தசாவதாரம் அல்லது கமல் ஒரு நுண்ணரசியல் ‍ பகுதி 2

ஏற்கனவே கமலைப் பற்றி பார்த்துவிட்டோம். அதேபோல் தசாவதாரம் பற்றிய நுண்ணரசியலைப் பற்றிப் பார்க்க இருந்தேன் ஆனால் வலையுலகில் தசாவதாரம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் இன்னமும் ஓயவில்லை. பலரும் ரூம் போட்டு யோசித்து பல‌விதமாக எழுதுகிறார்கள். அதிலும் கிருஷ்ணரின் தசாவதாரத்தோடு கமலின் தசாவதாரத்தையும் ஒப்பிடுகிறார்கள். நேற்றைய ஜெயா ஹாசினி பேசும்படம் நிகழ்ச்சியிலும் சுஹாசினி(கமலின் அண்ணன் மகள்) இந்த ஒப்பீட்டை கூறியது பலதரப்பட்ட மக்கள் வலைகளை மேய்கின்றார்கள் என்ற எண்ணக்கருவை ஏற்படுத்தியது.

ஏற்கனவே எழுத்துலகிலும் வலையிலும் பிரபலமாக இருக்கும் ஜெயமோகன், எஸ்,இராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, மாலன் போன்றவர்கள் இந்தப்படத்தைப் பற்றி இதுவரை வாய் திறக்காதது ஏனோ?

த‌சாவ‌தார‌ம் ப‌ற்றிய‌ நுண்ண‌ர‌சிய‌லை எழுத‌ முய‌லும் போது இத‌னை இந்த‌ வ‌லைப்ப‌திவாள‌ர் கூறிவிட்டார், இத‌னை இவ‌ர் கூறிவிட்டார் என்ற‌ ஞாப‌க‌ம்க‌ள் வ‌ருவ‌தால் புதிதாக‌ என்ன‌ கூற‌முடியும். அத‌னால் த‌சாவ‌தார‌ம் வெற்றிக்கு என்ன‌ கார‌ண‌ம்? ?(ஆசிப் அண்ணாச்சி போல் இல்லாம‌ல் நிய‌மான‌ கார‌ண‌ங்க‌ள்).

1. கமல் என்ற உலக நாயகன்.
ஒரு வேடத்தில் நடிக்கவே மிகவும் கஸ்டப்படும்போது(சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டால் அவர்களின் ரசிகர்கள் சண்டைக்கு வருவார்கள், நிச்சயமாக சூப்பர் ஸ்ரார் இந்தப்பட்டியலில் இல்லை) அசால்டாக 10 வேடங்கள் சில வேடங்கள் ஏற்கனவே கமலின் சில படங்களில் பார்த்திருந்தாலும், மாறுபட்ட குரல்களும் உடல் அசைவுகளும் பிரமிப்பையே ஏற்படுத்துகின்றன. ( டாக்டர் புருனேயின் பதிவில் லக்கி லுக் பிளட்சரின் ஸ்டைலை ரஜனியுடன் ஒப்பிடுகின்றார்). சிலவேடங்கள் மைதா மாவு மேக்கப் என்றாலும் கமல் தன் நியமுகத்துடன் மைக்கல் மதன காமராஜனில் செய்ததுபோல் கலிபுலாகானையும் தன் நிய முகத்துடன் உயரமாக காட்டியிருக்கலாம். ப்ளைட்சர், சீன நரஹி போன்றவை எப்படியோ முகம் மாற்றவேண்டியவை. ஆனாலும் படத்தின் மிகப்பெரிய சாதனை ஒன்றுக்கு மேற்பட்ட கேரக்டர்கள் ஒரே ப்ரேமில் வருவதுதான்.

2. திரைக்கதை
கேஎஸ்ரவிகுமார், மதன், மறைந்த சுஜாதா, கிரேசிமோகன் போன்ற பலர்திரைக்கதைவிவாதத்தில் ஈடுப்பட்டிருந்திருக்கிறார்கள்(தகவல் கேஎஸ்ரவிகுமார் ஜெயா டிவி ஹாசினி பேசும்படம்). ஆனாலும் கேஎஸ்ரவிகுமார் கூறியதுபோல் திரைக்கதைக்கு கமல் தான் முழுச் சொந்தக்காரர். காரணம் கமலின் திரைக்கதைக்கு தாங்கள் ஒரு சிற்பியைப்போல் தேவையற்ற சிலவற்றையும் தேவையான சிலவற்றையும் செதுக்கியதாகவும் கூறினார். ஏற்கனவே விருமாண்டியில் இருவரின் பார்வையில் திரைக்கதை அமைத்த கமல் இதில் ஒரே வேகத்தில் அமைத்த திரைக்கதை அமைத்தது பாராட்டுக்குரியது. அதிலும் 12 நூற்றாண்டுக்காட்சிகள் தவிர்த்து பின்னர் படம் அமெரிக்காவிலிருந்து சென்னை வரை ஒரே ஓட்டமாகத்தான் ஓடுகின்றது. கமல் தன்னுடைய முன்னைய படங்களில் ஒரு அறிஜீவித்தனத்துடன் திரைக்கதை அமைத்திருப்பார், இதனால் பலருக்கு விளங்கவில்லை அந்தக் குறை இந்தப்படத்தில் இல்லை.

3. வசனம்
கமலின் வசனங்கள் பல புரட்சிகரமான அல்லது முற்போக்குத்தனமான கருத்துக்களை கொண்டிருக்கின்றது. அதிலும் பலராம் நாயுடு அடிக்கும் பஞ்ச்கள் ஓஹோ ரகம். வசனங்களை எழுதிவாசகர்களை சலிப்படைய வைக்கவிரும்பவில்லை. படத்துடன் கூடிய சில வசனங்களில் கிரேசி மோகன்தனம் இருந்தாலும், இன்னொரு பதிவர் கூறியதுபோல் சிலவேளைகளில் கிரேசிமோகன் வசன எழுதிய படங்களில் கமலின் தலையீடு இருந்திருக்கலாம். ஆதலால் கமலின் வசனங்கள் கிரேசிமோகனின் வ்சனங்கள் ஆக மாறியிருக்கலாம். சில இடங்களில் சுஜாதா சாயல் அடிக்கின்ற அதே வேளை படத்தில் அடிக்கடி அசின் பெருமாளை கூவிகூவி அழைத்தது எங்கேயோ இடிக்கின்றது.

4. ஒளிப்பதிவு
ரவிவர்மனின் காமேரா பல இடங்களில் அசரவைக்கின்றது. அதிலும் ஆரம்ப காட்சிகளிலும் சென்னையை ஏரியல் வ்யூவில் எடுத்த காட்சிகள் புதுமை. அதேபோல் கல்லைக்கண்டால் பாடலிலும் ஒரு காட்சி கோவில் வாசலிலில் இருந்து கோபுரத்திற்க்கு மேலால் சென்று அடுத்த பக்கத்தில் நிற்கும் மக்களிடையே செல்லும் ஒரே ஷாட்டில் எடுத்த காட்சியும் மனதில் நிற்கிறது. இதில் கிராபிக்ஸ் வர இடமில்லை. அத்துடன் கிராபிக்சையும் இயற்கையான ஒளிப்பதிவையும் பல இடங்களில் கலந்து எது நியம் எது கிராபிக்ஸ் என கண்டுபிடிக்கமுடியாமல் செய்தது தொழில் நுட்பத்தின் உட்சக்கட்டம்(தமிழ் சினிமாவில்).

5. இயக்குனர் கே எஸ் ரவிகுமார்.
வரலாறு என்ற வெற்றிப்படத்தைக்கொடுத்த உடனேயே இந்தப்படத்தில் தொடர்ந்து உழைத்த உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. பஞ்சதந்திரம், அவ்வை சண்முகி, தெனாலி என ஏற்கனவே கமலுடன் இணைந்திருந்தாலும் இப்படத்தில் கேஎஸ்சின் ஸ்டைல் இல்லாமல் வித்தியாசமாக எடுத்திருக்கிறார். இறுதிக்காட்சியில் எப்படி மேக்கப் போடுகின்றார்கள் என்பதைக் காட்டியது மட்டும் இவரின் ஸ்பெசல்.

6. ஏனையவை:
முதலில் பாடல்களை இடைச்செருகாமல் படத்தின்போக்கோடு இணைத்தது அருமை. இல்லையென்றால் படத்தின் ஓட்டம் நிச்சயம் தடைப்பட்டிருக்கும் காரணம் பாடல்கள் கேட்கும் அளவுக்கு தரமில்லாதுதான். இப்படியான ஒரு படத்தில் பாடல்கள் மெஹா ஹிட்டாக இருக்கவேண்டும் ஆனால் இங்கே எதிர்மறை அதனால்தானோ முகுந்தா முகுந்தாபாடலும் ஒரு சரணத்துடன் முடிந்துவிட்டது. உலக நாயகனே பாடலையும் இடையில் செருகாமல் முடிவில் செருகியது நல்லதொரு ஐடியா.

காமெடி ட்ராக் பெரும்பாலான கமல் படங்களுக்கு காமெடியன்கள் தேவையில்லை. அவரே சச்சின்போல் தனித்துஆடுவார். இங்கேயும் சில இடங்களில் அசினின் பார்டனர்சிப்புடன் கமல் சிக்ஸ்சர் அடித்துள்ளார். வையாபுரி, சிட்டிபாபு போன்றோர் இருந்தாலும் ஸ்கோர் பண்ணியது என்னவோ எம் எஸ் பாஸ்கர் தான். இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாததும்(சிலர் இருக்கு என்கிறார்கள் எங்கே என்பதை நான் அறியேன்ஆனால் இரட்டை அரசியல் அர்த்த வசனங்கள் நிறைய உண்டு) விவேக் இல்லாதது மிகப் பலம். சில நாட்களாக விவேக்கின் காமெடி அசிங்கங்களீன் உச்சம். (சிவாஜியில் கூட விவேகின் இடத்திற்கு வடிவேல் இருந்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்).

க‌வ‌ர்ச்சி குத்தாட்ட‌ம் இல்லாத‌து. ம‌ல்லிகாவின் ஆட்ட‌ம் குத்து வகைக்குள் அட‌ங்காத‌து. அசினை ஒரே ஒருதாவ‌ணியுட‌னே முழுப்ப‌ட‌த்திலும் (இறுதி உல‌க‌ நாய‌க‌னே ப‌ட‌ல் த‌விர‌)ப‌ய‌ன்ப‌டுத்திய‌தும் ஒரு வித்தியாசாமன முயற்சிதான். ஆனாலும் ஏனோ அசின் இன்னமும் எம் குமரன், க‌ஜ‌னி ப‌ட‌ங்க‌ள் பாதிப்பில் இருந்து விடுப‌ட‌வில்லைபோல் தெரிகின்ற‌து.இந்தப்படத்துடன் சிம்ர‌ன், ஜோதிகாவின் இட‌த்தை பிடிப்பார் என‌ எதிர்பார்த்தால் சோக‌ம் தான் மிச்ச‌ம்.

இறுதியாக உலகத்தரம் உலகத்தரம் என பலரும் கூக்குரலிடுகிறார்கள். உலகத்தரம் என்பது பார்க்கும் பார்வையில் தான் இருக்கின்றது. வெறுமனே தமிழ் சினிமாவை மட்டும் பார்த்தவனுக்கு இந்தப்படம் முற்றுமுழுதாக வித்தியாசாமாக இருக்கும். தமிழ்சினிமாவுடன் தென்னக சினிமா மற்றும் ஹிந்தி சினிமா பார்த்தவர்களுக்கு ஓரளவு வித்தியாசமாக இருக்கும். அதே நேரம் தாரே ஜமீன் பார், லகான் போல் இந்தப்படத்தை எதிர்பார்த்திருந்தால் தோல்வியே மிஞ்சும். காரணம் இது முற்றுமுழுதான ஒரு பொழுதுபோக்குப்படமே ஒழிய கலைப்படமல்ல. லகான், சக்தே இந்தியா போன்ற படங்களை கமல் எடுக்கவேண்டும் என வலியுறுத்துபவர்கள் ஏற்கனவே கமல் எடுத்த அன்பேசிவம், விருமாண்டி போன்ற நல்ல கருத்துச் சொல்லும் படங்களை மறந்தது ஏனோ. உலகத்தரத்தில் ஆங்கிலப்படங்கள் தொழில் நுட்ப ரீதியிலான போட்டியில் இருந்தாலும் இரான் படங்கள் போல் கலைப்படங்கள் தான் தரமானவை. இப்படியான படங்கள் பார்த்தவர்களால் இதனை உலகத்தரம் என ஒப்புக்கொள்ளமாட்டார்கள். வேண்டுமென்றால் இந்தியத் தரத்தில் சிறந்த தரம் இது என ஒப்புக்கொள்ளலாம்.

பொதுவாக பெரும்பாலான ஆங்கிலப்படங்கள் 1000கோடி பட்ஜெட்டில் எடுப்பவை. இவற்றுடன் 100கோடிகளுக்குள் அட்ங்கும் தமிழ்ப் படங்களை ஒப்பிடமுடியாது. யாராவது கமலுக்கு 1000கோடியும் ஷங்கர் போன்ற தொழில் நுட்பத்தில் வல்ல இயக்குனர் ஒருவரையும் கொடுங்கள் கமல் வாழ்நாள் சாதனையாக நல்லதொரு படம் கொடுப்பார். மருதநாயகம் அந்த கவலையைப்போக்கும் என நினைக்கின்றேன் எப்போது என்பதுதான் ????

தசாவதாரம் அல்லது கமல் ஒரு நுண்ணரசியல்

டிஸ்கி :கமல் மேல் காண்டு கொண்டுள்ளவர்களிடம் ஒரு கேள்வி?
கமலை ஒரு தமிழனாக நினைத்து ஏன் உங்களால் இந்த வெற்றியை ஜீரணிக்கமுடியவில்லை?
இது பற்றி லக்கி லுக்கின் பதிவு உங்கள் பார்வைக்கு

தசாவதாரம் விமர்சனங்கள் - செம காண்டு மச்சி!

தசாவதாரம் அல்லது கமல் ஒரு நுண்ணரசியல்

விடயத்துக்கு வருமுன்னர் ஒரு சின்ன டிஸ்கி: நான் ஒரு கமல் ரசிகன். படத்தை முதல் நாள் முதல் ஷோவே ஹவுஸ்புல் திரையரங்கில் பார்த்துவிட்டேன். பார்த்தபின்னர் உடனடியாக விமர்சனம் எழுதமுடியவில்லை. காரணம் முதன் முறை பார்த்தபோது எங்கும் நிறைந்த அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனாக சாட்சாத் கமலே மனதில் நிறைந்திருந்தார். அதனால் விமர்சனம் எழுதவில்லை. இன்றைக்கு எழுதலாம் எனப் நினைத்திருந்தேன் தமிழ்மண விமர்சனங்களையும் கத்துக்குட்டிகளுக்கு காவடி எடுக்கும் தமிழ்சினிமா மற்றும் சில பீட்டர் இணையங்களின் விமர்சனங்களையும் படித்தபின்னர் விமர்சனம் எழுதும் முடிவைக் கைவிட்டுவிட்டேன். அத‌னால் க‌ம‌ல் ப‌ற்றிய‌ ஒரு நுண்ண‌ர‌சிய‌லை நுனிப்புல் மேய‌லாம் என‌ நினைக்கின்றேன்.

"உரக்கப் பேசும், உரக்க நடிக்கும் தமிழ் சினிமாவில் சற்று மென்மையாக, கற்பனையுடன், நம்பும் படி நடக்கும் கமல்ஹாசனிடம் தமிழில் நவசினிமாவில் உதயத்தை எதிர்பாக்கின்றேன்".
(சுஜாதாவின் கணையாழியின் கடைசிப்பக்கங்கள் அக்டோபர் 1976, இகாரஸ் பிரகாஸின் வலையில் மீள இட்டிருந்தார்). ந‌ன்றி கானாப்பிர‌பா,

1976 லேயே சுஜாதாவால் க‌ண்டுகொள்ள‌ப்ப‌ட்ட‌ ப‌ல‌வித‌ ப‌ரிணாம க‌ம‌ல் என்ற‌ ஒப்ப‌ற்ற‌ க‌லைஞ‌ர்(ன்) க‌லைஞானி, ப‌த்ம‌ஸ்ரீ, டாக்ட‌ர், உல‌க‌ நாய‌க‌ன் க‌ம‌லை இன்ன‌மும் ந‌ம்ம‌வ‌ர்க‌ள் க‌ண்டுகொள்ள‌வே இல்லை என்ற‌ ஆத‌ங்க‌ம் என‌க்கு ப‌ல‌ நாட்க‌ளாக‌ உண்டு. (சுஜாதா என்ன‌ பெரிய‌ ஆளா? என‌ச் சில‌ர் கேட்க‌லாம் நான் இங்கே சுஜாதாவை மேற்கோள் காட்டிய‌து அவ‌ரின் வ‌ரிக‌ளுக்கும் 1976 ஆம் ஆண்டுக்கும் ம‌ட்டுமே). இத‌ற்கான‌ கார‌ண‌ம் அல்ல‌து அரசிய‌ல் என்ன‌?

முதன்மைக் காரணம்:
கமல் ஒரு பகுத்தறிவுவாதியாக இருப்பதுதான். தமிழ் நாட்டின் சாபக்கேடு பெரும்பாலான மீடியாக்கள் ஏகாதிபத்தியவாதிகளிடம் அல்லது ஆன்மீகவாதிகளிடம் இருப்பது. (இத்தனைக்கும் மத்தியில் திராவிடக் கட்சி(கள்) ஆட்சி அமைப்பது தலைவர்களின் தலைமைத்துவமே ஒழிய வேறில்லை). இவர்கள் கமலைப் பார்க்கும் பார்வைகளும் கோணங்களும் மாறுபடும். சிலவேளை கமல் இடையிடையே இமயமலைக்குப் போய் வந்திருந்தால் பார்வை மாறியிருக்குமோ என்னவோ தெரியவில்லை. இதனால் கமலுக்கு அதிகம் பப்ளிசிட்டி கிடைப்பதில்லை. அண்மைக்கால சிறந்த உதாரணம் சிவாஜி பற்றி தினமும் செய்திபோட்ட ஊடகங்கள் தசாவதாரம் பற்றி அடக்கியே வாசித்தன. இதனால் சில குறிப்பிட்ட பிரிவினர் அல்லது சமூகத்தவர்களுக்கு கமலைப் பிடிப்பதில்லை. எப்படிப் பெரியாரை வெறுத்தார்களோ அதேபோல் கமலையும் வெறுக்கின்றார்கள்.(கடந்த சில வருட வலை மற்றும் இணைய அனுபவம்). அதனைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தும் காட்சி ஒன்று தசாவதாரத்தில் உண்டு. அசின் கமலின் தகப்பனாரின் பெயர் கேட்க அதற்க்கு கமல் ராமசாமி என பதில் அளிக்க உடனே அசின் " சீ அவனா? என்பார். படத்தில் அந்தக்காட்சி தெளிவாக விளங்காவிட்டாலும் ஆங்கில உபதலைப்பில் (that Atheist?) என அப்பட்டமாக போட்டுவிடுகிறார்கள்.

2.
கமலுக்கு எந்த ஒரு கட்சியின் சாயமும் அல்லது அரசியல் அறிவும் இல்லாதது. கலைஞரின் விழாவிலும் இருப்பார், ஜெயின் விழாவிலும் இருப்பார். எங்கேயும் இதுவரை அரசியல்பேசியதுமில்லை. இது அவருக்கு பலமாக இருந்தாலும் சிலவேளைகளில் பலவீனமுமாக இருக்கின்றது. இதற்க்கு சிறந்த உதாரணம் சூப்பர் ஸ்ரார் இவரின் பாபா படம் ஓடாததற்கான காரணங்களில் ஒன்றாக இவர் சில அரசியல்வாதிகளுடன் நடத்திய பனிப்போர்.

3
சில பகுத்தறிவுவாதிகள்: கமலின் ஜாதியை வைத்து அரசியல் நடாத்தும் சில பகுத்தறிவுவாதிகள்(லக்கி லுக் போன்றவர்கள் விதிவிலக்கு). இவர்கள் எப்போதும் கமலை ஜாதிக் கண் கொண்டுபார்ப்பதால் இது கமலுக்கு எதிர்வினையாகவே அமைகின்றது. சிலவேளைகளில் கமலும் இதற்க்கு சார்பானவர் போல் நடந்துகொள்கின்றார். சமீபத்திய உதாரணம் தசாவதாரம் இராமணுய நம்பியும் சில பாத்திரங்களில் தொனிக்கும் வைஷ்ணவப்பெயர்களும் (கோவிந்த், பல்ராம், பூவராகவன்). சுஜாதா இருந்தகாலத்தில் ஆரம்பமான படம் ஆகவே சிலசமயம் சுஜாதா இந்தப் பெயர்களைத் தெரிவிசெய்திருக்கலாம். கமல் தன்னைப் பூணூல் இல்லாத மாமிசம் உண்கின்ற பிராமணராக காட்டிக்கொண்டாலும், கமலை சந்தேகக் கண்ணோடு பார்ப்பவர்கள் தான் அதிகம். கமல் கலைஞரின் செல்லப்பிள்ளை என்பதை ஏனோ பலர் மறந்துவிடுகிறார்கள். திலீபன் என்ற வலைப்பதிவரின் ஒரு பதிப்பை இணைக்கின்றேன் படித்துப்பாருங்கள்.
கசக்கும் உண்மை

4.
வேண்டுமென்று எதிர்ப்பவர்கள்:
இந்த வகைக்குள் இராமகோபாலன் போன்றவர்கள் அடங்குவார்கள். விருமாண்டி படத்தின் தலைப்பை மாற்றச் சொன்னவர்கள் படம் எங்கும் கத்தியும் இரத்தமும் என கூவியவர்கள். அதன்பின்னர்வந்த எத்தனையோ படங்களுக்கு (அண்மையில் வெளிவந்த படங்களில் அதிக வன்முறைப்படம் போக்கிரி) எனோ கத்துவதுமில்லை கூவுவதுமில்லை. இதேபோல் தான் சமயப்பற்றாளர்கள். தசாவதாரம் படம் பெருமாளை இழிவுபடுத்துகின்றது என வழக்குப்போட்டவர்கள் படத்தைப்பார்த்தல் அங்கே இழிவாக எதுவும் இல்லை. பெருமாளே பெருமாளே என அசின் கூப்பிட்ட குரலுக்கு வெங்கடேசப்பெருமான் நிச்சயம் அசினுக்கு வைகுண்டப் பதவி கொடுக்கவேண்டும். இப்படியான சில கமலை மட்டுமே எதிர்த்து வழக்குப்போடும் மனநோயாளிகளுக்கு எதிராக யாரும் வழக்குப்போடுவதில்லை. எத்தனை மெஹா சீரியல்களிலும், படங்களிலும் மதவிடயங்களை இழிவுபடுத்துகிறார்கள், மலினப்படுத்துகிறார்கள் ஆனால் எவரும் அவற்றைச் சீண்டுவதில்லை.

5.
இறுதியாக கமல் ரசிகர்மன்றங்களை கலைத்து நற்பணி மன்றங்களாக்கி இரத்த தானம் , கண்தானம், உடல் தானம் போன்ற நற்பணிகளைச் செய்துவருகின்றார். பெரும்பாலான கமல் ரசிகர்கள்மன்றங்கள்போல் இல்லாமல் இவை வித்தியாசமாக நடந்துகொள்கின்றன. ரஜனி ரசிகர்மன்றங்களும் சில அரசியல்கட்சிகளும் போதினவோ அப்படி மோதும் ஆற்றல் கமல் மன்றங்களுக்கு இல்லை. அப்படியிருந்திருந்தால் பொய் வழக்குக்ப்போடுபவர்கள் கொஞ்சமாவது அமைதியாக இருப்பார்கள். கமல் அன்பேசிவம் நல்லசிவத்தைப்போல் இல்லாமல் வேட்டையாடு விளையாடு ராகவனைப்போல் மாறவேண்டும். இல்லையென்றால் கமலுக்கு அதிக வ்ழக்குகள் சந்தித்த நடிகன் என்ற இன்னொரு சாதனையும் சேர்ந்துவிடும்.

இப்படியான காரணங்களால் தான் கமலின் புகழ் இன்னமும் அவருக்கு கிடைக்கவேண்டியளவு கிடைக்கவில்லை. கமல் வேறு ஒரு மாநிலத்திலையோ அல்லது இன்னொரு நாட்டிலையோ பிறந்திருந்தால் இன்றைக்கு அவர் போற்றிபுகழப்பட்டிருப்பார். இதே நிலை நடிகர் திலத்துக்கும் ஏற்பட்டது. ஆனாலும் இறுதிக்காலத்தில் அவருக்கு கிடைக்கவேண்டிய மரியாதைகள் கிடைத்தன. இன்னும் கிடைக்காமல் இருக்கும் இருவர் மெல்லிசை மன்னரும், இசைஞானியும்.

கமலைப் பற்றிய நுண்ணரசியல் என நான் நினைப்பவற்றை எழுதுவிட்டேன் தசாவதாரம் பற்றிய நுண்ணரசியல் எனக்கு கிடைக்கும் பின்னூட்டங்களில் இருந்து தொடரும் சிலவேளைகளில் எதிர்மறையான பின்னூட்டங்கள் கிடைத்தால் தொடராமலும் போகலாம்.

ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவனின் தசாவதாரம்.


ஒரு சாதாரண கமல் ரசிகனாக படம் பார்த்தபடியால் உடனடி விமர்சனம் செய்யமுடியவில்லை. இன்னொரு தடவையோ அல்லது சில தடவையோ பார்த்தபின்னர் விமர்சனம் எழுதுகின்றேன்.

ஒரு வரி விமர்சனம்,

நிச்சயம் கண்டங்கள் கண்டு வியக்கும்.

நீங்களூம் உங்கள் ஓட்டைக்குத்திவிட்டுப்போங்கள்


சர்வேசன்னுக்கு நன்றிகள்.