நெஞ்சு பொறுக்குதில்லை

சுதந்திரத்துக்காக இவர்கள் என்ன செய்தார்கள்?

நாளை இந்தியாவின் 60வதாவது சுதந்திரதினக் கொண்டாட்டங்கள் சின்னத்திரையில் வெகு ஜோராக களை கட்ட இருக்கிறது. சகல டீவிகளிலும் அரை மணித்தியாலம் சுதந்திரத தினம் பற்றி யாரோ பாடுகிறார்கள் அல்லது கதைக்கிறார்கள். பின்னர் சகல நிகழ்ச்சிகளும் சினிமா சினிமா. ட்ரையிலர்களைப் பார்த்தாலே புரியும்.

சன் டீவியில் சிறப்பு வணக்கம் தமிழகத்தில் நடிகை சந்தியா கலந்துகொள்கிறார்கள். இவர் இந்திய சுதந்திரத்துக்கு என்ன செய்தார்?
ஜெயா டீவியில் நடிகை சதா (தமிழ் தெரியாது) ஆங்கிலத்தில் பேட்டி.
கேடிவியில் நடிகை ஷெரின் பேட்டி.
விஜய் டீவியில் சரோஜா சாமா நிக்காலோ என்ற சென்னை 28ன் நூறாம் நாள் விழா.
மற்றும்படி வழமைபோல் சன்னில் சாலமன் பாப்பையா விஜய்யில் லியோனி பட்டிமன்றம்.

சன்னில் காலையில் ஸ்ரீ காந்த் சினேகாவுடன் ஆடிப்பாடிய பார்த்தீபன் கனவு படம் . சுதந்திர தினத்துக்கும் இந்தப்படத்துக்கும் என்ன சம்பந்தம். பாரதியார் கப்பலோட்டிய தமிழன் போன்ற படங்களைப் போடலாம். ஜெயாவில் பாலசந்தரின் பொய். சன்னில் மீண்டும் ரீமெக் மன்னன் ஜெயம் ரவி நடித்த எம் குமரன் படம்.

சுதந்திரதினம் என்பது இவர்களுக்கு விளையாட்டாக போய்விட்டது. பொதிகையில் மட்டும் சுதந்திரதின விழா நேரடியாக ஒளிபரப்புவார்கள்.

நல்ல காலம் பாரதி இன்றில்லை இருந்திருந்தால் நெஞ்சு பொறுக்கிதில்லை இந்த நிலைகெட்ட திரையுலகை நினைத்துவிட்டால் எனப்பாடியிருப்பார்.

முக்கனிகளில் சிறந்த கனி என்ன கனி?

முக்கனிகளில் சிறந்த கனி என்ன கனி?
மா பலா வாழை என்ற முக்கனிகளில் எந்தப்பழம் பலராலும் அதிகம் விரும்பப்படுகிறது.
ஒவ்வொரு கனியாக எடுத்து ஒரு சின்ன ஆராய்ச்சி எனக்கு தெரிந்த விடயங்கள் மட்டும் தெரியாதவற்றை நண்பர்கள் அறியத்தரவும்.

மாம்பழம் :
மாம்பழத்தின் பிறப்பிடம் இந்தியா என கோன் பனேகா குரோர்பதியில் ஒரு முறை ஷாருக்கான் கூறியிருந்தார். இதனைப் பற்றிய மேலதிக தகவல்களை யாரும் அறியத்தரவும். மாம்பழத்தைப் பற்றிய கதைகள் பல உண்டு. அவற்றில் முருகன் உலகைச் சுற்றிய கதை முதன்மையானது. பெரும்பாலும் இந்துக்கள் வீடுகளில் மாஇலை கூட விசேட வைபவங்களுக்கு பயன்படுத்துவார்கள்.

மாவில் பல வகை உண்டு மல்கோவா, பிலாட், கறுத்தக்கொழும்பான், வெள்ளைக்கொழும்பான், அம்பலவி, புளி மாங்காய், சேலம், செம்பாடு போன்றவை என் ஞாபகத்தில் இருக்கின்றவை. இவற்றில் சில காயாக சாப்பிட சுவையாக இருக்கும் பழம் அவ்வளவு சுவையானது அல்ல உதாரணமாக சேலம் வெள்ளிக்கொழும்பான் .

கறுத்தக்கொழும்பான் மாம்பழம் யாழ்ப்பாணத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இதன் சுவையே தனிச் சுவைதான். அமுதத்தின் சுவை அறியவேண்டும் என்றால் கறுத்தக்கொழும்பான் மாம்பழம் சாப்பிட்டால் அறியலாம். அத்தனை சுவை மிகுந்த மாம்பழம். புட்டுடன் சாப்பிடுவதற்கு கறுத்தக்கொழும்பானை விட்டால் வேறு மாம்பழம் கிடையாது.

சில சீசன்களில் மட்டும் பெரும்பாலன மாம்ப்ழங்கள் கிடைக்கும். மாங்காய்ச் சம்பல் (சட்னி) சாப்பிட்டு இருக்கிறிர்களா? நல்ல சுவையான சட்னியாகும். பாடசாலைக் காலங்களில் பக்கத்து வீட்டு மாமரத்தில் களவாக மாங்காய் அடித்து உப்புத் மிளகாய்த் தூள் போட்டும் உண்ணுவது ஒரு தனி சுவை. இதனைப் பார்ப்பவர்களின் வாயில் அருவியாக ஜொள்ளூ வடியும்.

பலா:
பலாபழம் பார்ப்பதற்க்கு கடினமாக இருந்தாலும் அதனுள் இருக்கும் சுளையின் சுவை தனி. இதன் பிறப்பிடம் தெரியவில்லை. அத்துடன் இதற்க்கு வாழை, மா மாதிரி வேறு வகைகளும் இருப்பதாக தெரியவில்லை. தேனுடன் கலந்து சிலர் சாப்பிடுவது உண்டு. இதுவும் மாம்பழம் போல பெரும்பாலும் சில சீசன்களில் மட்டும் கிடைக்கும். பால் உள்ள மரத்திலி இருந்து கிடைப்பதால் இப்பழமும் பால் உள்ள பழமாகும். பலாபழத்தின் சுளையை பிரித்து எடுப்பது என்பது கஸ்டமான ஒரு விடயம் சிலருக்கு கைவந்த கலை மிகவும் அழகாக பிரித்து எடுப்பார்கள். கத்திக்கு எண்ணெய் பூசி வெட்டினால் பால் ஒட்டாது.

வாழைப்பழம்:
பெரும்பாலும் வருடம் முழுவதும் கிடைக்கும் இந்தப் பழத்தின் பிறப்பிடம் கரிபியன் தீவுகள் எனப் படித்த ஞாபகம். இதுவும் மாம்பழம் மாதிரி பல வகைகள் கொண்டது. கதலி, மொந்தன், சாம்பல், யாணை, கப்பல் என சில வகைகள் மட்டும் எனக்கு தெரிந்தவை. மிக இலகுவாக உண்ணக்கூடிய பழம் என்பதாலும் தினமும் கிடைக்கும் என்பதாலும் குறைந்த விலையில் கிடைக்கும் என்பதாலும் அன்றாடம் உணவு வேளைகளில் சேர்க்கப்படும் பழவகையாகும். விற்றமின் சீ அதிகம் நிறைந்த பழம்.

இம்மூன்றையும் தேன் சர்க்கரை கலந்து பஞ்சாமிர்தமாக(ஹோட்டல்களில் புரூட் சாலட்) சாப்பிட்டால் அதன் ருசியே ருசி.

ஐஸ்வர்யா செளந்தர்யா

அங்கவை சங்கவைக்குப் பதிலாக ஐஸ்வர்யா செளந்தர்யா எனவோ இல்லை மீனாட்சி காமாட்சி எனவோ சுஜாதா ஏன் பெயர் வைக்கவில்லை. சிவாஜி படத்தில் இது ஒரு நெருடல் . ஐஸ்வர்யா செளந்தர்யா என பெயர் வைத்தால் ரஜனி ஏறுக்கொள்ளமாட்டார் என்றா இந்தப் பெயர் வைக்கவில்லை.

பாமரன் கேட்பது சரியாகத் தான் இருக்கிறது. தமிழ்க்குடிதாங்கிகளும் கற்பு பற்றி பேசி பிரபலமானவர்களும் நம் சங்க இலக்கியங்களை கிண்டல் செய்வதை ஏன் தட்டிக்கேட்கவில்லை?

ஏ வி எம் என்ற பெரிய நிறுவனத்துக்கு பயந்தா? இல்லை ரஜனி என்கின்றவருக்கு பயந்தா?

பாமரனின் குமுதம் படித்ததும் கிழித்ததும் பகுதி

முல்லைக்குத் தேர் தந்த பாரி வள்ளலின் பெண்கள்தான் அங்கவை, சங்கவை. மாட மாளிகையில் வாழ்ந்த இவர்கள் தங்கள் தந்தையை இழந்து தவித்த போது அடைக்கலம் தந்து மணமுடித்து வைத்தவர் வள்ளல் பாரியின் நண்பரான புலவர் கபிலர்.

‘அன்று இதே வெண்ணிலவின் போது எங்களைப் போற்றிப் பாதுகாத்த தந்தையும் எங்களுடன் இருந்தார். எங்களுக்கான குன்றும் எங்கள் வசம் இருந்தது.

இன்று எங்கள் தந்தையையும் இழந்தோம்... நாட்டையும் இழந்தோமே’ என பாரியின் மகளிர் அங்கவையும். சங்கவையும் கதறிய கதறல் புறநானூற்றைப் புரட்டிப் பார்த்தவர்களுக்குத் தெரியும்.

இவர்கள்தான் இன்றைய தமிழ் சினிமாவின் கேலிப் பொருள்.

இதற்கு ‘தமிழாய்ந்த’ வாத்தி ஒருத்தர் பல்லை இளித்துக் கொண்டு ‘வாங்க வந்து பழகுங்க’ என்று மாமா வேலை பார்க்கும் காட்சியைப் பார்த்தபோது ரத்தம் சூடேறி விட்டது.

வசனம் : சுஜாதா.

நல்லது.

அங்கவை சங்கவைக்கு பதிலாக பிரியதர்ஷிணி தேவதர்ஷிணி என்றோ.... அபித குஜலாம்பாள் குசல குஜலாம்பாள் என்றோ... அல்லது சிவாஜிராவ் கெய்க்வாட்டுக்குப் பிடித்த பர்வதம்மா பசவம்மா என்றோ போட்டிருக்கலாமே. எது தடுத்தது இவர்கள் அனைவரையும்?

‘சண்டைக்கோழி’யில் ‘குட்டிரேவதி’ என்று வந்த வசனத்திற்காக எஸ்.ராமகிருஷ்ணனை ஒரு வழி பண்ணிய இலக்கியவாதிகள் அங்கவை, சங்கவை விஷயத்தில் மட்டும் சகலத்தையும் பொத்திக் கொண்டிருப்பது ஏன்?

‘படங்களுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள்’ என்று பொங்கி எழுந்த தமிழ் பாதுகாப்புப் பேரவையினர் இப்போது தமிழ் நாட்டில்தான் இருக்கிறார்களா?

‘கற்பு’ விஷயத்தில் குஷ்புவை விட்டேனா பார்...என்று தொடை தட்டிய ஜாம்பவான்கள் அங்கவை, சங்கவை விஷயத்தின் போது மட்டும் எங்கே போய்த் தொலைந்தார்கள்?

இப்படி ஏகப்பட்ட கேள்விகள் என்னுள் மண்டையைக் குடைந்தபடி...

இதில் வக்கிரத்தின் உச்ச கட்டம் என்னவென்றால் அங்கவை, சங்கவை இருவருக்கும் கருப்புச் சாயம் பூசிக் காட்டியிருப்பது.....

மூடர்களே....! ஒன்றை மட்டும் நினைவில் வையுங்கள்.

கருப்பு என்பது நிறமல்ல. இனம்.

இன்னும் உங்களுக்குப் ‘புரியும் மொழியில்’ சொல்வதானால்......

Black is not a Colour

To Erase.

It is a RACE

இத்தோடு நிறுத்துங்கள் உங்கள் விபரீத விளையாட்டை. அப்புறம்....

நாங்களும் ‘பழக’ ஆரம்பித்தால்......

பத்தாயிரம் ரூபா யாருக்கு?

பத்தாயிரம் ரூபா யாருக்கு?

கவிஞர் வைரமுத்து குமுதம் இதழில் அளித்த பதிலில் கீழ் வரும் பாடலைக் க்ண்டுபிடிப்பவருக்கு ரூபா பத்தாயிரம் பரிசு அளிக்கவுள்ளார். நீங்களும் முயற்சி செய்யலாமே.


உங்கள் எல்லாப் பாடல்களையும் ரசிகர்கள் அறிந்துவைத்திருக்கிறார்களா?

இல்லை. சேற்றில் புதைந்த முத்துக்களாய் ஆயிரமாயிரம் வரிகள் கேட்பாரற்றுப் போயிருக்கின்றன.

‘‘மூங்கிலுக்குள் நுழைகின்ற காற்று
முக்தி பெற்றுத் திரும்புதல் போல
உன் மடியில் சொல்லாய் விழுந்தவன்
கவியாய் முளைத்தெழுந்தேன்’’

இது எந்தப் பாட்டுக்குள்?

‘‘மொட்டுகள் வெடிக்கும் தேசமிது
குண்டுகள் வெடிக்கும் வாசனையோ?
மகரந்தப் பொடிகள் கலக்கும் காற்றில்
மாமிசத் தூள்கள் பறப்பதுவோ?
கடவுள் பேரில் இங்கு
போர்கள் போர்கள் எனில்
மனிதர்கள் கதைமுடிந்து போகாதோ?
மனிதர் தீர்ந்துவிடில்
வணங்க யாருமின்றிக்
கடவுள் கதைமுடிந்து போகாதோ?’’

இந்தச் சரணத்தின் பல்லவி என்ன?

‘‘விரும்பி யாரும் பிறப்பதுமில்லை
விரும்பிய பாத்திரம் கிடைப்பதுமில்லை
புளிக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணிச் சலிக்கும் மனதில் சந்தோஷமில்லை
எட்டுநாள் வாழும் பட்டாம் பூச்சி
இறப்பைப் பற்றி நினைப்பதுமில்லை
அறுபது வயது ஆயுள் கொண்டவன்
இருபது நிமிடம் வாழவுமில்லை
நாளை என்பதில் நம்பிக்கை வைத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர்த் துளியைக் கழற்றி எடுத்துப்
புன்னகை அணிந்து போரை நடத்து’’

இது எந்தப் பாடலின் சரணம்?


மூன்றுக்கும் சரியான விடை எழுதினால் பத்தாயிரம் ரூபாய் பணிவோடு பரிசு தருவேன்..