ஹாட் அண்ட் சவர் சூப் 02-09-2010

அரசியல்

கடந்த சில நாட்களாக தர்மபுரி பஸ் எரிப்புப் சம்பவத்துக்கு காரணமானவர்களுக்கு தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தங்களின் தலைவி மேல் வைத்திருக்கும் அதீத அடிமைத்தனத்தில் அவர்கள் செய்த இந்த கொடுங்கோலுக்கு அரேபிய நாட்டுத் தண்டனைகள் தான் சரியானது. அப்பாவி மாணவிகளை கதறக் கதறக் தீக்கிரையாக்கிவர்களை இப்படியான கொலைச் செயலைச் செய்யத்தூண்டிய அரசியல்வாதிகளையும் கண்டிக்கவேண்டும் அல்லது தண்டனை கொடுக்கவேண்டும் ஆனாலும் எய்தவன் ஏதோ ஒரு நாட்டில் சுகமாக ஓய்வெடுக்க அம்புகள் மட்டுமே தூக்கில்.

தூக்குத் தண்டனை என்பது பெரியதொரு தண்டனைதான். அதே நேரம் இந்தக் குற்றவாளிகள் மிருகங்களை விடமிகக் கேவலமாக நடந்துகொண்டபடியால் இவர்களுக்கு தூக்கு கட்டாயம் கொடுக்கவேண்டும். அதே நேரம் மதுரை தினகரன் சம்பவ குற்றவாளிகளுக்கும் தூக்கு கொடுக்கவேண்டும். கண்கள் பனித்து இதயம் இனித்ததால் அந்த சம்பவம் விரைவில் மறக்கப்பட்டுவிடும். நம்ம உலக நாயகன் விருமாண்டியில் சொன்னது போல் மன்னிப்பவன் பெரிய மனிதன் என்ற கருத்து இந்த இரு சம்பவம் செய்தவர்களுக்கும் செய்யத் தூண்டியவர்களுக்கும் பொருந்தாது.

கிரிக்கெட்

இங்கிலாந்தில் இவ்வளவு நாளும் கால்பந்துக்கு முக்கியத்துவம் கொடுத்த பத்திரிகைகளை கடந்த ஞாயிறுமுதல் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டன. எல்லாப் புகழும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கே சேரும். இளம் வீரர்கள் முகமட் அமீரும் அசீப்பும் ஸ்பொட் சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கிகொண்ட பாகிஸ்தான் அணி இப்போ சல்மான் பட் அமீரின் கைங்கரியத்தால் இன்னமும் தவித்துக்கொண்டிருக்கின்றது. மஜீர் மஜீட் என்ற லண்டன் வாழ் தொழிலதிபரே இந்த சூதாட்டத்தின் சூத்திரதாரி என ஸ்கொலண்ட்யார்ட் போலிஸார் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.

அதே நேரம் அடுத்து வரும் பாகிஸ்தானுடனான இருபதுக்கு 20 போட்டிகளையும் ஒருநாள் போட்டிகளையும் ரத்துச் செய்து தங்களுக்கு பணத்தை திரும்பத் தரும்படி இங்கிலாந்து ரசிகர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள். எது எப்படியோ சில நாட்களுக்கு பாகீஸ்தான் கிரிக்கெட்டை வைத்து பத்திரிகைக கல்லா கட்டுவது நிச்சயம்.

அத்துடன் ஐபிஎல் புகழ மோடியும் சொந்தமாக விமானம் வாங்கியதாக கலைஞர் செய்திகளில் காட்டினார்கள். விளையாட்டு இப்போ வியாபாரமாக மாறிவிட்டது. நேரத்தையும் பணத்தையும் வீணாக்கும் எம்மைப் போன்ற அப்பாவி ரசிகர்கர்கள் தான் பாவம்.

ஷேன் வாட்சனுடனும் சில சூதாட்டவாதிகள் தொடர்புகொண்டதாக பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன. இப்படியே போனால் இனி நானும் கிரிக்கெட் விளையாடலாம். காரணம் எப்படியும் போடுகின்ற போல் நோ போல் தான். எனக்கெல்லாம் 50000 பவுண்டுகள் வேண்டாம் ஒரு 5000 பவுண்டே போதும்.

சினிமா

எந்திரன் பாடல்கள் கேட்க கேட்கத் தான் பிடிக்கும் என ஒருமுறை எழுதியது ஞாபகம், அது உண்மைதான். கிளிமஞ்சதாரோபாடல் மிகவும் பிடித்துவிட்டது சின்மயின் ஐஸ்கிறீம் குரல் ஐஸ்வர்யா ராஜை அப்படியே படம் போட்டுக் காட்டுகின்றது. புதியமனிதாவில் பாடும் நிலா பாலா இளையவர்களுடன் போட்டி போடுகின்றார். இசைப்புயல் எந்திரன் பாடல்களில் இசையை இன்னொரு வடிவத்தில் கொடுத்திருக்கின்றார். இந்தப் பாடல்களில் புதியவகையான ஒரு இசை ஒலிகள் தெறிக்கின்றன. தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட படம் என்பதாலோ தெரியவில்லை இசைக் கோலங்கள் மேற்கத்தைய சாயலில் இருகின்றது. எப்போ படம் வரும் உலக அழகியும் சூப்பர் ஸ்டாரும் எப்படி இந்தப் பாடல்களுக்கு ஆடி இருக்கின்றார்கள் என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கின்றது.

எந்திரன் இசை வெளியீட்டு விழாவில் விவேக்கின் சில கொமெண்டுகள் மேடை நாகரிகத்துக்கு பொருத்தமில்லாமல் இருந்தது. ரஜனியின் பேச்சு மட்டும் வழக்கம் போல் கலக்கல். தமிழ்நாட்டு முதல்வர் ஏன் இந்தப் படத்துக்கு வாழ்த்துத் தெரிவித்தார்? ஏன் இந்த ஆடியோ வெளியீட்டை தமிழ்நாட்டில் செய்யவில்லை போன்ற சில சந்தேகங்கள் எழுவதை தவிர்க்கமுடியவிலை.

ஷங்கரின் பிரமாண்டமும் ரகுமானின் இசையும் ஐஸ்வர்யா ராயின் அழகும் சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலும் படைத்தை எப்படியும் வெற்றி ஆக்கும், அதே நேரம் சன் குழுமத்தின் படம் என்பதால் ஓவர் விளம்பரம் ஆபத்தாகவும் அமையலாம்,

சின்னத் திரை :

விஜய் தொலைக்காட்சியின் ஜோடி நம்பர் ஒன் எதோ ஒரு சீசனில் ஈழத்து மைந்தர்கள் பிரேம் கோபாலும் பிரேமினியும் முதல் பரிசைப் பெற்றார்கள். பிரேம் கோபாலின் கடின உழைப்பு அவருக்கு உங்களில் யார் அடுத்த பிரபுதேவாவி பரசைக் கொடுக்காவிட்டாலும் ஜோடி நம்பர் ஒன்னில் விட்டதைப் பிடித்துவிட்டார்.உங்களில் யார் அடுத்த பிரபுதேவாவி ஈழத்தில் நடந்த குண்டுவெடிப்பை தத்ரூபமாக நிகழ்த்தி பலரின் பாராட்டைப் பெற்றவர் இம்முறையும் ஈழத்துய்ரத்தை மீண்டும் நிகழ்த்தினார். அதன் காணொளி கீழே:



இளவரசி டயனா :
நேற்று முந்தினம் இளவரசி டயானாவின் நினைவுதினம் கென்சிங்டன் கார்டனில் நினைவு கூரப்பட்டிருந்தது, அதே நேரம் சைனாவில் உள்ள ஷென்சன் விமான நிலையத்தில் டயனாவின் அரைகுறை ஆடைகளுடனான ஒரு விளம்பரம் உள்ளாடை ஒன்றுக்கு விளம்பரப்படுத்தியிருந்தது. அத்துடன் அந்த விளம்பரத்தில் "Feel the Romance of British Royality" என்ற வாசகமும் இருந்தது. டயானா போன்ற ஒரு பிரபலத்தை இறந்தபின்னரும் வியாபாரத்துக்குப் பயன்படுத்தும் சீன உள்ளாடை தயாரிப்பு நிறுவனமான "ஜெலசி இன்டர்னெசலின் மேல் இதுவரை எவரும் கண்டனம் தெரிவிக்கவில்லை.இது பற்றி அவரது கணவர் இளவரசர் சாள்ஸ்சும் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இறந்தபின்னரும் சர்ச்சைகளின் நாயகியாகிவிட்டார் இளவரசி டயானா.

எனக்குப் பிடித்த பாடல் :
கமல் இசைஞானி கூட்டணியில் அருண்மொழி சித்ராவின் குரலில் சூரசங்காரம் படத்தில் இடம் பெற்ற மெஹா ஹிட் பாடல். பாடல் ஹிட்டுக்கு நிரோஷாவின் கவர்ச்சியான அழகும் ஒரு காரணமாகும். கறுப்பானாலும் களையான அழகி நிரோஷாவுக்கு நல்ல படங்கள் கிடைத்தும் ஏனொ கோடாம்பக்கத்தில் நிலைத்து நிற்கமுடியவில்லை. அந்த நாள் இளைஞர்களின் கனவுக் கன்னி நிரோஷாவின் பாடல். இசைஞானியின் இசையும் கலைஞானியும் நடிப்பும் இந்தப் பாடலைத் திரும்ப திரும்ப கேட்க வைக்கும்,



சின்ன சந்தேகம் :
பெரும்பாலான நாத்திகவாதிகள் இந்துமதத்தை மட்டுமே ஏன் எதிர்க்கின்றார்கள்? இவர்கள் ஏன் இஸ்லாத்தையோ கிறிஸ்தவத்தையோ கிண்டல் செய்வதில்லை? ஓ அவற்றைக் கிண்டல் செய்தால் ஓட்டுக்கள் கிடைக்காது அல்லவா? அத்துடன் ஓட்டோ வீட்டுக்கு வரும் ஹிஹிஹிஹி.