தசாவதாரம் இசை விமர்சனம்

குமுதம் இதழில் வெளிவந்த தசாவதாரம் இசை விமர்சனம்.


கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது’’
_ ஹரிஹரனின் கணீர்க் குரலில் ஆரம்பிக்கிறது தெறித்து விழும் வாலியின் தத்துவார்த்தமான வரிகள். இசை: மும்பையிலிருந்து தமிழுக்கு இறக்குமதியாகியிருக்கும் ஹிமேஷ் ரேஷ்மையா. இந்தப் பாடல் காட்சியை படுபிரமாண்டமாக அமைத்திருகிறார்கள். பன்னிரண்டாம் நூற்றாண்டில் சைவர்களுக்கும், வைணவர்களுக்குமிடையிலான பரஸ்பர பகையின் பின்னணியில் இந்தக் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆஜானுபாகுவாக பஞ்சகச்சத்துடன் சட்டை போடாமல் திருநாமத்துடன் நிற்கும் கமலைக் கொக்கியால் இரண்டு கைகளிலும் கால்களிலும் குத்தி, ஒரு கிரேனில் கொடூரமாகத் தொங்கவிடுகிறார்கள் சைவர்கள். அம்பாரி வைத்து ஜோடிக்கப்பட்ட யானையின் மீது கம்பீரமாக வரும் சைவ மன்னரான நெப்போலியனின் உத்தரவின் பேரில்தான் இந்தக் கொடூரம் நடக்கிறது. ஒரு பக்கம் ஏராளமான வைணவர்கள் செய்வதறியாமல் திகைக்க, இன்னொருபுறம் கமலின் மனைவியான அஸின் (புடவை கட்டி ரவிக்கை போடாத அஸின்!) கதற... கிரேன் வேகமாக கடற்கரையில் நகர்கிறது. உயரத்தில் தொங்கும் கமல் மீது அம்புகள் வேறு சரமாரியாக விடப்படுகின்றன. சற்று நேரத்தில் ஒரு சிலையோடு சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும் கமல் நடுக் கடலில் தூக்கி வீசப்படுகிறார். உடம்பை உலுக்கும் காட்சி! பாட்டு முடிகிறது. யாரையும் வெலவெலக்க வைக்கும் இந்த நான்கு நிமிட காட்சியைப் பீதியுடன் காணும் திரளான மக்களை உற்று கவனித்தால், சுத்தமாக அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு நடுத்தர வயதில் ஒரு மாநிற மனிதர் அட... அவரும் கமல்! காட்சிக்கு ஏற்றவாறு தசைகளை முறுக்கேற்றும்படி பாடியிருக்கிறார் ஹரிஹரன்.

‘முகுந்தா முகுந்தா கிருஷ்ணா முகுந்தா ‘வரம் தா வரம் தா பிருந்தாவனம் தா’ பாடலை நம்மூர் ஸ்டைலில் ரொம்ப சாஸ்திரியமாக முயற்சி செய்திருக்கிறார் வட இந்திய ஹிமேஷ். காப்பி ராக சாயலில் அமைந்துள்ள ‘முகுந்தாவில்’ அனாவசிய வாத்திய இரைச்சல் இல்லை. வீணை, மிருதங்கம், கடம் ஆனந்தமாய் ஒலிக்கிறது. சாதனா சர்கத்தின் தொண்டையில் நிரந்தரமாக தேன் தடவியிருக்கிறதோ என்னமோ, அப்படியரு குழைவு, இளமை! சொல்லப்போனால் தசாவதாரத்தின் ஐந்து பாடல்களில் இதில் மட்டுமே கர்நாடக சங்கீதத்தை கேட்க முடிகிறது.

மல்லிகா ஷெராவத்தின் துள்ளலான ஆட்டத்திற்கு ராப் ஸ்டைலில் விளையாடியிருப்பவர் கமலின் மகள் ஸ்ருதி. பல்லவியை ஆங்கிலத்தில் ஆரம்பித்து அனுபல்லவியின் போது தமிழுக்கு வருகிறார். வாத்திய இரைச்சல் சற்று அதிகம் என்றாலும் மேற்கத்திய இசை ரசிகர்களை தோளைக் குலுக்கி, குதிகாலைத் தூக்கி ஆடவைக்கலாம். முழுவதும் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட அட்டகாசம்!

வழக்கமாக கமல் பாடும் போது வாயில் எதையோ அடக்கிக் கொண்டு பாடுவது போல தெரியும். தசாவதாரத்தில் அவர் பாடும் டூயட் ‘ஓ.. ஓ சனம்’ பெட்டர். முழுவதும் மேடையில் பாடுவது போன்ற காட்சி. இடை யிடையே ‘உஸ் உஸ்’ என்று சீறும் அலை ஓசை வித்தியாசமானது. பாட்டின் பல இடங்களில் கிதார் ரகளை செய்கிறது!

‘‘உடல் பூமிக்கு போகட்டும்

இசை பூமியை ஆளட்டும்’’

‘‘கடவுளும் கந்த சாமியும்

பேசிக் கொள்ளும் மொழி இசை’’

‘‘வீழ்வது யாராயினும்

வாழ்வது நாடாகட்டும்’’

போன்ற வைரமுத்தின் நயமான வரிகள் பாட்டு நெடுகிலும் உண்டு.

படத்தின் க்ளைமாக்ஸில் எல்லா கமல்களும் அணிவகுக்கும் போது ஆர்ப்பாட்டமாக வருவது:

‘‘உலக நாயகனே... கண்டங்கள் கண்டு வியக்கும் உலக நாயகனே!’’

ராப், ஹிந்துஸ்தானி எல்லாவற்றையும் அழகாக கலந்து கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர். கமல் ரசிகர்கள் திரைக்கு முன்பு ஓடிவந்து நாக்கை மடக்கி வெறியாட்டம் போட வைக்கிற அதிரும் பீட்! அந்த ‘கிடதங் கிடதங்’ பின்னணி அருமை! கமல் ரசிகர்களை சூடேற்றுவதற்காகவே ‘நீ பெருங்கலைஞன், நிரந்தர இளைஞன்’ என்று வைரமுத்துவின் கெத்தான வரிகள் வேறு! கேட்கவா வேண்டும்?

ஹிமேஷ் இசையைக் கண்ணை மூடிக் கொண்டு கேட்கிறபோது சற்று ரஹ்மானை நினைவுபடுத்தினாலும் தமிழுக்கு அந்த பீட்களும், அலறும் வயலின்களும், வேகமும் புதியது! மேற்கத்திய வாடை சற்று தூக்கல்! நம்மூர் கர்நாடிக் மியூஸிக்கை ஊறுகாயைப் போல தொட்டுக் கொண்டு விட்டு விட்டாரே என்ற ஏக்கமும் வராமல் இல்லை. ஆனால் தயாரிப்பாளர் கல்லாவைப் பார்ப்பாரா, கர்நாடிக்கைப் பார்ப்பாரா?.

_ வி. சந்திரசேகரன்

நன்றி : குமுதம்

டிஸ்கி : இதுவரை எந்த இணையத்திலும் பாடல்கள் வெளிவரவில்லை.

வாழ்த்துக்கள் முரளி கார்த்திக்



திமிர் பிடித்த ஆஸியின் மூக்கை பந்துவீச்சாலும் துடுப்பாட்டத்தாலும் உடைத்த தங்கத் தமிழன் முரளி கார்த்திக்கு வாழ்த்துக்கள்.



தெரிவாளார்களே இனியாவது உங்கள் கண்களுக்கு முரளி தென்படுகின்றாரா எனப் பாருங்கள். மீண்டும் அவரை இடை நிறுத்தாதீர்கள்.

ஓய்வெடுங்கள் சச்சின்

ஓய்வெடுங்கள் சச்சின்

சமீபகாலமாக சச்சின் டெண்டுல்கரின் துடுப்பாட்டம் குறிப்பாக ஒரு நாள் போட்டிகளில் அவ்வளவாக சோபிக்க வில்லை. இன்று சண்டிகரில் நடந்துகொண்டிருக்கும் போட்டியில் கூட ஆரம்பத்தில் மிகவும் மந்தமாக விளையாடி (ஒரு கட்டத்தில் சச்சின் 22 பந்துகளுக்கு வெறும் 3 ஓட்டங்கள் மட்டும் பெற்றிருந்தார்), பின்னர் சற்று அடித்து அதிலும் 119 பந்துகளில் வெறும் ஏழே எழு நான்கு ஓட்டங்களுடன் மொத்தமாக 79 ஓட்டங்கள் எடுத்தார். 119 பந்துகளில் சச்சின் விளையாடாமல் அல்லது ஓட்டம் எடுக்காமல் விட்ட பந்துகளின் எண்ணிக்கை 73 பந்துகள். ஒரு நாள் போட்டியைப் பொறுத்தவரை இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். 73 பந்துகளை சச்சின் வீணாக்கினார் என்பது கிட்டத்தட்ட 12 ஓவர்களை சச்சின் வீணடித்துள்ளார்.

சில‌ நாட்க‌ளுக்கு முன்ன‌ர் மூத்த‌ வீர‌ர்க‌ள் ப‌ற்றி திலிப் வெங்சகார் கூறிய‌ க‌ருத்து உண்மையாகும் போல் தெரிகின்ற‌து. மூத்த‌ வீர‌ர்க‌ள் இள‌ம் த‌லைமுறைக்கு இட‌ம் விட்டு விட்டு ம‌ரியாதையாக‌ ஒதுங்குவ‌து ந‌ல்ல‌து.


இன்றைய சச்சினின் ஆட்டம் தனது இடத்தை தக்கவைக்க ஆடியதுபோல் உள்ளது. இறுதி நேரத்தில் மகேந்திர சிங் டோணியும் ரொபின் உத்தப்பாவும் ஆடியபோல் மூத்த வீரர்களான சச்சினும் கங்குலியும் ஆடவில்லை. இருவரும் தமது இடத்தை தக்கவைத்துக்கொள்ளவே ஆடியதுபோல் ஆடினார்கள். அடுத்த மூத்த வீரரான ராகுல் ராவிட் யார் என்ன சொன்னாலும் என் இடத்தை யாருக்கும் விட்டுத்தரமாட்டேன் என்ற எண்ணத்தில் 14 பந்துகளில் 13 ஓட்டங்களை மட்டும் எடுத்து (அதில் 7 பந்துகளுக்கு ஓட்டம் எதுவும் எடுக்கவில்லை ) அவுட்டாகினார்.

கங்குலியும் தான் சச்சினுக்கு சற்றும் சளைத்தவர் இல்லை என்பதுபோல் 59 பந்துகளீல் 41 ஓட்டங்களை மட்டும் எடுத்தார். இதில் 46 பந்துகளுக்கு ஓட்டம் ஏதும் எடுகவில்லை.

ஆரம்பத்தில் போட்டியைப் பார்த்தவர்களுக்கு ஏதோ டெஸ்ட் மேட்ச் நடக்கின்றதோ என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும்.

சச்சின் உங்கள் சாதனைகளை நாங்கள் மறக்கவில்லை. அதே நேரம் உங்கள் சாதனைகளை முறியடிக்கவும் வருங்கால வீரர்களுக்கு நீண்டகாலம் எடுக்கும். அதனால் மிகவும் மரியாதையாக ஒரு நாள் போட்டியிலிருந்து விலகி புதிய இளம் சிங்கங்களுக்கு வழிவிடுங்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல கங்குலி ராவிட் போன்ற ஏனைய மூத்த வீரர்களுக்கும் பொருந்து. நீங்கள் மூவரும் வழி விட்டதினால் தான் இளம் வீரர்களால் 20க்கு 20 போட்டியில் சாம்பியன்ஸ் ஆக முடிந்தது.

வாழ்க சச்சின் வளர்க அவர் சாதனைகள்.

கர்னாடக சங்கீத்தில் தமிழ் ஏன் புறக்கணிக்கப்படுகிறது?

கர்னாடக சங்கீத்தில் தமிழ் ஏன் புறக்கணிக்கப்படுகிறது?

தலைப்பை பார்த்ததும் சிந்துபைரவி படம் ஞாபகத்திற்கு வருகிறதா? விடயமும் அதில் வந்த சிந்துவின் கேள்விதான்?

பல சங்கீதமேடைகளில் தெலுங்குகீர்த்தனைகளைத்தவிர வேறு ஏதும் பாடுவதில்லை. அப்படிப் பாடினாலும் அவை துக்கடாக்களாத்தன் இருக்குமே தவிர ஒரு முழுமையான கீர்த்தனையாய் இராது. இந்த இசை ஜாம்பவாங்கள் அனைவரும் ஏதோ கர்னாடக சங்கீதம் தெலுங்கில் இருந்து பிறந்தது என எண்ணிக்கொண்டிரிக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல தமிழில் தான் அது முதலில் உருவானது பின்னர் கால் ஓட்ட்த்தில் அது தெலுங்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சிலர் சொல்லுகிறார்கள் தமிழில் போதிய பாடல்கள் இல்லையென்று ஐயா மேதாவிகளே நமது முண்டாசுக் கவிஞனின் பாடல்களே பல தலைமுறைக்கு போகும் அதனை விட நமது தேவாரதிருவாசகங்கள் பல நூறு தலைமுறைகளுக்கு போதும் பின் ஏன் நீங்கள் தமிழில் பாடாமல் தெரியாத மொழியில் பாடுகிறீர்கள்.

எனக்கு தெரிந்து ஒருமுறை கொழும்பில் சீர்காழி சிவசிதம்பரமும் பாரதியாரின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதியும் மட்டும் முழுக்க முழுக்க தமிழில் பாடி சபையைமெய்மறக்கசெய்தார்கள்.கம்பன் விழா இசை வேள்வியில் திரு,ராஜ்குமார் பார‌தி
பாடினார். சீர்காழி சிவசிதம்பரம் வேறு ஒரு நிகழ்ச்சியில் பாடினார். இதுவரை கம்பன் கழகம்( கன்னித் தமிழ் வளர்ப்பவர்கள்) ஒரு இசை வேள்விக்கேணும் சீர்காழி சிவசிதம்பரத்தை அழைக்கவில்லை. ராஜ்குமார் பார‌தியும் ஒரே ஒரு தடவை மட்டும்தான்.


எனையோர் வழமைபோல் சுந்தரத் தெலுங்குக்கு அடிமையாகி தங்கள் தலைகளை மட்டும் ஆட்டி சபையை விட்டு மெல்ல மெல்ல வெளியேறினார்கள்

ஏன் இந்த அடிமைதனம்?

எமது முத்தமிழை ஒழிக்க பலர் பல்வேறு வடிவங்களில் அலைகிறார்கள் என்னை பொறுத்தவரை இவர்களிடமும் இருந்து எம் மொழியை காக்கவேண்டிய அவசியம் தேவை. சும்மா சினிமா படங்களின் தலைப்பை மாத்தசொல்லி போராடும் தமிழ்குடிதாங்கிகள் இதைப்பற்றி கவலைப்பட்டதாய் தெரியவில்லை. சில வேளை இது மேல்தட்டு மேல்ஜாதி மக்களின் துறை என நினைத்து சும்மா இருக்கிறார்களா?

இது பற்றியும் சற்று சிந்திபோம்.

உலக சமாதானத்துக்காக‌

உலக சமாதானத்துக்காக‌

உலகில் சாந்தியும் சமாதானமும் உருவாக இந்த கற்பனைத் திருமணங்கள் நடைபெற்றால் எப்படி இருக்கும்.

அத்வானியும் சோனியாவும், முஷாரப்பும் பெனாசீரும் அத்துடன் ஒரு ஆணை இன்னொரு ஆண் திருமணம் செய்வது என்பது சில நாடுகளில் சட்டரீதியானது என்பதால் புஷ்சும் பின்லேடனும் திருமணம் செய்து உலக மக்களின் சமாதானத்துக்காக பாடுபடப்போகிறார்கள்.

வாங்க சும்மா சிரித்துவிட்டுப்போங்க