Showing posts with label மொக்கை. Show all posts
Showing posts with label மொக்கை. Show all posts

அதிரடி ட்விட்டர்ஸ்


கமல் : நிறுத்தனும்… நிறுத்தனும்… எல்லாத்தையும் நிறுத்தனும்.

சூர்யா : எதை சார் நிறுத்தனும்? எங்க கொண்டு போய் நிறுத்தனும்?

கமல் : நான் காரைச் சொல்லல. ட்ரைலரைச் சொன்னேன். விஸ்வரூபம் ட்ரைலர் வெளியாகி 100 நாள் வெற்றிவிழா என்று நக்கலடிக்கிறத நிறுத்தனும். படத்துக்கு பெயர் வைச்சவுடனே இது அந்தப் படத்தின் காப்பி, இது இந்தப் படத்தின் காப்பி என்று ஆராய்ச்சி செய்றத நிறுத்தனும்.

விக்ரம் : எஸ், யூ ஆர் ரைட் சார். நான் கஸ்டப்பட்டு நடிச்ச தெய்வத்திருமகளை, 'அங்கிள் சாம்', 'ஆண்டி மாம்' என்று கத விடுறாங்க.

விஜய் : ..ண்ணா….! யார்ண்ணா இத எல்லாம் செய்றது?

சூர்யா: அடப்பாவி! நீ நெட் பக்கமே வாறதில்லையா?

விஜய்: எனக்குத் தெரிஞ்சது, மீன் பிடிக்கிற நெட்தான் சரவணா!

சிம்பு : அண்ணா! மீன், நெட் எல்லாம் தடை செஞ்சாச்சுண்ணா.

சூர்யா : இன்டெர்னெட் கனெக்சனும், பிசியும் இருந்தாப் போதும், ட்விட்டர், பேஸ்புக் பப்ளாக் என்று நம்மைக் கலாய்க்க ஆரம்பிக்கிறாங்க. இப்ப அவங்களாலதான் நமக்கு பெரிய தலையிடி.

விஜய் : ஓ….! அவங்களா! யூ மீன் ட்விட்டர்ஸ், புளொக்கர்ஸ். ஐ நோ! ஐ நோ! அவங்க என்னோட எல்லாப் படத்தையும் கிழிச்சுத் தொங்கவிட்டுத் தோரணம் கட்றாங்களே!. அதில ஒருத்தன் படத்தோட வசனத்தை வரிக்கு வரி மாறாமல் எழுதுறான்.

அஜித் : நான் பேஸ்மாட்டேன்!

சிம்பு : வாங்கோ நடைராஜா.

அஜித் : நான் எவ்வளவு ரிஸ்க் எடுத்து நடிச்சாலும். 'அஜித் நடையைக் கொஞ்சம் குறைக்கலாம்' என்று கடைசி வரியில பஞ்ச் அடிப்பாங்க. ஷாலீனி வாசிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறாள்.

கமல் : இவங்கள நிறுத்த நாம என்ன செய்யலாம். அத சொல்லுங்க?

சிம்பு: ஒவ்வொருவருக்கும் கையில கவர் கொடுத்துடுவோமா?

விஜய் : ஒருத்தனா, ரெண்டு பேரா கவர் கொடுக்கிறதுக்கு. அவங்கதான் லட்சக்கணக்கில் இருக்காங்களே! எப்படிப்பா கவர் பண்றது?

விஜய்காந்த் : அங்…! பேஸ்புக்கில் 4 கோடியே 20 லட்சத்து 20 ஆயிரத்து 38, ட்விட்டரில் 2 கோடியே 80 லட்சத்து 10 ஆயிரத்து 112, ப்ளாக்கில் 3 லட்சத்து முன்னூற்று முப்பது. இதில் இந்தியத் தமிழர்கள்…….

தனுஷ் : தலைவா! போதும் தலைவா! நீங்கள் இன்னும் ரமணா எஃபெக்ட்டிலதான் இருக்கீங்க. முருகதாஸ் சார் இப்போ துப்பாக்கி தூக்கப் போய்ட்டார்.

விஜய் : யா..! யா..! "சாதாரணத் துப்பாக்கியால, ஒருவனை ஒரு தடவைதான் சுடலாம். ஆனால், என் துப்பாக்கியால, தியேட்டர்ல இருக்கிற எல்லாரையும் அட் எ டைம் சுட்றலாம்" என்று எஸ்எம்எஸ் அனுப்புறாங்க.

சூர்யா : இத எல்லாம் நிறுத்த, நாமளும் சமூக வலைத்தளங்கள்ல இணையிறதுதான் ஒரே வழி.

ஜீவா : மச்சி! நான் எப்பவோ தொடங்கிட்டேன் மச்சி. ஆனால இவங்கள் ஒருத்தனும் என்னையக் கலாய்க்கிறதே இல்ல.

ஆர்யா : அவங்க எப்பிடி உன்னக் கலாய்ப்பாங்க? 'ஒரு குவார்ட்டர் சொல்லு மச்சி! என்று நீயே அவங்களோட மிங்கில் ஆயிடுறாய்.

அஜித்: ட்விட்டரில் இணையிறதுக்கு என்ன செய்யனும் ?

ஜீவா : அஜித் சார்! உங்களுக்குத் தமிழ் தெரியுமா?அஜித் : ஓ! நல்லாத் தெரியுமே!

ஜீவா : அப்போ, நீங்கள் இங்லீஷ், ஹிந்திலதான் ட்விட்ட வேண்டூம்.

அஜித் : ஏன்?

ஜீவா : அப்படீன்னாத்தான் நீங்க அண்டார்ட்டிகாவில இருக்கிற அல்பி, ஆபிரிக்காவில இருக்கிற குக், மொசப்பதோமியாவில இருக்கிற கெயில்
இவங்களோடவெல்லாம் ஃபொலோயேர்ஸ் என்று பேசிக் கொள்ளலாம்.

விஜய் : ராஜதந்திரங்கள் எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கிறே நீ.

கமல்: இதை நான் வண்மையாகக் கண்டிக்கின்றேன். ஒரு வீட்டில எத்தன ஜன்னல்கள் இருந்தாலும், வாசல் கதவுதான் முக்கியம். அதப்போலதான் எத்தன மொழிகள் தெரிஞ்சிருந்தாலும் தாய் மொழிய மறக்கக்கூடாது.

அஜித் : சூப்பர் பஞ்ச் சார்.

விக்ரம் : அதைவிட நமக்கு ஜிங்சாக் அடிக்கும் 4 பேர நாம கூடவே வச்சிருக்கவேணும்.

ஜீவா : அவங்க காவேரித் தண்ணி குடிச்சிருந்தால், இன்னும் பொருத்தமாக இருக்கும்.

கமல் : மீன் டைம், இப்போ ஹாட் என்ன விசயம் என்று பார்த்து அதப் பத்தியும் ஒருவரி சொல்லிடனும், இடையிடையே பெண்ணடிமை, ஈழம், டொசோ, தமிழன், கிரிக்கெட், இறையாண்மை எல்லாம் சேர்த்துக்கணும்.

சிம்பு : யாரையாவது போகிற போக்கில் வம்புக்கு இழுத்தா இன்னும் ஸ்பெசலா இருக்கும்.

ஜீவா : ஆளைவிடு சாமி. கேஸ் போட்டுடுங்கள்.

அஜித் : என்னய நடைராஜா, வோக்கிங் கிங், கோட்டு கழட்டாதவன் என்று எவன் இனிமேல் சொன்னாலும், அவன் மேல் சட்டம் பாயும்.

விஜய்: என்னை எப்படி நக்கலடிச்சாலும் தாங்குவேன் ஆனா எனக்கு நடிக்கத் தெரியாது என்று கலாய்க்கிறத்தான் தாங்க முடியல. அவங்க மேல் சகல இபிகோவிலும் வழக்கு போடனும்.

சூர்யா : அடப்பாவி! எப்படிடா இப்படி? வெட்கமே இல்லாம கதைக்கிறாய், நீ நடிச்ச சாரி வந்துபோன சுறாவை ஜட்ஜ் பார்த்தால், அவரே தற்கொலை செய்திடுவார்.

விஜய் : அவ்வ்வ்…! சொந்தச் செலவில் சூனியம் வச்சிட்டனோ?

கமல் : கலைஞர் ஆட்சி என்றால், ஃபேஸ்புக் தலைவருக்கு ஒரு லைக் என பாராட்டுவிழா நடத்தி நம்ம பிரச்சனையச் சொல்லலாம்.

விஜய் : சார்! அப்பாவை அனுப்பி அம்மாவிடம் கோரிக்கை வைப்போமா?

விக்ரம் : யூ மீன் சோபா ஆண்டி?

விஜய் : இல்லங்ண்ணா முதல்வர் அம்மா.

விக்ரம் : அவங்ககிட்ட என்னால குனிஞ்சு நிமிர தொப்பை விடாது. நான் வரல.
இவர்கள் பேஎசிக்கொண்டிருந்த போது, அங்கே திடீரென ஒரு குரல் கேட்கிறது.

குரல்: ட்விட்டர் எனக்கு சுவெட்டர். ஃபேஸ்புக் என் பாஸ்புக். வலை என்னோட தலை.

விஜய் டீ.ராஜேந்தர் உள்ளே நுழைய எல்லோரும் ஜேர்க் ஆகிறார்கள்.
டீ ஆர் : நண்பர்களே! யூட்யூப்பிலிருந்து வால்ட்யூப் வரை என்னை கிண்டலடிக்கிறார்கள். இத எல்லாம் நான் பொறுத்துக் கொண்டது போல நீங்களும் பொறுக்க வேண்டும். ஏய் டண்டனக்கா டணக்கு டக்கா.


அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்களிலும், வலைப்பூக்களிலும் பிரபலங்களின் மீதான நக்கல் நையாண்டிகள் அதிகரித்திருப்பதால் நம்ம சில கதாநாயகர்கள் இதனை எப்படி எதிர்கொள்வது என தமக்குள் பேசிக்கொண்டிருந்ததை ஒட்டுக்கேட்டவை.

சுவாமி வந்தியானந்தாவின் தத்துவ மாலை

சுவாமி வந்தியானாந்தா சுவாமி விவேகானந்தர் போல் வரவேண்டியவர் கால நேர சூழ்நிலைகள் காரணமாக தன் திறமைக்கு ஏற்றது போல ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் ஆசிரமம் நடத்திக்கொண்டிருப்பவர். அதனால் சில பல சீடர்களையும் ஓரிரு குருவை மிஞ்சிய சீடர்களையும் வைத்திருப்பவர். அவர் இடையிடையே உதித்த தத்துவ முத்துக்களை அவரின் அனுமதியுடன் பொறுக்கி இங்கே தத்துவ மாலையாக தந்திருக்கின்றேன். இங்கேயுள்ள கருத்துக்களுக்கு சுவாமி வந்தியானந்தாவே பொறுப்பு.

ஒரு பெண் எம்மைக் காதலிப்பது முக்கியமல்ல நாம் எத்தனை பெண்களைக் காதலித்தோம் என்பதுதான் முக்கியம்

ஆண்கள் தங்களை விட வயதில் குறைந்த பெண்களை மணம் முடிப்பதில் உள்ள சூத்திரம் விளங்கவில்லை #சந்தேகம்

கவியரசு, கவிப்பேரரசு, கவிச்சக்கரவர்த்தி கவிராஜன் எல்லாம் இருக்கின்றார்கள் ஆனால் ஏன் கவி இளவரசன் மட்டும் இன்னும் இல்லை #சந்தேகம்

ஆவின் பால் குடிப்பவன் எல்லாம் அமலா பாலைத் தேடுறான்

மதுவைப் போதைக்காக குடிக்காமல் மேசைக் கலாச்சாரத்துக்காக (Table Manners ) குடிப்பவர்கள் குடிகாரர்கள் அல்ல,

தமிழ்சினிமாவின் கனவுக்கன்னிகள் ஏன் எப்போதும் பிறமொழிக்கன்னிகளாகவே இருக்கின்றார்கள் #சந்தேகம்

ஒரு பெண்ணுக்கு புகுந்தவீடு பிறந்த வீடு என இரண்டு இருக்கும்போது ஏன் ஆணுக்கு சின்ன வீடு பெரிய வீடு இருக்க கூடாது. #சந்தேகம்

உணவு உடை உறையுள் போய் இனி பேஸ்புக் ட்விட்டர் கூகுள்+ என மாறும் #அத்தியாவசியம்

நல்லவனாக இருப்பவர்களை ரொம்ப நல்லவனாக மாற்றும் இந்த சமூகத்தை என்ன செய்யலாம்

சன் டீவியும் கலைஞர் டீவியும் முடக்கப்பட்டால் ஆண்கள் சந்தோஷப்படுவார்கள் பெண்கள் தற்கொலை செய்வார்கள் #மெஹா சீரியல்

Google+ புதுப் பொண்டாட்டி மாதிரி ஆரம்பத்தில் எல்லாமே கொஞ்சம் கஸ்டமாகத் தான் இருக்கும் But Facebook காதலிபோல எல்லாமே பழகிவிட்டது #அவதானம்

குருவே பட்டும் தெளியாமல் இருக்கும் போது சிஷ்யன் மட்டும் படாமல் எப்படித் தெளிவது (என் முதன்மைச் சிஷ்யனுக்கு கூறியது)

அட்டமத்துச்சனியும் ஏழரைச்சனியும் ஜோதிடத்தில் ஒருபோதும் ஒன்றாக வருவதில்லை தமிழ் ரசிகர்களுக்கு மட்டும் வருது #வேலாயுதம் மங்காத்தா ரிலீஸ்

ஐஸின் குழந்தையும் ஐஸ் பிறந்த அதே நவம்பரில் தானாம் டெலிவரி #அழகானவர்கள் அறிவானவர்கள் நவம்பரில் தான் பிறப்பார்கள்.

வங்கியில் பணம் மட்டுமல்ல காதலையும் வைப்புச் செய்யலாம். (விரைவில் இல்லறத்தில் இணையவிருக்கும் நண்பர் ஒருவருக்கு அருளியவாக்கு)

குக்கைத் திணறடித்த குஞ்சு

"நோ மணி நோ ஹனி" என என் செல் என் அதிகாலை இனிமையான தூக்கத்தை கெடுத்தது, யார்டா இந்த நேரத்திலை என நம்பரைப் பார்த்தால் 009477... என ஒரு இலங்கை நம்பரைக் காட்டியது.

தூக்க கலக்கத்துடன் "ஹலோ"

"ஹாய் மாம்ஸ் நான் தான் பவன்"

"சொல்றா குஞ்சு என்னடா விடியக்காலையிலை "

"மாம்ஸ் இங்கே விடிஞ்சுடுத்து"

"அடப்பாவி காலையிலையே உன் கடியா என்ன விசயம்டா"

"மாம்ஸ் உங்கே ஒரு கிழமைக்கு கிரிக்கெட் பயிற்சி எடுக்க என்னை அனுப்புறாங்கள்"

"டேய் உலகச் சாம்பியன் எங்கடை பக்கத்து நாடு, நாங்களோ ரன்னர்ஸ் இவங்களோ அயர்லாந்தட்டை அடிவாங்கியவங்கள், இவங்களெட்டை என்ன பயிற்சியடா"

"இல்லை மாம்ஸ் இது ஜஸ்ட் போர் எக்ஸ்சேஞ் ட்ரெயினிங்"

பவனின் ஆங்கிலத்திலையே பொடியன் ரெடியாகிவிட்டான் என்பது தெரிந்துவிட்டது.

"சரிடா எப்ப வாறாய்? பிளைட் விபரம் எல்லாத்தையும் மெயில் பண்ணு நான் உன்னை பிக்கப் பண்ண வாறன்"

"எல்லாம் உங்களுக்கு இரவே மெயில் பண்ணிட்டன், இப்போ சுபாங்கன் அண்ணாவுடன் கட்டுநாயக்காவில் நிற்கின்றேன்"

"ஓக்கே மாம்ஸ் சீ யூ அட் ஹீத்ரூ"

மெயிலைத் திறந்து பார்த்தால் பவனின் கல்வி நிறுவனத்தில் சிறந்த பந்துவீச்சாளரான இவனை லோர்ட்ஸில் நடக்கும் 5 நாள் கோச்சிங் கேம்பில் கலந்துகொள்ள அனுப்பிய அழைப்பிதழும் பிளைட் விபரங்களும் அனுப்பியிருந்தான்.


நானும் என்னுடைய பகல் நேர ஆணி பிடுங்கல்களை முடித்துவிட்டு பிக்காடிலி லைனை அல்பேர்ட்டனில் பிடிச்சு ஒருமாதிரி ஹீத்ரு டெர்மினல் 4 க்கு சென்றுவிட்டேன்.

ஒரு 8 மணியளவில் தலைமுடி எல்லாம் டை அடித்து மாலிங்காவையும் ஸ்ரீசாந்தையும் மிக்ஸ் பண்ணிய சிகை அலங்காரத்தில் ஓரேஞ்ச் கலர் கூலிங்கிளாசுடன் டீசல் டெனிமுடன் அசல் கிரிக்கெட்டர் போலவே "ஹாய் மாம்ஸ்" என்றபடி எனக்கு கை தந்தான்.

பவனுடன் பயணக் கதைகளைக் கேட்டபடி நிற்க ஒரு அழகான வெள்ளைக்கார பெண் பவனுக்கு அருகில் வந்து "OK Bavan have a nice Holiday, pls drop me a mail and catch u later bye" என்ற படி பவனைக் கட்டிப்பிடித்து கன்னத்துடன் கன்னம் வைத்து ஒரு மெல்லிய முத்தம் கொடுத்தபடி "Bye Young man" என எனக்கும் ஒரு பாய் சொல்லிவிட்டு மின்னல் என மறைந்துவிட்டாள்.

"டேய் யாரடா இவள் எங்கே பிடிச்சாய்?"

"ஹிஹிஹி இவள் மலேயில் ட்ரான்சிட்டில் என் பக்கத்து சீட்டில் ஏறியவள் என்னை ஸ்ரீலங்கன் கிரிக்கெட்டர் என நினைத்து ஒரே கிரிக்கெட் கதைதான், நானும் யா யா எனச் சொல்லி பிக்கப் பண்ணிட்டேன்"

"என்னடா?"

"இல்லை மாம்ஸ் உவங்கடை இங்கிலீசைத் தான் பிக்கப் பண்ணிட்டேன் என்றேன், அவளின் பெயர் சாரா எட்வேர்ட்ஸ் பேர்மிங்ஹாமில் தானாம் இருக்கின்றாள் ஒரு நாளைக்கு தன்னுடன் டின்னர் சாப்பிட என்னை இன்வைட் பண்ணினாள் "

ஏற்கனவே அவள் பவனுக்கு முத்தமிட்டு என்னைக் கடுப்படித்துவிட்டாள் இதுக்குள்ளை அவளுடன் டின்னரோ என்ற ஆத்திரத்தில் "மவனே லேட்டாகுது வா" என்றபடி அவனின் லக்கேஜையும் இழுத்துக்கொண்டு வெளியே வந்தோம்.

என் ரூமில் லக்கேஜின் சிப்பைத் திறந்து எனக்கு நண்பர்கள் கொடுத்துவிட்ட சாமான்களை தந்தான்.


"ஆதிரை அண்ணாவுக்கு நெல்லியடி கொமர்ஷியல் வங்கியில் முக்கிய அலுவல் இருப்பதால் அவர் யாழ் சென்றுவிட்டார் அதனால் அவர் தன் சார்பாக இந்த நீலக் கலர் ரீசேர்ட்டை உங்களுக்கு கொடுக்கச் சொன்னார், அடுத்தமுறை நான் வரும் போது நளபாகம் ஸ்பெசல் வாய்ப்பான் தந்துவிடுவதாகச் சொன்னார்".

"ம்ம்"

"லோஷன் அண்ணா கொஞ்சம் கர்னாடக சங்கீத சீடிக்கள் தந்துவிட்டவர்,அந்த சீடித் தொகுப்பில் அவருக்குப் பிடித்த நித்யஸ்ரீயின் கீரவாணி வர்ணமும் இருக்காம், உங்களையும் ஒருக்கால் கேட்கட்டாம். உவன் கோபி தான் வாங்கி வைத்த பருத்தித்துறை வடையை பசிக்குது என்று எயார்போட்டுக்கு வாறவழியிலையே சாப்பிட்டுவிட்டான். வதீஸ் அண்ணா அரசியல் கூட்டம் என்று மன்னாருக்கோ மட்டக்களப்புக்கோ போய்விட்டார் சந்திக்க கிடைக்கவில்லை, மற்றது எல்லாம் அனுவும் சுபாங்கன் அண்ணாவும் தந்தவை தான் என்றபடி முறுக்கு, ஊறுகாய், என ஊர்ச் சாப்பாடுகளை எடுத்து வெளியே வைத்தான். நீருஜா அக்கா தனக்கு பிடிச்ச சாமன் உங்கே தானாம் இருக்கு வரேக்கை வாங்கியரச் சொன்னவர்.

"ஓகேடா விடிய உனக்கு பிரெக்டிக்ஸ் இருக்கு நேரத்துக்கு படு"

அடுத்த நாள் காலையே லோர்ட்சில் பயிற்சிக்கு அவனை அழைத்துக்கொண்டு போனால் அங்கே இங்கிலாந்து டீமும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

"அடப்பாவி உனக்கு நல்ல அதிர்ஷ்டம்டா இண்டைக்கு"

"எனக்கு மலேயிலையே அதிர்ஷ்டம் தொடங்கிவிட்டது" பவன்

சில நிமிடங்களிலையே பயிற்சி தொடங்கியது, பவனின் பந்துவீச்சை இங்கிலாந்து வீரர்கள் அதிசயமாகப் பார்த்தார்கள். அதிவேகமாக ஓடிவந்து மெதுவாக ஸ்பின் போல வீசியதைப் பார்த்து அன்ரு பிளவர் தொடக்கம் அன்ரு ஸ்ரோஸ் வரை ஸ்தம்பித்துப்போனார்கள்.

இங்கிலாந்தின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜிம்மி அண்டர்சனோ பவனின் பந்துவீச்சில் மயங்கி பவனிடம் அவன் வீசும் பந்துவீச்சு என்ன வகை எனக் கேட்டார். பவனோ உடனடியாகவே இதன் பெயர் "பப்சர்" எனக் கப்சா விட்டான். "பப்சர் மீன் மிக்சர் ஒவ் ஸ்பின் அன்ட் சீம் சோ இஸ்ட் கோல்ட் பப்சர்" என விளக்கம் கொடுத்ததை கேட்டு இங்கிலாந்து வீரர்கள் ஸ்டாண்டிங் ஒவேசன் கொடுத்தார்கள்.

இந்த அலும்புகளைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு சனியும் வியாழனும் டவுள் டெக்கர் போட்டு பவனின் தலையில் அமர்ந்துகொண்டதுபோல தெரிந்தது. பின்னை இவன் செய்வது கப்சா என்றால் என்னையும் சேர்த்து அடுத்த பிளைட்டில் டிப்போர்ட் செய்துவிடுவார்கள்.

ஆனால் பவனின் முகராசியோ என்னவோ புரோட் தொடக்கம் பீட்டர்சன் வரை பவனின் தோளில் கைபோட்டு அன்னியோன்னமாகிவிட்டார்கள்.

சில நிமிடங்களில் 20 ஓவர்கள் கொண்ட ஒரு பயிற்சிப்போட்டி இங்கிலாந்து அணிக்கும் பயிற்சிக்காக வந்த ஏனைய நாட்டு மாணவர்கள் அணிக்கும் தொடங்கியது,

இங்கிலாந்தின் ஒருநாள் அணித்தலைவர் அலிஸ்டர் குக் ஓப்பனராக ஸ்ரோசுடன் களமிறங்க மறுபக்கமோ நம்ம பவன் பந்துவீச நேர்சரி என்ட் பவுண்டரி லைனில் இருந்து ஓடிவரத் தயாராக நின்றான்.

பவனின் பந்துவீச்சுகள் குக்கை திணறடித்தன. பவனின் வேகத்தைப் பார்த்து பந்து புல்டோசாக வரப்போகுது என குக் பேட்டை ஓங்க பந்தோ லெப்டில் பவுன்ஸ் பண்ணி யூடேர்ன் எடுத்து குக்கை குழப்பியது. கடைசியாக பவனின் ஆறாவது பந்து நேராகவே குக்கின் விக்கெட்டை தகர்க்க குக் பேட்டையும் களத்தே போட்டு விட்டு வெறும் கையோடு பவிலியன் திரும்பினார்.

பவனின் விளையாட்டைப் பார்க்கும் போது அடுத்த ஐபிஎல்லுக்கு ப்ரீத்தி சிந்தாவோ ஷில்பா ஷெட்டியோ பவனை ஏலத்துக்கு எடுக்கும் அபாயம் என் மனசுக்குள் மணி அடித்தது.

பயிற்சி முடிந்ததும் பவனும் நானும் வீடு திரும்பும்போது

" மாம்ஸ் எசெக்ஸ், சசெக்ஸ், மிடில்செக்ஸ் மனேஜர்கள் தங்கள் அணிக்கு விளையாடும் படி கேட்டார்கள் ஆனால் உந்தப் பெயர் உள்ள டீம்களில் விளையாட மது அண்ணா தான் பொருத்தமானவர் என்பதால் நான் மாட்டேன் என்றுவிட்டேன், சொர்க்கமே என்றாலும் கூரேப் பார்க் போல வருமா ?"

தீடிரென்று பவன் என் காலில் விழுவது போல் இருந்தது
"டேய் ஏன்டா இதெல்லாம் நீ என் நண்பேன்டா எனச் சொல்ல "
"மாம்ஸ் நான் கழண்ட என் லேசைக் கட்டுறன் " வழக்கம் போல என்னைக் கலாய்த்தான்.

இரவு படுக்கும் போது
"மாம்ஸ் எனக்கு இன்னொரு ஆசை இருக்கு நிறைவேற்றுவியளா?"
"என்னாடா ?"
"மரியா ஷரபோவாவுடன் விம்பிள்டனில் சென்டர் கோர்ட்டில் கலப்பு இரட்டையரில் விளையாடவேண்டும்"
எனக்கு வந்த கோபத்தில் காலால் உதைக்க கால் சுவருடன் மோதியவுடன் தான் தெரிந்தது நான் கண்டது கனவு என்று.

காலையில் எழுந்து பார்க்கின்றேன் பவனின் பேஸ்புக்கில்

என்ற மெசேஜ் இருக்கின்றது.

டிஸ்கி: இந்தப் பதிவுக்கு ஆக இருந்தது கிரேசி மோகனின் ஒரு கதை. அந்தக் கதையும் அதனுடன் எனக்கு நடந்த சம்பவமும் விரைவில் பதிவாக வரும்(எப்போ இன்னும் 2 மாதத்தின் பின்னரா என ஆதிரை கேட்பது போல பிரமை).

கன்னியின் செல்வன் - வரலாற்று மொக்கை

முற்குறிப்பு : இது ஒரு மொக்கைப் பதிவு சீரியசான பதிவு வாசிப்பவர்கள், என்னுடைய அடுத்த பதிவு வரை காத்திருக்கவும். இல்லை மொக்கையை வாசிக்கத்தான் போறீர்கள் என்றால் பின்விளைவுகளுக்கு சங்கம் பொறுப்பல்ல.

அமரர் கல்கியின் ஆவி மணிரத்தினத்தை மன்னித்ததுபோல் என்னையும் மன்னிக்கட்டும். இந்த விடயத்துக்கு எழுத்துவடிவம் கொடுக்க ஊக்கவும் ஆக்கவும் சில தரவுகளை ட்விட்டியும் உதவிய முன்னாள் பதிவர் இன்னாள் ட்விட்டர் டொன்லீக்கு நன்றிகள்.

மிகவும் அழகான ஒரு பெளர்ணமி பின்னேரம் வெள்ளவத்தை கடற்கரையில் சில பதிவர்கள் கானா பிரபா தலைமையில் மந்திராலோஷனை நடத்திகொண்டிருக்கின்றார்கள். கோபியும், வதீஸும் நடக்கும் விடயங்களை ஆலோசனைக் கூட்டத்திற்க்கு வராதவர்களுக்கு ட்விட்டரிலும் பேஸ்புக்கிலும் உடனக்குடன் அப்டேட் செய்துகொண்டிருந்தார்கள்.

கானா : வணக்கம் நண்பர்களே, எங்கடை சிங்கப்பூர் மாதவனின் கடும் தொந்தரவினால் இந்த மந்திராலோஷனைக்கூட்டத்தை நிகழ்த்தவேண்டியிருக்கின்றது. நாம் ஏன் கூடியிருக்கின்றோம் என்பதை சிங்கை மாதவன் டொன்லீயே சொல்லுவார்.

டொன்லீ : இங்கே இருப்பவர்களில் எத்தனைபேர் பொன்னியின் செல்வன் வாசித்திருக்கின்றீர்கள் ?

பெரும்பாலனவர்கள் கையை உடனேயே தூக்கினார்கள், பவன் மட்டும் உயர்த்தாமல் பக்கத்தில் இருந்த சுபாங்கிடம் "அது ரவிகிருஷ்ணா நடிச்ச படம் தானா?" எனக்கேட்டு திட்டுவாங்கிக்கொண்டிருந்தான்.

டொன்லீ : விரைவில் அந்தக் கதையை மணிரத்தினம் படமாக எடுக்கபோகின்றார், அவருக்கு முன்னால் நாங்கள் பதிவர்கள் இதனை ஏன் படமாக்க முடியாது, மணிரத்தினத்தையே மன்னித்த கல்கியின் ஆவி எம்மைப்போன்ற சிறுவர்களையும் மன்னிக்கும் தானே. தலைப்பு மட்டும் கன்னியின் செல்வன்

லோஷன் : நல்ல முயற்சி ஆனால் இதற்க்கு யார் செலவு செய்வது?

வந்தி : அங்கிள் ஒரு பிரபல நிறுவனம் ஸ்பொன்சர் செய்கின்றார்களாம்

லோஷன் : ஓஓஓ அப்படியென்டால் நான் ரெடி.



கானா : சரி பொடியள் யார் யாருக்கு எந்த பாத்திரம் என்பதை இனித்தான் முடிவு செய்யவேண்டும், உவர் வந்தியர் வந்தியத்தேவன் என்ற பெயரையே வைத்திருப்பதால் அவரே வந்தியதேவனாக நடிக்கட்டும்.

டொன்லீ : அருள்மொழிவர்மனாக‌ லோஷனைப் போடலாம் ஆனால் அவரின் உடல்வாகு அதிகம் என்பதால் அவர் சில நாட்களில் தன்னுடம்பைக் குறைத்தால் அருண்மொழிவர்மன் இல்லையென்றால் இலங்கை தண்டநாயக்கர்களில் ஒருவராகத் தான் நடிக்கவேண்டும்.

வந்தி : பெரிய பழுவேட்டரையராக கானா தான் சரியான ஆள், சின்னப் பழுவேட்டரையராக எங்கடை தலை நிரூஜாவைப் போடவேண்டியதுதான்.

கானா : யோவ் மாம்ஸ் நான் ஒரு அப்பாவி என்னைப்போய் வில்லனாக்குகின்றீர்களே?

வந்தி : பெரியப்பு கதையின் நாயகியே நந்தினி தான், நீங்கள் தான் நந்தினியின் கணவர், நந்தினியாக வித்யாபாலனை டொன்லீ கேட்கப்போறாராம்,

வந்தி சொல்லி முடிக்கமுன்னரே கானா விழுந்தடித்து

கானா : வித்தியா நந்தினி என்றால் நான் பெரிய, சின்ன என இரண்டு பழுவேட்டரையராகவும் டவுள் ஆக்டிங்கே செய்கின்றேன்.

லோஷன் : ஐயா நீங்கள் கமல் ரசிகராக இருக்கலாம் அதற்காக எல்லாப் பாத்திரமும் உங்களுக்குத் தரேலாது, சின்ன பழுவேட்டரையருக்கு நிரூஜா தான் பொருத்தம்,

ஆதிரை : ஓமோம் சின்னப் பழுவேட்டரையர் தான் பழையாறை அரண்மைனையின் தலைமைக் காவலர், நம்ம நிரூஜாவும் நிஜவாழ்க்கையில் காவலன் தானே சரியான பொருத்தமாக இருக்கும்.

நிரூஜா ; கோதாரியில் போறவங்கள் இனித் தொடங்கிவிட்டார்கள்.

வந்தி : ஆழ்வார்க்கடியனாக கோபிதான் சரி, கோபிக்குத் தான் பெரிய பெரிய தொந்தியும் உடம்பும்.

கோபி : அடக்கடவுளே நாடகத்திலும் எனக்குச் சோடி இல்லையா?

டொன்லீ : சேந்தன் அமுதனாக நடிப்பவர் கொஞ்சம் விடலையாக இருக்கவேண்டும் பவன் தான் சரி என நினைக்கின்றேன்.

அனுதினன் : நானும் சின்னப் பொடியன் தான்.

வதீஸ் : ஓமோம் பத்து வருடத்திக்கு முன்னர் நீயும் பொடிதான்.

தன்னுடைய ட்விட்டரில் நடக்கின்றவையை அப்டேட் செய்துகொண்டிருந்த கோபி திடீரென

கோபி : குரு எங்கடை சேது ஐயா தான் சுந்தரச்சோழனுக்கு வாறாராம். ஆனால் கோப்பெரும் தேவியாக சரோஜாதேவிதான் வேணுமாம்.

வந்தி ; அவர் பொருத்தமானவர் தான் ஆனால் நடிகைகளை பிறகு பார்ப்போம்.

கானா : அமைச்சர் அநிருத்தராக மருதமூரான் தான் சரி, அவர் தான் அடிக்கடி நடுநிலைமை பற்றி எல்லாம் கதைக்கின்றவர்.

மருதமூரான் : சரி சரி என்ரை குணத்திற்க்கு ஏற்ற பாத்திரம்.

வந்தி : இனி ஆதித்த கரிகாலன், மதுராந்தகர், கந்தமாறன், பார்த்திபேந்திரன் தான் மிச்சம்.

கானா : சுபாங்கன் மதுராந்தகராக நடிக்கலாம், ஆதிரையை ஆதித்த கரிகாலனாக்கலாம், கந்தமாறனாக வதீஸும் பார்த்திபேந்திரனாக மதுவும் சரியாக இருக்கும்.

மது : அண்ணே பார்த்திபேந்திரனுக்கு என ஏதாவது இசம் இருக்கா?

லோஷன் : ஒரு இசமும் இல்லை அவர் சும்மா ரசம் மட்டும் தான் குடிப்பார். விட்டால் இவன் எஸ்,ஜே.சூர்யா தான் படத்தை இயக்கவேண்டும் என்பான்.

கானா : சரியப்பா இனி முக்கிய விஷயத்துக்கு வாங்கோ, கதாநாயகிகள் யார் யார்? எவரை டொன்லீ ஒப்பந்தம் செய்யப்போறார்?

டொன்லீ ; குஞ்சியப்பு உங்களுக்கு வித்தியா பாலன் அதாவது நந்தினியா வித்தியா பாலன்.

கானா : உது காணும் எனக்கு. என்ன வந்தியரின் காதுக்குள்ளை புகையது போல.

வந்தி : பெரியப்புக்கு கதை தெரியாதுபோல நந்தினி மேலும் வந்தியதேவனுக்கு ஒரு லவ் வருது அந்த நேரம் நானும் வித்தியா பாலனும் டூயட் பாடுவதுபோல ஒரு காட்சி வைக்க எங்கடை டொன்னுக்குத் தெரியாதோ.

லோஷன் : ஹன்சிகா மேத்வானி வானதியாக நடித்தால் என் கால்சீட் நாலு மாதத்துக்கு தருவேன் இல்லையென்றால் ஐபிஎல், ஐசிஎல் என நான் பாட்டுக்கு கிரிக்கெட் தம்பியாகிவிடுவேன்.

வந்தி : குந்தவைக்கு பொருத்தமானவர் என்றால் தமன்னா தான்.

ஆதிரை : உந்தாளுக்கு அந்த வெள்ளைக் கரப்பானை விட்டால் வேறை ஒன்றும் கண்ணுக்குத் தெரிவதில்லை. என்ரை விசாப் பிள்ளையாரே உவருக்கு தமன்னா கிடைக்ககூடாது, உனக்கு நான் 100 தேங்காய் அடிச்சு சிரட்டைகளை வந்திக்கே கொடுக்கின்றேன்.

கோபி ; சித்தப்பூ சும்மா குருவை நக்கலடியாதேங்கோ, ரசனை ஆளுக்கால் மாறுபடும்தானே.

லோஷன் : பூங்குழலியாக புதுமுகமாக பூனம் பாண்டேயே ஏன் போடாக்கூடாது.

டொன்லீ : ஷப்பா இந்த மனிசன் மும்பை பைனல் பார்த்ததில் இருந்து பூனம் பைத்தியமாகவே மாறிவிட்டது.

நிரூஜா : ஓமோம் மேட்ச் முடிஞ்ச பின்னரும் உவர் பூனம் ஓடுமென நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு பார்த்தவராம்.

லோஷன் ; யோவ் அடங்குங்கோ பூங்குழலி கட்டுமரம் ஓட்டுகின்றவர் பூனத்தை போட்டால் தான் பொருத்தமாக இருக்கும் அடுத்தது இரண்டு பேர் பெயரும் பூவிலை தொடங்குது.

கானா : அப்படியெண்டால் பூர்ணிமா பாக்கியராஜும் ஓக்கேதானே.

வதீஸ் : பெரியப்பு அடிக்கடி பழைய நடிகைகளைச் சொல்லி தன்ரை வயதைக் காட்டுகின்றார்.

வந்தி : மணிமேகலையாக அமலா பாலைப் போடவும்

லோஷன் : நீ கொடுத்து வைத்தவன் மணிமேகலை, குந்தவை, நந்தினி, பூங்குழலி என சகல பெண் பாத்திரங்களுடனும் ஜமாய்க்கலாம்.

பவன் : பல்லிருக்கின்றவன் பக்கோடா சாப்பிடுகின்றான் அங்கிள்.

லோஷன் : அது பல்லிருக்கின்றவனுக்குச் சரி

கோபி : இல்லை அண்ணை குரு எந்தப் பிரச்சனை என்றாலும் சமாளிப்பார்.

மது : ஓமோம் உன்னையே சமாளிக்கின்றவருக்கு உதெல்லாம் சிம்பிள்

லோஷன் : மது இதிலை உள்வெளி குத்துகள் இல்லைத்தானே.

டொன்லீ : அப்போ விரைவில் திரைக்கதையை, வந்தி எழுதினால் சூட்டிங் போகவேண்டியதுதான்.

கானா : தண்டநாயக்கர்கள், தேவராளன், குடந்தைச் சோதிடர் இதெற்கெல்லாம் விரைவில் ஆட்களை எடுக்கவேண்டும்.

டொன்லீ ; அதை அந்த நேரம் பார்ப்போம். அப்போ கிளம்புவோம்.

கோபி : பொறுங்கோ லோஷன் அண்ணை சைனீஸில் டின்னர் தாறாராம் போய் ஒரு கட்டு கட்டிவிட்டு போகலாம்.

ஆதிரை : ஏனப்பா உந்தாள் டின்னர் கொடுக்குது ஏதும் விசேடமோ?

வந்தி : பாவமப்பா அந்தாள் வேர்ல்ட் கப் நேரம் பிட்ஷா வாங்கிகொடுத்தே அரைவாசி சொத்தை அழித்துவிட்டாராம்.

லோஷன் : பொறுங்கடா ஐபிஎல்லில் கொச்சி கப் தூக்கும் அப்ப பாருங்கள் நான் யார் என.

எல்லோரும் ஒட்டுமொத்தமாக : அப்போ ஐபிஎல்லில் கொச்சி தோற்கும் என்கின்றீர்கள் விக்ரமாதித்தன் வாழ்க .

சன் பிக்சர்சின் காமன் வெல்த்

கோபாலபுரத்தில் ஒரு காலைப்பொழுதில் கருணாநிதி தன் நாட்குறிப்பில் சினிமா இசை வெளியீடு, மானாடா மயிலாட சீசன் 5 இறுதிப்போட்டி, அடுத்த பாராட்டு விழா, போன்ற முக்கியமான விடயங்களை ஆராய்ந்துகொண்டிருக்கும் போது தொலைபேசி ஒலித்தது. மறுமுனையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்.

சிங் : வணக்கம் கலைஞர்ஜி

கலைஞர் : உங்களுக்கு கடிதம் எழுத நினைத்தேன் அழைத்துவிட்டீர்கள்ஜீ, இதுவல்லவோ பண்பாடு.

சிங் :(மனதில்) சப்பா இந்த மனிசன் இனிப் பண்பாடு கலாச்சாரம் என அறுக்கபோகின்றது.
கலைஞர் : அழைத்த காரணம் என்னவோ. பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம் எழுதவேண்டுமா? இல்லை எனக்கு தலைநகரில் ஏதும் பாராட்டு விழாவா?

சிங் : (அவசரமாக) இல்லை இல்லை காமன்வெல்த் போட்டிகளை சீனாவைப் பார்த்து ஏதோ ஒரு உசாரில் நடத்துவோம் என தொடங்கினால் பாபர் மசூதி பிரச்சனையை விட இது பெரிய்ய பிரச்சனையாகிவிட்டது. அதுதான் உங்களிடம் ஒரு உதவி.

கலைஞர் : உங்களுக்கு இல்லாத உதவியா சொல்லுங்கள் ஜீ.

சிங் : நம்ம அரசால் காமன்வெல்த் நடத்து அளவிற்க்கு பணம் இல்லை, இருந்த பணத்தையும் ஊழல் செய்துவிட்டார்கள், பத்திரிகைகள் எல்லாம் இது காமன் வெல்த்தா இல்லை காங்கிரஸ் வெல்த் கேமா என கிண்டல் செய்கின்றது. உங்கள் பேரன் கலாநிதியை காமன் வெல்த்தை ஸ்பொன்சர் செய்யச் சொல்லுவீர்களா?

கலைஞர் : இது சின்ன விடயம் இதனை நீங்களே செய்யலாமே? இடையில் நான் ஏன்?
சிங் : இல்லை ஜீ நீங்கள் அழைத்தால் அவர்கள் இதயம் இனிக்கும்.

இதனை மன்மோகன் சிங் கூறீயவுடன் கலைஞரின் கண்கள் உடனே பனித்தன.

கலைஞர் : உங்களுக்காக இல்லாவிடிலும் என் நண்பர் இந்திராகாந்தியின் மருமகள் சோனியாஜிக்காக நான் இதனைச் செய்கின்றேன் என்றபடி அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

காமன் வெல்த் கேமை தாமே நடத்தும் சந்தோஷத்தில் எந்திரன் பரபரப்புடன் சன் குழும அலுவலகம் அதகளப்பட்டத்து. கலாநிதி, தயாநிதி, ஷங்கர்,வைரமுத்து, ஷக்சேனா என பலர் எப்படி காமன் வெல்த்தை எப்படி சிறப்பாக செய்வது என தீவிர டிஸ்கசனில் இருந்தார்கள்.

தயாநிதி : எந்திரன் இசை வெளியீட்டை எப்படி மலேசியாவில் நடத்தினமோ அதேபோல் காமன் வெல்த் போட்டி தொடக்க விழாவை சந்திரனில் நடத்துவோம்.

வைரமுத்து : பூமாலையில் தொடங்கிய உங்கள் பயணம் சந்திரன் வரை செல்லும் என்பது நான் அறிவேன் ஒரு தமிழனாக எமக்கு இது பெருமை.

ஷங்கர் : ரகுமானின் தீம் பாடல் ஏற்கனவே பிரபலமானதால் அதனை நாம் நடிகர்களை வைத்து படம் எடுத்து காமன் வெல்த்தில் அடிக்கடி ஒளிபரப்பலாம்.

கலாநிதி : இல்லை ஷங்கர் இது விளையாட்டுப்போட்டி அதனாலை நடிகர்களை வைத்து எடுத்தால் மூளையுள்ளவர்கள் கேள்வி கேட்பார்கள். சோ டோணி, சச்சின், சானியா போன்றவர்களை நடிகர்களுடன் இணைத்து நடிக்க வைத்துவிடலாம்,

ஷக்சேனா : சூப்பர் ஐடியா நான் இப்பவே அனைவருக்கும் கோல் போடுகின்றேன்.
நீங்கள் கால் போடமுன்னரே நான் வந்திட்டேன் எனக் கூறியபடி நடிகர் கருணாசும் டிஸ்கசனில் நுழைகின்றார்.

கலாநிதி : ஸ்ரேடியம் முழுவதும் எந்திரன், மற்றும் சன் பிக்சர்ஸின் மெஹா சீரியல்கள் விளம்பரப் பதாதைகள் வைக்கவேண்டும்,

ஷங்கர் : ஸ்ரேடியத்தை நம்ம தோட்டாதரணி செட்டாகவே போட்டுவிடுவார் , ஸ்ரேடியம் புதிதாக கட்டுவதை விட செலவு கொஞ்சம் அதிகமாகும்.

தயாநிதி: வீரர்கள் தங்கும் விடுதிகளிலுள்ள டிவிக்களில் எல்லாம் சன் டிவி, கேடிவி, சன் மியூசிக் மட்டும் தான் தெரியவேண்டும்.

கருணாஸ் : என்னுடயை திண்டுக்கல் சாரதியை உலகத்திலுள்ள அத்தனைபேரும் அப்போ பார்ப்பார்கள்.

ஷக்சேனா : ஒவ்வொரு போட்டியின் ஆரம்பத்தின் போதும் உலகத் தொலைகாட்சிகளில் முதன் முறையாக சன் பிக்சர்ஸ் வழங்கும் 100 மீற்றர் ஓட்டம், குத்துச் சண்டை என விளம்பரப்படுத்தவேண்டும்.

ஷங்கர் :சியர் லீடர்சாக நம்ம நமீதா, அசின், திரிஷா என அனைவரையும் ஆடவிடலாம்.

கலாநிதி : உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முதலாக என்ற வரிகள் இந்த நிகழ்வில் தான் நிஜமாகும்.

கலாநிதி : மைதானத்தைச் சுற்றி உள்ள விளம்பரப் பலகைகள் அனைத்திலும் எங்கள் தயாரிப்புகளான திண்டுக்கல் சாரதி, காதலில் விழுந்தேன் போன்ற மொக்கைக்ப் படங்களின் போஸ்டர்களை வைக்கவேண்டும்.

வைரமுத்து : வாவ் இதுதான் வியாபார யுக்தி, அப்படியே அந்தப் படங்களை ஆங்கிலத்தில் டப் செய்தால் இன்னமும் விளம்பரம் பெருகும்.

ஷக்சேனா : (மனதில்) அந்த மொக்கைகளை ஓட்ட நாம் பட்ட கஸ்டம் இவருக்கு எங்கே தெரியப்போகின்றது.

தயாநிதி : அப்படியென்றால் தங்கம் எல்லாம் நமக்குத் தான்.

ஷங்கர் : எனக்குப் புரியவில்லை.

தயாநிதி : அந்தப் படங்களைப் பார்க்கும் வெளிநாட்டினர் போட்டியும் வேண்டாம் ஒரு பதக்கமும் வேண்டாம் என தங்கள் நாட்டுக்கு ஓடிவிடுவார்கள்.

அனைவரும் அவரை கொல்லுவது போல் பார்த்தார்கள்.

இந்த விடயம் இப்படியே ரெட் ஜெயின்ட், கிளவுட் நைன் போன்ற தமிழ்ப் பட நிறுவனங்களுக்குப் பரவ அவர்களும் பரபரப்பாக தமக்குத் தான் போட்டிகளை நடத்தும் உரிமை வேண்டும் என கலைஞருக்கு போன் போடுகின்றார்கள்.

சுறா - குறியீட்டு அரசியல்

சுறா திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு நேற்றுத் தான் கிடைத்தது. படம் பார்க்கும் முன்னர் ட்விட்டரில் சுறா படம் பார்க்கப்போகின்றேன் என்ற விடயத்தை ட்விட்டியதும் பலரும் ஏன் இந்த ரிஸ்க்? சொந்த செலவில் சூனியம் என என்னை எச்சரிக்கை செய்தும் ரிஸ்க் எடுப்பது எல்லாம் ரஸ்க்கு சாப்பிடுவதுபோல் என்பதால் ஒரு மாதிரி பார்த்து முடித்தேன்.

படத்தினை சாதாரணமாக பார்த்தால் வழக்கமான மசாலாப் படமாகத் தான் தெரியும் ஆனால் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் நம்ம இளைய தளபதியின் அரசியல் நகர்வுகளையும் அவர் அந்தப் படத்தின் மூலம் சொல்லவந்த விடயத்தினையும் புரிந்துகொள்ளமுடியும். பேசாப் பொருளை இயக்குனர் பேசியிருக்கின்றார்.



முதல் காட்சியில் காட்டப்படும் மீனவக் குப்பத்தின் பெயர் யாழ் நகர். இந்தப் பெயர் ஒரு இனத்தின் குறியீடாக இங்கே உருவகிக்கப்பட்டுள்ளது. யாழ் நகர் மீனவர்கள் கடலில் காணாமல் போகின்றனர். பின்னர் சுறா தவிர ஏனையவர்கள் கரைக்கு வந்தது அரச அதிகாரி ஒருவர் ஒருவர் தானே அவருக்காக கவலைப் படவேண்டாம் என்பது இந்திய மீனவர்கள் மீது தமிழக அரசு கொண்டுள்ள அக்கறையை வெளிக்காட்டுகின்றது. இதற்க்கு தோதாக இன்னொரு காட்சியில் டீ கடையில் விஜய் இருக்கும் போது ஒருவர் பத்திரிகையில் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் செய்தியைப் படிக்கும் போது சுறா மக்களைப் பார்த்துக்கூறுவார் இந்த கொடுமைகளைத் தட்டிக்கேட்க விரைவில் தமிழக மக்களுக்கு சேவை செய்யும் நல்ல தலைவர் வருவார்.

சுறாவை வில்லனுடைய ஆட்கள் பின்னாலிருந்து தாக்கி நெருப்பு வைத்துக் கொல்கின்றார்கள். யாழ் நகர் குப்பம் முழுவதும் சுறா இறந்துவிட்டதாக நம்பி வில்லனாகிய மந்திரி கொடுக்கும் இடத்தில் தங்குவதற்க்கு சம்மதிக்கின்றார்கள். சில நிமிடங்களில் சுறா காளியின் அருளால் உயிர்தப்புகின்றார். உடனடியாக மக்கள் மீண்டும் சுறாவுடனேயே சேர்கின்றார்கள். இந்தக் காட்சியிலும் சில வெளிநாட்டு அரசியல் சம்பவங்கள் ஏனோ மறைமுகமாக நினைவு படுத்தப்படுகின்றது.



அதே காட்சியில் எரிந்த வீடுகளின் மத்தியில் வெள்ளையாக உலாவரும் தமன்னா அரசுசாரா நிர்வணம் போல் உவமிக்கப்பட்டிருக்கின்றார். அதாவது கஸ்டப்படும் ஏழை மக்களுக்கு உதவி செய்வது வெளிநாட்டு நிறுவனங்கள் என்பதை இந்தக் காட்சியில் உணர்த்திய இயக்குனர் தமன்னாவின் மதத்தை கிறிஸ்தவமதமாக காட்டியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும். ஆனாலும் தமன்னாவின் பெயரான பூர்ணிமாவில் உள்குத்து இருப்பதுபோல் தெரிகின்றது.

இறுதிக்காட்சியில் வில்லனுடன் சீனத்து முகச்சாயல் உட்பட பல வில்லனின் அடியாட்கள் மோதுகின்றார்கள். இது வில்லன் தான் மட்டும் தனியனாக சுறாவை எதிர்க்காமல் வெளிநாட்டு உதவிகளுடன் எதிர்த்ததாக காட்டப்படுகின்றது.

மேலே குறிப்பிட்ட காட்சிகளில் விஜயின் மக்கள் மீதான கரிசனையும் அக்கறையும் வெளிப்படுவதுடன் அவரது எதிர்காலம் அரசியல் தான் என்பதை தன்னுடைய ஐம்பதாவது படத்தில் உறுதி செய்கின்றார்.


கதாநாயகி தமன்னா தன்னுடைய செல்ல நாயைக் காணாமல் தற்கொலை செய்வதனைக் காட்டுவதன் மூலம் இயக்குனர் பிராணிகளிடம் அன்பு செலுத்தவேண்டும் என்பதையும் கடலினுள் மூழ்கும் தமன்னாவையும் கடலின் ஆழத்தையும் மாறிமாறி காட்டுவதன் மூலம் பெண்களின் மனது கடலைப்போல் ஆழமானது என்பதையும் குறியீடாக காட்டுகின்றார்.

அத்துடன் உடல் குறைபாடு உடையவர்கள் வயதானவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் பெண்களைக் கவரலாம் என்ற உண்மையை இளைஞர்களுக்கு அறியத்தருகின்றார். எப்படி வாசனைத் திரவியங்கள் விளம்பரங்களில் வாசனைத் திரவியத்தை பாவித்தவுடன் அந்த ஆணின் பின்னால் பெண்கள் வருகின்றார்களோ அதேபோல் பிறருக்கு உதவி செய்தாலும் இளகிய மனம் படைத்த இளம் பெண்களைக் கவரலாம் என்பதை விஜய் கண் தெரியாத ஒருவருக்கு உதவி செய்வதன் மூலம் தமன்னாவின் மனதில் இடம் பிடிக்கும் காட்சி மூலம் விளங்கப்படுத்தியுள்ளார்.

ஒரு பாடலில் தமன்னாவின் நிற்குமோ நிற்காதோ ஜீன்ஸ் கீழே விழவிழ விஜய் தான் மேலே தூக்கிவிடுவார். இது ஒரு அப்பட்டமான ஆணாதிக்க சிந்தனையாகவே தோன்றுகின்றது.

இயக்குனர் சொல்லவந்த விடயங்களை நேரடியாகச் சொல்லி இருந்தால் படம் இன்னும் இரண்டு வாரங்கள் அதிகம் ஓடியிருக்கும் ஆனால் இயக்குனருக்கு என்ன அரசியல் சிக்கல்களோ தெரியவில்லை படங்களில் அதிகம் குறீயீட்டு காட்சிகளின் மூலம் தான் சொல்ல வந்ததைச் சொன்னாலும் சாதாரண மக்களுக்கு புரியவில்லை என்பதுதான் சுறா கருவாடாகியதன் காரணம் என நினைக்கின்றேன்.

பின்குறிப்பு : இந்தப் பதிவை மொக்கையாக எடுக்க விரும்பினால் மொக்கையாகவே எடுக்கவும் அல்லது அரசியலாக எடுக்கவிரும்பினால் என்னைத் திட்டக்கூடாது.

ஐசிசியில் ஐஸ்வர்யா ராய்


பார்படோசின் அழகிய கடற்கரையில் தலைக்கு முக்காடு இட்டபடி சிலர் இருந்து ஆலோசிக்கின்றார்கள். கிட்டத்தில் போய்ப் பார்த்தால் நம்ம சூப்பர்சிங்கம் டோணி தலைமையில் இந்திய அணியினர் தங்கள் தோல்விக்காண காரணங்கள் பற்றி கலந்தாலோசிக்கின்றாகள்.

தினேஷ் கார்த்திக்: (முரளி விஜயைப் பார்த்து) எல்லாம் இவனால் தான் வந்தது டீமின் முதற்பெயரே விஜய் என்றிருந்தால் எப்படி வெற்றி கிடைக்கும், இவனுக்குப் பதிலாக சேவாக் இருந்தாலும் ஏதோ இரண்டு வாணவேடிக்கை காட்டியிருப்பார்.

டோணி : டேய் டேய் நமக்குள்ளை சண்டைவேண்டாம், முரளி ஐபிஎல்லில் நல்லாத் தானே அடித்தவர் ஏதோ அவரின்டை கஸ்டகாலம் சமியும்,ரோச்சும் நான்ஸும் இப்படி பந்துபோட்டால் எப்படி அடிப்பான்.

ஹர்பஜன் : முதலில் எல்லாவற்றையும் மாற்றவேண்டும். ஐசிசிக்கும் மோடியையே தலைவராக்கவேண்டும்.

விஜய் : அடேய் மோடியையே தூக்கிவிட்டார்கள்,

யுவராஜ் : பிடிக்கல்லை எனக்கு பிடிக்கல்லை

கம்பீர் : ஆமாம் சில நாட்களாக உனக்கு பேட் பிடிக்கவே தெரியவில்லை,

யுவராஜ் : சியர்ஸ் லீடராக ஆடுபவர்களைப் பிடிக்கல்லை. எல்லாம் சப்பை பிகர்கள்.

சவ்லா : ம்ம் நல்ல பிகர்கள் ஆடினாலும் நீ ஆடிவிடுவாய், உன் ஆட்டத்தைதான் ஐபிஎல்லில் பார்த்தேனே.

டோணீ : ஹேய் ஹைய்ஸ் எங்கடை அணிக்கு இனி ப்ரீத்தியோ அல்லது ஷில்பாவோ தான் ஓனர் என மாற்றினால் கோப்பை எமக்குத் தான்.

ஜடேஜா: அண்ணே எப்படி அண்ணே உங்களால் மட்டும் இப்படி யோசிக்கமுடிகின்றது. சூப்பர் ஐடியா.

ரோகித்: அடே அகர்கார் ராசிக்காரா, இது ஒன்றும் ஐபிஎல்ல் அல்ல நம்ம நாட்டு டீம். இதற்க்கு ஓனர் மன்மோகன் சிங் தான்.

ஷாகீர் : முதலில் இவன் ஜடேஜாவை நிப்பாட்டினால் எல்லாம் சரிவரும் பேட்டிங்கும் சொதப்பல் போலிங்கும் சொதப்பல்.

ரெய்னா : பிராண்ட் அம்பாசிடர் போல் எங்கள் டீம் அம்பாசிடராக ஐஸ்வர்யா ராயையோ இல்லை லஸ்மிராயையோ சேர்த்தால் எல்லாம் சரிவரும்.

லஸ்மிராய் என்ற பெயரைக் கேட்டு ஜேர்க்கான டோணி ரெய்னாவை முறைக்கின்றார்.

ரெய்னா : சாரி பாஸ் ஒரு ப்ளொவிலை சொல்லிட்டான்.

ஹர்பஜன் : அட ஒருதரும் கிடைக்கவில்லை என்றால் நம்ம நீதா அம்பானியை அம்பாசிடராக்கினாலும் சூப்பர்.

யுவராஜ் : பஜ்ஜி ஏன் இந்தக் கொலைவெறி.

விஜய் : த்ரிஷாவை நம்ம அம்பாசிடராக்கினால் எப்படியிருக்கும்?

தினேஷ் : அடப்பாவி மக்கா அவங்க பார்த்த சென்னை மேட்ச் எல்லாம் நாம் தோத்ததை மறந்துவிட்டியா?

விஜய் : அப்போ நமீதாவைப் சேர்த்தால் நல்லாயிருக்கும் ஒரு அவசரத்துக்கு சைட் ஸ்கிறினாகவும் பாவிக்கலாம்.

யூசுப் : அடப்போடா நமீதா மச்சான் மச்சான் என்பார் அந்தக் கனவிலையே பந்தைக் கோட்டைவிட்டுவிடவேண்டியதுதான்.

டோணி : ஷாகீர் நீ என்ன சொல்கின்றாய் உன்ரை ட்விட்டர் பிரண்ட்ஸ் என்ன சொல்கின்றார்கள்.?

யுவராஜ் : இவன் எங்கே கிரிக்கெட் பற்றி ட்விட்டுகின்றான் நீச்சலடித்த கதை, படம் பார்த்த கதைதான் ட்விட்டுகின்றான்.

ஷாகீர் : ஆமாம் அங்கே மட்டும் என்ன வாழ்கிதாம் தம்பி நீயும், டிஸ்கோதே போன கதையும் பிகர் கதையும் தானே எழுதுகின்றாய்.

தம்பி என்றா வார்த்தையைக் கேட்டு காண்டான யுவி மீட்டிங்கை விட்டு எழும்பிப்போக ஹர்பயன் அவரைத் தடுக்கின்றார்.

டோணி : சும்மா விசர்க் கதையை விட்டுவிட்டு தோல்விக்கான காரணம் என்ன என ஆரோயுங்கோ. இல்லையென்றால் அவன் அவனே நெட்டில் தாளித்து தள்ளிவிடுவார்கள்.

கார்த்தீக் : ஓம் சுகுமார் வலைமனையிலும் பவன் எரியாத சுவடியிலும் போட்டுத் தாக்கிப்போடுவார்கள்,

நெஹ்ரா : முதலில் இவன் ஜடேஜாவைத் தூக்கிவிட்டு என் நண்பன் அகர்காரை டீமில் சேர்த்தால் கோப்பை நமக்குத் தான்.

யூசுப் : அண்ணாச்சி கங்குலி இதைக் கேட்டால் பிளைட் பிடித்து வந்து உங்களை உதைப்பார்.

ஹர்பஜன் : நல்ல ஐடியா நம்ம குறூப்புக்கு ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், கனடா போன்ற அணிகளைச் சேர்த்தால் வெற்றி எமக்குத் தான்.

டோணி : சரி சரி எப்படியோ பாகிஸ்தானும் இம்முறை அரையிறுதிக்கு போகல்லை அந்த சந்தோஷத்தில் நம்ம வீடுகள் தப்பிவிட்டன.

ஷாகீர் : முதல்முறை நாம் அடுத்த முறை பாக்கி இந்த முறை ஸ்ரீலங்கா கோப்பையை எடுக்குமென எதிர்பார்த்தால் அவங்களும் தோத்துப்போனார்கள்.

ரெய்னா : அடுத்த மேட்ச் எமக்கும் அவங்களுக்கும் தான். கவனம் எல்லாவற்றையும் சேர்த்து எமக்குத் தந்துவிடுவார்கள்.

ஹர்பஜன் : ச்சீச்சீ சனத் இருக்கும் வரை பயப்படத் தேவையில்லை.

நெஹ்ரா : பஜ்ஜி அவர் இப்போ எம்பி கவனமாக கதை.

டோணி : சரி சரி விட்டால் நீங்கள் இன்னும் கதைப்பியள் நாளைக்கு ஸ்ரீலங்காவை எப்படி சாமளிப்பது என விட்டத்தைப் பார்த்தபடி யோசிப்போம்.

கடற்கரை மண்ணைத் தட்டியபடி எழும்பிய இந்திய அணியினர் அடுத்த பக்கத்தில் பாகிஸ்தானும் ஸ்ரீ லங்காவும் இதே போல் ஆராய்வதைப் பார்த்து எடுத்தார்கள் ஓட்டம்.

பம்பலான பண்பலைப் பெயர்கள்

இன்று காலை விடியலில் லோஷன் வருங்காலத்தில் வானொலிகளின் பெயர்கள் எப்படி இருக்கும் என ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி செய்தார். அவரின் எண்ணக்கருவில் இருந்து உதித்த மொக்கைப் பதிவுதான் இது. எந்த வானொலிகளையும் கிண்டல் செய்யாமல் சும்மா பம்பலுக்கு கற்பனையைத் தட்டிவிட்டதில் வந்த பதிவு தான் இது.

இதில் குறிப்பிடப்பட்டுள்ள பல பெயர்கள் ட்விட்டரில் நடந்த கும்மியில் இருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அந்தக் கும்மியில் கும்மிய‌ லோஷன், கனககோபி, யோகா, சுபாங்கன், ஆதிரை மற்றும் பவன் ஆகியோருக்கும் நன்றிகள்.

தவறணை FM :

குடிமகன்களுக்கு மட்டும் சொந்தமான வானொலி. "தண்ணித் தொட்டி தேடிவந்த", "ஒரு ஜீவன் தான் (சோகம்)", "ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்" போன்ற போதை தரும் பாடல்கள் மட்டும் ஒலிபரப்பாகும்.

இதுவே தமிழ்நாட்டில் ஆரம்பித்தால் "டாஸ்மார்க்" FM.

அனானி FM :

நிகழ்ச்சி செய்பவரின் பெயர் தெரியக்கூடாது. நேயர்களின் பெயர் தெரியக்கூடாது. யாரும் யாரையும் பாராட்டலாம்/திட்டலாம் ஒருவர் பல பெயரில் வந்து கருத்துச் சொல்லமுடியும். முக்கியமாக இன்னொருவரின் நம்பரில் இருந்து அல்லது ஐபியில் இருந்து கருத்துச் சொல்லி அறிவுப்புச் செய்பவர்களை குழப்பவேண்டும்.

கும்மி FM:

இங்கே கும்மி மட்டுமே அடிக்கலாம். சகலவிதமான கும்மிகளும் பேசப்படும். பாடல்கள் கூட கும்மிப் பாடல்களாக இருந்தால் சிறப்பு.

குத்து FM:

தனியே குத்துப்பாடல்கள் மட்டும் ஒலிபரப்பப்ப‌டும். நிகழ்ச்சிகளில் வித்தியாசம் காட்டுவதற்க்கு ஸ்ரீகாந்த் தேவா குத்து, விஜய் ஆண்டனி குத்து, தேவா குத்து எனப் பல வகைப்பட்ட குத்துப் பாடல்கள் ஒலிபரப்பலாம். நேயர்கள் உணர்ச்சிவசப்பட்டு குத்தினால் அதற்க்கு நான் பொறுப்பல்ல. பாடல்களுக்கு பஞ்சமில்லை என்பதால் 24 மணி நேர வானொலியாக இயங்கலாம்.

பக்தி FM:

பக்த கோடிகளுக்கான வானொலி. சகல மதங்களின் பக்திப் பாடல்கள் மட்டும் ஒலிபரப்படும், ஆடியில் நேயர்களுக்கு இலவசமாக கூழ் ஊத்தப்படும். மார்கழியில் சிறப்பு பஜனை செய்யப்படும். ஆத்திகர்களுக்கும் மட்டுமே அனுமதி.

தேவதாஸ் FM:

காதல் தோல்வி பாடல்கள் மட்டுமே ஒலிபரப்பபடும். காதலில் தோல்வியுற்றவர்கள் தங்கள் கவலைகளை மறக்கச் செய்யும் வகையில் நிகழ்ச்சிகள் அமையவேண்டும். சிலவேளைகளில் தவறணை FM க்கும் இதற்க்கும் இடையில் ஒப்பந்தம் செய்து அங்கு ஒலிக்கும் சில பாடல்களை இங்கேயும் ஒலிக்கச் செய்யலாம்.

தவறணை FM ம் தேவதாஸ் FM ம் பெரும்பாலும் ஆண்களாம் மட்டுமே கேட்கப்படும்.

பபா FM: (பச்சிளம் பாலகர் FM)

பச்சிளம் பாலகர்களுக்கான வானொலி. 10வயதுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கான பாடல்கள் ஒலிபரப்படும். பாடசாலையில் நடந்த சண்டைகள் சச்சரவுகள் பற்றி உரையாடலாம். இடையில் குழப்படியான பபா FM அறிவிப்பாளர்களால் ஒலிபரப்பு தடங்கல் ஏற்படலாம் காரணம் அவர்கள் ஓடிவிளையாடி வயர்களை அறுத்துபோடுவார்கள்..

DM FM : (Double Meaning FM)

வயது வந்தவர்களுக்கான வானொலி. தற்போதைய காலத்தில் பெரும்பாலான பாடல்கள் இரட்டை அர்த்த வசனத்தில் வருவதால் 24 மணி நேர சேவையாக நடத்தலாம். வெண்ணிற ஆடை மூர்த்தி, எஸ்.எஸ்.சந்திரன், எஸ்.ஜே. சூர்யா போன்றவர்கள் சிறப்பு அறிவிப்பாளர்கள்.

பல்டி FM :

ஹிஹிஹி பெயரிலையே யாருக்கு என்பது புரிந்திருக்கும். மருத்துவர் இராமதாஸ் சிறப்பு அறிவிப்பாளர்.

சொசெசூ FM:

சொந்த செலவில் சூனியம் . சொந்த செலவில் சூனியம் வைக்கும் என்னைப் போன்றவர்களுக்கான வானொலி. நீங்கள் சூனியம் வைத்து மாட்டிக்கொண்ட சமபவங்களை கலகலப்பாக பேசலாம்.

காதல் FM:

காதலிப்பவர்களுக்கு மட்டுமே அனுமதியுள்ள வானொலி. காதல் பாடல்கள் மட்டுமே ஒலிபரப்படும்.

சனி FM:

காதல் FM ற்க்கும் இதற்க்கு இடையில் ஒரு சின்னத் தொடர்புண்டு. காதல் FM கேட்பவர்களுக்கு கட்டாயம் இந்த FM பிடிக்கும்.

பின்நவீனத்துவ FM :

இதில் பின்நவீனத்துவ கருத்துகள் அடங்கிய பாடல்கள் நிகழ்ச்சிகள் நடைபெறும். இடையிடையே சாரு, ஞாநி, போன்றவர்களின் கருத்துக்கள் இடம் பெறும்.

கடுகதி FM :

மானாட மயிலாட சஞ்சீவ் போல் யாருக்கும் விளங்காமல் மிக வேகமாக பேசவேண்டும், பாடல்கள் கூட வேகமாக ரீமிக்ஸ் செய்து ஒலிபரப்பபடும்.

Zoo FM :

இந்த FM ல் மிருகங்கள் சம்பந்தப்பட்ட பாடல்கள் மட்டும் ஒலிபரப்பாகும். உதாரணமாக சிங்கம் ஒன்று புறப்பட்டதே, புலி வருது. அறிவிப்பு செய்பவர்களும் தங்கள் பெயர்களுக்கு முன்னால் ஒரு மிருகத்தின் அல்லது பறவையின் பெயரைச் சேர்க்க வேண்டும். காகா கிருஷ்ணன், கவரிமான் ரகுமான், எதிர்வீரசிங்கம்,

உங்களுக்குத் தெரிந்த ஏனைய நையாண்டியான பெயர்களைப் பின்னூட்டி விடுங்கள்.

மெஹா ஹிட் ஆதவனும் நானும் நண்பர்களும்

கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் செந்தூரனிடம் இருந்து எனக்கு ஒரு மெயில் வந்திருந்தது மாலை 5.30 மணிக்கு இந்துக் கல்லூரி மாண்வர்கள் ஒழுங்கு செய்த ஆதவன் விசேட காட்சிக்கு ரிக்கெட் இருக்கின்றது, கரனையும் பாலாவையும் அழைத்துக் கொண்டு வாருங்கள் நான் ஏனைய நண்பர்களுடன் வருகின்றேன்.

நான் உடனடியாக பாலாவையும் கரனையும் தொடர்புகொள்ள இருவரும் வாறன் என்றார்கள். சில நிமிடத்தில் பாலாவிடம் இருந்து தொலைபேசி அழைப்பு "மச்சான் நான் இன்னொரு செட்டுடன் நைட் லிபேர்ட்டியில் நடக்கும் காட்சிப்போகப்போகின்றேன் உங்களுடன் போகப்போகின்றேன் எனச் சொல்ல என் நண்பர்கள் போனில் திட்டயதில் என் காதினூடாக இரத்தம் வடிகின்றது" என அழுதபடி சொல்ல நாங்களும் எல்லாம் நன்மைக்கே என அவரை அவர்களுடன் போகவிட்டுவிட்டோம். அவர் வந்திருந்தால் எங்களுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கும் என்பது பின்னர் தெரிந்தது.

ஏற்கனவே எங்கள் குழாம் வெள்ளிக்கிழமை வெள்ளவத்தை காலி வீதியை அளக்கமுடிவு செய்திருந்தோம் நீண்ட நாள் அந்தப் பக்கம் போகவில்லை என்பதாலும் அத்துடன் தீபாவளிக்கு முதல் நாள் என்பதால் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதாலும் காலி வீதியை ரணகளப் படுத்துவது என தீர்மானித்தோம். பின்னர் அந்த திட்டத்தை கைவிட்டுவிட்டு ஆதவனுக்கு செல்வது முடிவாகிவிட்டது.



சுமார் 4.30 மணியளவில் வெள்ளவத்தைச் சந்தியில் எனக்காக காத்துக்கொண்டிருந்த கரனைச் சந்தித்தேன். இருவரும் செநதூரனின் வரவிற்காக காத்திருக்க சரியாக 5 மணியளவில் செந்தூரனின் வாகனம் இன்னும் 3 நண்பர்களுடன் வந்து சேர்ந்தது. உள்ளே நிமல், ராஜ், ஹரி என ஏனைய நண்பர்கள் மொத்தமாக 6 பேரும் கொன்கோர்ட்டை நோக்கிப் படை எடுத்தோம்.

வாசலில் ஒழுங்கு செய்த இந்துக் கல்லூரி மாணவர்கள் எம்மை அடையாளம் கண்டு உடனடியாக உள்ளே செல்ல அனுமதித்துவிட்டார்கள். ஒரு மாதிரி வாகனத்தை தகுந்த இடத்தில் நிறுத்திவிட்டு உள்ளே செல்லும் போதுதான் செந்தூரன் தன்னிடம் இருப்பது பொக்ஸ் ஆசனங்களுக்கு உரிய அனுமதிச் சீட்டு என்று, அடப்பாவி ஏன் இந்தக் கொலை வெறி எனக்கேட்டால். தானும் மனைவியும் ஏனைய இரு நண்பர்கள் ஜோடிகளாக வரத் தானாம் திட்டம் போட்டார்கள் ஆனால் செந்தூரனின் மனைவியில் புத்திசாலித் தனத்தால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. ஏனென்றால் அவருக்குத் தெரியும் முதல் நாள் முதல் காட்சியில் விசிலடிச்சான் குஞ்சுகள் செய்யும் அட்டகாசங்கள். இதனால் பெரும்பாலான பெண்கள் முதல் நாள் காட்சிகளைத் தவிர்ப்பார்கள். இதனால் இதுவரை ஜோடிகளின் அரவணைப்பில் இருந்த பொக்ஸ்கள் ஆண்களை மட்டும் அனுமதித்தது.

உள்ளே சென்றால் தியேட்டர் நிரம்பி வழிந்தது. இளம் மாணவர்களை விட பச்சிளம் பாலக மாணவர்கள் அதிகமாக காண்ப்பட்டார்கள். அதில் சிலர் மட்டும் பெற்றோர்களுடன் வந்திருந்தார்கள். சரி இருவர் இருவராக 3 பொக்ஸ்குள் அமருவம் என நினைக்க அங்கே ரசிகர்களை ஒழுங்குபடுத்திக்கொண்ட மாணவர் ஒருவர் " அண்ணே குறை நினைக்கவேண்டாம் கூட்டம் அதிகம் என்பதால் ஒரு பொக்ஸ்க்குள் 3 பேர் அமருங்கள்" என்றான். அடப்பாவியளா? 2 பேர் இருக்கும் இடத்தில் 3 பேரா என மனதில் அவர்களைத் திட்டிக்கொண்டு நான், செந்தூரான், கரன் மூவர் ஒரு பொக்ஸினுள்ளும், நிமல், ஹரி, ராஜ் மூவரும் அடுத்த பொக்ஸினுள்ளும் அமர்ந்துவிட்டோம். .

அந்த சீட் சீரிபி பஸ் சீட்டை விட வசதி குறைவாகவே இருந்தது. எனக்கும் கரனுக்கும் பொக்ஸ் இதுதான் முதன் முறை( நம்புங்கள்) செந்தூரான் ஏற்கனவே வந்திருந்தபடியால் அந்த சீட்டின் அருமை பெருமைகளை எமக்குச் சொன்னார். என்ன செய்வது எங்கள் விதி இப்படி என நினைத்துக் கொண்டு மூன்று ஆண்களும் ஒரு மாதிரி அஜெஸ்ட் செய்தபடி இருந்து படம் பார்க்கத் தொடங்கினோம்.

ஒரு சில மாணவிகள் அரங்கினுள் நுழையும் போது மாணவர்கள் கூக்குரல் இட்டார்கள். சிலர் ஆண் பெயர்களைச் சொல்லி அழைத்தார்கள். பின்னர் நயன் திரையில் வர பிரபுதேவா எனக் கத்தும்போதுதான் அந்த மாணவிகளின் ஆண் பெயர்கள் அவை என்ற உண்மை எனக்கருகில் இருந்த சிறுவன் கரனுக்கு புரிந்தது.

இத்தனை அலப்பறைகளுக்கு மத்தியில் படம் ஆரம்பமாகியது. சூர்யாவின் சிறுவயதுப் படம் காட்டியதில் இருந்து அவரின் பெயர்வரும் வரைக்கும் விசிலில் மழை பொழிந்தார்கள். சூரியாவிற்க்கு இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அப்போதுதான் புரிந்தது.

பின்னர் நயனின் பெயர் வரவும் விசில் மழை. சூரியாவின் முதல் காட்சிக்கும் விசிலடித்த ரசிகர்கள் அதன் பின்னர் ஒரு மாதிரி படத்துன் ஐக்கியமாகியபடியால் இடையில் விசில் அடிக்கவில்லை. பின்னர் நயனின் முதல் காட்சிக்கு சூரியாவின் வருகையை விட விசில் அதிகம். எனக்கு இருபுறமும் அமர்ந்திருந்த நயன் ரசிகர்கள் இருவரும் அவரின் காலில் இருந்து முகம் வரை கமெரா செல்லும் வரை விசில் அடித்தபடியே இருந்தார்கள். ஆனால் நயனின் முகத்தைப் பார்த்தவுடன் இருவரும் என்ன கொடுமை இது எப்படி எண்ணெயாக முகம் இருக்கின்றதே என நயனுக்காக கவலைப்பட்டார்கள்.

இப்படியே விசில் கைத‌ட்டுகள், சிரிப்புகள் எனப் படம் போய்க்கொண்டிருந்தது. இடையில் என்னுடைய இன்னொரு நண்பர் சஞ்சீவ் இரண்டுதரம் போன் பண்ணினார், அவர் சூர்யாவின் தீவிர ரசிகர் அடுத்த காட்சிக்கு தன் பாடசாலை நண்பர்களுடன் டிக்கெட் எடுத்து வைத்திருந்தவர் அடிக்கடி படம் எப்படி என என்னைக் கேட்டுக்கொண்டிருந்தார். இடைவேளையும் வந்தது.

இடைவேளையின் போது நானும் கரனும் போய் 6 பேருக்கும் குளிர்பானங்கள் வேண்டிவந்தால் எமக்கு அடுத்த பொக்ஸில் இருந்த நண்பர்கள் நாம் குளிர்பானம் குடிப்பதில்லை சூடான பானம் தான் அருந்துவோம் என ஆர்ப்பாட்டம் செய்தார்கள். திரும்ப உடைத்த குளிர்பானத்தைக் கொடுக்கமுடியாது என்பதாலும் எங்கள் எஞ்சின்கள் எத்தனை லீற்றரையும் தாங்கும் என்பதாலும் நாம் இரண்டு இரண்டு குடிப்பது என முடிவு செய்தாயிற்று, பின்னர் செந்தூரன் மிக்சரும் வாங்கிவந்தார். இடைவேளை முடிந்து படம் மீண்டும் தொடங்கியபின்னர் இடையில் என் நண்பி ஒருவர் போன் பண்ணினார், அவர் என்னை எங்கே இருக்கின்றீர்கள் எனக் கேட்க நான் படம் பார்க்கின்றேன் எனச் சொன்னேன். அதற்க்கு அவர் பக்கத்தில் இருக்கும் நிமலுக்கு ஒரு ஹாய் சொல்லிவிடுங்கள் என்றார். நான் அவரை நிமல் என்னுடன் இருப்பது எப்படித் தெரியும் எனக் கேட்க நிமல் பேஸ்புக்கில் ஆதவன் பார்த்துக்கொண்டிருக்கின்றேன் என ஸ்டேடஸ் மெசேஜ் அடித்திருக்கின்றார் என்ற உண்மையைச் சொன்னார். எப்படியெல்லாம் பேஸ்புக்கை உபயோகிக்கின்றார்கள்.

கடைசியில் கே,எஸ்,ஆர் கிளைமாக்ஸில் சொதப்பியதால் நாம் மனம் நொந்து தியேட்டரை விட்டு வெளியே சென்றால். அடுத்த காட்சிக்கு மக்கள் கூட்டம் வழிந்தது, நாம் சென்ற வாகனத்தின் முன்னால் இன்னொரு வாகனம் நின்றது. அந்த வாகனம் எடுக்கும் வரை நாம் காத்திருக்கவேண்டும் என்பதால் அந்த கூட்டத்தில் தெரிந்த முகம் யாராவது நிற்கின்றார்களா? எனப் பார்த்தால் வலைப் பதிவர் ஒருவர் நின்றார். அவருக்கு யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்ற எங்கள் கொள்கைக்காக படம் சூப்பர் கலக்கல் என நல்ல கருத்துகளைத் தெரிவித்தோம்.

இது நேரம் லிபேர்ட்டியில் இருந்து பாலா தொலைபேசியில் படம் எப்படி எனக் கேட்டான் அவனுக்கும் எங்கள் கொள்கைப் படி நல்ல கருத்துக்களைச் சொன்னோம். படம் முடிந்தபின்னர் சாமத்தில் அவன் எங்களை தொலைபேசியில் திட்டியது இன்னும் காதினுள் நிற்கின்றது.

இதே நேரம் என் நண்பன் சஞ்சீவ் இருவராக வந்துகொண்டிருந்தான், அவனும் அவன் நண்பர்களும் பக்கத்தில் இருந்த தாகசாந்தி நிலையத்தில் தாகம் தீர்த்துவிட்டு வந்திருக்கின்றார்கள் எனபது தெரிந்தது. அவனுக்கும் படம் நல்லது எனச் சொல்லிவிட்டோம்.

ஒருமாதிரி வாகனத்தை எடுத்துக் கொண்டு அவரவர் வீடுகளிற்க்குத் திரும்பிவிட்டோம். வீட்டிற்க்கு வந்து கிரிக்கெட் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு ஆதவன் விமர்சனம் எழுதிக்கொண்டிருக்க, நண்பன் சஞ்சீவ் தொலைபேசியில் பிரபல பெண்பதிவர்கள் இருவர்கள் தியேட்டரில் இருக்கின்றார்கள். அத்துடன் இன்னும் இரண்டு ஆண் பதிவர்களும்(தனித் தனியாக) இருக்கின்றார்கள் என்ற தகவலைத் தந்தான்.

11.15 அளவில் என்னுடய விமர்சனத்தை வலையேற்றிவிட்டு மூஞ்சிப்புத்தகத்தில் தோட்டம் செய்துகொண்டிருக்க நண்பன் லோஷன் தானும் படம் பார்த்து விமர்சனம் எழுதியிருப்பதாகவும் அதனைப் பார்க்கவும் என தகவல் அனுப்பினார். அவரது விமர்சனத்தைப் படித்துக்கொண்டிருக்கும் போது அடுத்த காட்சி முடிந்து சஞ்சீவ் எனக்கு தொலைபேசியில் ஒரே கிழியல் அவன் சொன்னதில் ஹைலைட்டான விடயம் " 500 ரூபா ரிக்கெட் வாங்கியதற்க்குப் பதில் இன்னும் 3 போத்தல் வாங்கியிருக்கலாம்" என்றான்.

அதே நேரத்தில் இன்னொரு பதிவரான புருஷ் "இரண்டு பிரபல பெண் பதிவர்கள் படம் பார்த்துவிட்டு பேயறைந்தமாதிரி இருக்கின்றார்கள். ஆதவன் படம் பெரிதாக நல்லாயில்லை ரிஸ்க் எடுக்கவேண்டாம்" என எஸ்எம்எஸ் அனுப்பியிருந்தார். பின்னர் அவருக்கு நான் முதல் காட்சியில் ரிஸ்க் எடுத்த கதையைச் சொல்ல மனிதன் சிரித்த சிரிப்பு கொழும்பு முழுக்க கேட்டிருக்கும்.

எது எப்படியோ ஆதவன் படம் பார்த்த அனுபவம் என்றைக்கும் மறக்கமுடியாத அனுபவமாக மாறிவிட்டது. ஏற்கனவே படையப்பா, குஷி இரண்டு படங்களும் இதைப்போல தான் ஆனால் வித்தியாசமான அனுபவங்கள் கொடுத்த படங்கள்.

டிஸ்கி : மெஹா ஹிட் ஆதவன் எனத் தலைப்பிட்டிருக்க காரணம் என் ஆதவன் பதிவிற்க்கு இதுவரை 3000 மேற்பட்ட ஹிட்ஸ் வந்திருக்கிறது. அத்துடன் கடந்த சனிக்கிழமை மட்டும் 2500 ஹிட்ஸ். என் பதிவுகளில் ஆதவன் மெஹா ஹிட் தான்.

முத்தம் - சில வரைவிலக்கணங்கள் - 18+

நீண்டகாலத்திற்க்கு முன்னர் மின்னஞ்சலில் கிடைத்த விடயம். தமிழ்ப் படித்தினால் சில வரைவிலக்கணங்களில் எல்லை மீறவேண்டியிருக்கும் என்பதால் அப்படியே ஆங்கிலத்தில். சிரிக்கமட்டுமே....


PROFESSOR'S DEFINITIONS OF A KISS

Professors of different subjects define the same word in different ways:

Prof. of Computer Science:
A kiss is a few bits of love compiled into a bite.

Prof. of Algebra:
A kiss is two mouths divided by nothing.

Prof. of Geometry:
A kiss is the shortest distance between two straight tongues.

Prof. of Physics:
A kiss is the contraction of mouth due to the expansion of the heart.

Prof. of Chemistry:
A kiss is the reaction of the interaction between two hearts.

Prof. of Zoology:
A kiss is the interchange of unisexual salivary bacteria.

Prof. of Physiology:
A kiss is the just oposition of two orbicular muscles in the state of contraction.

Prof. of Dentistry:
A kiss is infectious and antiseptic.

Prof. of Accountancy:
A kiss is a credit because it is profitable when returned.

Prof. of Economics:
A kiss is that thing for which the demand by females is higher than the supply by males.

Prof. of Statistics:
A kiss is an event whose probability depends on the vital statistics of 36-24-36.

Prof. of Philosophy:
A kiss is the persecution for the child, ecstasy for the youth and homage for the old.

Prof. of English:
A kiss is a noun that is used as a conjunction; it is more common than proper; it is spoken in the plural and it is applicable to all.

Prof. of Engineering:
A kiss is well constructed indispensable complexity that relieves stress and strain.

Prof.of Blogging :
Keep In Short & Sweet

ப்ரியங்கா சோப்ரா + நான் + டேட்டிங்

காலையில் எழுந்திருக்கின்றேன் நல்ல மழை, இதமான குளிர் அப்படியே கொஞ்ச நேரம் படுக்கலாம் என்றால் நிறைய வேலைகள் இருப்பதாக மூளை சொல்லியது, மனமோ படு படு என்றது. இறுதியாக மூளை மனத்தை வென்று ஒருமாதிரி நித்திரையால் மன்னிக்கவும் கட்டிலால் எழும்பிவிட்டேன்.

காலையில் வீதியில் இறங்கவே நல்ல மழை குடை இருந்தாலும் ஓரளவு நனைந்துவிட்டேன். டுப்ளிகேசன் வீதியில் வெள்ளமோ வெள்ளம், சப்பாத்து முதல் கொண்டு அனைத்தும் நனைந்துவிட்டது.



நான் செல்லவேண்டிய அலுவலகத்திற்க்கு நனைந்து கஸ்டப்பட்டுப் போனால் எனக்கு வரவேண்டியவை வரவில்லை. என் விதியை நொந்துகொண்டு மீண்டும் மழைக்குள் இறங்கித் வந்த வழியே திரும்பினேன்.

மதியம் கணிணியை திறந்தால் மருமகன் சதீஸ் நடந்தகதையை அப்படியே திரித்து ஒரு பதிவு எழுதியிருந்தார். அவருடை வெளிமாவட்டத்தில் இருந்து வந்த அந்தப் பெண்ணைக் காட்டுகின்றேன் என எனக்கும் ஆதிரைக்கு கொடுத்த வாக்கை சதீஸ் மறந்துபோய் எங்களை கலாய்த்துவிட்டார். ஆனால் நானும் ஆதிரையும் மிகவும் நல்லவர்கள் என்ற உண்மை வலையுலகப் பெருமக்களுக்கு தெரியும். அதனால் அந்தப் பதிவு பாதகமில்லை என்று இருவரும் எங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்காமல் விட்டுவிட்டோம்.

மூஞ்சிப்புத்தகத்தைத் (FaceBook) திறந்தால் நம்ம மருமகன் சதீஸ் ப்ரியங்கா கோதாரி என்ற யாரோ ஒரு கோதாரியுடன் டேட்டிங் போவதாக செய்தி இருந்தது. இந்த மூஞ்சிப் புத்தகத்தில் இன்றைய நண்பன் யார்? இன்றைய எதிரி யார்? என பல விடயங்கள் வந்துவிட்டன. அதைப்போல் யாரோ ஒரு புண்ணியவான் யாருடன் இன்றைய டேட்டிங் என்ற விடயத்தையும் எழுதிவிட்டான்.



இன்னும் எத்தனை எத்தனை விடயங்கள் வரப்போகின்றதோ. இவர்களை மூஞ்சிப் புத்தக முருகன் தான் காப்பாற்றவேண்டும்.

அட நம்ம மருமகனே ஒரு கோதாரியோடை டேட்டிங் போகும் போது அவரின் மாமானாகிய நான் யாருடன் போவது என சோதித்துப்பார்த்தால் அதிர்ச்சியடைந்துபோனேன் எனக்கு முன்னால் பிரபஞ்ச‌ அழகி ப்ரியங்கா சோப்ரா என்னுடன் டேட்டிங் வர சம்மதம் தெரிவித்திருந்தார்.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என நானும் அந்த தகவலை மூஞ்சிப் புத்தகத்தில் வெளியிட நண்பர் ஒருவர் டேட்டிங்க்கு நல்ல காலநிலை நிலவுகின்றது உடனே போங்கள் என எனக்கு தகவல் அனுப்பியிருந்தார்.

பிறகென்ன எழுத வந்த பதிவையும் மறந்துபோய் ப்ரியங்காவுடன் டேட்டிங் போக ரெடியாகிவிட்டேன். ஆகவே இன்றைக்கு பதிவுலகத்திற்க்கு லீவு நான். அப்போ வரட்டா.

டிஸ்கி: இது ஒரு மொக்கை. உன்னைப்போல் ஒருவன் சிலரின் பதிவுகள் வாசித்து கடுப்பாகி இந்த மொக்கையில் இறங்கினேன். மற்றும் படி எனக்கு டேட்டிங், காதல், கண்றாவி எல்லாத்திலையும் நம்பிக்கையில்லை.

பதிவுலகப் பதிகம்

கடந்த சில நாட்களாக பதிவுலகத்தை ஆட்டிப்படைத்துவரும் பத்து என்ற விடயத்தைப் பற்றி பதிவு எழுதாவிட்டால் பதிவுலக அம்மன் கண்ணைக் குத்தும் என்ற ஐதீகத்திற்காக என் பத்துகள் டாப் டென் பாணியில்.

சூடான இடுகை
தொடர்ந்து பல வாரங்களாக முதலிடத்தில் இருந்த சூடான இடுகை இந்தவாரம் பதிவுலகத்தைவிட்டு வெளியேற்கின்றது. 18+, வயதுவந்தவர்களுக்கு மட்டும், போன்ற சமாச்சாரங்களால் பல இடுகைகள் சூடான இடுகையில் வந்தன, தமிழ்மணம் மீண்டும் சூடான இடுகையை இடவேண்டும் என்பது ஒவ்வொரு சராசரிப் பதிவரினதும் எதிர்ப்பார்ப்பு. சூடான இடுகை - வடை போச்சே.

மொக்கை
கலாய்த்தல், மொக்கை என்ற பெயரில் பதிவர்கள் எழுதுகின்ற காமெடிப் பதிவுகளால் பத்தாவது இடத்தில் மொக்கை. சிலவேளை சில காமெடிகள் ஓவராகப்போய் சீரியஸ் பிரச்சனையாகவும் மாறியுள்ளன. ஆனாலும் பதிவுலகத்தை நன்கு தெரிந்தவர்கள் இவற்றை மொக்கையாகவே கருதுகிறார்கள். கலாய்த்தலில் குசும்பன், வால்பையன், சுகுமார் சுவாமிநாதன் போன்றோர்களின் சிறந்த பதிவுகள் ரசிகர்களிடையே பாராட்டைப் பெறுகின்றன. மொக்கை - பொழுதுபோக்கு

9 .ஏஜோக்
சிலநாட்களாக முன்னணியிலிருந்த‌ ஏஜோக் சில இடங்கள் பிந்தள்ளி ஒன்பாதம் இடத்தில். ஜாக்கி சேகர், கேபிள்சங்கர் தங்கள் பாணியில் ஏஜோக் அடித்து அசத்துகிறார்கள். விகடனின் வயாகரா தாத்தாவை ரீமேக் செய்யும் கீத்தின் ஜோக்குகளும் சபாஷ் போடவைக்கின்றன. ஒரு சில இடத்தில் ஆபாசம் மேலோங்கினாலும் வயதுவந்தவர்களுக்கானது எனமுதலிலையே டைட்டில் கார்ட்டில் போடுவதால் மன்னிக்கலாம். ஏஜோக் - ரகசியப்புன்னகை.

8.தொடரிடுகை
பதிவுலகத்தை ஆட்டிப்படைக்கும் சிறந்த படைப்பு. பத்துக்கேள்வி, 12 கேள்வி என ஆரம்பத்தில் இருந்தாலும் சில இடங்களில் 32 கேள்விகள் என மக்களின் பொறுமையைச் சோதித்தார்கள். பல இடங்களில் சுவாரஸ்யம் இருந்தாலும் சில இடங்களில் கொட்டாவி விடுகிறார்கள் ரசிகர்கள். தொடரிடுகை - விடாது கருப்பு.

7. விமர்சனம்
தமிழ் சினிமாவையும் உலக சினிமாவையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துமேய்ந்து வலையில் மேயும் பல ரசிகர்களை தோரணை, ஏகன், வில்லு, வாமனன் போன்ற மஹா மொக்கைகளிடம் இருந்து காப்பாற்றிய பெருமை இந்த விமர்சகர்களையே சாரும். பிளார்பாரம் கடைகளில் பழைய ஆங்கிலப்படச் டிவிடிகளைத் தேடிப்பார்க்க செய்கிறார்கள். பிறருக்காக மொக்கைப்படம் பார்த்து விமர்சனம் எழுதும் பதிவர்களுக்கு விரைவில் வாழ்நாள் சாதனை விருது கிடைக்கும் என விபரம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. விமர்சனம் - வருமுன் காப்போம்

6. விருதுகள்
பட்டாம்பூச்சிவிருது, கரப்பான் பூச்சி விருது என தொடங்கிய விருதுகள் இப்போது சுவாரஸ்ய பதிவர் விருதில் வந்து நிற்கிறது. அடுத்தகட்டமாக பத்ம விருதுகள் கூட கிடைக்கலாம். விருது என்பது முத்தம் போல கொடுப்பதும் சுகம் வாங்குவதும் சுகம். சிலர் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்கள். செந்தழல் ரவி பலருக்கு விருது கொடுத்து சாதனை புரியவுள்ளார். விருதுகள் - பாராட்டும் ஊக்கமும்

5. பின்னூட்டம்
முதல் மூன்று இடங்களி இருந்த பின்னூட்டம் சற்றுக்கீழிறங்கி ஐந்தாம் இடத்தில். மீ த பர்ஸ்ட் என ஆரம்பித்து கலக்கல், :‍‍), முடியல என பல இடங்களில் மணிரத்னம் பட வசனங்கள் போல இரத்தினச் சுருக்கமாக இருக்கிறது. 25க்கு மேற்பட்ட பின்னூட்டம் கிடைத்தால் பிரபல பதிவர் ஆகும் யோகம் இருப்பதாக ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றார்கள். மொக்கைப் பதிவுகளுக்கு கிடைக்கும் கைத்தட்டல்களை விட காத்திரமான கருத்துள்ள பதிவுகளுக்கு ஏனோ அவ்வளவு கைத்தட்டல் கிடைப்பதில்லை. இதுபோன்ற சில தவறுகளை நிவர்த்தி செய்தால் பின்னூட்டம் பூஸ்டாக மாறும். பின்னூட்டம் பிறவிப்பயன்


4. தமிழ்மணம்
பதிவுலகத்தில் பிரிக்கமுடியாத ஒரு அங்கம். இடையிடையில் சிலருடன் மல்லுக்கட்டினாலும் பதிவர்களின் வங்கி. சூடான இடுகையை சென்சார் செய்தது ரசிகர்ளிடன் அவ்வளவு வரவேற்பு பெறவில்லை. ஓட்டுப் போடும் மர்மம் சராசரி ரசிகளுக்கு புரியவில்லை. இந்தவார நட்சத்திரம், ஈழம், செய்திகள் போன்றன தமிழ்மணத்தின் பிளஸ்கள் ஆகும். வாசகர் பரிந்துரை மைனஸ். மொத்தத்தில் தமிழ்மணம் - மணக்கும் மல்லிகை.

3.வாசகர் பரிந்துரை
தமிழ்மணத்தின் வெளியீடான வாசகர் பரிந்துரை ஆரம்பத்தில் ஸ்லோவாக புரிந்தாலும் பின்னர் பிக்கப் ஆகிவிட்டது. கமல் படத்தில் வையாபுரி, நாகேஸ் போன்றவர்களுக்கு எப்படி இடம் இருக்கிறதோ அதேபோல் ஒரு சில பதிவர்களின் பதிவுகள் மட்டும் வாசகர் பரிந்துரையில் இடம் பிடிக்கும் மர்மம் புரியவில்லை. கள்ளஓட்டுப்போடும் முறையை மாற்றியிருந்தாலும் ஓப்பன் ஐடி மல்லுக்கட்டுகிறது. வாசகர் பரிந்துரை - புரிந்தும் புரியாமலும்.

2.அனானி
அன்டிஹீரோ சப்ஜெக்டான அனானி பலரின் மனதைக் கவர்ந்தாலும், சிலருக்கு வில்லந்தான். அனானியின் தம்பியான அதர் ஆப்சனும் அனானியும் செய்யும் சேட்டைகளினால் டவுசர் கிழிந்தவர்கள் பலர். எந்தவித ஐடியும் வலையும் இல்லாத சாராசரி பி சென்டர் சி சென்டர் ரசிகர்களுக்கு அனானி வரப்பிரசாதம். மட்டுறுத்தல் என்ற சென்சார் அனானிகளுக்கு முட்டுக்கட்டை. அனானி - ஆர்ப்பாட்டம்.

1. பதிவர்
சன் டிவியில் எப்படி அவர்கள் தயாரிப்பு முதலிடமோ அதுபோல் பதிவுலகில் பதிவர் தான் முதலிடம். ஆரம்பகாலத்தில் சில பதிவர்கள் தடுமாறினாலும் பின்னர் தட்டுத் தடுமாறி வலையுல நுண்ணரசியலை அறிந்து தங்களை நிலைநிறுத்திக்கொள்கிறார்கள். பதிவர்களின் திறமையைப் பொறுத்து அவர்கள் பல விருதுகள் பெற்றாலும் பிரபல பதிவர் என்ற விருது அவர்களுக்கு ஆஸ்கார் விருதுக்கு நிகரான விருதாகவே கருதவேண்டும். பதிவர் - பாண்டித்தியம்.


புதுவரவு
நீங்களே கண்டுபிடியுங்கள்?

டிஸ்கி: கோபித்துக்கொள்ளமாட்டார்கள் என்ற எண்ணத்தில் சில நண்பர்களின் பெயரை பயன்படுத்தியிருக்கிறேன். புதுவரவாகவும் ஒரு விடயம் எழுத இருந்தேன் ஆனால் ஓவர் கலாய்த்தால் உடலுக்கு ஆகாத என்ற தத்துவப்படி கலாய்க்கவில்லை.

திருப்பதிக்குப்போன நடிகைகள்.

















ஈமெயிலில் அனுப்பிய அன்பருக்கு நன்றிகள்.

பழனிக்குப் போன பழனியாண்டவர்



பழனி மலை அடிவாராத்தில் நம்ம முருகப்பெருமான் டைட்டான ஜீன்ஸ் "யாமிருக்க பயமேன்" என பொறித்த ரீசேர்ட் என மார்டனாக இருக்கிறார். அப்போது " நாராயண நாராயண " என்ற கோஷத்துடன் வருகிறார் நாரதர்.

முருகன்: வாருங்கள் நாரதரே வாருங்கள், எப்படி நலம்?
நாரதர் : வணக்கம் முருகா ஏதோ உன் புண்ணியத்தில் நான் நலமாக இருக்கிறேன். ஆமா உன் கோவணம் எங்கே? ஆண்டிக்கோலத்தில் இருக்கும் நீ இதென்ன தசாவதாரம் கமல் போல கெட்டப் மாற்றி இருக்கிறாய்?
முருகன் : (சலிப்புடன்) என்னத்தைச் சொல்ல நாரதரே நேற்று நானே எனக்கு சொந்தச் செலவில் சூனியம் வைத்துவிட்டேன்.
நாரதர்: என்ன சொந்தச் செலவில் சூனியமா? கொஞ்சம் தெளிவாக சொல்லப்பா?
முருகன் : பழனி என்ற திரைப்படம் பார்த்தேன் நாரதரே, வாழ்க்கையே வெறுத்து மீண்டும் மலைக்கு செல்லலாம் என முடிவெடுத்தேன் ஆனால் அதையும் கைவிட்டுவிட்டேன்.
நார‌த‌ர்: ஏன் இள‌வ‌ளே கைவிட்டீர்க‌ள்?
முருக‌ன்: முன்பென்றால் கேபிசுந்த‌ராம்பாள் அழ‌காக‌ப் பாடி என்னைத் திரும்ப‌ வீட்டுக்கு அழைத்துவ‌ருவார். இன்றோ ப‌ர‌வை முனிய‌ம்மா குத்துப்பாட்டுப்பாடி என்னை அங்கிருந்தும் அனுப்பிவிடுவார்.
நார‌தர்: ம் என்ன‌ செய்வ‌து ப‌ழ‌னி ப‌ட‌க்க‌தையைச் சொல்லுங்க‌ள்.
முருகன்: அந்தக் கொடுமையைச் சொல்கிறேன். முதல் காட்சியே சிறையில் தொடங்குகின்றது யாரோ ஒரு ரவுடி பயங்கரமாச் சத்தம் போட்டபடி எல்லோரையும் திட்டுகிறான். அப்போதான் நம்ம ஹீரோ பரத் கிராபிக்ஸ் துணையுடன் அறிமுகமாகின்றார். உடனே அந்த ரவுடியுடன் காது கிழியும் சத்தத்தில் சண்டை. சண்டை முடிந்ததும் ஜெயிலில் பாட்டு ஒன்று.
நாரதர்: இது வழக்கமாக எல்லா சினிமாவிலும் வாறதானே இதில் என்ன வித்தியாசம்?
முருகன் : வித்தியாசம் இருக்கு நாரதரே ஒன்றல்ல இரண்டு.
நாரதர்: இரண்டா?
முருகன் : முதலாவது சிறையில் கைதிஉடைகளுடன் மேல்மருவத்தூர் சிவப்பு கலருடன் சிலர் கூட ஆடுகின்றனர் அவர்கள் யாராயிருக்கும் என என் மண்டையைக் குடைந்து ஒன்றும் தோன்றவில்லை.
நாரதர்: சிலவேளை அவர்கள் போலிச்சாமியார்களாக இருக்கும் நாட்டில் இப்போ அவர்களின் ஆட்டம் அதிகம்தானே.
முருகன் : அட ஆமாம் இந்த சிந்தனை எனக்கு வரவில்லையே. பரவாயில்லை நாரதரே உனக்கும் சிந்திக்கும் ஆற்றல் இருக்கு,
முருகன் : அடுத்தது பாடலில் இடையிடையே பிட்டு பிட்டாக‌
நாரதர் : (இடைமறித்து) என்ன பிட்டுப்படமும் போடுகிறாகளா?
முருகன் : அவசரப்படாதீர்கள் நாரதரே பிட்டுப்படமல்ல பிட்டுபிட்டாக, சூப்பர் ஸ்ராரின் ஒரு பாடல் காட்சி, இளையதளபதியின் ஒரு பாடல் காட்சி , நம்ம தலயின் ஒரு பாடல் காட்சி என போட்டு பரத்துக்கு பில்டப்பை ஏத்துகிறார்கள்.
நாரதர் : அதென்ன தலக்கு மட்டும் நம்ம தல.
முருகன் : பில்லா ப்டத்தில் நம்மைப் பற்றி ஒரு பாடல் பாடுகிறார் அந்த அன்பில்தான் நம்ம தல என்றேன்.
நாரதர்: அப்போ வெகுவிரைவில் பரத்தும் சூப்பர் ஸ்ரார் நாற்காலிக்கு நானும் போட்டி போடுகின்றேன் என பேட்டி கொடுப்பார். என்ன கொடுகை சரவணா.
முருகன்: இருக்கலாம், சின்னத் தளபதி என டைட்டில் கார்ட்டில் போடுகிறார்கள்.
நாரதர் : கதையைச் சொல்லுங்கள்.
முருகன் : கதையா? இருந்தால் தானே சொல்ல, எல்லாம் பழைய பாசமலர்க் கதைதான். ஒரு எஸ் எம் எஸ் சில் அனுப்பக்கூடிய கதை.
நாரதர் : என்ன எஸ் எம் எஸ்ல கதையா?
முருகன் : எத்தனை நாளைக்குத்தான் பஸ் டிக்கெட்டில் கதை எழுதுகிறது எனச் சொல்கிறது.
நாரதர் : ஹீரோயின் எப்படி?
முருகன் : யாரோ புதுமுகமாம். வாறார் பரத்துடன் சண்டை போடுகிறார்,பரத்தை லவ்பண்ணுகிறார் டூயட்பாடுகிறார் அவ்வளவுதான்.
நாரதர் : புதுமுகமா? நான் நமீதாவோ நயந்தாராவோ என நினைத்தேன்.
முருகன் : நீங்கள் வேற நாரதரே நயந்தாரா என்றால் இன்னொரு முறை படம் பார்கலாம். பில்லாவில் என்னுடைய துண்டை இரண்டாக்கி ஒரு உடையில் வருவார் பாருங்கள். நம்ம ரம்பை, ஊர்வசி எல்லாம் தோத்துப்போவார்கள்.
நாரதர்: முருகா நீயா இப்படிக் கதைப்பது?
முருகன்: என்ன செய்வது நாரதரே. இரண்டு கண் உடைய மானிடனே ஜொள்ளு விடும்போது 12 கண்ணுடைய நான் எப்படி ஜொள்ளுவிடாமல் இருப்பது.
நாரதர் : பாடல்கள் எப்படி?
முருகன் : தேனிசைத் தென்றல் தேவாவின் மகன் தான் இசை. தேவா காப்பி இராகத்தில் நல்ல பாடல்கள் பல அமைத்திருந்தார். மகனோ இசை அமைக்கும் முன்னர் வெண்கலக் கடைக்குள் சென்றுவந்திருப்பார்போலிருக்கு. நாரதர் : இருக்கும் இருக்கும் அவரே யானைபோல உருவம் உடையவர்தானே. வேறை என்ன‌ விசேட‌மாக‌ இருக்கிற‌து.
முருக‌ன் : இயக்குன‌ர் பேர‌ர‌சு போலிஸாக‌ வ‌ருகிறார் அவ‌ரின் பெய‌ர் திருத்த‌ணி. வ‌ரும்போது பில்ட‌ப்பும் ட‌ய‌லாக்கும் என‌ ம‌க்க‌ளை கொடுமைப்ப‌டுத்துகிறார்.
நார‌த‌ர் : ஐயோ கொடுமை கொடுமை என்ன‌ செய்வ‌து நாம் செய்த‌ பாவ‌ம் இவ‌ர்க‌ளின் இய‌க்க‌த்தில் ப‌ட‌ம் பார்க்க‌வேண்டிய‌து.
முருக‌ன் : நார‌த‌ரே உங்க‌ளுக்கு த‌ற்கால‌ அர‌சிய‌ல் தெரியும் என‌ நினைக்கின்றேன் என‌க்கு ஒரு ச‌ந்தேக‌ம் தீர்ப்பீர்க‌ளா?
நார‌த‌ர் : என்ன‌ ச‌ந்தேக‌ம் கும‌ரா? தோழ‌ர் திருமாதான் டாக் ஆவ் த‌ ட‌வுன்.
முருக‌ன் : போடா, த‌டா போல‌ அறுவை சினிமா எடுக்கும் இய‌க்குன‌ர்க‌ளை உள்ளே தள்ள‌ வ‌ழி இருக்கிற‌தா?
நார‌த‌ர் : க‌லைஞ‌ர் இப்போதான் புதிய‌ ச‌ட்ட‌ம் ஒன்று இய‌ற்ற‌ ஆலோச‌னை செய்கிறார் அத்துட‌ன் இத‌ற்க்கும் ஒரு முடுவெடுத்தால் த‌மிழ் சினிமா வ‌ளம் பெறும்.
முருகன் : அவர் நினைத்தால் என்னவும் செய்யலாம்.
நாரதர் : குமரா நீ என் எப்படி மேல் நாட்டுக் கலாச்சாரத்துடன் இருக்கிறாய்.
முருகன்: அதுவா? பழனி படம் பார்த்து பலருக்கு டவுசர் கிழிந்துபோய்விட்டது, நானோ கோவணத்துடன் போனவன். கட்டியிருந்த கோவணமும் கிழிந்துபோய்விட்டது. வரும் வழியில் சரவணாஸ் ஸ்ரோரில் சினேகா எடுத்துக்கோ எடுத்துக்கோ என்றா அதுதான் இந்த உடையை சுட்டுக்கொண்டுவந்துவிட்டேன்.
நாரதர்: முருகா, எத்தனையோ பேரை உன் அப்பன் சோதனை செய்து அருள் வழங்குவார் ஆனால் உனக்கு ஏற்பட்ட சோதனைக்கு என்ன செய்வதோ.
முருகன் : என்ன செய்வது நாரதரே எல்லாம் என் விதி. என் ஊர்ப் பெயரில் படம் என பார்க்கப்போனது என் தலை எழுத்து.
நாரதர் : பேரரசின் அடுத்த படத்தின் தலைப்பைக் கேட்டால் நீ மறுபடியும் ஓடிவிடுவாய்.
முருகன் : என்ன அப்படியா?
நாரதர் : பேரரசுவின் அடுத்த படம் "கீழ்ப்பாக்கம்"

போட்டிருந்த ஜீன்சையும் ரீசேர்ட்டையும் கழட்டி எடுத்தார் ஓட்டம் முருகப்பெருமான்.

டிஸ்கி : நேற்றிரவு சீடியில் பழனி பார்த்தவிளைவுதான் இந்தப் பதிவு, மொக்கை மொக்கையைத் தவிர வேறில்லை.