*** வியாபாரமாகும் விளையாட்டு. ***

கன‌வான்களின் விளையாட்டு என அழைக்கப்படும் கிரிக்கெட்டில் ஆரம்ப கால‌ங்களில் பெரிதாக பணம் புழங்கவில்லை. அதுவும் ஐந்துநாள் டெஸ்ட்போட்டிகளில் கோப்பைக்குத்தான் போட்டி. பின்னர் ஒரு நாள் போட்டிகளின் ஆதிக்கமும், 83 உலகக்கோப்பைக்குப் பின்னர் இந்திய அணியின் எழுச்சியும் கிரிக்கெட்டை பணக்காரர்களின் விளையாட்டாக உருவெடுக்க வைத்தது. இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தான், இலங்கை என ஆசிய அணிகள் உலகக்கோப்பையை வென்றதன் பின்னர் உலக கிரிக்கெட் அரங்கில் வெள்ளையர்களின் விளையாட்டு ஆசியர்களின் கைகளுக்கு வந்தது. நாட்டுக்காக விளையாடிய வீரர்கள் காசுக்காக விளையாட ஆரம்பித்தார்கள். சில வருடங்களுக்கு முன்னர் இந்திய அணி வீரர்கள் விளம்பரத்தில் காட்டுகின்ற அக்கறையை விளையாட்டில் காட்டமறுத்து அடிமேல் அடிவாங்கினார்கள். மேற்கிந்தியவீரர்கள் தங்களுக்கு தகுந்த சம்பளம் இல்லை என்று போர்க்கொடிதூக்கினார்கள். லாராகூடதன் அணித்தலைவர் பதவியை இதற்காக ராஜினாமாச் செய்தார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை உலகில் பணக்கார அமைப்பாக மாறியது. இந்தியாவில் ஏனைய விளையாட்டுக்களை விட கிரிக்கெட்டுக்கு பணம் அதிகம் செலவு செய்யப்படுகின்றது(ஆதாரம் க‌டந்த இரண்டுவார நீயா? நானா?). இதனால் ஹாக்கியில் படுதோல்வி அடைந்து இம்முறை ஒலிம்பிக்கில் பங்கேற்கமுடியாத நிலை வந்தது.


க‌டந்த வருடம் இந்திய அணிக்கு உலககோப்பையில் ஏற்பட்ட படுதோல்வி விளையாட்டில் நிஜமான அக்கறையுள்ள கபில்தேவ் போன்ற சிலரை சீற்றமடைய வைத்தது. இதனால் ஐசிஎல்(இந்தியன் கிரிக்கெட் லீக்) உருவானது. ஐசிஎல்லுக்கு இந்தியாவில் மறைமுகமான தடை விதிக்கப்பட்டது. அத்துடன் பெரும்பாலும் ஐசிஎல்லில் விளையாடிய விளையாடுகின்ற ஏனைய நாட்டு வீரர்கள் உட்பட அனைவரும் மூத்தவீரர்களும் தங்கள் நாட்டு அணியிலிருந்து நீக்கப்பட்டவர்களுமாவார்கள். சிறந்த உதாரணமாக இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் மாவன் அத்தப்பத்துவைக் குறிப்பிடலாம். ஐசிஎல்லுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையால் ஐபிஎல்(இந்தியன் பிரிமியர் லீக்)உருவாக்கப்பட்டு பெரும் செலவில் ஒரு 20க்கு 20 போட்டியையும் கிரிக்கெட் வீரர்களுடன் சினிமா நடிகர்களையும் வைத்து நடாத்திமுடித்தார்கள். வீரர்கள் அடிமைகள் போல் விலைபேசப்பட்டு தங்கள் எஜமானர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டார்கள். எஜமானர்களையே எதிர்த்த சிலரும் உண்டு. (ராகுல் ராவிட் மல்லையா பனிப்போர்). டோணி விலை கூடிய வீரராக இருந்தார்.

பின்னர் சில சர்ச்சைகளுடன் ஐபிஎல் போட்டிகள் இனிதே நிகழ்ந்தன. பிரீத்தி ஜிந்தாவின் கட்டுப்பிடி வைத்தியமும் ஹர்பஜனின் அறையும் மறக்கமுடிய்தா நிகழ்வுகள் ஆகின. மீண்டும் சில நாட்களுக்கு முன்னர் வங்களாதேச வீரர்கள், பாகிஸ்தான் வீரர்கள் தங்களது கிரிக்கெட் சபைகளை எதிர்த்து கபில்தேவின் ஐபிஎல்லில் விளையாட முடிவு செய்தார்கள். இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஐசிஎல்லில் விளையாடும் வீரர்களின் தடையை நீக்கியது. இங்கிலாந்து கவுண்டிகளில் எந்த வீரரும் விளையாடமுடியும் ஆனால் ஐசிஎல்லில் விளையாடும் வீரர்களை அணியில் சேர்த்துக்கொள்ளமாட்டோம் என பல கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைகள் ஐசிசிக்கு பயந்து கூறிக்கொண்டன. ஐசிஎல்லில் விளையாடும் இலங்கை வீரர்களின் மீதான தடையை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அண்மையில் நீக்கியது ஆனாலும் மீண்டும் இந்த தடை வரலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

ஐசிஎல்லுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் ஐபிஎல்லும் செய்யும் சதிகளைப் பலரும் அறிந்தாலும் ஏனோ குரல்கொடுக்க தய‌ங்கவில்லை. பல நாடுகளில் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைகள் தனித்த அமைப்பாக இயங்கும்போது ஆசிய நாடுகளில் மட்டும் அரசியல்வாதிகளின் கைப்பிடிக்குள் அடங்கியிருப்பது வேதனைக்குரியது. அதேபோல் தெரிவுக்குழுவும் தங்களிற்க்கு பிடித்தவர்களைத் தான் தெரிவுசெய்கிறார்கள். சொதப்புகின்ற வீரர்களை மீண்டும் மீண்டும் எடுப்பார்கள், சிறந்த உதாரணம் அகர்கார். அதே நேரம் திறமையுள்ள வீரர்களுக்கு ஏனோ இடம் கொடுப்பதில்லை. ஐபிஎல்லில் திறமையாக விளையாடிய ஷான் மார்ஷ் இன்றைக்கு அவுஸ்திரேலிய அணியில் ஆரம்பவீரராக பரிமாணம் எடுத்துவிட்டார். இதனால் பாதிக்கப்பட்டது என்னவோ ஹைடன் தான். ஆனால் இந்தியவீரர்களில் பிரகாசித்த பத்ரினாத், கோணீ, யுசூப் பதான், போன்ற வீரகளுக்கு ஓரிருபோட்டிகளில் மட்டும் இடம்கொடுத்து அவர்களை மீண்டும் ஒதுக்குகின்றனர் தெரிவாளர்கள். ஐசிஎல் என்றால் என்ன ஐபிஎல் என்றால் என்ன இரண்டும் திறமைக்கு இடம் கொடுக்காமல் பணத்தினால் எவரையும் வாங்கிவிடமுடியும் என நினைக்கின்றார்கள். இரண்டுபோட்டிகளில் விளையாடும் வீரர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்காது திறமைக்கேற்ற ஊதியம் என்றால் எத்தனை வீரர்கள் போட்டி போட்டுகொண்டு இணைவார்கள். அத்துடன் திறமையாக விளையாடினாலும் அணியில் சில நந்திகள் இருக்கும்வரை இளம் வீரர்களுக்கு இடமில்லை என்பதே யதார்த்தம் .

6 கருத்துக் கூறியவர்கள்:

ஜெகதீசன் சொல்வது:

//

ஐசிஎல்லுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையும் ஐபிஎல்லும் செய்யும் சதிகளைப் பலரும் அறிந்தாலும் ஏனோ குரல்கொடுக்க தய‌ங்கவில்லை
//
ஏனோ குரல்கொடுக்கத் தயங்குகிறார்களா... இல்லை தயங்கவில்லையா?
:P

VIKNESHWARAN ADAKKALAM சொல்வது:

:(( நல்ல தகவல்

மங்களூர் சிவா சொல்வது:

நட்சத்திர வாழ்த்துக்கள்!

வந்தியத்தேவன் சொல்வது:

நன்றி ஜெகதீசன் தயங்குகிறார்கள் என இருக்கவேண்டும் தவறாக தட்டச்சாகிவிட்டது.

விக்கினேஸ்வரன், மங்களூர் சிவா வருகைக்கு நன்றிகள்.

-/பெயரிலி. சொல்வது:

பதிவுக்கு நன்றி.

-/ இலங்காத்தமிழ்ப்பதிவன்.

-/பெயரிலி. சொல்வது:

பதிவுக்கு நன்றி.

-/ இலங்காத்தமிழ்ப்பதிவன்.