Showing posts with label வாசிப்பு. Show all posts
Showing posts with label வாசிப்பு. Show all posts

ஜேம்ஸ்பாண்டும் மாடஸ்தி பிளைசியும்

பாடசாலைகள் கல்வியை மட்டுமல்ல நல்ல நண்பர்கள், ஒழுக்கம், விளையாட்டு, வாசிப்பு மற்றும் பல விடயங்களை எமக்கு பெற்றுத்தரும் ஒரு இடம். இதனை விட என் பாடசாலைக் காலத்தில் எனக்கு அறிமுகமான ஒரு விடயம் காமிக்ஸ் புத்தகங்கள். அதிலும் ராணி காமிக்ஸ் எங்கள் பள்ளியில் மிகவும் பேமஸ்.

நான், கவி, வேந்தன், கபில்(பெயரைப் பார்த்து கிரிக்கெட் விளையாடுவான் என நினைக்கவேண்டாம்), மலர் என ஐந்துபேர்கள் பஞ்சபாண்டவர்கள் போல வகுப்பில் ஒன்றாகவே குழப்படி செய்வோம். எது கிடைத்தாலும் (வேறு என்ன அடிதான்) ஐவீரும் ஒருவீராக பகிர்ந்துகொள்ளும் நல்ல பழக்கமும் எமக்கு உண்டு.

பெரும்பாலும் மலரே ராணி காமிக்ஸ் நெல்லியடி மொடேர்ன் ஸ்ரோரிலோ அல்லது பருத்தித்துறை உதயன் புத்தகநிலையத்திலோ(டொக்டர் முருகானந்தன் மருத்துவசாலை கட்டடத்தில் இருந்த கடை) வாங்கிவருவான். அதனை நாம் அனைவரும் ஒன்றாக இருந்து வாசிப்பது வழக்கம். பெரும்பாலும் ஐந்துபேரும் ஒன்றாக இருந்தால் யாராவது சீபிளேன்கள் காட்டிக்கொடுத்துவிடுவார்கள் என்பதால் மூன்று பேர் முதலிலும் மற்ற இருவர் பின்னரும் வாசிப்போம்.

எங்கள் பாடசாலையில் அம்புலிமாமா, கோகுலம், பாலமித்ரா போன்ற புத்தகங்களுக்கு அனுமதி ஆனால் ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் போன்ற புத்தகங்களுக்கு தடா. ஏனென்றால் அவற்றில் வரும் படங்கள் சிறுவர்களைக் கெடுத்துவிடுமாம். ஏனென்றால் ஜேம்ஸ்பாண்ட் கதாநாயகியையோ அல்லது ஏனைய ஏஜெண்டையோ முத்தமிடாமல் அவரின் எந்தக் கதைகளும் வருவதில்லை. மாடஸ்தி பிளைசி பெரும்பாலும் உள்ளாடைகளுடனே துப்புத் துலக்குவ்பார். இரும்புக்கை மாயாவியும் சிலவேளைகளில் ஜேம்ஸ்பாண்டாக மாறி விடுவார். ஆகவே பாட்சாலையில் இப்படியான காமிக்ஸ் புத்தகங்களுக்கு தடை போட்டது சரிதான், ஆனால் அந்த நேரம் எமக்கு அந்த உண்மை விளங்கவில்லை. இப்போ ஜேம்ஸ்பாண்ட் படக்கதைகளை வாசித்தால் புரிகின்றது.

ஆசிரியர்களிடமும் மாணவர் தலைவர்களிடமும் பிடிபடாமல் வாசிக்க நாம் செய்யும் உத்திகள் புத்தகத்தை விஞ்ஞானம் அல்லது சமயப் புத்தகத்தின் உள்ளே வைத்து வாசிப்பது, வெளியில் இருந்துபார்த்தால் பொடியள் மும்முரமாக அப்பர் தேவாரமும் மின்குமிழின் அமைப்பும் படிப்பது போல் இருக்கும். அடுத்தது பாடசாலையில் அனுமதியுள்ள கதை கட்டுரைப் புத்தகங்களிற்குள் வைத்து வாசிப்பது. வாங்கிற்க்கு(பெஞ்ச்) அடியுள் வைத்து வாசிப்பது அதுவும் கஸ்டம் என்றால் மைதானத்திற்க்கு மற்றவர்கள் விளையாடச் செல்லும் வேளையில் அங்கே சென்று சுதந்திரமாக வாசிப்பது. நாங்கள் ஐவரும் பாடசாலையில் விளையாட்டுக்காக எதுவுமே செய்தது கிடையாது.

அதே நேரம் எமது வகுப்பில் இன்னொரு பிரிவில் கற்கும் மாணவர்கள் இந்தப் புத்தகங்களை வாடகைக்கு விடுவார்கள். ஒரு பாட நேரத்திற்க்கு 50 சதம். கொஞ்சம் பெரிய தீபாவளிச் சிறப்பிதழ், பொங்கல் சிறப்பிதழ் என்றால் புத்தகத்தின் சைசுக்கு ஏற்றபடி 1 ரூபா 2 ரூபாவாக அந்த வாடகை மாறும். வாடகைக்கு புத்தகம் விடுபவர்களின் சட்டதிட்டம் பொது நூலகத்தை விட கொடூருமானது

குறிப்பிட்ட நேரத்தில் புத்தகத்தை வாசித்துவிட்டுக்கொடுக்கவேண்டும்.

சிலவேளைகளில் அவர்களே அடுத்து யாரிடம் கொடுக்ககூடாது.

ஆசிரியர்கள் அல்லது மாணவர்கள் தலைவர்களின் கைகளில் மாட்டினால் தம்மைக் காட்டிக்கொடுக்ககூடாது.

அப்படிக் காட்டிக்கொடுத்தால் இனிமேல் காட்டிக்கொடுப்பவனுக்கு புத்தகம் வாடகைக்குத் தரப்படமாட்டாது.

புத்தகம் பிடிபட்டால் அதற்க்குரிய பெறுமதியை அவருக்கு கொடுக்கவேண்டும்.

வாசிக்கும் நேரத்தில் தனது அனுமதி இன்றி இன்னொருவருக்கு புத்தகத்தை கைமாற்றம் செய்யக்கூடாது.

ஆகக்கூடியது இருவர் மட்டும் சேர்ந்துவாசிக்கலாம்.

பாடசாலை முடிந்து வீட்டுக்கு கொண்டுபோய் வாசிப்பது என்றால் வாடகைப் பணம் இரண்டு மடங்கு.

இப்படிப் பல சட்டங்கள், நாங்கள் பொதுவாக எம்மிடையே காசைப் பங்கிட்டு எப்படியும் வாசித்துவிடுவோம். எங்கள் குறூப்புக்கு 007ம் மாடஸ்தியும் தான் பேவரிட் அதிலும் கவி இப்பவும் மாடஸ்தியின் நினைவுகளில் இருக்கின்றான். நாம் இடையிடையே சந்திக்கும் போது மீள நினைக்கின்ற விடயங்களில் பாடசாலை நாட்களில் வாசித்த இந்தமாதிரி எங்கள் சாகசங்களை நினைப்பது வழக்கம்.

அண்மையில் நாம் சந்தித்தப்போது இன்னொரு நண்பன் தான் வாசித்த ராணி காமிக்ஸை மாணவர் தலைவர் ஒருவரிடம் பறிகொடுத்து அதன் உரிமையாளருக்கு புத்தகத்தின் பெறுமதியான ரூபாய் 7.50 செலுத்திய கதையைச் சோகத்துடன் சொன்னான்.

சில காலங்களுக்கு முன்னர் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ஜேம்ஸ் பாண்ட் துப்பறியும் ஒரு ராணி காமிக்ஸ் வாசித்தேன் பல வருடங்கள் போனாலும் ஜேம்ஸ் பாண்டும் மாறவில்லை ராணி காமிக்ஸின் தரமும் மாறவில்லை. நான் வாசித்துக்கொண்டிருக்கும் போது ஏனோ பலர் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அவர்களுக்கு எங்கே தெரியும் ஜேம்ஸ்பாண்ட் மாடஸ்தி எல்லாம் ஒரு காலத்தில் எங்கள் வாழ்க்கையின் அங்கமாகவே இருந்தது.

பிற்குறிப்பு : 2010ல் ரசித்த பதிவுகள் பகுதி 2 சில நாட்களில் வெளிவரும். நேரமின்மை காரணமாக அது தாமதமாகின்றது. ஒரு பதிவு எழுத ஒரு மணி நேரம் போதும் அதுவே இங்கே கிடைப்பது கஸ்டம். அதனால் நான் தான் இடைக்கிடை மட்டும் என் இருப்பையும் தக்க வைத்துக்கொள்கின்றேன்.

வாசிப்பு ஒரு தவம்



வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான் என்பது மிகவும் உண்மை. ஒரு மனிதனை நிலைத்திருக்க வைப்பது இரண்டு விடயங்கள் ஒன்று வாசிப்பு, இன்னொன்று அனுபவம்.

சாதாரணமாக ஒரு கிராமத்தில் இருக்கும் ஒருவரால் ஏனைய நாடுகள், கலாச்சாரம், புதிய தகவல்கள் என்பவற்றை வாசிப்பதால் அறியமுடிகின்றது. வாசிப்பு என்பது வெறுமனே தினசரிகள், வார, மாத இதழ்கள் என்பதுடன் மட்டுப்படுத்தமுடியாது. எவனொருவன் பரந்துபட்ட வாசிப்புக்கு தன்னைத் தானே உள்ளாக்குகின்றானோ அவனது அறிவு மென்மேலும் வளரும். அத்துடன் வாசிப்பை குறிப்பிட்ட பகுதிகளுடன் நிறுத்துவதும் தவறானது ஆகும். உதாரணமாக சிலர் பொதுவாக நாவல்கள், சிறுகதைகள் மட்டும்தான் வாசிப்பார்கள். இன்னொரு சாராரோ கட்டுரைகள் மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்ட விடயங்களை மட்டுமே வாசிப்பார்கள். வாசிப்பதில் சகலகலா வல்லவனாக இருந்தால் உங்கள் அறிவு நிச்சயம் வளரும்.

இன்றைக்கு பலரிடம் பெரிதாக பேசப்படும் ஒரு விடயம் வாசிப்புப் பழக்கம் மிகவும் குறைந்துவிட்டது என்பதாகும். இதற்கான முக்கியகாரணம் இலத்திரனியல் ஊடகங்களின் வருகையும் அதன் தாக்கங்களும். பெரும்பாலும் பாடசாலை மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகத்தை மட்டுமே வாசித்து அறிகிறார்களே ஒழிய ஏனைய பக்கம் கண் வைப்பதே இல்லை. பாடசாலைகளில் நூலகம் இருந்தாலும் நூலகத்தில் நேரம் கழிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு.

இணையத்தின் வரவு வாசிப்பில் சிறிதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தின் வரவின் பின்னர் பலர் புத்தக வடிவிலான நூல்களை வாசிப்பது குறைவு இணையத்திலேயே மின் நூல்களாகவும் ஏனைய வடிவிலும் வலைகளிலும் வாசிக்கின்றார்கள். இது ஒருவகையில் நன்மையான விடயமாகும். இல்லையென்றால் ஆயிரக்கணக்கான வலைப் பதிவர்கள் இருக்கமாட்டார்கள்.

இன்னொரு சாரார் தமிழ்மொழியில் வாசிப்பதை பாவமாக கருதுகிறார்கள். குறிப்பாக மேல்தட்டு மக்களும், திரையுலகைச் சேர்ந்தவர்களும். ஒரு சில விதிவிலக்குகள் உண்டு. சிறந்த உதாரணமாக அண்மையில் தசாவதாரம் புகழ் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் ஒரு பேட்டியில் தனக்கு பிடித்த எழுத்தாளர்களாக சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் என புகழ்பெற்ற பல தமிழ் எழுத்தாளர்களைக் குறிப்பிட்டார். அதே நேரம் புத்தகக் கண்காட்சிகளில் தமிழ் நூல்களை விட ஆங்கில நூல்களை அதிகம் பேர் முண்டியடித்து வாங்குகின்றார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்தார்.

ஆனாலும் கடந்த 10 வருடங்களுடன் ஒப்பிடும்போது வாசிப்புப் பழக்கம் மிகமிக அரிதாக பலரிடம் காணப்படுகின்றது.


இனி எனது வாசிப்பு அனுபவங்களைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.

சிறுவயதுமுதல் அம்புலிமாமா, கோகுலம் வாசகனாக இருந்தேன். 7 வயதில் உறவினர் ஒருவர் ஈழத்துப் பிரபல எழுத்தாளர் செங்கைஆழியானின் "ஆச்சி பயணம் போகின்றாள்" நகைச்சுவை நவீனத்தை என்னிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அதுதான் நான் வாசித்த முதல் நாவல்.

பின்னர் பாடசாலையில் ( 5 ஆம் வகுப்பு தொடக்கும் 8 ஆம் வகுப்பு வரை) பாடப்புத்தகத்தில் மறைத்து ராணி கொமிக்ஸ் வாசிப்பது எங்கள் வகுப்பு மாணவர்களின் மிக முக்கிய கடமை. பாடசாலையில் கொமிக்ஸ் புத்தகங்களுக்கு தடை. அதனால் சில துணிந்த மாணவர்கள் ஏதோ ஒருவழியில் புத்தகங்களை வகுப்பறைக்கு கொண்டுவந்துவிடுவார்கள். பின்னர் ஒரு பாடவேளைக்கு 50 சதம் என ஏனைய மாணவர்களிடம் அதற்கான கட்டணம் வசூலித்துவிடுவார்கள். ஆசிரியர்களிடம் பிடிபட்டால் புத்தகத்தின் உரிமையாளரைக் காட்டிக்கொடுக்ககூடாது. அப்படிக் காட்டிக்கொடுத்தால் அந்த மாணவனுக்கு பின்னர் வாசிப்பதற்க்கு யாரும் புத்தகம் கொடுக்கமாட்டார்கள்.

சிலவேளைகளில் இருவர் ஒன்றாகச் சேர்ந்து ஒரு புத்தகத்தை சேர்ந்துவாசித்து கட்டணத்தை பங்குபோடுவதும் உண்டு. என் வகுப்பில் நூற்றுக்கு எண்பதுவீதமானவர்களுக்கு இந்தப் பழக்கம் உண்டு, எங்கள் கைச் செலவுக்கு உள்ள பணம் பெரும்பாலும் இதற்க்கே செலவிடப்பட்டது. என்றும் மறக்கமுடியாத சுவாரசியமான மலரும் நினைவுகள்.

இந்த நாட்களில் விகடன், குமுதம் வாசகராகிவிட்டேன். முக்கியமாக கமல், ரஜனி புகைப்படம் வெளியாகிய குமுதம் விகடனுக்கு கிராக்கி அதிகம். மல்லிகை சிரித்திரன் போன்ற இதழ்கள் பாடசாலையில் அனுமதிக்கப்பட்டன. ஒரு சிறிய அளவு மாணவர்களே இவற்றைப் படித்தோம்.

ஒன்பதாம் வகுப்புக்கு பின்னர் தேடல்கள் கொஞ்சம் மாறியது. பாடசாலை நூலகத்தில் ஊரிலிருக்கும் பொது நூலகத்திலும் பெரும்பாலான நேரங்கள் கழிந்தன. சுஜாதா, ராஜேந்திரகுமார், புஷ்பா தங்கத்துரை அறிமுகமாகினார்கள். ஏற்கனவே சில ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதைகள் நாவல்கள் படித்த காலமது. பெரும்பாலும் அவர்களது அந்தக்கால எழுத்துக்கள் சமூகப் பிரச்சனைகளை மட்டும் மையப்படுத்தியதாலும் செங்கைஆழியான் போன்ற சிலர் மட்டும் வேறு வேறு களங்களில் எழுதியதால், இந்திய எழுத்தாளர்களின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. பாடசாலையில் மேலே குறிப்பிட்ட இந்திய எழுத்தாளர்களின் புத்தகங்களுக்கு அனுமதிகள் இல்லை.( குறிப்பாக நாவல்களுக்குஏனென்றால் அவர்கள் பெரியவர்களுக்கு மட்டும் புரியும் வண்ணம் எழுதியிருப்பார்கள்). நூலகத்தில் மட்டுமே அவர்களை வாசிப்பது, இரவலாக வீட்டுக்கு கொண்ட செல்லமுடியாது அங்கேயும் இவர்களை வாசிக்காதே என செல்ல மிரட்டல். அதனால் இவர்களின் எழுத்தில் ஏதோ விடயம் இருக்கு என களவாக வாசிக்க பழகினேன். சுஜாதாவின் ஆங்கிலச் சொற்கள் வசந்தின் ஜோக்குகள் அப்போ புரியவில்லை.

ஓஎல்(கபொத‌சாதரண தரம்) படிக்கும்போது அப்பா சாண்டில்ய‌னை அறிமுகப்படித்தினார் கடற்புறா முதல் முதல் வாசித்த சரித்திர நாவல், பின்னர் ஜவனராணி, கடல்ராணி என சாண்டில்யன் எனக்கு பொழுதுபோக்க உதவிய‌துடன் அந்தக்கால தமிழ் அரசர்களது வீரத்தையும் வெற்றிகளையும் அறியத்தந்தார். பலராலும் பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் சிலாகிக்கப்பட்டாலும் எனக்கு அந்த வேளைகளில் வாசிக்க கிடைக்கவில்லை. நூலகத்தில் யாராவது ஒருவர் எடுத்துக்கொண்டு சென்றிருப்பார்.

ஏஎல் (கபொத‌உயர்தரம்) சோதனை எடுத்து பெறுபேற்றிற்காக காத்திருந்த போது பொன்னியின் செல்வன் வாசிக்க கிடைத்தது. முதல் பாகத்தை இரவிரவாக விழித்திருந்து வாசித்தேன். அடுத்த நாள் இரண்டாம் பாகம் என இப்படியே மூன்றோ நாலு நாட்களில் முழுவதுமாக வாசித்துமுடிந்துவிட்டேன். வந்தியத்தேவனும், பழுவேட்டரையர்களும் (தசாவதாரம் நெப்போலியனின் ஒப்பனை பெரிய‌ பழுவேட்டரையர் போல் தெரிகின்றார்), பொன்னியின் செல்வன் அருள்மொழிவர்மனும், குந்தவை, பூங்குழலி, வானதி, சேந்தன் அமுதன் என அனைத்துப்பாத்திரங்களும் கனவில் கூட வந்தார்கள். பல தடவைகள் வாசித்தும் இன்னும் அலுப்புத்தட்டாத ஒரே ஒரு சரித்திர நாவல் இதுவாகத்தான் இருக்கமுடியும்.

சிலர் சொல்வார்கள் வாசிக்கும்போது ஊண் உறக்கம் மறக்கின்றேன் என உண்மைதான். நானே இரு தடவைகள் சுய நினைவற்று வாசித்துக்கொண்டிருந்த வேளையில் நூலகத்தில் வைத்துப்பூட்டப்பட்டேன். பின்னர் நூலகர் திரும்ப வந்து என்னை திறந்துவெளியே விட்டார்.

வாசிப்பது என்பது ஒரு தவம். ஒரு புத்தகத்தைக் கையிலெடுக்கும் ஒவ்வொருவனும் ஒரு தவத்திற்கு காட்டிற்குப் போகிறான். அதை அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும்.

இன்னும் எழுதலாம் ஆனால் எனக்கும் சலிப்புத் தட்டும் வாசிக்கும் உங்களுக்கும் சலிப்புத் தட்டும் ஆகவே இத்துடன் இந்த கதை நிறுத்தப்படுகின்றது. உங்கள் அனுபவங்களை பின்னூட்டமாகவோ அல்லது தனிப்பதிவாகவோ இடுவீர்கள் என நினைக்கின்றேன்.

இன்றைக்கு சர்வதேச எழுத்தறிவு தினம் என்பதால் இந்தப் பதிவு மீள் பதிவாக இட்டிருக்கின்றேன்.

*** வாசி வாசி நீ வாசி ***



வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான் என்பது மிகவும் உண்மை. ஒரு மனிதனை நிலைத்திருக்க வைப்பது இரண்டு விடயங்கள் ஒன்று வாசிப்பு, இன்னொன்று அனுபவம்.

சாதாரணமாக ஒரு கிராமத்தில் இருக்கும் ஒருவரால் ஏனைய நாடுகள், கலாச்சாரம், புதிய தகவல்கள் என்பவற்றை வாசிப்பதால் அறியமுடிகின்றது. வாசிப்பு என்பது வெறுமனே தினசரிகள், வார மாத இதழ்கள் என்பதுடன் மட்டுப்படுத்தமுடியாது எவனொருவன் பரந்துபட்ட வாசிப்புக்கு தன்னைத் தானே உள்ளாக்குகின்றானோ அவனது அறிவு மென்மேலும் வளரும். அத்துடன் வாசிப்பை குறிப்பிட்ட பகுதிகளுடன் நிறுத்துவதும் தவறானது ஆகும். உதாரணமாக சிலர் பொதுவாக நாவல்கள், சிறுகதைகள் மட்டும்தான் வாசிப்பார்கள். இன்னொரு சாராரோ கட்டுரைகள் மற்றும் அறிவியல் சம்பந்தப்பட்ட விடயங்களை மட்டுமே வாசிப்பார்கள். வாசிப்பதில் சகலகலா வல்லவனாக இருந்தால் உங்கள் அறிவு நிச்சயம் வளரும். 

இன்றைக்கு பலரிடம் பெரிதாக பேசப்படும் ஒரு விடயம் வாசிப்புப் பழக்கம் மிகவும் குறைந்துவிட்டது என்பதாகும். இதற்கான முக்கியகாரணம் இலத்திரனியல் ஊடகங்களின் வருகையும் அதன் தாக்கங்களும். பெரும்பாலும் பாடசாலை மாணவர்கள் தங்கள் பாடப்புத்தகத்தை மட்டுமே வாசித்து அறிகிறார்களே ஒழிய ஏனைய பக்கம் கண் வைப்பதே இல்லை. பாடசாலைகளில் நூலகம் இருந்தாலும் நூலகத்தில் நேரம் கழிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு. 

இணையத்தின் வரவு வாசிப்பில் சிறிதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தின் வரவின் பின்னர் பலர் புத்தக வடிவிலான நூல்களை வாசிப்பது குறைவு இணையத்திலேயே மின் நூல்களாகவும் ஏனைய வடிவிலும் வலைகளிலும் வாசிக்கின்றார்கள். இது ஒருவகையில் நன்மையான விடயமாகும். இல்லையென்றால் ஆயிரக்கணக்கான வலைப்பதிவாளர்கள் இருக்கமாட்டார்கள்.

இன்னொரு சாரார் தமிழ்மொழியில் வாசிப்பதை பாவமாக கருதுகிறார்கள். குறிப்பாக மேல்தட்டு மக்களும், திரையுலகைச் சேர்ந்தவர்களும். ஒரு சில விதிவிலக்குகள் உண்டு. சிறந்த உதாரணமாக அண்மையில் தசாவதாரம் புகழ் ஒளிப்பதிவாளர் ஒரு பேட்டியில் தனக்கு பிடித்த எழுத்தாளர்களாக சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் என புகழ்பெற்ற பல தமிழ் எழுத்தாளர்களைக் குறிப்பிட்டார். அதே நேரம் புத்தகக் கண்காட்சிகளில் தமிழ் நூல்களை விட ஆங்கில நூல்களுக்கு அதிகம் பேர் முண்டியடித்து வாங்குகின்றார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்தார். 

ஆனாலும் கடந்த 10 வருடங்களுடன் ஒப்பிடும்போது வாசிப்புப் பழக்கம் மிகமிக அரிதாக பலரிடம் காணப்படுகின்றது. 

இனி எனது வாசிப்பு அனுபவங்களைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.

சிறுவயதுமுதல் அம்புலிமாமா, கோகுலம் வாசகனாக இருந்தேன். 7 வயதில் உறவினர் ஒருவர் ஈழத்துப் பிரபல எழுத்தாளர் செங்கைஆழியானின் ஆச்சி பயணம் போகின்றாள் நகைச்சுவை நவீனத்தை என்னிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அதுதான் நான் வாசித்த முதல் நாவல். 

பின்னர் பாடசாலையில்( 5 ஆம் வகுப்பு தொடக்கும் 8 ஆம் வகுப்பு வரை) பாடப்புத்தகத்தில் மறைத்து ராணி கொமிக்ஸ் வாசிப்பது எங்கள் வகுப்பு மாணவர்களின் மிகமுக்கிய கடமை. பாடசாலையில் காமிக்ஸ் புத்தகங்களுக்கு தடை. அதனால் சில துணிந்த மாணவர்கள் ஏதோ ஒருவழியில் புத்தகங்களை வகுப்பறைக்கு கொண்டுவந்துவிடுவார்கள். பின்னர் ஒரு பாடவேளைக்கு 50 சதம் என ஏனைய மாணவர்களிடம் அதற்கான கட்டணம் வசூலித்துவிடுவார்கள். ஆசிரியர்களிடம் பிடிபட்டால் புத்தகத்தின் உரிமையாளரைக் காட்டிக்கொடுக்ககூடாது. அப்படிக் காட்டிக்கொடுத்தால் அந்த மாணவனுக்கு பின்னர் வாசிப்பதற்க்கு யாரும் புத்தகம் கொடுக்கமாட்டார்கள். 

சிலவேளைகளில் இருவர் ஒன்றாகச் சேர்ந்து ஒரு புத்தகத்தை சேர்ந்துவாசித்து கட்டணத்தை பங்குபோடுவதும் உண்டு. என் வகுப்பில் நூற்றுக்கு எண்பதுவீதமானவர்களுக்கு இந்தப் பழக்கம் உண்டு, எங்கள் கைச் செலவுக்கு உள்ள பணம் பெரும்பாலும் இதற்க்கே செலவிடப்பட்டது. என்றும் மறக்கமுடியாத சுவாரசியமான மலரும் நினைவுகள். இந்த நாட்களில் விகடன், குமுதம் வாசகராகிவிட்டேன். முக்கியமாக கமல், ரஜனி புகைப்படம் வெளியாகிய குமுதம் விகடனுக்கு கிராக்கி அதிகம்.  மல்லிகை சிரித்திரன் போன்ற இதழ்கள் பாடசாலையில் அனுமதிக்கட்டன. ஒரு சிறிய அளவுமாணவர்களே இவற்றைப் படித்தோம். 

9 வகுப்புக்கு பின்னர் தேடல்கள் கொஞ்சம் மாறியது. பாடசாலை நூலகத்தில் ஊரிலிருக்கும் பொது நூலகத்திலும் பெரும்பாலான நேரங்கள் கழிந்தன. சுஜாதா, ராஜேந்திரகுமார், புஷ்பா தங்கத்துரை அறிமுகமாகினார்கள். ஏற்கனவே சில ஈழத்து எழுத்தாளர்களின் சிறுகதைகள் நாவல் படித்தகாலமது. பெரும்பாலும் அவர்களது அந்தக்கால எழுத்துக்கள் சமூகப் பிரச்சனைகளை மட்டும் மையப்படுத்தியதாலும் செங்கைஆழியான் போன்ற சிலர் மட்டும் வேறு வேறு களங்களில் எழுதியதால், இந்திய எழுத்தாளர்களின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. பாடசாலையில் மேலே குறிப்பிட்ட இந்திய எழுத்தாளர்களின் புத்தகத்துக்கு அனுமதிகள் இல்லை.( குறிப்பாக நாவல்களுக்கு). பொது நூலகத்தில் அவர்களை வாசிப்பது இரவலாக வீட்டுக்கு கொண்ட செல்லமுடியாது அங்கேயும் இப்போ கூடி இவர்களை வாசிக்காதே என செல்ல மிரட்டல். அதனால் இவர்களின் எழுத்தில் ஏதோ விடயம் இருக்கு என களவாக வாசிக்க பழகினேன். சுஜாதாவின் ஆங்கிலச் சொற்கள் வசந்தின் ஜோக்குகள் அப்போ புரியவில்லை. 

ஓஎல்(கபொத‌சாதரண தரம்) படிக்கும்போது அப்பா சாண்டில்ய‌னை அறிமுகப்படித்தினார் கடற்புறா முதல் முதல் வாசித்த சரித்திர நாவல், பின்னர் ஜவனராணி, கடல்ராணி என சாண்டில்யன் எனக்கு பொழுதுபோக்க உதவியுதடன் அந்தக்கால தமிழ் அரசர்களது வீரத்தையும் வெற்றிகளையும் அறியத்தந்தார். பலராலும் பொன்னியின் செல்வனும், சிவகாமியின் சபதமும் சிலாகிக்கப்பட்டாலும் எனக்கு அந்த வேளைகளில் வாசிக்க கிடைக்கவில்லை. நூலகத்தில் யாராவது ஒருவர் எடுத்துக்கொண்டு சென்றிருப்பார். 

ஏஎல் (கபொத‌உயர்தரம்) சோதனை எடுத்து பெறுபேற்றிற்காக காத்திருந்த போது பொன்னியின் செல்வன் வாசிக்க கிடைத்தது. முதல் பாகத்தை இரவிரவாக விழித்திருந்து வாசித்தேன். அடுத்த நாள் இரண்டாம் பாகம் என இப்படியே மூன்றோ நாலு நாட்களில் முழுவதுமாக வாசித்துமுடிந்துவிட்டேன். வந்தியத்தேவனும், பழுவேட்டரையர்களும்(தசாவதாரம் நெப்போலியனின் ஒப்பனை பழுவேட்டரையர் போல் தெரிகின்றார்), பொன்னியின் செல்வன் அருள்மொழிவர்மனும், குந்தவை, பூங்குழலி, வானதி சேந்தன் அமுதன் என அனைத்துப்பாத்திரங்களும் கனவில் கூட வந்தார்கள். பல தடவைகள் வாசித்தும் இன்னும் அலுப்புத்தட்டாத ஒரே ஒரு சரித்திர நாவல் இதுவாகத்தான் இருக்கமுடியும். 

சிலர் சொல்வார்கள் வாசிக்கும்போது ஊண் உறக்கம் மறக்கின்றேன் என உண்மைதான். நானே இரு தடவைகள் சுய நினைவற்று வாசித்துக்கொண்டிருந்த வேளையில் நூலகத்தில் வைத்துப்பூட்டப்பட்டேன். பின்னர் நூலகர் திரும்ப வந்து என்னை திறந்துவெளியே விட்டார். 

இன்னும் எழுதலாம் ஆனால் எனக்கும் சலிப்புத் தட்டும் வாசிக்கும் உங்களுக்கும் சலிப்புத் தட்டும் ஆகவே இத்துடன் இந்த கதை நிறுத்தப்படுகின்றது. உங்கள் அனுபவங்களை பின்னூட்டமாகவோ அல்லது தனிப்பதவிவாகவோ இடுவீர்கள் என நினைக்கின்றேன்.