காதல் உணர்வுபூர்வமானதா அறிவுபூர்வமானதா?

காதல் உணர்வுபூர்வமானதா அறிவுபூர்வமானதா?

எனது முதல் பதிவாக என்ன போடலாம் என்று தலையைச் பிச்சுக்கொண்டிருந்த வேளை நான் ஏன் காதல் பற்றி எனது முதல் பதிவு இருக்ககூடாது என யோசித்து அதையே கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணி எழுதுவம் என எண்ணி என் முதல் உளறலாக காதலை உளறுகிறேன் பார்த்தியலா காதல் என்றாலே உளறல்தான்.

ஆதாம் ஏவாள் காலத்திலிருந்து இந்த காதல் என்ற மூன்று எழுத்து சமாச்சாரம் மனித சமூகத்தை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டது. அதிலும் இந்த ஹைடெக் காலத்தில் அது ஒரு பொழுது போக்கு அம்சமாகி மாறியதுதான் ரொம்பக் கொடுமை.

கண்டதும் காதல் இன்று நேற்று அல்ல இராமாயண காலத்திலேயே தொடங்கிவிட்டது. அதுதான் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான். தற்போது அண்ணனும் நோக்கியா அவளும் நோக்கியா என மாறிவிட்டது. 2000 வருடத்தில் நோக்கியா என்ற ஒரு மொபைல் போன் வரும் என அன்றே கம்பன் அறிந்துவிட்டான் போலும் (பல கவிஞர்கள் தீர்க்கதரிசிகள்).

காதலுக்கு விஞ்ஞானரீதியிலான விளக்கமாக இருவேறு பாலினர் ஏற்படும் ஒருவகையான ஹோமோன்களின் மாற்றமே காதல். வேறு சிலர் ஒரேமாதிரியான அலைவரிசை உடைய இருவரிடம் ஏற்படும் மாற்றம் காதல் என்கின்றனர். விஞ்ஞான ரீதியாக எடுத்துகொண்டால் காதல் உணர்வுபூர்வமானது அதாவது உணர்ச்சிவசப்படுவது அல்லது வசப்படுத்துவது.

அடுத்து இன்றைய நாளில் பல காதல்கள் வெறும் இனக்கவர்ச்சி என பலராலும் சிலாகிக்கப் படுகிறது. அதிலும் உண்மையில்லாமல் இல்லை வெறும் கவர்ச்சிக்காக அல்லது காதலிக்காமல் விட்டால் தமது ஸ்டேஸ்டட் ஏதோ குறைந்துவிடும் என எண்ணி தீர யோசிக்காமல் காதல் வலையில் ஆண்களும் பெண்களும் பலர் உள்ளனர். இத்தகைய சமயங்களில் காதல் அறிவுபூர்வமானது என்ற கருத்து அடிபட்டுப்போகிறது.

அறிவுபூர்மான காதல் என்றால் என்ன? நீங்கள் காதலிக்கும் பெண்ணோ ஆணோ உங்களுக்கு ஏற்றவரா? உங்கள் எதிர்காலம் இவரினால் மேம்படுமா? உங்களிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றனவா? விட்டுகொடுப்புகளுக்கு இடமிருக்கா? என பல வேறுபட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்து அவை உங்களால் முடியும் என நினைத்தால் காதலிக்கலாம் இல்லாவிட்டால் காதலுக்கும் உங்களுக்கும் வெகு தூரம்.

சிலர் நினைக்கலாம் இப்படியெல்லாம் நினைத்தால் அது எப்படிக் காதலாகும் என்று. அது தவறு காதலைப் பொறுத்தவரை உடனடித் தீர்மானத்தின் பார்க்க நீண்ட அல்லது நன்று யோசித்த ஒரு முடிவு எப்பவும் நன்மையாகும்.

காதல் இன மொழி மத சாதி வேறுபாடுகளை உடைக்கின்றது என்பது எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையோ அதே அளவு இரு வேறுபட்ட இன மொழி மத சாதியினரிடம் பகையையும் வளர்க்கின்றது. சிலவேளைகளில் உறவினர்களிடையே ஏற்படும் காதல் அவர்களிடையே பிளவை ஏற்படுத்தியுள்ளது.

எல்லோரும் ஏதோவொரு கட்டத்தில் இந்த காதலைக் கடந்துவந்திருப்பீர்கள். சிலருக்கு வெற்றியளித்திருக்கலாம் சிலருக்கு வெறுப்பளித்திருக்கலாம். தோல்வியளித்திருக்கலாம் என நான் கூறவில்லை. ஏனெனில் காதல் ஒருபோதும் தோற்றதில்லை. காதலர்கள் தான் தோற்றுள்ளனர். லைலா மஜ்னுவிலிருந்து தோற்ற காதலர்கள்தான் பெரிதாக பேசப்படுகிறார்களே ஒழிய வெற்றியடைந்த காதலர்கள் பற்றி ஒருவரும் கதைப்பதில்லை.

காதலைப் பற்றிய எனது கருத்து திருமணமுடிக்கும் மனைவியையோ அல்லது கணவனையோ காதலிப்பது சிறந்ததாகும்.

4 கருத்துக் கூறியவர்கள்:

லெனின் பொன்னுசாமி சொல்வது:

ஆத்தாடி..இவ்வளாவு மேட்டர் இருக்கா இதுல..!

வந்தியத்தேவன் சொல்வது:

ஏன் மச்சி இவ்வளவு நாளும் இது தெரியாமலா நமீதாவை லவ்விக்கொண்டு திரிந்தாய்

லெனின் பொன்னுசாமி சொல்வது:

லவ்வுன்னா லவ்வு..மண்ணெண்ணை ஸ்டவ்வு..! :P

Saru சொல்வது:

100% true