Showing posts with label கே எஸ் ரவிகுமார். Show all posts
Showing posts with label கே எஸ் ரவிகுமார். Show all posts

தசாவதாரம் அல்லது கமல் ஒரு நுண்ணரசியல் ‍ பகுதி 2

ஏற்கனவே கமலைப் பற்றி பார்த்துவிட்டோம். அதேபோல் தசாவதாரம் பற்றிய நுண்ணரசியலைப் பற்றிப் பார்க்க இருந்தேன் ஆனால் வலையுலகில் தசாவதாரம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் இன்னமும் ஓயவில்லை. பலரும் ரூம் போட்டு யோசித்து பல‌விதமாக எழுதுகிறார்கள். அதிலும் கிருஷ்ணரின் தசாவதாரத்தோடு கமலின் தசாவதாரத்தையும் ஒப்பிடுகிறார்கள். நேற்றைய ஜெயா ஹாசினி பேசும்படம் நிகழ்ச்சியிலும் சுஹாசினி(கமலின் அண்ணன் மகள்) இந்த ஒப்பீட்டை கூறியது பலதரப்பட்ட மக்கள் வலைகளை மேய்கின்றார்கள் என்ற எண்ணக்கருவை ஏற்படுத்தியது.

ஏற்கனவே எழுத்துலகிலும் வலையிலும் பிரபலமாக இருக்கும் ஜெயமோகன், எஸ்,இராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, மாலன் போன்றவர்கள் இந்தப்படத்தைப் பற்றி இதுவரை வாய் திறக்காதது ஏனோ?

த‌சாவ‌தார‌ம் ப‌ற்றிய‌ நுண்ண‌ர‌சிய‌லை எழுத‌ முய‌லும் போது இத‌னை இந்த‌ வ‌லைப்ப‌திவாள‌ர் கூறிவிட்டார், இத‌னை இவ‌ர் கூறிவிட்டார் என்ற‌ ஞாப‌க‌ம்க‌ள் வ‌ருவ‌தால் புதிதாக‌ என்ன‌ கூற‌முடியும். அத‌னால் த‌சாவ‌தார‌ம் வெற்றிக்கு என்ன‌ கார‌ண‌ம்? ?(ஆசிப் அண்ணாச்சி போல் இல்லாம‌ல் நிய‌மான‌ கார‌ண‌ங்க‌ள்).

1. கமல் என்ற உலக நாயகன்.
ஒரு வேடத்தில் நடிக்கவே மிகவும் கஸ்டப்படும்போது(சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டால் அவர்களின் ரசிகர்கள் சண்டைக்கு வருவார்கள், நிச்சயமாக சூப்பர் ஸ்ரார் இந்தப்பட்டியலில் இல்லை) அசால்டாக 10 வேடங்கள் சில வேடங்கள் ஏற்கனவே கமலின் சில படங்களில் பார்த்திருந்தாலும், மாறுபட்ட குரல்களும் உடல் அசைவுகளும் பிரமிப்பையே ஏற்படுத்துகின்றன. ( டாக்டர் புருனேயின் பதிவில் லக்கி லுக் பிளட்சரின் ஸ்டைலை ரஜனியுடன் ஒப்பிடுகின்றார்). சிலவேடங்கள் மைதா மாவு மேக்கப் என்றாலும் கமல் தன் நியமுகத்துடன் மைக்கல் மதன காமராஜனில் செய்ததுபோல் கலிபுலாகானையும் தன் நிய முகத்துடன் உயரமாக காட்டியிருக்கலாம். ப்ளைட்சர், சீன நரஹி போன்றவை எப்படியோ முகம் மாற்றவேண்டியவை. ஆனாலும் படத்தின் மிகப்பெரிய சாதனை ஒன்றுக்கு மேற்பட்ட கேரக்டர்கள் ஒரே ப்ரேமில் வருவதுதான்.

2. திரைக்கதை
கேஎஸ்ரவிகுமார், மதன், மறைந்த சுஜாதா, கிரேசிமோகன் போன்ற பலர்திரைக்கதைவிவாதத்தில் ஈடுப்பட்டிருந்திருக்கிறார்கள்(தகவல் கேஎஸ்ரவிகுமார் ஜெயா டிவி ஹாசினி பேசும்படம்). ஆனாலும் கேஎஸ்ரவிகுமார் கூறியதுபோல் திரைக்கதைக்கு கமல் தான் முழுச் சொந்தக்காரர். காரணம் கமலின் திரைக்கதைக்கு தாங்கள் ஒரு சிற்பியைப்போல் தேவையற்ற சிலவற்றையும் தேவையான சிலவற்றையும் செதுக்கியதாகவும் கூறினார். ஏற்கனவே விருமாண்டியில் இருவரின் பார்வையில் திரைக்கதை அமைத்த கமல் இதில் ஒரே வேகத்தில் அமைத்த திரைக்கதை அமைத்தது பாராட்டுக்குரியது. அதிலும் 12 நூற்றாண்டுக்காட்சிகள் தவிர்த்து பின்னர் படம் அமெரிக்காவிலிருந்து சென்னை வரை ஒரே ஓட்டமாகத்தான் ஓடுகின்றது. கமல் தன்னுடைய முன்னைய படங்களில் ஒரு அறிஜீவித்தனத்துடன் திரைக்கதை அமைத்திருப்பார், இதனால் பலருக்கு விளங்கவில்லை அந்தக் குறை இந்தப்படத்தில் இல்லை.

3. வசனம்
கமலின் வசனங்கள் பல புரட்சிகரமான அல்லது முற்போக்குத்தனமான கருத்துக்களை கொண்டிருக்கின்றது. அதிலும் பலராம் நாயுடு அடிக்கும் பஞ்ச்கள் ஓஹோ ரகம். வசனங்களை எழுதிவாசகர்களை சலிப்படைய வைக்கவிரும்பவில்லை. படத்துடன் கூடிய சில வசனங்களில் கிரேசி மோகன்தனம் இருந்தாலும், இன்னொரு பதிவர் கூறியதுபோல் சிலவேளைகளில் கிரேசிமோகன் வசன எழுதிய படங்களில் கமலின் தலையீடு இருந்திருக்கலாம். ஆதலால் கமலின் வசனங்கள் கிரேசிமோகனின் வ்சனங்கள் ஆக மாறியிருக்கலாம். சில இடங்களில் சுஜாதா சாயல் அடிக்கின்ற அதே வேளை படத்தில் அடிக்கடி அசின் பெருமாளை கூவிகூவி அழைத்தது எங்கேயோ இடிக்கின்றது.

4. ஒளிப்பதிவு
ரவிவர்மனின் காமேரா பல இடங்களில் அசரவைக்கின்றது. அதிலும் ஆரம்ப காட்சிகளிலும் சென்னையை ஏரியல் வ்யூவில் எடுத்த காட்சிகள் புதுமை. அதேபோல் கல்லைக்கண்டால் பாடலிலும் ஒரு காட்சி கோவில் வாசலிலில் இருந்து கோபுரத்திற்க்கு மேலால் சென்று அடுத்த பக்கத்தில் நிற்கும் மக்களிடையே செல்லும் ஒரே ஷாட்டில் எடுத்த காட்சியும் மனதில் நிற்கிறது. இதில் கிராபிக்ஸ் வர இடமில்லை. அத்துடன் கிராபிக்சையும் இயற்கையான ஒளிப்பதிவையும் பல இடங்களில் கலந்து எது நியம் எது கிராபிக்ஸ் என கண்டுபிடிக்கமுடியாமல் செய்தது தொழில் நுட்பத்தின் உட்சக்கட்டம்(தமிழ் சினிமாவில்).

5. இயக்குனர் கே எஸ் ரவிகுமார்.
வரலாறு என்ற வெற்றிப்படத்தைக்கொடுத்த உடனேயே இந்தப்படத்தில் தொடர்ந்து உழைத்த உழைப்புக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. பஞ்சதந்திரம், அவ்வை சண்முகி, தெனாலி என ஏற்கனவே கமலுடன் இணைந்திருந்தாலும் இப்படத்தில் கேஎஸ்சின் ஸ்டைல் இல்லாமல் வித்தியாசமாக எடுத்திருக்கிறார். இறுதிக்காட்சியில் எப்படி மேக்கப் போடுகின்றார்கள் என்பதைக் காட்டியது மட்டும் இவரின் ஸ்பெசல்.

6. ஏனையவை:
முதலில் பாடல்களை இடைச்செருகாமல் படத்தின்போக்கோடு இணைத்தது அருமை. இல்லையென்றால் படத்தின் ஓட்டம் நிச்சயம் தடைப்பட்டிருக்கும் காரணம் பாடல்கள் கேட்கும் அளவுக்கு தரமில்லாதுதான். இப்படியான ஒரு படத்தில் பாடல்கள் மெஹா ஹிட்டாக இருக்கவேண்டும் ஆனால் இங்கே எதிர்மறை அதனால்தானோ முகுந்தா முகுந்தாபாடலும் ஒரு சரணத்துடன் முடிந்துவிட்டது. உலக நாயகனே பாடலையும் இடையில் செருகாமல் முடிவில் செருகியது நல்லதொரு ஐடியா.

காமெடி ட்ராக் பெரும்பாலான கமல் படங்களுக்கு காமெடியன்கள் தேவையில்லை. அவரே சச்சின்போல் தனித்துஆடுவார். இங்கேயும் சில இடங்களில் அசினின் பார்டனர்சிப்புடன் கமல் சிக்ஸ்சர் அடித்துள்ளார். வையாபுரி, சிட்டிபாபு போன்றோர் இருந்தாலும் ஸ்கோர் பண்ணியது என்னவோ எம் எஸ் பாஸ்கர் தான். இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாததும்(சிலர் இருக்கு என்கிறார்கள் எங்கே என்பதை நான் அறியேன்ஆனால் இரட்டை அரசியல் அர்த்த வசனங்கள் நிறைய உண்டு) விவேக் இல்லாதது மிகப் பலம். சில நாட்களாக விவேக்கின் காமெடி அசிங்கங்களீன் உச்சம். (சிவாஜியில் கூட விவேகின் இடத்திற்கு வடிவேல் இருந்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்).

க‌வ‌ர்ச்சி குத்தாட்ட‌ம் இல்லாத‌து. ம‌ல்லிகாவின் ஆட்ட‌ம் குத்து வகைக்குள் அட‌ங்காத‌து. அசினை ஒரே ஒருதாவ‌ணியுட‌னே முழுப்ப‌ட‌த்திலும் (இறுதி உல‌க‌ நாய‌க‌னே ப‌ட‌ல் த‌விர‌)ப‌ய‌ன்ப‌டுத்திய‌தும் ஒரு வித்தியாசாமன முயற்சிதான். ஆனாலும் ஏனோ அசின் இன்னமும் எம் குமரன், க‌ஜ‌னி ப‌ட‌ங்க‌ள் பாதிப்பில் இருந்து விடுப‌ட‌வில்லைபோல் தெரிகின்ற‌து.இந்தப்படத்துடன் சிம்ர‌ன், ஜோதிகாவின் இட‌த்தை பிடிப்பார் என‌ எதிர்பார்த்தால் சோக‌ம் தான் மிச்ச‌ம்.

இறுதியாக உலகத்தரம் உலகத்தரம் என பலரும் கூக்குரலிடுகிறார்கள். உலகத்தரம் என்பது பார்க்கும் பார்வையில் தான் இருக்கின்றது. வெறுமனே தமிழ் சினிமாவை மட்டும் பார்த்தவனுக்கு இந்தப்படம் முற்றுமுழுதாக வித்தியாசாமாக இருக்கும். தமிழ்சினிமாவுடன் தென்னக சினிமா மற்றும் ஹிந்தி சினிமா பார்த்தவர்களுக்கு ஓரளவு வித்தியாசமாக இருக்கும். அதே நேரம் தாரே ஜமீன் பார், லகான் போல் இந்தப்படத்தை எதிர்பார்த்திருந்தால் தோல்வியே மிஞ்சும். காரணம் இது முற்றுமுழுதான ஒரு பொழுதுபோக்குப்படமே ஒழிய கலைப்படமல்ல. லகான், சக்தே இந்தியா போன்ற படங்களை கமல் எடுக்கவேண்டும் என வலியுறுத்துபவர்கள் ஏற்கனவே கமல் எடுத்த அன்பேசிவம், விருமாண்டி போன்ற நல்ல கருத்துச் சொல்லும் படங்களை மறந்தது ஏனோ. உலகத்தரத்தில் ஆங்கிலப்படங்கள் தொழில் நுட்ப ரீதியிலான போட்டியில் இருந்தாலும் இரான் படங்கள் போல் கலைப்படங்கள் தான் தரமானவை. இப்படியான படங்கள் பார்த்தவர்களால் இதனை உலகத்தரம் என ஒப்புக்கொள்ளமாட்டார்கள். வேண்டுமென்றால் இந்தியத் தரத்தில் சிறந்த தரம் இது என ஒப்புக்கொள்ளலாம்.

பொதுவாக பெரும்பாலான ஆங்கிலப்படங்கள் 1000கோடி பட்ஜெட்டில் எடுப்பவை. இவற்றுடன் 100கோடிகளுக்குள் அட்ங்கும் தமிழ்ப் படங்களை ஒப்பிடமுடியாது. யாராவது கமலுக்கு 1000கோடியும் ஷங்கர் போன்ற தொழில் நுட்பத்தில் வல்ல இயக்குனர் ஒருவரையும் கொடுங்கள் கமல் வாழ்நாள் சாதனையாக நல்லதொரு படம் கொடுப்பார். மருதநாயகம் அந்த கவலையைப்போக்கும் என நினைக்கின்றேன் எப்போது என்பதுதான் ????

தசாவதாரம் அல்லது கமல் ஒரு நுண்ணரசியல்

டிஸ்கி :கமல் மேல் காண்டு கொண்டுள்ளவர்களிடம் ஒரு கேள்வி?
கமலை ஒரு தமிழனாக நினைத்து ஏன் உங்களால் இந்த வெற்றியை ஜீரணிக்கமுடியவில்லை?
இது பற்றி லக்கி லுக்கின் பதிவு உங்கள் பார்வைக்கு

தசாவதாரம் விமர்சனங்கள் - செம காண்டு மச்சி!