சர்ச்சையில் சிக்குவதோ இல்லை மற்றவர்கள் மேல் வசை பாடுவதோ அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களுக்கும் அவுஸ்திரேலியாப் பத்திரிகைகளுக்கும் புதிசல்ல. 
அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஜோன் புச்சானன் சமீபத்தில் எழுதியுள்ள கிரிக்கெட்டின் எதிர்காலமும் டுவென்டி 20-யின் எழுச்சியும்("The Future of Cricket: The Rise of Twenty20") என்ற நூலில் பல முன்னணி வீரர்களை மிகவும் காட்டமாகச் சாடியுள்ளார். ஏற்கனவே ஐபிஎல்லில் கல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்தபோது பல சர்ச்சைகள் உருவாகவும் அந்த அணி தொடரில் கடைசி இடத்தில் வரவும் வழி செய்தவர் இவரே.
இவர் தனது புத்தகத்தில் முன்னாள் வீரர்களான கவாஸ்கர் உட்பட யுவராஜ் சிங், கங்குலி, ஹர்பஜன் சிங் போன்ற இந்திய வீரர்களையும், மார்க் ராம் பிரகாஷ், ஹெவின் பீட்டர்சன், சோயப் அக்தர் போன்ற ஏனைய வீரர்களையும் இந்தியத் தொழிலதிபர் விஜய் மல்லையாவையும் விமர்சனம் செய்துள்ளார்.
விஜய் மல்லையாவை ஒரு சர்வாதிகாரியாகவும், கவாஸ்கர் ஒரு தலைப்பட்சமான முடிவுகளை எடுப்பவர் எனவும் எழுதியிருக்கின்ற புச்சானன் யுவராஜ் சிங் கங்குலியாக முயற்சிக்கின்றார் ஆனால் அவருக்கு அந்தத் தகுதியில்லை என்கின்றார். அத்துடன் சச்சின் டெண்டுல்கருக்கு ருவெண்டி 20யில் விளையாட தகுதியில்லை என்றும் அவரால் அதிரடியாக ஆடமுடியாது என்று நட்சத்திரவீரர் சச்சின்மேலும் தன் கடின சொற்களை வீசியுள்ளார்.
இவரின் இந்தக் கருத்துக்களுக்கு ஹர்பஜன் சிங் தன் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார். புச்சானன் தன் புத்தகத்தினை விற்க மலிவான விளம்பரம் தேடுகின்றார் புச்சானன் என ஹர்பஜன் தெரிவித்தார்.
இதுவரை ஏனைய வீரர்களோ அல்லது பிசிசிஐயோ இதற்க்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. புச்சானனின் கருத்து ஒரு தனிப்பட்ட மனிதரின் கருத்தாக இருந்தாலும் பிரபல நட்சத்திர வீரர்களை குறிவைத்துத் தாக்கும்போது அமைதி காப்பது புச்சானனின் கருத்துக்களை மறைமுகமாக ஒத்துக்கொள்வதுபோல் இருக்கின்றது.
சர்ச்சையில் புச்சானன்
எழுதியது வந்தியத்தேவன் at 1 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் கிரிக்கெட், புச்சானன், ரி20, விளையாட்டு
பழிதீர்த்தது இலங்கை
கடந்த மாதம் இங்கிலாந்தில் இடம் பெற்ற இருபதுக்கு இருபது உலககிண்ணப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றதற்க்கு இன்று காலியில் இடம்பெற்ற டெஸ்போட்டியில் இலங்கை அணி 50 ஓட்டங்களால் வெற்றியீட்டி பழிதீர்த்துக்கொண்டது.
இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் தொடரை இலகுவாக வென்று தன் கணக்கை புதியதலைவர் சங்ககார தொடங்கியுள்ளார்,
முரளிதரன், வாஸ் போன்றவர்கள் இல்லாததாலும் சில புதுமுகவீரர்களுடனும் களமிறங்கிய இலங்கை அணி முன்னைப்போல் இல்லாமல் முதல் இனிங்ஸில் துடுப்பாட்டத்தில் தடுமாறியது.
ஆரம்பத் துடுப்பாட்டவீரர் மாலிந்த வர்ணபுர இரண்டு இனிங்சிலும் சொதப்பினார், அதேபோல் சல்மான் பட்டின் சோகமும் தொடர்கின்றது. இரண்டு அணியிலும் ஆரம்பத் துடுப்பாட்டவீரகளினால் பெரிதாக எதையும் சாதிக்கமுடியவில்லை. இலங்கை சார்பாக பரணவிதான முதல் இனிங்சில் அரைச்சதம் கடந்தார். தனது முதல் போட்டியில் விளையாடும் அஞ்சலோ மத்தியூஸ் 42 ஓட்டங்களை எடுத்தார். பரணவிதான இரண்டாவது இனிங்சிலும் சிறப்பாக விளையாடியிருந்தார். ஏனைய இலங்கை வீரர்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை.
பாகிஸ்தானின் பந்துவீச்சில் புதுமுக வீரர் இரண்டு இனிங்சிலும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி மொத்தமாக 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இன்னொரு புதுமுகவீரரான சஜீட் அஜ்மல் இரண்டு இனிங்சிலும் மொத்தமாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். உமர் குல் அவ்வளவாக மிரட்டவில்லை.
பாகிஸ்தானின் துடுப்பாட்டம் முதல் இனிங்சில் அணிக்கு மீண்டும் திரும்பிய முகமட் யூசுப்பின் சதத்தினாலும் மிஸ்பா உல் ஹக்கின் அரைச்சதத்தினாலும் சிறப்பான நிலைக்கு அணியை இட்டுச் சென்றது. ஏனையவீரர்கள் சோபிக்கவில்லை.
இலங்கைப் பந்துவீச்சைபொறுத்தவரை வேகங்களான நுவான் குலசேகர, திலான் துஷார இருவரும் முதல் இனிங்சில் அச்சுறுத்தினார்கள். ரங்கன ஹேரத்திற்க்கு ஒரு விக்கெட்டும் அறிமுகவீரர் அஞ்சலோ மத்தியூசுக்கு ஒரு விக்கெட்டும் கிடைத்தது. மெண்டிஸ் மந்திரம் வேலை செய்யவில்லை. முரளிதரன் இல்லாத குறை பட்டவர்த்தனமாக தெரிந்தது. முரளி இல்லாமல் இலங்கை அணியால் வெல்லப்பட்ட நான்காவது டெஸ்ட் இதுவாகும். இரண்டாவது இனிங்சில் ரங்கன ஹேரத்தின் சுழலில் மிக இலகுவான இலக்கை பாகிஸ்தான் வீரர்களால் எட்டமுடியாமல் திணறினார்கள். இரண்டாவது இனிங்சில் 11.3 ஓவர்கள் பந்து வீசி வெறும் 15 ஓட்டங்கள் மாத்திரமே கொடுத்து சல்மான் பட் முகமட் யூசுப் உட்பட நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ரங்கன ஹேரத் ஆட்டநாயகனாக தெரிவுசெய்யப்பாட்டார்.
எழுதியது வந்தியத்தேவன் at 3 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் இலங்கை, கிரிக்கெட், பாகிஸ்தான், விளையாட்டு
ஒரு கை ஓசை
இந்தியா என்றாலே உடனே பலரது நினைவுக்கு வருவது கலாச்சாரம் பண்பாடு நிறைந்த நாடு என்பதேயாகும். ஆனால் கடந்த வியாழக்கிழமை ஓரினச்சேர்க்கை சரியானது என தில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்தியாவும் மேற்கத்திய நாடுகள் பட்டியலில் தன்னை இணைத்துக்கொள்ளமுயகின்றதுபோல் தெரிகின்றது.
இராமாயண காலத்திலிருந்து ஒருவனுக்கு ஒருத்தி என்பதை பெரும்பான்மையான இந்தியர்கள் கடைப்பிடித்துவருகின்றார்கள். இதனை தமிழர்கள் தம் கலாச்சாரமாகவே கட்டிக்காத்துவருகின்றார்கள். அப்படியிருக்கையில் ஒரு ஆண் ஆணுடன் சேர்ந்துவாழ்வதையும் பெண் பெண்ணுடன் சேர்ந்துவாழ்வதையும் சரியென தீர்ப்பளித்து உயர்நீதிமன்றம் இந்தியப் பண்பாட்டையே கொச்சைப்படுத்தியுள்ளது.
சில இஸ்லாமிய கிறிஸ்தவ அமைப்புகள் இதனை எதிர்க்கின்றார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால் ராமனை வைத்து அரசியல் நடத்தும் பிஜேபி சிவசேனா போன்ற கட்சிகள் இந்த தீர்ப்பை எதிர்த்து குரல் கொடுத்ததாக செய்திகள் காணப்படவில்லை. ஏன் ஆனந்தவிகடனோ ஜூனியர் விகடனோ கூட இது பற்றி வாய் திறக்கவேயில்லை. சர்ச்சை நாயகி குஷ்புமட்டும் இதனை வரவேற்றிருப்பதாக செய்திகள் வெளியாகின.
மேற்கத்திய நாடுகள் போல் வல்லரசாக வேண்டுமென்றால் அணுஆயுதம், சிறிய நாடுகளுடன் சண்டித்தனம், கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றுடன் இப்படியான நாகரீகங்களையும் இந்தியாவிற்க்குள் புகவிட்டால் வல்லரசாகிவிடும் என்ற மனப்பான்மையில் காங்கிரஸ் அரசு இருப்பதாக தெரிகின்றது.
ஏற்கனவே டேட்டிங், பப், டிஸ்கோதே கலாச்சாரத்தில் ஊறிய நாடு ஓரினச்சேர்கையாளர்களின் அனுமதியால் என்ன என்ன கஸ்டங்களைப் படப்போகின்றதோ?
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆனந்தவிகடனில் இரண்டு தமிழ்ப் பெண்களை படத்துடன் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்ற செய்தி வெளியிட்டார்கள். ஏற்கனவே இந்தியாவில் 24 லட்சத்துக்கு மேற்பட்ட ஓரினச்சேர்க்கைப் பிரியர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்க்கு தடையில்லை என்பதால் இந்தத் தொகை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
எதுஎப்படியோ இந்தியாவின் பண்பாடு கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கத்திய கலாச்சாரத்திற்க்கு மாறிவருவது வேதனைக்குரியது.
எழுதியது வந்தியத்தேவன் at 9 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் அரசியல், ஓரினச் சேர்க்கை, குஷ்பு, பாலியல்
ஐசிசியால் புறக்கணிக்கப்பட்ட ஆசிய ஆபிரிக்கர்கள்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) 1909ஆம் ஆண்டு ஜூன் 15ந்திகதி ஆரம்பிக்கப்பட்டது. இப்போது அதன் நூற்றாண்டு விழாக் கொண்டாடப்படுகின்றது. இதில் முன்னாள் வீரர்களைக் கெளரவிக்கும் விதமாக "ஹோல் ஒவ் பாம்" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 55 வீரர்களை ஐசிசி தெரிவுசெய்துள்ளது. இதில் வெறும் ஆறு பேரே ஆசியாவில் இருந்து தெரிவாகியுள்ளார்கள்.
இந்தியாவின் சார்பில் கபில்தேவ், கவாஸ்கர் மற்றும் பிஷன் சிங் பேடி ஆகியோரும் பாகிஸ்தானில் இருந்து இம்ரான் கான், ஜாவேட் மியாண்டாட், ஹனீப் முகமது ஆகியோரும் தெரிவுசெய்யப்படிருக்கிறார்கள். இலங்கை அணி சார்பாக யாருமே தெரிவுசெய்யப்படவில்லை. 
1995ஆம் ஆண்டிற்க்கு முன்னர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வீரர்களை மட்டுமே கணக்கில் எடுத்ததாக சொல்லும் ஐசிசி இங்கிலாந்திலிருந்து அதிக பட்சமாக 22 வீரர்களையும் ஆவுஸ்திரேலியாவில் இருந்து 13 வீரர்களையும் மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து 11 வீரர்களையும் தெரிவு செய்துள்ளது.
தென்னாபிரிக்காவிலிருந்து ஷோன் போலக்கின் பெரிய தந்தையார் கீரீம் போலக்கும் , பெரி ரிச்சார்ட்ஸும் மாத்திரம் தெரிவாகியுள்ளனர். நியூசிலாந்திலிருந்து சேர் ரிச்சர்ட் ஹாட்லி மாத்திரம் தெரிவாகியுள்ளார்.
கீரீம் போலக்
தென்னாபிரிக்கா, இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், சிம்பாவே, நியூசிலாந்து போன்ற நாடுகளின் பல தலைசிறந்த வீரர்களைத் தெரிவு செய்யாமல் ஐசிசி பாரபட்சம் காட்டியிருக்கிறது. இங்கிலாந்து வீரர்களில் சிலர் ஒரு சில டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடிய வீரர்கள் ஆவார்கள்.
இலங்கையின் துலிப் மெண்டிஸ், மாலிந்த வர்ணபுர, ரோய் டயஸ் போன்ற வீரர்கள் பல சாதனை செய்தவர்கள். இந்தியாவைப் பொறுத்தவரை லாலா அமர்நாத், குண்டப்பா விஸ்வநாத்,வெங்சகார் விஜய் ஹசாரே போன்றவர்களும் தெரிவாகவில்லை.
அதேபோல் இந்தியா சுதந்திரம் பெறுவதற்க்கு முன்னர் இங்கிலாந்து அணியில் விளையாடிய ராஞ்சி கோப்பை உருவாக காரணமாக இருந்த குமார் ஸ்ரீ ராஞ்சி அவர்களின் பெயரயும் ஐசிசி பரீசிலிக்கவில்லை.
இனி ஒவ்வொரு ஆண்டும் ஒரு வீரர் இப்பட்டியலில் இடம் பெறவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பலரின் பெயர்களை பரிசீலிக்காமல் ஐசிசி எந்தப் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது என்பது புரியாத புதிராகவே உள்ளது.
எழுதியது வந்தியத்தேவன் at 9 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் ஐசிசி, கிரிக்கெட், விருதுகள், விளையாட்டு
தெருச் சண்டைகளாக மாறும் இலக்கியச் சண்டைகள்
என்றைக்குமே எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளிடையே சேர்ந்திருக்கும் ஒரு விடயம் கருத்துமோதல்களாகும். இந்தக் கருத்துமோதல்கள் இன்றைக்கோ நேற்றைக்கோ தொடங்கியது அல்ல. ஆரம்பத்தில் கம்பன்கழக மேடைகளில் தொடங்கிய கருத்துமோதல்கள் பின்னர் படிப்படையாக வார மாத இதழ்களிலும் பத்திரிகைகளிலும் இடம்பிடித்தன. பல ஆரோக்கியமாக இருந்தாலும் சில வெறும் தனிமனித தாக்குதல்களாகவே மாறிவிட்டன.
பெரும்பாலான கருத்துமோதல்களுக்கு காரணம் ஒவ்வொருவரும் வெவ்வேறு இசங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் தங்கள் இசங்களுக்கு அல்லது கொள்கைகளுக்கு எதிரானவர்களுடன் மல்லுக்கட்டுதல் தவிர்க்கமுடியாத ஒன்றாகிவிட்டது.
இணையத்தின் பரவல் அதிகரிக்கப்பட்டபின்னர் இணையத்தில் இந்ததாக்குதல் தொடர்கின்றன. இதற்க்கு சிறந்த உதாரணம் அண்மையில் சாருவுக்கும் ஜெமோவுக்கு இடையிலான பனிப்போர்.
இந்தப்பனிப்போர்கள் இலங்கையில் கூட நடைபெற்றன, நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஒரு பட்டிமன்ற மேடையில் இரண்டு பேச்சாளர்களுக்கிடையில் நடைபெற்ற வாக்குவாதம் எங்கள் ஊர்ப்பகுதியில் பிரசித்திபெற்றது. இவர்கள் இருவரும் ஏதோ நாட்டுப்பிரச்சனையில் வாக்குவாதப்பட்டிருந்தார்கள் என்றால் பாராட்ட்லாம் ஆனால் என்றைக்கோ கம்பன் எழுதிவைத்துவிட்டுப்போன இராமாயணத்தில் சீதை பற்றி சண்டையிட்டார்கள். இந்தச் சண்டை அந்த மேடையில் மட்டுமல்ல அதன் பின்னர் வந்த ஏனைய இலக்கியமேடைகளில் கூட எதிரொலித்தது. சீதையை இராவணன் கடத்தியபோது சீதை இருந்த நிலைதான் சண்டைக்கான முதல்காரணம். இராமாயணம் படித்தவர்களுக்கு அந்த நிலை என்னவென்று தெரியும்.
இலங்கையிலுள்ள பெரும்பாலான எழுத்தாளர்கள் முற்போக்கு எழுத்தாளர்கள் என தம்மை அழைக்கிறார்கள். அதனால் இவர்களிடம் சுஜாதா பற்றியோ ராஜேஸ்குமார் பற்றியோ கதைக்கமுடியாது. இவர்களின் பார்வையில் சுஜாதா ராஜேஸ்குமார் புஷ்பா தங்கத்துரை போன்றவர்கள் எழுதியது குப்பை இலக்கியம் என்பார்கள். சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் போன்றோர்களின் எழுத்துக்கள் மட்டும் தான் தரமான இலக்கியம் என்பது இவர்களின் வாதம்.
ஒருமுறை எமது கல்லூரிக்கு பிரபல எழுத்தாளர் ஒருவர் உயர்தர மாணவர்களிடையே இலக்கிய சொற்பொழிவொன்றாற்றினார். இலக்கியம் என்றால் அது மண்வாசனையுடன் இருக்கவேண்டும், அதனைவிட்டுவிட்டு நகரங்களில் நடக்கும் கதைகள் துப்பறியும் கதைகள் எல்லாம் இலக்கியம் இல்லை என்ற தொணியில் உரையாற்றிக்கொண்டிருந்தார். அவரது உரை முடிவுற்றபின்னர் நாம் அவருடன் சிலமணி நேரம் கலந்துரையாடப் பணிக்கப்பட்டோம். அப்போது அவரிடம் தமிழ்வாணன் கதைகள் இலக்கியத்தில் வரதா? எனக்கேட்டபோது இல்லை என பதில் அளித்தார். பின்னர் சுஜாதா ராஜேஸ்குமார் போன்றவர்களையும் ஒரு பிடிபிடித்தார். இவர்களின் எழுத்துக்களில் ஆபாசம் தலைதூக்கியிருக்கிறது எனவும் சும்மா பொழுதுபோக்கிற்க்கு மட்டும் படிக்கலாம் எனவும் தன் கருத்துக்களைச் சொன்னார்.
இவர்களைப்போல் தமிழக எழுத்தாளர்கள் சிலரும் இருக்கிறார்கள். தமது எழுத்துக்கள் தான் தரமானது ஏனையவை தரமற்றது என்பது இவர்களின் கருத்து. சாரு போன்ற சிலர் தமிழ் எழுத்தாளர்களைவிட ஏனைய வெளிநாட்டு எழுத்தாளர்களைப் பற்றி மட்டுமே எழுதுவார். நம்ம நாட்டு கலைஞர்களைக் கெளரவிக்கவேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு வருவதில்லை.
சிலகாலத்திற்க்கு முன்னர் தினக்குரலில் இடம்பெற்ற கவிஞர் மு.பொன்னம்பலம்,
கம்பன் கழகப்பேச்சாளார் ஸ்ரீபிரசாந்தன் இடையே நடைபெற்ற விவாதங்களும் பிரசித்திபெற்றவை. இவர்கள் சண்டைபோட்ட விடயம் அல்குல் என்ற தமிழ் சொல் பற்றியதாகும். அத்துடன் பிரசாந்தன் ஈழத்துக் கவிஞர்களின் கவிதைகள் தொகுப்பில் மலையக கவிஞர்களைப் புறக்கணித்ததாக அந்தனி ஜீவாவால் ஞானம் இதழில் குற்றம் சாட்டப்பட்டார். குற்றச்சாட்டை நிராகரித்த பிரசாந்தன் அந்தனி ஜீவாவை பிரதேசவாதி என குற்றம் சாட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
குமுதத்தில் கோணல் பக்கங்கள் எழுதிய காலத்தில் இருந்தே சாருவைப் படித்துவருகின்றேன். சாருவையோ ஏனைய எழுத்தாளர்களையோ விமர்சிக்கும் தகுதி எனக்கில்லை காரணம் அந்தளவிற்க்கு இலக்கிய அறிவு எனக்கில்லை. சாரு ஒரு இலக்கியவாதியாக இருந்துகொண்டு இளையராஜாவை விமர்சிப்பது பிடிக்கவில்லை. சாரு ஒரு இசைஅறிஞர் என்றால் இளையராஜாவை மட்டுமல்ல மொசார்ட், பீதோவனைக்கூட விமர்சிக்கலாம். ஆனால் சாருவுக்கு இசைபற்றித் ஆழ்ந்த அறிவுகிடையாது என்பது அவரது எழுத்துக்களில் இருந்து புரிகின்றது. அப்படியிருக்கையில் தமிழர்களுக்கு பெருமை சேர்த்த இசைஞானியின் இசை இசையல்ல என்கிறார்.
இவரின் விமர்சனத்திற்க்கு அடிக்கடி உள்ளாகும் இன்னொருவர் நடிகர் கமலஹாசன். கமலஹாசனை அடிக்கடி விமர்சிக்கும் இவர் ஏன் தலைகளையும் தளபதிகளையும் விமர்சிப்பதில்லை? சாரு ரஜனிகாந்தைக்கூட இதுவரை விமர்சித்ததில்லை. இவரது புனைகதை எழுத்தில் இருக்கும் தைரியம் விமர்சனங்களில் இல்லை.
சாருவிடம் இன்னொரு கேள்வி உங்களுக்கு கேரளத்தில் இருக்கும் புகழ் பற்றி அடிக்கடி எழுதுகிறீர்கள். கட் அவுட் வைத்ததாககூட எழுதியிருக்கிறீர்கள். ஏன் உங்களால் முல்லைப் பெரியார் பற்றி கேரளமக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் விளங்குமாறு விளக்கம்கொடுக்கமுடியாது உள்ளது. காரணம் நீங்கள் கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் மட்டும் விமர்சிக்கும் துணிவு அரசியல்வாதிகளிடத்தில் உங்களுக்கு இல்லை.
இறுதியாக சாரு ஜெமோ இருவருக்கும் ஒருவேண்டுகோள் உங்கள் சண்டைகளை ஆக்கபூர்வமான விடயங்களில் செலுத்தினால் அனைவருக்கும் பிரயோசனமாக இருக்கும்.
டிஸ்கி : அண்மைக்காலமாக சாரு, ஜெமோ, பைத்தியக்காரன், லக்கி, நர்சிம் எனப் பலரரின் விமர்சனங்கள் வாசித்தேன் அனைத்துக்கும் பொதுவான ஒரு பின்னூட்டமாக இந்த உளறல். வேறு எந்த உள்குத்தோ அரசியலோ இல்லை. இலக்கியச் சண்டைகள் எங்கும் நடைபெறுகின்றன என்பதற்காகவே இலங்கை எழுத்தாளர்கள் பற்றியும் ஒரு சின்ன விளக்கம்.
எழுதியது வந்தியத்தேவன் at 9 கருத்துக் கூறியவர்கள்
இளையராஜா ஒரு சகாப்தம்
இளையராஜா அவ்வளவுதானா? என கேள்வி கேட்கும் விதமாக இந்தப் பதிவுக்கு தலைப்பிட நினைத்தேன். ஆனால் என்னால் அப்படி இடமுடியவில்லை காரணம் நான் கடைந்தெடுத்த இசைஞானி ரசிகன். 
கடந்த சில காலமாக ராஜாவைப்பற்றி பல கருத்துகள் வலைகளிலும் சரி சில களங்களிலும் குழுமங்களிலும் ஏன் நேரில் கூட விவாதித்துக்கொள்ளப்படுகின்றது. 70களின் முடிவிலும் 80களில் முழுவதும் 90களின் ஆரம்பத்திலும் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக இசையுலகை தன் ஆர்மோனியப்பெட்டியில் வைத்திருந்தவர் இளையராஜா என்றால் மிகையாகாது.
இந்தப்பதிவிற்க்கு மூலகாரணம் அண்மையில் வால்மீகி படத்தைப்பார்த்துவிட்டு பலர் ராஜாவின் இசை சரியில்லைஎனக் கூறுகின்றார்கள். படம் இன்னும் பார்க்கவில்லை, பாடல்கள் கேட்கவில்லை அதனால் இந்தப்படத்தினைப் பற்றி என்னால் எதுவும் கூறமுடியாது.
ஒருமுறை ஹாய் மதனில் ஒருவர் கேள்வி ஒன்று கேட்டிருந்தார் "சிவாஜிகணேசன், அசாரூதீன், இளையராஜா மூவரும் இனி ஓய்வெடுக்கலாமா?" என. அதற்க்கு மதன் "இவர்கள் மூவரும் சாதனையாளர்கள் இவர்களின் சாதனைகளை இன்னொருவர் முறியடித்தாலும் இவர்கள் தான் முன்னோடிகள்" என பதில் அளித்திருந்தார்.
ஆக இளையராஜா அண்மைக்காலங்களில் அவ்வளவாக சேபிக்காவிட்டாலும் முன்னைய காலங்களில் அவர் தந்த பாடல்களை மிஞ்ச இன்னொருவர் இல்லை என்றே சொல்லலாம். அதுமட்டுமல்ல இன்றைக்கும் அவர் தான் பின்னணி இசையில் நம்பர் ஒன்.
ஒரு கலைஞனுக்கு தன் நாட்டை விட ஊரைவிட இன்னொரு ஊரில் தான் மரியாதை அதிகம். அதனால் தான் என்னவோ இளையராஜாவை மலையாளத் திரையுலகம் தத்தெடுத்துவிட்டது இசைப்புயலை மும்பை தத்தெடுத்துவிட்டது.
80களின் இசைபற்றி ஆராயவே தேவையில்லை. ராஜா கொடிகட்டிப்பறந்த காலமது.இளையராஜாவுக்காகவே ராமராஜன் ராஜ்கிரண் படம் எல்லாம் பார்த்து தொலைத்தகாலமது
90களின் தொடக்கத்தில் ரகுமானின் வரவால் இளையராஜாவின் படங்களின் எண்ணிக்கை குறைந்ததே அல்லாமல் தரம் குறையவில்லை. அந்தகாலத்தில் வெளிவந்த காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு போன்ற படங்களில் மீண்டும் தன் இருப்பை மற்றவர்களுக்கு காட்டினார்.
பின்னர் ஹேராம், விருமாண்டியில் உச்சத்திற்க்கு வந்த இசைராஜா மும்பை எக்ஸ்பிரசை கமலுடன் சேர்ந்து மிஸ் பண்ணிவிட்டார். இடையில் பாலாவின் ஆஸ்தான இசையமைப்பாளராகி சேதுவில் எங்கே செல்லும் இந்தப்பாதை தேடி பிதாமகனில் இளங்காற்று வீசி நான் கடவுளில் ஓம் சிவோஹம் என உருத்திர தாணடவமே ஆடினார். ரமணாவில் இரண்டே இரண்டு பாடல்களிலும் பின்னணியிலும் கேப்டனுக்கு முருகதாசுடன் மறுவாழ்வு கொடுத்தார்.
இடையில் சில படங்களுக்கு இவர் இசையமைத்திருந்தாலும் நல்ல கதை அமைப்பு இல்லாதபடியால் பாடல்களும் எடுபடவில்லை. அதே நேரம் அந்தக்காலத்தில் கதையே இல்லாத பல படங்கள் இவரின் பாடல்களுக்காகவே ஓடின.
ராஜாவின் இன்றைய பின்னடைவிற்க்கு என்னால் கூறக்கூடியவை காரணங்கள் :
1. புதிய தலைமுறைக்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளாமை முக்கிய காரணமாகும். மகன் யுவன் சங்கர் ராஜா புதிய தலைமுறைக்கேட்ப இசையமைக்கும்போது இவரால் அதனைச் செயல்படுத்தமுடியவில்லை. இதற்க்கு தலைமுறை இடைவெளியும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.
2. எவ் எம் ரேடியோக்கள் மியூசிக் சேனல்களின் வருகை. இவை இரண்டும் பெரும்பாலும் இளசுகளை டார்கட் பண்ணியே நடைமுறைப்படுத்தப்படுவதால் ராஜாவைவிட ரகுமான், ஹாரிஸ், யுவன் போன்றோரே இவர்களின் தெரிவாக இருக்கின்றது. ஆஹா எவ் எம்மில் பவதாரணி நடத்திய ராஜாங்கமும் இலங்கையில் சக்தி எவ் எம்மில் ஒளிபரப்புகின்ற ராஜாங்கமும் மட்டும் விதிவிலக்காக இருக்கின்றன.
3. ராஜாவின் கெடுபிடிகளை நினைத்து இளம் இயக்குனர்கள் பயத்தினால் இவரை நாடுவது குறைவு, அண்மையில் கூட மிஷ்கினின் நந்தலாலாவில் சர்ச்சை ஏற்பட்டது. அதாவது இளையராஜா யூசர் பிரண்ட்லி இல்லையென செய்தி அடிபடுகின்றது.
சிலர் சொல்வதுபோல் அவரிடம் சரக்கில்லை என்பது கடைந்தெடுத்த பொய். சரக்கிருக்கு அதனை இந்தக்காலத்திற்க்கு ஏற்ப கொடுக்க தவறிவிட்டார் அல்லது இந்தக்காலத்தின் சில வடிவங்களை அன்றே தந்துவிட்டார் எனலாம். உதாரணமாக விக்ரம் படத்தின் வனிதாமணி வனம்மோகினி பாடலின் முன்னால் வரும் "கண்ணே கட்டிக்கவா ஒட்டிக்கவா" தமிழில் முதல் வந்த ராப் என இசைவல்லுனர்கள் சொல்கிறார்கள்.
வால்மீகி படத்தின் இசைக்கு அதன் தயாரிப்பாளர்களான விகடனும் ஒரு காரணமாக இருக்கலாம். காரணம் ஆரம்ப நாட்களில் விகடனால் இளையராஜா கண்டுகொள்ளப்படவில்லை. இதனை தற்போது அவர்கள் வெளியிடும் விகடன் பொக்கிசத்தில் இருந்து தெரிந்துகொள்ளலாம். ராஜா கோலோச்சிய பல படங்களின் விமர்சனங்களில் அவரைப்பற்றி ஒரு வார்த்தைகூட விகடன் எழுதவில்லை. இதனைப் பலர் விகடன் இணையப்பதிப்பில் பின்னூட்டங்களில் கூடச் கூறியிருந்தார்கள். ஆகவே அதற்க்குப் பழிவாங்கும் வகையில் இசையை சொதப்பினரா? இல்லை இந்தப் படத்திற்க்கு இவ்வளவு போதும் என நினைத்தாரா? (விகடனுக்கு மட்டுமா சிண்டு முடியத்தெரியும்).
இசையில் பல சாதனைகள் செய்த மனிதரை மத்திய மாநில அரசுகள் தான் கண்டுகொள்ளவில்லை என்றால் பதிவுலகத்திலும் எத்தனை எத்தனை எதிர்க்கருத்துக்கள்.
ஒருமுறை விவேக் சொன்னதுபோல் இளையராஜா வெளிநாடு ஒன்றில் பிறந்திருந்தால் அவரை அங்கே கொண்டாடியிருப்பார்கள். தவறிப்போய் அவர் தமிழ்நாட்டில் பண்ணைபுரத்தில் பிறந்தது அவரது துரதிஷ்டம்தான்.
எழுதியது வந்தியத்தேவன் at 8 கருத்துக் கூறியவர்கள்
நியூயோர்க் திரைவிமர்சனம்
விமர்சனத்திற்க்கு முன்னாள் சின்ன ஒரு பிளாஷ் பேக் :
2001 செப்டம்பர் 11 உலகையே புரட்டிப்போட்ட இரட்டைக்கோபுர தாக்குதலின் பின்னர் அமெரிக்காவில் வெளிநாட்டைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1200க்கு மேற்பட்டவர்கள் அமெரிக்காவினால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சித்திரவதை முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். மூன்று வருடத்தின் பின்னர் பலர் தீவிரவாதி என எந்தவித ஆதாரமும் இல்லாதபடியால் விடுதலை ஆனார்கள். விடுதலையான பலர் மன உளைச்சலுக்கும், உட்காயங்களும் ஆளானார்கள். பின்னர் ஜோர்ஜ் புஷ் தான் யாரையும் சித்திரவதை செய்யச் சொல்லி உத்தரவிடவில்லை என தெரிவித்தார். தற்போதைய ஜனாதிபதி பராக் ஒபாமா தான் பதவி ஏற்பதற்க்கு சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின் சித்திரவதை முகாம்களை மூடப்போவதாக அறிவித்தார்.
இனி நியூயோர்க்கினுள் செல்வோம்.
யாஷ் சோப்ராவின் தயாரிப்பில் கபீர் கானின் இயக்கத்தில் ஜோன் ஆப்ரகாம், கத்ரினா கைவ் இர்பான் கான் மற்றும் நீல் நித்தின் முகேஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் ஹிந்தி திரைப்படம் நியூயோர்க்.
மேலே கூறப்பட்ட செப்டம்பர் 11 தாக்குதலை அடிப்படையாக வைத்து முற்றுமுழுதாக அமெரிக்காவில் படமாக்கப்பட்டுள்ளது. 
ஓமர்( நீல் நித்தின் முகேஷ்)ஒரு நாள் எவ்பிஐ(FBI)இனால் கைது செய்யப்படுகின்றான். அவனை விசாரிக்கும் எவ்பிஐ அதிகாரியான ரொஷான்(இர்பான் கான்)அவனுக்கு அவனுடைய சினேகிதன் சாம் என்ற சமீர் ஷேக்குக்கும் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டுகிறார். இதனை மறுத்த ஓமர் தாம் இருவரும் அப்பாவிகள் என்று நியூயோர்க் ஸ்டேட் யூனிவர்சிட்டியில் 1999ல் ஒன்றாகபடித்தவர்கள் எனவும் கூறகின்றான்.
1999ல் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு உயர்கல்விக்காக வரும் ஓமர் அங்கே சாம் என்ற அமெரிக்க இந்தியன், மாயா என்ற அமெரிக்க இந்தியன்(கத்ரினா கைவ்)ஆகியோருடன் நட்பாக இருக்கும் அதேவேளை ஒருதலையாக மாயாவைக் காதலிக்கிறான். ஒருநாள் மாயா தன்னைக் காதலிக்கவில்லை சாமைத்தான் காதலிக்கிறாள் என அறிந்து அவளைவிட்டு விலக முயல்கின்றபோது இரட்டைக்கோபுரம் தாக்கப்படுகின்றது. அந்ததாக்குதலின் பின்னர் ஓமர் பிலடெல்பியாவிற்க்கு இடம் மாறுகின்றான்.
அதன்பின்னர் அவனை 2008 அல்லது 2009 கால கட்டத்தில் கைது செய்யும் ரொஷான் அவனை குற்றமற்றவன் என நிரூபிக்க சாமுடன் சென்று இணைந்து எவ்பிஐக்கு உளவுவேலை செய்யுமாறு வற்புறுத்துகிறார். இதனைடையில் அவர் சாமுக்கும் மாயாவுக்கும் திருமணமாகிவிட்டது அவர்களுக்கு ஒரு குழந்தையும் இருக்கின்றது, மாயாவின் வாழ்க்கையும் சாமின் வாழ்க்கையும் நல்லாயிருக்கவேண்டும் என்றால் ஓமர் கட்டாயம் சாமை கண்காணித்து அவனை தம்மிடம் ஒப்படைக்குமாறு மீண்டும் மீண்டும் வற்புறுத்த ஒரு கட்டத்தில் அந்த வேலையைச் செய்ய ஓமர் ஒப்புக்கொள்கிறான்.
சாம் ஏன் தீவிரவாதியானான், மாயாவுக்கும் சாமுக்கும் எப்படித் திருமணம் நடந்தது? ஓமர் நண்பனை மனம் மாற்றினானா? போன்ற கேள்விகளுக்கான விடைகளை படத்தைப் பார்த்து அறிந்துகொள்ளுங்கள்.
யாஷ் சோப்ராவின் தயாரிப்பில் சக்தே இந்தியாவிற்க்கு பிறகு வந்த நல்ல படம் என்று நியூயோர்கை கூறலாம். இடையில் ஒரு சில மொக்கைப்படங்கள் தயாரித்திருந்தார்.
ஜோன் ஆப்ரகாம், நீல் நித்தின் முகேஷ், இர்பான் கான்(பார்ப்பதற்க்கு நம்ம எஸ் ஜே சூர்யா போல் இருக்கிறார்) கத்ரினா கைவ் ஆகியோர் நடிப்பில் எந்தக் குறையும் வைக்கவில்லை.
ஆதித்யா சோப்ராவின் கதைக்கு திரைக்கதை வசனம் எழுதியிருப்பவர் சந்தீப் ஸ்ரீவத்சவா. இவரது கொஞ்சம் மெதுவான திரைக்கதையை இயக்கியிருக்கிறார் கபீர் கான். பல இடங்களில் அடுத்த காட்சி இதுதான் என ஊகிக்கவைக்கும் திரைக்கதை. இது கொஞ்சம் பலவீனமாக இருந்தாலும் தெளிவான திரைக்கதை என்பதால் ரசிக்கும்படி இருக்கின்றது.
இடைச்செருகல் இல்லாமல் திரைப்படத்துடன் ஒன்றிவருகின்ற பாடல்கள் என்பதாலோ என்னவோ பாடல்கள் போரடிக்கவில்லை. அத்துடன் வழமையான ஹிந்திப்படங்கள் போல் பாடல்களும் இல்லை மொத்தம் இரண்டோ மூன்று பாடல்கள் தான் படத்தில் வருகின்றது. ஒரு டூயட் கூட இல்லை என்பது அதிசயம் தான்.
அத்துடன் அதைக்களம் அமெரிக்காவில் இருந்தாலும் எந்தக் கெட்டவார்த்தையும் இல்லாமல் எடுத்திருக்கிறார்கள். வேட்டையாடு விளையாடுவிலும் இதேபோல் கெளதம் மேனன் முயற்சி செய்திருக்கலாம்.
அஷீம் மிஸ்ராவின் ஒளிப்பதிவு கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படி இருக்கின்றது. மிக அழகாக நியூயோர்க் நகரத்தை படம் பிடித்துக்காட்டியுள்ளார். 1999ஆம் ஆண்டுக்காட்சிகளில் பின்னணியில் இரட்டைகோபுரத்தை காட்டியிருக்கிறார்கள்.
சித்திரவதை முகாம்( Detention Camp )காட்சிகள் வேறு சில நினைவுகளையும் ஏற்படுத்துகின்றது. அத்துடன் தீவிரவாதிகள் எனக் காண்பிக்கும் அனைவரும் இஸ்லாமியர்களாக இருக்கும் அதேநேரத்தில் எவ்பிஐ அதிகாரியான இர்பான் கானும் ஒரு இஸ்லாமிய பாத்திரத்திலேயே நடித்திருக்கிறார். அமெரிக்கா போலீசின் மனிதாபிமானமற்ற போக்கை சில காட்சிகளில் சாடியிருக்கிறார் இயக்குனர். இறுதிக்காட்சியில் அமெரிக்கர்கள் தீவிரவாதி ஒருவனின் மகனை ஹீரோவாககொள்கிறார்கள் என்ற அமெரிக்கர்களின் பரந்த மனப்பான்மையையும் இயக்குனர் பதிவுசெய்யத் தவறவில்லை.
தீவிரவாதி என்ற பெயர் ஒரு மனிதனின் வாழ்க்கை எப்படி மாற்றுகின்றது என்பதை காத்திரமாக சொல்லும் படம் தான் நியூயோர்க்.
டிஸ்கி : இப்படியான படங்கள் ஏன் தமிழில் வருவதில்லை? அப்படி வந்தாலும் ஏன் ஓடுவதில்லை? என்ற கேள்விக்கு யாராவது பதில் தாருங்கள்.
எழுதியது வந்தியத்தேவன் at 9 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் சினிமா, நியூயோர்க், விமர்சனம், ஹிந்தி
உலகத் தமிழர்களின் கனவுக் கன்னி
நேற்று சன்னில் சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச தமிழ்த் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா ஒளிபரப்பினார்கள். விழாவில் கலந்துகொண்ட நட்சத்திரங்கள் அனைவருக்கும் விருதுகள் கொடுத்து மகிழ்ந்தார்கள்.
விழாவின் உச்சக்கட்டமாக சென்ற வருடத்தின் மக்கள் மனம் கவர்ந்த கனவுக்கன்னியாக சினேகாவுக்கு விருது கொடுத்தார்கள். என்ன கொடுமை? அசின் , நயந்தாரா, திரிஷா, தமன்னா என பல அழகு தேவதைகள் இருக்கும் போது நடிக்கவந்து 10 வருடங்களுக்கு மேலாக நடித்து இப்போ ஓய்வு எடுக்கும் நிலையில் உள்ள ஒரு நடிகைக்கு விருது கொடுத்தது சிரிப்பாக இருந்தது.
விருது கொடுத்த நன்றிக்கடனுக்காக சினேகாவும் ராம்ஜியுடன் நல்ல கெமிஸ்ரியுடன் ஒரு நடனம் ஆடினார்.
பின் குறிப்பு : நிமிடத்திற்க்கு ஒரு தடவை சன் பிக்சர்ஸ் புகழ் சுனைனாவை காமெரா படம் பிடித்த மர்மம் என்னவோ?
எழுதியது வந்தியத்தேவன் at 8 கருத்துக் கூறியவர்கள்
மக்களை ஏமாற்றும் ரியாலிட்டி ஷோக்கள்

மேற்கத்திய தொலைக்காட்சிகளில் நடக்கின்ற ரியாலிட்டி ஷோக்கள் வேறு வேறு வடிவங்களில் தமிழ் தொலைக்காட்சியையும் ஆக்கிரமித்துவிட்டது. மெஹா சீரியல் அழுகைகளில் இருந்து மக்களை ஓரளவேணும் இந்த நிகழ்ச்சிகள் காப்பாற்றினாலும் அண்மைக்காலமாக இவை மக்களை ஏமாற்றுவதுபோல் தோன்றுகின்றது, கிரிக்கெட்டில் எப்படி மேட்ச் பிக்சிங் செய்து வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டதோ அதேபோல் இந்த நிகழ்ச்சிகளிலும் இவர் தான் வெற்றியாளர் என்ற முடிவு நடுவர்களாக இருப்பவர்களால் முதலிலேயே எடுக்கப்பட்டு பின்னர் மக்களை ஏமாற்ற எஸ் எம் எஸ் வாக்களிப்புகள் இணையத்தில் வாக்களிப்புகள் என்ற கபட நாடகங்கள். ஒரு சிறிய தொகைமக்கள் தான் இந்த வாக்களிப்புகளில் கலந்துகொண்டாலும் நிகழ்ச்சியைப் பார்க்கும் அனைவரும் ஏமாற்றப்படுகின்றார்கள்.
விஜய் டிவிதான் இந்த நிகழ்ச்சிகளை ஆரம்பித்த புண்ணியத்தைச் சேர்த்ததுடன் இந்நிகழ்ச்சிகளில் நாடகங்களையும் அழுகைகளையும் நிகழ்த்தி என்றும் முதல்வனானது.
ஜோடி நம்பர் ஒன் என்ற நடன நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடுபவர்களுக்கு இடையில் ஏற்படும் சண்டைகள் சச்சரவுகள் என்பவற்றை ஒளிபரப்பி தங்கள் கஸ்டத்தைக் காட்டியது. சிம்பு பிருத்திவிராஜ் உமா ரியாஸ் சண்டையும் அந்தச் சண்டையில் சிம்பு தனக்கு நடிக்கத்தெரியாது என்ற உண்மையைச் சொன்னதும் ஹைலைட்டான விபரங்கள். உமா ரியாஸ் பிருத்திவி ஜோடிக்கு முதல் பரிசுகொடுக்கப்படவேண்டும் என்பதற்காக அவர்கள் திட்டமிட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டார்கள். அதன்பின்னர் மக்களுக்கு யார் வெற்றிபெறப்போகின்றார்கள் என்ற முடிவு நடுவர்களின் காமெண்ட்ஸிலிருந்து தெரியவந்துவிட்டது.
சில நடுவர்கள் ஏதோ உயர் நீதிமன்றத்தில் தீர்ப்புச் சொல்வதுபோல் பேசுவதும் சிலர் அதிக உணர்ச்சி வசப்பட்டு மேடைக்குச் சென்று ஆண் பெண் வேறுபாடின்றி கட்டிப்பிடி வைத்தியம் செய்வதும் திரும்பதிரும்ப பார்க்க சகிக்கமுடியாத காட்சிகள்.
விஜயை வழக்கம் போல் காப்பி பண்ணி சன் ஒரு நிகழ்ச்சி தொடங்கியது பின்னர் இடையில் நிறுத்திவிட்டது. ஆனால் கலைஞர் டிவி தன் பங்குக்கு மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியை வெற்றிகரமாக நாலாவது பகுதியாக(சீசன் 4) நடத்துகின்றது.
மானாட மயிலாட சர்ச்சைகளுக்கு உட்பட்டிருந்தாலும் அதில் ஆடிய சில கலைஞர்களுக்கு படங்களில் ந்டிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. ஒருவரின் கலைத்திறமையை உலகிற்க்கு காட்டும் நிகழ்ச்சிதான் ஆனால் தமிழருக்கு என்ரு ஒரு கலாச்சாரம் இருக்கின்றது. அந்தக் கலாச்சாரத்தை அனேகமான தடவை இந்த நிகழ்ச்சி மீறியிருக்கின்றது. அதிலும் நமீதாவும் ரம்பாவும் நடுவர்களாக இருக்கின்றபோது உடைகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லையென்றே தோன்றுகிறது.
நடந்துமுடிந்த சீசன் 3 இறுதிப்போட்டியில் பலரின் பாராட்டைப்பெற்ற ஒரு ஜோடிக்கு எந்த இடமும் கிடைக்கவில்லை அதற்க்கு காரணம் அவர்கள் அதிகம் ஓட்டுப்பெறவில்லையாம். ஒருவர் எத்தனை ஓட்டுக்கள் வேண்டுமானாலும் அளிக்கலாம் என அறிவிக்கின்றார்கள். பரிசுத்தொகை 10 லட்சம் ஆகவே நடனம் ஆடும் ஒரு ஜோடி ஒரு லட்சம் பெறுமதியான ஓட்டுகளை தங்கள் மொபைலில் இருந்து அளித்து அந்தப் பணத்தைப் வெற்றியீட்டிப் பெற்றுக்கொள்ளலாம்.
சூப்பர் சிங்கர் என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் இந்தமுறை வெற்றி பெற்றவரைவிட இன்னொருவர் மிக அழகாகப் பாடினார் ஆனால் நிகழ்ச்சி ஆரம்பமான காலத்தில் இருந்து நடுவர்கள் அனைவரும் பெற்றி பெற்றவரையே புகழ்ந்து தள்ளினார்கள். இணையத்தளத்தில் ஏனோயோருக்கு வாக்களிக்கும்போது பக்கம் வேலை செய்யவில்லை ஆனால் அவருக்கு வாக்களித்தால் மட்டும் பக்கம் வேலை செய்து உங்கள் ஓட்டுக்கு நன்றிகள் என செய்தி வருகின்றது. (இந்தப் பிரச்சனை பற்றி விஜய் டிவியின் கருத்துக்களத்தில் பெரிய விவாதமே நடைபெற்றது).
பாடல்போட்டியில் பாடுபவருக்கு பின்னால் அரைகுறை ஆடைகளுடன் ஆடுவார்கள். இதெல்லாம் தேவையா பாடுகின்றவரின் கவனத்தை திசைதிருப்பாதா?
பெரும்பாலும் பாட்டுப்போட்டிகளில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் பாடவும் வருகின்றார்கள் நடுவர்களாகவும் இருக்கின்றார்கள். இந்த முறை விஜய் டிவி சூப்பர் சிங்கரில் முன்னாள் தொகுப்பாளினிக்கு கல்தா கொடுத்த காரணமே இன்னொருவரை(பெரிதாக பாடமுடியாதவர்) நடுவர்கள் அடிக்கடி புகழ்ந்தது. இதனால் அவர் கோவித்துக்கொண்டுபோய்விட்டார்.
ரிமோட் உன் கையில் தானே இதெல்லாம் பார்க்கவேண்டுமா எனக்கேள்வி கேட்பவர்களுக்கு ஓரிருவர் பார்ப்பதனால் தான் அவர்கள் செய்யும் தவறுகள் புரிகின்றது.
நமது நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல பத்திரிகை ஒன்றில் தொலைக்காட்சி வானொலி நிகழ்ச்சிகளைப் பற்றிய கருத்துக்களை பல வாசகர்கள் ஒவ்வொரு வாரமும் எழுதுகின்றார்கள். அவர்களின் எந்தக் கருத்துக்களையும் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் கண்டுகொள்வதேயில்லை. 
நமீதா ஒருமுறை ஒரு நிகழ்ச்சிக்கு அணிந்துவந்த உடை
நல்லதொரு நிகழ்ச்சியைக் கத்தியே கொல்லவேண்டுமா அணுகுங்கள் டிடி
தமிழைக் கொல்வது இந்த நாயர் தம்பதிகளுக்கு அல்வா சாப்பிடுவதுமாதிரி.
யுகேந்திரனாக இருந்தவரை யுகேந்திரன் வாசுதேவ நாயராக்கிய பெருமை விஜய் டிவியையே சாரும்.
எழுதியது வந்தியத்தேவன் at 3 கருத்துக் கூறியவர்கள்
குறிச்சொற்கள் கலைஞர், சன், சினிமா, மானாட மயிலாட, விஜய்
தடம் மாறும் சன் டிவி
கிட்டத்தட்ட தட்ட 16 ஆண்டுகளுக்கு முன்னர் 90களின் ஆரம்பத்தில் தூரதர்சனில் ஒளியும் ஒலியும் வயலும் வாழ்வும் மட்டுமே பார்த்துவந்த தமிழ்மக்களுக்கு (இலங்கைவாழ் மக்களுக்கு செய்திகளும் கலையரங்கம் என்ற இரண்டுவாரங்களுக்கு ஒருமுறை ஒளிபரப்பாகும் ஒரு தமிழ் நிகழ்ச்சி)சன் தொலைக்காட்சி புத்துயிர்கொடுத்தது, 
புதிய படங்கள், திரைவிமர்சனம், டாப் டென், சிறந்த நகைச்சுவைகள், பாடல்கள், போட்டிகள் என புதிய புதிய நிகழ்ச்சிகள் மக்களும் சன்னுக்கு கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாகத் தொடங்கிவிட்டார்கள். சில நாட்களில் தமிழர்களை மெல்லக் கொன்றுகொண்டிருக்கும் விஷமான மெஹா சீரியல்களின் வருகை என சன் மெல்ல மெல்ல தன் கிளைகளை படரவிட்டது.
அத்துடன் திமுகவுக்கு பிரச்சாரம் செய்யும் டிவி என்ற அரசியல் முத்திரையும் குத்தப்பட்டது. சில ஆண்டுகளின் பின்னர் அதிமுகவும் தன் அரசியல் பணிகளுக்காக ஜெயா டிவியை தொடங்கியது. இப்படியே சட்டர்லைட் யுகத்தில் பல தொலைக்காட்சிகள் தொடங்கப்பட்டன.
தன் சிறப்பான தனித்துவமான நிகழ்ச்சிகளால் மக்கள் மத்தியில் சன் பிரபலமடையத் தொடங்கியது. இதன் வெளிப்பாடக சினிமாப் படங்களில் செய்தி என்றால் தூரதர்சனைக் காட்டியவர்கள் சன்னைக் காட்டத்தொடங்கினார்கள்.
தற்போது சன்னில் பல நிகழ்ச்சிகள் மறைந்து மெஹா சீரியல்களே முற்றுமுழுதாக ஆக்கிரமித்துள்ளது. சன்னை விட்டு மறைந்த சில நல்ல நிகழ்ச்சிகள்.
ஸப்தஸ்வரங்கள் :
ஏவிரமணனால் தொகுத்தளிக்கப்பட்ட சுபஸ்ரீ தணிகாசலத்தால் தயாரிக்கப்பட்ட பல இளம் பாடகர்களை வெளி உலகிற்கு கொண்டுவந்த நிகழ்ச்சி. சுபஸ்ரீயின் வெளியேற்றத்தாலும் ஏவிரமணனின் வெளியேற்றத்தாலும் சில நாட்கள் இன்னொருவரால் நடாத்தப்பட்டு தற்போது நிறுத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சி.
இந்த வார உலகம்:
கடந்த வாரம் உலகில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளைப் பற்றிய தொகுப்பு. பின்னர் சன் நியூசில் சிலகாலம் நடத்தினார்கள். அத்துடன் நிறுத்திவிட்டார்கள்.
நீங்கள் கேட்டபாடல் :
விஜயசாரதியால் பல நாடுகளுக்கும் சென்று அந்த அந்த நாடுகள் பற்றிய தகவல்களுடன் ஒளிபரப்பான பாடல் நிகழ்ச்சி. பாடல் நிகழ்ச்சியைவிட விஜயசாரதி தொகுத்தளிக்கும் நாடுகள் பற்றிய சுவையான செய்திகளால் மக்கள் மனதில் இடம் பிடித்தது.
மலரும் மொட்டும் மற்றும் குட்டிஸ் சாய்ஸ்:
சிறுவர்களுக்கான நிகழ்ச்சி, சுட்டி டிவியின் வருகையுடன் இந்த நிகழ்சிக்கும் கல்தா.
இளமை புதுமை :
சொர்ணமால்யாவை உலகத்திற்கு அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி. காலேஜ் மாணவமணிகளை வைத்து இவர் செய்த ரகளை. பல இளைஞர்களின் விருப்பத்திற்க்குரிய நிகழ்ச்சி. சொர்ணமால்யாவிற்க்கு பின்னர் அர்ச்சனா, அர்ச்சனாவின் திருமணத்திற்க்கு பின்னர் ஹேமா சிங்ஹா என அழகிகளின் கை மாறி இப்போ கிடப்பில் போடப்பட்டுவிட்டது. 
பாட்டுக்கு பாட்டு :
பல ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருந்த நிகழ்ச்சி கலைஞர் டிவியின் வருகையின் பின்னர் ரமேஷ் பிரபாவின் வெளியேற்றத்தால் அப்படியே இடம் பெயர்ந்து அதே தலைப்பில் அதே ஸ்பொன்சருடன் கலைஞர் டிவியில் வெற்றி நடைபோடுகின்றது.
மீண்டும் மீண்டும் சிரிப்பு :
இதுவும் கலைஞர் டிவியின் வருகையால் காணாமல் போன நிகழ்ச்சி. மூர்த்தியின் காமெடியும் இறுதியில் இவர்கள் சொல்லும் மெசேயும் பிரபலம். இப்போ கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகின்றது.
காமெடி டைம் :
மயில்சாமியால் இரவு வேளையில் நடத்தப்பட்டு பின்னர் சிட்டிபாபு அர்ச்சனாவின் வணக்கம், வணக்கம், வணக்கத்தால் ரொம்பவும் பிரபலமான நிகழ்ச்சி. அர்ச்சனாவின் விலகலுக்குப் பின்னர் இன்னொருவர் (சுப்ரஜா என நினைக்கின்றேன் அவரையும் இப்போ எந்த சானலிலும் காணவில்லை) சிட்டிபாபுடன் இணைந்து செய்தார். பின்னர் அப்படியே மறைந்துபோய்விட்டது. அதன் புதியவடிவம் ஆதித்யாவில் காலை மாலை வேளைகளில் பலரால் தொகுத்தளிக்கப்படுகின்றது.
திரைவானம், கொண்டாட்டம் :
மோனிகாவால் தொகுத்தளிக்கப்பட்ட திரைப்படங்களின் சிறப்புக்காட்சிகள். திரைவானத்தில் ஒரே மாதிரி கதை அல்லது காட்சிகள் உள்ள இரண்டு படங்களைக் காட்டுவார்கள். கொண்டாட்டம் நகைச்சுவைத் துணுக்குகள் நிறைந்த காட்சிகள் காட்டப்படும் நிகழ்வு.
அசத்தப்போவது யாரு :
சன் இன்னொரு சானலில் இருந்து லாவகமாக சுட்ட பல நிகழ்ச்சிகள் இருக்க ஒரு சானலில் இருந்து நிகழ்ச்சியை மட்டுமல்ல அந்த நிகழ்ச்சியின் இயக்குனர், நிகழ்ச்சி செய்பவர்கள் என பலரையும் தூக்கி இயக்குனருக்கும் மதன்பாபு சிட்டிபாபுவுக்கும் ஜால்ரா அடித்த நிகழ்ச்சி. அதிலும் பத்தோ பதினொரு படங்கள் மட்டும் நடித்த சிட்டிபாபுவை காமெடி ஜாம்பவான் எனும்போது வரும் சிரிப்பு இவர்களின் பார்போர்மன்ஸ் பார்க்கும் போது வருவதில்லை. ஓப்பனிங் பேட்ஸ்மனாக மதுரை முத்து ஒருவரையே பல கால நம்பியிருந்த நிகழ்ச்சி. சில வாரங்களாக ஏனோ நிறுத்திவிட்டார்கள். இதே நிகழ்ச்சியின் இன்னொரு காப்பியான எல்லாமே சிரிப்புத்தான் கலைஞர் டிவியில் களை கட்டுகிறது. குறிப்பாக ரோபோ சங்கர் அரவிந்த் இருவரின் பார்போமன்ஸ் பலரையும் கவர்ந்துள்ளது.
விஜய் டிவியில் இருந்து எப்படி ஒரு நிகழ்ச்சியை சன் முற்றுமுழுதாக தன் வசமாக்கியதோ அதேபோல் சன்னுக்கு நியூட்டனின் மூன்றாம் விதிப்படி கலைஞர் டிவி செய்துகாட்டியது.
இப்படிப் பல நிகழ்ச்சிகளை நிறுத்தி தற்போது சன் வெறும் மெஹா சீரியல்களை ஒளிபரப்பி மக்களின் சிந்தனைகளை பாழாக்குகின்றது. கோலங்கள் என்ற தொடர் கடந்த 5 வருடமாக மக்களை அறுத்துக்கொண்டிருக்கின்றது. பெரும்பாலான மெஹா சீரியல்களின் கதைகள் ஒரே மாதிரியான கதைதான் பழிவாங்கல், குடும்பப் பிரச்சனை. இன்னொருத்தி கணவன் மேல் ஆசைப்படும் பெண், இன்னொருவன் மனைவி மேல் ஆசைப்படும் ஆண். இரண்டு கல்யாணம், கள்ளக்காதல் என ஒரே திசையில் மக்களை முட்டாளாக்கும் தொடர்கள்.
சன்னில் தற்போது எந்தவிதமான நகைச்சுவைத் தொடர்களோ அல்லது விடாது கருப்பு, ருத்ரவீணை போன்ற திரில் தொடர்களோ இல்லை. சனி ஞாயிறுகளில் அம்மன் தொடர்போட்டு அறுக்கின்றார்கள்.
சன்னின் இந்த தடம் புரளல்களுக்கான காரணமாக எனக்குப் பட்டவை:
1. கலைஞர் டிவியின் வருகையும் வளர்ச்சியும் என்னதான் கண்கள் பனித்து இதயம் இனித்தாலும் டிவியைப் பொறுத்தவரை சன்னின் தற்போதைய எதிரி கலைஞர் தான். அதனால் தான் அவர்கள் ரஜனி படம் போட்டால் இவர்களும் ரஜனி படம் போடுவார்கள். அவர்கள் வெள்ளிக்கிழமைகளில் ஸ்பெசல் ஷோ போட்டால் இவர்கள் உடனே அதே நேரத்தில் கேடிவியில் சூப்பர் ஹிட் திரைப்படம் போடுவார்கள். இந்தப்போட்டி இசையருவிக்கும் சன் மியூசிக்கும் கூட உண்டு.
2. கேடிவி, ஆதித்யா, சுட்டிடிவி, சன் மியூசிக் என ஒவ்வொரு வகைக்கும் ஒரு சானல் இருப்பதால் சன்னில் மெஹா சீரியல் மட்டும் போதும் என்ற மனப்பான்மை. கேடிவியில் உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் பத்தாயிரம் முறையாக ஒளிபரப்பான படமே ஒளிபரப்பாகும். லியோனி நடித்த கங்கா கெளரி படம் தியேட்டரைவிட கேடிவியில் அதிக நாட்கள் ஒளிபரப்பானது.
3. சன் குழுமம் படம் தயாரிக்க அல்லது மற்றவர்கள் தயாரித்ததை வாங்கி விநியோகிக்கத் தொடங்கியதன் பின்னர் தங்கள் இதுவரை தயாரித்த மொக்கை படங்களை மாத்திரம் டாப் டென்னிலும் சூப்பர் சீன்ஸ்சிலும் ஒளிபரப்பாக்கி மக்கள் வெறுப்பைச் சம்பாதித்தது. மாசிலாமணி விளம்பரத்தைக் கண்டாலே ஆட்டோமடிக்காக ரிமோட் சானல் மாற்றுகின்றது.
4. சன் மியூசிக்கில் முன்னர் போல் அழகான தொகுப்பாளினிகள் இல்லை. இருந்தவர்களும் இசையருவிக்கு போய்விட்டார்கள். அத்துடன் சன் மியூசிக்கில் தங்கள் படத்தின் மொக்கைப்பாடல்களே போடுகின்றார்கள். அயன் பாடல்களைப் போட்டுமுடித்ததும் "சான்ஸே இல்லை சூப்பர் டூப்பர் பாடல் பார்த்தோம்" என தொகுப்பாளினி தினமும் சொல்லும் போது அவரை அடிக்கத் தான் மனம் வருகின்றது.
5. சன் நியூஸ் பக்கத்தில் பாரிய அனர்த்தம் நடந்தபோதும் அமெரிக்காவில் 4 பேர் விபத்தில் செத்ததும், ரஷ்யாவில் மாடு கன்னு போட்டதும் என நடுநிலையான செய்திகளால் வெறுப்படையச் செய்தது.
6. ஆதித்யா காமெடிச் சானலில் சிரிக்கமட்டும் என மற்றவர்களைத் துன்புறுத்தின் ஒரு நிகழ்ச்சி செய்கிறார்கள். இதனை இதுவரை எவரும் கண்டிக்கவில்லை. அத்துடன் ஒரே காமெடியையே திரும்ப திரும்ப ஒளிபரப்புகிறார்கள். எத்தனையோ இடைக்கால கவுண்டமணி காமெடிகள். பழைய நாகேஷ் சுருளி சோ காமெடிகள் இருக்க மீண்டும் மீண்டும் வடிவேலும் விவேக்கும் தான்.
சன் தன்னைப் பற்றி சுயபரிசோதனை செய்யவேண்டும் இல்லையென்றால் அடுத்த இடத்தில் இருக்கும் டிவிக்கள் முதல் இடத்தைப் பிடித்துவிடும்.
எழுதியது வந்தியத்தேவன் at 3 கருத்துக் கூறியவர்கள்


