Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts

2012 திரும்பிப்பார்க்கின்றேன்


2012ல் இந்தப் பதிவுடன் வெறும் ஐந்தே ஐந்து பதிவு எழுதிய பெருமை என்னையே சாரும். 2011 டிசம்பரில் இருந்து மேற்கு வேல்ஸில் வசித்தபடியால் வேலைப்பளு காரணமாக பெரிதாக எழுதவில்லை. வாழ்க்கையில் சில படிப்பினைகள் பல அனுபவங்கள் எல்லாம் கற்றபெற்ற இடமாக வேல்ஸ் என்னை மாத்தியது. அன்பான மனிதர்கள் அமைதியான கடல் குட்டிக்குட்டி மலைகள் நிறைந்த அழகான நகரம் வேல்ஸ்.


2012ல் மறக்கமுடியாத பல சம்பவங்கள் என் வாழ்க்கையில் இடம்பெற்றாலும் குறிப்பிடுச் சொல்லும்படியான வரலாற்று நிகழ்வு லண்டன் 2012 ஒலிம்பிக்கில் மரதன் ஓட்டமும் வேக நடையும் நேரடியாக பல்லின மக்களுடன் பார்த்து ரசித்ததுதான். ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் நடந்த நிகழ்வுகளுக்கு டிக்கெட் கிடைக்காதபடியால் போகமுடியவில்லை, ஆனாலும் ஒலிம்பிக் ஆரம்பமாவதற்க்கு முன்னர் பெரியப்பு கானாபிரபா, மாயா இருவருடனும் ஒலிம்பிக் கிராமத்தை சுத்திபார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.(லண்டனில் எம்மைச் சந்தித்த சரித்திர நிகழ்வை ஏனோ பெரியப்பு கானா இன்னும் எழுதவில்லை).  


என் வாழ்க்கையின் நீண்ட நாள் ஆசை ஒன்று இந்தவருடம் நிறைவேறியது, கிரிக்கெட்டின் மெக்கா எனப்படும் லோர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து எதிர் தென்னாபிரிக்க டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் நேரடியாக பார்த்தேன். ஒரு புனித தலத்திற்க்கு சென்ற பீலிங் எனக்கு ஏற்பட்டது.


சென்ற ஆண்டில் நான் ரசித்த சில விடயங்கள்

கங்கம் ஸ்டைல்
தென்கொரிய பாடகர் Psy யினால் கடந்த ஜூலையில் பரபரப்பரப்பாக பாடப்பட்டு யூடூயூப்பில் பல மில்லியன் ஹிட் அடித்த பாடல். தென்கொரியர்களின் மேற்கத்திய மோகத்தை நக்கலடித்த பாடல். இதனை இன்னும் பிரபலமாக்கியது மேற்கிந்திய வீரர் கிறீஸ் கெய்ல். வழக்கம் போல இதனையும் ஹாரீஸ் ஜெயராஜ் விட்டுவைக்கவில்லை, துப்பாக்கி கூகுள் கூகுள் பாடலில் கொஞ்சம் சுட்டுவைத்திருக்கின்றார்.

Fifty Shades of Grey
E.L.James இனால் 2011ல் எழுதப்பட்டு 2012ல் சக்கைபோடு போட்ட நாவல், பெரியதொழிலதிபர் கிறே மீது பல்கலைக்கழக மாணவி அனஸ்தீசியா ஸ்டீலுக்கு ஏற்படும் காதல் மிகவும் அழகாக எழுதியிருக்கின்றார். காதலும் அதனூடு சேர்ந்திருக்கும் காமத்தையும் ஆபாசமின்றி எழுதியிருப்பதனாலோ எனவோ பெரும்பாலான பெண்களைக் கவர்ந்திழுத்திருக்கின்றது. பிரித்தானியாவில் ரயில்கள் பஸ்கள் என சகல போக்குவரத்துகளிலும் பிரயாணிக்கும் பெரும்பாலன பெண்களின் கைகளில் இந்தப் புத்தகம் சிலகாலம் தஞ்சமடைந்திருந்ததை அவதானித்தேன். 

முகனூலர் (பொது)
மைந்தன் சிவா 
மைந்தனின் பேஸ்புக் ஸ்டேடஸ்கள் பெரும்பாலும் அரசியல், விளையாட்டு, மொக்கை, சினிமா என பலதையும் பேசும் சில நேரங்களில் காரசாரமான விவாதங்களும் நடைபெறும். பெண்கள் பற்றிய கருத்துக்களை எந்தவிதமான பயமின்றி தெரிவிக்கும் மர்மம் இன்னும் பிடிபடவில்லை.

முகனூலர் (காதல்)
தங்கமயில் புருஷோத்தமன்
காதலாகிக் கசிந்து இவர் இடும் பேஸ்புக் ஸ்டேடஸ்கள் கெளதம் வாசுதேவ மேனன் படங்கள் போலவே இருக்கும். காதல் அனுபவம் இல்லாமல் இவரால் இப்படி எழுதமுடியாது என்பது வெளிப்படை உண்மை, ஆனாலும் சிங்கம் இன்னும் சிங்கிளாக இருப்பதாகவே அடிக்கடி அறிக்கை விடுகின்றார்.

கீச்சர்
திருக்குமார்
திருக்குமார் அண்ணாவின் கீச்சுக்களில் பெரும்பாலும் ஒரு மெல்லிய நகைச்சுவை இழையோடும். இடையிடையே ராஜா ரகுமான் என சீரியசாக கீச்சினாலும் அண்மைக்காலமாக அவரின் கீச்சுகள் குறைந்துவிட்டன, அவரின் இந்தக் கீச்சின் பின்னர் நிலைமை மாறியிருக்கலாம்
Thirukkumar ‏@Thirukkumar
நேற்று எங்கள் திருமண நாள் இன்று தான் ஞாபகம் வந்தது #பூகம்பம்

பெரும்பாலும் பிடித்தமான வலைகளையும் காத்திரமான வலைகளையும் வாசித்தாலும் அவற்றிற்கு பின்னூட்டம் இடுவது என்பது மிகவும் குறைவு, பேஸ்புக்கில் அவர்கள் அதனை பகிர்ந்திருந்தால் ஒரு லைக்குடன் விட்டுவிடுவேன். அதனால் இந்தம்முறை எனக்குப் பிடித்தவலை என எதையும் குறிப்பிடமுடியாமல் உள்ளது. இதேவேளை படித்த பதிவு என்றால் கங்கோன் தனது லப்டொப் காணமல் போனது பற்றி தனது மொபைலில் இருந்து இட்ட ஆங்கிலப் பதிவு.

Being careless doesn’t help

படம்  : நண்பன்

பாடல் : அஸ்கு லஸ்கா : படம் :  நண்பன்

சிறந்த நடிகர் : விஜய் சேதுபதி(பீட்ஷா)

சிறந்த நடிகை : சமந்தா ( நீதானே என் பொன்வசந்தம்)

சிறந்த இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் (நண்பன்)

சிறந்த இயக்குனர் : ஏ,ஆர், முருகதாஸ்(துப்பாக்கி)

சிறந்த கவிஞர் : மதன் கார்க்கி(நண்பன்)

தொலைக்காட்சித் தொகுப்பாளர்  : இந்த வருடம்எவரும் பெரிதாக என்னைக் கவரவில்லை, கோபிநாத் அழகாகப் பேசினாலும் எதிரில் இருப்பவர்களின் பெயரைக்கூட ஒருநாளும் கேட்பதில்லை மஞ்சள் சட்டை போட்டவர் சொல்லுங்கள், கட்டம் போட்ட சட்டை போட்டவருக்கு இன்றைய பரிசு என்பார், இது என்ன நாகரீகமோ கோபிக்குத் தான் வெளிச்சம். ஹாலிவூட் கிங் தொகுத்துவழங்கும் வெங்கட் பிரபு ஓரளவு நல்லாச் செய்தாலும் தங்கள் குடும்ப விடயங்களையும் தலை பற்றியும் ரொம்ப ஓவராகப் பேசுகின்றார். 

சென்ற ஆண்டின் சொந்த செலவில் சூனியம் 
வேறை யாருமல்ல வழக்கு பாயுதே புகழ் பாடகிதான்.

வடபோச்சே
மாயன் கலண்டரின் படி உலகம் அழியப்போவதாக நினைத்த சிலரை ஏமாத்திய மாயன் கலண்டர்.

அனைத்து நட்புகளுக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள். 2013 அனைவரின் வாழ்விலும் சந்தோஷத்தை வழங்க எல்லாம் வல்ல இயற்கையைப் பிரார்த்திக்கின்றேன். 

2011 சில நிகழ்வுகள் நினைவுகள்



அரசியல்


இலங்கை

இந்த ஆண்டில் இலங்கையின் அரசியலைப் பொறுத்தவரை பாரிய மாற்றம் எதுவும் நடக்கவில்லை. யாழ்ப்பாண மாகாணசபைத் தேர்தலில் அரசுக்கு விழுந்த அடியும் கிரிஸ் மேனும் தான் ஹைலைட்டான விடயங்கள். அதை விட ரணில் விக்ரமசிங்காவுக்கு உள்கட்சிக் குடைச்சல்கள் இன்னும் சுவாரசியமான விடயம். சங்கிலியன் சிலை விவகாரமும் கொஞ்சம் சூடுபிடிச்சு பின்னர் அப்படியே ஆறிவிட்டது.

இந்தியா

தமிழகத்தில் திமுக ஆட்சி கலைந்து மீண்டும் ஜெ ஆட்சிக்கு வந்தார். தமிழகத்தில் தேர்தல் நடத்தாமல் 5 ஆண்டுக்கு ஒரு முறை திமுகவுக்கும் அதிமுகவுக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுத்தால் தேர்தல் செலவு மிச்சமாகும். கனிமொழி கைது, கலைஞர் டிவி சிக்கல், அன்னா ஹசாரே, முல்லைப் பெரியாறு, தண்ணிப் பிரச்சனை என பல சிக்கல்கள் இன்னமும் நீடிக்கின்றது. இவ்வளவையும் சாமாளிக்கும் திறமைக்காக மன்மோகன் சிங்குக்கு இன்னொரு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்.

பிரிட்டன்

வில்லியம் கேட் மிடல்டென் திருமணம் இந்த வருட ஏப்ரலில் நடந்தது. என்னதான் மக்கள் அரச குடும்பத்தின் மேல் வெறுப்பாக இருந்தாலும் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட நிகழ்வாக ரோயல் வெடிங் நிகழ்ந்தது. வில்லியத்தின் மனைவி இளவரசி கேட்டை விட அவரின் தங்கை பிப்பா மிடெல்டன் தான் இப்போ பிரிட்டன் பத்திரிகைகளின் ஹாட் கேர்ல்.

ஆகஸ்ட் 6 ந்திகதி நடந்த இங்கிலாந்து கலவரங்கள். டொட்டனத்தில் மார்க் டக்கன் என்ற கறுப்பின இளைஞர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அந்தப்பகுதி மக்கள் பொலீசாருக்கு எதிராக நடத்திய வன்முறை லண்டனில் தொடங்கு மஞ்செஸ்டர், லிபர்பூல், பேர்மிங்ஹாம், நொட்டிங்காம் என இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கும் பரவி பல்லாயிரம் பவுண்ட்ஸ் பெறுமாதியான பொருட்கள் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டன.


உலகம்

ஜனவரின் தென் சூடான் என்ற புதிய நாடு உருவாகியது. எகிப்தில் சர்வாதிகார ஆட்சி நடத்திய ஜனாதிபதி முகாபேயின் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் சிரியா, லிபியா போன்ற நாடுகளுக்கு இந்த எழுச்சிகள் பரவி கடாபியின் சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டமையும் காடபியின் மரணமும் இந்த ஆண்டின் மிக முக்கியமான அரசியல் நிகழ்வாகும்.

மே முதலாம் திகதி ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அறிவிப்புச் செய்தார்.

நோர்வே ஒஸ்லோவில் நடந்த குண்டு வெடிப்புகளும் துப்பாக்கிச் சூடும் இந்த ஆண்டில் மறக்கமுடியாத இன்னொரு நிகழ்வாகும்.

ஒக்டோபர் 1ல் உலக சனத்தொகை ஏழு பில்லியனாக உயர்ந்தது.

ஜ‌ப்பான் புக்கோஷிமா நிலநடுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்தமையும் அப்பிளின் சக ஸ்தாபகர் ஸ்ரிவ் ஜாப்ஸ் மற்றும் சி மொழியின் தந்தை டெனிஸ் ரிச்சி ஆகிய இருவரின் இறப்பு தொழில்நுட்ப சமூகத்தை உலுப்பிய மரணங்களாகும்.

விளையாட்டு

1983 ஆம் ஆண்டுக்குப் பின்னர் டோணி தலைமையிலான அணி மீண்டும் கிரிக்கெட்டில் உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. எதிர்த்து விளையாடிய இலங்கை அணி மீண்டும் ரன்னர்ஸ் ஆகவே வந்தது, உலகக்கோப்பை வென்ற்
கையுடன் இங்கிலாந்து வந்த இந்திய அணியினருக்கு இங்கிலாந்து மரண அடிகொடுத்ததும் அதே இங்கிலாந்தை இந்திய ஆடுகளங்களில் வைத்து இந்தியா பழிக்கு பழி வாங்கியதும் விறுவிறுப்பான கிரிக்கெட் நிகழ்வுகள் ஆகும்.


தனது நூறாவது சதத்தை இன்றைக்கு அடிப்பார் நாளைக்கு அடிப்பார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின் இந்தப் பதிவு பிரசுரமாகும் வரை(மெல்பேர்ன் டெஸ்ட் முடிய‌ இன்னும் 2 நாட்கள் இருக்கின்றது)அடிக்கவில்லை. 

சச்சினின் ஒருநாள் உலகசாதனையான 200 ஓட்டங்களை அவரின் சகாவான சேவாக்கினால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக முறியடிக்கப்பட்டது. 

இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் தலைவர் ஜோன் டெரி அன்டன் பேர்டினென்ட்க்கு எதிராக தெரிவித்த இனவாத கருத்துக்கள், இங்கிலாந்து நட்சத்திர வீரர் வெயன் ரூனியின் மேட்ச் பிக்ஸிங் சர்ச்சைகளால் கால்பந்தாட்ட உலகம் சூடுபிடித்தது.


சினிமா

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை மாறன் சகோதரர்களின் மொனோபோலியில் இருந்து ஓரளவு தப்பியதால் சில படங்கள் உண்மையாகவே ஹிட் ஆகின. தமிழ் சினிமாவுக்கு தேசிய விருதுகளை சென்ற ஆண்டுப்படங்கள் அள்ளிக்கொடுத்ததை இந்த வருடம் அறிவித்தார்கள். கொலைவெறிப்பாடல் பட்டி தொட்டி என உலகமெல்லாம் பரவியது இந்த ஆண்டிலைதான்.

உலக அழகி ஐஸ்வர்யாயின் பிரசவமும் இந்த ஆண்டின் பரபரப்பான விடயம் நவம்பர் மாத அழகிக்கு இன்னொரு நவம்பர் மாத அழகி. நவம்பர் மாதத்தில் பிறந்தாளே ஒரு தனி அழகுதான். 

புத்தகம்

இந்த ஆண்டில் பெரும்பாலும் வலை வாசிப்பே வாசித்ததால் பெரிதாக புத்தகம் எதுவும் வாசிக்கவில்லை. இலங்கை சென்றிருந்தபோது கானாப் பிரபாவின் கம்போடியாவும், அகிலனின் மரணத்தின் வாசனையும் வாங்கி விமானத்தில் வாசித்தேன். கம்போடியாவில் கானா கவர்ந்தார், மரணத்தின் வாசனையில் அகிலன் நடு வானில் கலங்கவைத்தார். இரண்டு புத்தகம் பற்றிய விமர்சனமும் எழுதவேண்டும் (எப்போ? இன்னும் ஆறுமாதத்தில் தானே என நீங்கள் கேட்பது புரிகின்றது)

நான் 

2011 ல் என் வாழ்க்கையில் ஒரு மாதம் மிகவும் சந்தோஷமாக இருந்தது ஒக்டோபர் 23ல் தொடங்கி நவம்பர் 22 வரை சொந்த மண்ணில் நண்பர்களுடன் உறவினர்களுடன் கழித்த நாட்கள் என்றும் இனிமையானவை. இந்த குறுகிய காலத்தில் வடக்கே யாழ்ப்பாணம் கிழக்கே மட்டக்களப்பு தெற்கே கதிர்காமம் என மேற்கில் கொழும்பிலிருந்த நான் திக் விஜயம் செய்து மகிழ்ந்தேன். மத்திய மலைநாட்டுக்குச் செல்லும் சந்தர்ப்பம் மட்டும் கிடைக்கவில்லை.



என் தெரிவில் சில சிறந்த 2011 விருதுகள்
வலைத்தளம்
சாதாரணவனின் மனது என விசரன் எழுதும் வலை. இவரின் சில கதைகள் அட என ஆச்சரியமூட்டுபவை. புலம் பெயர் தேசத்து விடயங்களை தனக்கே உரிய பாணியில் கலகலப்பாக எழுதுகின்றார். 

ட்விட்டர் 
சண்முகன் (இலங்கை) 
முழு நேர ட்விட்டராக மாறி பலரின் ட்விட்டகளை ரீட்விட்டுவதிலும் தன்னுடைய சில ட்விட்டுகளிலும் கவர்ந்தவர். http://twitter.com/#!/shanmugan10
ராஜன் லீக்ஸ் (இந்தியா) 
இவரின் சில ட்விட்டுக்கள் ஆச்சரியமாக இருக்கும்.
http://twitter.com/#!/RajanLeaks

வலைப்பதிவர்
மருதமூரான் (இலங்கை)
http://maruthamuraan.blogspot.com/
நடுநிலையான கருத்துக்களுடன் பலதும் எழுதுகின்றார், மொக்கை மட்டும் இன்னும் கைகூடவில்லை, அதே நேரம் இவர் பேஸ்புக்கில் இடும் காதல் வசனங்களுக்கு நான் ரசிகன்


ஜாக்கி சேகர் (இந்தியா)  http://www.jackiesekar.com/
இவரின் திரைப்பட விமர்சனங்களும் வெள்ளந்தித்தனமான சில பதிவுகளும் என்னை மிகவும் கவர்ந்தது.


படம்  : எங்கேயும் எப்போதும்


பாடல் : என்னமோ ஏதோ : படம் கோ


சிறந்த நடிகர் : அஜித் (மங்காத்தா)


சிறந்த நடிகை : அஞ்சலி ( எங்கேயும் எப்போதும்)


சிறந்த இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ் (கோ)


சிறந்த இயக்குனர் : சரவணன் (எங்கேயும் எப்போதும்)


சிறந்த கவிஞர் : மதன் கார்க்கி  ( கோ, நண்பன்)


தொகுப்பாளர்  : சிவகார்த்திகேயன் (இவரின் அது இது எது பார்க்காமல் விடுவதில்லை)


சென்ற ஆண்டின் சொந்த செலவில் சூனியம்

வடிவேல்

சும்மா இருக்காமல் அழகிரியின் சொல்லைக் கேட்டு விஜயகாந்தை எதிர்க்கின்றேன் என தேர்தல் மேடைகளில் மொக்கைப்போட்டு இப்போ வீட்டில் அடைந்து கிடைக்கின்றார். பாவம் கைப்புள்ளை கருணாநிதியின் நிதியை மட்டும் நம்பி மோசம் போய்விட்டார்.



அனைத்து நண்பர்களுக்கும் இனிய புதுவருட வாழ்த்துக்கள். 2012 உங்கள் வாழ்வில் வசந்தங்களையும் சந்தோஷங்களையும் கொண்டுவர வாழ்த்துக்கின்றேன்.




ஹாட் அண்ட் சவர் சூப் 01-06-2011

அரசியல்

இலங்கை அரசியல் ஐநாவின் அறிக்கையுடன் ஒருபக்கம் போக இன்னொரு பக்கமோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சா கெளத புத்தரின் வம்சாவழி என பிரபல சிங்களக் கலைஞர் ஜெக்சன் அண்டனி தெரிவித்த கருத்துக்கு சில சிங்கள ஆங்கில இணைய தளங்களில் பலத்த கண்டனம் எழுந்திருக்கின்றது.

ஜெக்சன் அண்டனியின் கருத்தின் பின்னால் பலமான அரசியல்தலைகள் இருப்பதுடன் இது ஏதோ ஒருவகையான பிரச்சார உத்தியோ என்ற சந்தேகமும் ஏனோ ஏற்படுகின்றது. பெரிய இடத்து விவகாரம் நமக்கு வேண்டாமே.

இந்தியாவில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மீண்டும் ஜெ தன் சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிவிட்டார். பேயாட்சி முடிந்து இப்போ பிசாசு ஆட்சி தொடங்கியுள்ளது தமிழக மக்கள் தான் பாவம். எந்தக் குற்றமும் செய்யாத அப்பாவி கனிமொழி என்ற ஒரு குழந்தையின் தாய் மேல் சிபிஐ பொய் வழக்குப்போட்டு திகாரில் தள்ளிவிட்டது. கடந்தவருடம் செம்மொழியான தமிழ்மொழியாம் என கருணாநிதியின் புகழ்பரப்பிய மாநாட்டின் சுவடுகள் மறையும் முன்னர் கம்பிக்கு பின்னால் கனிமொழியாம் என சாதாரண பொதுமக்கள் பாடத்தொடங்கிவிட்டார்கள்.

கருணாநிதி வினைத்த வினைகளை அறுவடை செய்யத்தொடங்கிவிட்டார். வடிவேலுக்கு வடை மட்டுமல்ல வாய்ப்பும் போச்சே. சன் தொலைக்காட்சி ஜெயாபுகழைக் கொஞ்சம் கொஞ்சமாக பாடத்தொடங்குகின்றது. இனிமேல் கண்களும் பணிக்காது இதயமும் இனிக்காது.

விளையாட்டு

ஐபிஎல் திருவிழா முடிவடைந்துவிட்டது. சென்னை சூப்பர் சிங்கங்கள் மீண்டும் கோப்பையை வென்றுவிட்டார்கள். தோணிக்கு இனி வெல்லுவதற்க்கு எந்தக் கோப்பைகளும் இல்லை, ராசிக்கார கப்டன்.

நேற்று முந்தினம் வேல்ஸ் தலைநகர் கார்டிவ்வில் நடந்த இங்கிலாந்து இலங்கை அணிகளுக்கிடையான டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகனாக மழை தெரிவாகும் எனப் பார்த்தால், தில்ஷானின் புதிய வீரர்களோ இரண்டாவது இனிங்கிஸில் போனமச்சான் திரும்பிவந்தான் என்றதுபோல அணி நடை பயின்றார்கள். இங்கிலாந்துப் பத்திரிகைகளே இந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் இங்கிலாந்துப் பத்திரிகைகள் பெரும்பாலும் தங்கள் அணியை மிக உயரத்தில் வைத்து அல்லது மிகவும் கீழே வைத்தே எழுதுவார்கள் ஒரு நாளும் நடுநிலையாக(மன்னிக்கவும் நடுநிலை என்பது பதிவுலகத்தில் கெட்டவார்த்தை)எழுதுவதில்லை.

அடுத்த போட்டி கிரிக்கெட்டின் மெக்காவான லோர்ட்ஸில் நடக்கவிருக்கின்றது. காலம் நேரம் கைகூடினால் மெக்காவைத் தரிசிக்கின்ற எண்ணமிருக்கின்றது,

சினிமா

அண்மைக்காலத்தில் பெரிதாக எந்தப் படமும் பார்க்கவில்லை, கோ மட்டும் ஓரளவு பிடித்திருக்கின்றது ஆனாலும் அயனில் இருந்த பரபரப்பான திரைக்கதை கோ ல் மிஸ்சிங். அஜ்மல் பாத்திரம் மூலம் படித்த இளைஞர் தலைவராக அரசியலுக்கு வந்தால் நக்சல்போல் தான் இருப்பார் என்ற நச்சுக் கருத்தை ஏன் கே,வி.ஆனந்த் விதைத்தார் என்ற மர்மம் புரியவில்லை. சாதாரணமாக பார்த்தால் நல்ல படம் வினவுக் கண்ணுடன் பார்த்தால் பல இடங்களில் முதலாளித்துவம் மின்னுகின்றது. பியா போல் ஒரு பெண் எதாவது ஊடகத்தில் வேலை செய்தால் நான் அங்கே ஆணி பிடுங்க தயார் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

சின்னத்திரை

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் இம்முறை உலகளவில் என கனடா, சிங்கப்பூர், நோர்வே என சில நாடுகளில் இருந்து பங்குபெறும் சில வெளிநாட்டவர்களுடன் நடக்கின்றது. இலங்கை, இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், ஆஸீ எல்லாம் உலகத்தில் தமிழர்கள் வாழாத நாடுகளா? திவ்யா என்ற ஒரே ஒரு பாடல் பாடிய பிரபல பாடகி தமிழைக் கொல்வதுடம் மலையாளிகள் உன்னியுடனும் சுஜாதாவுடனும் மலையாளத்தில் கொஞ்சுவது ஏதோ கேரளா சேனல்கள் பார்ப்பது போல் இருக்கின்றது. சிவகார்த்திகேயன் சில நேரங்களில் தொகுத்து வழங்குவது அருமையாக இருக்கின்றது. அதிலும் சுஜாதா பேசும் தமிழுக்கு ஒரு எபிசோட் தேவை, எத்தனை நல்ல தமிழ்ப் பாடகர்கள் பாடகிகள் இருக்கும் போது தமிழ் ஒழுங்காக கதைக்கத் தெரியாத சுஜாதாவை வைத்திருப்பதன் மர்மம் என்னவோ?

இந்தவாரம் விஜய் தொலைக்காட்சியின் ஆஸ்தான் அறிவிப்பாளர் நீயா நானா புகழ் கோபிநாத் நிகழ்ச்சி தொகுத்து வழங்குகின்றார், வழக்கம் போல கோபி கலக்கல். நடுவராக நித்யஸ்ரீ கலந்துகொள்கின்றார் நித்யஸ்ரீயின் தமிழ் கேட்கும் போது இன்பத்தேன் பாய்கின்றது.

வலையுலகம்

சில காலமாக வலையுலகத்தில் விகடன், குமுதம் மலர்களில் வரும் கட்டுரைகளைச் சிலர் அப்படியே எடுத்து ஏதோ தாங்கள் எழுதியதுபோல் எழுதுவது வலைப்பதிவர்களுக்கு ஏற்படும் அவமானமாகவே நான் கருதுகின்றேன். உண்மைத் தமிழன் போல் சிலர் மட்டும் அடைப்புக்குள் அந்தப் பத்திரிகைகளுக்கு நன்றி சொல்கின்றார்கள். இதைவிட கேலிக்குரியது என்னவென்றால் அந்தப் பதிவை கொப்பி பேஸ்ட் செய்த பதிவரின் அபிமானிகள் அந்தக் கட்டுரையே அவரே எழுதியதுபோல் அவரைப் புகழச் செய்வதைப் பார்க்கும் போது பதிவை வாசிக்காமல் டெம்ளேட் புகழுரைபோல் தெரிகின்றது. ஆரோக்கியமாகச் செல்லும் வலையுலகத்தில் வேண்டாமே இந்த ஈயடிச்சான் காப்பி பதிவுகள். சிலவேளை இவைதான் கிரியேட்டிவ்வான பதிவுகளோ தெரியவில்லை.

என் உளறல்

மீண்டும் நீண்ட நாட்களின் பின்னர் வலையுலகம், ஆனாலும் இந்த நிலை தொடருமா என்பது சந்தேகமே. ஆனாலும் இடைக்கிடை வலையுலகத்தை எட்டிப் பார்பேன். அதாவது இம்சை தொடரும். எத்தனையோ விடயங்கள் எழுதமுயற்சித்து இடைவெளியில் நிற்கின்றது.

படித்ததில் சிரித்தது

திமுகவுடன் கூட்டணி இல்லையென்றால் காங்கிரஸ் 234 தொகுதிகளிலும் வென்றிருக்கும் யுவராசா தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர்.

படித்ததில் ரசித்தது.

கடவுள் மனிதர்களை படைத்தான், மனிதன் இசையைப் படைத்தான், இசை இளையராஜாவைப் படித்தது (யூடுயூப்பில் யாரோ ஒரு இசைஞானி பக்தன்)

பார்த்ததில் ரசித்தது

இதுவும் இசைஞானியின் பாடல் தான். ரஜனியின் ஸ்டைலும் பூர்ணிமா ஜெயராம் அலைஸ் பாக்கியராஜின் நடனமும் கலக்கல். பூர்ணிமா தனது மகள் சரண்யாவை விட அழகாகவே இருக்கின்றார். அதேபோல் தான் ராதாவின் மகள் கார்த்திகாவும்.

உபகண்டத்தில் கிரிக்கெட் யுத்தம்

இலங்கை, இந்தியா, வங்களாதேஷ் ஆகிய 3 தென்னாசிய நாடுகள் இணைந்து நடத்தும் 2011ன் உலகக் கிண்ணப்போட்டிகளின் பரபரப்புகள் ஆரம்பிக்க இன்னும் இரு நாட்களே இருக்கின்றன. எதிர்வரும் சனிக்கிழமை வங்கதேசம் மிர்பூரில் இந்தியாவை வங்கதேசம் எதிர்கொள்ளும் முதலாவது போட்டியுடன் உலகக் கிண்ணம் ஆரம்பமாக இருக்கின்றது.


அணிகளின் பலம் பலவீனம் போன்றவற்றை கணித்து எழுத நேரம் காணதபடியால் என்னுடைய பார்வையில் ஒரு மெல்லிய நுனிப்புல் மேய்தல் மட்டுமே.

அவுஸ்திரேலியா

நடப்புச் சாம்பியனும் நான்கு தடவைகள் உலகக்கிண்ணத்தை சுவீகரித்த ஆஸி இந்தமுறை கொஞ்சம் பலமிழந்த நிலையில் காணப்பட்டாலும் பொண்டிங், கிளார்க், டேவிட் ஹசி, மிச்சல் ஜோன்சன், பிரட் லீ, வட்சன் போன்றவர்களின் அனுபவங்களால் எதுவும் நடக்கலாம்.

கவனிக்கவேண்டியவர் ; ரிக்கி பொண்டிங்

எதிர்வுகூறல் : அரை இறுதி

வங்கதேசம்

சொந்தமண் என்ற பலமும் ஷாகிபுல் ஹசனின் தலைமைத்துவமும் வங்கதேசத்தின் பலமாக இருப்பதுடன், தமீம் இக்பால், அப்டுர் ரஷாக், அஷ்ரபுல் போன்றவர்களும் அணிக்கு கை கொடுத்தால் வங்கதேசம் ஏனைய அணிகளுக்கு அதிர்ச்சிகளை ஏற்படுத்தலாம்.

கவனிக்கவேண்டியவர் : தமீம் இக்பால்

எதிர்வுகூறல் : கால் இறுதி

கனடா

தங்களது குழுவில் சிம்பாவே அல்லது கென்யாவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுக்கலாம் மற்றும் படி இன்னமும் முன்னேறவேண்டிய அணி.

கவனிக்கவேண்டியவர் : ஜோன் டேவிசன்

எதிர்வுகூறல் :முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்

இங்கிலாந்து

ஆஷஸ் தொடரில் ஆஸியை சொந்த மண்ணில் வைத்து வீழ்த்தினாலும் ஒருநாள் போட்டிகளில் பரிதாபமாக தோற்றபடியால் பலராலும் உலகக்கிண்ணத்தில் சவாலாக இருக்கும் அணி எனக் கருதப்பட்டு தற்போது முதற்ச் சுற்றிலோ அல்லது காலிறுதியுடனோ வெளியேறும் அணிகளில் ஒன்றாக கருதப்படும் அணி. பீட்டர்சன், கொலிங்வூட், பெல், ஸ்ரோஸ், ரவி போபாரா என சிலரின் கைகளில் தான் இவர்களின் வெற்றி தங்கியிருக்கின்றது.

கவனிக்கவேண்டியவர் : பீட்டர்சன்

எதிர்வுகூறல் :கால் இறுதி

இந்தியா

ஒருநாள் போட்டிகளின் தரவரிசையில் இரண்டாமிடத்தில் இருப்பது சொந்த மண் போன்ற அனுகூலங்களை மட்டுமல்ல அனுபவ சச்சின், சேவாக், டோணி, ரெய்னா, முக்கிய நேரங்களில் கைகொடுக்கும் யூசுப் பதான் என மிரட்டல் வீரர்களினாலும் மச்சக்காரன் டோணியினாலும் இந்தியா இறுதிப்போட்டிக்கு வரலாம் வந்தால் உலகக்கோப்பை அவர்களுக்குத் தான்.

கவனிக்கவேண்டியவர் : யூசுப் பதான்

எதிர்வுகூறல் :இறுதிப்போட்டி

அயர்லாந்து

இன்னொரு சாதாரண அணி நெதர்லாந்தை வெல்லலாம் இல்லையென்றால் மேற்கிந்திய தீவுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம்.

கவனிக்கவேண்டியவர் : ட்ரென்ட் ஜோன்சன் (பந்துவீச்சாளர்)

எதிர்வுகூறல் : முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்

கென்யா

2003 உலககிண்ணப்போட்டியில் இலங்கைக்கும் மேற்கிந்தியத் தீவுக்கும் அதிர்ச்சி கொடுத்த அணி. சிம்பாவே கனடா போன்ற் நாடுகளுடன் வெற்றி பெற முயற்சிக்கலாம்.

கவனிக்கவேண்டியவர் :ஸ்டீவ் ரிக்கலோ

எதிர்வுகூறல் : முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்

நெதர்லாந்து

இன்னொரு சாதாரண அணி அயர்லாந்தை வெல்லலாம் இல்லையென்றால் மேற்கிந்திய தீவுகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கலாம்.

கவனிக்கவேண்டியவர் : ரையன் ரென் டொச்செட்டே (எசெக்ஸ் சகலதுறை வீரர் கவுண்டிப்போட்டிகளில் கலக்கியவர்)

எதிர்வுகூறல் : முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்

நியூசிலாந்து

பாகிஸ்தான் வங்கதேசம் என அண்மைக்காலமாக அடித்து துவைக்கப்பட்ட அணி, மக்கலம், வெட்டோரி, ரைடர், டைலர் எனப் பல அனுபவஸ்தர்கள் இருந்தும் எதோ ஒன்று குறைவதனால் பிரகாசிக்க முடியவில்லை.

கவனிக்கவேண்டியவர் :டானியல் வெட்டோரி

எதிர்வுகூறல் :கால் இறுதி

பாகிஸ்தான்

உட்கட்சிப்பூசலினால் கடைசி நேரம் வரை யார் தலைவர் என்ற விடயம் தெரிந்திருக்காத அணி, அவ்ரிடி, மிஷ்பா உல் ஹக். அப்துல் ரசாக், அக்தர், கம்ரன் அக்மல் என எதிரணியினரைப் பயமுறுத்தும் வீரர்கள் இருப்பதால் காலிறுதிப்போட்டி உறுதி காலிறுதியில் கலக்கினால் 1999 போல் இறுதிப்போட்டிக்கு வரும் வாய்ப்புகள் உண்டு, ஒற்றுமையான அணியாக விளையாடினால் எதுவும் நடக்கலாம்.

கவனிக்கவேண்டியவர் : அப்ரிடி

எதிர்வுகூறல் : கால் இறுதி

தென்னாபிரிக்கா

இதுவரை எந்தவொரு உலககிண்ணத்திலும் இறுதிப்போட்டிக்கு வராத துரதிஷ்டம் பிடித்த அணி. இம்முறை கிண்ணத்தைப் கைப்பற்றும் வாய்ப்பு இருந்தாலும் இறுதிப்போட்டியில் இந்தியா அல்லது ஆஸியுடம் மோதினால் நிலமை கவலைக்கிடம் தான். கலிஸ், ஸ்மித், டீவிலியர்ஸ், டுமினி, அம்லா என அதிரவைக்கும் துடுப்பாட்ட வரிசை பலமாக இருந்தாலும் பந்துவீச்சுத்தான் கொஞ்சம் பலவீனமாக இருக்கின்றது.

கவனிக்கவேண்டியவர் :ஜாக் கலீஸ்

எதிர்வுகூறல் :அரை இறுதி

ஸ்ரீலங்கா

போட்டிகளை இணைந்து நடத்தும் நாடு என்பதால் முதல் சுற்றில் சொந்த மைதானங்கள் பலம். சங்ககாரா, டில்ஷான், ஜெயவர்த்தனா, தரங்கா, கப்புஹெதரா என பலமான துடுப்பாட்ட வரிசை தனது இறுதி உலககிண்ணத்தில் விளையாடும் முரளியின் சுழல் என இலங்கை அணிக்கு சாதகமான அம்சங்கள் பல. இறுதிப்போட்டியில் இந்தியாவைச் சந்தித்தால் கிண்ணம் பறிபோகலாம்.

கவனிக்கவேண்டியவர் :முரளிதரன்

எதிர்வுகூறல்: இறுதிப் போட்டி

மேற்கிந்தியத்தீவுகள்

ஒருகாலத்தில் உலகையே அச்சுறுத்திய நாடு இன்றைக்கு வேஸ்ட் இண்டிசாக மாறியது பரிதாபமே. கெய்ல், சர்வான், சந்திரபோல், பிரவோ என பலமான துடுப்பாட்ட வரிசை இருந்தாலும் பந்துவீச்சு பலவீனம் தான். கிரிஷ் கெய்லுக்கு சாமி வந்தால் மட்டும் ஏதாவது அதிசயம் நிகழலாம் மற்றும் படி வந்தார்கள் சென்றார்கள் அணிதான். காலிறுதிக்கு வருவதே கனவுதான்.

கவனிக்கவேண்டியவர் :சந்திரபோல்

எதிர்வுகூறல் :முதல் சுற்றுடன் வெளியேறலாம்.

சிம்பாவே

இன்னொரு வந்தார்கள் சென்றார்கள் அணி. ஒரு காலத்தில் கொஞ்சமாவது ஏனைய அணிகளை மிரட்டிய அணி இப்போ அரசியல் சிக்கல்களால் சின்னாபின்னமாகிவிட்டது.

கவனிக்கவேண்டியவர் :பிரன்டன் டைலர்

எதிர்வுகூறல் : முதல் சுற்றுடன் வெளியேறிவிடும்.

எந்தவொரு விளையாட்டிலும் எதிர்வுகூறல்கள் இலகுவாக இருந்தாலும் மைதானமும் அந்த அணிகளின் அந்த நேரத்து திறமையும் சிலவேளைகளில் வெற்றியைப் பறித்துவிடும் என்பதால் எந்தவொரு எதிர்வுகூறலையும் நம்பவேண்டாம்.

ஹாட் அண்ட் சவர் சூப் 16-02-2011

அரசியல்

உலகம்
சில நாட்களாக எகிப்தில் நடைபெற்ற மக்கள் புரட்சியின் விளைவாக ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் பதவியில் இருந்து விலகி எகிப்தில் இன்னொரு இடத்தில் தலைமறைவாக இருக்கின்றார். துனிஷியா, சூடான் வரிசையில் எகிப்தும் சர்வாதிகார ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றுள்ளது.

முபராக் தனது அதிகாரங்களை எல்லாம் இராணுவ கவுன்ச்லிட‌ம் கொடுத்துவிட்டு பதவி விலகியுள்ள நிலையில் தற்போது இராணுவத்தில் உள்ள இரண்டு அதிகாரிகளிடம் பதவிக்கான இழுபறி நடைபெறுவதாகவும் செய்திகள் கூறுகின்றன. அதே நேரம் இராணுவ கவுன்சில் விரைவில் அரசின் யாப்பை மாற்றவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

சமூக வலைத்தளங்களான ட்விட்டர், பேஸ்புக் ஆகியமூலம் எகிப்திய இளைஞர்கள் இந்தப் புரட்சியை உலகம் எங்கும் பரப்பியமை குறிப்பிடத்தக்கது. இதேபோல் புரட்சிகள் நமது தென்னாசிய நாடுகளில் எப்ப வெடிக்குமோ? அல்லது அதற்கான சாத்தியம் இருக்கின்றதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்தியா

இன்று இலங்கைத் தூதரகத்தின் முன்னால் திமுகவினர் மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யப்போகின்றார்களாம். மத்தியிலும் மாநிலத்திலும் இவர்களினது ஆட்சிதான் நடக்கின்றது, இந்த நிலையில் இவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவது தேர்தலுக்கான கண்துடைப்பே ஒழிய வேறு ஒன்றும் இல்லை. தனது குடும்ப உறுப்பினர்களின் அமைச்சு பதவிகளுக்காகவும் தேர்தல் கூட்டணிக்காகவும் டெல்லிக்கு பறக்கும் தாத்தா, வழக்கம் போல் பதவி விலகல், உண்ணாவிரதம் போன்ற ஓரங்க நாடகங்களை நிகழ்த்தியிருக்கலாமே? ஓஓஓ அப்படிச் செய்தால் ஆ.ராசாவுடன் அவரும் சிறைக்குள் போகவேண்டுமே. ஸ்பெக்ட்ரம் என்ற மூக்கணாங்கயிறு இப்போ சோனியாவின் கையில் இருப்பதால் தாத்தாவும் அவரது இளவரசியும் டெல்லி சொல்ப்படிதான் நடக்கவேண்டும்.

எகிப்துபோல் தமிழ்நாட்டு இளைஞர்களும் சில நாட்களாக இணையத்தளங்களில் அரசுக்கு எதிராக குரல் எழுப்பத் தொடங்கியுள்ளார்கள். இந்த நிலை தேர்தல் வரை நீடித்து அரசைக் கவிழ்க்குமா? இல்லை வழக்கம்போல் திமுக பணபலத்தால் மீண்டும் ஆட்சியைப் பிடிக்குமா?

பயணமும் யுத்தம் செய்யும்

பயணம் பிரகாஷ்ராஜின் தயாரிப்பில் ராதாமோகனின் இயக்கத்தில் வெளியான ஒரு த்ரில்லர். விமானக் கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். பணயக் கைதிகளாக இருக்கும் பொதுமக்களை எப்படி சிறப்பு அதிரடிப்படையினர் அரசியல்வாதிகளின் சுயநல சிந்தனைகள், மீடியாக்களின் டீஆர்பி ரேட்டிங்குகள் போன்ற இடர்களில் இருந்து மீட்பதை இரண்டரை மணி நேர கடுகதி வேக திரைக்கதையில் ராதாமோகன் சிறப்பாகாவே சொல்லியிருக்கின்றார். எம்.எஸ்.பாஸ்கரின் நடிப்பு படத்தின் சிறப்பு. அதேபோல் நீண்ட நாட்களுக்குப் பின்னர் நாகர்ஜீனா தமிழ்ப்படத்தில், இதயத்தை திருடாதேயில் பார்த்ததுபோலவே இப்பவும் இளமையாகவே இருக்கின்றார். விமானப் பணிப்பெண்ணாக வரும் நடிகையும் இன்னொரு நடிகையும் அழகாகத் தான் இருக்கின்றார்கள்.

பாலம் என்றொரு படம் முரளி நடித்து பல காலத்துக்கு முன்னர் வெளியானது, அந்தப் படத்திற்க்குப் பின்னர் வெளி வரும் கடத்தல் சம்பந்தப்பட்ட படம் இதுவாகத்தான் இருக்கவேண்டும். படத்தின் சிறப்பம்சம் பாடல்களே இல்லை.

யுத்தம் செய் சேரன் கதை நாயகனாக நடித்து மிஷ்கினின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இன்னொரு த்ரில்லர். படத்தின் வேகம் தான் பலவீனமே, மிகவும் ஆமை வேகத்தில் மெஹா சீரியல் பார்த்ததுபோல் போவது சினத்தை தருகின்றது. எடிட்டர் சில இடங்களில் கத்தரி போட்டு படத்தை அஞ்சாதே போல வேகமாக ஆக்கி இருந்தால் நிச்சயம் இந்தப் படம் இன்னமும் பேசப்பட்டிருக்கும்.

அந்தக் குத்துப்பாடல் இடைச் செருகலாக இருந்தாலும் அமீரின் நடனமும் சாரு நிவேதிதாவின் ஆர்மோனியா இசைப்பும் பார்ப்பவர்களைப் புல்லரிக்க வைக்கும். இனிமேல் சாரு இளையராஜாவைப் பற்றி தப்பாக எழுதினாலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் ஏனென்றால் அவரின் விரல்கள் ஒரு தேர்ந்த‌ இசைமேதையின் விரல்கள் போல அந்த ஆர்மோனியத்தில் உலாவருவது அவரின் இசைத் திறனை நிருபீக்கின்றது.

பொன்னியின் செல்வன்
கல்கியின் காலத்தால் அழிக்கமுடியாத வரலாற்றுச் சரித்திரம் இது. அந்தநாளில் இருந்து பலர் பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க முயன்றாலும் ஏனோ அந்த முயற்சிகள் கைகூடவில்லை. சிவாஜியின் ராஜராஜசோழன் படம் மட்டும் கொஞ்சம் பொன்னியின் செல்வனைச் சார்ந்து வெளியானது.லட்சுமி குந்தவையாக நடித்தது பொருத்தமேயில்லை.

தற்போது மணிரத்தினம் இதனைத் திரைப்படமாக்க முயற்சிப்பதாக செய்திகள் வெளியாகுகின்றன. ஏற்கனவே மணிரத்தினம் இருவர், கன்னத்தில் முத்தமிட்டால், தற்போது இராவணா என சில உண்மைச் சம்பவங்களை நன்றாக திரித்து சொதப்பியது உலகறிந்தது. அதேபோல் கல்கியினால் அழியா வரம் பெற்ற அருண்மொழிவர்மன், வந்திய்த்தேவன், குந்தவை, வானதி,நந்தினி, பழுவேட்டரையர்களை மணிரத்தினம் நிச்சயம் கேவலப்படுத்திவிடுவார். அதன் ஒருகட்டமாகத் தான் வந்தியத்தேவன் பாத்திரத்தில் விஜய் நடிக்கப்போவதாக வதந்தி அடிபடுகின்றது.

மணிரத்தினம் இயக்கம் என்றவுடனே வசனம் சுஹாசினி எழுதப்போவதை நினைக்க இப்பவே கண்ணைக் கட்டுது. கல்கியின் குடுப்பத்தவர்களோ அல்லது தமிழக முதல்வரோ பொன்னியின் செல்வனை மணிரத்தினம் படமாக்ககூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.

பொன்னியின் செல்வனைத் திரைப்படமாக்கினால் ரஜனி அல்லது கமல் வந்தியத்தேவனாகவும் அருண்மொழிவர்மனாகவும் நடிப்பதே பொருத்தம். பழுவேட்டரையர்களாக நாசர், பிரகாஷ்ராஜும் பொருத்தமாக இருக்கும். குந்தவை ,வானதி, பூங்குழலி, நந்தினி பாத்திரங்களுக்கு தற்போதைய எந்த நடிகையும் பொருத்தமில்லை.

கிரிக்கெட்

உலகக்கோப்பைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. பயிற்சி ஆட்டங்களில் நேற்றைய ஆட்டத்தில் அயர்லாந்து சிம்பாவேயையும் நெதர்லாந்து கென்யாவையும் வீழ்த்து கொஞ்சம் அதிர்ச்சி கொடுத்தன. ஏனைய போட்டிகளில் எதிர்பார்த்த முடிவுகளே வந்தன. ஆஸியின் ஸ்திரமில்லாத பேட்டிங் அவர்கள் கொஞ்சம் அண்டர்பிளே செய்வதுபோல் தெரிகின்றது, இந்தியா தென்னாபிரிக்கா இரண்டு அணிகளுடனும் ஆஸி 225க்கு குறைவான ஓட்டங்களே எடுத்தது. இலங்கை மேற்கிந்தியாவுடன் கொஞ்சம் கஸ்டப்பட்டு வென்றதுபோல் தெரிகின்றது, இனி வரும் நாட்களில் வேகங்களும் சுழல்களும் சிக்ஸர்களும் சின்னச் சண்டைகள் என உபகண்டம் அதிரப்போகின்றது.

ஒரு கண்டனம்

ஐரோப்பிய நாடுகளில் வெளிவரும் ஒரு தமிழ்ப் பத்திரிகை பெரும்பாலும் வலைப்பதிவர்களின் ஆக்கங்கள் அவர்களின் பெயர்களுடன் வெளிவருகின்றது, ஆனாலும் ஏனோ அவர்களின் வலைப்பக்கத்தின் உரலை இவர்கள் போடுவதில்லை. தயவு செய்து இனியாவது இப்படிச் செய்யாது அவர்களின் சுட்டிகளையும் தந்தால் வாசிப்பவர்கள் அந்த வலைகளையும் சென்றுபார்க்கலாம்.

வாழ்த்து

எங்கள் நட்பு வட்டாரத்தின் இளையவன், உள்ளூர் ஜேம்ஸ் அண்டர்சன், எம்மாவின் அன்புக் காதலன், போட்டோ கமெண்ட் புலி, என்றும் நித்தியானந்தம் காணும் எங்களின் திருமலை குஞ்சு பவன் எனப்படும் பவானந்தன் இன்று தனது 21ஆவது பிறந்தநாளை வெகுவிமரிசையாக கொண்டாடுகின்றார். இவரை அனைத்து வலையுலக நண்பர்கள் சார்பிலும் வாழ்த்துகின்றேன்.

ரசித்தது
கல்யாண நாள் அன்னைக்குதான் மாப்பிள்ளை முதன் முதலா
தன்னை சுத்தி செம சூப்பர் ஃபிகருங்களா பார்ப்பான், பார்த்து மனசுக்குள்ள கேப்பான்....
இவ்வளவு நாளா எங்கேடி போயிருந்தீங்க...

சுஜீவன் இராஜேந்திரம் (பேஸ்புக்கில்)

பவனுக்காக‌

ஹாட் அண்ட் சவர் சூப் 26-01-2011

அரசியல்

இலங்கை

இலங்கை அதிபர் மஹிந்தராஜபக்சேயின் அமெரிக்க விஜயம் பலரிடம் பலவிதமான சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. ஒரு சாரார் அவர் தனது தனிப்பட்ட சொந்தப் பயணமாகச் சென்றிருக்கின்றார் எனவும் இன்னொரு சாராரோ அவர் யாழில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்கச் சென்றபோது அவரின் தலைப்பாகை பொங்கல் பானைக்குள் விழுந்தது அபசகுனம் என்பதால் சோதிடர்களின் ஆலோசனைப் படி சில நாட்கள் சொந்த நாட்டில் நிற்ககூடாது என்ற ஆலோசனையின் பெயரில் சில நாட்கள் அமெரிக்காவில் நிற்பதாகவும் இன்னொரு பக்கம் அமெரிக்காவின் வற்புறுத்தலுக்கு அமைய யுத்தகுற்றங்களை விசாரிக்க அவர் சென்றதாகவும் கூறுகின்றனர். எது எப்படியோ இலங்கை சுதந்திரதினமான பெப்ரவரி 4ந்திகதி அவர் இலங்கைக்கு வந்து ஆற்றும் உரையில் தான் உண்மைகள் தெரியவரலாம் அதாவது அவரின் அமெரிக்க விஜய உண்மைகள்.


இந்தியா

தமிழக மீனவர்கள் கொல்லப்படுவது மானாட மயிலாட போல வாரம் தோறும் நடக்கின்றது. கருணாநிதியும் தன்னுடைய டெம்லேட் கடிதத்தை வழக்கம்போல் மன்மோகனுக்கு அனுப்பிவிடுவார். தமிழக மக்களும் இதனைவிட தலையாய விடயங்களான இம்முறை எந்தக் கட்சி என்ன இலவசம் தரும், ஸ்பெக்ட்ரத்தில் அடித்த கோடிகளில் எமக்கு தேர்தல் பணமாக எவ்வளவு தருவார்கள் போன்றவற்றை மட்டும் சிந்திப்பார்கள். ஒரு சில வலைப்பதிவர்கள் மட்டும் ஆவேசமாக பதிவு எழுதுவார்கள் ஆனாலும் தேர்தல் வந்தால் கருணாநிதிக்கு ஓட்டுப்போடுவார்கள் காரணம் கேட்டால் ஜெயலலிதாவைவிட கருணாநிதி ஊழல் செய்தது குறைவு எனச் சொல்வார்கள். அரசியல்வாதிகளைச் சொல்லிக் குற்றமில்லை, மக்கள் மாக்காளக இருக்கும் வரை அவர்கள் தங்கள் குடும்ப சுயநல அரசியலை நடத்தியே தீருவார்கள்.

சினிமா

மீண்டும் ஆஸ்கார் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் பெயர் 2010 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகள் பரிந்துரைகளில் வந்துள்ளது. 127 Hours என்ற ஆங்கிலப்படத்தின் பின்னணி இசைக்கும் பாடலுக்கும் இம்முறை ஏ.ஆர். ரகுமானின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இம்முறையும் சென்ற முறைபோல் இசைப்புயல் தன்னுடைய இரு கைகளிலும் விருதை உயர்த்திப்பிடிப்பாரா இறைவனுக்குத் தான் தெரியும்.

பாடும்நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு இந்திய அரசின் பத்மபூசண் விருது இம்முறை கிடைத்திருக்கின்றது, ஏற்கனவே அவருக்கு பத்மஸ்ரீ கொடுத்து கெளரவித்த இந்திய அரசு இம்முறை பத்மபூசணையும் அவரது மகுடத்தில் இட்டிருக்கின்றது. இவருடன் நடிகர்கள் சசி கபூர் வகீதா ரகுமான் இருவரும் திரைத்துறையில் பத்மபூசண் விருதுபெறுகின்றார்கள். கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ் லக்ஸ்மன் நடிகைகள் தபு, கஜோல், நடிகர் இர்பான்கான், பாடகி உஷா உதூப் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுகள் பெறுகின்றார்கள்.

சிறுத்தை

சிறுத்தை படத்தை பார்க்க நேரம் கிடைத்தது. தனிப்பட்ட எல்லாம் விமர்சனம் எழுதனேரமில்லை ஆக்வே ஒரு சின்ன விமர்சனம். படம் பார்க்கின்றவர்கள் காதுகளில் மட்டுமல்ல உடல் முழுக்க பூப்பூவாக வைக்கின்றார்கள். தனிமனிதனாக சகல தாதாக்களையும் கார்த்தி ஒருவரே நின்று அடித்துதுவைக்கின்றார். கார்த்தி சந்தாணம் நகைச்சுவைகள் படத்தின் பலம், வித்தியாசாகர் இசையில் பாடல்கள் பரவாயில்லை. போலிஸ் வேடம் கார்த்திக்கும் பொருந்துகின்றது. தமன்னாவிற்க்காக படம் பல தடவை பார்க்கலாம். ஜிந்தக்கா ஜீந்தாக்கா. இதுபோல் ஒரு கதையுடன் அல்லது சில காட்சிகளுடன் விஜயகாந்த் படமோ அர்ஜூன் படமோ வந்ததாக ஞாபகம், கமல் படங்களை மட்டும் பிறமொழிக் காப்பி என விழித்திருந்து பார்க்கும் அறிவுஜீவிகளின் கண்ணில் இந்தப் படங்கள் படவே படாது. மொத்தத்தில் சிறுத்தை நல்லதொரு பொழுதுபோக்குப் படம்.

தமிழக அரசின் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளுக்கான சின்னத்திரை விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், கோலங்கள் மற்றும் ஆனந்தம் ஆகியவை சிறந்த நெடுந்தொடராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இரண்டும் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு மேல் நடந்தது என நினைக்கின்றேன். கோலங்களின் போது தேவயாணிக்கு இரண்டுதடவை குழந்தையும் பிறந்தது குறிப்பிடத்தக்கது. ராதிகாவுக்கும் ஏதோ ஒரு விருது கிடைத்திருக்கின்றது, அனைத்துவிருதுகளும் சன், கலைஞர் தொலைக்காட்சி தொடர்களுக்கும் மட்டும் கிடைத்திருக்கின்றன. தமிழ்நாட்டில் இருந்து தானே விஜய், ஜெயா, மக்கள், தமிழன், மெஹா, வசந்த், கேப்டன், பொதிகை போன்ற தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பாகின்றன. இல்லை சின்னத்திரை என்றாலே அரச குடும்பத்தினருக்கு மட்டும் சொந்தமானதா?

விளையாட்டு

தென்னாபிரிக்காவில் நடந்த ஒருநாள் தொடரை இந்தியா 3க்கு 2 என்ற கணக்கில் தோற்றுவிட்டது. உலகக்கோப்பைகளுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இந்திய கேப்டன் டோணி உட்பட யுவராஜ் சிங், ரெய்னா, போன்றவர்களின் ஃபார்ம் கேள்விக்குறியாகி நிற்கின்றது. அதிலும் அண்மைக்காலமாக டோணி சோபிக்கவேயில்லை. யூசுப் பதான் என்ற தனிமனிதனையும் சச்சின் என்ற இமயத்தையும் மட்டும் நம்பி இந்திய அணி உலகக்கோப்பையில் களமிறங்கினால் 96ல் ஈடன்கார்டனில் நிகழ்ந்த நிகழ்ச்சி ரிப்பீட்டாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மறுபக்கம் ஆஷாஸை வென்ற இங்கிலாந்து தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் ஆஸியிடம் தடுமாறுகின்றது. இன்றைய போட்டியிலும் ஆஸி வென்றால் தொடர் அவர்களுக்குத் தான்.

சந்தேகம்

"நடுநிலையாளர்கள் எல்லோரும் நல்லவர்கள் என சொல்ல முடிவதில்லை..#பட்டறிவு,"
என லோஷன் தனது பேஸ்புக்கில் ஒரு மெசேஜ் இட்டிருந்தார். அதற்க்கு பலரும் பலவிதமான கருத்துக்கள் சொன்னாலும் மருதமூரான் என்கின்ற புருசோத்தமன் தங்கமயில்
"உண்மை. நடுநிலையாளர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டிய அவசியமும் இல்லை. இதுவும் பட்டறிவு"
என ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டிருந்தார் அதற்க்கு என் பெயரை மையப்படுத்தி அண்ணன் கானாபிரபா
"வந்தியைச் சொன்னாரோ இவர்? வந்தி தான் தமனாவும் அழகு அமலா பால் உம் அழகு என்று நடு நிலையாக இருக்கிறார்"
என்றார். அதற்க்கு என் பதில்
"பக்கத்தில் ஐஸ்வர்யா ராய் இருந்தாலும் தமன்னாவின் இடுப்புத்தான் அழகு என்பேன் #நடுநிலை "

அது சரி உண்மையான நடுநிலை என்றால் என்ன?

ரசித்த ஜோக்

ஒருமுறை மிஸ்டர் ஜீக்கு (மிஸ்டர் எக்ஸின் உரிமை ஆனந்தவிகடனுக்குத் தான்)இடுப்பு பிடித்துவிட்டது. அதனால் தன்னுடைய நண்பனை அழைத்து மருத்துவரிடம் செல்ல உதவி செய்யுமாறு கேட்டார். மிஸ்டர் ஜீயின் நண்பரோ இதற்கெல்லாம் மருத்துவர் தேவையில்லை ஹாஸ்பிட்டலில் புதிதாக இருக்கும் மிசினில் உன் சிறுநீரின் மாதிரியை செலுத்தினால் அந்த மிசின் உனக்கு ஆலோசனை சொல்லும் என்றார். உடனடியாக மிஸ்டர் ஜீயும் நண்பரும் ஹாஸ்பிட்டல் சென்று மிஸ்டர் ஜீயின் கொண்டுபோன சிறுநீரை அந்த மிசினில் அதற்குரிய குழாயினுள் செலுத்தினார்கள். ஒரு நிமிடத்தில் மிசின் தனது வாயிசில் "உனக்கு சாதாரண இடுப்பு நோ, சுடுநீர் ஒத்தடம் கொடுக்கவும்" என்றது.

அடுத்தநாள் அந்த மிசினைச் செக்பண்ண மிஸ்டர் ஜீ தன்னுடைய சிறுநீருடன் தனது வீட்டு நாயின் மலம், தனது மனைவியின் சிறுநீர், மகளின் உமிழ்நீர், மற்றும் தன்னுடைய வீட்டுக் கிணற்று நீர் என அனைத்தையும் கலந்து கொண்டுபோனார்.

கொண்டுபோன கலவையை அந்த மிசினில் செலுத்தியபோது மிசின் கூறியது "உன் வீட்டுக் கிணற்றில் சுண்ணாம்பின் அளவு கூடிவிட்டது, உன் நாய்க்கு ஒழுங்காக குளிக்கவார்க்கவும் அதற்க்கு தோல் வியாதி, உன் மகள் கஞ்சாவிற்க்கு அடிமையாகியுள்ளாள் உரிய நடவடிக்கை எடுக்கவும், உன் மனைவி கர்ப்பம் ஆனால் காரணம் நீ அல்ல, இனிமேல் என்னைப் பரிசோதிக்க முயன்றால் உன் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்".

பாடும்நிலா பத்மபூசண் எஸ்பிபிக்காக‌


சாகர சங்கமத்துக்காக இசைஞானி இளையராஜா இசையில் பத்மபூசணை எஸ்.பி.பிக்கு கிடைத்த இன்னொரு தேசிய விருதுப்பாடல். இசைஞானி, கலைஞானி, பாடுநிலா என எனக்குப் பிடித்தவர்கள் இருப்பதால் இந்தப் பாடலை பத்மபூசண் எஸ்.பி.பி க்கு சமர்ப்பிக்கின்றேன்.


ஹாட் அண்ட் சவர் சூப் 12-01-2011

இலங்கை

கிழக்கு மாகாணம் வ‌ரலாறு காணாத மழையும் வெள்ளமுமாக கடந்த சிலநாட்களாக அல்லோல கல்லோலப்படுகின்றது. தொடர்ந்துபெய்துவரும் அடைமழையினால் வீடுகளும் வீதிகளும் வெள்ளத்தினால் மூடப்பட்டு மூன்று பேர் உயிரிழந்தும் பல லட்சம் மக்கள் தங்கள் வீடுவாசல்களை விட்டு பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்திருக்கின்றார்கள்.

அரச. அரசார்பற்ற நிறுவனங்கள் உடனடியாக நிவாரணப் பணிகளை தொடங்கியதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அதே நேரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார். இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன, மத, கட்சி பேதமின்றி உதவி வழங்குவது அனைவரின் தார்மீகக் கடமையாகும்.

இதேவேளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் ஆன உதவிகளை வழங்க இலங்கைப் பதிவர்கள் முன்வந்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது. இதுபற்றிய அறிவித்தல் இலங்கைப் பதிவர்கள் குழுமத்தில் நிரூஜாவினால் வெளியிடப்பட்டுள்ளது. வலையுலகிற்க்கு அப்பால் பதிவர்கள் செய்யும் இந்த உதவிக்கு ஏனையவர்களினது ஒத்துழைப்பையும் நாடி நிற்கின்றார்கள்.

மேலதிக தகவல்களுக்கு நிரூசா, வதீஸ், சிதறல்கள் ரமேஸ், சந்ரு ஆகியோரையும் யாழ்ப்பாணத்தில் இருப்பவர்கள் கூல் போய் கிருத்திகன், மதிசுதா ஆகியோரையும் தொடர்புகொள்ளவும்.

இந்தியா

தமிழக அரசியல் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இதனால் ஆ,ராசாவின் ஊழல் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து மக்களும் இலவசங்களுக்காக தங்கள் உரிமையை விட்டுக்கொடுக்கவிருக்கின்றார்கள். சீமானால் ஆரம்பிக்கப்பட்ட நாம் தமிழர் இயக்கம் இம்முறையும் காங்கிரசை தோற்கடிப்பதே தமது நோக்கம் என ஆரம்பத்திலிருந்தே கூறியிருந்தாலும் சீமானின் விடுதலையும் அதன் பின்னரான சில நிகழ்வுகளுடம் சீமான் எண்ணைய் சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த கதையாக ஜெயலலிதாவிடம் சரணடைந்துவிட்டார்.

ஈழத்தமிழர்களை அல்லது இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை இந்த தேர்தலினால் மட்டுமல்ல எந்த இந்தியத் தேர்தல்களினாலும் அவர்களுக்கு பிரயோசனமில்லை என்பது தெரிந்தவிடயம், ஆனாலுன் இந்த தேர்தலிலும் மீண்டும் ஈழம், ஈழத்தாய், 3 மணி நேர மனைவி, துணைவி சமேத உண்ணாவிரதம் போன்ற நாடகங்கள் பலரின் திரைக்கதை வசனத்தில் நடத்தப்படலாம்.

சீமான் கருணாநிதியை எதிர்க்கின்றேன் என ஜெயலலிதாவிடம் சோரம் போனது கண்டிக்கத்தக்கதே. எப்படி வைகோ தன்னைச் சிறைவைத்த ஜெயலலிதாவிடம் மண்டியிட்டாரோ அதேபோல் சீமானும் மண்டியிட்டுவிட்டார். கருணாநிதியின் ஈழவேசம் அண்மைக்காலத்தில் அம்பலத்துக்கு வந்தாலும் ஜெயலலிதாவின் ஈழஎதிர்ப்பு அவரின் கருவிலையே இருக்கின்றது(எந்தப் பார்ப்பனர் ஈழத்துக்கு ஆதரவு). தன்னைப் பெரியாரின் பேரன் என்கின்ற சீமானும் கடைசியாக கூழ்பானைக்குள் தான் போய்விழுந்துவிட்டார்.

இதே நேரம் சீமான் தனித்தோ அல்லது வேறு எதாவது கட்சிகளின் கூட்டில் திமுக காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்திருந்தால் இத்தாலிக்காரியின் சொல் கேட்டு மீண்டும் கருணாநிதி அரசால் கைது செய்யப்பட்டோ அல்லது வேறு வழிகளில் பழிவாங்கப்பட்டோ அல்லது தா,.கிருஷ்ணனுக்கு நடந்தது போல சீமானுக்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்கும். சீமான் எவரை ஆதரித்தால் என்ன எதிர்த்தால் என்ன இலங்கை தமிழ் மக்களுக்கு இதனால் எந்த லாபமும் இல்லை. சீமானின் இந்த நடவடிக்கைகளைப் பார்க்கும் போது அவரும் தேர்ந்தெடுத்த அரசியல்வியாதி ஆகிவிட்டார். நம்ம தலை கவுண்டரின் பாசையில் சொன்னால் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா".

இந்த வருட நகைச்சுவை

வைகோவை 40 கோடி என நக்கலடிக்கும் திமுக அடிப்பொடிகள் 1.76 லட்சம் கோடி திருடிய ஆ.ராசாவை உத்தமன் என்கின்றார்கள்

வைரமுத்து

அண்மையில் வைரமுத்துவின் ஆயிரம் பாடல்கள் புத்தகவெளியீட்டுவிழா நடைபெற்றது. கருணாநிதி புத்தகத்தை வெளியிட கமலும் ரஜனியும் பெற்றுக்கொண்டார்கள். வைரமுத்துவை திரையுலகத்திற்க்கு அழைத்துவந்த பாரதிராஜா, இளையராஜா இருவருக்கும் அழைப்பில்லை. இவர்களுக்கிடையில் என்னதான் பிரச்சனை என்றாலும் தன்னை அறிமுகப்படுத்திய இருவரையும் இன்னாத செய்தாரை ஒறுத்தல் போல் செய்திருக்கவேண்டும் ஆனால் வைரமுத்து ஏனோ செய்யவில்லை. வைரமுத்து சிறந்த கவிஞர் ஆனால் சிறந்த மனிதரோ என்றால் இல்லை அவரும் மிகச் சாதாரண அற்ப மனிதர் என இந்த செயலின் மூலம் காட்டிவிட்டார். அவர் அழைத்திருந்து பாரதிராஜாவும் இளையராஜாவும் வரவில்லை என்றால் அது அவர்கள் இருவருக்கும் தான் அவமானம் என்பதை ஏனோ இந்தக் கவிபேரரசு உணர்ந்துகொள்ளவில்லை, சிலவேளை தன்னை சோழமன்னனின் கவிஞன் என்ற இறுமாப்போ தெரியவில்லை.

ஆனந்தவிகடனில் வாசகர் ஒருவர் இந்த நிகழ்வு பற்றிய கட்டுரைக்கு கொடுத்த பின்னூட்டம் "அந்த நாட்களில் சாணிக் கலர் பேப்பரில் விற்பனையாகும் படங்களின் பாட்டுப் புத்தகத்துக்கும் இந்தப் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம்?"

இதுவும் வைரமுத்து சம்பந்தப்பட்ட விடயம் தான். அண்மையில் வாலி எழுதிய பாடல்கள் 1000 புத்தகவிழாவில் வைரமுத்து பேசும் போது தான் ஒருமுறை கமலைக் கேட்டாராம் நீங்கள் ஏன் அரசியலுக்கு வரமுயலவில்லை என்று அதற்க்கு கமல் சொன்னாரம் நான் ஒரு சுமாரான நடிகன் என்னால் அரசியலில் நடிக்கமுடியாது. மேடையில் நடுநாயகமாக வீற்றிருந்தவர் சாட்சாத் தமிழக முதல்வர்.

கமல்

மன்மதன் அம்பு படம் சிலநாட்களுக்கு முன்னர் பார்க்கனேர்ந்தது. ஒளியமைப்பு கொடுத்த இதத்தை ஏனோ படம் கொடுக்கவில்லை. பஞ்சதந்திரம், அவ்வை சண்முகி போல எதிர்பார்த்துப்போன எனக்கு ஏமாற்றமே கிடைத்தது. கமலின் அதிமேதாவித்தனம் எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் இந்தப் படத்திலும் வசனம் எழுதுகின்றேன் என பல இடங்களில் ஆங்கிலம். அத்துடன் தெனாலி படத்தின் பின்னர் மீண்டும் ஈழத்தமிழர்களை கேலி செய்திருக்கின்றார். அவர்களைச் சினிமா வெறியர்களாகக் காட்டியமை கண்டிக்கத்தக்கது. அதிலும் அந்தக் காட்சிகள் படத்துக்கு தேவையற்றமை என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலட்சுமிக்கு காமத்துப்பால் எழுதிய கமலைக் கண்டித்த இந்து அமைப்புகள் போல் ஈழத்தமிழர்களின் ஆபத்பாந்தவர்களாக தம்மைக் காட்டிக்கொள்ளூம் அரசியல் கட்சிகளோ அல்லது சினிமாக்காரர்களோ இதற்க்கு வாயும் திறக்கவில்லை. தயாரிப்பாளர் உதயநிதி என்ற காரணமோ யாம் அறியோம் அரங்கநாதன் தான் இதற்கும் பதில் கூறவேண்டும்.

பார்த்ததில் அதிர்ச்சி
கடந்த வருடம் வெளியான படங்களில் நூறு நாட்கள் ஓடிய படங்களின் பட்டியல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. பெண் சிங்கம் படமும் நூறு நாட்கள் ஓடியது எனக் கூசாமல் பொய் சொன்னார்கள். இதனை நான் என் பேஸ்புக்கில் போட்டபோது நண்பி ஒருவர் பெண் சிங்கம் ஓடிய படம் அல்ல ஓட்டிய படம் என்றார், நண்பர் ஒருவர் அப்படி ஓடியிருந்தால் அது அசிங்கம் என்றார். சன் குழுமத்தின் ஓடிய அல்லது ஓட்டிய படங்களின் பட்டியல் கலைஞரில் காண்பிக்கப்படவில்லை. வெகுவிரைவில் தமிழ் சினிமாவும் தமிழர்கள் கட்சி பேறுபாட்டால் பிரிந்து இருப்பதுபோல சன் குழுமப் படம் கலைஞர் பேரன்களின் படம் என இரண்டாகப் பிரியும் சாத்தியம் இருக்கின்றது.

விளையாட்டு

இலங்கை அனைத்து உதைபந்தாட்ட லீக்குகளுக்கிடையிலான இறுதிப்போட்டியில் சிவில் பாதுகாப்புப் படை லீக்கை எதிர்கொண்ட பருத்தித்துறை லீக் அணி 3க்கு 1 என்ற கோல் கணக்கில் வரலாற்றுச் சாதனை படைத்தது. பருத்தித்துறை லீக் சார்பில் பிறேம் குமார் இரண்டு கோல்களையும், சாரங்கன் ஒரு கோலையும் அடித்து வெற்றிக்கு வழிகோலினார்கள்.

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்தினால் இலங்கையிலுள்ள அனைத்து உதைபந்தாட்ட லீக்குகளுக்குமிடையில் நடத்தப்பட்ட இறுதி ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பு சிட்டி லீக் மைதானத்தில் நடைபெற்றது, பருத்தித்துறை லீக் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி கிண்ணத்தைத் தனாதாக்கி வரலாற்றுச் சாதனை படைத்தது. வதிரி டயமண்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த பிரேம்குமார் இலங்கைத் தேசிய அணிக்கு தெரிவான வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. என் மண்ணின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள்.

சின்ன சந்தேகம்
பேஸ்புக்கில் இருக்கும் என் நண்பர்களின் அழகான நண்பிகள் எல்லாம் திருமணமானவர்களாக இருக்கும் மர்மம் எனக்கு புரியவில்லை.

ஜொள்ளும் லொள்ளும்

உலகநாயகன் பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களை ஏன் நான் என் மாமாவாக மாற்றக்கூடாது #ஸ்ருதி

இந்தப் படம் மூலம் தான் ஸ்ருதி என்னைக் கவர்ந்தார். பட உதவி சுபாங்கன்.



பின்குறிப்பு

நீண்ட நாட்களின் பின்னர் சூப். கடந்த ஆண்டு கவர்ந்த பதிவுகளின் அடுத்த பகுதி ஓரிரு நாட்களில் வெளியாகும்.

சன் பிக்சர்சின் காமன் வெல்த்

கோபாலபுரத்தில் ஒரு காலைப்பொழுதில் கருணாநிதி தன் நாட்குறிப்பில் சினிமா இசை வெளியீடு, மானாடா மயிலாட சீசன் 5 இறுதிப்போட்டி, அடுத்த பாராட்டு விழா, போன்ற முக்கியமான விடயங்களை ஆராய்ந்துகொண்டிருக்கும் போது தொலைபேசி ஒலித்தது. மறுமுனையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்.

சிங் : வணக்கம் கலைஞர்ஜி

கலைஞர் : உங்களுக்கு கடிதம் எழுத நினைத்தேன் அழைத்துவிட்டீர்கள்ஜீ, இதுவல்லவோ பண்பாடு.

சிங் :(மனதில்) சப்பா இந்த மனிசன் இனிப் பண்பாடு கலாச்சாரம் என அறுக்கபோகின்றது.
கலைஞர் : அழைத்த காரணம் என்னவோ. பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் எழுதவேண்டுமா? இல்லை எனக்கு தலைநகரில் ஏதும் பாராட்டு விழாவா?

சிங் : (அவசரமாக) இல்லை இல்லை காமன்வெல்த் போட்டிகளை சீனாவைப் பார்த்து ஏதோ ஒரு உசாரில் நடத்துவோம் என தொடங்கினால் பாபர் மசூதி பிரச்சனையை விட இது பெரிய்ய பிரச்சனையாகிவிட்டது. அதுதான் உங்களிடம் ஒரு உதவி.

கலைஞர் : உங்களுக்கு இல்லாத உதவியா சொல்லுங்கள் ஜீ.

சிங் : நம்ம அரசால் காமன்வெல்த் நடத்து அளவிற்க்கு பணம் இல்லை, இருந்த பணத்தையும் ஊழல் செய்துவிட்டார்கள், பத்திரிகைகள் எல்லாம் இது காமன் வெல்த்தா இல்லை காங்கிரஸ் வெல்த் கேமா என கிண்டல் செய்கின்றது. உங்கள் பேரன் கலாநிதியை காமன் வெல்த்தை ஸ்பொன்சர் செய்யச் சொல்லுவீர்களா?

கலைஞர் : இது சின்ன விடயம் இதனை நீங்களே செய்யலாமே? இடையில் நான் ஏன்?
சிங் : இல்லை ஜீ நீங்கள் அழைத்தால் அவர்கள் இதயம் இனிக்கும்.

இதனை மன்மோகன் சிங் கூறீயவுடன் கலைஞரின் கண்கள் உடனே பனித்தன.

கலைஞர் : உங்களுக்காக இல்லாவிடிலும் என் நண்பர் இந்திராகாந்தியின் மருமகள் சோனியாஜிக்காக நான் இதனைச் செய்கின்றேன் என்றபடி அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

காமன் வெல்த் கேமை தாமே நடத்தும் சந்தோஷத்தில் எந்திரன் பரபரப்புடன் சன் குழும அலுவலகம் அதகளப்பட்டத்து. கலாநிதி, தயாநிதி, ஷங்கர்,வைரமுத்து, ஷக்சேனா என பலர் எப்படி காமன் வெல்த்தை எப்படி சிறப்பாக செய்வது என தீவிர டிஸ்கசனில் இருந்தார்கள்.

தயாநிதி : எந்திரன் இசை வெளியீட்டை எப்படி மலேசியாவில் நடத்தினமோ அதேபோல் காமன் வெல்த் போட்டி தொடக்க விழாவை சந்திரனில் நடத்துவோம்.

வைரமுத்து : பூமாலையில் தொடங்கிய உங்கள் பயணம் சந்திரன் வரை செல்லும் என்பது நான் அறிவேன் ஒரு தமிழனாக எமக்கு இது பெருமை.

ஷங்கர் : ரகுமானின் தீம் பாடல் ஏற்கனவே பிரபலமானதால் அதனை நாம் நடிகர்களை வைத்து படம் எடுத்து காமன் வெல்த்தில் அடிக்கடி ஒளிபரப்பலாம்.

கலாநிதி : இல்லை ஷங்கர் இது விளையாட்டுப்போட்டி அதனாலை நடிகர்களை வைத்து எடுத்தால் மூளையுள்ளவர்கள் கேள்வி கேட்பார்கள். சோ டோணி, சச்சின், சானியா போன்றவர்களை நடிகர்களுடன் இணைத்து நடிக்க வைத்துவிடலாம்,

ஷக்சேனா : சூப்பர் ஐடியா நான் இப்பவே அனைவருக்கும் கோல் போடுகின்றேன்.
நீங்கள் கால் போடமுன்னரே நான் வந்திட்டேன் எனக் கூறியபடி நடிகர் கருணாசும் டிஸ்கசனில் நுழைகின்றார்.

கலாநிதி : ஸ்ரேடியம் முழுவதும் எந்திரன், மற்றும் சன் பிக்சர்ஸின் மெஹா சீரியல்கள் விளம்பரப் பதாதைகள் வைக்கவேண்டும்,

ஷங்கர் : ஸ்ரேடியத்தை நம்ம தோட்டாதரணி செட்டாகவே போட்டுவிடுவார் , ஸ்ரேடியம் புதிதாக கட்டுவதை விட செலவு கொஞ்சம் அதிகமாகும்.

தயாநிதி: வீரர்கள் தங்கும் விடுதிகளிலுள்ள டிவிக்களில் எல்லாம் சன் டிவி, கேடிவி, சன் மியூசிக் மட்டும் தான் தெரியவேண்டும்.

கருணாஸ் : என்னுடயை திண்டுக்கல் சாரதியை உலகத்திலுள்ள அத்தனைபேரும் அப்போ பார்ப்பார்கள்.

ஷக்சேனா : ஒவ்வொரு போட்டியின் ஆரம்பத்தின் போதும் உலகத் தொலைகாட்சிகளில் முதன் முறையாக சன் பிக்சர்ஸ் வழங்கும் 100 மீற்றர் ஓட்டம், குத்துச் சண்டை என விளம்பரப்படுத்தவேண்டும்.

ஷங்கர் :சியர் லீடர்சாக நம்ம நமீதா, அசின், திரிஷா என அனைவரையும் ஆடவிடலாம்.

கலாநிதி : உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முதலாக என்ற வரிகள் இந்த நிகழ்வில் தான் நிஜமாகும்.

கலாநிதி : மைதானத்தைச் சுற்றி உள்ள விளம்பரப் பலகைகள் அனைத்திலும் எங்கள் தயாரிப்புகளான திண்டுக்கல் சாரதி, காதலில் விழுந்தேன் போன்ற மொக்கைக்ப் படங்களின் போஸ்டர்களை வைக்கவேண்டும்.

வைரமுத்து : வாவ் இதுதான் வியாபார யுக்தி, அப்படியே அந்தப் படங்களை ஆங்கிலத்தில் டப் செய்தால் இன்னமும் விளம்பரம் பெருகும்.

ஷக்சேனா : (மனதில்) அந்த மொக்கைகளை ஓட்ட நாம் பட்ட கஸ்டம் இவருக்கு எங்கே தெரியப்போகின்றது.

தயாநிதி : அப்படியென்றால் தங்கம் எல்லாம் நமக்குத் தான்.

ஷங்கர் : எனக்குப் புரியவில்லை.

தயாநிதி : அந்தப் படங்களைப் பார்க்கும் வெளிநாட்டினர் போட்டியும் வேண்டாம் ஒரு பதக்கமும் வேண்டாம் என தங்கள் நாட்டுக்கு ஓடிவிடுவார்கள்.

அனைவரும் அவரை கொல்லுவது போல் பார்த்தார்கள்.

இந்த விடயம் இப்படியே ரெட் ஜெயின்ட், கிளவுட் நைன் போன்ற தமிழ்ப் பட நிறுவனங்களுக்குப் பரவ அவர்களும் பரபரப்பாக தமக்குத் தான் போட்டிகளை நடத்தும் உரிமை வேண்டும் என கலைஞருக்கு போன் போடுகின்றார்கள்.

ஹாட் அண்ட் சவர் சூப் 02-09-2010

அரசியல்

கடந்த சில நாட்களாக தர்மபுரி பஸ் எரிப்புப் சம்பவத்துக்கு காரணமானவர்களுக்கு தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தங்களின் தலைவி மேல் வைத்திருக்கும் அதீத அடிமைத்தனத்தில் அவர்கள் செய்த இந்த கொடுங்கோலுக்கு அரேபிய நாட்டுத் தண்டனைகள் தான் சரியானது. அப்பாவி மாணவிகளை கதறக் கதறக் தீக்கிரையாக்கிவர்களை இப்படியான கொலைச் செயலைச் செய்யத்தூண்டிய அரசியல்வாதிகளையும் கண்டிக்கவேண்டும் அல்லது தண்டனை கொடுக்கவேண்டும் ஆனாலும் எய்தவன் ஏதோ ஒரு நாட்டில் சுகமாக ஓய்வெடுக்க அம்புகள் மட்டுமே தூக்கில்.

தூக்குத் தண்டனை என்பது பெரியதொரு தண்டனைதான். அதே நேரம் இந்தக் குற்றவாளிகள் மிருகங்களை விடமிகக் கேவலமாக நடந்துகொண்டபடியால் இவர்களுக்கு தூக்கு கட்டாயம் கொடுக்கவேண்டும். அதே நேரம் மதுரை தினகரன் சம்பவ குற்றவாளிகளுக்கும் தூக்கு கொடுக்கவேண்டும். கண்கள் பனித்து இதயம் இனித்ததால் அந்த சம்பவம் விரைவில் மறக்கப்பட்டுவிடும். நம்ம உலக நாயகன் விருமாண்டியில் சொன்னது போல் மன்னிப்பவன் பெரிய மனிதன் என்ற கருத்து இந்த இரு சம்பவம் செய்தவர்களுக்கும் செய்யத் தூண்டியவர்களுக்கும் பொருந்தாது.

கிரிக்கெட்

இங்கிலாந்தில் இவ்வளவு நாளும் கால்பந்துக்கு முக்கியத்துவம் கொடுத்த பத்திரிகைகளை கடந்த ஞாயிறுமுதல் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டன. எல்லாப் புகழும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கே சேரும். இளம் வீரர்கள் முகமட் அமீரும் அசீப்பும் ஸ்பொட் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கிகொண்ட பாகிஸ்தான் அணி இப்போ சல்மான் பட் அமீரின் கைங்கரியத்தால் இன்னமும் தவித்துக்கொண்டிருக்கின்றது. மஜீர் மஜீட் என்ற லண்டன் வாழ் தொழிலதிபரே இந்த சூதாட்டத்தின் சூத்திரதாரி என ஸ்கொலண்ட்யார்ட் போலிஸார் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.

அதே நேரம் அடுத்து வரும் பாகிஸ்தானுடனான இருபதுக்கு 20 போட்டிகளையும் ஒருநாள் போட்டிகளையும் ரத்துச் செய்து தங்களுக்கு பணத்தை திரும்பத் தரும்படி இங்கிலாந்து ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள். எது எப்படியோ சில நாட்களுக்கு பாகீஸ்தான் கிரிக்கெட்டை வைத்து பத்திரிகைக கல்லா கட்டுவது நிச்சயம்.

அத்துடன் ஐபிஎல் புகழ மோடியும் சொந்தமாக விமானம் வாங்கியதாக கலைஞர் செய்திகளில் காட்டினார்கள். விளையாட்டு இப்போ வியாபாரமாக மாறிவிட்டது. நேரத்தையும் பணத்தையும் வீணாக்கும் எம்மைப் போன்ற அப்பாவி ரசிகர்கர்கள் தான் பாவம்.

ஷேன் வாட்சனுடனும் சில சூதாட்டவாதிகள் தொடர்புகொண்டதாக பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன. இப்படியே போனால் இனி நானும் கிரிக்கெட் விளையாடலாம். காரணம் எப்படியும் போடுகின்ற போல் நோ போல் தான். எனக்கெல்லாம் 50000 பவுண்டுகள் வேண்டாம் ஒரு 5000 பவுண்டே போதும்.

சினிமா

எந்திரன் பாடல்கள் கேட்க கேட்கத் தான் பிடிக்கும் என ஒருமுறை எழுதியது ஞாபகம், அது உண்மைதான். கிளிமஞ்சதாரோபாடல் மிகவும் பிடித்துவிட்டது சின்மயின் ஐஸ்கிறீம் குரல் ஐஸ்வர்யா ராஜை அப்படியே படம் போட்டுக் காட்டுகின்றது. புதியமனிதாவில் பாடும் நிலா பாலா இளையவர்களுடன் போட்டி போடுகின்றார். இசைப்புயல் எந்திரன் பாடல்களில் இசையை இன்னொரு வடிவத்தில் கொடுத்திருக்கின்றார். இந்தப் பாடல்களில் புதியவகையான ஒரு இசை ஒலிகள் தெறிக்கின்றன. தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட படம் என்பதாலோ தெரியவில்லை இசைக் கோலங்கள் மேற்கத்தைய சாயலில் இருகின்றது. எப்போ படம் வரும் உலக அழகியும் சூப்பர் ஸ்டாரும் எப்படி இந்தப் பாடல்களுக்கு ஆடி இருக்கின்றார்கள் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கின்றது.

எந்திரன் இசை வெளியீட்டு விழாவில் விவேக்கின் சில கொமெண்டுகள் மேடை நாகரிகத்துக்கு பொருத்தமில்லாமல் இருந்தது. ரஜனியின் பேச்சு மட்டும் வழக்கம் போல் கலக்கல். தமிழ்நாட்டு முதல்வர் ஏன் இந்தப் படத்துக்கு வாழ்த்துத் தெரிவித்தார்? ஏன் இந்த ஆடியோ வெளியீட்டை தமிழ்நாட்டில் செய்யவில்லை போன்ற சில சந்தேகங்கள் எழுவதை தவிர்க்கமுடியவிலை.

ஷங்கரின் பிரமாண்டமும் ரகுமானின் இசையும் ஐஸ்வர்யா ராயின் அழகும் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலும் படைத்தை எப்படியும் வெற்றி ஆக்கும், அதே நேரம் சன் குழுமத்தின் படம் என்பதால் ஓவர் விளம்பரம் ஆபத்தாகவும் அமையலாம்,

சின்னத் திரை :

விஜய் தொலைக்காட்சியின் ஜோடி நம்பர் ஒன் எதோ ஒரு சீசனில் ஈழத்து மைந்தர்கள் பிரேம் கோபாலும் பிரேமினியும் முதல் பரிசைப் பெற்றார்கள். பிரேம் கோபாலின் கடின உழைப்பு அவருக்கு உங்களில் யார் அடுத்த பிரபுதேவாவி பரசைக் கொடுக்காவிட்டாலும் ஜோடி நம்பர் ஒன்னில் விட்டதைப் பிடித்துவிட்டார்.உங்களில் யார் அடுத்த பிரபுதேவாவி ஈழத்தில் நடந்த குண்டுவெடிப்பை தத்ரூபமாக நிகழ்த்தி பலரின் பாராட்டைப் பெற்றவர் இம்முறையும் ஈழத்துய்ரத்தை மீண்டும் நிகழ்த்தினார். அதன் காணொளி கீழே:



இளவரசி டயனா :
நேற்று முந்தினம் இளவரசி டயானாவின் நினைவுதினம் கென்சிங்டன் கார்டனில் நினைவு கூரப்பட்டிருந்தது, அதே நேரம் சைனாவில் உள்ள ஷென்சன் விமான நிலையத்தில் டயனாவின் அரைகுறை ஆடைகளுடனான ஒரு விளம்பரம் உள்ளாடை ஒன்றுக்கு விளம்பரப்படுத்தியிருந்தது. அத்துடன் அந்த விளம்பரத்தில் "Feel the Romance of British Royality" என்ற வாசகமும் இருந்தது. டயானா போன்ற ஒரு பிரபலத்தை இறந்தபின்னரும் வியாபாரத்துக்குப் பயன்படுத்தும் சீன உள்ளாடை தயாரிப்பு நிறுவனமான "ஜெலசி இன்டர்னெசலின் மேல் இதுவரை எவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.இது பற்றி அவரது கணவர் இளவரசர் சாள்ஸ்சும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இறந்தபின்னரும் சர்ச்சைகளின் நாயகியாகிவிட்டார் இளவரசி டயானா.

எனக்குப் பிடித்த பாடல் :
கமல் இசைஞானி கூட்டணியில் அருண்மொழி சித்ராவின் குரலில் சூரசங்காரம் படத்தில் இடம் பெற்ற மெஹா ஹிட் பாடல். பாடல் ஹிட்டுக்கு நிரோஷாவின் கவர்ச்சியான அழகும் ஒரு காரணமாகும். கறுப்பானாலும் களையான அழகி நிரோஷாவுக்கு நல்ல படங்கள் கிடைத்தும் ஏனொ கோடாம்பக்கத்தில் நிலைத்து நிற்கமுடியவில்லை. அந்த நாள் இளைஞர்களின் கனவுக் கன்னி நிரோஷாவின் பாடல். இசைஞானியின் இசையும் கலைஞானியும் நடிப்பும் இந்தப் பாடலைத் திரும்ப திரும்ப கேட்க வைக்கும்,



சின்ன சந்தேகம் :
பெரும்பாலான நாத்திகவாதிகள் இந்துமதத்தை மட்டுமே ஏன் எதிர்க்கின்றார்கள்? இவர்கள் ஏன் இஸ்லாத்தையோ கிறிஸ்தவத்தையோ கிண்டல் செய்வதில்லை? ஓ அவற்றைக் கிண்டல் செய்தால் ஓட்டுக்கள் கிடைக்காது அல்லவா? அத்துடன் ஓட்டோ வீட்டுக்கு வரும் ஹிஹிஹிஹி.

ஹாட் அண்ட் சவர் சூப் 19-08-2010

அரசியல்
பெரிதாக எந்த அரசியல் நிகழ்வுகளும் நிகழவில்லை என்பதால் அரசியல் இன்றைய சூப்பில் இல்லை.

நீண்ட நாள் சந்தேகம் : இந்திய பிரதமர் ஏன் சுதந்திர தின உரையை குண்டு துளைக்காத கூண்டுக்குள் நின்று ஆற்றுகின்றார். அப்படியென்றால் அவருக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லையா?

கிரிக்கெட்

இலங்கையில் நடைபெறும் முக்கோணத்தொடரின் கடைசியாக இந்தியா இலங்கை விளையாடியபோட்டியால் ஆசிய கிரிக்கெட் அதிர்ந்துபோய் ரணகளமாகி இருக்கின்றது. ரந்தீவ் செய்தது தவறுதான் அதற்க்கு அவர் மன்னிப்பு கேட்டுவிட்டார், இப்போ பழைய குப்பைகளை இந்திய முன்னாள் வீரர்கள் கிளறுகின்றார்கள். இவர்கள் செய்யாத குழப்படிகளையா ரந்தீவ் செய்துவிட்டார்? ஆனாலும் வழக்கம்போல் பெரிய அண்ணனுக்கு பயந்து இலங்கை கிரிக்கெட் சபை மன்னிப்பு கேட்டுவிட்டது. இந்தியாவை உசுப்பேத்தி உசுப்பேத்தி தான் உடம்பை ரணகளமாக்குகின்றார்கள். இத்தனைக்கும் அணித்தலைவர் டோணி அமைதியாக இருக்கின்றார்.

எத்தனையோ தேவையான விடயங்கள் இருக்க ஹிந்திய ஊடகங்கள் இதனை தூக்கிபிடிப்பது வேறு ஏதோ அரசியல் அல்லது உள்குத்து இருப்பது போல் தெரிகின்றது. இது பற்றி பிரபல கிரிக்கெட் அனாலிஸ்டுகள் கங்கோனும் லோசனும் அதிகம் எழுதியபடியால் நான் பெரிதாக அலட்ட விரும்பவில்லை.

யார் கண்டது அடுத்த ஐபிஎல்லில் ரந்தீவ் டெல்லிக்கு விளையாடவும் கூடும்.

இங்கிலாந்தில் கிரிக்கெட் மோகம் இன்னமும் குறையவில்லை என்பதற்க்கு நேற்று கெனிங்டன் ஓவலில் தொடங்கிய இங்கிலாந்து எதிர் பாகிஸ்தான் போட்டி சாட்சி. மைதானத்தில் நல்ல கூட்டம், மைதானத்தில் அருகால் தான் தினமும் நான் பயனிக்கின்றனான். அதனால் தான் சனக்கூட்டத்தைக் காணமுடிந்தது. ஆனாலும் வழக்கம் போல் இங்கிலாந்து பத்திரிகைகளில் ஒரு ஓரத்தில் தான் கிரிக்கெட் செய்தி காணக்கிடைத்தது. அவர்கள் கால்பந்துக்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள்.


சினிமா :

அண்மையில் தில்லாலங்கடியும் களவாணியும் பார்க்க கிடைத்தது. மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படங்கள் இரண்டும். தில்லாலங்கடி ரீமேக், களவாணி அக்மார்க் ஒரிஜினல், இரண்டும் நகைச்சுவை நிறைந்த படங்கள். ஜெயம் ரவிக்கு நகைச்சுவையும் நன்றாகவே வருகின்றது. தமன்னா அழகாக இருக்கின்றார். பசங்களில் அறிமுகமான விமல் களவாணியில் அசத்துகின்றார். கதாநாயகியும் ஓக்கே ரகம் தான். வழக்கம்போல் சரண்யா மனசுக்குள் மத்தாப்புதான்.

நாளைக்கு நான் மகான் அல்ல வெளியாகின்றது. கார்த்தி இதில் எப்படி நடித்திருக்கின்றார் எனப் பார்க்கவேண்டும், நான் மகான் அல்ல பாடல்களில் வழக்கம் போல் யுவன் ராஜாவாகி இருக்கின்றார். காதல் சொல்ல வந்தேன் படத்தின் சந்தியா பாடல் யுவனுக்கு இன்னொரு காதல் வளர்த்தேன், காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் பாடல் போல் மெஹா ஹிட். அருமையான மெலடி. ஆனால் படம் தான் பப்படம் என்கின்றார்கள்.

பதிவுலகம்

இலங்கைப் பதிவர்களின் முதலாவது சந்திப்பு நடந்து வரும் 23ந்திகதியுடன் ஒரு வருடமாகப்போகின்றது. சந்திப்பின் மூலம் கிடைத்த நன்மைகள் அல்லது விளைவுகள் என்னவென்றால் மதுவினால் இலங்கைப் பதிவர் குழுமம் ஆரம்பிக்கப்பட்டதும், பல நல்ல நண்பர்கள் கிடைத்து இன்றைக்கு அவர்கள் மாமன், மச்சான், சித்தப்பூ பெரியப்பூ என உறவு முறை கொண்டாடும் வரை நல்ல உறவுகளானதும் தான். எத்தனையோ விடயங்கள் நடைமுறப்படுத்த பலரும் முயன்றும் ஏனோ பலரின் ஒத்துழைப்பு இல்லாமையால் கைவிடப்பட்டுவிட்டது அல்லது மறக்கப்பட்டுவிட்டது.

இரண்டாவது சந்திப்பும் சென்ற வருடம் டிசம்பரில் நடந்தது அதன் பின்னர் கடந்த 8 மாதங்களாக நண்பர்களாக சந்திக்கின்றார்களே ஒழிய இன்னொரு பதிவர் சந்திப்புக்கு சாத்தியம் ஏனோ ஏற்படவில்லை. இடையில் இலங்கையின் ஏனைய பாகங்களில் ஒரு இடத்தில் சந்திப்போம் என முடிவெடுத்தும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. எத்தனையோ ஆற்றல்மிக்க துடிப்பான இளைஞர்கள் இப்போது பதிவு எழுதுகின்றார்கள், அவர்கள் நினைத்தால் விரைவில் இன்னொரு சந்திப்பை நடத்தலாம். இதன் மூலம் தூங்கிக்கொண்டிருக்கின்ற அல்லது ஓய்வெடுக்கின்ற பதிவர்களை மீண்டும் எழுத வைக்கலாம்.

சிறு விளக்கம் :
அண்மைக்காலத்தில் பெரும்பாலும் என்னுடைய பதிவுகளுக்கு நான் பதில் பின்னூட்டங்கள் இடுவது மிகவும் குறைந்துவிட்டது, இதனைச் சில நண்பர்கள் எனக்கு பல்வேறு வழிகளில் அறியத் தந்தார்கள். இதற்க்கான முக்கியமான காரணம் நேரம் மட்டுமே. பல தடவை பதில் அளிக்கமுயற்சி செய்வேன் ஆனாலும் ஏனோ முடிவதில்லை. ஆனாலும் பெரும்பாலும் நான் ரசித்த பதிவுகளுக்கு தேவைப்பட்டால் வாக்கும் பின்னூட்டமும் அளித்துவருகின்றேன். பகலில் பெரும்பாலும் நேரம் இருப்பதில்லை. இரவிலும் அரைவாசி இரவில் நேரமில்லாதபடியால் இந்தப் பதிவு நள்ளிரவின் பின்னர் எழுதுகின்றேன். எத்தனையோ விடயங்கள் எழுத யோசித்தாலும் வேலைப்பளு, கல்விப்பளு எழுத விடுகின்றதில்லை. ஈட் கிரிக்கெட், ட்ரிங் கிரிக்கெட் என இருந்த நான் இப்போ கிரிக்கெட்டை கிரிகின்போவில் மட்டும் ஸ்கோர் பார்ப்பதுடன் விட்டுவிடுகின்றேன், ரந்தீவ் விவகாரம் கூட கங்கோனின் பதிவில் தான் அறிந்தேன். இனிமேல் எப்படியும் நேரம் ஒதுக்கி பதில் பின்னூட்டம் இட முயற்சிக்கின்றேன்.

இன்று பிறந்த நாள் கொண்டாடும் எனது அம்மாவுக்காக இந்தப் பாடல்.

ஹாட் அண்ட் சவர் சூப் 12-08-2010

அரசியல்

மீண்டும் இலங்கையின் அரசியல் அரங்கு சூடு பிடித்துள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணியின் பாராளமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் ஆளும் கட்சியுடன் இணையப்போவதாக வந்த செய்திதான் இதற்கான காரணம். ஐக்கியதேசியக் கட்சியில் போட்டிபோடும்போதே பிரபா கணேசனுக்கு தெரிந்திருக்கும் எப்படியும் தாம் எதிர்க்கட்சிதான் என ஆனாலும் வெற்றி பெற்று சில நாட்களின் பின்னர் என்ன காரணத்துக்காகவோ அவர் ஆளும் கட்சியில் இணைய முனைகின்றார். ஏற்கனவே இவரின் அண்ணன் மனோ கணேசனுக்கு ஐக்கிய தேசிய முன்னணியின் தேசியப்பட்டியலில் ரணில் இடம் கொடுக்கவில்லை என பிரச்சனைப் பட்டார்கள். இந்த கட்சி தாவும் நபர்களுக்கு எந்த தண்டனையும் இல்லையா? ஆகக்குறைந்தது மக்களுக்கு திருப்பி அழைக்கும் அதிகாரம் தேவை? மக்கள் பிரபா கணேசனை ஆளும் கட்சி எம்மியாக பாராளமன்றத்துக்கு அனுப்பவில்லை? ஆளும் கட்சியில் கொழும்பைப் பிரதிநிதித்துவப்படுத்த தமிழர் ஒருவர் வேண்டுமென்றால் இராதகிருஷ்ணனையே அனுப்பியிருக்கலாம். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இன்னும் பலர் ஆளும் கட்சிக்கு தாவ இருக்கின்றார்களால். ரணில் பேசாமல் கட்சியைக் கலைத்துவிட்டு துறவியாகலாம்.

அரசியல் சண்டியன் மேர்வின் சில்வாவை கட்சியிலிருந்து நீக்கியிருப்பதாக அரசாங்கம் அறிவித்திருக்கின்றது. காலம் பிந்திய முடிவு தான் ஆனாலும் பாராட்டவேண்டிய முடிவு. சென்ற வியாழக்கிழமை மேர்வின் சில்வாவின் புகழ் லண்டன் புகையிரதங்களிலும் நீளத்துக்கீழ் புகையிரதங்களிலும் மேலும் பரவி இலங்கைக்கு மேலும் புகழ் சேர்த்தது. இங்கே புகையிரத நிலையங்கள், பேருந்து நிலையங்களில் மெற்ரோ எனப்படும் பத்திரிகை இலவசமாக கிடைக்கும். அந்தப் பத்திரிகையில் மேர்வினின் படத்துடன் அவர் சமுர்த்தி உத்தியோகத்தரைக் கட்டிப்போட்ட செய்தி வெளியாகியது. இந்த ஜோக்கரை பாராளமன்றத்தில் தேசியப் பட்டியலில் உறுப்பினராக்கி அழகு பார்த்தவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தான். சந்திரிக்கா செய்த எத்தனையோ பிழைகளில் இந்தப் பிழையும் ஒன்று, கடைசியில் சந்திரிக்காவையே திட்டி அரசியல் நடத்தில் லட்சக்கணக்கான வாக்குகள் பெற்றவர் மேர்வின் சில்வா. இவரை சில நாள் ஊடக அமைச்சராக்கி அழகு பார்த்த ஜனாதிபதி இப்போ அவரின் சண்டித்தனம் கூடக்கூட இடை நிறுத்தியிருக்கின்றார். இந்த நாடகம் இன்னும் எத்தனை நாளைக்குத் தான் என பொறுத்திருந்து பார்ப்போம்.

எங்கள் நாடுகளில்
கோன்கள் உயர்கின்றார்கள்
வரப்புகள் மட்டும்
அப்படியே இருக்கின்றன.

சினிமா

எந்திரன் இசை வெளியீடு பிரமாண்டமாக மலேசியாவில் நடைபெற்று பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கின்றன. வழக்கம்போல் ரகுமானின் பாடல்கள் முதன்முறை கேட்கும் போது அவ்வளவு இதமாக இருக்கவில்லை. விண்ணைத்தாண்டி வருவாய், இராவணன் பாடல்கள் சில உடனடியாக பிடித்தது போல் எந்திரனில் எந்தப் பாடலும் முதலில் கவரவில்லை. கொஞ்சம் கொஞ்சம் கேட்டபின்னர் புதிய மனிதாவும் பூம்பூம் ரோபோடாவும் நல்லாயிருக்கு. எப்படியும் ஷங்கர் பாடல்களை அழகாக படமாக்கி ஹிட்டாக்கிவிடுவார். போதாக்குறைக்கு உழக அழகியும் இருக்கின்றார் சொல்லவா வேண்டும். எந்திரனின் வெற்றிக்கு காரணம் ஷங்கரா? சூப்பர் ஸ்டாரா? இல்லை சன் குழுமத்தின் ஓவர் டோஸ் விளம்பரமா? என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். மொக்கைப்படங்களான காதலில் விழுந்தேன், மாசிலாமணி, அம்பா சமுத்திரம் அப்பானிக்கே படம் வெளியாகி அடுத்த நாளே வெற்றிப்படம் என விளம்பரம் கொடுத்தவர்கள். ரோபோவுக்கு சும்மாவா இருப்பார்கள் அதிலும் சொந்தப்படம் வேறை பாவம் சன் நெட்வேர்க் இணைப்புகள் இருப்பவர்கள்.

நீண்ட நாள் சந்தேகம் ஒன்று படம் வெளியான அடுத்த நாளே மிகப் பெரிய வெற்றி என எப்படி விளம்பரம் கொடுக்கின்றார்கள்.

கிரிக்கெட்

இலங்கையில் நடக்கும் முத்தரப்பு தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி கொஞ்சம் பலம் குறைந்த நியூசிலாந்திடம் 200 ஓட்டங்களால் அவமானத் தோல்வியைத் தழுவியது. நியூசியின் புதிய தலைவர் ரோஸ் டைலரின் 95 ஓட்டங்களும் ஸ்டைரிசின் 89 ஓட்டங்களும் நியூசிக்கு 288 என்ற நல்ல ஓட்ட எண்ணிக்கையை கொடுக்க இந்திய அணியின் நட்சத்திரத் துடுப்பாட்ட வீரர்கள் சேவாக், யுவராஜ் சிங், டோணி, ரைனா இலகுவாக இந்த எண்ணிக்கையை கடப்பார்கள் என நினைத்தால் 88 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்து தோற்றுவிட்டார்கள்.

இங்கிலாந்து பாகிஸ்தான் டெஸ்ட் தொடரில் எட்பக்ஸ்டனில் நடந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானின் இரண்டாவது இனிங்கிசில் இங்கிலாந்து வீரர் ஸ்டுவர்ட் புரோட் பந்துவீசும் போது பாகிஸ்தானிய வீரர் ஹைடரை நோக்கீ பந்தால் எறிந்தவிடயத்தில் ஐசிசி இங்கிலாந்துக்கு சார்பாக நிற்பதுபோல் தோன்றுகின்றது. கனவான்கள் ஆட்டம் என்ற நிலையில் இருந்த கிரிக்கெட்டில் புரோட் செய்தது பாரிய தவறாகும் இன்னொரு வீரரை காயப்பட்டுத்தும் நோக்கில் எறிந்த பந்துக்கு வெறும் அபராதத்துடன் புரோட் தப்பிவிட்டார். ஆகக்குறைந்தது அவரை இந்த தொடரில் இருந்து நீக்கி இருக்கவேண்டும் ஆனால் ஏனோ ஐசிசி செய்யவில்லை. சில இங்கிலாந்து வீரர்களும் பத்திரிகைகளும் புரோட்டுக்கு ஆதரவாக அவர் மன அழுத்தத்தால் அப்படிச் செய்தார் என்றும் பின்னர் மன்னிப்புக் கேட்டதால் பிரச்சனை சுலபமாக முடிந்துவிட்டதாகவும் சொல்கின்றனர். இங்கிலாந்தின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த நேரத்தில் புரோட்டுக்கு மன அழுத்தம் வர வாய்ப்பே இல்லை என்பது புதிதாக கிரிக்கெட் பற்றி எழுத முயற்சிக்கும் ஆதிரைக்கே தெரியும் போது ஐசிசிக்கு மட்டும் தெரியவில்லை. வெள்ளைத் தோலுக்கு என்றைக்கும் மதிப்பு அதிகம் தான்.

பேஸ்புக்கின் அசுர வளர்ச்சிக்கு கீழே உள்ள இந்தப் படமே சான்று. பட உதவி செய்த இளைப்பாறிக்கொண்டிருக்கும் புல்லட்டிற்க்கு நன்றிகள்.


அதிரடி ஆர்ஜென்டீனா, ஆக்ரோச பிரேசில், உலக கோப்பை யாருக்கு?

ரோமுக்குப் போனால் ரோமானியனாக மாறு என்ற பழமொழிக்கு அமைய நானும் கிரிக்கெட்டை மறந்து செல்சீ, மஞ்சஸ்டர் யூனைட்டட், ஆர்சனல், கிறிஸ்டல் பலஸ், வெஸ்ட்காம்( மிகவும் அழகான மைதானம்) என உதைபந்தாட்ட ரசிகனாக மாறிவிட்டேன். ஆனாலும் ஏன் ஒரு பந்துக்கு 22 பேர் அடித்துக்கொள்கின்றார்கள் என்பது புரியவில்லை.

இந்த மாற்றத்தினால் தென்னாபிரிக்காவில் நடக்கும் உலகக்கோப்பைப்போட்டிகளை பார்க்கும் பாய்க்கியம்(தொலைக்காட்சியில் தான்)கிடைத்தது. வீரர்களைவிட வக்கா வக்கா என அக்கா ஷகிரா (34 வயதாம் அப்போ அக்காதானே) ரொம்பவே கவர்ந்துவிட்டார்).

நேற்றுடன் முதல் சுற்றுப்போட்டிகள் நிறைவடைந்துவிட்டன. நடப்புச் சம்பியன் இத்தாலி, முன்னாள் சம்பியன் பிரான்ஸ், போட்டிகளை நடத்தும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகள் வெறும் கையுடன் வெளியேறிவிட்டன. இங்கிலாந்து மயிரிழையில் அடுத்த சுற்றுக்குச் சென்றாலும் பலம் வாய்ந்த ஜேர்மனியுடன் மோதவேண்டும்.



குழு A யில் முதன்முறை சாம்பியனான உருகுவே, முன்னால் சாம்பியன் பிரான்ஸ், போட்டியை நடத்தும் தென்னாபிரிக்கா மற்றும் மெக்ஸிகோ கலந்துகொண்டன. முதலாவது போட்டியில் மெக்சிகோவை 1 க்கு 1 என சமநிலைப் படுத்தி தென்னாபிரிக்கா தன்னுடைய திறமையை உலகிற்க்கு காட்டியது. பிரான்சுடனான போட்டியில் இலகுவாக வெற்றி பெற்றாலும் உருகுவேயுடனான போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் குழுவில் மூன்றாவது இடத்தை பிடித்தது. அதே நேரம் உருகுவே மெக்சிகோவையும் தென்னாபிரிக்கைவையும் வீழ்த்தி குழுவில் முதல் இடத்தைப் பிடித்தது.

குழு B யில் முன்னாள் சாம்பியன் ஆர்ஜென்டீனா, தென்கொரியா, கிறீஸ், நைஜீரியா ஆகிய அணிகள் விளையாடின. ஆர்ஜென்டீனா விளையாடிய மூன்று போட்டிகளையும் வென்று முதல் இடத்தையும் தென்கொரியா கிறீசுடனான போட்டியில் வெற்றி பெற்றது அத்துடன் நைஜீரியாவை சமப்படுத்தி இரண்டாம் இடத்தில் பி பிரிவில் இடம் பெற்றது.

இங்கிலாந்து, அமெரிக்கா, அல்ஜீரியா, சுலவேனியா ஆகிய அணிகள் பிரிவு C யில் இடம் பெற்றன. இங்கிலாந்து இலகுவாக இந்தப் பிரிவில் முதலிடம் பெறும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் முதலாவது போட்டியில் இங்கிலாந்து அமெரிக்காவைச் சமநிலைப்படுத்தியது, அடுத்த போட்டியில் அல்ஜீராவை கோல் எதுவும் அடிக்காமல் சமநிலைப்படுத்தி வாழ்வா சாவா என்ற சுலவேனியாவுடனான போட்டியில் டெஃபோவின் அபார கோலினால் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தைத் தக்கவைத்துவிட்டது. ஆனால் நாளைய போட்டியில் ஜேர்மனியுடன் மோத இருப்பதால் இங்கிலாந்தும் நடையைக்கட்டும் சந்தர்ப்பம் அதிகமாகவே இருக்கின்றது. அமெரிக்கா அல்ஜீரியாவுடனான போட்டியில் வெற்றி பெற்று கோல் அடிப்படையில் பிரிவில் முதல் இடத்தைப் பிடித்தது.

பிரிவு Dயில் முன்னால் சாம்பியன் ஜேர்மனி, அவுஸ்திரேலியா, கானா, சேர்பியா ஆகிய அணிகள் மோதின. ஆசியுடனான போட்டியில் 4 கோல்கள் அடித்த ஜேர்மன், சேர்பியாவுடனான அடுத்த போட்டியில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. கானாவுடனான இறுதிப்போட்டியில் மீண்டும் தன்னுடைய அதிரடியைக் காட்டி பிரிவில் முதலிடத்தை ஜேர்மனி பிடித்தது. சேர்பியாவுடனான போட்டியில் வெற்றி பெற்றதுடன் ஆசியுடனான போட்டியில் சம்நிலையையும் பெற்று கானா இரண்டாம் இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்குத் தெரிவானது.

பிரிவு Eயில் நெதர்லாந்து, ஜப்பான், கமரூன், டென்மார்க் ஆகிய நாடுகள் போட்டியிட்டன. நெதர்லாந்து எதிர்த்து விளையாடிய மூன்று அணிகளையும் வென்று இலகுவாக முதலிடத்தை அடைந்தது. ஜப்பான் கமரூனையும் டென்மார்க்கையும் வீழ்த்தி பிரிவில் இரண்டாம் இடத்தை பிடித்தது. அதே நேரம் பலராலும் எதிர்பார்க்கபபட்ட கமரூன் சகல போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. நெதர்லாந்தும் ஆர்ஜென்டீனாவும் மாத்திரமே விளையாடிய அனைத்து முதல் சுற்றுப்போட்டிகளிலும் வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த பிரிவான Fவில் நடப்புச் சாம்பியன் இத்தாலி, பரகுவே, சொலவாக்கியா, நீயூசிலாந்து ஆகிய அணிகள் ஆடின. பரகுவே சொலவாக்கியாவுடனான போட்டியில் வெற்றி பெற்று மற்ற இரு போட்டிகளையும் சமநிலைப்படுத்தியது. சொலவாக்கியா பலம் வாய்ந்த இத்தாலியை வென்ற்றதுடன் நீயூசிலாந்துடனான போட்டியை சமநிலைப்படுத்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது. நான்கு தடவைகள் சாம்பியனான நடப்புச் சாம்பியன் இத்தாலி ஒரு போட்டியைத் தானும் வெல்லாமல் கோப்பையை தென்னாபிரிக்காவில் பறிகொடுத்துவிட்டு வெறும் கையுடன் இத்தாலிக்குத் திரும்பினார்கள்.

ஐந்து தடவைகள் சாம்பியனான பிரேசில், இம்முறை உலகக்கிண்ணம் வெல்லக்கூடிய வாய்ப்புள்ள போர்த்துக்கல், ஜவரி கோஸ்ட், வட கொரியா ஆகிய நாடுகள் பிரிவு G யில் இடம் பெற்றன. பிரேசில் வடகொரியா, கோஸ்ட்ரோரிக்கா இரண்டையும் வெற்றி பெற்றாலும் போர்த்துக்கல்லுடனான போட்டியை மிகவும் கடினமாக ஆடி சமநிலைப்படுத்தி பிரிவில் முதலிடம் எடுத்தது. போர்த்துக்கல் வடகொரியாவை ஏழுக்கு பூச்சியம் என்ற கணக்கில் இலகுவாக வென்றாலும் பிரேசிலையும் ஜவரி கோஸ்ட்யும் கோல் எதுவும் அடிக்காமல் சமநிலைப்படுத்தி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. முதல் சுற்றில் போர்த்துக்கல்லும் உருகுவேயும் தான் எந்தக் கோலையும் எதிரணியினர் அடிக்கவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எட்டாவது பிரிவான Hசில் ஸ்பெயின், சிலி, சுவிஸ்ர்லாந்து மற்றும் கொன்டூரஸ் ஆகிய நாடுகள் விளையாடியன. முதலாவது போட்டியில் ஸ்பெயின் சுவிசிடம் அடிவாங்கிச் சறுக்கினாலும் அடுத்த போட்டிகளில் சுதாகரித்து வெற்றி பெற்று பிரிவில் முதலிடத்தைப் பெற்றுவிட்டார்கள். ஸ்பெயினிடம் தோல்வியடைந்த சிலி ஏனைய இரண்டு போட்டிகளையும் வெற்றிபெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

இன்று இரண்டாவது சுற்றான லாஸ்ட் 16 ஆரம்பமாகியது. (கிரிக்கெட் போல் சூப்பர் சிக்ஸ்டீன், சூப்பர் சிக்ஸ் எனப் பெயரிட மோடி போல் பீபாவில் எவரும் இல்லையோ) முதல் போட்டியில் உருகுவே தென்கொரியாவும் மோதிய விறுவிறுப்பான போட்டியில் உருகுவே 2 க்கு 1 என்ற கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி காலிறுதிக்குத் தெரிவானது.

சில குறிப்புகள் :
1. இங்கிலாந்து அணி கிரிக்கெட்டில் இந்திய அணிபோல் காணப்படுகின்றது. நட்சத்திர வீரர்கள் பலர் இருந்தும் வெற்றி அரிதாக இருக்கின்றது. ஜெராட், ரூனி, ரெறி, லம்பார்ட், குறூச் எனப் பெரிய பட்டாளமே இருக்கின்றது. பயிற்சியாளருடனான சண்டைகளும், வீரர்களுக்குள் ஒற்றுமை இல்லையும் இவர்களைப் பின்னடையச் செய்கின்றது.

போட்டிகள் ஆரம்பமாகும் முன்னர் பலரது வீடுகளிலும் வாகனங்களிலும் இங்கிலாந்து கொடிகள் பறக்கவிடப்பட்டன இரண்டாவது போட்டியையும் சமநிலைப்படுத்தியதும் பலர் அவற்றை அகற்றிவிட்டனர். மீண்டும் சொலவேனியாவை வென்று அடுத்த சுற்றுக்கு சென்றதனால் கொடிகள் மீண்டும் தென்படுகின்றன.

2. 1986ல் ஆர்ஜென்டீனாவிற்க்கு இரண்டாம் தடவை உலககிண்ணத்தை பெற்றுக்கொடுத்த டிக்கோ மரடோனாவின் பயிற்சியால் ஆர்ஜென்டீனா இம்முறை கிண்ணம் வென்றாலும் ஆச்சரியமில்லை. கோல் அடித்த வீரர்களைக் கட்டிப்பிடித்து முத்தமிடுவதும், கோல் அடித்த வேளைகளில் ஏனையவர்களை பாய்ந்து பாய்ந்து கட்டிப்பிடிப்பதும் என மனிதர் கலக்குகின்றார். சில பயிற்சிவிப்பாளர்கள் ஏனோ தானோ என இருக்கும் போது இவரின் நடைமுறைகள் வீரர்களுக்கு மட்டுமல்ல பார்க்கின்ற அனைவருக்கும் சந்தோசம் தருகின்றது.

3. ரூனி எத்தனை கோல் அடிப்பார்? இன்றைய போட்டியில் வெல்வது யார்? இங்கிலாந்து ஜேர்மனியை 3க்கு 2 என்ற எண்ணிக்கையில் வீழ்த்தும் என பந்தய நிறுவனங்களின் கல்லா களைகட்டுகின்றது. பல முக்கிய போட்டிகளில் எதிர்பார்க்கப்பட்ட அணிகள் தோல்வி அடைந்தபடியால் இவர்களுக்கு வருமானம் கூடுகின்றது. ஒரு நிறுவனம் போட்டிக்காலத்தில் வாங்குகின்ற தொலைக்காட்சி, மடிக்கணணி போன்றவற்றிற்கு இங்கிலாந்து கிண்ணம் சுவீகரித்தால் பணத்தை திரும்ப தருவதாக விளம்பரம் செய்திருக்கின்றார்கள்.

4. வழக்கமாக கால்ப்பந்துப் போட்டிகள் என்றால் அழகான காட்சிகளையும் பெண்களையும் காட்டும் கமேராமேன்கள் இம்முறை இனியவை நாற்பதுவில் ஊர்வலத்தைத் தவிர்த்து கருணாநிதி குடும்பத்தைக் காட்டியதுபோல் போட்டியை மட்டும் காட்டுகின்றார்கள்.



எதிர்வரும் 11ந்திகதி உலக சனத்தொகையில் 30%மான மக்கள் ரசிக்கும் போட்டியின் சாம்பியன் யார் என்பது தெரிந்துவிடும். அதுவரை என்ன என்ன அதிர்ச்சிகள் காத்திருக்கின்றனவோ பொறுத்திருந்துபார்ப்போம்.

சந்தேகம் : லட்சக்கணக்கான சனத்தொகை உள்ள நாடுகள் உலகக் கோப்பையில் பங்குபெறும் போது கோடிகணக்கான மக்கள் உள்ள இந்தியா ஏன் பங்குபற்றுவதில்லை.

ஹாட் அண்ட் சவர் சூப் 17-06-2010

அரசியல்

இந்தியாவின் போபால் நச்சுப்புகை சோகத்திற்க்கு இருபது வருடங்களுக்குப் பின்னர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கின்றது. குற்றவாளி நிறுவனத்திற்க்கு கிடைத்த தண்டனையோ வெறும் 2 ஆண்டுகள் தான். இருபதினாயிரம் மக்கள் கொல்லப்பட்ட சோகத்திற்க்கு 20 வருடத்தின் பின்னர் வெறும் 2 ஆண்டுகள் தான் தண்டனை என்றால் மனுநீதி சோழனும் இராஜராஜனும் அசோகனும் இன்னும் பலரும் நீதி தவறாமல் ஆட்சி செய்த பாரத தேசத்தின் நிலையை நினைக்க வருத்தமாக இருக்கின்றது. இனிமேல் பாரதத்தை புண்ணியபூமி என அழைப்பது தவறாகும் போல் இருக்கின்றது.

இதைப் பற்றி அண்ணன் ஜாக்கி குமுறோ குமுறென்று குமுறியிருக்கின்றார். நீதித்துறையில் கூட பாரபட்சம் என்றால் மக்கள் என்ன செய்வார்கள். ஒரு தனிமனிதனுக்காக ஒரு இனத்தையே மாற்றம் தாய் மனப்பான்மையில் பார்ப்பவர்களிடம் நீதியை எதிர்பார்க்கலாமா? ஒருகாலத்தில் மிகப்பெரும் ஜனநாயக நாடாக இருந்த இந்தியா அண்மைக்காலமாக சர்வாதிகார நாடாக மாறுவது கவலை அளிக்கின்றது. (மனதில் ஹிட்லரை வீட முசோலினியே ஏனோ வந்துபோகின்றார்).

ஆன்மிகம்

44 நாட்கள் சிறைவாசத்தின் பின்னர் நித்தியானந்தா மீண்டும் தன் ஆசிரமத்திற்க்கு வந்திருக்கின்றார். வந்தவர் சும்மா இருக்காமல் அக்னி சூழ தியானத்தில் அமர்ந்திருக்கின்றார். துறவி என்ற பெயரில் நித்தியானந்தா செய்தவை கண்டிக்கப்படக்கூடியவையே. காரணம் துறவு என்றால் முற்றும் துறத்தல் என்பது அர்த்தமாகும் ஆனாலும் இக்கால துறவிகள் எதனையும் துறக்காமல் துறவியாகிவிடுகின்றார்கள். சீதை தீக்குளித்தது போல் நித்தியானந்தாவும் தனக்குத் தானே அக்னிப் பரீட்சை வைக்கின்றாரோ தெரியவில்லை. கடவுளை நம்பினாலும் நம்பலாமே ஒழிய இந்த கடவுளின் பெயரால் தங்களை வளர்ப்பவர்களை நம்பவே கூடாது. எத்தனை பிரேமானந்தாக்கள், கல்கிகள், பகவான்கள் வந்தாலும் நம் மக்கள் திருந்தவே மாட்டார்கள்.

நித்தியானந்தா வெளியே வந்துவிட்டார், ரஞ்சிதா எப்போ மீண்டும் வெளிஉலகிற்க்கு வருவார்?

உலகக் கோப்பை

நேற்றுடன் சகல அணிகளும் ஒவ்வொரு போட்டியில் விளையாடி முடித்துவிட்டன. இதுவரை நடைபெற்ற போட்டிகளின் படி பலம் வாய்ந்த அணிகள் மிகவும் கஸ்டப்பட்டதையும், இரண்டாம் தர அணிகள் பலமாக இருந்ததையும் பார்க்கமுடிந்தது. வழக்கம் போல் அதிர்ச்சிகள் அடுக்கடுக்காக வந்தன. இங்கிலாந்து அமெரிக்காவை சமநிலைப் படுத்தியது, பிரான்சும் கஸ்டப்பட்டு மெக்சிகோவை சமநிலைப்படுத்தியது. இம்முறை உலகச் சம்பியனாக வரும் எனப் பலரால் கணிக்கப்பட்ட ஸ்பெயின் பரிதாபமாக சுவிசிடம் தோற்றது. பிரேசில் பலத்த போராட்டத்தின் பின்னர் வடகொரியாவை வென்றது. நடப்புச் சம்பியன் இத்தாலியும் பரகுவேயை சமநிலைப் படுத்தியது.

இதுவரை நடந்த போட்டிகளை வைத்துப் பார்த்தால் ஆர்ஜென்டினாவும் ஜேர்மனியுமே பலமாக இருக்கின்றன. ஆனாலும் கால்ப்பந்தில் கடைசி நிமிடம் வரை எதையும் கூறமுடியாது என்பாதல் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஆசியக் கிண்ணம்

உலக கோப்பை உதைபந்தாட்டப்போட்டிகளினால் பெரிதாக அறியப்படாத போட்டிகளாக ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இருக்கின்றன. அத்துடன் தம்ம்புள்ளை மைதானத்தில் பெரிதாக ஓட்டங்களும் எடுக்கமுடியாது (ஏன் தான் இங்கே வைக்கின்றார்களோ?). இதுவரை நடந்த 2 போட்டிகளையும் வைத்து எந்த முடிவையும் எடுக்கமுடியாது ஆனாலும் சொந்த மண்ணில் நடப்பதால் இலங்கைக்கே அதிக வாய்ப்புகள் இருப்பதுபோல் தெரிகின்றது. முரளிதரனும் நம்ம பாஉ போல் கொஞ்சம் களைப்படைந்துவிட்டது நேற்றைய போட்டியில் தெரிந்தது. எரியாத சுவடிகள் பவன், வலைமனை சுகுமார் நக்கலடிக்கமுன்னர் அவர் தன்னை மறுபரீசீலனை செய்வது நல்லது.

இராவணன்

இந்தவாரம் இராவணன் படம் வெளிவருகின்றது. அண்மைக்காலமாக எனக்கு ஏனோ மணிரத்னம் படங்களில் அவ்வளவு எதிர்பார்ப்பு இல்லை. அதிகமாக வரலாறுகளைத் திரிக்கின்றார். தமிழ் மன்னன், சிறந்த சிவபக்தன் இராவணனை வில்லனாக்கி ஆரியர்களின் மாயைக்கு உதவுகின்றாரோ தெரியவில்லை. இராவணன் என்பவரை வில்லனாக்கிய பெருமை ஆரியரையே சாரும் ஆனாலும் நாங்கள் (திராடவிடர்) ஆரியக் கடவுளுக்குத் தான் விழா எடுப்போம். எங்கள் தமிழ் மன்னனை மறந்துவிடுவோம். பேராசிரியர் மெளனகுருவின் இராவணேசனில் இராவணன் தான் கதாநாயகன். இராவணன் பற்றி விரைவில்(?) தனிப்பதிவே எழுதவேண்டும். இந்தவாரம் தமிழ்மணம், தமிழிஷ் எல்லாம் இராவணன் தான் அதிகம் அடிபடும் என்பதால் கொஞ்சம் ஆறுதலாக எழுதலாம்.

திரையுலகிற்க்கு பதிவுலகம் வழங்கும் விருதுகள் இறுதிக்கட்டத்திற்க்கு வந்துவிட்டது, மறக்காமல் உங்கள் வாக்குகளை சிறந்தவர்களுக்கு அளியுங்கள். மேலதிக விபரங்களுக்கு :




நறுமுகை

என்னுடைய உடன்பிறவாச் சகோதரன் அன்புத் தம்பி லெனினால் அண்மையில் நறுமுகை என்ற பெயரில் ஒரு இணையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் செய்திகளுடன் கருத்துக்களம், திரட்டி, வலைப்பதிவர்கள், குறும்படம் என பல விடயங்கள் இருக்கின்றன. லெனினின் திறமைகளை நான் பல இடங்களில் பார்த்திருக்கின்றேன். அவரின் நறுமுகை இணையமும் தனக்கென ஒரு தனி இடம் பிடிக்கும் என நம்புகின்றேன். என்னுடைய வலையினை அழகுற அமைத்துத் தந்தவர் லெனின் தான். லெனினுடன் இன்னும் சில நண்பர்களும் இணைந்து இதனைச் செய்கின்றார்கள். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.



ஜெசி ஜெசி என உருகினவர்களுக்கு மன்மதன் அம்பு திரிஷா
பட உதவி : அன்பு நண்பன் ஆதிரை.

பின்குறிப்பு : நீண்ட நாட்களின் பின்னர் சூப் ரசித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

பீட்ஷா, பேர்கர், சிப்ஸ்

பதிவரசியல்

சில நாட்களாக பதிவுலகம் கண்டங்களையும் தாண்டி அல்லோலபட்டுக் கொண்டிருக்கின்றது. வலை என்பது ஒன்லைன் டயறி என வரைவிலக்கணம் கொடுக்கின்றது புரொஜக்ட் மனேஜ்மெண்ட். வலையை தனிப்பட்ட விடயங்களை விட எத்தனையோ ஆக்கபூர்மான விடயங்களுக்கும் பயன்படுத்தலாம், பயன்படுத்துகின்றார்கள். ஆனால் ஒரு சிலர் தங்களின் குரோதங்களையும் காழ்ப்புணர்ச்சிகளையும் காட்ட வலையுலகை நாறடித்திருக்கின்றார்கள்.

வலை என்பது ஒருவர் தன்னுடைய கருத்துகளை அல்லது எண்ணங்களை வெளிப்படுத்தும் ஒரு ஊடகம். அவரின் கருத்துக்கள் பிடிக்கவில்லையா? வாசித்துவிட்டு சிரித்துவிட்டுப் போகவேண்டியதானே. அதனைவிட்டு விட்டு மற்றவர்களைத் தாக்கித் தான் ஏனையவர்கள் உங்களைத் திரும்பிப் பார்க்கவேண்டும் என்பது கடைந்தெடுத்த முட்டாள் தனம். மற்றவர்களும் பாராட்டும் படி எழுதவேண்டும் அல்லது பலர் படிக்கும் திரட்டிகளில் இணைக்கவேண்டும் இதை எல்லாம் செய்யாமல் கடை விரித்தேன் கொள்வார் எவரும் இல்லை என்றால் மற்றவர்கள் என்ன செய்வார்கள்.

அதிலும் அண்மைக்காலமாக மறைவாக்கு நேர்வாக்கு பிரச்சனைகளும் போலி ஐடிகளும் குழாயடிச் சண்டையாகவே மாற்றிவிட்டது. தமிழ்மணம் வாசகர் பரிந்துரையை நிறுத்தும்படி சில சண்டைகள் நடந்துமுடிந்துள்ளன / நடக்கின்றன. இங்கே எழுதுபவர்களில் பெரும்பாலானவர்கள் ஒருதரும் புரபெசனல் எழுத்தாளர்கள் அல்ல. பெரும்பாலானோர் பொழுதுபோக்குக்கு எழுதத் தொடங்கி தேர்ந்த எழுத்தாளர்களாகி புத்தகம் கூட வெளியிட்டுள்ளார்கள். ஒரு சிலரின் தேடுதல்கள் ஆச்சரியப்பட வைக்கும். எத்தனை விதமான விடயங்களை எழுதுகின்றார்கள். ஒரு சிலரோ தனது துறை சார்ந்த பதிவுகளில் வல்லவர்களாக இருக்கின்றார்கள். வாசகனுக்கு சலிப்பூட்டாமல் எழுதுவது என்பது ஒரு கலை.

சிலரோ தங்களின் சுயவிளம்பரத்திற்க்காக ஏனையோர்களால் கொஞ்சம் கவனிக்கப்படும் பதிவர்களைத் தாக்கி எழுதுவதும் அவரோ இவரோ எனக் குற்றம் சாட்டுவதும் அவர்களின் எதிர்காலம் அரசியலில் சேர்ந்தால் சிறப்பாக இருக்கும் என்பதையே காட்டுகின்றது. பலரால் ரசித்து எழுதிய சிலர் ஒரே வகையான பதிவுகளினால் சலிப்பூட்டுகின்றார்கள் என்பது அவர்களின் பதிவுகளை வாசிக்கும் வாசகர்களின் எண்ணிக்கையில் இருந்து விளங்குகின்றது.

வலைப் பதிவுகள் பற்றி ஆங்கிலத்தில் புத்தகங்கள் வந்தாலும் இன்னும் தமிழில் நல்லதொரு புத்தகம் வரவில்லை என நினைக்கின்றேன். அண்மைக்காலத்தில் அதிகரித்த வலைப்பதிவர்களின் எண்ணிக்கை ஆரோக்கியமானது தான் ஆனாலும் புதிதாக எழுத வருபவர்கள் இந்தக் குழாயடிச் சண்டைகளைப் பார்த்து ஒதுங்கிப் போனாலும் ஆச்சரியமில்லை.

சில காலத்திற்க்கு முன்னர் நண்பர் ஒருவர் "வலை எழுத எதாவது படித்திருக்கவேண்டுமா?" என என்னைக் கேட்டார். இதுவரை டிப்ளோமா இன் புளொக் என்ற கற்கை நெறி ஆரம்பிக்கப்படவில்லை விரைவில் ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கலாம் உங்களுக்கு எது சரியெனப்படுகின்றதோ அதனை எழுதுங்கள் என்றேன் இன்றைக்கு அவர் பலரால் கவனிக்கப்படும் ஒரு வலைப்பதிவராகிவிட்டார்.

மிகவும் முக்கிய குறிப்பு : மொக்கைப் பதிவு எழுதுவதற்க்கும் திறமை வேண்டும். (இது சாதாரண டயலாக் தான் பஞ்ச் அல்ல)

கால்ப்பந்து 2010

உலகத்தின் மிகப் பெரும் விளையாட்டுத் திருவிழா நாளை தென்னாபிரிக்காவில் ஆரம்பமாக இருக்கின்றது. உலகத்தின் சனத்தொகையில் கிட்டத்தட்ட 25% மக்கள் இந்த விளையாட்டை ரசிக்கப்போகின்றார்கள். இன்னும் சில நாட்களுக்கு பெற்றோல் விலை ஏற்றம், நயந்தாரா பிரச்சனை, ஜெனிலியாவின் பித்தலாட்டம், குளிர் போன்ற விடயங்களை விடுத்து கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடிப்பாரா? ரூனி தங்கக் காலணி வாங்குவரா? மீண்டும் ஆர்ஜென்டினா கப் தூக்குமா என்பவை தான் அனைவரினதும் பேச்சாக இருக்கும்.

செம்மொழி

சில நாட்களுக்கு முன்னர் லண்டனில் உள்ள ஒரு நூலத்திற்க்கு செல்லவேண்டி இருந்தது. நூலகத்தின் முகப்பில் நூல் நிலையம் வரவேற்கின்றது என ஆங்கிலம், சீன, அரபி உட்பட 10 மொழிகளில் தமிழ் மொழியிலும் வரவேற்பு பலகை வரவேற்றது. 1934ல் கட்டப்பட்ட அந்த நூலத்தில் தமிழ் மொழி பார்த்ததும் புல்லரித்தது. மெல்லத் தமிழ் இனிச் சாகும் என யார் சொன்னாலும் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, முன் தோன்றிய தமிழ் என்றைக்கும் வாழும்.



ஐஃபா

சென்றவாரம் ஐஃபா விருதுகள் வழக்கம் போல் இந்திய திரைப்படங்களுக்குப் பதிலாக ஹிந்தித் திரைப்படங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டன. அரசியல் காரணங்களுக்காக தென்னிந்திய சினிமாவினர் இதனைப் பகிஸ்கரித்தாலும் இன்னொரு காரணம் ஐஃபா விருதுகள் பெரும்பாலும் ஹிந்தித் திரைப்படங்களுக்கே வழங்கப்படும். காரணம் இது சர்வதேச ஹிந்தியன் திரைப்பட விருது. ஆனாலும் இம்முறை சிறந்த நடிகைக்கான விருதை ஜெனிலீயா தவறவிட்டாலும் அவருக்கு இம்முறை ஆஸ்கார் கிடைக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன. அவரின் நடிப்பு உலக மகா நடிப்பு. ட்விட்டரிலும் தன் பங்குக்கு நன்றாகவே நடித்திருக்கின்றார்.

ரசித்தது