ராஜாவும் ரஜனியும் பகுதி - 2

சில தவிர்க்கமுடியாத காரணங்களினால் பகுதி 2 உடனடியாகத் தரமுடியவில்லை வருந்துகிறேன்,

6. மாசி மாசம் ஆளான பொண்ணு

பத்மஸ்ரீ கே.ஜே.ஜேசுதாஸின் காந்தக் குரலும் சுவர்ணலதாவின் குரலும் இணைந்து இசைஞானியுடன் கொடுத்த அருமையான மெலடி. தர்மதுரை படத்தில் இடம்பெற்ற பாடலின் காட்சிகள் கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் பாடலைத் தனித்துக்கேட்கும்போது அருமையாக இருக்கும். ஆரம்ப ஆஆவும் அதன் பின்னர் வரும் ஹோரசும் ரிதமும் காட்சி எப்படியிருக்கும் என ஓரளவு ஊகிக்ககூடியதாக இருக்கும். ரஜனிக்கும் கெளதமிக்கும் இந்தப்பாடலில் நல்ல கெமிஸ்ரி இருக்கும்.



7. கண்மணியே காதல் என்பது

ஆறிலிருந்து அறுபது வரை என்ற அற்புதமான படத்தில் எஸ்.பி.பியும் எஸ்.ஜானகியும் இணைந்து கொடுத்த அருமையான பாடல். ஆரம்பத்தில் வரும் வீணையின் நாதம் இசைஞானியின் அக்மார்க் முத்திரை. இந்தப்பாடலின் சீறப்பு கண்மணியே காதல் என்பது எனத் தொடங்கும் பல்லவி முடியும் வரை ஒரே மூச்சில் இருவரும் பாடுவதுபோல் தெரியும். முதலாவது சரணத்தில் வரும் லாலலலால என்ற கோரஸ் சரணத்தில் ஒரே ட்ராக்கில் வரும்படி இசையமைத்திருப்பார். இதே லாலலாலால இரண்டாவது சரணத்தில் ஆரம்பத்திலும் பின்னர் இடையிலும் வரும் அழகு தனிதான்.



8. ராக்கம்மா கையைத் தட்டு

பிபிசியின் இருபதாம் நூற்றாண்டின் சிறந்த பாடல்கள் பட்டியலில் இடம் பெற்ற ஒரேயொரு தமிழ்சினிமாப்பாடல் இதுதான். பத்மஸ்ரீ பாடுநிலா எஸ்.பி.பியின் இனிமையான குரலும் சுவர்ணலதாவின் குரலும் இடையில் ஒலிக்கும் குனித்த்த புருவம் என்ற தேவாரமும் சோபனாவின் நடனமும் அழகுக்கு அழகு சேர்க்கின்றது. பாடலின் ஆரம்பத்தில் ரம்ஸ் உபயோகித்திருக்கும் ஞானி குனித்தபுருவத்திற்க்கு மிருதங்கத்தை உபயோகித்து அந்த இடத்தில் கர்னாடகபாணி இசை அமைத்திருப்பார். பின்னர் ஒரு ம்ம்ம் என்ற ஹம்மிங்குடன் ராக்கம்மா அதே ராகத்தில் அமைந்திருக்கும். இளையராஜா, மணிரத்னம், ரஜனிகாந்த், சந்தோஷ்சிவன் என தமிழ்சினிமாவின் பல நட்சத்திரங்கள் இணைந்தபடம். இனி இப்படியொரு படம் வராது. இந்தப்படத்தில் இடம்பெற்ற புத்தம்புது பூப்பூத்ததோ நல்லதொரு பாடல் படத்தின் நீளம் கருதி வெட்டிவிட்டார்கள். நெட்டில் கிடைத்தால் லிங்க் கொடுக்கவும்.



9. மலைக்கோயில் வாசலில்
இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட இன்னொரு திறமைசாலி பாடகர் மனோ ராஜாவின் இசையில் பல பாடல்கள் பாடியவர். வீரா படத்தில் சுவர்ணலதாவுடன் சேர்ந்து இவர் பாடியிலுள்ள இந்தப்பாடலும் நல்லதொரு மெலடி. பாடலுடன் சேர்ந்து இசைக்கும் ரம்ஸ் கலக்கல். மீனாவின் அழகும் ரஜனியின் ஸ்டைலும் பாடலுக்கு பிளஸ்.



10. செனோரிட்டா ஐ லவ் யூ
ஜானி தமிழ்சினிமாவில் தவிர்க்கமுடியாத மகேந்திரனின் படம். பாடுநிலா எஸ்.பி.பியின் மகுடத்தில் இன்னொரு வைரம் இந்தப்பாடல். பாடலின் ஆரம்பத்தில் வரும் கிட்டாரின் அந்த இசையும் ரம்சின் ரிதமும் கலக்கல்.



இன்னும் எத்தனையோ பாடல்கள் மனதைக் கவர்ந்தாலும் ரஜனி ராஜா என்றால் உடனே நினைவுக்கு வருபவை இவையே. அடுத்து ராஜாவும் கார்த்திக்கும் இணைந்த படங்களின் பாடல்கள்.

3 கருத்துக் கூறியவர்கள்:

shabi சொல்வது:

me the first

shabi சொல்வது:

சூப்பர்

வந்தியத்தேவன் சொல்வது:

நன்றிகள் ஷபி. இந்தமுறை எந்தத் தவறுகளும் நடக்கவில்லை என நினைக்கிறேன்.