பத்தாயிரம் ரூபா யாருக்கு?

பத்தாயிரம் ரூபா யாருக்கு?

கவிஞர் வைரமுத்து குமுதம் இதழில் அளித்த பதிலில் கீழ் வரும் பாடலைக் க்ண்டுபிடிப்பவருக்கு ரூபா பத்தாயிரம் பரிசு அளிக்கவுள்ளார். நீங்களும் முயற்சி செய்யலாமே.


உங்கள் எல்லாப் பாடல்களையும் ரசிகர்கள் அறிந்துவைத்திருக்கிறார்களா?

இல்லை. சேற்றில் புதைந்த முத்துக்களாய் ஆயிரமாயிரம் வரிகள் கேட்பாரற்றுப் போயிருக்கின்றன.

‘‘மூங்கிலுக்குள் நுழைகின்ற காற்று
முக்தி பெற்றுத் திரும்புதல் போல
உன் மடியில் சொல்லாய் விழுந்தவன்
கவியாய் முளைத்தெழுந்தேன்’’

இது எந்தப் பாட்டுக்குள்?

‘‘மொட்டுகள் வெடிக்கும் தேசமிது
குண்டுகள் வெடிக்கும் வாசனையோ?
மகரந்தப் பொடிகள் கலக்கும் காற்றில்
மாமிசத் தூள்கள் பறப்பதுவோ?
கடவுள் பேரில் இங்கு
போர்கள் போர்கள் எனில்
மனிதர்கள் கதைமுடிந்து போகாதோ?
மனிதர் தீர்ந்துவிடில்
வணங்க யாருமின்றிக்
கடவுள் கதைமுடிந்து போகாதோ?’’

இந்தச் சரணத்தின் பல்லவி என்ன?

‘‘விரும்பி யாரும் பிறப்பதுமில்லை
விரும்பிய பாத்திரம் கிடைப்பதுமில்லை
புளிக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணிச் சலிக்கும் மனதில் சந்தோஷமில்லை
எட்டுநாள் வாழும் பட்டாம் பூச்சி
இறப்பைப் பற்றி நினைப்பதுமில்லை
அறுபது வயது ஆயுள் கொண்டவன்
இருபது நிமிடம் வாழவுமில்லை
நாளை என்பதில் நம்பிக்கை வைத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர்த் துளியைக் கழற்றி எடுத்துப்
புன்னகை அணிந்து போரை நடத்து’’

இது எந்தப் பாடலின் சரணம்?


மூன்றுக்கும் சரியான விடை எழுதினால் பத்தாயிரம் ரூபாய் பணிவோடு பரிசு தருவேன்..

0 கருத்துக் கூறியவர்கள்: