Showing posts with label ஜெயசூர்யா. Show all posts
Showing posts with label ஜெயசூர்யா. Show all posts

சச்சினும் கங்குலியும்

நேற்றைய சென்னை சூப்பர் கிங்ஸுடன் நடந்த போட்டியில் மும்பை இந்தியன் அணி மிக இலகுவாக வென்றது அனைவரும் அறிந்ததே. இந்த மேட்சில் இலங்கை அதிரடி வீரர் ஜெயசூர்யா இந்த போட்டியில் தான் தன் அதிரடியைக் காட்டினார். அவர் 50 அடித்தபோது கூட இருந்த சச்சின் சும்மா ஒரு போமலிட்டிக்காக அவரது கைஉறையில் ஒரு தட்டு மட்டும் தட்டினார். மற்றவர்கள் போல் கட்டி அணைக்கவில்லை. பின்னர் சச்சின் அவுட்டானதும் ஜெய‌சூரியா சதமடித்து போட்டியை நிறைவு செய்தபின்னர் போலக் போன்ற வீரர்கள் ஜெயசூர்யாவை கட்டி அணைத்துப்பாராட்டினார்கள் ஆனால் சச்சின் ஜஸ்ட் ஒரு சிரிப்புடன் கைகொடுத்து மட்டும் விட்டுவிட்டார். என்ன காரணமோ?





இதற்கு முதல் நாள் கோல்கத்தாவில் நடந்த போட்டியில் கங்குலியின் கோல்கத்தா சேவாக்கின் டில்லை அணியை வென்றதும் அதற்க்கு காரணமான பாகிஸ்தானின் வேகம் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் அக்தரை கங்குலி ஷாருக்கான் உட்பட அனைவரும் கட்டி அணைத்தது ஒருவர் மேல் ஒருவர் தாவியும் தங்கள் அன்பையும் பாராட்டையும் செலுத்தினார்கள். இத்தனைக்கும் ஒரு பாகிஸ்தான் வீரர் இந்திய வீரரான சேவாக்கை டக் அவுட் செய்ய ஈடன் கார்டனில் ஏற்பட்ட மக்களின் சத்தம் ராவல்பிண்டிக்கே கேட்டிருக்கும்.

கங்குலிக்கு இருக்கும் பெரும்தன்மை ஏன் சச்சினுக்கு இல்லை?