ஆண்க‌ள் ஆண்க‌ள் தான் - வருட இறுதி லொல்லு

சிறுவ‌னோ குழ‌ந்தையோ இளைஞ‌னோ யாராக‌ இருந்தாலும் ஆண்க‌ள் ஆண்க‌ள் தான் என்ற‌ சார‌ப்ப‌ட‌ என‌க்கு வ‌ந்த‌ மின்ன‌ஞ்ச‌ல் உங்க‌ள் பார்வைக்காக‌. மின்ன‌ஞ்ச‌லை என‌க்கு அனுப்பிய‌வ‌ர் ஒரு பெண். ஆக‌வே இது ஆண்க‌ளை அவ‌தூறாக‌ அவ‌மதிக்கும் ஒரு பெண்ணாதிக்க‌வாதியின் செய‌லாக‌வே என‌க்குப் ப‌டுகின்ற‌து.

உங்க‌ளுக்கு?
















நண்பர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!


Wish you a very Happy New Year, 2008!

இந்தியாவின் வீழ்ச்சியும் மேற்கிந்தியாவின் எழுச்சியும்.

இன்று நடைபெற்று முடிந்த இந்தியா எதிர் அவுஸ்திரேலியா மெல்பேர்ன் முதலாவது டெஸ்டில் இந்தியா மிக இலகுவாக தோற்றுவிட்டது. இந்தத் தோல்விக்கு முக்கியகாரணம் இந்தியாவின் முன்னணி சாதனை வீரர்கள் என்றால் மிகையாகாது.

343 என்ற சொற்ப ஓட்டங்களில்(அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை கடந்த காலங்களில் ஒப்பிடும்பொழுது முதலாவது இனிங்க்ஸ்சுக்கு இது குறைந்த ஓட்டம்) ஆஸியை வீழ்த்திய கும்ளேயின் அணி, ஜாபர், ராவிட், லக்ஸ்மன், டோணி, யுவராஜ் போன்றவர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினால் வெறும் 196 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. அனுபவ சச்சினும், 100 போட்டியில் விளையாடும் கங்குலியும் மட்டும் 105(இருவரும் சச்சின் 62, கங்குலி 43) எடுத்தார்கள்.

147 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்த ஆஸி மீண்டும் தமது ஒற்றுமையான டீம் வேர்க்கினால் 351 ஓட்டங்களுக்கு ஆட்டத்தை இடை நிறுத்தி இந்தியாவிற்க்கு 499 என்ற இலக்கையும் இரண்டு நாட்களையும் கொடுத்தது.

இந்தியப் பெருஞ்சுவர் ராவிட், சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானை இரட்டைச் சதத்தால் அசத்திய ஜாபர், சாதனை நாயகன் சச்சின், ஆக்ரோச வீரர் கங்குலி, பாகிஸ்தானை ஆட்டக்காணவைத்த யுவராஜ், அதிரடி டோணி, பொறுமையான லக்ஸ்மன் என இந்தியாவின் துடுப்பாட்ட வரிசை இரு நாட்களில் இந்த ஓட்டத்தை எடுத்து ஆஸி மண்ணில் ஒரு வெற்றியை நிலை நாட்டுவார்கள் என நினைத்தால் அனைத்திலும் ம‌ண்ணைப்போட்டுவிட்டார்கள்.

கங்குலியையும் லக்ஸ்மனையும் தவிர ஏனையவர்கள் அணியில் எப்படி ஆடினாலும் இடம் கிடைக்கும் என்ற மனப்பான்மையில் வந்தார்கள், திரும்பச் சென்றார்கள், இரண்டு இனிங்க்ஸிலும் ராவிட் பார்வையாளர்களை பயங்கரமாகச் சோதித்துவிட்டார். முதலாவது இனிங்ஸ்சில் 62 ஆவது பந்தில் தான் ராவிட் ஓட்ட எண்ணிக்கையை ஆரம்பித்தார் ஆனால் பரிதாபம் 66வது பந்தில் 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்துவிட்டார். இரண்டாவது இனிங்ஸிலும் அதே ஆமை வேகம் 114 பந்தில் 16 ஓட்டங்கள். சில காலமாக இந்தியப் பெருஞ்சுவர் ஆட்டம் கண்டுவிட்டது.

ராவிட் போனால் என்ன சச்சின் இருக்கிறார் என்றால் சச்சினுக்கு என்ன அவசர வேலையோ 15 ஓட்டம் போதும் என்பதுபோல் அவுட்டாகிவிட்டார். கொஞ்ச நேரம் கங்குலியும் லக்ஸ்மணும் 41 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக எடுத்து நெஞ்சில் பால் வார்த்தார்கள். இந்த இனிங்கிசில் இதுதான் கூடுதல் இணைப்பாட்டம்.

இந்தியத் தேர்வாளர்கள் செய்த தவறுகளில் ஒன்று ஆஸி மண்ணில் அனுபவம் குறைந்த யுவராஜை தேர்ந்தெடுத்தது, இவருக்கு பதிலாக சேவாக்கை எடுத்திருந்தால் சில வேளைகளில் சேவாக் சிறப்பாக ஆடியிருப்பார். இன்னொரு தவறு இர்பான் பதானைத் தெரிவுசெய்யாதது.

தோல்வியும் வெற்றியும் சகஜம் தான் ஆனால் ஆஸியின் 15ஆவது தொடர் வெற்றியை இந்திய அணியால் நிறுத்த முடியாமல் போய்விட்டது. இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி வெறும் என வழமைபோல் நினைப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாது.இந்திய அணிக்குத் தேவை கபில்தேவ் மாதிரியான ஒரு போராட்ட குணமுள்ள வீரர்.

அடுத்த இன்றைய ஆட்டம் டெஸ்ட் தரவரிசையில் 2ஆவதாக இருக்கும் தென்ஆபிரிக்காவுக்கும் வேஸ்ட்(Waste) இன்டீஸ் என செல்லமாக அழைக்கப்படும் மேற்கிந்திய தீவுகளுக்கும் இடையிலான ஆட்டம்.

2000ஆவது ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக எக்பஸ்டனின் பெற்ற வெற்றியின் பின்னர் 7 வருடங்களுக்கு பிறகு அன்னிய மண்ணில்( வங்கதேசம், சிம்பாவேயுடன் பெற்ற வெற்றிகள் நீங்கலாக) பெற்றதும் அதே நேரம் தென்ஆபிரிக்கா மண்ணில் முதல் தடவை பெற்றதுமான வெற்றியானது ஒரு சாதனைதான்.

அணித்தலைவர் கிரிஸ் கேயில் , சந்தர்போல் தவிர எனையவர்கள் பலர் அனுபவமற்ற வீரர்கள், இவர்கள் அனைவரது மொத்த ஓட்டங்களையும் கணக்கிட்டாலும் சச்சின் டெண்டுல்கரின் தனி நபர் மொத்த ஓட்டத்துக்கு சமமாகாது. ஆனாலும் இளம் கன்று பயமறியாது என்பது போல் பலம் வாய்ந்த தென் ஆபிரிக்காவை சொந்த மண்ணில் வீழ்த்தியது வெஸ்ட் இன்டீஸின் எழுச்சி எனக் கொள்ளலாம்.

இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வெஸ்ட் இன்டீஸ் வீரர் பிராவோவுக்கு இதுதான் முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரு டெஸ்ட் வெற்றியை வைத்துக்கொண்டு வெஸ்ட் இன்டீஸ் பழைய நிலைக்குத் திரும்பிவிட்டதெனக் கொள்ளமுடியாது.

இந்திய அணியை பொறுத்தவரை இந்த வருட முடிவு கசப்பாகிவிட்டது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு உற்சாகமான வருடம். அதே நேரம் இரு அணிகளுக்கும் அடுத்த வருடம் எப்படியிருக்கும் என சில நாட்களில் தெரிந்துவிடும். அடுத்த டெஸ்டில் ஆஸியின் 15 டெஸ்ட் தொடர் வெற்றிகளை இந்திய அணியால் நிறுத்த முடியுமா? காலம் பதில் சொல்லும்.

அந்தணர் என்போர் அறவோர்.

நேற்றை விஜய் டீவியின் மதன் திரைப்பார்வையில் எவனோ ஒருவன் திரைப்பட விமர்சனத்தில் மாதவன் பிராமணர் என்றால் சாதுவானவர்கள் யாருக்கும் எந்தக் கேடும் விளைவிக்கமாட்டார்கள் என்றார். அதாவது இந்தப்படத்தின் கதாநாயகன் ஸ்ரீதர் வாசுதேவன் பாத்திரத்தை ஏன் பிராமணராகக் காட்டினீர்கள் என மதன் கேட்ட கேள்விக்கு மாதவன் அளித்த பதில்.

இந்தியாவில் எத்தனையோ பிரச்சனைகளுக்கு காரணம் பிராமணர்கள் என்ற உணமை மாதவனுக்கும் தெரியவில்லை, மதனுக்கும் தெரியவில்லை.

ஆனால் ஈழப்பிரச்சனையில் அப்பாவித் தமிழர்களையும் புலிகளாக்கும் ஹிந்து ராம், மணி சங்கர் ஐயர், சோ, தினமலர் குருமூர்த்தி, ஈழத்தமிழர்களின் பாஸ்போர்ட்டைப் பார்க்க விரும்பும் மாலன் போன்றவர்கள் சாதுவான அந்தணர்களா?

என்ன கொடுமை சார்?

நாயாட நரியாட

தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக ஒரு வித்தியாசமான நடன நிகழ்ச்சி நாயாட நரியாட. இந்த நிகழ்ச்சி ஒரு சேனலில் விரைவில் ஆரம்பமாக இருக்கின்றது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக ( நடனம் ஆடுபவர் அல்ல நடு நிலையான நடுவர்) நீங்களும் பங்கபற்ற விருப்பமா? உடனடியாக எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள்.

தேவையான தகைமைகள்:

1. நடனம் பற்றிய எந்த அறிவும் தேவையில்லை.
2. தலைமயிர் நன்கு வளர்ந்திருந்தால் தேர்வு செய்யப்படும் சாத்தியம் அதிகம்.
3. இடையிடையே நடிக்கத் தெரிந்திருக்கவேண்டும், அழுதால் ரசிகர்களிடம்
பெயர் கிடைக்கும்.
4. நடனமாடும் ஆண்களை விட பெண்களிற்க்கு அதிகம் மார்க் போடுதல் வேண்டும் அட்டு
பிகர் என்றாலும் அவரை ஜோதிகா, சிம்ரன் ரேஞ்சுக்கு புகழவேண்டும்.
5. இடையிடையே மேடையில் சென்று சூப்பராக ஆடினேர்கள் என ஆண்களைக்
கட்டிப்பிடித்து வாழ்த்தவேண்டும், பெண்களையும் கட்டிப்பிடிக்கலாம் ஆனால் பின்
விளைவுகளுக்கு நிர்வாகம் பொறுப்பேற்காது.

தெரிந்திருக்கவேண்டிய சொற்கள் :
கீழ் வரும் சொற்களில் சிலவற்றை மட்டும் பாவித்து நீங்கள் ஜல்லி அடிக்கலாம். இந்த சொற்களில் 3க்கு மேற்பட்ட சொற்கள் உங்களுக்குத் தெரிந்தால் முன்னுரிமை அளிக்கப்படும்.

1. கெமிஸ்ரி : ஒரு நடன நிகழ்ச்சியில் முக்கியமான சொல் இதுவாகும்.
நடனாமாடிய பெண்ணுக்கும் ஆணுக்கும் இந்தக் கெமிஸ்ரி இல்லையென்றால் நடனம்
அம்பேல். எனக்குத் தெரிந்த கெமிஸ்ரியில் பென்சீன் ரிங், ஆர்கானி போன்றவை
மட்டும்தான் தெரியும். இந்த நிக்ழ்ச்சிகள் பார்த்த்பின்னர் தான் நடனம் ஆடவும்
கெமிஸ்ரி தெரிந்திருக்கவேண்டும் என புரிந்தது.)

2. சூப்பர் : இந்த வார்த்தையை பல விதமான ஸ்டைல்களில் சொல்லத்
தெரிந்திருக்கவேண்டும்.

3. பன்டாஸ்டிக் : ஒருவர் சொதப்பலாக ஆடினாலும், சூப்பராக ஆடினாலும் இந்த
வார்த்தையைச் சொல்லவேண்டும், நீங்கள் சொதப்பலாக ஆடியவருக்கு ஏன்
பன்டாஸ்டிக்கு என்று சொன்னீர்கள் என்று பார்ப்பவர்கள் முடியைப் பிய்க்கவேண்டும்.

4. எனர்ஜி :கெமிஸ்ரிக்கு அடுத்த இடத்தை இந்த சொல் பிடிக்கவேண்டும். ஆடுபவர்
சோம்பலாக ஆடினாலும் உங்கள் எனர்ஜி, எனர்ஜி லெவல் ஆச்சரியமளிக்கிறது என
ஆடிய்வரையே ஆச்சரியப்படவைக்கவேண்டும்.

5. எக்ஸ்பிரசன்ஸ் : முகத்தில் எந்தவித முகபாவனை செய்யாதவரைப் பார்த்து உங்கள்
எக்ஸ்பிரசன்ஸ் அட்டகாசம் என நீங்கள் முகத்தில் எந்தவிதமான உணர்ச்சியும் இல்லாமல்
சொல்லவேண்டும்.

6. பாடி லாங்குவேஜ் : இதனையும் இடைக்கிடை சொல்லவேண்டும். இல்லையென்றால்
உங்களுக்கு ரசனை இல்லையென்று மற்றவர்கள் நினைத்துவிடுவார்கள்.

இது தவிர வேறு வார்த்தைகள் இருந்தால் அன்பான நண்பர்களே தெரிவியுங்கள்.

மானாட மயிலாட, ஜோடி நம்பர் ஒன், மஸ்தானா மஸ்தானா போன்ற நடன நிகழ்ச்சிகள் பார்த்த பாதிப்பில் எழுதிய பதிவு இது.

வீக் என்ட் ஜொள்ளு

வீக் என்ட் ஜொள்ளு

அடுத்த வாரம் முதல் எனக்கு புதிய வேலை கிடைத்துள்ளது. இதுவரை செய்தவேலையையும் விட்டுவிட்டு இந்தவேலைக்குப் போகப்போகின்றேன், முன்னையவேலையை விட சம்பளமும் குறைவு தான். ஆனால் இந்த வேலை மனதை உற்சாகப்படுத்தும்.

என்ன வேலை தெரியுமா? காற்பந்து பயிற்சிவிப்பாளர். பாடசாலை நாட்களில் கால்பந்தை நான் கையால் கூடத் தொட்டதில்லை ஆனால் இந்தவேலைக்கு போகவேண்டும் என எனக்கு ஆசை. ஓவர் பில்டப் இத்துடன் போதும்.


ஏன் நான் அந்த வேலைக்குப் போகவிரும்புகின்றேன் தெரியுமா?

கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.




இந்த டீமுக்கு கோச்சாகப் போக எவன் தான் விரும்பமாட்டான்.

‘மனுஷங்களா நீங்க?!’

கொதிக்கும் மலேசிய தமிழர்கள்!

கலை இரவுக்கு கிளம்பும் கோலிவுட்...

‘மனுஷங்களா நீங்க?!’


பறிக்கப்பட்டு வரும் தங்கள் அடிப்படை உரிமைகளை மீட்க, நவம்பர் 25&ம் தேதி அமைதியான முறையில் திரண்ட ஆயிரக்கணக்கான தமிழர்களை மலேசிய அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கிய அராஜகத்தை உலகமே பார்த்து அதிர்ந்தது. இந்த பேரணியில் கலந்து கொண்ட பலர் இன்று மலேசிய சிறையில்! இதைத் தொடர்ந்து, இலங்கை தமிழர்கள் பிரச்னைக்குப் பிறகு சர்வதேச அரங்கில் மலேசிய தமிழர்களின் பிரச்னை வெளிச்சத்துக்கு வந்து, புதியதோர் இன உரிமைப் போராட் டத்துக்கு வழிவகுத்திருக்கிறது.

தமிழக அரசு, இந்திய அரசு தவிர அமெரிக்கா உட்பட உலக நாடுகள் மலேசிய தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித் திருக்கின்றன. ஆனாலும், எந்நேரமும் எதுவும் நடக்கலாம் என்பதுதான் மலேசியாவின் திக்திக் நிலவரம்.

இப்படியரு சூழலில், மலேசிய தமிழர்கள் முன்பு கலை நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் மூலம் வரும் வருவாயை தங்கள் சங்கத்தின் நலனுக்குப் பயன்படுத்த தீவிரமாக தமிழ் திரையுலகத்தினர் ஏற்பாடுகள் செய்துவருகிறார்கள். இது கோடம்பாக்கத்துக்குள்ளேயே பெரிய புயலைக் கிளப்பி இருக்கிறது.

நடிகர் சங்கத்துக்கான புதிய கட்டடம் கட்டவும், நலிந்த கலைஞர்களுக்கு உதவும் வகையிலும் மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் தலா ஒருநாள்


நடைபெறும் கலை நிகழ்ச்சி களில் பங்கேற்பதே கோலிவுட் ஸ்டார்களின் திட்டம். இந்த தருணத்தில் மலேசியத் தமிழர் அமைப்பிலிருந்து நடிகர் சங்கத்துக்குப் படுகாட்டமான ஒரு கடிதம் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

‘‘நடுத்தெருவில் எங்கள் உரிமைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறோம். பிரச்னை பற்றியெரியும் இந்த நேரத்தில் நீங்கள் இங்கு வந்து எங்களை சந்தோஷப்படுத்தப் போகிறீர்களா? நீங்கள் இங்கு வந்து, உங்களைப் பார்க்க நாங்களும் ஆடிட்டோரியத்தில் கூடி, கைதட்டி ஆர்ப் பரிப்புடன் ரசித்தால் எங்கள் போராட்டம் பற்றி உலகம் என்ன பேசும்? மலேசிய அரசு எங்கள் உரிமைப் போரின் நேர்மை குறித்து என்ன சொல்லும்? இதையெல்லாம் யோசிக்காமல், ஏற்கெனவே தீட்டிய பயணத்தை விடாப் பிடியாக மேற்கொள்ள நினைக்கும் நீங்கள் மனிதர்களா?’’ என்று நீள்கிறதாம் அந்தக் கடிதம்.

இதுபற்றி சினிமா பிரமுகர் ஒருவரே தன் அடையாளத்தை மறைத்துப் பேசினார். ‘‘எல்லாமொழி சினிமாவிலும் தேவைகள் உண்டு. அதை நிறைவேற்றிக்கொள்ள எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, கேரளா சினிமாவின் அமைப்பான ‘அம்மா(association of all malayala movie artists-AMMA)’ தங்கள் கலைஞர்களின் நலனுக்காக நிதி திரட்ட ஒரு யோசனை செய்தது. அதன் படி நடிகர் திலீப் தலைமையில் காமெடி ப்ளஸ் கமர்ஷியல் படமெடுத்து சூப்பர் ஹிட்டாக்கி சம்பாதிக்க ஐடியா செய் தார்கள். இப்போது படத்துக்கு ‘ட்வென்டி ட்வென்டி’ என்று தலைப்பிட்டு, மலையாளத்தின் அத்தனை ஸ்டார் களும் அதில் நடிக்கத் தொடங்கிவிட்டார்கள். நல்ல காரியத்துக்காக உருவான சினிமா என்பதாலேயே அதற்குப் பெருவாரியான ஆதரவு... மலையாள சினிமா வில் இதுவரை இல்லாத அளவுக்கு அந்தப் படம் வியாபார மாகியிருக்கிறது.

மலேசிய கலை நிகழ்ச்சிக்கு ரஜினி, கமல் போகவில்லை. விஜய், விக்ரம் போன்றவர்கள் போனால்தான் உண்டு. இந்நிலையில் யாரைத் திருப்திப்படுத்த, யாருடைய வியா பார வளர்ச்சிக்காக இந்த மலேசியப் பயணம் என்பது தெரியவில்லை’’ என்று கேள்வி எழுப்பினார்.

மலேசியத் தமிழர்கள் என்ன நினைக் கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ‘இந்து உரிமைகள் நடவடிக்கைக் குழு’வின் (இந்தஅமைப்புதான் மலேசிய தமிழர்களின் உரிமைகளுக்காக இப்போது போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறது) சட்ட ஆலோசகரும் முன்னணி தலைவர் களில் ஒருவருமான வழக்கறிஞர் கணபதி ராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.

‘‘மலேசிய அரசுக்கு ஆதரவான அரசியல் கட்சிகளின் உதவியோடுதான் தமிழகக் கலைஞர்களை மலேசியாவுக்குக் கொண்டுவர சிலர் ஏற்பாடு செய்திருக் கிறார்கள். அவர்களுக்கு எங்கள் நிலைமையின் தீவிரமோ, வேதனையோ தெரியவில்லை. இங்குள்ள பளபள ஹோட்டல்களில் தங்கிவிட்டு, நகரத்தை சுற்றிவிட்டு, வந்த வேலை முடிந்து திரும்பிவிடுவார்கள். அவர்கள் நடத் தும் கலைநிகழ்ச்சிகளுக்கு நாங்கள் போனால் அதை இந்த அரசாங்கம், ‘இங்கே எல்லோரும் அமைதியாக, ரிலாக்ஸாக இருக்கிறார்கள்’ என்று உலக நாடுகளிடம் பிரசாரம் செய்யும். இதனால் எங்கள் போராட்டத்தின் வீரியம் குறைந்துபோகாதா?

கோரிக்கைகளை வலியுறுத்தி பொது இடத்தில் கூடுகிறோம். அதற்கு போலீஸ் அனுமதி மறுக்கிறது, சிறையில் தள்ளுகிறது என்பதெல்லாம் வந்த செய்திகள். வராத செய்தி ஒன்றைச் சொல்கிறேன்... கோலாலம்பூருக்குப் பக்கத்திலிருக்கும் பட்டா கேவ்ஸ் என்ற இடத்திலிருக்கும் முருகன் கோயிலில் சுமார் ஏழாயிரம் தமிழர்கள் கார்த்திகை தீபத் திருவிழாவுக்காகக் கூடினார்கள். அங்கும் வந்த போலீஸ் பீதியைக் கிளப்பி, ‘இவர்களால் சட்டம்&ஒழுங்கு பாதிக்கப்படும்’ என்ற பொய்யைச் சொல்லி, எல்லோரையும் அந்தக் கோயில் வளாகத்துக்குள் சிறை வைத்தது. அனைவர் மீதும் கண்ணீர்ப் புகையைப் பாய்ச்சியது. பக்திப் பரவசத்துடன் கூடிய தமிழர்களை அடக்க போலீஸ் செய்த அராஜகத்தைப் பற்றி யாரும் எதுவும் பேசவில்லை. ஆனால், அந்தக் களேபரத்தில் ஒரு போலீஸ்காரரின் நெற்றியில் சிறு கீறல் விழுந்தது. இதற்காக 33 தமிழர்கள் மீது ஜாமீனில் வெளியில் வரமுடியாத பிரிவுகளில் வழக்குப் போட்டு உள்ளே தள்ளியிருக்கிறார்கள். இதற்கான தண்டனைக்காலம் இருபது வருடங்கள்.

இதுதான் எங்களின் இப்போதைய நிலை. ஆனால், Ôஉணவும், உடையும், இருக்க வீடும்தான் கிடைக்கிறதே... பிறகும் ஏன் போராட்டம்?Õ என்று கேலியாகக் கேட்கிறது மலேசிய அரசு. நாங்கள் எந்தத் தொழில் தொடங்கினாலும் அதில் முக்கால்வாசிப் பங்குகளை மலேயர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். 2003&ம் வருடத்தில் மருத்துவக் கல்லூரியில் ஒரே ஒரு சீட்டைத்தான் தமிழர்களுக்கு ஒதுக்கினார்கள். நாங்கள் போராடிய பிறகு அது கூட்டப்பட்டிருக்கிறது. அழகான நகரங்களை விட்டு சற்று உள்ளே சென்றால், தோட்டங்களில் வேலை செய்யும் தமிழர்களின் நிலைமையை எல்லோரும் தெரிந்து கொள்ளலாம்.

எத்தனை சூப்பர் ஸ்டார் வேண்டுமானாலும் எங்கள் மண்ணுக்கு வரலாம்... நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், அவர்கள் எங்கள் பிரச்னையைப் பற்றியும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எங்கள் பிரச்னையை அவர்களும் இந்த உலகத்துக்கு உரக்கச் சொல்ல வேண்டும்! அதற்காக வந்தால் மனமுவந்து வரவேற்போம். செய்வார்களா தமிழ் நட்சத்திரங்கள்?’’ என்று உணர்ச்சி பொங்கப் பேசினார் கணபதி ராவ்.

மலேசிய தமிழர்கள் சிலர் தங்கள் பெயர் குறிப்பிடாமல் நம்மிடம் ஒரு விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார்கள். ‘‘ஏழு வருடங்களுக்கு முன்பாக தமிழ் சினிமா இசைப் பிரபலம் ஒருவர் மாபெரும் கச்சேரிக்காக மலேசியா வந்தார். அதற்கு கோடிக்கணக்கில் வசூல் கொட்டியது. உணர்ச்சிப் பெருக்கில் எங்களை சந்தித்த அவர், ‘உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?’ என்று நெகிழ்வோடு கேட்டார். விழுந்து நொறுங்கும் நிலையிலிருக்கும் சில தமிழ்ப் பள்ளிகளைக் குறிப்பிட்டு அவற்றைப் புனரமைக்க நிதி கேட்டோம். ‘நிச்சயம் செய்கிறேன்’ என்று போனவர்தான். அதன்பிறகு மலேசியாவுக்கு அவர் உதவி வந்தது. ஆனால், எங்களுக்கல்ல... வேறு சிலருக்கு... அதுவும் அவர் விரும்பியவர்களுக்கு!’’ என்றார்கள்.

கடைசியாக, நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ராதாரவியிடம் பேசினோம். ‘‘எனக்குத் தெரிந்து கலை நிகழ்ச்சி நடத்த மலேசியாவில் யாருக்கும் எதிர்ப்பு இல்லை. நீங்கள் சொல்வது போல் கடிதம் எதுவும் வரவுமில்லை. மலேசிய தமிழர்களின் நலனில் எங்களுக்கும் மிகுந்த அக்கறை இருக்கிறது. அது அவர்களுக்கும் புரியும். ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தபடி இந்த நிகழ்ச்சி நன்றாகவே நடந்து முடியும். ஆனால் மலேசிய தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக நாங்கள் நிகழ்ச்சி நடத்தப்போகிறோம் என்று வர்ணிப்பதை உணர்வுள்ள ஒரு தமிழனான என்னால் ஏற்க முடியாது!’’ என்றார்.

நன்றி ஜீனியர் விகடன்

பின்குறிப்பு : இந்த வார ஜூனியர் விகடனின் வந்திருக்கும் இந்த செய்தி உங்கள் பார்வைக்கு. சினிமாக்காரர்கள் தமிழனின் பணத்தில் வாழ்ந்துகொண்டு தமிழனை அழிக்கப்பார்க்கிறார்கள்.

விஜய் டீவியில் லக்கி லுக்

நேற்று இரவு 7 மணிக்கு விஜய் டீவியில் இடம்பெற்ற பாடும் ஆபிஸ் என்ற பாடல் பாடும் போட்டு நிகழ்ச்சியில் கலந்து அசத்தினார்.

அந்த நபர் லக்கி லுக்தான் என்பதற்கான ஆதாரங்கள்:
லக்கியின் புகைப்படம் பார்த்துள்ளேன் அத்துடன் பெயரும் ஒரே பெயர் தான். அந்த நபரும் விளம்பரத் துறையில் வேலை பார்க்கின்றார். ஆகவே லக்கி லுக்தான் அந்த நபர் என்பது வில்லிவாக்கம் புலனாய்வுத் துறையினராலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மறுபடியும் அந்த நிகழ்ச்சி இன்று மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் பார்க்க மறந்தவர்கள் இன்று பார்க்கவும்.

டிஸ்கி : இது ஒரு மொக்கைப் பதிவு அல்ல. :)