பழனிக்குப் போன பழனியாண்டவர்



பழனி மலை அடிவாராத்தில் நம்ம முருகப்பெருமான் டைட்டான ஜீன்ஸ் "யாமிருக்க பயமேன்" என பொறித்த ரீசேர்ட் என மார்டனாக இருக்கிறார். அப்போது " நாராயண நாராயண " என்ற கோஷத்துடன் வருகிறார் நாரதர்.

முருகன்: வாருங்கள் நாரதரே வாருங்கள், எப்படி நலம்?
நாரதர் : வணக்கம் முருகா ஏதோ உன் புண்ணியத்தில் நான் நலமாக இருக்கிறேன். ஆமா உன் கோவணம் எங்கே? ஆண்டிக்கோலத்தில் இருக்கும் நீ இதென்ன தசாவதாரம் கமல் போல கெட்டப் மாற்றி இருக்கிறாய்?
முருகன் : (சலிப்புடன்) என்னத்தைச் சொல்ல நாரதரே நேற்று நானே எனக்கு சொந்தச் செலவில் சூனியம் வைத்துவிட்டேன்.
நாரதர்: என்ன சொந்தச் செலவில் சூனியமா? கொஞ்சம் தெளிவாக சொல்லப்பா?
முருகன் : பழனி என்ற திரைப்படம் பார்த்தேன் நாரதரே, வாழ்க்கையே வெறுத்து மீண்டும் மலைக்கு செல்லலாம் என முடிவெடுத்தேன் ஆனால் அதையும் கைவிட்டுவிட்டேன்.
நார‌த‌ர்: ஏன் இள‌வ‌ளே கைவிட்டீர்க‌ள்?
முருக‌ன்: முன்பென்றால் கேபிசுந்த‌ராம்பாள் அழ‌காக‌ப் பாடி என்னைத் திரும்ப‌ வீட்டுக்கு அழைத்துவ‌ருவார். இன்றோ ப‌ர‌வை முனிய‌ம்மா குத்துப்பாட்டுப்பாடி என்னை அங்கிருந்தும் அனுப்பிவிடுவார்.
நார‌தர்: ம் என்ன‌ செய்வ‌து ப‌ழ‌னி ப‌ட‌க்க‌தையைச் சொல்லுங்க‌ள்.
முருகன்: அந்தக் கொடுமையைச் சொல்கிறேன். முதல் காட்சியே சிறையில் தொடங்குகின்றது யாரோ ஒரு ரவுடி பயங்கரமாச் சத்தம் போட்டபடி எல்லோரையும் திட்டுகிறான். அப்போதான் நம்ம ஹீரோ பரத் கிராபிக்ஸ் துணையுடன் அறிமுகமாகின்றார். உடனே அந்த ரவுடியுடன் காது கிழியும் சத்தத்தில் சண்டை. சண்டை முடிந்ததும் ஜெயிலில் பாட்டு ஒன்று.
நாரதர்: இது வழக்கமாக எல்லா சினிமாவிலும் வாறதானே இதில் என்ன வித்தியாசம்?
முருகன் : வித்தியாசம் இருக்கு நாரதரே ஒன்றல்ல இரண்டு.
நாரதர்: இரண்டா?
முருகன் : முதலாவது சிறையில் கைதிஉடைகளுடன் மேல்மருவத்தூர் சிவப்பு கலருடன் சிலர் கூட ஆடுகின்றனர் அவர்கள் யாராயிருக்கும் என என் மண்டையைக் குடைந்து ஒன்றும் தோன்றவில்லை.
நாரதர்: சிலவேளை அவர்கள் போலிச்சாமியார்களாக இருக்கும் நாட்டில் இப்போ அவர்களின் ஆட்டம் அதிகம்தானே.
முருகன் : அட ஆமாம் இந்த சிந்தனை எனக்கு வரவில்லையே. பரவாயில்லை நாரதரே உனக்கும் சிந்திக்கும் ஆற்றல் இருக்கு,
முருகன் : அடுத்தது பாடலில் இடையிடையே பிட்டு பிட்டாக‌
நாரதர் : (இடைமறித்து) என்ன பிட்டுப்படமும் போடுகிறாகளா?
முருகன் : அவசரப்படாதீர்கள் நாரதரே பிட்டுப்படமல்ல பிட்டுபிட்டாக, சூப்பர் ஸ்ராரின் ஒரு பாடல் காட்சி, இளையதளபதியின் ஒரு பாடல் காட்சி , நம்ம தலயின் ஒரு பாடல் காட்சி என போட்டு பரத்துக்கு பில்டப்பை ஏத்துகிறார்கள்.
நாரதர் : அதென்ன தலக்கு மட்டும் நம்ம தல.
முருகன் : பில்லா ப்டத்தில் நம்மைப் பற்றி ஒரு பாடல் பாடுகிறார் அந்த அன்பில்தான் நம்ம தல என்றேன்.
நாரதர்: அப்போ வெகுவிரைவில் பரத்தும் சூப்பர் ஸ்ரார் நாற்காலிக்கு நானும் போட்டி போடுகின்றேன் என பேட்டி கொடுப்பார். என்ன கொடுகை சரவணா.
முருகன்: இருக்கலாம், சின்னத் தளபதி என டைட்டில் கார்ட்டில் போடுகிறார்கள்.
நாரதர் : கதையைச் சொல்லுங்கள்.
முருகன் : கதையா? இருந்தால் தானே சொல்ல, எல்லாம் பழைய பாசமலர்க் கதைதான். ஒரு எஸ் எம் எஸ் சில் அனுப்பக்கூடிய கதை.
நாரதர் : என்ன எஸ் எம் எஸ்ல கதையா?
முருகன் : எத்தனை நாளைக்குத்தான் பஸ் டிக்கெட்டில் கதை எழுதுகிறது எனச் சொல்கிறது.
நாரதர் : ஹீரோயின் எப்படி?
முருகன் : யாரோ புதுமுகமாம். வாறார் பரத்துடன் சண்டை போடுகிறார்,பரத்தை லவ்பண்ணுகிறார் டூயட்பாடுகிறார் அவ்வளவுதான்.
நாரதர் : புதுமுகமா? நான் நமீதாவோ நயந்தாராவோ என நினைத்தேன்.
முருகன் : நீங்கள் வேற நாரதரே நயந்தாரா என்றால் இன்னொரு முறை படம் பார்கலாம். பில்லாவில் என்னுடைய துண்டை இரண்டாக்கி ஒரு உடையில் வருவார் பாருங்கள். நம்ம ரம்பை, ஊர்வசி எல்லாம் தோத்துப்போவார்கள்.
நாரதர்: முருகா நீயா இப்படிக் கதைப்பது?
முருகன்: என்ன செய்வது நாரதரே. இரண்டு கண் உடைய மானிடனே ஜொள்ளு விடும்போது 12 கண்ணுடைய நான் எப்படி ஜொள்ளுவிடாமல் இருப்பது.
நாரதர் : பாடல்கள் எப்படி?
முருகன் : தேனிசைத் தென்றல் தேவாவின் மகன் தான் இசை. தேவா காப்பி இராகத்தில் நல்ல பாடல்கள் பல அமைத்திருந்தார். மகனோ இசை அமைக்கும் முன்னர் வெண்கலக் கடைக்குள் சென்றுவந்திருப்பார்போலிருக்கு. நாரதர் : இருக்கும் இருக்கும் அவரே யானைபோல உருவம் உடையவர்தானே. வேறை என்ன‌ விசேட‌மாக‌ இருக்கிற‌து.
முருக‌ன் : இயக்குன‌ர் பேர‌ர‌சு போலிஸாக‌ வ‌ருகிறார் அவ‌ரின் பெய‌ர் திருத்த‌ணி. வ‌ரும்போது பில்ட‌ப்பும் ட‌ய‌லாக்கும் என‌ ம‌க்க‌ளை கொடுமைப்ப‌டுத்துகிறார்.
நார‌த‌ர் : ஐயோ கொடுமை கொடுமை என்ன‌ செய்வ‌து நாம் செய்த‌ பாவ‌ம் இவ‌ர்க‌ளின் இய‌க்க‌த்தில் ப‌ட‌ம் பார்க்க‌வேண்டிய‌து.
முருக‌ன் : நார‌த‌ரே உங்க‌ளுக்கு த‌ற்கால‌ அர‌சிய‌ல் தெரியும் என‌ நினைக்கின்றேன் என‌க்கு ஒரு ச‌ந்தேக‌ம் தீர்ப்பீர்க‌ளா?
நார‌த‌ர் : என்ன‌ ச‌ந்தேக‌ம் கும‌ரா? தோழ‌ர் திருமாதான் டாக் ஆவ் த‌ ட‌வுன்.
முருக‌ன் : போடா, த‌டா போல‌ அறுவை சினிமா எடுக்கும் இய‌க்குன‌ர்க‌ளை உள்ளே தள்ள‌ வ‌ழி இருக்கிற‌தா?
நார‌த‌ர் : க‌லைஞ‌ர் இப்போதான் புதிய‌ ச‌ட்ட‌ம் ஒன்று இய‌ற்ற‌ ஆலோச‌னை செய்கிறார் அத்துட‌ன் இத‌ற்க்கும் ஒரு முடுவெடுத்தால் த‌மிழ் சினிமா வ‌ளம் பெறும்.
முருகன் : அவர் நினைத்தால் என்னவும் செய்யலாம்.
நாரதர் : குமரா நீ என் எப்படி மேல் நாட்டுக் கலாச்சாரத்துடன் இருக்கிறாய்.
முருகன்: அதுவா? பழனி படம் பார்த்து பலருக்கு டவுசர் கிழிந்துபோய்விட்டது, நானோ கோவணத்துடன் போனவன். கட்டியிருந்த கோவணமும் கிழிந்துபோய்விட்டது. வரும் வழியில் சரவணாஸ் ஸ்ரோரில் சினேகா எடுத்துக்கோ எடுத்துக்கோ என்றா அதுதான் இந்த உடையை சுட்டுக்கொண்டுவந்துவிட்டேன்.
நாரதர்: முருகா, எத்தனையோ பேரை உன் அப்பன் சோதனை செய்து அருள் வழங்குவார் ஆனால் உனக்கு ஏற்பட்ட சோதனைக்கு என்ன செய்வதோ.
முருகன் : என்ன செய்வது நாரதரே எல்லாம் என் விதி. என் ஊர்ப் பெயரில் படம் என பார்க்கப்போனது என் தலை எழுத்து.
நாரதர் : பேரரசின் அடுத்த படத்தின் தலைப்பைக் கேட்டால் நீ மறுபடியும் ஓடிவிடுவாய்.
முருகன் : என்ன அப்படியா?
நாரதர் : பேரரசுவின் அடுத்த படம் "கீழ்ப்பாக்கம்"

போட்டிருந்த ஜீன்சையும் ரீசேர்ட்டையும் கழட்டி எடுத்தார் ஓட்டம் முருகப்பெருமான்.

டிஸ்கி : நேற்றிரவு சீடியில் பழனி பார்த்தவிளைவுதான் இந்தப் பதிவு, மொக்கை மொக்கையைத் தவிர வேறில்லை.

மறுமொழி கருத்துக் கூறியவர்கள்:

பழனிமுருகன் சொல்வது:

என்னை வைச்சு காமெடி கீமெடி பண்ணல்லேயே