மும்முனைத் தாக்குதல்

ஆஸ்திரேலியா, இந்தியா, இலங்கை அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு சிபி(கொமன்வெல்த் பாங்க்) தொடர் நாளை பிரிஸ்பேனில் இந்தியா ஆஸ்திரேலியா இடையே ஆரம்பமாகின்றது. உலகச் சாம்பியன் ஆஸ்திரேலியா, உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடிய இலங்கை, 20க்கு20 சாம்பியன் இந்தியா என மூன்று பலம் வாய்ந்த அணிகள் மோதுவதால் கிரிக்கெட் ரசிகர்களின் ஆரவாரத்துக்கு குறைவில்லாமல் இருக்கும்.

1979 களில் ஆரம்பமான இத்தொடர் (காலத்துக்கு காலம் பெயர் மட்டும் மாறியிருக்கின்றது) முதற்தொடரில் அக்காலத்தில் பலம் வாய்ந்த மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, மற்றும் ஆஸி அணிகள் மோதின. மேற்கிந்திய சாம்பியன் ஆனது. இதுவரை 6 தடவைகள் மேற்கிந்தியத் தீவுகள் சாம்பியன் ஆனது.

ஆஸி அணி இரண்டாவது தொடரில்(1980 1981) முதன் முறை சாம்பியனானது. இதுவரை 18 தடவை சாம்பியாகி இத்தொடரில் தங்களது ஆதிக்கத்தை என்றும் நிலைனாட்டிவருகின்றார்கள். 5 தடவை இத்தொடரில் விளையாடிய இந்தியாவும் 7 தடவை விளையாடிய இலங்கையும் ஒரு தடவை கூட சாம்பியன் ஆகவில்லை. 1996 97களில் விளையாடிய பாகிஸ்தான் அந்த வருடம் சாம்பியனாகிய ஒரே ஒரு ஆசிய அணியாகும். தவிர தென்ஆபிரிக்கா ஒரு தடவையும் கடந்தவருடம் நடந்தபோட்டியுடன் சேர்த்து இங்கிலாந்து இரண்டு தடவையும் சாம்பியனானது.

மூன்று அணிகளின் பலம் பலவீனத்தைப் பார்ப்போம்.

ஆஸ்திரேலியா

ஆஸியைப் பொறுத்தவரை பொண்டிங் தலைமையில் அனுபவவீரர்கள் பலருடன் சில இளம் வீரர்களையும் கொண்டிருக்கிறது. துடுப்பாட்டத்தில் ஹைடன், கிளார்க், பாண்டிங், அதிரடி கில்கிறிஸ்ட்(இவரது இறுதித் தொடர்),சைமண்ட்ஸ், மைக் ஹசே என அதிக பலத்துடன் காணப்படுகின்றது. பந்துவீச்சில் வேகங்கள் பிரட் லீ, ஜோன்சன்,பிராக்கனுடன் சுழலில் பிரட் ஹக்கும் பகுதி நேரத்தில் சைமண்ட்ஸ்,ஸ்ருவர்ட் கிளார்க், ஹோப்ஸ் என பலத்துடனே காணப்படுகின்றது.

பலம்:
1. சொந்த மண், பழகிய காலநிலை.
2. துடுப்பாட்டம், பந்துவீச்சு, சகலதுறை என சகலதிலும் திறமையான வீரர்கள்.
3. உல‌க‌ச் சாம்பிய‌ன்.

ப‌ல‌வீன‌ம் :

1. வீர‌ர்க‌ளின் வாய்ப்பேச்சுக‌ளும், மைதான‌த்தில் ஒழுங்கீனமாக‌ ந‌ட‌த்த‌ல்.

இந்தியா:


முதன் முறையாக டோணி தலைமையில் இளம் இரத்தங்கள் பங்குகொள்ளும் போட்டி. சச்சின், சேவாக், யுவராஜ், ஹர்பஜன் தவிர்ந்த அனைவரும் 100 போட்டிகளுக்கு குறைவாக விளையாடியவர்கள். துடுப்பாட்டத்தில் சேவாக், சச்சின், கம்பீர், யுவராஜ், உத்தப்பா, டோணி எனப் பலர். சகல துறையில் பதான். பந்துவீச்சில் வேகங்கள் பதான். ஸ்ரீ சாந், முனாப் பட்டேல், இசாந் சர்மா, பிரவீன் குமார் என நீளும் வரிசை. சுழலில் ஹர்பஜன், பியூஸ் சாவ்லா, மனோஜ் திவாரி ஆகியோருடன் பகுதி நேரமாக சேவாக், சச்சின், யுவராஜ் ரெய்னா போன்றோரும் மிரட்டத் தயாராக உள்ளனர்.

பலம்:
1. இளம் கன்று பயமறியாது இளம் வீரர்கள். இதுவே முக்கிய பலவீனமாகும்.
2. சச்சின், சச்சின், சச்சின்.

பலவீன‌ம்:
1. இள‌ம்வீர‌ர்க‌ள் என்பதால் போதிய‌ அனுப‌வ‌ம் இல்லாமை.
2. த‌டுமாறும் ம‌த்திய‌ வ‌ரிசைத் துடுப்பாட்ட‌ வீர‌ர்க‌ள்.


இலங்கை:


அடுத்து மஹேல ஜெயவர்த்தனவின் தலைமையிலான இலங்கை அணியை எடுத்துக்கொண்டால். இறுதியாக இங்கிலாந்துடனான ஒரு நாள்போட்டியில் சொந்த மண்ணில் தொடரை பறிகொடுத்த கவலையுடன் இருக்கும் அணி. ஜெயசூரியா, தரங்கா, சங்ககாரா, தில்ஷான், ஜெயவர்த்தன, ம‌ஹுரூப் என அதிரடியாக மிரட்டும் வீரர்கள். பந்துவீச்சில் வாஸ், மாலிங்கா போன்ற வேகங்களுடன் சுழல் மாயவித்தை மன்னன் முரளி.

பலம்:

1. போராட்டகுணம்.
2. பலமான மத்திய தரவரிசை.

பலவீனம்:
1. அண்மைக்காலமாக சமிந்த வாஸின் பந்துவீச்சு எடுபடாமை,
2. ஜெயவர்த்தனவின் துடுப்பாட்டம் சமீபகாலமாக சோபிக்காமை.

பொறுத்திருந்துபார்ப்போம் வெல்லப்போவது மீண்டும் ஆஸியா? அல்லது முதன் முறையாக இந்தியா அல்லது இலங்கையா?

0 கருத்துக் கூறியவர்கள்: