
மேற்கத்திய தொலைக்காட்சிகளில் நடக்கின்ற ரியாலிட்டி ஷோக்கள் வேறு வேறு வடிவங்களில் தமிழ் தொலைக்காட்சியையும் ஆக்கிரமித்துவிட்டது. மெஹா சீரியல் அழுகைகளில் இருந்து மக்களை ஓரளவேணும் இந்த நிகழ்ச்சிகள் காப்பாற்றினாலும் அண்மைக்காலமாக இவை மக்களை ஏமாற்றுவதுபோல் தோன்றுகின்றது, கிரிக்கெட்டில் எப்படி மேட்ச் பிக்சிங் செய்து வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டதோ அதேபோல் இந்த நிகழ்ச்சிகளிலும் இவர் தான் வெற்றியாளர் என்ற முடிவு நடுவர்களாக இருப்பவர்களால் முதலிலேயே எடுக்கப்பட்டு பின்னர் மக்களை ஏமாற்ற எஸ் எம் எஸ் வாக்களிப்புகள் இணையத்தில் வாக்களிப்புகள் என்ற கபட நாடகங்கள். ஒரு சிறிய தொகைமக்கள் தான் இந்த வாக்களிப்புகளில் கலந்துகொண்டாலும் நிகழ்ச்சியைப் பார்க்கும் அனைவரும் ஏமாற்றப்படுகின்றார்கள்.
விஜய் டிவிதான் இந்த நிகழ்ச்சிகளை ஆரம்பித்த புண்ணியத்தைச் சேர்த்ததுடன் இந்நிகழ்ச்சிகளில் நாடகங்களையும் அழுகைகளையும் நிகழ்த்தி என்றும் முதல்வனானது.
ஜோடி நம்பர் ஒன் என்ற நடன நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடுபவர்களுக்கு இடையில் ஏற்படும் சண்டைகள் சச்சரவுகள் என்பவற்றை ஒளிபரப்பி தங்கள் கஸ்டத்தைக் காட்டியது. சிம்பு பிருத்திவிராஜ் உமா ரியாஸ் சண்டையும் அந்தச் சண்டையில் சிம்பு தனக்கு நடிக்கத்தெரியாது என்ற உண்மையைச் சொன்னதும் ஹைலைட்டான விபரங்கள். உமா ரியாஸ் பிருத்திவி ஜோடிக்கு முதல் பரிசுகொடுக்கப்படவேண்டும் என்பதற்காக அவர்கள் திட்டமிட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். அதன்பின்னர் மக்களுக்கு யார் வெற்றிபெறப்போகின்றார்கள் என்ற முடிவு நடுவர்களின் காமெண்ட்ஸிலிருந்து தெரியவந்துவிட்டது.
சில நடுவர்கள் ஏதோ உயர் நீதிமன்றத்தில் தீர்ப்புச் சொல்வதுபோல் பேசுவதும் சிலர் அதிக உணர்ச்சி வசப்பட்டு மேடைக்குச் சென்று ஆண் பெண் வேறுபாடின்றி கட்டிப்பிடி வைத்தியம் செய்வதும் திரும்பதிரும்ப பார்க்க சகிக்கமுடியாத காட்சிகள்.
விஜயை வழக்கம் போல் காப்பி பண்ணி சன் ஒரு நிகழ்ச்சி தொடங்கியது பின்னர் இடையில் நிறுத்திவிட்டது. ஆனால் கலைஞர் டிவி தன் பங்குக்கு மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியை வெற்றிகரமாக நாலாவது பகுதியாக(சீசன் 4) நடத்துகின்றது.
மானாட மயிலாட சர்ச்சைகளுக்கு உட்பட்டிருந்தாலும் அதில் ஆடிய சில கலைஞர்களுக்கு படங்களில் ந்டிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. ஒருவரின் கலைத்திறமையை உலகிற்க்கு காட்டும் நிகழ்ச்சிதான் ஆனால் தமிழருக்கு என்ரு ஒரு கலாச்சாரம் இருக்கின்றது. அந்தக் கலாச்சாரத்தை அனேகமான தடவை இந்த நிகழ்ச்சி மீறியிருக்கின்றது. அதிலும் நமீதாவும் ரம்பாவும் நடுவர்களாக இருக்கின்றபோது உடைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லையென்றே தோன்றுகிறது.
நடந்துமுடிந்த சீசன் 3 இறுதிப்போட்டியில் பலரின் பாராட்டைப்பெற்ற ஒரு ஜோடிக்கு எந்த இடமும் கிடைக்கவில்லை அதற்க்கு காரணம் அவர்கள் அதிகம் ஓட்டுப்பெறவில்லையாம். ஒருவர் எத்தனை ஓட்டுக்கள் வேண்டுமானாலும் அளிக்கலாம் என அறிவிக்கின்றார்கள். பரிசுத்தொகை 10 லட்சம் ஆகவே நடனம் ஆடும் ஒரு ஜோடி ஒரு லட்சம் பெறுமதியான ஓட்டுகளை தங்கள் மொபைலில் இருந்து அளித்து அந்தப் பணத்தைப் வெற்றியீட்டிப் பெற்றுக்கொள்ளலாம்.
சூப்பர் சிங்கர் என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் இந்தமுறை வெற்றி பெற்றவரைவிட இன்னொருவர் மிக அழகாகப் பாடினார் ஆனால் நிகழ்ச்சி ஆரம்பமான காலத்தில் இருந்து நடுவர்கள் அனைவரும் பெற்றி பெற்றவரையே புகழ்ந்து தள்ளினார்கள். இணையத்தளத்தில் ஏனோயோருக்கு வாக்களிக்கும்போது பக்கம் வேலை செய்யவில்லை ஆனால் அவருக்கு வாக்களித்தால் மட்டும் பக்கம் வேலை செய்து உங்கள் ஓட்டுக்கு நன்றிகள் என செய்தி வருகின்றது. (இந்தப் பிரச்சனை பற்றி விஜய் டிவியின் கருத்துக்களத்தில் பெரிய விவாதமே நடைபெற்றது).
பாடல்போட்டியில் பாடுபவருக்கு பின்னால் அரைகுறை ஆடைகளுடன் ஆடுவார்கள். இதெல்லாம் தேவையா பாடுகின்றவரின் கவனத்தை திசைதிருப்பாதா?
பெரும்பாலும் பாட்டுப்போட்டிகளில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் பாடவும் வருகின்றார்கள் நடுவர்களாகவும் இருக்கின்றார்கள். இந்த முறை விஜய் டிவி சூப்பர் சிங்கரில் முன்னாள் தொகுப்பாளினிக்கு கல்தா கொடுத்த காரணமே இன்னொருவரை(பெரிதாக பாடமுடியாதவர்) நடுவர்கள் அடிக்கடி புகழ்ந்தது. இதனால் அவர் கோவித்துக்கொண்டுபோய்விட்டார்.
ரிமோட் உன் கையில் தானே இதெல்லாம் பார்க்கவேண்டுமா எனக்கேள்வி கேட்பவர்களுக்கு ஓரிருவர் பார்ப்பதனால் தான் அவர்கள் செய்யும் தவறுகள் புரிகின்றது.
நமது நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல பத்திரிகை ஒன்றில் தொலைக்காட்சி வானொலி நிகழ்ச்சிகளைப் பற்றிய கருத்துக்களை பல வாசகர்கள் ஒவ்வொரு வாரமும் எழுதுகின்றார்கள். அவர்களின் எந்தக் கருத்துக்களையும் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் கண்டுகொள்வதேயில்லை. 
நமீதா ஒருமுறை ஒரு நிகழ்ச்சிக்கு அணிந்துவந்த உடை
நல்லதொரு நிகழ்ச்சியைக் கத்தியே கொல்லவேண்டுமா அணுகுங்கள் டிடி
தமிழைக் கொல்வது இந்த நாயர் தம்பதிகளுக்கு அல்வா சாப்பிடுவதுமாதிரி.
யுகேந்திரனாக இருந்தவரை யுகேந்திரன் வாசுதேவ நாயராக்கிய பெருமை விஜய் டிவியையே சாரும்.
மக்களை ஏமாற்றும் ரியாலிட்டி ஷோக்கள்
எழுதியது வந்தியத்தேவன் at 3 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் கலைஞர், சன், சினிமா, மானாட மயிலாட, விஜய்
தடம் மாறும் சன் டிவி
கிட்டத்தட்ட தட்ட 16 ஆண்டுகளுக்கு முன்னர் 90களின் ஆரம்பத்தில் தூரதர்சனில் ஒளியும் ஒலியும் வயலும் வாழ்வும் மட்டுமே பார்த்துவந்த தமிழ்மக்களுக்கு (இலங்கைவாழ் மக்களுக்கு செய்திகளும் கலையரங்கம் என்ற இரண்டுவாரங்களுக்கு ஒருமுறை ஒளிபரப்பாகும் ஒரு தமிழ் நிகழ்ச்சி)சன் தொலைக்காட்சி புத்துயிர்கொடுத்தது, 
புதிய படங்கள், திரைவிமர்சனம், டாப் டென், சிறந்த நகைச்சுவைகள், பாடல்கள், போட்டிகள் என புதிய புதிய நிகழ்ச்சிகள் மக்களும் சன்னுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாகத் தொடங்கிவிட்டார்கள். சில நாட்களில் தமிழர்களை மெல்லக் கொன்றுகொண்டிருக்கும் விஷமான மெஹா சீரியல்களின் வருகை என சன் மெல்ல மெல்ல தன் கிளைகளை படரவிட்டது.
அத்துடன் திமுகவுக்கு பிரச்சாரம் செய்யும் டிவி என்ற அரசியல் முத்திரையும் குத்தப்பட்டது. சில ஆண்டுகளின் பின்னர் அதிமுகவும் தன் அரசியல் பணிகளுக்காக ஜெயா டிவியை தொடங்கியது. இப்படியே சட்டர்லைட் யுகத்தில் பல தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டன.
தன் சிறப்பான தனித்துவமான நிகழ்ச்சிகளால் மக்கள் மத்தியில் சன் பிரபலமடையத் தொடங்கியது. இதன் வெளிப்பாடக சினிமாப் படங்களில் செய்தி என்றால் தூரதர்சனைக் காட்டியவர்கள் சன்னைக் காட்டத்தொடங்கினார்கள்.
தற்போது சன்னில் பல நிகழ்ச்சிகள் மறைந்து மெஹா சீரியல்களே முற்றுமுழுதாக ஆக்கிரமித்துள்ளது. சன்னை விட்டு மறைந்த சில நல்ல நிகழ்ச்சிகள்.
ஸப்தஸ்வரங்கள் :
ஏவிரமணனால் தொகுத்தளிக்கப்பட்ட சுபஸ்ரீ தணிகாசலத்தால் தயாரிக்கப்பட்ட பல இளம் பாடகர்களை வெளி உலகிற்கு கொண்டுவந்த நிகழ்ச்சி. சுபஸ்ரீயின் வெளியேற்றத்தாலும் ஏவிரமணனின் வெளியேற்றத்தாலும் சில நாட்கள் இன்னொருவரால் நடாத்தப்பட்டு தற்போது நிறுத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி.
இந்த வார உலகம்:
கடந்த வாரம் உலகில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளைப் பற்றிய தொகுப்பு. பின்னர் சன் நியூசில் சிலகாலம் நடத்தினார்கள். அத்துடன் நிறுத்திவிட்டார்கள்.
நீங்கள் கேட்டபாடல் :
விஜயசாரதியால் பல நாடுகளுக்கும் சென்று அந்த அந்த நாடுகள் பற்றிய தகவல்களுடன் ஒளிபரப்பான பாடல் நிகழ்ச்சி. பாடல் நிகழ்ச்சியைவிட விஜயசாரதி தொகுத்தளிக்கும் நாடுகள் பற்றிய சுவையான செய்திகளால் மக்கள் மனதில் இடம் பிடித்தது.
மலரும் மொட்டும் மற்றும் குட்டிஸ் சாய்ஸ்:
சிறுவர்களுக்கான நிகழ்ச்சி, சுட்டி டிவியின் வருகையுடன் இந்த நிகழ்சிக்கும் கல்தா.
இளமை புதுமை :
சொர்ணமால்யாவை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி. காலேஜ் மாணவமணிகளை வைத்து இவர் செய்த ரகளை. பல இளைஞர்களின் விருப்பத்திற்க்குரிய நிகழ்ச்சி. சொர்ணமால்யாவிற்க்கு பின்னர் அர்ச்சனா, அர்ச்சனாவின் திருமணத்திற்க்கு பின்னர் ஹேமா சிங்ஹா என அழகிகளின் கை மாறி இப்போ கிடப்பில் போடப்பட்டுவிட்டது. 
பாட்டுக்கு பாட்டு :
பல ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருந்த நிகழ்ச்சி கலைஞர் டிவியின் வருகையின் பின்னர் ரமேஷ் பிரபாவின் வெளியேற்றத்தால் அப்படியே இடம் பெயர்ந்து அதே தலைப்பில் அதே ஸ்பொன்சருடன் கலைஞர் டிவியில் வெற்றி நடைபோடுகின்றது.
மீண்டும் மீண்டும் சிரிப்பு :
இதுவும் கலைஞர் டிவியின் வருகையால் காணாமல் போன நிகழ்ச்சி. மூர்த்தியின் காமெடியும் இறுதியில் இவர்கள் சொல்லும் மெசேயும் பிரபலம். இப்போ கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகின்றது.
காமெடி டைம் :
மயில்சாமியால் இரவு வேளையில் நடத்தப்பட்டு பின்னர் சிட்டிபாபு அர்ச்சனாவின் வணக்கம், வணக்கம், வணக்கத்தால் ரொம்பவும் பிரபலமான நிகழ்ச்சி. அர்ச்சனாவின் விலகலுக்குப் பின்னர் இன்னொருவர் (சுப்ரஜா என நினைக்கின்றேன் அவரையும் இப்போ எந்த சானலிலும் காணவில்லை) சிட்டிபாபுடன் இணைந்து செய்தார். பின்னர் அப்படியே மறைந்துபோய்விட்டது. அதன் புதியவடிவம் ஆதித்யாவில் காலை மாலை வேளைகளில் பலரால் தொகுத்தளிக்கப்படுகின்றது.
திரைவானம், கொண்டாட்டம் :
மோனிகாவால் தொகுத்தளிக்கப்பட்ட திரைப்படங்களின் சிறப்புக்காட்சிகள். திரைவானத்தில் ஒரே மாதிரி கதை அல்லது காட்சிகள் உள்ள இரண்டு படங்களைக் காட்டுவார்கள். கொண்டாட்டம் நகைச்சுவைத் துணுக்குகள் நிறைந்த காட்சிகள் காட்டப்படும் நிகழ்வு.
அசத்தப்போவது யாரு :
சன் இன்னொரு சானலில் இருந்து லாவகமாக சுட்ட பல நிகழ்ச்சிகள் இருக்க ஒரு சானலில் இருந்து நிகழ்ச்சியை மட்டுமல்ல அந்த நிகழ்ச்சியின் இயக்குனர், நிகழ்ச்சி செய்பவர்கள் என பலரையும் தூக்கி இயக்குனருக்கும் மதன்பாபு சிட்டிபாபுவுக்கும் ஜால்ரா அடித்த நிகழ்ச்சி. அதிலும் பத்தோ பதினொரு படங்கள் மட்டும் நடித்த சிட்டிபாபுவை காமெடி ஜாம்பவான் எனும்போது வரும் சிரிப்பு இவர்களின் பார்போர்மன்ஸ் பார்க்கும் போது வருவதில்லை. ஓப்பனிங் பேட்ஸ்மனாக மதுரை முத்து ஒருவரையே பல கால நம்பியிருந்த நிகழ்ச்சி. சில வாரங்களாக ஏனோ நிறுத்திவிட்டார்கள். இதே நிகழ்ச்சியின் இன்னொரு காப்பியான எல்லாமே சிரிப்புத்தான் கலைஞர் டிவியில் களை கட்டுகிறது. குறிப்பாக ரோபோ சங்கர் அரவிந்த் இருவரின் பார்போமன்ஸ் பலரையும் கவர்ந்துள்ளது.
விஜய் டிவியில் இருந்து எப்படி ஒரு நிகழ்ச்சியை சன் முற்றுமுழுதாக தன் வசமாக்கியதோ அதேபோல் சன்னுக்கு நியூட்டனின் மூன்றாம் விதிப்படி கலைஞர் டிவி செய்துகாட்டியது.
இப்படிப் பல நிகழ்ச்சிகளை நிறுத்தி தற்போது சன் வெறும் மெஹா சீரியல்களை ஒளிபரப்பி மக்களின் சிந்தனைகளை பாழாக்குகின்றது. கோலங்கள் என்ற தொடர் கடந்த 5 வருடமாக மக்களை அறுத்துக்கொண்டிருக்கின்றது. பெரும்பாலான மெஹா சீரியல்களின் கதைகள் ஒரே மாதிரியான கதைதான் பழிவாங்கல், குடும்பப் பிரச்சனை. இன்னொருத்தி கணவன் மேல் ஆசைப்படும் பெண், இன்னொருவன் மனைவி மேல் ஆசைப்படும் ஆண். இரண்டு கல்யாணம், கள்ளக்காதல் என ஒரே திசையில் மக்களை முட்டாளாக்கும் தொடர்கள்.
சன்னில் தற்போது எந்தவிதமான நகைச்சுவைத் தொடர்களோ அல்லது விடாது கருப்பு, ருத்ரவீணை போன்ற திரில் தொடர்களோ இல்லை. சனி ஞாயிறுகளில் அம்மன் தொடர்போட்டு அறுக்கின்றார்கள்.
சன்னின் இந்த தடம் புரளல்களுக்கான காரணமாக எனக்குப் பட்டவை:
1. கலைஞர் டிவியின் வருகையும் வளர்ச்சியும் என்னதான் கண்கள் பனித்து இதயம் இனித்தாலும் டிவியைப் பொறுத்தவரை சன்னின் தற்போதைய எதிரி கலைஞர் தான். அதனால் தான் அவர்கள் ரஜனி படம் போட்டால் இவர்களும் ரஜனி படம் போடுவார்கள். அவர்கள் வெள்ளிக்கிழமைகளில் ஸ்பெசல் ஷோ போட்டால் இவர்கள் உடனே அதே நேரத்தில் கேடிவியில் சூப்பர் ஹிட் திரைப்படம் போடுவார்கள். இந்தப்போட்டி இசையருவிக்கும் சன் மியூசிக்கும் கூட உண்டு.
2. கேடிவி, ஆதித்யா, சுட்டிடிவி, சன் மியூசிக் என ஒவ்வொரு வகைக்கும் ஒரு சானல் இருப்பதால் சன்னில் மெஹா சீரியல் மட்டும் போதும் என்ற மனப்பான்மை. கேடிவியில் உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் பத்தாயிரம் முறையாக ஒளிபரப்பான படமே ஒளிபரப்பாகும். லியோனி நடித்த கங்கா கெளரி படம் தியேட்டரைவிட கேடிவியில் அதிக நாட்கள் ஒளிபரப்பானது.
3. சன் குழுமம் படம் தயாரிக்க அல்லது மற்றவர்கள் தயாரித்ததை வாங்கி விநியோகிக்கத் தொடங்கியதன் பின்னர் தங்கள் இதுவரை தயாரித்த மொக்கை படங்களை மாத்திரம் டாப் டென்னிலும் சூப்பர் சீன்ஸ்சிலும் ஒளிபரப்பாக்கி மக்கள் வெறுப்பைச் சம்பாதித்தது. மாசிலாமணி விளம்பரத்தைக் கண்டாலே ஆட்டோமடிக்காக ரிமோட் சானல் மாற்றுகின்றது.
4. சன் மியூசிக்கில் முன்னர் போல் அழகான தொகுப்பாளினிகள் இல்லை. இருந்தவர்களும் இசையருவிக்கு போய்விட்டார்கள். அத்துடன் சன் மியூசிக்கில் தங்கள் படத்தின் மொக்கைப்பாடல்களே போடுகின்றார்கள். அயன் பாடல்களைப் போட்டுமுடித்ததும் "சான்ஸே இல்லை சூப்பர் டூப்பர் பாடல் பார்த்தோம்" என தொகுப்பாளினி தினமும் சொல்லும் போது அவரை அடிக்கத் தான் மனம் வருகின்றது.
5. சன் நியூஸ் பக்கத்தில் பாரிய அனர்த்தம் நடந்தபோதும் அமெரிக்காவில் 4 பேர் விபத்தில் செத்ததும், ரஷ்யாவில் மாடு கன்னு போட்டதும் என நடுநிலையான செய்திகளால் வெறுப்படையச் செய்தது.
6. ஆதித்யா காமெடிச் சானலில் சிரிக்கமட்டும் என மற்றவர்களைத் துன்புறுத்தின் ஒரு நிகழ்ச்சி செய்கிறார்கள். இதனை இதுவரை எவரும் கண்டிக்கவில்லை. அத்துடன் ஒரே காமெடியையே திரும்ப திரும்ப ஒளிபரப்புகிறார்கள். எத்தனையோ இடைக்கால கவுண்டமணி காமெடிகள். பழைய நாகேஷ் சுருளி சோ காமெடிகள் இருக்க மீண்டும் மீண்டும் வடிவேலும் விவேக்கும் தான்.
சன் தன்னைப் பற்றி சுயபரிசோதனை செய்யவேண்டும் இல்லையென்றால் அடுத்த இடத்தில் இருக்கும் டிவிக்கள் முதல் இடத்தைப் பிடித்துவிடும்.
எழுதியது வந்தியத்தேவன் at 3 கருத்துக் கூறியவர்கள்
கலைஞருக்கு வயது ஒன்று.
ஒரு சின்ன பிளாஷ் பேக்:
எழுதியது வந்தியத்தேவன் at 13 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் கலைஞர், சன், தொலைக்காட்சி, விஜய், ஜெயா

