இந்தியாவின் வீழ்ச்சியும் மேற்கிந்தியாவின் எழுச்சியும்.

இன்று நடைபெற்று முடிந்த இந்தியா எதிர் அவுஸ்திரேலியா மெல்பேர்ன் முதலாவது டெஸ்டில் இந்தியா மிக இலகுவாக தோற்றுவிட்டது. இந்தத் தோல்விக்கு முக்கியகாரணம் இந்தியாவின் முன்னணி சாதனை வீரர்கள் என்றால் மிகையாகாது.

343 என்ற சொற்ப ஓட்டங்களில்(அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் ஒப்பிடும்பொழுது முதலாவது இனிங்க்ஸ்சுக்கு இது குறைந்த ஓட்டம்) ஆஸியை வீழ்த்திய கும்ளேயின் அணி, ஜாபர், ராவிட், லக்ஸ்மன், டோணி, யுவராஜ் போன்றவர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால் வெறும் 196 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அனுபவ சச்சினும், 100 போட்டியில் விளையாடும் கங்குலியும் மட்டும் 105(இருவரும் சச்சின் 62, கங்குலி 43) எடுத்தார்கள்.

147 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த ஆஸி மீண்டும் தமது ஒற்றுமையான டீம் வேர்க்கினால் 351 ஓட்டங்களுக்கு ஆட்டத்தை இடை நிறுத்தி இந்தியாவிற்க்கு 499 என்ற இலக்கையும் இரண்டு நாட்களையும் கொடுத்தது.

இந்தியப் பெருஞ்சுவர் ராவிட், சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானை இரட்டைச் சதத்தால் அசத்திய ஜாபர், சாதனை நாயகன் சச்சின், ஆக்ரோச வீரர் கங்குலி, பாகிஸ்தானை ஆட்டக்காணவைத்த யுவராஜ், அதிரடி டோணி, பொறுமையான லக்ஸ்மன் என இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை இரு நாட்களில் இந்த ஓட்டத்தை எடுத்து ஆஸி மண்ணில் ஒரு வெற்றியை நிலை நாட்டுவார்கள் என நினைத்தால் அனைத்திலும் ம‌ண்ணைப்போட்டுவிட்டார்கள்.

கங்குலியையும் லக்ஸ்மனையும் தவிர ஏனையவர்கள் அணியில் எப்படி ஆடினாலும் இடம் கிடைக்கும் என்ற மனப்பான்மையில் வந்தார்கள், திரும்பச் சென்றார்கள், இரண்டு இனிங்க்ஸிலும் ராவிட் பார்வையாளர்களை பயங்கரமாகச் சோதித்துவிட்டார். முதலாவது இனிங்ஸ்சில் 62 ஆவது பந்தில் தான் ராவிட் ஓட்ட எண்ணிக்கையை ஆரம்பித்தார் ஆனால் பரிதாபம் 66வது பந்தில் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துவிட்டார். இரண்டாவது இனிங்ஸிலும் அதே ஆமை வேகம் 114 பந்தில் 16 ஓட்டங்கள். சில காலமாக இந்தியப் பெருஞ்சுவர் ஆட்டம் கண்டுவிட்டது.

ராவிட் போனால் என்ன சச்சின் இருக்கிறார் என்றால் சச்சினுக்கு என்ன அவசர வேலையோ 15 ஓட்டம் போதும் என்பதுபோல் அவுட்டாகிவிட்டார். கொஞ்ச நேரம் கங்குலியும் லக்ஸ்மணும் 41 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக எடுத்து நெஞ்சில் பால் வார்த்தார்கள். இந்த இனிங்கிசில் இதுதான் கூடுதல் இணைப்பாட்டம்.

இந்தியத் தேர்வாளர்கள் செய்த தவறுகளில் ஒன்று ஆஸி மண்ணில் அனுபவம் குறைந்த யுவராஜை தேர்ந்தெடுத்தது, இவருக்கு பதிலாக சேவாக்கை எடுத்திருந்தால் சில வேளைகளில் சேவாக் சிறப்பாக ஆடியிருப்பார். இன்னொரு தவறு இர்பான் பதானைத் தெரிவுசெய்யாதது.

தோல்வியும் வெற்றியும் சகஜம் தான் ஆனால் ஆஸியின் 15ஆவது தொடர் வெற்றியை இந்திய அணியால் நிறுத்த முடியாமல் போய்விட்டது. இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி வெறும் என வழமைபோல் நினைப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாது.இந்திய அணிக்குத் தேவை கபில்தேவ் மாதிரியான ஒரு போராட்ட குணமுள்ள வீரர்.

அடுத்த இன்றைய ஆட்டம் டெஸ்ட் தரவரிசையில் 2ஆவதாக இருக்கும் தென்ஆபிரிக்காவுக்கும் வேஸ்ட்(Waste) இன்டீஸ் என செல்லமாக அழைக்கப்படும் மேற்கிந்திய தீவுகளுக்கும் இடையிலான ஆட்டம்.

2000ஆவது ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக எக்பஸ்டனின் பெற்ற வெற்றியின் பின்னர் 7 வருடங்களுக்கு பிறகு அன்னிய மண்ணில்( வங்கதேசம், சிம்பாவேயுடன் பெற்ற வெற்றிகள் நீங்கலாக) பெற்றதும் அதே நேரம் தென்ஆபிரிக்கா மண்ணில் முதல் தடவை பெற்றதுமான வெற்றியானது ஒரு சாதனைதான்.

அணித்தலைவர் கிரிஸ் கேயில் , சந்தர்போல் தவிர எனையவர்கள் பலர் அனுபவமற்ற வீரர்கள், இவர்கள் அனைவரது மொத்த ஓட்டங்களையும் கணக்கிட்டாலும் சச்சின் டெண்டுல்கரின் தனி நபர் மொத்த ஓட்டத்துக்கு சமமாகாது. ஆனாலும் இளம் கன்று பயமறியாது என்பது போல் பலம் வாய்ந்த தென் ஆபிரிக்காவை சொந்த மண்ணில் வீழ்த்தியது வெஸ்ட் இன்டீஸின் எழுச்சி எனக் கொள்ளலாம்.

இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வெஸ்ட் இன்டீஸ் வீரர் பிராவோவுக்கு இதுதான் முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரு டெஸ்ட் வெற்றியை வைத்துக்கொண்டு வெஸ்ட் இன்டீஸ் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டதெனக் கொள்ளமுடியாது.

இந்திய அணியை பொறுத்தவரை இந்த வருட முடிவு கசப்பாகிவிட்டது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு உற்சாகமான வருடம். அதே நேரம் இரு அணிகளுக்கும் அடுத்த வருடம் எப்படியிருக்கும் என சில நாட்களில் தெரிந்துவிடும். அடுத்த டெஸ்டில் ஆஸியின் 15 டெஸ்ட் தொடர் வெற்றிகளை இந்திய அணியால் நிறுத்த முடியுமா? காலம் பதில் சொல்லும்.

மறுமொழி கருத்துக் கூறியவர்கள்:

வெத்து வேட்டு சொல்வது:

in cricket india always next to Bangaladesh( bangala is above india)
india's winnings are always miracles...
indian batsmen are bunch of pussies