வந்தியத்தேவனின் குதிரை

வந்தியத்தேவனின் குதிரை

முதலில் குதிரை ஓடுவது என்பது என்றால் என்னவென்றுபார்ப்போம் ஒருவருக்குப் பதிலாக இன்னொருவர் பரீட்சை எழுதுவது குதிரை ஓடுவது ஆகும்.

1992ஆம் ஆண்டு நான் உயர்தரம் படிக்கும்போது எனக்கும் அப்படி ஒரு நிலமை ஏற்பட்டது. கல்விப் பொதுத் தராதர(சாதாரணதரம்) (General Certificate of Education (Ordinary Level or O/L)பரீட்சை பொதுவாக டிசெம்பர் மாதத்தில்தான் இடம் பெறும். 1991ல் நான் எனது பரீட்சையை வெற்றிகரமாக முடித்துவிட்டு உயர்தரம் படித்துக்கொண்டிருந்தேன் . பொதுவாக டிசெம்பர் லீவு என்பதால் குடும்பத்தவர் அனைவரும் கொழும்புக்கு சென்றுவிட்டார்கள். நான் மட்டும் டியூசனுக்கு ஒழுங்காச் செல்லவேண்டும் எனக் கண்டிப்புடன் சொல்லிவிட்டு அவர்கள் என்னை வீட்டில் தனியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். 30 நாள் லீவில் நான் 5 நாள் மட்டும் நான் டியூசன் சென்றது வேறு கதை.

ஒரு நாள் இரவு என் உற்ற நண்பன் ஒருவன் இன்னொரு தெரிந்த பொடியனுடன் வந்து மச்சான் இவன் ஓஎல் ல் கணித பாடம் சென்ற வருடம் பெயிலாகிவிட்டான் அவனுக்கு ஏ எல்( Advanced Level ) படிக்க மேட்ஸ் பாஸ் பண்ணி இருக்கவேண்டும் இவனுக்கோ மேட்ஸ் சுத்த சூனியம். நீ தான் இவனுக்காக குதிரை ஓடவேண்டும் என்றான் நானோ முதலில் பயத்தில் மறுத்துவிட்டேன். அட விசரா நான் பிடிபட்டால் என் படிப்பும் போய்ச்சு இவன்ரை படிப்பும் போய்ச்சு என்னால் முடியாது என்றேன். அவனோ விடாப்பிடியாக நீ தான் மேட்ஸ் நல்லா எழுதுவாய் சும்மா பாஸ் காணும் இவணுக்கு ஒன்றும் டிஸ்டிங்சன் கிரெடிட் ஒன்றும் வேண்டாம் சிம்பிள் பாஸ் ஓக்கே என்றான்.

நானும் கொஞ்சம் யோசித்துவிட்டு வீட்டுக்காரர் ஒருதரும் இல்லை களவும் கற்றுமற என பெரியவர்களும் சொல்லியிருக்கிறார்கள் ஒருதரம் ட்றை பண்ணிப்பார்ப்போம். உடனே என்ரை கண்டிசன் எல்லாம் சொன்னேன். எக்ஸாம் ஹோல் என்ரை பாடசாலையாக இருக்ககூடாது அதற்கு அவர்கள் அதில்லை பள்ளிக்கூடம் என்றுவிட்டு ஒரு பிரபல பெண்கள் பாடசாலையை சொல்ல நான் விண்ணில் மிதந்தேன் ஏனென்றால் அங்கே தான் என் தேவதை படிக்கிறாள் அவளும் இந்த மூறை எக்ஸாம் எழுதுகிறாள். நான் உடனே அடுத்த கண்டிசனான யார் அங்கே மேற்பார்வையாளர் எனக் கேட்க அவங்களும் அது யாரோ தெரியாத மாஸ்டர்தான் உனக்கு தெரிந்த ஒருதரும் இல்லை பயப்படவேண்டாம் என்றார்கள்.

அடுத்த கட்ட முக்கிய நடவடிக்கை ஐடி மாத்துவது அவனது ஐடியில் என்னுடைய போட்டோ ஒன்றை மாத்தி ஒட்டவேண்டும். இதற்கென சில பொடியள் இருக்கிறார்கள் அவங்கள் நல்ல வடிவாகச் செய்வார்கள் என அவங்கள் என்ரை போட்டோவை வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள். எக்ஸ்சாம் ஹோல் வாசலில் எனக்கு ஐடியைத் தருவதாக சொன்னார்கள்.

விடிந்தால் எக்ஸ்சாம் நான் எக்ஸாமுக்கு போகும்போது கூட இப்படி பதட்டப்பட்டதில்லை. ஒரே ரென்சன். காலை நேரத்துக்கு எழும்பி குளித்துவிட்டு அப்படியே பிள்ளையாருக்கும் ஒரு சலூட் போட்டுவிட்டு பக்திப் பழமாகா எக்ஸ்சாம் ஹோல் பாடசாலை வாசலில் நண்பர்களுக்காக நின்றேன். என் போதாத காலம் என் தேவதை நான் அவளை சைட் அடிக்க வந்திருக்கிறன் என நினைத்து ஒரு ருத்ர லுக் விட்டுவிட்டுப் போனாள். வாசலிலேயே என் மானம் கொஞ்சம் கப்பல் ஏறிவிட்டது. எக்ஸ்சாம் தொடங்க 15 நிமிடங்கள் இருக்கும்போது தான் அவர்கள் இருவரும் வந்தார்கள் என்ன மச்சான் இப்படி லேட் பண்ணிவிட்டிர்களே எனக் கேட்க அவங்களோ இல்லை இப்ப நீ போனாள்தான் சரியாக இருக்கும் பெஸ்ட் ஒவ் லக் என என்னை வாழ்த்தி அனுப்பினார்கள்.

நானும் பாண்டியராஜன் முழிமாதிரி கண்ணைப் பிரட்டிகொண்டு என் சீட்டைத் தேடினேன். அவ்ங்கள் முதலிலே சொல்லியிருந்தாங்கள் மச்சான் ரிலாக்சாகபோய் எழுது பயந்துகொண்டுபோனியோ என்றால் பிடித்துப்போடுவாங்கள் என. ஒருமாதிரி சீட்டைக் கண்டுபிடித்து இருக்க மேற்பார்வையாளார் வந்தார். அவரும் என்னை நோக்க நானும் வரை நோக்க என் மனதில் பெரிய போக்ரான் குண்டே வெடித்தது. அவர் வேறையாரும் அல்ல எனது பாடசாலை இரசாயணவியல் ஆசிரியரும் என் வகுப்பு ஆசிரியரும். அவரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் சேர்ந்துவெடித்தது. ஆனாலும் உடனே அதைக் காட்டிக்கொள்ளாமல் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே அழைத்துச் சென்றார்.

மற்ற மாணவர்களுக்கு நான் யார் என்பதைக் காட்டிக்கொடுக்காமல் வெளியே வைத்து சரமாரியாக ஏசினார். இறுதியாக ஓடடா வீட்டை என என்னை துரத்திவிட்டிருந்தால் பரவாயில்லை. பாடசாலைதொடங்கியபின் அம்மாவைக் கூப்பிட்டு என் சாகசத்தைச் சொல்லி வீட்டிலும் எனக்கு அர்ச்சனை கிடைக்கச் செய்தார்.

ஆனாலும் நான் யாருக்கு குதிரை ஓடி பிடிபட்டேனோ அவன் சேம் டைம் இன்னொருவரையும் அமர்த்தி ஒருமாதிரி அந்த வருடம் மேட்ஸ் பாஸ்பண்ணிவிட்டான்.