கமல் ரஜனி விக்ரம் விஜய்.....ஒரு கண்ணோட்டம்

மத ஜாதி அனாணி சண்டைகள் அடித்து களம் ஓய்ந்துபோன நிலையில் தமிழர்களின் பொழுதுபோக்காக இருந்த சினிமாக் கதாநாயகர்கள். தற்போது தலைகளாகவும் தளபதிகளாகவும் மாறிய நிலையில் யார் சிறந்த நடிகர் என சண்டைபோட்டால்( சும்மா தமாசுக்குத்தான்) எப்படியிருக்கும்.

முதலில் நம்ம உலகநாயகன் கலைஞானி கமலஹாசன் என் மனம் கவர்ந்த நடிகர் என்ற உண்மையை சொல்லிவிட்டு தொடங்குகிறேன்.சூப்பர் ரஜனியை எடுத்துக்கொண்டால் அவரின் பிளஸ் பாயிண்ட் 2 வயதுச் சிறுவன் முதல் 80 வயது கிழவன் வரை அனைத்து தரப்பினரதும் மனதைக் கொள்ளைகொண்டதாகும். திரையில் அவர் தோன்றும் முதல்காட்சியில் யாராயிருந்தாலும் வாயில் விரல் வைத்து விசிலடிக்கத்தான் தோன்றும். நடந்த நிகழ்வு ஒன்று சந்திரமுகி முதல் காட்சி நான் அக்கா தங்கை என எல்லோரும் முதல்க்காட்சிக்கே தியேட்ட்ருக்கு சென்றோம். அட்வான்ட்ஸ் புக்கிங் செய்தபடியால் டிக்கெட் சுலபமாக கிடைத்தது. ரஜனி தோன்றும் முதல்க் காட்சியில் என் அக்கா உணர்ச்சி வசப்பட்டு விசிலடித்துவிட்டார். ரஜனியை திரையில் பார்க்கும்போது ஏற்படும் அனுபவம் விஜயைப்பார்க்கும்போது பலருக்கு ஏற்படுகிறது.

ஆனாலும் சூப்பர் ஸ்ரார் படத்தில் வேண்டுமானல் சூப்பர் ஸ்ராராக இருக்கலாம் நிஜத்தில் சூப்பர் ஸ்ராரா என்றால் இல்லை என்பது தான் என் பதில். காரணம் இவர் தேவையற்ற அரசியல் சிக்கல்களில் ஈடுபட்டது. ஒரு முறை ஆண்டவனே வந்தாலும் தமிழ் நாட்டை அம்மாவிடம் இருந்து காக்க முடியாது என்றவர் பின்னர் அதே அம்மாவை தைரியலக்சுமி என்றார். காவேரிப் பிரச்சனையிலும் இவர் நடுநிலையாக செயப்படாமல் தன் தாய்மொழிக்கு ஆதரவு தருகிறார். இப்படி பல குற்றச்சாட்டுக்கள்.

குடும்ப விடயத்தில் திருமணத்தீற்கு முன்பு கிசுகிசுக்கள் வந்தாலும் பின்னர் எந்த தப்புதண்டாக்களிலும் ஈடுபடாதவர். சிம்பு நயந்தாரா விடயத்தில் அவ்ர்களுக்கு வில்லன் இவர் என ஒரு கதை உலாவருகிறது. யானைக்கும் அடி சறுக்கும் என்பதுபோல் இவர் சறுக்கிய ஒரு இடம் தன் மகளின் திருமணம்.

இவரது இடத்தை அதாவது சூப்பர் ஸ்ரார் பட்டத்தை விஜய் சிம்பு போன்ற மசாலா ஹீரோக்கள் பெறமுடியாது. இவரை ஒரு பார்முலா ஹீரோவாக மாற்றிய பெருமை இயக்குனர் சுரேஸ் கிருஸ்ணாவையே சேரும். அண்ணாமலைக்கு பிந்தான் இவர் கதையற்ற படங்களில் நடித்தார்(சந்திரமுகி நீங்கலாக). ப்ரியா முள்ளும் மலரும் தில்லு முல்லு போன்ற படங்கள் இனி இவரிடம் எதிர்பார்ப்பது தவறு.

மொத்தத்தில் அன்றைய ரஜனி ஹீரோ இன்றைய ரஜனி மாஸ் ஹீரோ.

நாளை விஜய் பற்றிய கண்ணோட்டம்

இளைய தளபதி விஜய்

சிறுவயதில் விஜயகாந்த் படங்களில் சின்ன விஜயகாந்தாக அறிமுகமாகி இன்று வருங்கால சூப்பர் ஸ்ரார் என சிலரால் அழைக்கபடும் விஜய் ஆரம்ப காலங்களில் சங்கவிக்கு சோப்புபோடுகிற காட்சிகளில் நடித்து அந்தக் கால தனுஸ் ஆகியிருந்தார். இவரின் திரையுலக வாழ்க்கையை மாற்றிய படம் பூவே உனக்காகவாகும் அதன் பின் காதலுக்கு மரியாதை லவ் ருடே துள்ளாத மனமும் துள்ளும் என சிறந்த காதல் படங்களில் நடித்தவர். சூப்பர் ஸ்ராக வேண்டும் என்ற ஆசையில் அவரை மாதிரியே பஞ்ச் டயாலக் காமெடி பண்ணி தன் காதல் படங்களை கைவிட்டுவிட்டார். ஆனாலும் சூப்பர் ஸ்ரார் பஞ்ச் டயலாக் சொன்னால் ஏற்றுக்கொள்ளாலம் இவரை மாதிரி கத்துக்குட்டிகள் சொல்லும் போது சிரிப்புதான் வருகிறது. விஜய் ரஜனியை காப்பி பண்ணாமல் தன் பாணியில் படங்கள் நடித்தால் சூப்பர் ஸ்ரார் நாற்காலியை தொட்டுப்பார்க்கலாம். இல்லையென்றால் விஷால் ஜீவா போன்றவர்களின் போட்டியில் அதை இழக்கவேண்டியிருக்கும்.

விஜயின் பலம் டான்ஸ் டான்ஸ் டான்ஸ். பலவீனம் தந்தையின் படங்கள். தற்போது ஒரு அரசியல் கட்சியினது அபிமானியாக இருப்பதால் சிலவேளைகளில் வருங்கால முதல்வர் நாற்காலியும் இவரது கண்ணாக இருக்கலாம். இவரது ரசிகர்கள் தான் பீர் பால் அபிசேகம் செய்கிற முறையை அறி முகப்படித்தியவர்கள். தமிழ் நாட்டில் மட்டுமல்ல ஈழத்திலும் விஜய் அஜித் ரசிகர்கலிடம் மோதல்கள் நடந்ததுண்டு.

இவர் ஏன் போக்கிரி ஆதி சச்சின் மதுர போன்ற படங்களில் நடித்தார் என்பது அதிசயம்தான்.

ஆரம்பகாலங்களில் கிசுகிசுக்களில் அடிபட்டாலும் திருமணத்தின் பின் பெரிதாக ஒன்றும் அடிபடவில்லை. கில்லியின் பின் திரிஷாவுடன் ஒரு கிசுகிசு வந்து போனது.

நாளை விக்ரம் பற்றிப்பார்ப்போம்.

தமிழ்த் திரையுலகின் பிதாமகன்.

பன்னிரண்டு வருட கஸ்டங்கள் வேதனைகள் மன உலைச்சல்களுக்கு மத்தியில் பாலாவின் சிறந்த இயக்கத்தில் சேது மூலம் தமிழ்த்திரையுலகைதன் பக்கம் திருப்பிய விக்ரம், கலையுலகைப் பொறுத்தவரை கமல்ஹாசனின் நாற்காலிக்கு பொருத்தமானவர். இவர் சூப்பர் ஸ்ரார் என்ர இடத்திற்க்கு தகுதியானவர் ஆனால் நிகழ்கால வருங்கால சூப்பர் ஸ்ரார்களை விட ஒரு படி மேலாக இவருக்கு நடிப்பும் வருவதால் இவர் அடுத்த உலக நாயகனாவார்.

ஏற்கனவே சேது காசியில் இழந்த தேசியவிருதை பிதாமகன் மூலம் வசனமே பேசாமல் வெறும் பாடி லாங்குவேஜால் மட்டும் பெற்ற நடிகர் இவர் ஒருதராகத் இருக்க முடியும். இவரின் திறமைக்கு அடுத்து வந்த அன்னியன் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும். அம்பி ரெமோ அன்னியன் என்ற மூன்று வெவ்வேறு பாத்திரங்களை அழகுறச்செய்தவர். இப்படத்தில் வேறுயாராவது நடித்திருந்தால் எடுபட்டிருக்குமா என்பது கேள்வி.

இவரின் பலம் எந்தப் பாத்திரமானாலும் அதனைத் திறம்பட நடிப்பது ஹார்ட் வேர்க் ஹோம் வேர்க் பண்ணுவது. அதே நேரம் பிதாமகன் அன்னியன் காசி போன்ற சிறந்த படங்களிள் நடித்தாலும் அருள் மஜா போன்ற மசாலாப் படங்களிலும் நடித்து தயாரிப்பாளர்களின் கல்லாவை நிறைப்பார்.

பலவீனம் கிங் சாமுராஜ் காதல்சடுகுடு போன்ற பப்படப்படங்களில் நடிப்பது.

பொது வாழ்க்கையில் இதுவரை எந்தக் கிசுகிசுக்களிலும் சிக்கவில்லை. அதனைவிட அரசியல் மோகம் பஞ்ச் வசனம் கூட இல்லை. பலவற்றில் இவர் கமலுடன் ஒத்துப்போகிறார். இருவரும் பரமக்குடி தந்த தவப்புதல்வர்கள். எந்தவித பந்தா இலாமல் எல்லா நடிகர்களுடனும் சினேகம் பாராட்டுவது இவரின் மிகசிறந்த குணமாகும்.

அடுத்த போஸ்டில் தலையை பற்றி பார்ப்போம்.

தல வரலாறு.

என்னடா சினிமா சம்பந்தமான திரியில் ஏதோ கோயில் தல வரலாறு என்று நினைக்கிறீர்களா? இல்லை இது நம்ம தல என செல்லமாக அழைக்கப்படும் ஆசைநாயகன் அஜித்குமார் வரலாறு.

ஆரம்ப நாட்களில் அஜித்தும் மற்ற ஹீரோக்கள் போல் சாக்லேட் பேபியாகத்தான் அறிமுகமானார். முதல்படமான அமராவதி அவ்வளவு சிறப்பாக ஓடாவிட்டாலும் யார் இந்த நடிகன் என அஜித்தை சற்றுப்பார்க்க வைத்தது. தமிழ் நடிகர்களிலேயே ஜெமினி கணேசன் கமலுக்குபின் வசீகரமான முகம் இவருக்குத்தான் தற்போது ஜெயம் ரவி அந்த கேட்டகரிக்குள் வருமுயல்கிறார். அமராவதிக்குப்பின் இவர் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக எந்தப்படமும் ஆசை வரை நடிக்கவில்லை. விஜயுடன் சேர்ந்து நடித்த ராஜாவின் பார்வையில் என்ற படம் (எத்தனைபேர் பார்த்தீர்கள்?) இருவரினது படப்பட்டியலில் ஒரு எண்ணிக்கையை கூட்டியதே ஒழிய வேறு எந்த விடயமும் அதில் இல்லை.

ஆரம்ப காலங்களில் இவர் பிரசாந்துடன் கல்லூரி வாசல், விக்ரமுடன் ஏதோ ஒரு படம்(பெயர் ஞாபகம் வரவில்லை ஆனால் அதில் கார்த்திக் ராஜா இசையில் கமல் முத்தே முத்தம்மா என்ற நல்லதொரு பாடல் பாடியிருப்பார்) என இன்னொரு ஹீரோவுடன் நடித்த படங்களும் வந்த வேகத்தில் ஓட்டம் பிடித்தது.

வசந்தின் இயக்கத்தில் ஆசை என்ற படம்தான் அஜித்தை ஆசைநாயகனாக்கியது அதன் பின் வந்த காதல்கோட்டை காதலர்களிடையே புதிய அத்தியாயத்தை உருவாக்கியது. அதன்பின் சில அடங்கள் வழமையான படங்களாகி பெட்டிக்குள் போய்விட்டது. அடுத்த படமான வாலிதான் அஜித்தின் இன்னொரு பரிமாணத்தை உலகிற்க்கு காட்டியது. எஸ்.ஜே. சூர்யாவின் அட்டகாசமான இயக்கத்தில்( இனி இவரால் இப்படியொரு ப்டம் இயக்கமுடியுமா என்பது சந்தேகம்) அஜித் இரட்டை வேடத்தில் அதிலும் வாய் பேசமுடியாதவராக நடித்து கமலின் நாற்காலிக்கு தன்னைத் தயாராக்கிக்கொண்டார். நான் எல்லாம் ஆசை படத்தின் பின் அஜித் விசிறியாகி காதல் கோட்டை பார்த்தபின் முழுக்கை சட்டையை இன் பண்ணி போட்டுக்கொண்டு ஊரில் ரகளை செய்த காலம் அது. பின்னர் சிட்டிசனில் பல வேடம் தாங்கி நடித்தார் ஆனால் அந்தப் படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. இடையில் வேறு சில படங்களும் இதே நிலைதான்.

காதல் மன்னனில் அஜித்தின் நண்பர் சரண் தன் வித்தியாசமான திரைக்கதையாலும் பாடல்களாலும் மீண்டும் அஜித் விஸ்வரூபம் எடுத்தார். அதன் பின் அமர்க்களம் அஜித்தின் வாழ்க்கை துணையையும் அவருக்கு கொடுத்தது. இந்தக்காலத்தில்தான் இவருக்கும் விஜயைக்கும் ஒரு பனிப்போர் ஆரம்பமாகியது இவரின் படத்தில் அவரைத்தாக்கி பஞ்ச் வசனங்கள் அவரின் படத்தில் இவரைத்தாக்கி பஞ்ச் வசனங்கள் என இருவரும் தயாரிப்பாளாரின் பணத்தில் சண்டைபோட்டார்கள்.

இடையில் சில காலம் கார் பந்தயத்தில் கவனம் செலுத்தியதால் அஜித்தினால் நல்ல படங்களைத் தரமுடியவில்லை. இந்த சைக்கிள் கேப்பில் விஜய் முன்னுக்கு வரத்தொடங்கிவிட்டார். அஜித் வெறும் தன் பேட்டிகளில் அதிகம் கதைத்து தன் இடத்தைகோட்டை விட்டதுடன் சூர்யா விக்ரம் போன்றவர்களின் போட்டியில் சற்று களைத்துத்தான் போனார். இந்த நேரத்தில் இவரின் இடத்தை விக்ரம் தட்டிக்கொண்டு போய்விட்டார். தமிழ் சினிமாவில் ஒரு ட்ரெண்ட் உண்டு எப்போதும் இரு துருவங்கள் எம்ஜிஆர் சிவாஜி, கமல் ரஜனி பின்னர் விஜய் அஜித்தாக இருந்து தற்போது அது விஜய் விக்ரமாக மாறிவிட்டது.

இந்த நேரத்தில் தான் தோல்வி நாயகர்களை வைத்து வெற்றிபடம் கொடுக்கும் இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் வரலாறு அஜித்தின் அடுத்த படை எடுப்பை காட்டியது. மூன்று வேடங்களில் அஜித் அனைவரையும் திகைக்க வைத்தா என்றுதான் சொல்லவேண்டும். சற்று பெண் தன்மை கலந்த பாத்திரத்தின் நளினம் பலராலும் பாராட்டப்பட்டது. ஆனாலும் கதையைக்கேட்காமல் அடுத்து நடித்த ஆழ்வார் சூப்பர் டூப்பர் பிளாப் ஆகிவிட்டது. அஜித்தைபொறுத்தவரை சினிமா என்பது பரமபதம் போல் ஒரு முறை ஏணியில் ஏறினாரோ என்றால் அடுத்த தடவை பெரிய ஒரு பாம்பு அவரை விழுங்கிவிடும்.

பலம் : எந்த கேரக்டர்களையும் இழுகுவாக கையாண்டு நடிப்பது. நிறைய ஹார்ட் வேர்க் செய்வது.

பலவீனம் : அதிகம் கதைப்பது. பேட்டிகளில் உணர்ச்சிவசப்படுவது.
பொது நிகழ்ச்சிகளில் பங்குபற்றாமை.

ஆரம்ப நாட்களில் ஹீராவுடன் கிசுகிசுக்கப்பட்டபோதும் ஷாலினியை திருமணம் செய்தபின் ஒரு சர்ச்சைகளிலும் சிக்கவில்லை.

இன்னொரு கமலஹாசனாக வரவேண்டிய அல்டிமேட் ஸ்ரார் அஜித் தன் தவறான படத்தெரிவுகளினால் அந்த இடத்தை அடைவதற்க்கு சற்று கடினம் தான் ஏனெனில் இவர் விக்ரம் சூர்யா என்ற இரு குதிரைகளுடன் போட்டு போட்டுத்தான் அந்த இடத்தை அடையமுடியும். பொறுத்திருந்துபார்ப்போம்.