இந்தியா என்றாலே உடனே பலரது நினைவுக்கு வருவது கலாச்சாரம் பண்பாடு நிறைந்த நாடு என்பதேயாகும். ஆனால் கடந்த வியாழக்கிழமை ஓரினச்சேர்க்கை சரியானது என தில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்தியாவும் மேற்கத்திய நாடுகள் பட்டியலில் தன்னை இணைத்துக்கொள்ளமுயகின்றதுபோல் தெரிகின்றது.
இராமாயண காலத்திலிருந்து ஒருவனுக்கு ஒருத்தி என்பதை பெரும்பான்மையான இந்தியர்கள் கடைப்பிடித்துவருகின்றார்கள். இதனை தமிழர்கள் தம் கலாச்சாரமாகவே கட்டிக்காத்துவருகின்றார்கள். அப்படியிருக்கையில் ஒரு ஆண் ஆணுடன் சேர்ந்துவாழ்வதையும் பெண் பெண்ணுடன் சேர்ந்துவாழ்வதையும் சரியென தீர்ப்பளித்து உயர்நீதிமன்றம் இந்தியப் பண்பாட்டையே கொச்சைப்படுத்தியுள்ளது.
சில இஸ்லாமிய கிறிஸ்தவ அமைப்புகள் இதனை எதிர்க்கின்றார்கள். இதில் என்ன வேடிக்கை என்றால் ராமனை வைத்து அரசியல் நடத்தும் பிஜேபி சிவசேனா போன்ற கட்சிகள் இந்த தீர்ப்பை எதிர்த்து குரல் கொடுத்ததாக செய்திகள் காணப்படவில்லை. ஏன் ஆனந்தவிகடனோ ஜூனியர் விகடனோ கூட இது பற்றி வாய் திறக்கவேயில்லை. சர்ச்சை நாயகி குஷ்புமட்டும் இதனை வரவேற்றிருப்பதாக செய்திகள் வெளியாகின.
மேற்கத்திய நாடுகள் போல் வல்லரசாக வேண்டுமென்றால் அணுஆயுதம், சிறிய நாடுகளுடன் சண்டித்தனம், கட்டப்பஞ்சாயத்து போன்றவற்றுடன் இப்படியான நாகரீகங்களையும் இந்தியாவிற்க்குள் புகவிட்டால் வல்லரசாகிவிடும் என்ற மனப்பான்மையில் காங்கிரஸ் அரசு இருப்பதாக தெரிகின்றது.
ஏற்கனவே டேட்டிங், பப், டிஸ்கோதே கலாச்சாரத்தில் ஊறிய நாடு ஓரினச்சேர்கையாளர்களின் அனுமதியால் என்ன என்ன கஸ்டங்களைப் படப்போகின்றதோ?
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஆனந்தவிகடனில் இரண்டு தமிழ்ப் பெண்களை படத்துடன் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்ற செய்தி வெளியிட்டார்கள். ஏற்கனவே இந்தியாவில் 24 லட்சத்துக்கு மேற்பட்ட ஓரினச்சேர்க்கைப் பிரியர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதற்க்கு தடையில்லை என்பதால் இந்தத் தொகை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
எதுஎப்படியோ இந்தியாவின் பண்பாடு கலாச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக மேற்கத்திய கலாச்சாரத்திற்க்கு மாறிவருவது வேதனைக்குரியது.
Box Off Report- Aug 3
-
🅑︎🅞︎🅧︎ 🅞︎🅕︎🅕︎🅘︎🅒︎🅔︎ 🅡︎🅔︎🅟︎🅞︎🅡︎🅣︎
𝟳🅳︎🅰︎🆈︎-𝗟𝗼𝗸𝗮𝗵-🄲🄾 🄾🄻🄻🄴🄲🅃🄸🄾🄽-𝟰𝟲𝗖𝗿 (𝗔𝗽𝗽𝗿𝗼𝘅)
𝗔𝗹𝗹 𝗹𝗮𝗻𝗴𝘂𝗮𝗴𝗲. 𝗠𝗮𝗷𝗼𝗿...
1 day ago