ஹாட் அண்ட் சவர் சூப் 29-07-2009

மீண்டும் சர்ச்சையில் திரிஷா

சென்னை நட்சத்திர ஹோட்டலில் நடந்த விருந்தொன்றில் குடித்துவிட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹேமந்த் பதானியுடன் ரகளையில் திரிஷா ஈடுபட்டதாக ஒரு செய்தி அடிபட்டது. பத்திரிகைகளில் வெளிவந்த இந்தச் செய்திக்கு ஏனோ இணையங்களில் அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. சிலவேளை சர்ச்சையும் நைட் கிளப்பும் திரிஷா வாழ்க்கையில் சகஜமான நிகழ்வென நினைத்தார்களோ தெரியாது. வழக்கம் போல் திரிஷாவின் தாய்க்குலம் இந்தச் செய்தியை மறுத்துள்ளார். அத்துடன் திரிஷாவும் பதானி என்பவரைத் தனக்குத் தெரியாது எனக் கூறியுள்ளார். அதேவேளை தன்னைக் குறிவைத்து வதந்திகளைப் பரப்புபவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் திரிஷா கூறியுள்ளார். கவனமாக இருங்கள் மக்காள்.



அரசியல்

டி.எஸ். காயத்ரி ஸ்ரீனிவாஸ் என்ற திமுகவின் மாநில தொண்டரணி இணைச் செயலாளர் ஜூனியர் விகடனினால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளார். இவர் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் பெயரில் புரோக்கராகச் செயல்ப்பட்டு மத்திய மாநில அமைச்சர்கள் ஊடக பல ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக ஜூவி செய்திவெளியிட்டுள்ளது. சில நாட்களுக்கு எப்படியும் தமிழக நாளிதழ்களுக்கும் இணையங்களுக்கும் நல்லதொரு தீனி கிடைத்துள்ளது. ஏற்கனவே ஜீவியில் தன் பெயர் வரக்கூடாது என ஆ.ராசா கோர்ட்டில் தடைவாங்கியிருந்தார். அந்த வழக்கின் தீர்ப்பு விகடன் குழுமத்திற்க்கு சார்பாக தீர்ப்பானபின்னர் இந்த மோசடியை ஜீவி அம்பலப்படுத்தியுள்ளது. தமிழக அரசு இவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கிறது எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழிசை விருதுகள்

இசையருவி நடத்திய தமிழிசை விருதுகள் கடந்த சனி ஞாயிறுதினங்களில் இசையருவியில் ஒளிபரப்பினார்கள். கடந்த வருடம் வெளிவந்த தமிழ்த் திரைப்பட இசை சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு வ்ழங்கினார்கள். பெயரில் தான் தமிழிசை விருதுகள் ஆனால் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய விஜய் ஆதிராஜும் சின்மயியும் ஆங்கிலத்திலேயே நிகழ்ச்சியை நடாத்தினார்கள். விருதுவாங்கியவர்களும் ஆங்கிலத்திலேயே பதிலளித்தார்கள். கலைஞர் குழுமத் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் தான் தமிழில் பெயர். அடுத்தமுறை தமிழில் பேசினால் பேசுபவர்களுக்கு இலவச ஒட்டியாணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பைத் தமிழக அரசு அறிவித்தால் அனைவரும் ஏதோ முயற்சி செய்வார்கள். எப்படியும் கலைஞர் காலத்தில் தமிழைச் சாகடிக்கவென்றே பேரன்களும் அமிர்தம் இராம நாராயணன்களும் முயல்கிறார்கள். ஞானி சாருவும் இதெற்கெல்லாம் குட்டு வைக்கமாட்டார்கள்.

கிரிக்கெட்

மேற்கிந்தியத் தீவுகளுடனான டெஸ்ட் தொடரை வென்ற வங்கதேச அணி நேற்று ஒருநாள் தொடரையும் வென்றுவிட்டது. நேற்றைய போட்டி வங்கதேசம் விளையாடிய 200ஆவது ஒருநாள் போட்டியாகும். இரண்டாம் தர மேற்கிந்தியத்தீவுகளுடன் விளையாடினாலும் போட்டி பலமாகவே இருந்தது. இந்த வெற்றியின் மூலம் வங்கதேசம் ஒரு டெஸ்ட் விளையாடும் நாட்டுடன் முதல் முறையாக தொடர் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேச புதிய அணித்தலைவர் ஷகீப் அல் ஹசன் சகலதுறைகளிலும் பரிணமிக்கின்றார். மூன்றாவதும் இறுதியுமான போட்டிக்கு மேற்கிந்தியத்தீவுகளின் கிறீஸ் ஹெயில் தலைமையிலான பலமிக்க அணி களமிறங்குமென்கிறார்கள்.

ஸ்ருதி பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

மறுமொழி கருத்துக் கூறியவர்கள்:

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

பார்ப்போம் இனி மேலாவது பங்களாதேஷ் பெரிய அணிகளை வெல்லுமா என்று, அஸ்ஹ்ரபுல் போல ஏனோ தானோ என வில்யடமல் ஷகிப் அல் ஹசன் சிறப்பாக முக்கியமாக பொறுப்பாக விளையாடுகிறார்..