ஒரு சிங்கமும் சில பன்றிகளும்

ஒரு சிங்கமும் சில பன்றிகளும்

இதோ வருகிறது, அதோ அருகிறது என்று ஏமாற்றியே ரஜனி ரசிகர்களை எல்லாம் முள்ளில் படுக்கையிட்டு இமையை மூடவிடாமல் வைத்திருந்த சிவாஜி "The Boss" இறுதியில் வந்தேவிட்டது. வெளியீட்டுத் திகதியைத் தொடர்ந்து பின் போட்டுப் பின்போட்டுச் செய்யும் "சூக்காட்டுதல்" என்பதே பெரும் விளம்பர உத்திதான். வரலாறு காணதா அடுக்கடுக்கான விளம்பரங்களின் பின்னால் சிவாஜி ஆற அமர வந்தே விட்டது. வெளிவந்த முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு கொழும்புப் பாடசாலைகளில் நன் மாணவ மணிகளின் வருகையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருந்ததாக தகவல். அப்போ தமிழ் நாட்டின் நிலைமை எப்படியிருந்திருக்கும் அன்பதை நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.

பால்காவடி, பன்னீர் காவடி புஸ்பக்காவடி துலாக்காவடி என போன்ற சுத்த சைவ அனுஷ்டானங்கள் ஒரு புறம், ஆடு பலியிடுதல் கோழி அடித்து விருந்து வைத்தல் போன்ற அசைவ வீர வழிபாடுகள் மறுபுறம்.. டெல்லி வரை சென்று பிளாக் மார்க்கெடில் டிக்கட் வாங்கிய " தீர்த்த யாத்திரைகள்" வேறொரு புறம்..

தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே (சில வேளைகளில் இந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே எனவும் திருத்த நேரிடலாம்) மிக அதிக அளவில் பிரிண்ட் போடப்பட்ட இந்தப் படத்தை வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தில் மட்டுமல்ல பூமிப்பந்தெங்கும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களால் உயர்த்திப்பிடிக்கப்படும் தமிழ்க்கொடி தாழ்ந்து பறக்கும் தமிழ் கூறு நல்லுலகு எங்கணும் மட்டுமல்ல கொம்யூனிசக் கிலி பிடித்த கேரளாவில் மட்டுமல்ல சுந்தரத் தெலுங்கில் பாட்டிசைக்கும் ஆந்திராவில் மட்டுமல்ல காவேரி ஊறும் கர்நாடகாவில் மட்டுமல்ல நம் அறிவுக்கும் கற்பனைக்கும் எட்டாத தூரத்துக்கும் அப்பால் பல படங்களின் வருகையை தள்ளிப்போட்ட இந்த பராசக்தி ஹீரோவை ப்ளாக்கில் டிக்கெட் எடுத்து நாய் படாப்பாடு பட்டுப் பார்க்கப்போனால்....

படமோ கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்க்கான ஹை டெக் திட்டங்களை சூப்பர் ஸ்டார் ரஜனி தனது ஸ்டைலில் நடைமுறைப்படுத்துவதைப் பற்றிப் பேசுகிறது. ஏவிஎம் , சங்கர், ஏ ஆர் ரகுமான் , சுஜாதா , ரஜனி , விவேக் முதலிய தமிழ்த் திரைப்படத் துறையின் இன்றைய உச்சனிலை வியாபாரிகள் எல்லோருமாகச் சேர்ந்து தமிழ்த் திரைப்பட ரசிகனை திறந்த வாய் மூடவிடாமல் திரையையே வெறித்துப்பார்க்க வைத்திருக்கிறார்கள்.

மனிதனுக்கு சுயபுத்தி அவசியமென்பதால் அதை பத்திரமாக வீட்டிலேயே வைத்துவிட்டுப்போனால் இந்தப் படத்தை நன்கு ரசிக்கலாம்.

ரஜனி பொய் முடி, கிலோக் கணக்கில் மேக்கப் பவுடர்கள் முதலியவற்றின் உதவியுடன் என்றும் இளமையாக இருக்கும் பரகசியத்தையும் , ஸ்ரேயா என்னும் மெழுகுப்பொம்மை வளைந்து வளைந்து ஆடுவதையும், விவேக் அடிக்கின்ற கோமாளிக் கூத்துக்களையும், கம்யூட்டர் கிராபிக்ஸ்சில் நல்ல விவேகியான சங்கர் நமக்கெல்லாம் அளக்கின்ற "கதை"களையும் ஏ ஆர் ரகுமானுக்கு ஏற்பட்டிருக்கும் தீராத வயிற்று உபாதைகளின் காரணமாக அவர் எழுப்பும் சத்தங்களையும் ... இன்னும் பலவற்றையும் ரசிக்கலாம் அவ்ற்றையிட்டும் பெருமிதப்படலாம்.

உதாரணம் 1 :
சிவாஜி கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதை குறியீடு மூலம் சங்கர் உணர்த்துகின்றார் அதாகப்பட்டது கறுப்பு ரஜனியை அசல் பேர்சியன் வெள்ளைக் கலருக்கு(ரோஸ் கலருக்கு) கிராபிக்ஸ் மூலமும் சங்கர் மாற்றுகிறார்.

உதாரணம் 2 :
சங்கர் மற்றவர் பணத்தை தண்ணீராய்(தனது சொந்த தயாரிப்புகள் மட்டும் சிறிய பட்ஜட் படங்கள்) இறைத்து படம் எடுப்பதில் பெயர் போனவர். அதையே குறியீடாக கடைசிச் சண்டைக்காட்சியில் பணம் பற பற என்று பறக்கிர காட்சியாக எடுத்துக்காட்டியிருக்கிறார௼br />.

உதாரணம் 3 :
சமீப காலங்களாக தமிழகத்தில் ஈழத்தமிழர் ஆதரவு அலை பலமாக வீசுகின்றதாம் அதில் அடிபட்டுப்போன விவேக் சுழட்டுகிறதுக்கு நேராக யாழ்ப்பாணம் போகிற கதையும் ஒன்று கதைக்கிரார். தியேட்டரில் விசில் காதைப் பிளக்கிறது.

உதாரணம் 4 :
சுஜாதவின் சுருக் நருக் நடைக்கு ( சுருக்கிய நறுக்கிய என நீட்டி முழங்குவானேன் இது சுஜாதா ஸ்டைல்) பேர் போனவர். முந்தைய ரஜனிப் படங்களில் வரும் பஞ்ச் டயலாக்கைப் போலல்லாது இப்படத்தில் தனது பங்கிற்கு அதை ஒட்ட நறுக் செய்திருக்கிறார்.

படத்தில் இரண்டு நல்ல நடிகர்கள் இருக்கிறார்கள் ஒருவர் சுமன். மற்றவர் ரஜனி ( ரகுவரன் பாவம் அவரை விட்டுவிடுவோம்). ஆனாலும் ரஜனியை பற்றி ஒரு நணபர் "ரஜனிக்கு எழுபதுகளின் கடைசியில் பிடித்த சித்தப் பிரமை இன்னமும் மாறவில்லை" என ஒற்றைவரி விமர்சனம் ஒன்றை எழுதி இருந்தார்.

மானிடர்களுக்கு பால்குடிப்( mummal Stage) பருவம் என்று ஒன்று இருக்கின்றது. ரஜனி தனது வாயை வைத்துப் பண்ணுகின்ற சேட்டைகளைப் பார்த்தால் அந்தப் பால்குடிபருவத்திலிருந்து இன்னமும் அவர் வளரவிலையோ என்று எனக்கு ஐயமாக இருக்கிறது. அவர் ஒரு பால்குடி.

சங்கரே நீங்கள் ரஜனியை வைச்சு காமெடி கீமெடி ஒண்னும் பண்ணலையே நண்பரே.

நன்றி : இருக்கிறம் சஞ்சிகை ஜூலை 2007.

பின் குறிப்பு :இம்முறை சனி மாற்றம் எனக்கு சரியில்லை என சக்திவிகடனில் இருக்கின்றது.

6 கருத்துக் கூறியவர்கள்:

Anonymous சொல்வது:

THIS IS NOT ENOUGH... OUR TAMIL FANS DESERVES IT ...

Anonymous சொல்வது:

DESERVE IT

Anonymous சொல்வது:
This comment has been removed by a blog administrator.
Anonymous சொல்வது:

Very good article always rajani is zero not a hero

வந்தியத்தேவன் சொல்வது:

அனைத்து அனானிகளுக்கும் நன்றிகள் ஒரு அனானி ஈழத்தமிழரை கெட்ட ஆங்கில வார்த்தையால் திட்டி இருப்பதால் அவரின் கருத்து வெட்டியிருக்கிறேன். விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் ரஜனி ரசிகர்களுக்கு இன்னமும் வரவில்லை.

Anonymous சொல்வது:

Honest Review. But don't you think that we (the stupid tamils!) deserve it?! Because we made a superstar out of a "sitha pramai" piddiththa Rajini! Super director out of "crass, loud, raw" shankar!! Super music director out of a guy who does not even know the abcd of backround score ARR!!!
Super production house who never ventured in the last 20 years for one decent cinem AVM!!! And to top it all, you can't even say a word honestly about them!!! So, we deserve 100 more Sivajis!!!

Sivaji - my *ss!