Showing posts with label யாழ்தேவி. Show all posts
Showing posts with label யாழ்தேவி. Show all posts

கடலேறியும் யாழ்தேவியும்

வலைப்பதிவர் சந்திப்பு வேளையில் ஒரு நாள் ஆதிரை எனக்கு விரைவில் ஆப்படிக்க போவதாகச் சொன்னார். நானும் எதோ நான் பூனை பிடித்த அல்லது எலி படித்த கதை என கற்பனைக் கதை எழுதப்போகின்றார் என நினைத்து அதை மறந்தே போனேன். சென்ற வாரம் எனக்கு இவற்றிற்குப் பதில் எழுதித்தாருங்கள் என மின்னஞ்சலில் 10 கேள்விகள் அனுப்பியிருந்தார்.

கேள்விகேட்கத்தான் தெரியும் பதில் சொல்றது எவ்வளவு கஸ்டம் என கமல் நாகேஸிடம் பஞ்சதந்திரத்தில் சொல்லும் வசனம் மனதில் வந்துபோனது. அவ்வளவு கஸ்டமான கேள்விகள் கேட்டிருந்தார். சில பல ஆராய்ச்சிகள் செய்து பல பழைய பதிவுகளை(என்னுடையதும் ஏனைய நண்பர்கள் சிலருடையதும்) தேடிக் கண்டுபிடித்து ஒரு மாதிரி பதில்கள் எழுதி அனுப்பினேன்.

அதனை மிகவும் அழகாக வலையேற்றியிருக்கிறார். என்னுடைய மிகவும் அழகான படங்கள்(?) சில அனுப்பியும் ஏனோ ஆதிரை அவற்றைப் பிரசுரிக்கவில்லை. என்னுடன் மட்டும் நில்லாமல் ஏனைய பலரையும் பல்துறை சார்ந்து ஆதிரை பேட்டி எடுக்கவருகின்றார் ஆயத்தமாக இருக்கவும்.

ஆதிரை கேட்ட கேள்விகள் அனைத்தும் பயிற்சி பெற்ற ஊடகவியலாளர் போல் மிகவும் சிறப்பான கேள்விகள். சில ஊடகவியலாளர்களுக்கு எப்படிக் கேள்வி கேட்பது என்பதே தெரியாது.

ஆதிரையின் கேள்விகளுக்கும் அவரது அணுகுமுறைக்கும் வாழ்த்துகள். என்னுடைய பதில்களும் எந்தவிதமான மழுப்பல்களும் இன்றி மிகவும் நேர்மையாக முறையில் கூறியிருக்கின்றேன் என நினைக்கின்றேன். இதனைப் பற்றி நீங்கள் தான் கூறவேண்டும்.

என் பேட்டி இணைப்புகள்

பகுதி 1

பகுதி 2


யாழ்தேவி நட்சத்திர வாரம்.

சென்றவாரம் இலங்கையில் இருந்து இயங்கிக்கொண்டிருக்கும் யாழ்தேவி திரட்டியில் நட்சத்திரமாகும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதற்காக யாழ்தேவிக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் நன்றிகள்.

யாழ்தேவிக்கு சில ஆலோசனைகள்.

உங்கள் திரட்டியில் இணைக்க முகவரி தொலைபேசி போன்றவற்றைத் தருமாறு பதிவர்களைக் கேட்கின்றீர்கள், இது வேண்டாமே. காரணம் தொலைபேசி, முகவரி என்பனவற்றைக் கொடுக்க பலர் பின்னடிப்பார்கள். இதுவரை எந்த திரட்டியும் இப்படி தனிப்பட்ட விவரங்கள் கேட்பதில்லை. இதனை மறுபரிசீலனை செய்யவும்.

நட்சத்திரப் பதிவராக இருப்பவருக்குரிய அழைப்பை இரு வாரங்களுக்கு முன்னர் அவர்களுக்கு அறியத் தந்தால் அவர்கள் தங்களை அதற்கேற்றவாறு தயார்படுத்திக்கொள்ளமுடியும்.

உங்களின் திரட்டி பற்றிய விளம்பரம் போதாது. ஏனைய திரட்டிகள் செய்வதுபோல் புதிய பதிவுகளில் உங்கள் திரட்டியில் இணைக்க வேண்டுகோள் விடுக்கவும்.

நட்சத்திரப் பதிவராக இருந்த காலத்தில் யாழ்தேவியூடான வாசகர் வருகை என் பதிவுகளில் அதிகரித்திருந்தது.

மீண்டும் யாழ்தேவிக்கு என் இனிய நன்றிகள்.

மாகோவில் நின்ற யாழ்தேவியும் தமிழ் விசைப்பலகையும்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கை வலைப்பதிவர் ஒன்றுகூடலில் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்ட இரண்டு விடயங்களைப் பற்றி சில விளக்கங்கள் கொடுக்கவேண்டியது இந்த நிகழ்வை ஒழுங்குபடுத்தியவர்களின் நானும் ஒருவன் என்பதால் என்னுடைய கடப்பாடாக இந்தப் பதிவு.

கலந்துரையாடல் ஆரம்பித்ததுமே சர்வேஸ்வரன் முதலில் விசைப்பலகை பற்றிய தன் கருத்துக்களைச் சொல்லத்தொடங்கினார். அவருடன் திரு.சேது, கவிஞர் மேமன்கவி, திரு,எழில்வேந்தன், மு.மயூரன் போன்றவர்கள் தங்கள் கருத்துகளைச் சொல்லத்தொடங்கினார்கள். இதனை இணையத்தினூடாக பார்வையிட்டுக்கொண்ட வசந்தன், சயந்தன், கானாப்பிரபா போன்றவர்களும் தங்கள் கருத்துகளை இணைய அரட்டையில் கூறினார்கள் என அறிந்தேன்.

சில தொழில்நுட்ப சந்தேகங்கள், அனானிப் பின்னூட்டங்கள், வலையுலக விருதுகள் போன்றவற்றைப் கலந்தாலோசிக்க நினைத்த எமக்கு இந்த விசைப்பலகை விடயம் வலைப்பதிவர் சந்திப்பு அப்பால் பட்டதாகவே பட்டது. ஏனென்றால் பல சிக்கல்கள் நிறைந்த இந்த விடயத்தை பல புதியவர்கள் இருக்கும் ஒன்றுகூடலில் பேசியது பலரும் புருவத்தை உயர்த்தவும் நிகழ்வு முடிந்தபின்னர் எங்களிடம் இதனை ஒரு குறையாகவும் சொன்னார்கள்.

அதனால் தான் எங்களினால் இந்த விடயத்தை அரைமணி நேரம் கொடுத்தபின்னர் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிந்தது. இதனால் தான் மயூரேசனுக்கு இதனைப் பற்றி பேச சந்தர்ப்பம் கிடைக்கவில்லை(வசந்தனில் எதிர்ப்பாட்டு பதிவில் குறைபட்டிருந்தார்). அத்துடன் வசந்தன் இதனை வாக்கெடுப்பு நடத்தும் படி அரட்டையில் கூறியதாகவும் அறிந்தேன், பலருக்கு தமிழ் விசைப்பலகைகள் பற்றிய எண்ணக்கருவோ அல்லது விடயங்களோ தெரியாத போது எப்படி அதனை வாக்கெடுக்கமுடியும்.

கானாப்பிரபா கூறியதுபோல் விரும்பியவர்கள் விரும்பியதில் தட்டச்சு செய்துவிட்டுபோகட்டும் இதனைப் பற்றி அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் மட்டும் அதற்கான இடத்தில் விவாதித்திருந்தால் பயன் கிடைத்திருக்கும். இதுபற்றி வசந்தனின் எதிர்ப்பாட்டு.

இலங்கைப் பதிவர் சந்திப்பு - ஓர் எதிர்ப்பாட்டு

அடுத்து மருதமூரானின் திரட்டிகள் பற்றிய உரையில் அவர் யாழ்தேவிக்கு விளம்பரம் தேடினார் என்ற குற்றச்சாட்டும், யாழ்தேவி பற்றிய விவாதம் எந்த முடிவுக்கும் வராமல் போனதும். திரட்டிகள் பற்றிய உரைக்கு நான் தான் மருதமூரானை ஒழுங்குபடுத்தியது. அவர் ஆரம்பத்தில் திரட்டிகளின் பயன்கள் பற்றி கொஞ்சம் தெளிவாகச் சொன்னாலும் பின்னர் யாழ்தேவி என்ற திரட்டியைப் பற்றிப் பேசவந்தபின்னர் அதிலையே நின்றுவிட்டார்.

இவர் பேசிக்கொண்டிருக்கும்போதே சிலர் கேள்விகேட்க ஆரம்பித்தார்கள், அவர்களை கலந்துரையாடலில் கேள்விகளைக் கேட்கும்படி பணித்தோம். பின்னர் கலந்துரையாடல் தொடங்கியதும் பலரும் தங்கள் கேள்விகளை அடுக்கடுக்காக மருதமூரான் மேல் வீசினார்கள். அவரும் சளைக்காமல் தன் விளக்கத்தைச் சொன்னார்.

முதலில் மு.மயூரன் தனக்கு இந்தப்பெயர் பிடிக்கவில்லை என்றும் விஜயின் பட டைட்டில் போல் Filled with dreams என்ற வாசகமும் பிடிக்கவில்லை அத்துடன் ரயிலின் படம் எதற்க்கு எனக்கேட்டார்.

முதல் நாள் இரவே நான் மருதமூரானிடம் தொலைபேசியில் பேசியபோது யாழ்தேவி பெயர் பற்றிய சர்ச்சை கட்டாயம் வரும் என்பதைக் கூறினேன். நாம் நினைத்தபடியே யாழ்தேவி சூடுபிடிக்கத் தொடங்கியது. இதுபற்றி மருதமூரான் தன் பதிவில் யாழ்தேவி பற்றிய திறந்த வாக்கெடுப்பு நடத்தப்போவதாக அறிவித்துள்ளார்.

யாழ்தேவியின் முக்கிய குறைபாடாக பதிவர்களின் தொலைபேசி இலக்கம் தொடக்கம் பல தனிப்பட்ட விடயங்கள் கேட்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அத்துடன் இந்த விவாதத்திற்க்கான எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, இதனை இன்னொரு பதிவர் தன் வலையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்தேவியின் பெயரை மாற்றுவதோ அல்லது அப்ப‌டியே வைத்துக்கொள்வதோ அதன் உரிமையாளர்களின் விருப்பம், விரும்பினால் அவர்கள் உத்தரா தேவி உடரட்ட மெனிக்கே என பெயரிட்டாலும் யாரும் ஒன்றும் சொல்லமாட்டார்கள்.

எது எப்படியாயினும் யாழ்தேவி மாகோ சந்தியில் இடைநடுவில் நிற்கின்றது. அதனை காங்கேசன்துறை வரை கொண்டு செல்வது எம் கையில் தான் இருக்கிறது. இன்னொரு திரட்டியான பூச்சரத்தின் உரிமையாளரும் வருகின்றேன் என உறுதியளித்திருந்தார் ஆனால் ஏனோ வரவில்லை, வந்திருந்தால் அவரது திரட்டி பற்றிய விபரங்களையும் கருத்துகளையும் அறிந்திருக்கலாம்.

சிலர் யாழ்தேவி தான் இந்த நிகழ்வை ஒழுங்கு செய்திருகிறதாக எண்ணியிருக்கிறார்கள், யாழ்தேவிக்கும் ஒன்றுகூடலுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இந்தப் பதிவு சம்பந்தப்பட்ட சில பதிவுகள்:

இணையம் இலங்கைத் தரையில் இறங்கி மகிழ்ந்த இனிய பொழுது.

அன்புள்ள காதலுக்கு, இல்லைங்க இலங்கைப் பதிவர்களுக்க...

என்ன சந்திப்பு