நாம் யார் ? (Who We Are?)

நாம் யார் ? (Who We Are?)

வளமையான 
வாழ்விற்காக 
இளமைகளை 
தொலைத்த 
துர்பாக்கியசாலிகள்
 ! 

வறுமை என்ற 
சுனாமியால் 
கடலோரம்

கரை ஒதுங்கிய 
அடையாளம் தெரிந்த
நடை பிணங்கள் ! 

சுதந்திரமாக 
சுற்றி திரிந்தபோது 
வறுமை எனும் 
சூறாவளியில் சிக்கிய 
திசை மாறிய பறவைகள் !

நிஜத்தை தொலைத்துவிட்டு
நிழற்படத்திற்கு 
முத்தம் கொடுக்கும் 
அபாக்கிய சாலிகள் ! 

தொலைதூரத்தில்
இருந்து கொண்டே
தொலைபேசியிலே
குடும்பம் நடத்தும் 
தொடர் கதைகள் ! 

கடிதத்தை பிரித்தவுடன் 
கண்ணீர் துளிகளால் 
கானல் நீராகிப் போகும் 
மனைவி எழுதிய
எழுத்துக்கள் ! 

ஈமெயிலிலும் 
இண்டர்நெட்டிலும் 
இல்லறம் நடத்தும் 
கம்ப்யூட்டர் வாதிகள் 

நலம் நலமறிய
ஆவல் என்றால் 
பணம் பணமறிய 
ஆவல் என கேட்கும் 
 . டி எம் . மெஷின்கள் ! 

பகட்டான
வாழ்க்கை வாழ
பணத்திற்காக 
வாழக்கையை 
பறி கொடுத்த 
பரிதாபத்துக்குரியவர்கள் ! 

 சி காற்றில் 
இருந்துக் கொண்டே 
மனைவியின்
மூச்சுக்காற்றை
முற்றும் துறந்தவர்கள் !

வளரும் பருவத்திலே 
வாரிசுகளை
வாரியணைத்து 
கொஞ்சமுடியாத 
கல் நெஞ்சக்காரர்கள் ! 

தனிமையிலே 
உறங்கும் முன் 
தன்னையறியாமலே 
தாரை தாரையாக
வழிந்தோடும்
கண்ணீர் துளிகள் ! 

அபஷி என்ற அரபி 
வார்த்தைக்கு 
அனுபவத்தின் மூலம் 
அர்த்தமானவர்கள் !

உழைப்பு என்ற
உள்ளார்ந்த அர்த்தத்தை 
உணர்வுபூர்வமாக
உணர்ந்தவர்கள்!

முடியும் வரை
உழைத்து விட்டு
முடிந்தவுடன்
ஊர் செல்லும் 
நோயாளிகள் 

கொளுத்தும் வெயிலிலும் 
குத்தும் குளிரிலும் 
பறக்கும் தூசிகளுக்கும் 
இடையில் பழகிப்போன 
ஜந்துகள் ! 

பெற்ற தாய்க்கும் 
வளர்த்த தந்தைக்கும் 
கட்டிய மனைவிக்கும் 
பெற்றெடுத்த குழந்தைக்கும் 
உற்ற குடும்பத்திற்கும்

உண்மை நண்பர்களுக்காகவும்
இடைவிடாது உழைக்கும் 
தியாகிகள்


நண்பர் ஒருவர் மின்னஞ்சலில் அனுப்பிய கவிதை. எழுதியவர் யார் எனத் தெரியவில்லை.

3 கருத்துக் கூறியவர்கள்:

Anonymous சொல்வது:

:(
மனது கனக்கின்றது

S.Lankeswaran சொல்வது:

இந்தக் கவிதையைப் படிக்கும் போது பொருளாதார நிலை ஒன்றிக்கா மட்டுமே மத்திய கிழக்கு நாட்டு ஒன்றில் தங்கி வேலைப்பார்க்கும் என் அண்ணாவின் நினைவுகள் தான் என் கண்முன் வந்தது, கண்கள் கலங்கி விட்டது.

Hindu Marriages In India சொல்வது:

மிகவும் அருமை