Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

இந்தியன் பாகம் - 2

நான் அவனில்லை, பில்லா இப்போது சிங்கம் என சில படங்களின் பாகம் 2 வெளியான நிலையில் பாகம் 2க்கு முதல் பாகத்தில் அடிபோட்ட இந்தியன் பாகம் 2 இயக்குனர் ஷங்கரினால் மீண்டும் எடுக்கப்பட்டால் எப்படி இருக்கும் என ஒரு சின்ன கற்பனை.

முதல்பாகத்தில் இந்தியன் தாத்தா மகன் சந்ரு கமலை ஏர்போர்ட்டில் கொலை செய்துவிட்டு ஏதோ ஒரு நாட்டிலிருந்து போலிசாரைத் தொடர்புகொண்டு மீண்டும் வருவேன் என எச்சரிக்கின்றார். இந்த இடத்திலிருந்து பாகம் இரண்டு தொடங்கவேண்டும்.

காட்சி 1
டெல்லியில் மிகவும் பாதுகாப்பான ஒரு இடம் அந்த தேசிய கட்சியின் தலைவர் மர்மான முறையில் இறந்துகிடக்கின்றார். அருகே ஊழல்பெருச்சாளிகளை களைவதே என் தொழில் ஐயாம் பேக் இப்படிக்கு இந்தியன் என்ற சிறு அட்டையும் இருக்கிறது.

காட்சி 2
டெல்லிக் கொலைதொடர்பாக சென்னையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான மீட்டிங், இந்தியன் தாத்தாவை மீண்டும் கைது செய்யவும் அவரின் அடுத்த இலக்கு தமிழகத்தில் ஊழல் செய்யும் செய்த அரசியல்வாதிகள் என உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்ததாகவும் கமிஷனர் விஜயகுமார்(நம்ம மஞ்சுளா மாமியின் கணவர் தான் ) ஏனைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் கொடுத்துக்கொண்டிருந்தார். இந்தியன் தாத்தாவை கைது செய்து விசாரணை நடத்த டிஎஸ்பி துரைசிங்கத்தை அப்போயிண்ட்மெண்ட் செய்யலாம் என முடிவு செய்ததாகவும் ஆனால் அவர் அமெரிக்காவில் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டுள்ள கடத்தல்காரனை(கமல் படம் என்பதால் கடத்தல்காரனை இஸ்லாமியப் பெயராக சொன்னால் கல்லாகட்டும்)பிடிக்க போயிருப்பதால் அவருக்குப் பதிலாக அசிஸ்டெண்ட் கமிஷனர் ராகவனை நியமித்திருப்பதாகவும் அறிவிக்கும் போது இன்னொரு இளமையான கமல் அறிமுகம்.அந்தக்கமல் யார் என்றால் இந்தியன் தாத்தாவின் தம்பி மகன்.(இங்கே வைக்கின்றோம் ட்விஸ்ட்).

காட்சி 3
ஏசி கமலுக்கும் அவர் கூடவே அவருக்கு அசிஸ்டெண்டாக இருக்கும் சமந்தாவுக்கும் லவ் பத்திக்கொள்கின்றது. செவ்வாய்க்கிரகம் போல பிரமாண்ட செட்டுப் போட்டு ஒரு பாடலுக்கு இருவரும் நடனமாடுகின்றார்கள். பாடல் முடிந்தபின்னர் தமிழகத்தில் ஒரு அரசியல்வாதியும் குஜராத்தில் ஒரு அரசியல்வாதியும் ஒரே நாளில் இந்தியன் தாத்தாவினால் கொல்லப்படுகின்றார்கள். இந்த இருகொலைகளும் எப்படி நடந்தது என போலீசார் தலையைப் பிய்த்துக்கொள்கின்றார்கள்.

காட்சி 4
இந்ததலைமுறையினர் தான் கொல்லும் காரணத்தை மறந்துபோயிருப்பதால் விஜய் டிவி நீயா?நானா?வுக்கு இந்தியன் தாத்தா காரணத்தை விளக்கி ஒரு விடியோ அனுப்புகின்றார். இந்தியன் தாத்தா நல்லவரா என ட்விட்டர்ஸ், பேஸ்புக்கர்ஸ், புளொக்கர்ஸ்சை வைத்து கோபிநாத் ஒரு நீயா?நானா? நடத்துகின்றார்.

காட்சி 5
அடுத்தகொலை மும்பையில் நடக்கின்றது. மும்பைப் போலீசாரிடம் கொலையாளி சம்பந்தப்பட்ட முக்கிய ஆதாரம் ஒன்று சிக்கின்றது. உடனே மும்பைப் போலீசார் தமிழக காவல்துறையை தொடர்புகொண்டு உடனடியாக ஏசி ராகவனைக் கைது செய்ய ஆணை இடுகின்றது,(இடைவேளை).

காட்சி 6
இந்தியன் தாத்தாவாக வேஷம் போட்டு, இத்தனை கொலைகளையும் செய்தது தான் என ஏசி ராகவன் ஒத்துக்கொள்கின்றார். அடுத்த கொலையாக அரசியலில் மிகப்பெரும் பிரபலம் ஒருவரை ஆகஸ்ட் 15 அன்று கொல்வேன் என்றும் அன்றைக்குத் தான் நேதாஜியும் காந்தியும் வாங்கித் தந்த சுதந்திரத்துக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும் என்றும் ராகவன் கோர்ட்டில் சபதமிடுகின்றார்.

ராகவனின் சபதம் நடந்ததா? உண்மையான இந்தியன் தாத்தா எங்கே? யார் அந்த அரசியல் பிரபலம்? இந்தக் கேள்விகளுக்கான விடைகள் வெள்ளித் திரையில் மிகப் பிரமாண்டமாக.

இந்தியன் தாத்தாவாக இம்முறை மேக்கப் போட கமல் அவ்வளவு மினைக்கெடவேண்டாம். ஏசியாக வேட்டையாடு விளையாடு கெட்டப்பை கொஞ்சம் மாத்தினால் போதுமானது. 

இடையில் ஒரு பாடலுக்கு மனிஷா கொய்ராலாவும் ஊர்மிளாவும் குத்தாட்டம் போடவேண்டும். (சந்ரு கமலின் நினைவுகளை ஏசிக் கமலிடம் சொல்லும் போது இந்தப்பாடலை செருகலாம்).

கவுண்டரின் பாத்திரத்துக்கு சந்தானத்தை அணுகலாம். 

சமந்தாவுடன் ஒரு முத்தக்காட்சி வைத்தால் இளசுகளின் மனம் வெந்துவிடும் என்பதால், மனிஷா கொய்ராலாவுடனோ அல்லது ஊர்மிளாவுடனோ முத்தக்காட்சி வைக்கலாம், முதல் தலைமுறை இளசுகளின் மனம் கொஞ்சம் வெம்பும்.

இந்தியன் தாத்தாவு ட்விட்டர் எக்கவுண்ட் தொடங்கி அதில் அடுத்து யாரைக் கொல்லவேண்டும் என தன் ஃபோலவர்ஸிடம் ஆலோசனை கேட்கலாம். (அந்நியன் ஞாபகம் வந்தால் சங்கம் பொறுப்பில்லை).

உங்கள் கற்பனை வளத்தையும் தட்டிவிடுங்கள்.

பின்குறிப்பு : விரைவில் வலைப்பதிவர்களுக்கிடையே ஒரு கிரிக்கெட் போட்டி நடாத்தப்போவதாக ஒரு செய்தி இந்த வருடம் நானும் ஒரு பதிவு போட்டு என் சீட்டைப் பிடித்துவிட்டேன். ஏலத்தில் என்னை எடுப்பவர்கள் இப்பவே துண்டைப் போடவும்.

சித்தியிடம் சிக்கிய சித்தப்பூ

சித்தப்பூ என நண்பர்களால் செல்லமாக அழைக்கப்படுகின்ற ஹரிகரன் ஒரு கணணிப் பொறியியளாளர் அதுதாங்க சாப்ட்வேர் எஞ்ஜினியர் ஆவார். பேராதனை பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பை முடிச்சு இப்போ கொழும்பிலை ஒரு மல்டி நசனல் கம்பனியிலை வேலைபார்க்கின்றார். ரொம்ப மென்மையான நல்ல மனிதர் இவர். நல்ல பக்திமானும் கூட எப்படியான பக்திமான் என்றால் தான் எழுதுகின்ற ஜாவா கோடிங்கில் கூட தொடக்கத்தை பிள்ளையார் சுழியோடை எழுதுகின்ற அளவுக்கு பக்திமான்.

தன்னை சன்மைக்ரோ சிஸ்டம் காரன் ஒருநாள் இல்லாவிட்டால் ஒருநாள் கூப்பிட்டு பாராட்டாவிட்டால் நான் ஜாவாக்காரன் இல்லை என அடிக்கடி நண்பர்களிடம் சொல்லிக்குமளவுக்கு சித்தப்பூ ஜாவாவில் புலி இல்லை இல்லை சிங்கம். அப்லெட், சேர்வ்லெட், பைப்பிங் என ஜாவாவில் சித்தப்பூக்கு எல்லாம் அத்துப்படி சுருக்கமாச் சொன்னால் சித்தப்பூ ஈட் ஜாவா ட்ரிங் ஜாவா சிலீப் ஜாவா என வாழ்கின்றவர்.

அலுவலகத்தில் ஜாவாவுடன் வாழ்க்கை என்றால் ஏனைய நேரங்களில் பிள்ளையாருடன் பக்திமயமான காதல். வெள்ளிக்கிழமை பின்னேரங்களில் சித்தப்பூவை நீங்கள் பம்பலப்பிட்டி மாணிக்கப்பிள்ளையார் அப்படியே புதிய கதிரேசன் ஒரு சில மீட்டர் நடந்து சம்மாங்கோட்டுப் பிள்ளையார் என ஒரே தரிசனம் தான், ஆனாலும் சித்தப்பூவுக்கு வெளிநாட்டு ஆசையும் இருப்பதால் விசாப் பிள்ளையார் தான் அவரின் பேவரிட்.

வெள்ளிகளில் பிள்ளையார் கோயில் என்றால் செவ்வாய்கிழமைகளில் மயூரா அம்மனும் ஞாயிறுகளில் தெகிவளை விஷ்ணுவும் சித்தப்பூவின் வழிபடு தலங்கள். இடைக்கிடை லீவு கிடைத்தால் கொச்சிக்கடை சிவன், கொட்டாஞ்சேனை அம்மன் பிள்ளையார், முகத்துவாரம் விஷ்ணு என ஒரு ட்ரிப் அடிப்பார்.

பொறுங்கோ வாறன் இவ்வளவும் வாசிச்சவுடனை உங்களுக்கு சித்தப்பூவைப் பற்றி ஒரு விம்பம் வந்திருக்கும் எல்லோ ஆனால் அதை எல்லாம் உடைப்பது போல சித்தப்பூவிடம் இன்னொரு கெட்ட பழக்கமும் இருக்கு. ஹிஹிஹி வேறு ஒன்றுமில்லை சித்தப்பூ டெய்லி பியர் அடிப்பார். அதுவும் சின்னப்போத்தல்(படி) தான். நண்பர்கள் கேட்டால் சொல்லும் காரணம் அற்ககோலும் கொஞ்சம் உடம்பிலை இருக்கவேண்டும் என்பதுதான் ஆனால் அதைவிட ஜாவாவுடன் மல்லுக்கட்டிய களையைப் போக்கத்தான் பியர் அடிக்கின்றவர் என்ற உண்மை சித்தப்பூவுக்கு மட்டுமே தெரியும்.

சித்தப்பூ முதன்முறை பியர் அடிச்ச கதை நல்ல பம்பல். பேராதனையில் படிக்கின்ற காலத்திலை பொடியள் எல்லாம் கண்டிக்குப் போய் செட் ஆகினார்கள். நம்ம சித்தப்பூக்கும் பம்பல் பிடிக்கும் கோயில் குளம் என அலைந்தாலும் ஆள் முசுப்பாத்தியான ஆள். சிலர் விஷ்கி பிராண்டி என பெரிசிலை இறங்க நம்ம சித்தப்பூ பாத்தார், உதை எல்லாம் குடிச்சு சத்தியராஜ்(வாந்தி எடுப்பவர்களை செல்லமாக அழைக்கும் பெயர்) ஆகிறதை விட பியரிலை இறங்குவோம் என வலு கலாதியாக எனக்கொரு லயன் லாகர் என ஓடர்போட்டார்.

சித்தப்பூவின் நண்பன் ஜது "மச்சான் நீ இன்றைக்குத் தான் அடிக்கபோறீயோ? "
"அடச்சீ போடா உதெல்லாம் எனக்கு எப்பவோ பழக்கம் " என தன்னை விட்டுக்கொடுக்காமல் சித்தப்பூ ஒரு விடுவை விட்டுவிட்டார்.

சிங்கத்தை கொண்டுவந்து சித்தப்பூவின்ரை முன்னாள் வைச்சவுடன் ஆள் உடனே ஒரு கிளாசிலை அரைவாசிக்கு பியரை நிரப்பிவிட்டு மிச்ச அரைவாசிக்கு கோக்கை கலந்துவிட்டார்.


கூட்டாளிப் பொடியள் எல்லாம் கெக்கே பிக்கே எனச் சிரிக்க சித்தப்பூ "ஏன் நீங்களும் கோக் கலந்துதானே குடிக்கிறியள்? "
இதற்க்கு மேலை சித்தப்பூவின் தண்ணி அடிக்கும் பழக்கம் பற்றி விளக்கம் தேவையோ.

கொஞ்ச நாளைக்கு முன்னர் சித்தப்பூவிற்க்கு ஆப்பு அவரின் தாய் ரூபத்திலை வந்தது. சித்தப்பூவிற்கு ஒரு கலியாணத்தைக் கட்டிப்பார்க்க தாய் ஆசைப்பட்டார். கம்பசிலை படிச்ச பொடியன் அதாலை ஏதும் லவ்வு கிவ்வு இருக்கும் என்ற டவுட்டிலை
"தம்பி உனக்கு எதாவது காதல் கீதல் இருந்தால் சொல்லப்பூ இல்லையெண்டால் எங்கடை புரோக்கர் நல்ல சம்பந்தம் இருக்கிறதாகச் சொல்லுறார் அதைப்பார்ப்பம்?" என்று கேட்க சித்தப்பூவோ

"என்ன விசர்க் கதை கதைக்கின்றாய் என்ரை கூட்டாளிகள் எல்லாம் நீலம் பச்சை சிவப்பு என கலர்க் கலராக பெட்டையளுக்குப் பின்னாலை சுத்தின நேரம் நான் படிச்சுக்கொண்டுதானே இருந்தேன், நீ பார்க்கிறதைப் பார் எனக்குப் பிரச்சனை இல்லை" என நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு சொன்னார்.

சித்தப்பூவின் தாயும் ஒரு மாதிரி வங்கி ஒன்றில் வேலை செய்யும் பெண் ஒருத்தியைச் சித்தப்பூவிற்க்கு பார்த்துவிட்டார். சித்தப்பூவிற்க்கும் அவரைப் பிடிச்சுவிட்டது. என்ன பிரச்சனை என்றால் அந்தப் பிள்ளைக்கு வேலை பருத்தித்துறையில் , ஆனாலும் இப்போ அடிக்கடி சொகுசு பஸ் எல்லாம் ஓடுவதால் சித்தப்பூ வெள்ளிக்கிழமை இரவே வேலை முடிய யாழ்ப்பாண பஸ்சில் ஏறிவிடுவார். சிலவேளை கொழும்புக்கு ஏதும் அலுவலாக வந்த அந்தப் பிள்ளையும் சித்தப்பூவோடை தான் யாழுக்கு போறது.

ஒரு சுபயோக சுபதினத்திலை சித்தப்பூவும் அந்தப் பிள்ளைக்கு தாலி கட்டி தனக்கு மனைவியாக்கிவிட்டார். திருமணத்தின் பின்னர் சித்தப்பூ பியர் அடிப்பதை குறைச்சுக்கொண்டாலும் நிறுத்தவில்லை, இப்போ கோக் போத்தலுக்குள் பியரைவிட்டு கோக் குடிக்கின்றவர். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கோக் குடிப்பதுபோலத் தெரியும்.

ஒருநாள் சித்தப்பூ பிரிட்ஜைத் திறந்து கோக் போத்தலுக்குள் இருக்கும் பியரை அடிக்கத் தொடங்க வெளீயே போயிருந்த அவரின் மனைவி வந்துவிட்டார், "உதென்னப்பா கையிலை கோக்கோ ஒருவாய் தாங்கோ களைக்குது" இப்படிச் சித்தி கேட்க சித்தப்பூவிற்கு அஞ்சும் கெட்டும் அறிவும் கெட்டுவிட்டது.

"இ இ இ இல்லை இதை நீ குடிக்ககூடாது" என சித்தப்பூவின் வாய் தடுமாறியது.
"தாருங்கோ" என்ரபடியே அவரின் கையில் இருந்த கோக் போத்தலைப் பறித்த அவரின் மனைவி குடிப்பதற்க்கு வாய்க்கு கிட்டே கொண்டு போனபின்னர் தான் வேறை ஏதோ மணம் அடிப்பதால் இதென்னப்பா இது பியர் மணம் அடிக்குது. நீங்கள் இன்னும் பியரிலை கோக் கலந்து அடிப்பதை நிப்பாட்டவில்லையோ எனக் கேட்டதுதான் சித்தப்பூ மயங்கிக்குப்போய் நிலத்திலை விழுந்துவிட்டார். சித்தப்பூவின் மனைவியின் உறவினன் ஜது சித்தப்பூ பற்றிய கதைகளை அவரின் மனைவிக்கு போட்டுக்கொடுத்த விடயம் சித்தப்பூவிற்க்கு இன்னமும் தெரியாது அதோடை இப்போ சித்தப்பூ பியரே குடிப்பதில்லை.

கொஞ்சம் கற்பனை நிறைய உண்மை.

பின்குறிப்பு : கதைபோல எழுதாமல் இன்னொருவர் சொல்வது போல எழுதியிருக்கின்றேன். பிடிச்சிருந்தால் சொல்லுங்கள். சித்தப்பூ போல இன்னமும் சுவாரசியாமான நபர்கள் இருக்கின்றார்கள்.

ஐசிசியில் ஐஸ்வர்யா ராய்


பார்படோசின் அழகிய கடற்கரையில் தலைக்கு முக்காடு இட்டபடி சிலர் இருந்து ஆலோசிக்கின்றார்கள். கிட்டத்தில் போய்ப் பார்த்தால் நம்ம சூப்பர்சிங்கம் டோணி தலைமையில் இந்திய அணியினர் தங்கள் தோல்விக்காண காரணங்கள் பற்றி கலந்தாலோசிக்கின்றாகள்.

தினேஷ் கார்த்திக்: (முரளி விஜயைப் பார்த்து) எல்லாம் இவனால் தான் வந்தது டீமின் முதற்பெயரே விஜய் என்றிருந்தால் எப்படி வெற்றி கிடைக்கும், இவனுக்குப் பதிலாக சேவாக் இருந்தாலும் ஏதோ இரண்டு வாணவேடிக்கை காட்டியிருப்பார்.

டோணி : டேய் டேய் நமக்குள்ளை சண்டைவேண்டாம், முரளி ஐபிஎல்லில் நல்லாத் தானே அடித்தவர் ஏதோ அவரின்டை கஸ்டகாலம் சமியும்,ரோச்சும் நான்ஸும் இப்படி பந்துபோட்டால் எப்படி அடிப்பான்.

ஹர்பஜன் : முதலில் எல்லாவற்றையும் மாற்றவேண்டும். ஐசிசிக்கும் மோடியையே தலைவராக்கவேண்டும்.

விஜய் : அடேய் மோடியையே தூக்கிவிட்டார்கள்,

யுவராஜ் : பிடிக்கல்லை எனக்கு பிடிக்கல்லை

கம்பீர் : ஆமாம் சில நாட்களாக உனக்கு பேட் பிடிக்கவே தெரியவில்லை,

யுவராஜ் : சியர்ஸ் லீடராக ஆடுபவர்களைப் பிடிக்கல்லை. எல்லாம் சப்பை பிகர்கள்.

சவ்லா : ம்ம் நல்ல பிகர்கள் ஆடினாலும் நீ ஆடிவிடுவாய், உன் ஆட்டத்தைதான் ஐபிஎல்லில் பார்த்தேனே.

டோணீ : ஹேய் ஹைய்ஸ் எங்கடை அணிக்கு இனி ப்ரீத்தியோ அல்லது ஷில்பாவோ தான் ஓனர் என மாற்றினால் கோப்பை எமக்குத் தான்.

ஜடேஜா: அண்ணே எப்படி அண்ணே உங்களால் மட்டும் இப்படி யோசிக்கமுடிகின்றது. சூப்பர் ஐடியா.

ரோகித்: அடே அகர்கார் ராசிக்காரா, இது ஒன்றும் ஐபிஎல்ல் அல்ல நம்ம நாட்டு டீம். இதற்க்கு ஓனர் மன்மோகன் சிங் தான்.

ஷாகீர் : முதலில் இவன் ஜடேஜாவை நிப்பாட்டினால் எல்லாம் சரிவரும் பேட்டிங்கும் சொதப்பல் போலிங்கும் சொதப்பல்.

ரெய்னா : பிராண்ட் அம்பாசிடர் போல் எங்கள் டீம் அம்பாசிடராக ஐஸ்வர்யா ராயையோ இல்லை லஸ்மிராயையோ சேர்த்தால் எல்லாம் சரிவரும்.

லஸ்மிராய் என்ற பெயரைக் கேட்டு ஜேர்க்கான டோணி ரெய்னாவை முறைக்கின்றார்.

ரெய்னா : சாரி பாஸ் ஒரு ப்ளொவிலை சொல்லிட்டான்.

ஹர்பஜன் : அட ஒருதரும் கிடைக்கவில்லை என்றால் நம்ம நீதா அம்பானியை அம்பாசிடராக்கினாலும் சூப்பர்.

யுவராஜ் : பஜ்ஜி ஏன் இந்தக் கொலைவெறி.

விஜய் : த்ரிஷாவை நம்ம அம்பாசிடராக்கினால் எப்படியிருக்கும்?

தினேஷ் : அடப்பாவி மக்கா அவங்க பார்த்த சென்னை மேட்ச் எல்லாம் நாம் தோத்ததை மறந்துவிட்டியா?

விஜய் : அப்போ நமீதாவைப் சேர்த்தால் நல்லாயிருக்கும் ஒரு அவசரத்துக்கு சைட் ஸ்கிறினாகவும் பாவிக்கலாம்.

யூசுப் : அடப்போடா நமீதா மச்சான் மச்சான் என்பார் அந்தக் கனவிலையே பந்தைக் கோட்டைவிட்டுவிடவேண்டியதுதான்.

டோணி : ஷாகீர் நீ என்ன சொல்கின்றாய் உன்ரை ட்விட்டர் பிரண்ட்ஸ் என்ன சொல்கின்றார்கள்.?

யுவராஜ் : இவன் எங்கே கிரிக்கெட் பற்றி ட்விட்டுகின்றான் நீச்சலடித்த கதை, படம் பார்த்த கதைதான் ட்விட்டுகின்றான்.

ஷாகீர் : ஆமாம் அங்கே மட்டும் என்ன வாழ்கிதாம் தம்பி நீயும், டிஸ்கோதே போன கதையும் பிகர் கதையும் தானே எழுதுகின்றாய்.

தம்பி என்றா வார்த்தையைக் கேட்டு காண்டான யுவி மீட்டிங்கை விட்டு எழும்பிப்போக ஹர்பயன் அவரைத் தடுக்கின்றார்.

டோணி : சும்மா விசர்க் கதையை விட்டுவிட்டு தோல்விக்கான காரணம் என்ன என ஆரோயுங்கோ. இல்லையென்றால் அவன் அவனே நெட்டில் தாளித்து தள்ளிவிடுவார்கள்.

கார்த்தீக் : ஓம் சுகுமார் வலைமனையிலும் பவன் எரியாத சுவடியிலும் போட்டுத் தாக்கிப்போடுவார்கள்,

நெஹ்ரா : முதலில் இவன் ஜடேஜாவைத் தூக்கிவிட்டு என் நண்பன் அகர்காரை டீமில் சேர்த்தால் கோப்பை நமக்குத் தான்.

யூசுப் : அண்ணாச்சி கங்குலி இதைக் கேட்டால் பிளைட் பிடித்து வந்து உங்களை உதைப்பார்.

ஹர்பஜன் : நல்ல ஐடியா நம்ம குறூப்புக்கு ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், கனடா போன்ற அணிகளைச் சேர்த்தால் வெற்றி எமக்குத் தான்.

டோணி : சரி சரி எப்படியோ பாகிஸ்தானும் இம்முறை அரையிறுதிக்கு போகல்லை அந்த சந்தோஷத்தில் நம்ம வீடுகள் தப்பிவிட்டன.

ஷாகீர் : முதல்முறை நாம் அடுத்த முறை பாக்கி இந்த முறை ஸ்ரீலங்கா கோப்பையை எடுக்குமென எதிர்பார்த்தால் அவங்களும் தோத்துப்போனார்கள்.

ரெய்னா : அடுத்த மேட்ச் எமக்கும் அவங்களுக்கும் தான். கவனம் எல்லாவற்றையும் சேர்த்து எமக்குத் தந்துவிடுவார்கள்.

ஹர்பஜன் : ச்சீச்சீ சனத் இருக்கும் வரை பயப்படத் தேவையில்லை.

நெஹ்ரா : பஜ்ஜி அவர் இப்போ எம்பி கவனமாக கதை.

டோணி : சரி சரி விட்டால் நீங்கள் இன்னும் கதைப்பியள் நாளைக்கு ஸ்ரீலங்காவை எப்படி சாமளிப்பது என விட்டத்தைப் பார்த்தபடி யோசிப்போம்.

கடற்கரை மண்ணைத் தட்டியபடி எழும்பிய இந்திய அணியினர் அடுத்த பக்கத்தில் பாகிஸ்தானும் ஸ்ரீ லங்காவும் இதே போல் ஆராய்வதைப் பார்த்து எடுத்தார்கள் ஓட்டம்.

நாயாட நரியாட V 1.1

தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக ஒரு வித்தியாசமான நடன நிகழ்ச்சி நாயாட நரியாட. இந்த நிகழ்ச்சி ஒரு தொலைக் காட்சியில் விரைவில் ஆரம்பமாக இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக ( நடனம் ஆடுபவர் அல்ல நடுநிலையான நடுவர்) கலந்துகொள்ள புதியவர்கள் அந்த தொலைகாட்சிக்கே தேவைப்படுகின்றது. அந்த நிகழ்சிக்கு விண்ணப்பிக்கும் நடுவர்களுக்கு இருக்கும் தகைமைகள் எவை என அவர்கள் வெளியிட்ட இணைய விளம்பரம் தான் இது. உங்களுக்குத் அந்த தகைமை இருப்பின் அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

நாயாட நரியா நடுவர்கள் தேவை விளம்பரம்



தேவையான தகைமைகள்:

1. நடனம் பற்றிய எந்த அறிவும் தேவையில்லை.

2.ஆண்களாயின் தலைமுடி நன்கு வளர்ந்திருந்தால் தேர்வு செய்யப்படும் சாத்தியம் அதிகம். பெண்களாயின் கட்டையாகவெட்டிய முடி அந்த முடிக்கு கலர் அடித்திருந்தால் கூடுதல் தகைமை.

3. இடையிடையே நடிக்கத் தெரிந்திருக்கவேண்டும், அழுதால் ரசிகர்களிடம் பெயர் கிடைக்கும்.

4. நடனமாடும் ஆண்களை விட பெண்களிற்க்கு அதிகம் மார்க் போடுதல் வேண்டும் அட்டு பிகர் என்றாலும் அவரை ஜோதிகா, சிம்ரன் ரேஞ்சுக்கு புகழவேண்டும்.

5. இடையிடையே மேடையில் சென்று சூப்பராக ஆடினீர்கள் என ஆண்களைக் கட்டிப்பிடித்து வாழ்த்தவேண்டும், பெண்களையும் கட்டிப்பிடிக்கலாம் ஆனால் பின் விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.



தெரிந்திருக்கவேண்டிய சொற்கள் :

கீழ் வரும் சொற்களில் சிலவற்றை மட்டும் பாவித்து நீங்கள் ஜல்லி அடிக்கலாம். இந்த சொற்களில் 3 க்கு மேற்பட்ட சொற்கள் உங்களுக்குத் தெரிந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

1. கெமிஸ்ரி : ஒரு நடன நிகழ்ச்சியில் முக்கியமான சொல் இதுவாகும். நடனமாடிய பெண்ணுக்கும் ஆணுக்கும் இந்தக் கெமிஸ்ரி இல்லையென்றால் நடனம் அம்பேல். எனக்குத் தெரிந்த கெமிஸ்ரியில் பென்சீன் ரிங், ஓர்கானிக் கெமிஸ்ரி, போன்றவை மட்டும்தான் தெரியும். இந்த நிக்ழ்ச்சிகள் பார்த்தபின்னர் தான் நடனம் ஆடவும் கெமிஸ்ரி தெரிந்திருக்கவேண்டும் என புரிந்தது.

2. சூப்பர் : இந்த வார்த்தையை பல விதமான ஸ்டைல்களில் சொல்லத் தெரிந்திருக்கவேண்டும்

3. ஃபன்டாஸ்டிக் : ஒருவர் சொதப்பலாக ஆடினாலும், சூப்பராக ஆடினாலும் இந்த வார்த்தையைச் சொல்லவேண்டும், நீங்கள் சொதப்பலாக ஆடியவருக்கு ஏன் ஃபன்டாஸ்டிக்கு என்று சொன்னீர்கள் என்று பார்ப்பவர்கள் முடியைப் பிய்க்கவேண்டும்.

4. எனர்ஜி : கெமிஸ்ரிக்கு அடுத்த இடத்தை இந்த சொல் பிடிக்கவேண்டும். ஆடுபவர் சோம்பலாக ஆடினாலும் உங்கள் எனர்ஜி, எனர்ஜி லெவல் ஆச்சரியமளிக்கிறது என ஆடியவரையே ஆச்சரியப்பட வைக்கவேண்டும்.

5. எக்ஸ்பிரசன்ஸ் : முகத்தில் எந்தவித முகபாவனை செய்யாதவரைப் பார்த்து உங்கள் எக்ஸ்பிரசன்ஸ் அட்டகாசம் என நீங்கள் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல் சொல்லவேண்டும்.



6. பாடி லாங்குவேஜ் : இதனையும் இடைக்கிடை சொல்லவேண்டும். இல்லையென்றால் உங்களுக்கு ரசனை இல்லையென்று மற்றவர்கள் நினைத்துவிடுவார்கள்.

7. ஹெவி : நீங்கள் கொஞ்சம் ஹெவியாக ஆடியிருக்கலாம், அல்லது ஹெவியாக ஆடிவிட்டீர்கள் என நடனமாடியவர்களை வெறுப்பேத்தவேண்டும். அப்படி ஹெவியாக ஆடாமல் விட்டவர்கள் அடுத்த முறை ஒரு 10 அல்லது 20 கிலோ எடைகொண்ட எடைக்கற்களை கையில் வைத்துக்கொண்டு ஆடினால் ஹெவிப் பிரச்சனை தீர்ந்துவிடும்.

8. சான்ஸே இல்லை : இது பொசிட்டிவான வார்த்தையா? இல்லை நெகட்டிவான வார்த்தையா என புரியாமல் இருக்கும். நன்றாக ஒருவர் ஆடினால் சான்ஸே இல்லை நீங்கள் வழக்கம் போல கலக்கிட்டீர்கள் எனவும், கொஞ்சம் சொதப்பலாக மாறினால் உங்களுக்கு அடுத்த சுற்றுக்கு செல்ல சான்சே இல்லை என கொஞ்சம் குரலில் மென்மையை அல்லது அழுகையைக் கூட்டிச் சொல்லவேண்டும்.

9. ஆங்கிலம் : முக்கியமாக நீங்கள் பச்சைத் தமிழன் அல்லது தமிழச்சியாக இருந்தாலும் ஆங்கிலத்தில் பிரபலமான சில வார்த்தைகள் தெரிந்திருக்கவேண்டும் அவை ஜோஷ், ஜிவ், கலக்கல்ஸ்( கலக்கல் தமிழ், ஒரு ஸ் கூடச் சேர்த்து அதனை ஆங்கிலமாக்கிவிடவும்), ஆங்கிலம் தெரியாதவர்கள் கூட இந்த வார்த்தைகளை வைத்து வீடே கட்டலாம். Jive, Performance, Cool, Understanding, Awesome, Mind blowing, etc.

இது ஒரு மீள்பதிவின் திருத்திய வடிவம். அதாவது வேர்ஷன் 1.1

பதிவர்களின் சனிப் பெயர்ச்சி பலன்கள் - பகுதி 2

முன்னைய ராசிகள்- பகுதி 1

துலாம் :

நினைத்ததைச் சாதிக்கும் குணமுள்ள துலா ராசிக்காரர்களே ஏழரைச் சனி தற்போது உங்களுக்கு தொடங்குகின்றது, கவனமாக இருக்கவும்.

பதிவர்களின் பலன் :

மருதமூரான் : புதிய முயற்சிகள் சர்ச்சரவைக் கொடுத்தாலும் உங்கள் மனோபலத்தாலும் பேஸ்புக் நண்பர்களாலும் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். உங்கள் பாடசாலை மாணவர்களை அதிகம் நம்பவேண்டாம். தலைமுடியின் ஸ்டைலை மாத்தினால் காலிவீதியில் பலரைக் கவரலாம். கோட்டடிப் பிள்ளையாரை வணங்கவும்.

ஜாக்கி சேகர் : திரையிலகில் புதிய எதிர்பார்புகள் நிகழும். அதிகமாக 18+ ஆங்கிலப் படங்களைப் பார்த்து மனதைக் கெடுக்கவேண்டாம். நீங்களும் கோடம்பாக்கம் அம்மனை வழிபட்டால் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.

சினேகிதி : உண்மைகளை எழுதிப் பலரிடம் நீங்கள் யார் என அறியப்படுவீர்கள். பெண்களுக்காக அடிக்கடி குரல்கொடுக்கவேண்டிவரும். ஒரே ஊரைச் சேர்ந்தவர்களால் அடிக்கடி கலாய்க்கப்பட்டாலும் நல்ல நட்பு நிலவும். குமிழடிப் பிள்ளையாரை அடிக்கடி நினைக்கவும் நல்ல பலன்களைத் தருவார்.

விருச்சிகம் :

மனித நேயமுள்ள விருச்சிக ராசி அன்பர்களே இதுவரை 10 வீட்டில் நின்ற சனிபகவான் இனி லாப ஸ்தானமாகிய 11 ஆம் வீட்டில் வந்து அமர்ந்து உங்களை ஆளப்போகின்றார்.

பதிவர்களின் பலன் :

கிருத்திகன் (கீத்) : மெய் சொல்லுகின்றேன் என பொய் சொன்ன நீங்கள் இனி மெய்யே சொல்வீர்கள், அரசியலில் நுழையக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. பாடசாலை சக மாணவர்களிடம் கவனமாக இருக்கவும். மூத்த விநாயகரை வணங்கினால் சகல செளபாக்கியமும் கிடைக்கும்.

பனையூரான் : தோற்றத்தில் அமைதியாக இருக்கும் நீங்கள், புதிய முயற்சிகள் சிலவற்றினால் நல்ல பலன் கிடைக்கும். ட்விட்டரில் நேரத்தை அதிகம் செலவிடவேண்டாம். தெகிவளை விஷ்ணுகோவிலுக்கு ஒவ்வொரு ஞாயிறும் தவறாது செல்லவும்.

சுபானு : அடிக்கடி ஊஞ்சலாடி விழுந்தாலும், நீங்கள் செய்யும் தொழிலால் நல்ல பெயர் கிடைக்கும். காதல் வெற்றியில் முடியும், உங்கள் காதல் கவிதைகளை காதலிக்கு காட்டினால் பாரதூரமான பின்விளைவுகள் ஏற்படும். 10 பதிவர்களுக்கு இலவசமாக சேவை செய்தால் பரிகாரம் கிடைக்கும்.

தனுசு :

நல்லதைச் செய்யும் மனமுடைய தனுசு ராசி நண்பர்களே, 9 ஆம் வீட்டில் இருந்துகொண்டு உங்கள் திறமைகளை மழுங்கடித்த சனி பகவான் இனி 10 வீட்டில் இருந்துகொண்டு நல்ல பலன்களைத் தருவார்.

பதிவர்களின் பலன் :

சந்ரு : அனானிகளினால் பட்ட துன்பங்கள் விலகும், மொழியினை நேசிக்கும் உங்கள் குணத்தால் பல நண்பர்கள் கிட்டுவார்கள். தொலைகாட்சி நண்பர்களுக்கு கடுப்பை ஏற்படுத்துவீர்கள், புதிய முயற்சிகள் வெற்றிதரும்.

நிமல் : தொலைந்துபோன தொலைபேசிக் காதலி மீண்டும் கிடைப்பார். உங்கள் தொழில்நுடப் அறிவால் நண்பர்களைக் கவர்ந்தாலும் காதல் கதைகளினால் அவர்கள் காண்டாவார்கள்.

சிகே.மயூரன் : விளையாட்டுத் திறமையுடைய நீங்கள், சில நாட்களாக வெறுப்பாக இருந்தாலும் மீண்டும் வெற்றிக்கனியைப் பறிப்பீர்கள். தலைப்பாகை கட்டியவர்களை வம்புக்கு இழுக்கவேண்டாம், வேண்டாத விபரீதம் ஏற்பட்டு உலகப் புகழ் அடையலாம். கெத்தாராமா சிவனை வழிபடுங்கள்.

மகரம் :

எந்தச் செயலையும் திறமையாகச் செய்யும் மகர ராசி அன்பர்களே இதுவரை காலமும் அட்டமத்தில் உங்களை ஆட்டிப்படைத்த சனிபகவான், 9 ஆம் வீட்டில் அமர்ந்து நல்ல பலன்களைத் தருவார்.

பதிவர்களின் பலன் :

குசும்பன் : மற்றவர்களைச் சந்தோச‌ப்படுத்தி இன்பம் காணும் உங்களுக்கு, தளபதிகள், தலைகள் மூலம் மீண்டும் மீண்டும் சந்தோசப்படுத்தும் வாய்ப்புகள் கூடுகின்றன. திரையுலகினரின் கண்டனத்திற்க்கு உள்ளானாலும் கோடம்பாக்கம் அம்மன் அருளால் சகலதும் நல்லபடியாகவே நடக்கும்.

கனக கோபி : நக்கல், நையாண்டிக்கு பெயர் போன நீங்கள் உங்கள் எழுத்துகளில் இடையிடையே ஆட்சி செய்பவர்களை சீண்டுவதால் தொல்லைகள் நேரலாம். மற்றவர்களின் மனைவிமாரைப் பற்றிய ஆராய்ச்சிகள் பிரச்சனை கொடுத்தாலும் நீங்கள் சிறுவன் என்பதால் அவ்வளவு கண்டுகொள்ளமாட்டார்கள். பம்பலப்பிட்டி மாணிக்கபிள்ளையாரை அடிக்கடி வணங்குங்கள், கோவிலில் உங்கள் எதிர்காலம் தென்படலாம்.

வந்தி : கலாய்ப்பதையும் கலாய்க்கப்படுவதையும் அதிகம் விரும்பும் நீங்கள் அடிக்கடி சொந்தச் செலவில் சூனியம் வைத்து மாட்டுப்படுவீர்கள். நண்பர்களே காதல் விவகாரங்களில் எதிரியாகும் சூழ்நிலை ஏற்படும். வெளிநாட்டு முயற்சிகள் வெற்றி தரலாம். மகிழ்ச்சியான செய்திகள் விரைவில் வரக்கூடும். பேஸ்புக் கிருஷ்ணனும் ட்விட்டர் முருகனும் உங்களுக்கு சகல செளபாக்கியங்களையும் இரட்டிப்பாகத் தருவார்கள்

கும்பம் :

எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்துச் செயல்படும் கும்ப ராசி நண்பர்களே இதுவரை 7 ஆம் வீட்டில் இருந்துவந்த சனிபகவான் இனி அட்டமத்துச் சனியாக உங்களைத் தொல்லை பண்ணப்போகின்றார்.

பதிவர்களின் பலன் :

கரவைக் குரல் : பல்திறமையுடைய நீங்கள் பலராலும் பாராட்டப்படுவீர்கள், கூடிய விரைவில் பழைய நண்பர்களைச் சந்திக்கலாம். ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் கும்மியைக் குறைக்கவும். சந்நிதி முருகன் உங்களுக்கு சகல செளபாக்கியங்களையும் தருவார்.

உண்மைத் தமிழன் : உங்கள் குணத்தாலும் எழுத்தாலும் பதிவுகளின் நீளத்தாலும் பலரிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்கள் திரை விமர்சனங்களினால் திரையுலகத்தினரின் எதிர்ப்பைப் பெறுவீர்கள். கோடம்பாக்கம் அம்மனை ஒரு தடவை தரிசியுங்கள் முடியவில்லை என்றால் ஸ்ரேயாவை ஒரு தடவை நேரில் தரிசியுங்கள்.

சாயினி : உங்கள் எழுத்தாற்றலுக்கு கிடைத்துவந்த மரியாதை அண்மையில் நீங்கள் பெற்ற பட்டம் மூலம் மேலும் கிடைக்கும். நண்பர்கள் தொல்லை தந்தாலும் பரீட்சைகளில் கொடி நாட்டுவீர்கள். சாமத்தில் பின்னூட்டங்கள் இடுவதைத் தவிர்க்கவும். கோட்டடி அம்மன் உங்களுக்கும் அருள் புரிவார்.

மீனம் :

உழைப்பின் மதிப்புத் தெரிந்த மீன ராசி நண்பர்களே இதுவரையும் 6 ஆவது வீட்டில் இருந்த சனீஸ்வரர் இனி உங்கள் 7 ஆம் வீட்டில் நுழைந்து அருட்காடட்சம் கொடுப்பார்.

நையாண்டி நைனா : நக்கல், நையாண்டியில் பெயர் பெற்ற நீங்கள் இன்னும் பெயர் அடைவீர்கள். சீரியஸ் பதிவுகள் எழுதி பெயரைக் கெடுத்துக்கொள்ளவேண்டாம்.

அருண்மொழிவர்மன் : காணாமல் போன பழைய நண்பர்களை பதிவுலகின் மூலம் கண்டுபிடித்திருப்பீர்கள். அவர்களுடன் தொடர்புகளை அளவாக வைத்துக்கொள்ளவும், சிலவேளை பதிவுகளின் உங்கள் காலை வாரி டவுசரையும் அவிழ்த்துவிடுவார்கள். ரொரண்டோ முருகனை வழிபடவும்.

கதியால் : நகர வாழ்க்கையில் பழைய கிடுகுவேலியத் தொலைக்கவேண்டாம், இலங்கையில் இருந்து சிங்கை வரும் சிங்கங்களின் சந்திப்பைத் தவிர்க்கவும். சிங்கை முருகனுக்கு அடுத்த தைப்பூசத்திற்க்கு பால்காவடி எடுக்கவும்.

முக்கிய குறிப்பு : நண்பர்கள் இதனை ஜாலியாக எடுப்பார்கள் என்ற எண்ணத்தில் எழுதிய பலன்கள் தான் இவை. அத்துடன் இந்த ராசிகள் அவர்களின் நிஜமான ராசிகள் அல்ல. ஒவ்வொருவரைப் பற்றிய ரகசியங்களை அறியத்தந்த அவர்களின் நண்பர்களுக்கு நன்றிகள்.

பதிவர்களின் சனிப் பெயர்ச்சி பலன்கள் - பகுதி 1

எதிரிவரும் 26ந்திகதி சிங்க ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் சனீஸ்வரன் நுழைகின்றார். இந்தப் பெயர்ச்சியினால் நம்ம பதிவர்கள் சிலருக்கு என்ன பலாபலன்கள் ஏற்படும் என குசும்பன் ஸ்டைல் பதிவு.

மேடம் :

என்றைக்கும் எதற்க்கும் துணிந்து செல்லும் மேட ராசி அன்பர்களே, இதுவரை 5 ஆம் வீட்டில் இருந்த‌ சனிபகவான் 6ஆம் வீட்டில் நுழைகின்றார்.

பதிவர்களின் பலன்:

கேபிள் சங்கர் : திரையுலகினரின் எதிர்ப்பைச் சம்பாதித்தாலும், கோடம்பாக்கம் அம்மன் அருளால் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல விலகும்.

டொன்லீ : இணையத்தில் பெண் தேடும் விபரீத முயற்சிகளை நிறுத்தவேண்டும். டிவிட்டர் முருகன் அருளால் நல்ல வரன் கிடைக்கும்.

ஆதிரை : இரு நாட்கள் முன்னரே காகம் எச்சம் மூலம் உங்கள் சனி அகன்றுவிட்டது, வெள்ளவத்தை வீதிகளில் தனித்து திரிவதை தவிர்க்கவும். விசாப் பிள்ளையாரை வணங்கிவந்தால் சகல செளபாக்கியமும் கிட்டும்.

இடபம் :

கற்பனைக் கனவுகளில் மிதக்கும் இடப ராசி அன்பர்களே 4 ஆம் வீட்டில் அமர்ந்து உங்களை படாத பாடு படுத்திய சனிபகவான் இனி 5 ஆம் வீட்டில் அமர்ந்து நற்பலன்களைக் கொடுப்பார்.

பதிவர்களின் பலன்:

கானா பிரபா : வெளிநாட்டு யோகம் உண்டு, உங்கள் பாட்டுப் பாடும் திறன் மேலும் வளரும், நேரடி ஒளிபரப்புகள் மூலம் நண்பர்களின் எதிர்ப்பைப் பெற்றாலும் ட்விட்டர் முருகன் அருளால் அவை விலகிவிடும்.

பால்குடி : விருந்துபசாரம் செய்வதில் பேருவகை கொள்ளும் நீங்கள், பழைய நண்பர்கள் சிலரின் கூட்டினால் பீர்குடி என பேரெடுக்க நேரலாம், புட்டளை பிள்ளையாரின் அருளினால் பிரச்சனைகள் நீங்கிவிடும்.

யோகா : நீங்கள் எழுதும் கவிதைகளினால் அரசியல் சிக்கல்களில் சிக்கும் ஆபத்திருந்தாலும் இரம்பொடை ஆஞ்சநேயர் அருளால் நல்லவையே நடக்கும்.

மிதுனம் :

மனதில் பட்டதை ஒளிவு மறைவின்றிப் பேசும் மிதுன ராசி நண்பர்களே இதுவரை 3ஆம் வீட்டில் அமர்ந்து தைரியத்தை கொடுத்த சனிபகவான் இனி 4ஆம் வீட்டில் அமர்ந்து கொஞ்சம் அல்லல்படுத்துவார்.

பதிவர்களின் பலன்:

புல்லட் : சிறுவர்களினால் தொல்லை, மரண பயம் ஏற்படும், சிரிப்பாக பேசினாலும் சீரியசானவர் நீங்கள் என பலர் உணர்வார்கள். இரவில் பஸ் பயணத்தைத் தவிர்க்கவும். பேஸ்புக் விநாயகரின் அருள் இருப்பதால் இளம் பெண்களின் நட்பு கிடைக்கும்.

கெளபாய் மது : பஸ் பயணங்களில் பெண்களால் தொல்லை ஏற்படும். கூகுள் குழுமங்களில் அரட்டை அடிப்பதை குறைக்கவும், அந்நியன் கெட்டப்பில் இருந்து அம்பி கெட்டப்புக்கு மாறினால் காதல் கைகூடும்.

டயானா: சில நாட்கள் காணாமல் போயிருந்த உங்களுக்கு, இனி சந்தோசமான நாட்கள் கெமிஸ்ரி கைகொடுக்கும், பேஸ்புக்கில் நண்பர்களின் எண்ணிக்கையால் கின்னஸ் சாதனை புரியும் வாய்ப்பிருக்கிறது.

கடகம் :

அடக்கத்திற்க்குப் பெயர் போன கடகராசி நண்பர்களே இதுவரை பாதச் சனியாக உங்களை அலைக்கழித்த சனிபகவான் இனி 3 ஆம் வீட்டில் அமர்ந்து நல்ல பலன்களைக் கொடுப்பார்.

பதிவர்களின் பலன்:

ஆயில்யன் : புதிய நண்பர்கள் ட்விட்டர் மூலமும் , பிந்தொடர்பவர்கள் மூலமும் கிடைக்கலாம். எதிர்பார்த்திருக்கும் விடயங்கள் விரைவில் நடக்கும்.

மு.மயூரன் : இளைஞர் என்ற நினைப்பு நீங்கி திருமண யோகம் கிட்டிவிட்டது, விசைப்பலகைகளால் தொல்லை ஏற்பட்டாலும், லினக்ஸ் சிவன் அருளால் அனைத்தும் விலகுவிடும்.

மாயா : இதுவரை உங்களை விட்டுப் பிரிந்திருந்த நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். புதுப் பொலிவுடன் உங்கள் ஆக்கங்களை மீண்டும் தொடர்வீர்கள். வெம்பிளி முருகனை வழிபட்டு வந்தால் சகல யோகமும் கிட்டும்.

சிங்கம் :

எதற்கும் அஞ்சாத சிங்க ராசி அன்பர்களே இதுவரை உங்களை ஜென்மச் சனியாக ஆட்டிப் படைத்த சனிபகவான் 2 ஆம் வீட்டில் அமர்ந்து நல்ல பலன்களைக் கொடுப்பார்.

பதிவர்களின் பலன்:

சதீஸ் : அனானிகளின் அடிவாங்கிய நீங்கள் இனி அனைவரிடமும் ஒற்றுமையாக இருப்பீர்கள். நவா, நியூ ஒலிம்பியா தியேட்டர்கள் பக்கம் அடிக்கடி செல்லவேண்டாம். விரைவில் அரசியல் வெற்றிச் செய்தி வந்துசேரும்.

தூயா : இதுவரை காலமும் பதிவுகளில் ஏற்பட்ட தேக்கம் நீங்கி புதிய புதிய சமையல் குறிப்புகளுடன் நண்பர்களுக்கு மீண்டும் விசப் பரீட்சை வைப்பீர்கள். பதிவுலகின் பங்காளிகள் உங்களைக் கலாய்ப்பார்கள், அவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்கவும்.

சயந்தன் : யூடுயூப்பில் உங்கள் நடனங்களை வெளியிட்டு விசப் பரீட்சைகளில் ஈடுபட வேண்டாம். வலைகளில் உங்கள் படங்கள் வெளியாவதால் சினிமா வாய்ப்புகள் வரக்கூடிய சாத்தியம் இருக்கின்றது. ட்விட்டர் கும்மிகளைக் குறைத்தால் சிறந்த எதிர்காலம் இருக்கின்றது.


கன்னி :
பெண்களின் மனதைக் கவர்ந்த கன்னி ராசி நண்பர்களே இதுவரை 12 ஆம்வீட்டில் இருந்தபடி உங்களை ஆட்டிப் படைத்த சனி பகவான் இனி ஜென்மச் சனியாக நல்ல பலன்களைத் தருவார்.

பதிவர்களின் பலன்:

லோஷன் : இளம் பெண்களின் கதாநாயகனாக இருந்துவந்த நீங்கள் உங்கள் உடல் அமைப்பின் மூலம் அந்த இடத்தில் இருந்து இறங்கிவிடுவீர்கள். உடற்பயிற்சி செய்யவும், புதிய முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். கிரிக்கெட் முடிவுகள் கடுப்பைக் கொடுக்கும், கெத்தாராமா சிவனை வழிபட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

லக்கி லுக் : மடிப்பாக்கத்தின் முடிசூடான மன்னனாகிய நீங்கள் காண்டு கஜேந்திரன் போன்ற நட்புகளினால் கெட்ட பெயர் பெறக்கூடும். பரங்கிமலை ஜோதியைத் தவிர்க்கவும், தண்ணியில் உங்களுக்கு கண்டம். தளபதி அருளினால் அரசியல் எதிர்காலம் உண்டு.

சேரன் : வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்கவும், அது முடியாவிட்டால் கேலாங்க் பக்கம் செல்லவேண்டாம். உடற்பயிற்சி செய்துவரவும். பெயர் குழப்பம் ஏற்பட்டாலும் புதிய முயற்சிகள் வெற்றி தரும்.

டிஸ்கி: இது சும்மா நகைச்சுவைக்காக எழுதிய பலனே ஒழிய உண்மையான பலன்கள் இல்லை. திரு.சுப்பையா வாத்தியாரும், நண்பர்களும் பொறுத்தருள்க.


உங்கள் பெயர் இல்லை எனச் சந்தோசப் படவேண்டாம், அடுத்த 6 ராசிக்காரர்களினதும் பலன் சில மணித்தியாலத்தில்.

நொந்துபோன இதயங்களுக்காக

இலங்கையின் ரி20 போட்டிகளைப் பார்த்து நொந்து கடுப்பாகிப்போன இலங்கை ரசிகர்களை மகிழ்விக்க இந்தப் பதிவு. இந்தப்பாடலைப் பாருங்கள் சகல துன்பங்களையும் மறந்து மனம் விட்டுச் சிரிப்பீர்கள். ஸ்பீக்கேர்ஸ் இல்லாதவர்கள் கூடப் பாடலைப் பார்த்து மகிழலாம்.



கனடாவில் இந்தப்பாடல் சுடப்பட்டதாக நண்பி சினேகிதி கூறியிருந்தார்.


போனஸ் பாடல் :

போட்டியை நேரில் சென்று பார்த்து கடுப்பாகி வரும் வழியில் போக்குவரத்து சமிக்கைகளை மீறி காவல்துறையிடம் அபராதம் செலுத்திய அருமை நண்பன் லோஷனுக்காக இந்த போனஸ் பாடல்.

சிறுவர்களுக்கான இந்தப்பாடலை பெரியவர்களும் பார்த்து மகிழலாம்.

எனக்கொரு கேர்ல் பிரண்ட் வேண்டாமடா - 18 - 35

பெண் நண்பிகள் இல்லாமல் இருப்பதன் 10 அனுகூலங்கள்.

1. நேரத்தை மிச்சம் பிடிக்கலாம்.


2. நிம்மதியாக உறங்கலாம்.


3. மிஸ்ட் கோல் பற்றிக் கவலைப்படவேண்டாம்.


4. நீங்கள் எப்படியும் இருக்கலாம்


5. எந்த ரெஸ்டோரண்டிலும் சாப்பிடலாம்.


6. நடுநிசியில் போரடிக்கும் எஸ் எம் எஸ்கள் வராது.


7. எந்த பெண்களிடமும் பயமின்றிப்பேசலாம்.


8. எந்த அறிவரையையும் கேட்கத் தேவையில்லை.


9. எங்கேயும் யாருடனும் எந்த நேரத்திலும் செல்லலாம்.


10. பழைய ஆறிப்போன ஜோக்குகளை திரும்பதிரும்ப கேட்கும் அவசியமில்லை.




போனஸ் :
நீண்ட நாட்கள் உயிர்வாழலாம்.

டிஸ்கி : இந்தப் பதிவுக்கும் படங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் படத்தைப்பார்த்தாவது சிலர் பெண் நண்பிகளை வைத்திருக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கை தான்.

இப்போ இந்தப் பதிவு ஏன் எனக் கேட்பவர்களுக்கு எல்லாம் ஒரு முன்னெச்சரிக்கைதான். அத்துடன் இது ஒரு பம்பல்ப் பதிவு.

பதிவுலகப் பதிகம்

கடந்த சில நாட்களாக பதிவுலகத்தை ஆட்டிப்படைத்துவரும் பத்து என்ற விடயத்தைப் பற்றி பதிவு எழுதாவிட்டால் பதிவுலக அம்மன் கண்ணைக் குத்தும் என்ற ஐதீகத்திற்காக என் பத்துகள் டாப் டென் பாணியில்.

சூடான இடுகை
தொடர்ந்து பல வாரங்களாக முதலிடத்தில் இருந்த சூடான இடுகை இந்தவாரம் பதிவுலகத்தைவிட்டு வெளியேற்கின்றது. 18+, வயதுவந்தவர்களுக்கு மட்டும், போன்ற சமாச்சாரங்களால் பல இடுகைகள் சூடான இடுகையில் வந்தன, தமிழ்மணம் மீண்டும் சூடான இடுகையை இடவேண்டும் என்பது ஒவ்வொரு சராசரிப் பதிவரினதும் எதிர்ப்பார்ப்பு. சூடான இடுகை - வடை போச்சே.

மொக்கை
கலாய்த்தல், மொக்கை என்ற பெயரில் பதிவர்கள் எழுதுகின்ற காமெடிப் பதிவுகளால் பத்தாவது இடத்தில் மொக்கை. சிலவேளை சில காமெடிகள் ஓவராகப்போய் சீரியஸ் பிரச்சனையாகவும் மாறியுள்ளன. ஆனாலும் பதிவுலகத்தை நன்கு தெரிந்தவர்கள் இவற்றை மொக்கையாகவே கருதுகிறார்கள். கலாய்த்தலில் குசும்பன், வால்பையன், சுகுமார் சுவாமிநாதன் போன்றோர்களின் சிறந்த பதிவுகள் ரசிகர்களிடையே பாராட்டைப் பெறுகின்றன. மொக்கை - பொழுதுபோக்கு

9 .ஏஜோக்
சிலநாட்களாக முன்னணியிலிருந்த‌ ஏஜோக் சில இடங்கள் பிந்தள்ளி ஒன்பாதம் இடத்தில். ஜாக்கி சேகர், கேபிள்சங்கர் தங்கள் பாணியில் ஏஜோக் அடித்து அசத்துகிறார்கள். விகடனின் வயாகரா தாத்தாவை ரீமேக் செய்யும் கீத்தின் ஜோக்குகளும் சபாஷ் போடவைக்கின்றன. ஒரு சில இடத்தில் ஆபாசம் மேலோங்கினாலும் வயதுவந்தவர்களுக்கானது எனமுதலிலையே டைட்டில் கார்ட்டில் போடுவதால் மன்னிக்கலாம். ஏஜோக் - ரகசியப்புன்னகை.

8.தொடரிடுகை
பதிவுலகத்தை ஆட்டிப்படைக்கும் சிறந்த படைப்பு. பத்துக்கேள்வி, 12 கேள்வி என ஆரம்பத்தில் இருந்தாலும் சில இடங்களில் 32 கேள்விகள் என மக்களின் பொறுமையைச் சோதித்தார்கள். பல இடங்களில் சுவாரஸ்யம் இருந்தாலும் சில இடங்களில் கொட்டாவி விடுகிறார்கள் ரசிகர்கள். தொடரிடுகை - விடாது கருப்பு.

7. விமர்சனம்
தமிழ் சினிமாவையும் உலக சினிமாவையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துமேய்ந்து வலையில் மேயும் பல ரசிகர்களை தோரணை, ஏகன், வில்லு, வாமனன் போன்ற மஹா மொக்கைகளிடம் இருந்து காப்பாற்றிய பெருமை இந்த விமர்சகர்களையே சாரும். பிளார்பாரம் கடைகளில் பழைய ஆங்கிலப்படச் டிவிடிகளைத் தேடிப்பார்க்க செய்கிறார்கள். பிறருக்காக மொக்கைப்படம் பார்த்து விமர்சனம் எழுதும் பதிவர்களுக்கு விரைவில் வாழ்நாள் சாதனை விருது கிடைக்கும் என விபரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. விமர்சனம் - வருமுன் காப்போம்

6. விருதுகள்
பட்டாம்பூச்சிவிருது, கரப்பான் பூச்சி விருது என தொடங்கிய விருதுகள் இப்போது சுவாரஸ்ய பதிவர் விருதில் வந்து நிற்கிறது. அடுத்தகட்டமாக பத்ம விருதுகள் கூட கிடைக்கலாம். விருது என்பது முத்தம் போல கொடுப்பதும் சுகம் வாங்குவதும் சுகம். சிலர் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள். செந்தழல் ரவி பலருக்கு விருது கொடுத்து சாதனை புரியவுள்ளார். விருதுகள் - பாராட்டும் ஊக்கமும்

5. பின்னூட்டம்
முதல் மூன்று இடங்களி இருந்த பின்னூட்டம் சற்றுக்கீழிறங்கி ஐந்தாம் இடத்தில். மீ த பர்ஸ்ட் என ஆரம்பித்து கலக்கல், :‍‍), முடியல என பல இடங்களில் மணிரத்னம் பட வசனங்கள் போல இரத்தினச் சுருக்கமாக இருக்கிறது. 25க்கு மேற்பட்ட பின்னூட்டம் கிடைத்தால் பிரபல பதிவர் ஆகும் யோகம் இருப்பதாக ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றார்கள். மொக்கைப் பதிவுகளுக்கு கிடைக்கும் கைத்தட்டல்களை விட காத்திரமான கருத்துள்ள பதிவுகளுக்கு ஏனோ அவ்வளவு கைத்தட்டல் கிடைப்பதில்லை. இதுபோன்ற சில தவறுகளை நிவர்த்தி செய்தால் பின்னூட்டம் பூஸ்டாக மாறும். பின்னூட்டம் பிறவிப்பயன்


4. தமிழ்மணம்
பதிவுலகத்தில் பிரிக்கமுடியாத ஒரு அங்கம். இடையிடையில் சிலருடன் மல்லுக்கட்டினாலும் பதிவர்களின் வங்கி. சூடான இடுகையை சென்சார் செய்தது ரசிகர்ளிடன் அவ்வளவு வரவேற்பு பெறவில்லை. ஓட்டுப் போடும் மர்மம் சராசரி ரசிகளுக்கு புரியவில்லை. இந்தவார நட்சத்திரம், ஈழம், செய்திகள் போன்றன தமிழ்மணத்தின் பிளஸ்கள் ஆகும். வாசகர் பரிந்துரை மைனஸ். மொத்தத்தில் தமிழ்மணம் - மணக்கும் மல்லிகை.

3.வாசகர் பரிந்துரை
தமிழ்மணத்தின் வெளியீடான வாசகர் பரிந்துரை ஆரம்பத்தில் ஸ்லோவாக புரிந்தாலும் பின்னர் பிக்கப் ஆகிவிட்டது. கமல் படத்தில் வையாபுரி, நாகேஸ் போன்றவர்களுக்கு எப்படி இடம் இருக்கிறதோ அதேபோல் ஒரு சில பதிவர்களின் பதிவுகள் மட்டும் வாசகர் பரிந்துரையில் இடம் பிடிக்கும் மர்மம் புரியவில்லை. கள்ளஓட்டுப்போடும் முறையை மாற்றியிருந்தாலும் ஓப்பன் ஐடி மல்லுக்கட்டுகிறது. வாசகர் பரிந்துரை - புரிந்தும் புரியாமலும்.

2.அனானி
அன்டிஹீரோ சப்ஜெக்டான அனானி பலரின் மனதைக் கவர்ந்தாலும், சிலருக்கு வில்லந்தான். அனானியின் தம்பியான அதர் ஆப்சனும் அனானியும் செய்யும் சேட்டைகளினால் டவுசர் கிழிந்தவர்கள் பலர். எந்தவித ஐடியும் வலையும் இல்லாத சாராசரி பி சென்டர் சி சென்டர் ரசிகர்களுக்கு அனானி வரப்பிரசாதம். மட்டுறுத்தல் என்ற சென்சார் அனானிகளுக்கு முட்டுக்கட்டை. அனானி - ஆர்ப்பாட்டம்.

1. பதிவர்
சன் டிவியில் எப்படி அவர்கள் தயாரிப்பு முதலிடமோ அதுபோல் பதிவுலகில் பதிவர் தான் முதலிடம். ஆரம்பகாலத்தில் சில பதிவர்கள் தடுமாறினாலும் பின்னர் தட்டுத் தடுமாறி வலையுல நுண்ணரசியலை அறிந்து தங்களை நிலைநிறுத்திக்கொள்கிறார்கள். பதிவர்களின் திறமையைப் பொறுத்து அவர்கள் பல விருதுகள் பெற்றாலும் பிரபல பதிவர் என்ற விருது அவர்களுக்கு ஆஸ்கார் விருதுக்கு நிகரான விருதாகவே கருதவேண்டும். பதிவர் - பாண்டித்தியம்.


புதுவரவு
நீங்களே கண்டுபிடியுங்கள்?

டிஸ்கி: கோபித்துக்கொள்ளமாட்டார்கள் என்ற எண்ணத்தில் சில நண்பர்களின் பெயரை பயன்படுத்தியிருக்கிறேன். புதுவரவாகவும் ஒரு விடயம் எழுத இருந்தேன் ஆனால் ஓவர் கலாய்த்தால் உடலுக்கு ஆகாத என்ற தத்துவப்படி கலாய்க்கவில்லை.