காலமும் போச்சே"

குட்டிபிசாசு சொல்வது:

பகவானே,
கலி முத்திடுத்து!! எவனோ ஒருவன் படத்தில் இவ்வளவு நுண்ணரசியல் இருக்குனு சொல்லுராளே!! மெய்யாலுமா?

பொன்னர் சொல்வது:

இந்தக் கட்டுரையையும் படித்துப்பாருங்கள் பார்ப்பனர்கள் ஈழத்தமிழருக்கு இழைக்கும் துரோகம் விளங்கும்.

http://seythialasal.blogspot.com/2007/12/blog-post_8066.html