யார் மனசில் யாரு? அந்த உலகத் தலைவருக்கு என்ன பேரு?

யார் மனசில் யாரு? அந்த உலகத் தலைவருக்கு என்ன பேரு?

ஒரு உலகத் தலைவரைத் தேர்வு செய்வதற்க்கான வாய்ப்பு இது. உங்கள் வாக்குகளில் மட்டுமே இந்த தேர்வு சாத்தியமாகிறது என வைத்துக்கொள்ளுங்கள். மூன்று வேட்பாளர்கள் இதற்க்குப்போட்டியிடுகிறார்கள் போட்டியிடும் வேட்பாளர் பற்றித் கீழே தரப்படும் குறிப்புகளை வைத்து யாரை நீங்கள் தெரிவு செய்வீர்கள் என்பதையும் அந்த வேட்பாளாரின் நிஜமான பெயரையும் கண்டுபிடியுங்கள்.

முதலாவது வேட்பாளர்
ஊழல் நிறைந்த அரசியல்வாதிகளொடு கூட்டுவைத்திருப்பவர். எப்போதும் சோதிடர்களை நம்புகிறவர். இவருக்கு இரண்டு மனைவிமார் அதுமட்டுமல்ல மிக அதிகமாக புகைப்பவரும் குடிப்பவரும் கூட.

இரண்டாவது வேட்பாளர்
அதிகார பீடத்திலிருந்து இரண்டு தடவைகள் துரத்தியடிக்கப்பட்டவர். படித்த காலத்தில் ஓப்பியம் என்றபோதையில் இருக்கும் பழக்கம் உண்டு.

மூன்றாவது வேட்பாளர்
நாட்டுக்காக போர்க்களம் புகுந்து கெளரவம் பெற்ற வீரர். என்றுமே மாமிசம் உண்ணாதவர் அதுமட்டுமல்ல புகை பிடிப்பதஓ மதுபானம் அருந்துவதோ கூட கிடையாது எப்போதவது கொஞ்சம் பியர் அருந்துவார். எந்தப்பெண்ணையும் எப்போதும் இவர் ஏமாற்றியது கிடையாது.

நன்றி இருக்கிறம் சஞ்சிகை

ஒரு சிங்கமும் சில பன்றிகளும்

ஒரு சிங்கமும் சில பன்றிகளும்

இதோ வருகிறது, அதோ அருகிறது என்று ஏமாற்றியே ரஜனி ரசிகர்களை எல்லாம் முள்ளில் படுக்கையிட்டு இமையை மூடவிடாமல் வைத்திருந்த சிவாஜி "The Boss" இறுதியில் வந்தேவிட்டது. வெளியீட்டுத் திகதியைத் தொடர்ந்து பின் போட்டுப் பின்போட்டுச் செய்யும் "சூக்காட்டுதல்" என்பதே பெரும் விளம்பர உத்திதான். வரலாறு காணதா அடுக்கடுக்கான விளம்பரங்களின் பின்னால் சிவாஜி ஆற அமர வந்தே விட்டது. வெளிவந்த முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு கொழும்புப் பாடசாலைகளில் நன் மாணவ மணிகளின் வருகையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததாக தகவல். அப்போ தமிழ் நாட்டின் நிலைமை எப்படியிருந்திருக்கும் அன்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.

பால்காவடி, பன்னீர் காவடி புஸ்பக்காவடி துலாக்காவடி என போன்ற சுத்த சைவ அனுஷ்டானங்கள் ஒரு புறம், ஆடு பலியிடுதல் கோழி அடித்து விருந்து வைத்தல் போன்ற அசைவ வீர வழிபாடுகள் மறுபுறம்.. டெல்லி வரை சென்று பிளாக் மார்க்கெடில் டிக்கட் வாங்கிய " தீர்த்த யாத்திரைகள்" வேறொரு புறம்..

தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே (சில வேளைகளில் இந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே எனவும் திருத்த நேரிடலாம்) மிக அதிக அளவில் பிரிண்ட் போடப்பட்ட இந்தப் படத்தை வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் மட்டுமல்ல பூமிப்பந்தெங்கும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களால் உயர்த்திப்பிடிக்கப்படும் தமிழ்க்கொடி தாழ்ந்து பறக்கும் தமிழ் கூறு நல்லுலகு எங்கணும் மட்டுமல்ல கொம்யூனிசக் கிலி பிடித்த கேரளாவில் மட்டுமல்ல சுந்தரத் தெலுங்கில் பாட்டிசைக்கும் ஆந்திராவில் மட்டுமல்ல காவேரி ஊறும் கர்நாடகாவில் மட்டுமல்ல நம் அறிவுக்கும் கற்பனைக்கும் எட்டாத தூரத்துக்கும் அப்பால் பல படங்களின் வருகையை தள்ளிப்போட்ட இந்த பராசக்தி ஹீரோவை ப்ளாக்கில் டிக்கெட் எடுத்து நாய் படாப்பாடு பட்டுப் பார்க்கப்போனால்....

படமோ கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்க்கான ஹை டெக் திட்டங்களை சூப்பர் ஸ்டார் ரஜனி தனது ஸ்டைலில் நடைமுறைப்படுத்துவதைப் பற்றிப் பேசுகிறது. ஏவிஎம் , சங்கர், ஏ ஆர் ரகுமான் , சுஜாதா , ரஜனி , விவேக் முதலிய தமிழ்த் திரைப்படத் துறையின் இன்றைய உச்சனிலை வியாபாரிகள் எல்லோருமாகச் சேர்ந்து தமிழ்த் திரைப்பட ரசிகனை திறந்த வாய் மூடவிடாமல் திரையையே வெறித்துப்பார்க்க வைத்திருக்கிறார்கள்.

மனிதனுக்கு சுயபுத்தி அவசியமென்பதால் அதை பத்திரமாக வீட்டிலேயே வைத்துவிட்டுப்போனால் இந்தப் படத்தை நன்கு ரசிக்கலாம்.

ரஜனி பொய் முடி, கிலோக் கணக்கில் மேக்கப் பவுடர்கள் முதலியவற்றின் உதவியுடன் என்றும் இளமையாக இருக்கும் பரகசியத்தையும் , ஸ்ரேயா என்னும் மெழுகுப்பொம்மை வளைந்து வளைந்து ஆடுவதையும், விவேக் அடிக்கின்ற கோமாளிக் கூத்துக்களையும், கம்யூட்டர் கிராபிக்ஸ்சில் நல்ல விவேகியான சங்கர் நமக்கெல்லாம் அளக்கின்ற "கதை"களையும் ஏ ஆர் ரகுமானுக்கு ஏற்பட்டிருக்கும் தீராத வயிற்று உபாதைகளின் காரணமாக அவர் எழுப்பும் சத்தங்களையும் ... இன்னும் பலவற்றையும் ரசிக்கலாம் அவ்ற்றையிட்டும் பெருமிதப்படலாம்.

உதாரணம் 1 :
சிவாஜி கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதை குறியீடு மூலம் சங்கர் உணர்த்துகின்றார் அதாகப்பட்டது கறுப்பு ரஜனியை அசல் பேர்சியன் வெள்ளைக் கலருக்கு(ரோஸ் கலருக்கு) கிராபிக்ஸ் மூலமும் சங்கர் மாற்றுகிறார்.

உதாரணம் 2 :
சங்கர் மற்றவர் பணத்தை தண்ணீராய்(தனது சொந்த தயாரிப்புகள் மட்டும் சிறிய பட்ஜட் படங்கள்) இறைத்து படம் எடுப்பதில் பெயர் போனவர். அதையே குறியீடாக கடைசிச் சண்டைக்காட்சியில் பணம் பற பற என்று பறக்கிர காட்சியாக எடுத்துக்காட்டியிருக்கிறார௼br />.

உதாரணம் 3 :
சமீப காலங்களாக தமிழகத்தில் ஈழத்தமிழர் ஆதரவு அலை பலமாக வீசுகின்றதாம் அதில் அடிபட்டுப்போன விவேக் சுழட்டுகிறதுக்கு நேராக யாழ்ப்பாணம் போகிற கதையும் ஒன்று கதைக்கிரார். தியேட்டரில் விசில் காதைப் பிளக்கிறது.

உதாரணம் 4 :
சுஜாதவின் சுருக் நருக் நடைக்கு ( சுருக்கிய நறுக்கிய என நீட்டி முழங்குவானேன் இது சுஜாதா ஸ்டைல்) பேர் போனவர். முந்தைய ரஜனிப் படங்களில் வரும் பஞ்ச் டயலாக்கைப் போலல்லாது இப்படத்தில் தனது பங்கிற்கு அதை ஒட்ட நறுக் செய்திருக்கிறார்.

படத்தில் இரண்டு நல்ல நடிகர்கள் இருக்கிறார்கள் ஒருவர் சுமன். மற்றவர் ரஜனி ( ரகுவரன் பாவம் அவரை விட்டுவிடுவோம்). ஆனாலும் ரஜனியை பற்றி ஒரு நணபர் "ரஜனிக்கு எழுபதுகளின் கடைசியில் பிடித்த சித்தப் பிரமை இன்னமும் மாறவில்லை" என ஒற்றைவரி விமர்சனம் ஒன்றை எழுதி இருந்தார்.

மானிடர்களுக்கு பால்குடிப்( mummal Stage) பருவம் என்று ஒன்று இருக்கின்றது. ரஜனி தனது வாயை வைத்துப் பண்ணுகின்ற சேட்டைகளைப் பார்த்தால் அந்தப் பால்குடிபருவத்திலிருந்து இன்னமும் அவர் வளரவிலையோ என்று எனக்கு ஐயமாக இருக்கிறது. அவர் ஒரு பால்குடி.

சங்கரே நீங்கள் ரஜனியை வைச்சு காமெடி கீமெடி ஒண்னும் பண்ணலையே நண்பரே.

நன்றி : இருக்கிறம் சஞ்சிகை ஜூலை 2007.

பின் குறிப்பு :இம்முறை சனி மாற்றம் எனக்கு சரியில்லை என சக்திவிகடனில் இருக்கின்றது.

குற்றவாளிக் கூண்டில் காதல்!

குற்றவாளிக் கூண்டில் காதல்!

காதல் பலருக்கு வாழ்க்கையில் வெறுப்பையும் சோகத்தையும் விரக்தியையும் மட்டும் கொடுக்கும் ஒரு நோய். குழந்தைப் பருவத்தில் எந்தவித ஆசைகள் விருப்புகள் இன்றி வாழும் மனிதன் காதல் என்ற நோய் பீடித்த பின்னர் பைத்தியக்காரனாக அலைகிறான். இந்தக் காதலினால் அவன் தன் வாழ்க்கையின் முக்கிய பல நிகழ்வுகளையும் சந்தோஷங்களையும் இழக்கிறான். பெரும்பாலும் காதல் தோல்வி ஏற்படுவது ஆண்களுக்கே அதனால் தான் ஆண்களுக்கு தாடி வளர்கின்றதோ தெரியவில்லை.

இளைஞர்களின் வாழ்க்கையை பாழாக்கும் காதல் தேவையா? காதலுக்கு எதிராக இதுவரை யாரும் வழக்கு தொடரவில்லை அதனால் நான் தொடர்கிறேன். இந்த வழக்கின் முடிவில் நீதிபதி காதலுக்கு மரண தண்டனை விதித்து இன்றைய இளைஞர்களை அதிலும் ஆண் வர்க்கத்தினரை காப்பாற்றவேண்டும்.

காதல் செய்த குற்றங்கள் :
1. ஒழுங்காக படிக்கின்ற மாணவனை ஒழுங்காக படிக்கவிடாமல் தேர்வுகளில் கோட்டை விட செய்தது. மிகச் சிறந்த உதாரணம் நானே ஓ எல் பரீட்சையில் 8 பாடங்களிலும் அதிவிசேட சித்திய்டையவேண்டிய நான் 4 பாடங்களில் மட்டும் அதிவிசேட சித்தியடைந்தது. அதுமட்டுமல்ல பொறியியளாராக வேண்டிய என்னை ஏ எல் பரீட்சையில் கொடியடிக்க வைத்து என் எதிர்காலத்தை பாழக்கியது.

2. உறவினர்களிடையே பகையைத் தோற்றுவித்தது. என் நண்பன் ஒருவன் தன் மாமன் மகளைக் காதலித்த குற்றத்தினால் இருவர் வீடுகளுக்கும் இடையில் இன்றுவரை பேச்சுவார்த்தை கொடுக்கல் வாங்கல் இல்லை. ஆனால் மாமன் மகளோ வேறு ஒருவரை திருமணம் செய்து சுகபோகமாக இருக்கிறார். என் நண்பனோ இன்னமும் திருமணம் செய்யவில்லை.

3. சிறந்த கம்பனி ஒன்றில் வேலை செய்தவனை காதல் என்ற மாயமான் அவன் காதலித்த பெண் வெளிநாடு சென்ற காரணத்தால் அவள் சென்ற நாட்டுக்கே அவனும் செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் வேலையைத் துறந்து பின்னர் அவளையும் துறந்து வெளிநாடும் இல்லாமல் உள்நாட்டில் இருந்த வேலையும் இல்லாமல் நடுத்தெருவில் விட்டது.

4. எந்த தீயபழக்கமும் இல்லாத ஆண்களிடம் காதல் தோல்விக்கு பின்னர் அவளை மறக்க
மது சிகரெட் என கெட்ட பழக்கவழக்கங்களை விதைத்தது.

இப்படிப் பட்ட பல குற்றச்சாட்டுகள். மேலதிக விளக்கம் தேவைப்படுபவர்களுக்கு பின்னர் தரப்படும்.

இறுதியில் இன்றைய இளைஞர்கள் காதல் என்ற மாயையில் விழாமல் இருக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. எந்தவொரு ஆணின் தோல்விக்கு பின்னாலே ஒரு பெண் குறிப்பாக அவனின் காதலி இருப்பாள்.

டிஸ்கி : என் நண்பன் ஒருவனின் ஆதங்கம் என் பதிவாக‌

முட்டை அவிப்பது எப்படி...........

முட்டை அவிப்பது எப்படி...........

சமையலுக்கு வேண்டியவை பதார்த்தங்கள்:

தேவையான அளவு முட்டைகள், அதே போல் தேவையான அளவு தண்ணீர், முட்டையை அவிப்பதற்குரிய பாத்திரம், முக்கியமாக அடுப்பு, அடுப்பைப் பற்ற வைக்க தீப்பெட்டி அல்லது லைட்டர்.
இந்த அடுப்பென்னும் விசயத்தைப் பார்த்தீர்களானால், நீங்கள் காஸ் அடுப்பையோ, மின்னடுப்பையோ, விறகடுப்பையோ எதையாவது பயன்படுத்தலாம் என்பதுதான் இந்த முட்டை அவிப்பதில் சிறப்பான அம்சம்.

செய்முறை:

முதலில் நீங்கள் என்ன அடுப்பைப் பாவிக்கிறீர்களோ, அதற்கு ஏற்றவாறு காஸ் அடுப்பென்றால் காஸோ, மின்னடுபென்றால் மின்சாரமோ, விறகடுப்பென்றால் விறகோ இருக்கிறதா எனச் சரிபார்த்துக் கொள்ளவும்.
பின்னர் தீப்பெட்டியையோ, லைட்டரையோ கையில் எடுத்து அடுப்பைப் பற்ற வைக்க வேண்டும். இதில் பற்ற்ற வைக்கும் போது கையில் நெருப்புச் சுடாதவாறு பார்த்துக் கொள்வது மிக அவசியம். அப்படி இல்லாத பட்சத்தில், தேவையான பொருட்களின் பட்டியலில் பர்னாலையும் சேர்த்துக் கொள்ளவும்.

பற்ற வைத்த அடுப்பில் மிகவும் நிதானமாக, தண்ணீர் ஊற்றப்பட்ட பாத்திரத்தை வைக்கவும். பாத்திரத்தில் தண்ணீர் முட்டைகள் முழுதாக மூழ்கும் வரையிலான அளவிற்கு விடப்பட்டிருக்க வேண்டும்.
அதற்கு மேலதிகமாகவோ, குறைவாகவோ தண்ணீர் பாத்திரத்தில் இடப்பட்டடிருந்தால் வரும் விளைவுகளுக்கு, லீனாவாகிய நானோ, இந்தப் பதிவை பதிப்பதற்கு அனுமதி வழங்கிய கண்காணிப்பாளர் அல்லது இளமாறானோ பொறுப்பல்ல.
உங்களுக்குத் தேவையானதெல்லாம் நிதானமும் பொறுமையுமே!

தண்ணீர் கொதிக்கத் தொடங்கும் போது, உங்களுக்கு உணவிற்கு எத்தனை முட்டைகள் தேவையோ அவற்றுடன் மேலும் இரண்டு முட்டைகளை சேர்த்து பாத்திரத்தில் போடவும்.
இங்கே நீங்களெல்லாம் மேலதிகமாக ஏன் இரண்டு முட்டைகள் என ஆச்சரியத்தில் கண்களின் மேலுள்ள புருவத்தை உயர்த்துவது தெரிகிறது.
இங்குதான் லீனாவின் சமையல் தந்திரம் வெளிப்படுகிறது. அதை முடிவில் நீங்கள் சரியாகப் புரிந்து கொள்வீர்கள். அதுவரை உங்களுக்குத் தேவை மீண்டும் பொறுமை.

பாத்திரத்தில் முட்டைகளை இட்டதும் சில நிமிட நேரங்கள் எங்கும் செல்லாமல் (உங்களுக்கு டாய்லெட் வந்தால் கூட) பாத்திரத்தையே பார்த்தபடி நிற்கவும்.
தண்ணீர் மிகவும் ஆக்ரோசாமாகக் கொதித்து, நீராவியாகத் தொடங்கும் போது, ஒரு முட்டையை, தேவையான பொருட்களின் பட்டியலில் பர்னால் சேர்த்தவர்கள் கையாலும், மற்றவர்கள் கரண்டியாலும் வெளியே எடுக்கவும்.
அந்த முட்டையை உடைத்துப் பார்க்கவும்.
உடைத்த முட்டை அரை அவியலாக இருக்கும் பட்சத்தில் இன்னும் சில நிமிட நேரங்கள் எஞ்சிய முட்டைகளை அவிய விடவும். டாய்லெட் உபத்திரவம் உள்ளவர்கள் அதை மேலும் சில நிமிட நேரங்கள் ஒத்தி வைக்க வேண்டி வரலாம்.

பின்னர் மீண்டும் இன்னுமொரு முட்டையை வெளியே மேலே கூறப்பட்ட வழிமுறையில் எடுக்கவும். அதையும் உடைத்துப் பார்க்கவும்.
அப்போது உங்களுக்கு எஞ்சியிருக்கும் முட்டையின் அவிந்த தரம் தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

ஏன் இரண்டு முட்டைகளை மேலதிகமாக அவியப் போட லீனா சொன்னார் என்ற சமையல் தந்திரம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
லீனாவை நினைத்து நீங்கள் பூரிப்படைந்திருப்பீர்கள்.

எமக்கு தற்சமயம் தேவையானது பூரிப்பு அல்ல முட்டை. எனவே மீண்டும் முட்டைக்கு வரவும்.

அடுப்பை நிதானமாக அணைக்கவும். பின்னர் பாத்திரத்தை அடுப்பிலிருந்த்து இறக்கவும்.
பாத்திரத்தை இறக்கும் போது காலில் வெந்நீரை ஊற்றுபவர்கள் முட்டை அவிப்பதை அன்று முதல் நிறுத்துமாறு இந்த லீனா அன்புடன் கேட்டுக் கோள்கிறான்.

பாத்திரத்தில் இருக்கும் நீரை வெளியே வடித்துவிட்டு முட்டைகளை ஆற விடவும்.
அப்போது நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று. முட்டைகளை ஒருதரம் மீண்டும் எண்ணிப் பார்ப்பது.
தற்செயலாக ஒரு முட்டை எண்ணிக்கையில் குறையும் பட்சத்தில், இரண்டாவதாக உடைத்துப் பார்த்த முட்டையை கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம். (இங்குதான் லீனா நிற்கிறான்).

ஆறவிட்ட முட்டைகளின் கோதுகளை அகற்ற வேண்டிய ஒன்றே எஞ்சியுள்ளது.
இதற்கு உங்களுக்குத் தேவையானது மிகவும் நிதானமும் பொறுமையும்.
முட்டைக் கோதுகளை உடைக்கும் போது நீங்களே, லீனா ஏன் முட்டை அவிப்பதற்கு நிதானமும் பொறுமையும் தேவையயென்பதை அடிக்க்டி கூறுகின்றார் என்பதைப் புரிந்து கொள்வீர்கள்.

இப்போது உங்கள் கையில் அழகான வெள்ளை நிறத்தில் முட்டை வடிவத்தில் முட்டை காட்சியளிக்கும்.
முட்டை வடிவத்தில் காட்சியளிக்கும் முட்டையை சமைத்திருக்கும் மற்றய உண்வுடன் சேர்த்து சாப்பிடவும்.

லீனாவின் சமையல் குறிப்பிலிருந்து........

தமிழ்நாடுடோல்க்கில் கலக்கலாக எழுதும் லீனாவினது இந்த செய்முறை.