இன்றைய நாளிதழ் ஒன்றில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் தமிழ் சினிமாவைப் புறக்கணிக்கிறார் என நடிகர் சங்கப் பொதுச் செயளாளர் ராதாரவி சீறிப்பாய்ந்திருக்கிறார்.
ரகுமான் தமிழ்த் திரையுலகைப் புறக்கணிக்கிறார் என்றும் தமிழ்ப் படத்தயாரிப்பாளர்களை இழுத்தடிக்கிறார் என்றும் ராதாரவி குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன் அவர் சினிமாவுக்கு அறிமுகமானது கவிதாலயா மூலமே தவிர ஸ்லம் டோக் மில்லியனர் மூலம் அல்ல எனவும் விசனித்துள்ளார்.
அதுமட்டுமல்ல ரகுமானிற்க்கு தமிழ்த் திரையுலகம் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்த திகதிகேட்டபோது தமக்கு திகதி தராமல் வேறு ஒரு மாநிலத்தில் பாராட்டு நடத்த சம்மதித்திருக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியின் விருது வழங்கும் விழாவை ஆஸ்கார் நாயகன் புறக்கணித்திருக்கிறார். கடந்த முறை சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வாங்கிய ரகுமான் இந்தமுறை வாழ்நாள் சாதனையாளருக்கான சிவாஜி விருதை வாங்கவரவில்லை.
எந்திரன் ராவணன் தவிர வேறை தமிழ்ப் படங்களில் ரகுமான் இதுவரை ஒப்பந்தமாகவில்லை. ஹிந்தித் திரைப்படங்களுக்கு அதிகம் இசையமைக்கும் ரகுமான் தமிழ்த் திரையுலகை புறக்கணிப்பது கவலையளிக்கிறது.
இதேவேளை பிரமாண்ட படங்களுக்கும் பிரமாண்ட இயக்குனர்கள் தயாரிப்பாளர்களுக்கு மட்டும் ரகுமான இசையமைக்கிறார் என்ற குற்றச்சாட்டும் சில காலங்களாக திரையுலகில் அடிபடுகிறது,
இசைப்புயல் மீண்டும் சொந்த மண்ணுக்குத் திரும்பவேண்டும் என்பதுதான் இசையார்வளர்களின் விருப்பம்.
தமிழ்சினிமாவைப் புறக்கணிக்கிறாரா இசைப்புயல்
எழுதியது வந்தியத்தேவன் at 8 கருத்துக் கூறியவர்கள்
ரீமிக்ஸ் இசையமைப்பது எப்படி?
கடந்த சில ஆண்டுகளாக மீழ்கலவை இசை எனப்படும் ரீமிக்ஸ் கலாச்சாரம் திரைப்படங்களிலும் ஏனையவர்களிடமும் அதிகமாக வேரூண்டிவிட்டது. கணணி இயக்கத் தெரிந்த நண்டு சிண்டுகள் கூட ரீமிக்ஸ் செய்யத் தொடங்கிவிட்டார்கள். இசையமைப்பாளர்களோ பழைய பாடல்களைக் கெடுப்பதற்காக மீண்டும் அந்தப் பாடலின் கற்பை அழிக்கின்றார்கள்.
பெரும்பாலான ரீமிக்ஸ் பாடல்கள் அந்தகால அல்லது இடைக்கால ஹிட்டான பாடலை அழிப்பதையே நோக்கமாககொண்டிருக்கின்றது. அண்மையில் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது மன்மதன் படத்தில் இடம் பெற்ற" என்னை ஆசை மைதிலியே" பாடல் ரீமிக்ஸ் இல்லை அச்சு அசல் என்றே சொன்னான். தான் பிடித்த முயலுக்கு காலே இல்லாதவர்களிடம் நான் விவாதிப்பதில்லை அப்படியே விட்டுவிட்டேன்.
ரீமிக்ஸ் செய்வது எப்படி. இதொன்றும் பெரிய விடயம் இல்லையென்று பழைய பாடல்களைக் கெடுக்கின்ற நண்பனும் சொன்னான். ஏதோ சில மென்பொருள்கள் இருந்தால் சரி அதனை விட பழைய அசல் பாடலும் வேண்டும் என்றான்.
என் பார்வையில் ரீமிக்ஸ் இசையமைப்பவர்கள் ஒருவிதமான டெம்லேட் பாவிக்கின்றார்கள். அந்த டெம்லேட் செய்முறை விளக்கம் கீழே:
1. முதலில் ரீமிக்ஸ் செய்யவேண்டுய ஒரிஜினல் பாடலை தேர்ந்தெடுங்கள். எதற்க்கும் ஆறு அல்லது ஏழு தடவை திரும்ப திரும்ப கேளுங்கள்.
2. பாடல் ஆரம்பிக்க முன்னர் வேறு ஏதாவது ஒரு பாடலின் முதல் இசையை அல்லது அதேபாடலின் இசையை சற்றே மாற்றி பாஸ்ட் மோட் அல்லது ஸ்லோ மோட்டில் இஅய்ங்கவிடுங்கள்.
3. பின்னர் ஒரிஜினல் பாடலின் சரணத்தை இதேபோல் பாஸ்ட் மோட் அல்லது ஸ்லோ மோட்டில் பாடவிடுங்கள் அல்லது வித்தியாசம் தெரியாமல் இருக்க அதே பாடலுக்கு பின்னணியில் வேறு இசைக்கருவிகளை இசைக்க விடுங்கள்.
உதாரணம் "ஆசை நூறுவகை" பாடல் கொஞ்சம் பாஸ்மோட், "காதல் வைபோகமே" அதே பாடல் பின்னணி இசை கர்ணகடூரம்.
4. பல்லவி முடிந்தபின்ன வரும் முதல் சரணத்தின் இடையில் வரும் முதல் பிஜிஎம்முக்கு வேறு ஏதாவது பாடலின் பிஜிஎம் அல்லது ராப் பாடுவதுபோல் ஏதாவது ஆங்கிலம் அல்லது வேறுமொழி வரிகளை கொஞ்சம் முக்கிமுனகிக் கொண்டு அல்லது காட்டுக்கத்தலாக இசைக்கவும்.
உதாரணம் :பொல்லாதவன் "எங்கேயும் எப்போதும்" பாடல் வேறு பிஜிஎம் ரகம் பிரேம்ஜி அமரன் இசையமைத்த ஒரு படத்தில் பாடலுக்கு "இளமை இதோ இதோ" பாடலின் பிஜிஎம் அப்படியே சுட்டுப்போட்டிருப்பார்.
5. குறிப்பு நாலில் உள்ளதுபோல் இரண்டாவது சரணத்தின் பிஜிஎம்முக்கும் செய்யவும்.
6. இறுதியாக பாடல் முடிந்தபின்னர் கூல், கமோன், ஸ்வீட்டி என ஏதாவது வசனம் சேர்த்து முடிக்கவும் பாடல் தயார்.
பின்னர் சேர்க்கவேண்டிய இசையையையும் பாடகரையும் தயார் செய்த்து நல்லதொரு ரீமிக்ஸ்சை ரசிக மஹா ஜனங்களுக்கு பரிமாறவும்.
ஒரு சில நல்ல ரீமிக்ஸ் பாடல்களும் வந்துள்ளன. ரகுமான் தொட்டால் பூமலரிலும் பாடலில் கலக்கி பொன்மகள் வந்தாலில் சொதப்பியிருப்பார்.
எழுதியது வந்தியத்தேவன் at 7 கருத்துக் கூறியவர்கள்
ராஜா, ரகுமான்,ஆஸ்கார்

இன்றைக்கு உலகத் திரைப்படவரலாற்றில் ஒரு மகத்தான நாள். ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டன. எதிர்பார்க்கப்பட்டதுபோல் இசைப்புயல் ஏஆர் ரஹுமான் தன் இரண்டு விருதுகளையும் பெற்று தமிழர்களுக்கு கெளரவம் கொடுத்துள்ளார். இன்னொரு தமிழச்சியான மாதங்கி அருள் பிரகாசமும் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டர்களில் ஒருவர். ஏனோ விருதுகிடைக்கவில்லை.
1992ல் ரோஜா திரைப்படம் மூலமாக அறிமுகமான ரகுமானைப் பற்றி பலர் பல இடங்களி எழுதியிருப்பதால் அதனைத் தொடாமல் இன்னொரு விடயத்தை ஆராயலாம் என நினைக்கின்றேன்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ரகுமானுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்தபோது பலர் புருவத்தை உயர்த்தினார்கள், காரணம் மெல்லிசை மன்னர், இசைஞானி என்ற இரண்டு இசை மேதைகளை விட்டுவிட்டு தற்போது வந்த இளைஞனுக்கு விருதா? என்ற கேள்வி அவர்களின் புருவ உயர்த்தலில் தொக்கி நின்றது.
இங்கே இன்னொரு விடயத்தையும் குறிப்பிடவேண்டும் ரகுமான் அவர்கள் நிச்சயம் அந்த விருதுக்கு தகுதிவாய்ந்தவர் இதனை எவரும் மறுக்கமாட்டார்கள். ஆனால் மூத்தோர்கள் இருக்க இளையவருக்கு கொடுத்த காரணம் என்ன? இதற்க்கு வைரமுத்துவின் உள்குத்து அரசியல் தான் காரணம் என்கிறார்கள் பலர்.
இந்த பதிவில் நான் இசைஞானியையோ அல்லது இசைப்புயலையோ இல்லை மெல்லிசை மன்னரையோ ஒப்பிடவரவில்லை. அவர் அவர் தங்கள் இசையில் உச்சம் தொட்டவர்கள்.
ஆனாலும் சிம்பொனி இசை, திருவாசகத்துக்கு இன்னொரு வடிவம், கெளவ் டூ நேம் இட் என ஆல்பம் என் சாதனை படைத்த பண்ணைபுரத் தமிழனை ஏன் இதுவரை இந்திய அரசு கெளரவிக்கவில்லை?
இன்னொரு சாராரின் வாதம் இசைஞானி இசையில் உச்சத்தை அடைந்தாலும் ரகுமான் அளவுக்கு அடக்கம் இல்லாதவர் கர்வம் பிடித்தவர். இதனைப் பல சந்தர்ப்பங்களில் பலராலும் அவதானிக்ககூடியதாக இருந்தது. அண்மையில் கூட இசைப்புயலுக்கு கோல்டன் குலோப் விருது கிடைத்த போது இசைஞானி அவரைப் பாராட்டவில்லை என சில இணையத்தளங்களில் சிண்டு முடிந்தார்கள்.
அத்துடன் கோல்டன் குலோப் விருது கிடைத்த ரகுமானுக்கு தமிழக அரசின் சார்பில் எந்தப் பாராட்டு விழாவோ அல்லது கோடம்பாக்கத்தின் பாராட்டுவிழாவோ இதுவரை எடுக்கப்படவில்லை. ஆஸ்கார் வாங்கியபின்னர் சேர்த்து எடுக்கலாம் என்ற எண்ணமோ தெரியாது.
இளையராஜாவுக்கும் எம் எஸ் விஸ்வநாதனுக்கும் ஏன் உரிய கெளரவம் கொடுக்கப்படவில்லை என்பதனை யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும்.
குட்டிக்குட்டி விழாக்களில் எல்லாம் தமிழ்மொழியில் பேச அகெளரவம் என நினைக்கும் நடிகர் நடிகைகள் மத்தியில் ஆஸ்கார் என்ற உயரிய விழாவில் தமிழிலும் ஒருவார்த்தை பேசி தலை நிமிர வைத்த தமிழன் அல்லா ரக்கா ரகுமானுக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.
டிஸ்கி : இந்த நேரத்தில் ஏன் இந்தப் பதிவு எனக்கேட்பவர்கள் குசும்பனின் பதிவை ஒரு முறை சென்று பார்க்கவும்.
எழுதியது வந்தியத்தேவன் at 11 கருத்துக் கூறியவர்கள்
