அதிரடி ட்விட்டர்ஸ்


கமல் : நிறுத்தனும்… நிறுத்தனும்… எல்லாத்தையும் நிறுத்தனும்.

சூர்யா : எதை சார் நிறுத்தனும்? எங்க கொண்டு போய் நிறுத்தனும்?

கமல் : நான் காரைச் சொல்லல. ட்ரைலரைச் சொன்னேன். விஸ்வரூபம் ட்ரைலர் வெளியாகி 100 நாள் வெற்றிவிழா என்று நக்கலடிக்கிறத நிறுத்தனும். படத்துக்கு பெயர் வைச்சவுடனே இது அந்தப் படத்தின் காப்பி, இது இந்தப் படத்தின் காப்பி என்று ஆராய்ச்சி செய்றத நிறுத்தனும்.

விக்ரம் : எஸ், யூ ஆர் ரைட் சார். நான் கஸ்டப்பட்டு நடிச்ச தெய்வத்திருமகளை, 'அங்கிள் சாம்', 'ஆண்டி மாம்' என்று கத விடுறாங்க.

விஜய் : ..ண்ணா….! யார்ண்ணா இத எல்லாம் செய்றது?

சூர்யா: அடப்பாவி! நீ நெட் பக்கமே வாறதில்லையா?

விஜய்: எனக்குத் தெரிஞ்சது, மீன் பிடிக்கிற நெட்தான் சரவணா!

சிம்பு : அண்ணா! மீன், நெட் எல்லாம் தடை செஞ்சாச்சுண்ணா.

சூர்யா : இன்டெர்னெட் கனெக்சனும், பிசியும் இருந்தாப் போதும், ட்விட்டர், பேஸ்புக் பப்ளாக் என்று நம்மைக் கலாய்க்க ஆரம்பிக்கிறாங்க. இப்ப அவங்களாலதான் நமக்கு பெரிய தலையிடி.

விஜய் : ஓ….! அவங்களா! யூ மீன் ட்விட்டர்ஸ், புளொக்கர்ஸ். ஐ நோ! ஐ நோ! அவங்க என்னோட எல்லாப் படத்தையும் கிழிச்சுத் தொங்கவிட்டுத் தோரணம் கட்றாங்களே!. அதில ஒருத்தன் படத்தோட வசனத்தை வரிக்கு வரி மாறாமல் எழுதுறான்.

அஜித் : நான் பேஸ்மாட்டேன்!

சிம்பு : வாங்கோ நடைராஜா.

அஜித் : நான் எவ்வளவு ரிஸ்க் எடுத்து நடிச்சாலும். 'அஜித் நடையைக் கொஞ்சம் குறைக்கலாம்' என்று கடைசி வரியில பஞ்ச் அடிப்பாங்க. ஷாலீனி வாசிச்சிட்டு விழுந்து விழுந்து சிரிக்கிறாள்.

கமல் : இவங்கள நிறுத்த நாம என்ன செய்யலாம். அத சொல்லுங்க?

சிம்பு: ஒவ்வொருவருக்கும் கையில கவர் கொடுத்துடுவோமா?

விஜய் : ஒருத்தனா, ரெண்டு பேரா கவர் கொடுக்கிறதுக்கு. அவங்கதான் லட்சக்கணக்கில் இருக்காங்களே! எப்படிப்பா கவர் பண்றது?

விஜய்காந்த் : அங்…! பேஸ்புக்கில் 4 கோடியே 20 லட்சத்து 20 ஆயிரத்து 38, ட்விட்டரில் 2 கோடியே 80 லட்சத்து 10 ஆயிரத்து 112, ப்ளாக்கில் 3 லட்சத்து முன்னூற்று முப்பது. இதில் இந்தியத் தமிழர்கள்…….

தனுஷ் : தலைவா! போதும் தலைவா! நீங்கள் இன்னும் ரமணா எஃபெக்ட்டிலதான் இருக்கீங்க. முருகதாஸ் சார் இப்போ துப்பாக்கி தூக்கப் போய்ட்டார்.

விஜய் : யா..! யா..! "சாதாரணத் துப்பாக்கியால, ஒருவனை ஒரு தடவைதான் சுடலாம். ஆனால், என் துப்பாக்கியால, தியேட்டர்ல இருக்கிற எல்லாரையும் அட் எ டைம் சுட்றலாம்" என்று எஸ்எம்எஸ் அனுப்புறாங்க.

சூர்யா : இத எல்லாம் நிறுத்த, நாமளும் சமூக வலைத்தளங்கள்ல இணையிறதுதான் ஒரே வழி.

ஜீவா : மச்சி! நான் எப்பவோ தொடங்கிட்டேன் மச்சி. ஆனால இவங்கள் ஒருத்தனும் என்னையக் கலாய்க்கிறதே இல்ல.

ஆர்யா : அவங்க எப்பிடி உன்னக் கலாய்ப்பாங்க? 'ஒரு குவார்ட்டர் சொல்லு மச்சி! என்று நீயே அவங்களோட மிங்கில் ஆயிடுறாய்.

அஜித்: ட்விட்டரில் இணையிறதுக்கு என்ன செய்யனும் ?

ஜீவா : அஜித் சார்! உங்களுக்குத் தமிழ் தெரியுமா?அஜித் : ஓ! நல்லாத் தெரியுமே!

ஜீவா : அப்போ, நீங்கள் இங்லீஷ், ஹிந்திலதான் ட்விட்ட வேண்டூம்.

அஜித் : ஏன்?

ஜீவா : அப்படீன்னாத்தான் நீங்க அண்டார்ட்டிகாவில இருக்கிற அல்பி, ஆபிரிக்காவில இருக்கிற குக், மொசப்பதோமியாவில இருக்கிற கெயில்
இவங்களோடவெல்லாம் ஃபொலோயேர்ஸ் என்று பேசிக் கொள்ளலாம்.

விஜய் : ராஜதந்திரங்கள் எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கிறே நீ.

கமல்: இதை நான் வண்மையாகக் கண்டிக்கின்றேன். ஒரு வீட்டில எத்தன ஜன்னல்கள் இருந்தாலும், வாசல் கதவுதான் முக்கியம். அதப்போலதான் எத்தன மொழிகள் தெரிஞ்சிருந்தாலும் தாய் மொழிய மறக்கக்கூடாது.

அஜித் : சூப்பர் பஞ்ச் சார்.

விக்ரம் : அதைவிட நமக்கு ஜிங்சாக் அடிக்கும் 4 பேர நாம கூடவே வச்சிருக்கவேணும்.

ஜீவா : அவங்க காவேரித் தண்ணி குடிச்சிருந்தால், இன்னும் பொருத்தமாக இருக்கும்.

கமல் : மீன் டைம், இப்போ ஹாட் என்ன விசயம் என்று பார்த்து அதப் பத்தியும் ஒருவரி சொல்லிடனும், இடையிடையே பெண்ணடிமை, ஈழம், டொசோ, தமிழன், கிரிக்கெட், இறையாண்மை எல்லாம் சேர்த்துக்கணும்.

சிம்பு : யாரையாவது போகிற போக்கில் வம்புக்கு இழுத்தா இன்னும் ஸ்பெசலா இருக்கும்.

ஜீவா : ஆளைவிடு சாமி. கேஸ் போட்டுடுங்கள்.

அஜித் : என்னய நடைராஜா, வோக்கிங் கிங், கோட்டு கழட்டாதவன் என்று எவன் இனிமேல் சொன்னாலும், அவன் மேல் சட்டம் பாயும்.

விஜய்: என்னை எப்படி நக்கலடிச்சாலும் தாங்குவேன் ஆனா எனக்கு நடிக்கத் தெரியாது என்று கலாய்க்கிறத்தான் தாங்க முடியல. அவங்க மேல் சகல இபிகோவிலும் வழக்கு போடனும்.

சூர்யா : அடப்பாவி! எப்படிடா இப்படி? வெட்கமே இல்லாம கதைக்கிறாய், நீ நடிச்ச சாரி வந்துபோன சுறாவை ஜட்ஜ் பார்த்தால், அவரே தற்கொலை செய்திடுவார்.

விஜய் : அவ்வ்வ்…! சொந்தச் செலவில் சூனியம் வச்சிட்டனோ?

கமல் : கலைஞர் ஆட்சி என்றால், ஃபேஸ்புக் தலைவருக்கு ஒரு லைக் என பாராட்டுவிழா நடத்தி நம்ம பிரச்சனையச் சொல்லலாம்.

விஜய் : சார்! அப்பாவை அனுப்பி அம்மாவிடம் கோரிக்கை வைப்போமா?

விக்ரம் : யூ மீன் சோபா ஆண்டி?

விஜய் : இல்லங்ண்ணா முதல்வர் அம்மா.

விக்ரம் : அவங்ககிட்ட என்னால குனிஞ்சு நிமிர தொப்பை விடாது. நான் வரல.
இவர்கள் பேஎசிக்கொண்டிருந்த போது, அங்கே திடீரென ஒரு குரல் கேட்கிறது.

குரல்: ட்விட்டர் எனக்கு சுவெட்டர். ஃபேஸ்புக் என் பாஸ்புக். வலை என்னோட தலை.

விஜய் டீ.ராஜேந்தர் உள்ளே நுழைய எல்லோரும் ஜேர்க் ஆகிறார்கள்.
டீ ஆர் : நண்பர்களே! யூட்யூப்பிலிருந்து வால்ட்யூப் வரை என்னை கிண்டலடிக்கிறார்கள். இத எல்லாம் நான் பொறுத்துக் கொண்டது போல நீங்களும் பொறுக்க வேண்டும். ஏய் டண்டனக்கா டணக்கு டக்கா.


அண்மைக் காலமாக சமூக வலைத்தளங்களிலும், வலைப்பூக்களிலும் பிரபலங்களின் மீதான நக்கல் நையாண்டிகள் அதிகரித்திருப்பதால் நம்ம சில கதாநாயகர்கள் இதனை எப்படி எதிர்கொள்வது என தமக்குள் பேசிக்கொண்டிருந்ததை ஒட்டுக்கேட்டவை.