தசாவதாரம் அல்லது கமல் ஒரு நுண்ணரசியல்

விடயத்துக்கு வருமுன்னர் ஒரு சின்ன டிஸ்கி: நான் ஒரு கமல் ரசிகன். படத்தை முதல் நாள் முதல் ஷோவே ஹவுஸ்புல் திரையரங்கில் பார்த்துவிட்டேன். பார்த்தபின்னர் உடனடியாக விமர்சனம் எழுதமுடியவில்லை. காரணம் முதன் முறை பார்த்தபோது எங்கும் நிறைந்த அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகனாக சாட்சாத் கமலே மனதில் நிறைந்திருந்தார். அதனால் விமர்சனம் எழுதவில்லை. இன்றைக்கு எழுதலாம் எனப் நினைத்திருந்தேன் தமிழ்மண விமர்சனங்களையும் கத்துக்குட்டிகளுக்கு காவடி எடுக்கும் தமிழ்சினிமா மற்றும் சில பீட்டர் இணையங்களின் விமர்சனங்களையும் படித்தபின்னர் விமர்சனம் எழுதும் முடிவைக் கைவிட்டுவிட்டேன். அத‌னால் க‌ம‌ல் ப‌ற்றிய‌ ஒரு நுண்ண‌ர‌சிய‌லை நுனிப்புல் மேய‌லாம் என‌ நினைக்கின்றேன்.

"உரக்கப் பேசும், உரக்க நடிக்கும் தமிழ் சினிமாவில் சற்று மென்மையாக, கற்பனையுடன், நம்பும் படி நடக்கும் கமல்ஹாசனிடம் தமிழில் நவசினிமாவில் உதயத்தை எதிர்பாக்கின்றேன்".
(சுஜாதாவின் கணையாழியின் கடைசிப்பக்கங்கள் அக்டோபர் 1976, இகாரஸ் பிரகாஸின் வலையில் மீள இட்டிருந்தார்). ந‌ன்றி கானாப்பிர‌பா,

1976 லேயே சுஜாதாவால் க‌ண்டுகொள்ள‌ப்ப‌ட்ட‌ ப‌ல‌வித‌ ப‌ரிணாம க‌ம‌ல் என்ற‌ ஒப்ப‌ற்ற‌ க‌லைஞ‌ர்(ன்) க‌லைஞானி, ப‌த்ம‌ஸ்ரீ, டாக்ட‌ர், உல‌க‌ நாய‌க‌ன் க‌ம‌லை இன்ன‌மும் ந‌ம்ம‌வ‌ர்க‌ள் க‌ண்டுகொள்ள‌வே இல்லை என்ற‌ ஆத‌ங்க‌ம் என‌க்கு ப‌ல‌ நாட்க‌ளாக‌ உண்டு. (சுஜாதா என்ன‌ பெரிய‌ ஆளா? என‌ச் சில‌ர் கேட்க‌லாம் நான் இங்கே சுஜாதாவை மேற்கோள் காட்டிய‌து அவ‌ரின் வ‌ரிக‌ளுக்கும் 1976 ஆம் ஆண்டுக்கும் ம‌ட்டுமே). இத‌ற்கான‌ கார‌ண‌ம் அல்ல‌து அரசிய‌ல் என்ன‌?

முதன்மைக் காரணம்:
கமல் ஒரு பகுத்தறிவுவாதியாக இருப்பதுதான். தமிழ் நாட்டின் சாபக்கேடு பெரும்பாலான மீடியாக்கள் ஏகாதிபத்தியவாதிகளிடம் அல்லது ஆன்மீகவாதிகளிடம் இருப்பது. (இத்தனைக்கும் மத்தியில் திராவிடக் கட்சி(கள்) ஆட்சி அமைப்பது தலைவர்களின் தலைமைத்துவமே ஒழிய வேறில்லை). இவர்கள் கமலைப் பார்க்கும் பார்வைகளும் கோணங்களும் மாறுபடும். சிலவேளை கமல் இடையிடையே இமயமலைக்குப் போய் வந்திருந்தால் பார்வை மாறியிருக்குமோ என்னவோ தெரியவில்லை. இதனால் கமலுக்கு அதிகம் பப்ளிசிட்டி கிடைப்பதில்லை. அண்மைக்கால சிறந்த உதாரணம் சிவாஜி பற்றி தினமும் செய்திபோட்ட ஊடகங்கள் தசாவதாரம் பற்றி அடக்கியே வாசித்தன. இதனால் சில குறிப்பிட்ட பிரிவினர் அல்லது சமூகத்தவர்களுக்கு கமலைப் பிடிப்பதில்லை. எப்படிப் பெரியாரை வெறுத்தார்களோ அதேபோல் கமலையும் வெறுக்கின்றார்கள்.(கடந்த சில வருட வலை மற்றும் இணைய அனுபவம்). அதனைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தும் காட்சி ஒன்று தசாவதாரத்தில் உண்டு. அசின் கமலின் தகப்பனாரின் பெயர் கேட்க அதற்க்கு கமல் ராமசாமி என பதில் அளிக்க உடனே அசின் " சீ அவனா? என்பார். படத்தில் அந்தக்காட்சி தெளிவாக விளங்காவிட்டாலும் ஆங்கில உபதலைப்பில் (that Atheist?) என அப்பட்டமாக போட்டுவிடுகிறார்கள்.

2.
கமலுக்கு எந்த ஒரு கட்சியின் சாயமும் அல்லது அரசியல் அறிவும் இல்லாதது. கலைஞரின் விழாவிலும் இருப்பார், ஜெயின் விழாவிலும் இருப்பார். எங்கேயும் இதுவரை அரசியல்பேசியதுமில்லை. இது அவருக்கு பலமாக இருந்தாலும் சிலவேளைகளில் பலவீனமுமாக இருக்கின்றது. இதற்க்கு சிறந்த உதாரணம் சூப்பர் ஸ்ரார் இவரின் பாபா படம் ஓடாததற்கான காரணங்களில் ஒன்றாக இவர் சில அரசியல்வாதிகளுடன் நடத்திய பனிப்போர்.

3
சில பகுத்தறிவுவாதிகள்: கமலின் ஜாதியை வைத்து அரசியல் நடாத்தும் சில பகுத்தறிவுவாதிகள்(லக்கி லுக் போன்றவர்கள் விதிவிலக்கு). இவர்கள் எப்போதும் கமலை ஜாதிக் கண் கொண்டுபார்ப்பதால் இது கமலுக்கு எதிர்வினையாகவே அமைகின்றது. சிலவேளைகளில் கமலும் இதற்க்கு சார்பானவர் போல் நடந்துகொள்கின்றார். சமீபத்திய உதாரணம் தசாவதாரம் இராமணுய நம்பியும் சில பாத்திரங்களில் தொனிக்கும் வைஷ்ணவப்பெயர்களும் (கோவிந்த், பல்ராம், பூவராகவன்). சுஜாதா இருந்தகாலத்தில் ஆரம்பமான படம் ஆகவே சிலசமயம் சுஜாதா இந்தப் பெயர்களைத் தெரிவிசெய்திருக்கலாம். கமல் தன்னைப் பூணூல் இல்லாத மாமிசம் உண்கின்ற பிராமணராக காட்டிக்கொண்டாலும், கமலை சந்தேகக் கண்ணோடு பார்ப்பவர்கள் தான் அதிகம். கமல் கலைஞரின் செல்லப்பிள்ளை என்பதை ஏனோ பலர் மறந்துவிடுகிறார்கள். திலீபன் என்ற வலைப்பதிவரின் ஒரு பதிப்பை இணைக்கின்றேன் படித்துப்பாருங்கள்.
கசக்கும் உண்மை

4.
வேண்டுமென்று எதிர்ப்பவர்கள்:
இந்த வகைக்குள் இராமகோபாலன் போன்றவர்கள் அடங்குவார்கள். விருமாண்டி படத்தின் தலைப்பை மாற்றச் சொன்னவர்கள் படம் எங்கும் கத்தியும் இரத்தமும் என கூவியவர்கள். அதன்பின்னர்வந்த எத்தனையோ படங்களுக்கு (அண்மையில் வெளிவந்த படங்களில் அதிக வன்முறைப்படம் போக்கிரி) எனோ கத்துவதுமில்லை கூவுவதுமில்லை. இதேபோல் தான் சமயப்பற்றாளர்கள். தசாவதாரம் படம் பெருமாளை இழிவுபடுத்துகின்றது என வழக்குப்போட்டவர்கள் படத்தைப்பார்த்தல் அங்கே இழிவாக எதுவும் இல்லை. பெருமாளே பெருமாளே என அசின் கூப்பிட்ட குரலுக்கு வெங்கடேசப்பெருமான் நிச்சயம் அசினுக்கு வைகுண்டப் பதவி கொடுக்கவேண்டும். இப்படியான சில கமலை மட்டுமே எதிர்த்து வழக்குப்போடும் மனநோயாளிகளுக்கு எதிராக யாரும் வழக்குப்போடுவதில்லை. எத்தனை மெஹா சீரியல்களிலும், படங்களிலும் மதவிடயங்களை இழிவுபடுத்துகிறார்கள், மலினப்படுத்துகிறார்கள் ஆனால் எவரும் அவற்றைச் சீண்டுவதில்லை.

5.
இறுதியாக கமல் ரசிகர்மன்றங்களை கலைத்து நற்பணி மன்றங்களாக்கி இரத்த தானம் , கண்தானம், உடல் தானம் போன்ற நற்பணிகளைச் செய்துவருகின்றார். பெரும்பாலான கமல் ரசிகர்கள்மன்றங்கள்போல் இல்லாமல் இவை வித்தியாசமாக நடந்துகொள்கின்றன. ரஜனி ரசிகர்மன்றங்களும் சில அரசியல்கட்சிகளும் போதினவோ அப்படி மோதும் ஆற்றல் கமல் மன்றங்களுக்கு இல்லை. அப்படியிருந்திருந்தால் பொய் வழக்குக்ப்போடுபவர்கள் கொஞ்சமாவது அமைதியாக இருப்பார்கள். கமல் அன்பேசிவம் நல்லசிவத்தைப்போல் இல்லாமல் வேட்டையாடு விளையாடு ராகவனைப்போல் மாறவேண்டும். இல்லையென்றால் கமலுக்கு அதிக வ்ழக்குகள் சந்தித்த நடிகன் என்ற இன்னொரு சாதனையும் சேர்ந்துவிடும்.

இப்படியான காரணங்களால் தான் கமலின் புகழ் இன்னமும் அவருக்கு கிடைக்கவேண்டியளவு கிடைக்கவில்லை. கமல் வேறு ஒரு மாநிலத்திலையோ அல்லது இன்னொரு நாட்டிலையோ பிறந்திருந்தால் இன்றைக்கு அவர் போற்றிபுகழப்பட்டிருப்பார். இதே நிலை நடிகர் திலத்துக்கும் ஏற்பட்டது. ஆனாலும் இறுதிக்காலத்தில் அவருக்கு கிடைக்கவேண்டிய மரியாதைகள் கிடைத்தன. இன்னும் கிடைக்காமல் இருக்கும் இருவர் மெல்லிசை மன்னரும், இசைஞானியும்.

கமலைப் பற்றிய நுண்ணரசியல் என நான் நினைப்பவற்றை எழுதுவிட்டேன் தசாவதாரம் பற்றிய நுண்ணரசியல் எனக்கு கிடைக்கும் பின்னூட்டங்களில் இருந்து தொடரும் சிலவேளைகளில் எதிர்மறையான பின்னூட்டங்கள் கிடைத்தால் தொடராமலும் போகலாம்.

12 கருத்துக் கூறியவர்கள்:

puduvaisiva சொல்வது:

Hi Vanthiya

you are writing all are true

yours
puduvai siva.

முரளிகண்ணன் சொல்வது:

அருமை அருமை அருமை

மனுஷம் சொல்வது:

Dear kamal fan
I am venkat here one more kamal fan. Have a look at my views in my blog..

aasayan.blogspot.com

venkat

ஜோ/Joe சொல்வது:

அனைத்தையும் வழிமொழிகிறேன்..பாராட்டுக்கள்!

பரிசல்காரன் சொல்வது:

//இராமகோபாலன் போன்றவர்கள் அடங்குவார்கள். விருமாண்டி படத்தின் தலைப்பை மாற்றச் சொன்னவர்கள் படம் எங்கும் கத்தியும் இரத்தமும் என கூவியவர்கள். அதன்பின்னர்வந்த எத்தனையோ படங்களுக்கு (அண்மையில் வெளிவந்த படங்களில் அதிக வன்முறைப்படம் போக்கிரி) எனோ கத்துவதுமில்லை கூவுவதுமில்லை//

நான் எங்கே அவர்களது வீணான திமிரினால் படத்தின் அடிநாதமான அந்தக் காட்சிகள் இல்லாது போய் விடுமோ என்று பயந்து கொண்டே இருந்தேநல்ல வேலை.. அந்தப் பெருமாள்தான் காப்பாற்றினார்!

வந்தியத்தேவன் சொல்வது:

புதுவை சிவா, இம்முறையும் முதலாவதாக வந்து கருத்திட்டதற்க்கு நன்றிகள்.
முரளிகண்ணன், ஜோ இருவருக்கும் மிக்க நன்றிகள்.

ஜில்லு அல்லது வெங்கட் உங்கள் விமர்சனம் படித்தேன். அதற்கான பதில் உங்கள் வலையில் இருக்கின்றது.

தமிழன் சொல்வது:

வணக்கம் வந்தி,
நேரமின்மை காரணமாக இப்போது தான் தங்கள் பதிவை படிக்கமுடிந்தது, நன்றி என் பதிவை தங்கள் பதிவில் இணைத்ததற்கு , தங்கள் உடைய பதிவுகளை தமிழ்மணத்தில் பார்த்து உள்ளேன். ஆனால் உள்ளே சென்று படித்தது இல்லை. என்னை விட மிக தெளிவாக அருமையாக எழுதி உள்ளிர்கள்.அடிக்கடி வரவும் நானும் உங்கள் வலைபூவிற்கு இனி அடிக்கடி வருவேன்.

ஸ்ரீ சொல்வது:

கமல் வெறியனான எனக்கும் உங்கள் அதங்கம் எல்லாம் உண்டு நண்பரே. இருக்கும் வரை அதன் அருமை இந்த மக்களுக்கு புரியவே புரியாது.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் சொல்வது:

Good article.

ரூபன் சொல்வது:

நண்பரே அத்துணை அருமையான வரிகள் கமலை பற்றி.கண்டிப்பாக வருத்தமே இளையராஜா அவர்களும்,மெல்லிசை மன்னரும்

சரவணகுமரன் சொல்வது:

//கமல் அன்பேசிவம் நல்லசிவத்தைப்போல் இல்லாமல் வேட்டையாடு விளையாடு ராகவனைப்போல் மாறவேண்டும்.

நச்...

வந்தியத்தேவன் சொல்வது:

ஸ்ரீ, சேரல், ரூபன், சரவணகுமரன் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றிகள்.