ஓம் சாந்தி ஓம்

ஓம் சாந்தி ஓம் - திரைவிமர்சனம்

நேற்று பிற்பகல் என் மீடியா நண்பர் ஒருவர் இரவு ஓம் சாந்தி ஓம் படத்தின் பிரிவியூ ஷோவுக்கு போகவேண்டும் ஆயுத்தமாக இருக்கவும். நானும் பிரியாக வாற சான்சை ஏன் விடுவான் என்பதுடன் முதல்முதலாக தீபிகா படுகோனை திரையில் பார்க்கும் மகிழ்ச்சியுடனும் தயாரானேன்.

சரியாக ஆறரைமணியளவில் என் நண்பன் என் இருப்பிடத்துக்கு வந்தான் நாம் இருவரும் வெளியே கிழம்பியதுதான் தாமதம் மழை கொட்டத்தொடங்கியது. இருவரும் புரோகிராமைக் கான்சல் செய்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பலாம் என்றால் அவனுக்கு உத்தியோகபூர்வமாக எப்படியும் படத்தைப் பார்த்து எதிர்வரும் ஞாயிறு அவனுடைய பத்திரிகைக்கு விமர்சனம் கொடுக்கவேண்டும். இதனால் இருவரும் பஸ்சில் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு ஒரு ஓட்டோ ஒன்று பிடித்து திரையரங்கத்தை அடைந்தோம்.

7 மணிக்கு தொடங்கவிருந்த படம் சில பிரமுகர்களின் வருகையால் சற்றுத்தாமதமாகி 7.25 மணிக்குத்தான்ஆரம்பித்தது.



முதலில் 30 வருடங்களுக்கு முன்னர் என்ற டைட்டிலுடன் படம் ஆரம்பித்தது. ஒரு ஸ்ரூடியோவில் ஏதோ ஒரு படத்தின் சூட்டிங் நடக்கின்றது. ஓம் பிரகாஸ் மஹிஜாவும் (ஷாருக்கான்) அவரது நண்பர் பப்புவும்(ஸ்ரேயாஸ் தல்படே) ஜீனியர் ஆர்ட்டிஸ்ட். ஷாருக்கின் கனவு தான் ஒரு நாள் ஹிந்தித் திரையுலகின் சூப்பர் ஸ்ரார் ஆகவேண்டும் என்பதுதான் அதற்க்கு அவரது நண்பர் பப்பு நீ சூப்பர் ஸ்ரார் ஆகவேண்டும் என்றால் முதலில்
உன் பெயரை ஓம் கண்ணா அல்லது ஓம் கபூர் என மாற்று இல்லையென்றால் உன்னால் சூப்பர் ஸ்ராராக முடியாது என்கிறார்.

ஓமின் ஆசைகளில் ஒன்று தான் சூப்பர் ஸ்ராராகியவுடன் சுழலும் வட்டவடிவான கட்டிலிலிருந்து காலையில் நித்திரையால் எழும்பொழுது தன்னுடைய கால்கள் அழகான வெல்வெட் பாதணிகளைத் தாங்கவேண்டும், தனக்கு ஜூஸ் கொடுக்க ஒரு வேலையாள், ஜூஸ் குடித்தபின்னர் அந்த கப்பை எறிய அதனை பிடிக்க இன்னொரு வேலையாள், இப்படியான கனவு ஓமின் கனவு.

சூப்பர் ஸ்ரார்கனவில் மிதக்கும் ஷாருக்கின் கனவுக்கன்னி சாந்திப்பிரியா(தீபிகா படுகோன் அதாங்க நம்ம டோணியுடன் கிசுகிசுக்கப்படுபவர்). ஒரு நாள் ஒரு படப்பிடிப்பில் தீப் பிடிக்கும் காட்சி ஒன்றில் நிஜமாகவே தீப்பற்றிக்கொள்ள தீபிகா தீயினுள் அகப்பட்டுக்கொள்வார். அந்தப் படத்தின் நிஜக் ஹீரோ பயத்தில் அலற ஜீனியர் ஆர்ட்டிஸ் தீக்குள் பாய்ந்து தீபிகாவைக் காப்பாற்றிவிடுவார்.

பின்னர் வழமையான திரைக்கதைபோல ஷாருக்குக்கு தீபிகாமேல் காதல் வருகிறது தீபிகாவும் ஷாருக்குடன் டின்னர் போகின்றார் கனவில் அரைகுறை ஆடைகளுடன் ஆடுகின்றார். ஷாருக்குக்கு ஒரு காதலர் போல் உள்ள பரிசு ஒன்று அளிக்கின்றார். இந்த வேளையில் தான் முகேஸ் மெஹ்ராவுக்கும்(அர்ஜூன் ராம்பால்)தீபிகாவுக்கும் உள்ள
தொடர்பு ஷாருக்குக்கு தெரியவருகின்றது. முகேஸ் மெஹ்ரா ஓம் சாந்தி ஓம் என்ற பிரமாண்டமான படத்தை சாந்திப்பிரியாவை வைத்த எடுக்க நினைக்கின்றார். இந்த வேளையில் இவருக்கும் சாந்திப்பிரியாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு என்ன நடக்கின்றது என்பது தான் இடைவேளைக்கு முன்னால் வரும் ஒரு கிளைமாக்ஸ்.

30 வருடங்களுக்கு பின்னர் 2007 என டைட்டில் கார்ட்.

இடைவேளைக்கு பின்னர் ஷாருக் கண்ட கனவுபோல் காட்சிகள் வருகின்றது, இவரின் தந்தை முன்னாள் பிரபல நடிகர் ராஜேஸ் கபூர் , ஷாருக்கின் பெயர் ஓம் கபூர். இந்த ஷாருக் முற்றிலும் மார்டேன் ஆன புதியவராக இருக்கிறார். இவருக்கு மூன்று அழகிகள் உதவியாளர்கள்.

ஓம் கபூர் தான் நினைத்தபடி இந்த வருடத்துக்கான பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருது பெறுகின்றார் இவருடன் போட்டியிட்டவர்கள் அபிசேக் பச்சானும்( ஏனுங்க நம்ம தலைவி ஐஸ்வர்யா ராயை விருது வாங்கும் விழாவுக்கு அழைத்து வரவில்லை), அக்சய் குமாரும். எந்தவித பந்தாவும் இல்லாமல் இந்த கொஞ்சூண்டு கேரட்டரில் நடித்த இருவருக்கும் பாராட்டுக்கள். விருது முடிந்ததும் ஒரு பிரமாண்டமான பாடல், ஹிந்தித் திரையுலகின் அனைத்து நடிகர் நடிகைகளும் பங்குபெறுகிறார்கள்( தமிழில் ஒரு நடிகரின் படத்தில் இன்னொரு பிரபல நடிகர் முகத்தைக் காட்டுவதையே ஏதோ கொலைக்குற்றம் போல் பேட்டி கொடுப்பார்கள்).

அதே விருந்தில் ஓம் கபூர் முகேஸ் மெஹ்ராவைச் சந்தித்து 30 வருடங்களுக்கு முன்னர் தடைப்பட்ட ஓம் சாந்தி ஓம் படத்தை தன்னை வைத்து தயாரிக்கும் படி கூறுகின்றார். இதன் பின்னர் நடக்கும் சம்பவங்களைச் சொன்னால் படம் பார்க்கும் சுவாரஸ்யம் குன்றிவுடும். ஆகவே படம் பார்க்கவிரும்பும் அன்பர்கள் திரையிலோ இல்லை வீசிடியிலோ பார்த்து மகிழ்க.எதிர்வரும் 9 ந்திகதி இந்தத் திரைப்படம் திரைக்கு வருகின்றது.

இனி இப்படத்தின் பின்னால் இருந்தவர்களைப் பார்ப்போம்.

கதை, திரைக்கதை, இயக்கம் : ஃபாரா கான் பிரபல நடன இயக்குனர். நடன இயக்கமும் இவரே. பல காட்சிகளில் இவரின் திறமை தெரிகின்றது. ஆனால் சில இடங்களில் 30 வருடத்துக்கு முன்னைய காலகட்டத்தில் சில இடங்களில் கொஞ்சம் தடுமாறியுள்ளார். அதேபோல் ஓம் கபூரின் நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்கள் அவரின் பெற்றோருக்கு தெரியாமலிருப்பதிலும் நோ லாஜிக் ஒன்லி மாஜீக். மற்றும்படி சிறந்த பொழுதுபோக்குப் படம் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

இசை : விஷால் அன்ட் சேகர் பாடல்கள் கேட்கும் படி இருக்கின்றன.

கலை : சாபு சிரில் ஓம் சாந்தி ஓம் சூட்டிங் நடக்கும் ஸ்ரூடியோ பிரமிக்க வைக்கின்றது அதிலும் இரண்டு கிளைமேக்ஸ் காட்சிகளிலும் கலக்கல். ஒரு பாடலிலும் சிறந்த கலைவடிவம்.

ஒளிப்பதிவு : மணிகண்டன்( அந்னியனில் சங்கருடன் பணியாற்றியவர் ஷாருக்கின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் )சிறந்த ஒளிப்பதிவு முதல் பாடலில் திரையை படம் பிடித்தால் ஏற்படும் எபெக்ட் கொடுத்திருப்பார்.

மிகவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விடயம் ஃபாரா கானுக்காக ஹிந்தித் திரையுலகின் பலர் இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியதுதான் . அவர்களுக்கு முதலிலேயே நன்றி சொல்லிவிட்டார்கள்.




இறுதியாக என்ன சொல்கிறாகள் என்றால் சில காதல் கதைகளுக்கு ஒரு வாழ் நாள் போதாது.

For some Dreams one lifteime is not enough

பின் குறிப்பு :
இந்தப் படத்துக்கும் நடிகை பூஜாவுக்கு என்ன தொடர்பு என்றால் ஹிஹிஹி ஒன்றும் இல்லை. அவர் நான் பார்த்த பிரிவியூ ஷோ பார்க்க தனது தாயாருடன் வந்திருந்தார். மேக்கப் இல்லாமல் வந்தபடியால் முதலில் அடையாளம் காண்பது கஸ்டமாக இருந்தது.

9 கருத்துக் கூறியவர்கள்:

கானா பிரபா சொல்வது:

பதிவுக்கு நன்றி வந்தியத் தேவன், நான் பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் படம்

வந்தியத்தேவன் சொல்வது:

நன்றிகள் பிரபா.
நீங்கள் படத்தைப் பார்த்தபின்னர் உங்கள் பாணியில் ஒரு பதிவு போடுங்கள். புனர் ஜென்ம நினைவுகளுடன் சந்திரமுகி தவிர்ந்த வேறு தமிழ்ப் படங்கள் வெளிவந்ததா?

கானா பிரபா சொல்வது:

மறுபிறப்பு படம் நிறைய இருக்கு, நெஞ்சம் மறப்பதில்லை, எனக்குள் ஒருவன் என்று ஒரு பெரிய பட்டியல் போடலாம்.

தாசன் சொல்வது:

இது தொடர்பான தகவலும் இன்றைய பேப்பரில் பார்த்தேன். பதிவுக்கு நன்றி, தீபாவளி வாழ்த்துக்களும்.

வந்தியத்தேவன் சொல்வது:

அப்படியா எனக்கு ஞாபகம் இல்லை . ஏன் கேட்டேன் என்பதை படம் பார்த்தபின்னர் தெரிந்துகொள்வீர்கள். தாசன் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.

பல ஆங்கில சிங்கள பத்திரிகையாளர்கள் சமூகம் அளித்திருந்தனர். தமிழ்ப் பத்திரிகையாளர்கள் ஒருசிலர்தான். ஏனோ தெரியவில்லை சில தமிழ்ப் பத்திரிகையாளர்கள் சமூகம் அளிப்பதில்லை. அதே நேரம் பல சிங்கள திரைப்பட , தொலைக்காட்சி நடிக நடிகைகள் சமூகம் அளித்திருந்தனர்.

லக்கிலுக் சொல்வது:

சிவாஜிகணேசன் நடித்த பிராப்தம் மறுஜென்ம நினைவுகள் குறித்த அருமையான படம். ஒரு சூப்பர்ஹிட் பாடல் கூட அப்படத்தில் உண்டு.

வந்தியத்தேவன் சொல்வது:

வருகைக்கு நன்றிகள் லக்கி. சிவாஜிகணேசனின் படத்தை எப்படியும் சில நாட்களில் கலைஞர் டீவியில் ஒளிபரப்புவார்கள், அந்த நேரம் அந்தப் படத்தைப் பார்த்துவிடவேண்டும்.

Santhosh சொல்வது:

தல செம மொக்கையான படம்.. சோலியை முடிச்சிடாங்கப்பூ முடிச்சிடாங்க.. அடாத மழையில விடாம் போயி பாத்தோம்.. படம் பாத்துட்டு ரொம்ப பீல பண்ணேன். ஆமா அடுத்த தபா பூஜா வந்தா சொல்லுங்க நானும் உங்களோட ஜாயின் பண்ணிக்கிறேன் :D

சீனு சொல்வது:

நானும் 2 நாட்களுக்கு முன் தான் பார்த்தேன். அட்டகாசமான திரைக்கதை. கதை அரதப் பழசு தான். ஆனால் அதை கையாண்ட விதம் சூப்பர்.

மேலும், ஹிந்தி திரையுலகின் வரலாற்றை தெரிந்து கொண்டு படம் பார்த்தால் படத்தில் நகைச்சுவை புரியும்.

உதா, காளி என்ற வார்த்தைகள் வரும் படங்கள் எடுக்கப்பட்டபொழுதெல்லாம் விபத்துக்கள் நடந்திருக்கின்றன. "மகாகவி காளிதாஸ்", எடுக்கும் பொழுது பெரும் விபத்து நடந்து செட் முழுவதும் எரிந்தது (அதன் அடிப்படையில் தான் இந்தப்படம் எடுக்கப்பட்டது). "காளி" தமிழ் படம் எடுத்த பொழுது அதன் 4 ஸ்டென்ட் நடிகர்கள் விபத்தில் இறந்தார்கள்.

//ஒரு நாள் ஒரு படப்பிடிப்பில் தீப் பிடிக்கும் காட்சி ஒன்றில் நிஜமாகவே தீப்பற்றிக்கொள்ள தீபிகா தீயினுள் அகப்பட்டுக்கொள்வார். அந்தப் படத்தின் நிஜக் ஹீரோ பயத்தில் அலற ஜீனியர் ஆர்ட்டிஸ் தீக்குள் பாய்ந்து தீபிகாவைக் காப்பாற்றிவிடுவார்.//

இந்த காட்சி சுனில்தத் (சஞ்சய் தத்தின் அப்பா) நர்கீஸை காப்பாற்றி பின் காதல் மணம் புரிந்து கொண்டார் (சஞ்சய் தத்தின் தாயார்). அதை மையப்படுத்தி எடுக்கப்பட்டது.

மேலும் ஒவ்வொரு காட்சியும் ஏதாவது ஒரு நிகழ்வை ஒட்டியே எடுக்கப்பட்டது. அமிதாப் ஃபிலிம் பேர் அவார்டில் "ஓம் ப்ரகாஷ்? யாரது?" என்ற கேட்டது அவர் கொஞ்ச வருடம் முன் ஷாருக்கை பார்த்து கேட்டது. ஷாரூக் மாலை 4 மணிக்கு ஷூட்டிங் வந்து ஒரே ஷாட் மட்டுமே எடுப்பது உண்மையிலேயே ஷாரூக் செய்தது. ஷஷிகபூர் - ஷர்மிளா தாகூர் போல பேட்மின்டன் ஆடுவது.

அக்ஷய் குமாரின் கிலாடி திரைப்படத்தை கந்தலாக்கியிருப்பார்கள். அபிஷேக் பொருமுவது...எக்ஸலன்ட்.

அதுவும் அந்த கிளைமேக்ஸ் ட்விஸ்டும் ஓ.கே.

இந்த படம் 15 வருடங்களுக்கு முன் வரும் ஹிந்தி படங்களின் அக்மார்க் லொள்ளு சபா...(படத்தின் திரைக்கதை உட்பட).