அடடா எத்தனை நாட்களுக்குப் பின்னர் இப்படி ஒரு அழகான கவிதைபோன்ற தமிழ்ப் படம். அடிதடி இல்லை இரட்டை அர்த்த வசனம் இல்லை குத்துப்பாட்டில் தொப்புள் தரிசனம் இல்லை என தமிழ் சினிமாவின் பல நம்பிக்கைகளை உடைத்த படம். தெலுங்குப்படத்தின் ரீமேக் என்றாலும் அதனையும் சுவையாகத் தந்திருக்கிறார் இயக்குனர் ராஜா.
மகன் தந்தைக்கு இடையில் நடக்கும் பிரச்சனைதான் கதை. இடையில் நிச்சயதார்த்தம் காதல் என சில தவிர்க்கமுடியாத சம்பவங்களை நிறைய நகைச்சுவை கலந்து அசத்தியிருக்கிறார் இயக்குனர் ராஜா.
படத்தின் கதையை நேரில் திரையில் பாருங்கள்( நிச்சயம் கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல் திரையில் பார்க்கலாம்). விரும்பினால் உங்கள் தந்தையோ தாயோ ஸ்பொன்சர் செய்து பார்ப்பது இன்னமும் நல்லது.
நடிகர்களுக்கிடையிலான போட்டியில் முதலிடம் பெறுவது என்னவோ இதுவரை காலமும் பெயர் சொல்லும்படியாக எந்தப் படத்திலும் நடிக்காத ஹரிணி சாரி ஜெனிலீயாதான். 
அவரின் பெயர் ஹாசினி. இப்படியான பெண்களை நிஜத்தில் காண்பது அரிது. பிச்சைக்காரன் முதல் கொண்டு அனைவரிடம் நட்புடன் இருப்பது, எந்த நேரமும் வாய்மூடாமல் பேசியபடியே இருப்பது பின்னர் ஜெயம் ரவிக்கு தன் காதலைச் சொல்லும் விதம் என முற்பாதியில் விறுவிறுப்பாக பேட்டிங் செய்த அம்மணி கிளைமாக்ஸ் சீனில் பிரகாஸ்ராஜ்யுடன் பேசும் காட்சிகளில் சென்சரியே அடித்துவிட்டார். அதிலும் இரண்டாம் பாதியில் ஜெயம் ரவியின் வீட்டில் தங்கியிருக்கும் காலத்தில் ரவியின் குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் தன் வலையில் வீழ்த்தும் காட்சிகளில் செம கலக்கல். சில இடங்களில் ஓவர் டோஸ் போல் தெரிகின்றதை கொஞ்சம் குறைத்திருந்திருக்கலாம். இதே பாத்திரத்தை நம்ம அசின் செய்திருந்தால் இன்னமும் பிரமாதப்படுத்தி இருப்பார்.
அடுத்த விருது நம்ம செல்லம் பிரகாஸ்ராஜ்யுக்குத்தான். மனிசன் எந்தப் பாத்திரத்தைக் கொடுத்தாலும் அசராமல் நடிக்கின்றார். எம் குமரனில் கண்டிப்பான தகப்பனாக இருந்தவர் இதில் அதிகம் அன்பைப் பொழிகின்றார் ஆனால் அந்த அன்புதான் தனக்கும் தன் மகனுக்கு எதிரி எனத் தெரியாமல். இறுதிக்காட்சியில் ஜெனிலீயா வீட்டு வாசலில் நிற்பதும் தன் மகனுக்காக சாயாஜி ஷிண்டேயுடன் சண்டைபோடுவதும் என தன் பங்குக்கு செல்லமும் நன்றாக உழைத்திருக்கிறார்,
மூன்றாவதுதான் ஹீரோ ஜெயம் ரவி. அண்ணன் உடையான் எதற்க்கும் அஞ்சான் என்பதுபோல் தன் அண்ணனை நம்பி மீண்டும் ஜெயித்திருக்கிறார். இவரது நடிப்பும் குரலும் நன்றாக மெருகேறிவிட்டன. குடித்துவிட்டு தந்தையைத் திட்டும் காட்சிகளிலும், சாயாஜி ஷிண்டேயுடன் வம்புக்கு போகும் காட்சிகளிலும் இறுதியாக பிரகாஸ்ராஜை எதிர்த்துப்பேசும் காட்சிகளிலும் தன் நடிப்பை நன்றாக காட்டியுள்ளார்.
கீதா ஜெயம் ரவியின் அம்மாவாக வந்து பொதுவாக எல்லாம் அம்மாக்கள் போலவும் மகனுக்காக பரிந்துபேசுகின்றார். இவர் பாட்டுப் பாடுவதாக காட்டியிருப்பார்கள் ஏனோ அந்தக் குரல் இவருக்கு பொருந்தவில்லை.
சந்தானம், சத்யன் , பிரேம்ஜி, காதலிக்க நேரமில்லை ஸ்ரீ (ஸ்ரீ நாத்) கொமடியில் கலக்குகின்றார்கள். முற்பாதியில் இவர்களின் லூட்டியில் தியேட்டரே அதிர்கின்றது. அதிலும் சந்தானம், பிரேம்ஜி, ஸ்ரீ பிரகாஸ்ராஜைச் சந்திக்கின்ற காட்சிகள் அசத்தல்.
எம் எஸ் பாஸ்கரும் அப்துல் கலாம் கெட்டப் எல்லாம் போட்டு தன் பங்குக்கு சிரிக்கவைக்கின்றார்.
சடகோபன் ரமேஸ் இந்தப் பிட்சிலும் ஸ்கோர் பண்ணவில்லை. ஏனோ தானோ என வந்துபோகின்றார். இதே கதிதான் கெளசல்யாவுக்கும் எந்த நேரமும் போனில் பேசிக்கொண்டிருக்கும் பாத்திரம், இவரை விட அந்த பேசியல் செய்யும் தங்கை அதிகம் கவருகின்றார்.
தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் பாடல்கள் கேட்க வைக்கும் ரகங்கள். பின்னணி இசையிலும் குறை சொல்ல ஒன்றும் இல்லை.
சாதாரண தந்தை மகன் உறவுக்கு அழகான திரைகதையாலும் கவிதைத்தனமான சில வசனங்களாலும் முகம் சுழிக்க வைக்கதா நகைச்சுவையாலும் ரீமேக் படத்தையும் தன்னால் வெற்றிகரமாக தரமுடியும் என நிரூபித்த ராஜாவுக்கு பூந்தோட்டத்தையே பரிசளிக்கலாம்.
படத்தில் சில குறைகள் இருந்தாலும் ரோஜாப்பூவில் முற்கள் இருப்பதுபோல் அவற்றைப் பார்த்தால் சந்தோஷ் சுப்பிரமணியம் சந்தோசமான படம்.
தொலைதூர காதல்
-
*கண்கள் சந்திக்காமல் இதயங்கள் சந்தித்த ஒரு கற்பனை காதல் கதை *
அத்தியாயம் 1
ஒரு “ஹலோ”வில் தொடங்கிய காதல்
ஒரு இணையவழி சந்திப்பு...
அது எப்படி நிகழ்ந்தது என...
2 days ago
