சாகித்திய விருது - மேமன்கவி, லோஷன்

மேல்மாகாண சாகித்திய விழா கொழும்பு எல்பின்ஸ்டன் அரங்கில் நாளை(24.11.209) மாலை 3 மணிக்கு நடைபெறவிருக்கின்றது. இவ்விழாவில் பல‌ ஊடகவியலாளர்கள், கலை, இலக்கியவாதிகள் மற்றும் சமூக சேவகர்கள் விருது பெறுகின்றார்கள்.

அந்த வகையில் வலையுலகில் அறியப்பட்ட கவிஞரும் எழுத்தாளருமான மேமன்கவியும் ஒலி/ஒளிபரப்பாளரான பா.வாமலோஷனனும் விருது பெறுகின்றார்கள்.

மேமன்கவி

மேமன்கவி (அப்துல் கரீம் அப்துல் ரஸாக், ஏப்ரல் 29, 1957) வட இந்திய குஜராத் மாநிலத்தைச் சார்ந்த மேமன் சமூகத்தில் பிறந்து ஈழத்துத் தமிழ்க் கலை இலக்கிய உலகில் தன்னை படைப்பாளியாக அடையாளப்படுத்திக் கொண்டவர்.



லோஷன்

ஒலிபரப்பாளன் என்பது எனது தொழில்.. வலைப்பதிவன் என்பது எனது முழுநேரப் பொழுதுபோக்கு எனக் கூறிக்கொள்ளும் வாமலோஷனன்(ஜீன் 5 ) என்ற ஏஆர்வி லோஷன் பிரபலமான அறிவிப்பாளர் மட்டுமல்ல பிரபலமான வலைப்பதிவரும் ஆவார். அறிவிப்புத் துறையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.



இவர்கள் இருவருடன் விருது பெறும் ஏனைய கலை, இலக்கிய ஊடகவியலாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

24 கருத்துக் கூறியவர்கள்:

Unknown சொல்வது:

ஆகா.... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....

லோஷன் அண்ணாவிற்கும் மேமன்கவி ஐயாவிற்கும் வாழ்த்துக்கள்...

தொடர்ந்து உங்கள் இருவரின் பணிகளும் தொடரட்டும்....

அதுசரி,
செய்தி இப்போது தான் கிடைத்ததா அல்லது இறுதியில் வெளியிடவேண்டும் என்று நினைத்தீர்களா? :)

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

விருது பெறும் எம்மவர்களான லோஷனுக்கும், மேமன் கவிக்கும் வாழ்த்துக்கள்.

விருது பெறும் ஏனையோருக்கும் எனது வாழ்த்துக்கள்

தங்க முகுந்தன் சொல்வது:

பதிவர்களும்
சிறந்த தமிழ் அறிஞர்களுமான இருவரையும்
நாம் மனப்பூர்வமாக வாழ்த்துகின்றோம்!
தமிழன்னைக்கு
உங்கள் அழகிய வேலைப்பாடும்
மக்களுக்கு பொன்னான சேவையையும்
தொடர்ந்தும் வழங்குங்கள்!

யுவகிருஷ்ணா சொல்வது:

விருதுபெறும் மேமன்கவி அவர்களுக்கும், லோஷன் அவர்களுக்கும் வாழ்த்துகள்!

தகவல்களுக்கு நன்றி!

Subankan சொல்வது:

விருதுபெறும் மேமன்கவி அவர்களுக்கும், லோஷன் அண்ணாவிற்கும் வாழ்த்துகள்.

Subankan சொல்வது:

நேற்று இந்தத் தகவலைத் தெரிவிக்காத வந்தி அண்ணாவை மென்மையாகக் கண்டிக்கிறேன்.

கானா பிரபா சொல்வது:

எழுத்துத்துறையில் சிறப்பானதொரு இடத்தில் இருக்கும் மேமன் கவி அவர்களுக்கும், வானொலி ஒலிபரப்புத் துறையில் தனித்துவமாக விளங்கும் லோஷனுக்கும் வாழ்த்துக்கள்.

பொருத்தமான தேர்வுகளைச் செய்த விழாக்குழுவுக்கும் நன்றி

மன்னார் அமுதன் சொல்வது:

எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும். மேமன் கவி ஐயா அவர்களின் கவிதைகள் மொழிபெயர்புச் செய்யப்பட்டு பாடநூல்களில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Atchuthan Srirangan சொல்வது:

லோஷன் அண்ணாவிற்கும் மேமன்கவி ஐயாவிற்கும் வாழ்த்துக்கள்.

ஆதிரை சொல்வது:

இரு அன்பானவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். :)

balavasakan சொல்வது:

விருது பெறும் எங்கள் லோசன் அண்ணாவிற்கு வாழத்துக்கள்...

தர்ஷன் சொல்வது:

மேமன்கவி அவர்களுக்கும், லோஷன் அண்ணாவிற்கும் வாழ்த்துகள்.தொடரட்டும் அவர்தம் பணி

Admin சொல்வது:

விருது பெறுகின்ற லோஷன் அண்ணாவுக்கும், மேமன்கவி அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இன்னும் பல விருதுகள் பெறவேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.

Muruganandan M.K. சொல்வது:

விருது பெறும் மேமன்கவி, லோஷன் இருவருக்கும் வாழ்த்துக்கள்

பால்குடி சொல்வது:

விருது பெறும் மேமன் கவி அவர்களுக்கும் லோஷன் அண்ணாவிற்கும் வாழ்த்துக்கள்.

M.Thevesh சொல்வது:

விருது பெறும் மேமன் கவி அவர்களுக்கும் என்து சக பதிவாளர்
திரு லோஷன் அவர்களுக்கும்
என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

malarvizhi சொல்வது:

விருது பெறுபவர்களுக்கு வாழ்த்துக்கள் .

மாதேவி சொல்வது:

மேமன் கவிஅவர்களுக்கும் லோஷனுக்கும் வாழ்த்துக்கள்.

ஜோ.சம்யுக்தா கீர்த்தி சொல்வது:

விருது பெரும் லோஷன் அண்ணா, மேமன் கவி ஐயா, அம்புறோஸ் பீட்டர் ஐயா மற்றும் ஏனையோருக்கும் வாழ்த்துக்கள்.

வாழ்த்தினை பதிவாக இட்ட உங்களுக்கும் நன்றிகள்

சி தயாளன் சொல்வது:

என் வாழ்த்துகள்

வானதி சொல்வது:

தகுதியானவர்களுக்கு விருதுகிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. தகுதி இல்லாதவர்களுக்கும் கிடைப்பது வருத்தமாக உள்ளது. விருதைப்பற்றி தரக்குறைவாக பத்திரிகையில் எழுதியவருக்கும் விருது கிடைத்துள்ளது.

வானதி

Unknown சொல்வது:

வாழ்த்துக்கள் வாமலோஷனன் (எ) ARV Loshan (எ) லோஷன் அண்ணா... you deserve it.

அதுசரி வந்தியர்... எங்க ஆளைக் கனநாளாக் காணேல்லை

Admin சொல்வது:

//Kiruthikan Kumarasamy said...
வாழ்த்துக்கள் வாமலோஷனன் (எ) ARV Loshan (எ) லோஷன் அண்ணா... you deserve it.

அதுசரி வந்தியர்... எங்க ஆளைக் கனநாளாக் காணேல்லை//


இந்தக் கேள்வியை கேட்க முடியுமா? அவர் இப்போ காதல் இலவரசனல்லவா? இளவரசியோடு................ (இடைவெளியை உங்களுக்கு பிடித்த சொல்லைப் போட்டு நிரப்புங்கள்)

ARV Loshan சொல்வது:

நன்றி நண்பா.. (இந்தப் படம் தானா கிடைத்தது? கைதியாகக் காட்டப்பட்ட படம் இது.. ;))

உங்களுக்கும் வாழ்த்திய ஏனைய நண்பர்களுக்கும் நன்றிகள்..