ஓம் சாந்தி ஓம் - திரைவிமர்சனம்
நேற்று பிற்பகல் என் மீடியா நண்பர் ஒருவர் இரவு ஓம் சாந்தி ஓம் படத்தின் பிரிவியூ ஷோவுக்கு போகவேண்டும் ஆயுத்தமாக இருக்கவும். நானும் பிரியாக வாற சான்சை ஏன் விடுவான் என்பதுடன் முதல்முதலாக தீபிகா படுகோனை திரையில் பார்க்கும் மகிழ்ச்சியுடனும் தயாரானேன்.
சரியாக ஆறரைமணியளவில் என் நண்பன் என் இருப்பிடத்துக்கு வந்தான் நாம் இருவரும் வெளியே கிழம்பியதுதான் தாமதம் மழை கொட்டத்தொடங்கியது. இருவரும் புரோகிராமைக் கான்சல் செய்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பலாம் என்றால் அவனுக்கு உத்தியோகபூர்வமாக எப்படியும் படத்தைப் பார்த்து எதிர்வரும் ஞாயிறு அவனுடைய பத்திரிகைக்கு விமர்சனம் கொடுக்கவேண்டும். இதனால் இருவரும் பஸ்சில் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு ஒரு ஓட்டோ ஒன்று பிடித்து திரையரங்கத்தை அடைந்தோம்.
7 மணிக்கு தொடங்கவிருந்த படம் சில பிரமுகர்களின் வருகையால் சற்றுத்தாமதமாகி 7.25 மணிக்குத்தான்ஆரம்பித்தது.
முதலில் 30 வருடங்களுக்கு முன்னர் என்ற டைட்டிலுடன் படம் ஆரம்பித்தது. ஒரு ஸ்ரூடியோவில் ஏதோ ஒரு படத்தின் சூட்டிங் நடக்கின்றது. ஓம் பிரகாஸ் மஹிஜாவும் (ஷாருக்கான்) அவரது நண்பர் பப்புவும்(ஸ்ரேயாஸ் தல்படே) ஜீனியர் ஆர்ட்டிஸ்ட். ஷாருக்கின் கனவு தான் ஒரு நாள் ஹிந்தித் திரையுலகின் சூப்பர் ஸ்ரார் ஆகவேண்டும் என்பதுதான் அதற்க்கு அவரது நண்பர் பப்பு நீ சூப்பர் ஸ்ரார் ஆகவேண்டும் என்றால் முதலில்
உன் பெயரை ஓம் கண்ணா அல்லது ஓம் கபூர் என மாற்று இல்லையென்றால் உன்னால் சூப்பர் ஸ்ராராக முடியாது என்கிறார்.
ஓமின் ஆசைகளில் ஒன்று தான் சூப்பர் ஸ்ராராகியவுடன் சுழலும் வட்டவடிவான கட்டிலிலிருந்து காலையில் நித்திரையால் எழும்பொழுது தன்னுடைய கால்கள் அழகான வெல்வெட் பாதணிகளைத் தாங்கவேண்டும், தனக்கு ஜூஸ் கொடுக்க ஒரு வேலையாள், ஜூஸ் குடித்தபின்னர் அந்த கப்பை எறிய அதனை பிடிக்க இன்னொரு வேலையாள், இப்படியான கனவு ஓமின் கனவு.
சூப்பர் ஸ்ரார்கனவில் மிதக்கும் ஷாருக்கின் கனவுக்கன்னி சாந்திப்பிரியா(தீபிகா படுகோன் அதாங்க நம்ம டோணியுடன் கிசுகிசுக்கப்படுபவர்). ஒரு நாள் ஒரு படப்பிடிப்பில் தீப் பிடிக்கும் காட்சி ஒன்றில் நிஜமாகவே தீப்பற்றிக்கொள்ள தீபிகா தீயினுள் அகப்பட்டுக்கொள்வார். அந்தப் படத்தின் நிஜக் ஹீரோ பயத்தில் அலற ஜீனியர் ஆர்ட்டிஸ் தீக்குள் பாய்ந்து தீபிகாவைக் காப்பாற்றிவிடுவார்.
பின்னர் வழமையான திரைக்கதைபோல ஷாருக்குக்கு தீபிகாமேல் காதல் வருகிறது தீபிகாவும் ஷாருக்குடன் டின்னர் போகின்றார் கனவில் அரைகுறை ஆடைகளுடன் ஆடுகின்றார். ஷாருக்குக்கு ஒரு காதலர் போல் உள்ள பரிசு ஒன்று அளிக்கின்றார். இந்த வேளையில் தான் முகேஸ் மெஹ்ராவுக்கும்(அர்ஜூன் ராம்பால்)தீபிகாவுக்கும் உள்ள
தொடர்பு ஷாருக்குக்கு தெரியவருகின்றது. முகேஸ் மெஹ்ரா ஓம் சாந்தி ஓம் என்ற பிரமாண்டமான படத்தை சாந்திப்பிரியாவை வைத்த எடுக்க நினைக்கின்றார். இந்த வேளையில் இவருக்கும் சாந்திப்பிரியாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு என்ன நடக்கின்றது என்பது தான் இடைவேளைக்கு முன்னால் வரும் ஒரு கிளைமாக்ஸ்.
30 வருடங்களுக்கு பின்னர் 2007 என டைட்டில் கார்ட்.
இடைவேளைக்கு பின்னர் ஷாருக் கண்ட கனவுபோல் காட்சிகள் வருகின்றது, இவரின் தந்தை முன்னாள் பிரபல நடிகர் ராஜேஸ் கபூர் , ஷாருக்கின் பெயர் ஓம் கபூர். இந்த ஷாருக் முற்றிலும் மார்டேன் ஆன புதியவராக இருக்கிறார். இவருக்கு மூன்று அழகிகள் உதவியாளர்கள்.
ஓம் கபூர் தான் நினைத்தபடி இந்த வருடத்துக்கான பிலிம் ஃபேர் சிறந்த நடிகர் விருது பெறுகின்றார் இவருடன் போட்டியிட்டவர்கள் அபிசேக் பச்சானும்( ஏனுங்க நம்ம தலைவி ஐஸ்வர்யா ராயை விருது வாங்கும் விழாவுக்கு அழைத்து வரவில்லை), அக்சய் குமாரும். எந்தவித பந்தாவும் இல்லாமல் இந்த கொஞ்சூண்டு கேரட்டரில் நடித்த இருவருக்கும் பாராட்டுக்கள். விருது முடிந்ததும் ஒரு பிரமாண்டமான பாடல், ஹிந்தித் திரையுலகின் அனைத்து நடிகர் நடிகைகளும் பங்குபெறுகிறார்கள்( தமிழில் ஒரு நடிகரின் படத்தில் இன்னொரு பிரபல நடிகர் முகத்தைக் காட்டுவதையே ஏதோ கொலைக்குற்றம் போல் பேட்டி கொடுப்பார்கள்).
அதே விருந்தில் ஓம் கபூர் முகேஸ் மெஹ்ராவைச் சந்தித்து 30 வருடங்களுக்கு முன்னர் தடைப்பட்ட ஓம் சாந்தி ஓம் படத்தை தன்னை வைத்து தயாரிக்கும் படி கூறுகின்றார். இதன் பின்னர் நடக்கும் சம்பவங்களைச் சொன்னால் படம் பார்க்கும் சுவாரஸ்யம் குன்றிவுடும். ஆகவே படம் பார்க்கவிரும்பும் அன்பர்கள் திரையிலோ இல்லை வீசிடியிலோ பார்த்து மகிழ்க.எதிர்வரும் 9 ந்திகதி இந்தத் திரைப்படம் திரைக்கு வருகின்றது.
இனி இப்படத்தின் பின்னால் இருந்தவர்களைப் பார்ப்போம்.
கதை, திரைக்கதை, இயக்கம் : ஃபாரா கான் பிரபல நடன இயக்குனர். நடன இயக்கமும் இவரே. பல காட்சிகளில் இவரின் திறமை தெரிகின்றது. ஆனால் சில இடங்களில் 30 வருடத்துக்கு முன்னைய காலகட்டத்தில் சில இடங்களில் கொஞ்சம் தடுமாறியுள்ளார். அதேபோல் ஓம் கபூரின் நடவடிக்கைகளில் ஏற்படும் மாற்றங்கள் அவரின் பெற்றோருக்கு தெரியாமலிருப்பதிலும் நோ லாஜிக் ஒன்லி மாஜீக். மற்றும்படி சிறந்த பொழுதுபோக்குப் படம் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
இசை : விஷால் அன்ட் சேகர் பாடல்கள் கேட்கும் படி இருக்கின்றன.
கலை : சாபு சிரில் ஓம் சாந்தி ஓம் சூட்டிங் நடக்கும் ஸ்ரூடியோ பிரமிக்க வைக்கின்றது அதிலும் இரண்டு கிளைமேக்ஸ் காட்சிகளிலும் கலக்கல். ஒரு பாடலிலும் சிறந்த கலைவடிவம்.
ஒளிப்பதிவு : மணிகண்டன்( அந்னியனில் சங்கருடன் பணியாற்றியவர் ஷாருக்கின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் )சிறந்த ஒளிப்பதிவு முதல் பாடலில் திரையை படம் பிடித்தால் ஏற்படும் எபெக்ட் கொடுத்திருப்பார்.
மிகவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய விடயம் ஃபாரா கானுக்காக ஹிந்தித் திரையுலகின் பலர் இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியதுதான் . அவர்களுக்கு முதலிலேயே நன்றி சொல்லிவிட்டார்கள். 

இறுதியாக என்ன சொல்கிறாகள் என்றால் சில காதல் கதைகளுக்கு ஒரு வாழ் நாள் போதாது.
For some Dreams one lifteime is not enough
பின் குறிப்பு :
இந்தப் படத்துக்கும் நடிகை பூஜாவுக்கு என்ன தொடர்பு என்றால் ஹிஹிஹி ஒன்றும் இல்லை. அவர் நான் பார்த்த பிரிவியூ ஷோ பார்க்க தனது தாயாருடன் வந்திருந்தார். மேக்கப் இல்லாமல் வந்தபடியால் முதலில் அடையாளம் காண்பது கஸ்டமாக இருந்தது.
Suriya takes Vishwanath & Sons home to Coimbator
-
Suriya spent every school summer of his childhood in Coimbatore, and on
Sunday evening he stood on a stage there and read the route back out from
memory:...
2 days ago

