இன்று மானாட மயிலாடவின் முதாலாம் ஆண்டுக் கொண்டாட்டங்களை கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதில் நடிகை குஷ்புவை ஒருவர் உங்களுக்கு பிடித்த நடிகை யார் எனக் கேட்டார். அதற்க்கு குஷ்பு சிம்ரன், ஜோதிகாவிற்க்குப் பின்னர் எந்த நடிகையும் ஒழுங்காக நடிக்கவில்லை என்றும் சும்மா கிளாமராக வந்துபோகின்றார்கள் எனவும் கொஞ்சம் காட்டமாகக் கூறினார்.
அதாவது தற்போதைய முன்னணி நடிகைகளான அசின், நயந்தாரா, திரிஷா, பாவனா, சினேகா, நமீதா இவர்கள் ஒருதரும் நடிகைகள் இல்லையாம்.
யார் யார் குஷ்புவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார்களோ, பொறுத்திருந்து பார்ப்போம். முன்னர் ஒரு பத்திரிகையில் நடன இயக்குனர் பிருந்தா சினேகாவிற்க்கு நடனம் ஆடவராது எனப்பேட்டி கொடுத்து சர்ச்சையாக்கினார். குஷ்புவுக்கு சர்ச்சைகள் ஒன்றும் புதிதல்ல.
நிகழ்ச்சியைத் தப்பவிட்டவர்கள் எதிர்வரும் சனிக்கிழமை இரவு இந்திய நேரம் 10 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பு செய்வார்கள் பார்த்து மகிழுங்கள். வீதியில் கூட நம்ம நடனமங்கைகள் ஆடினார்கள். என்ன கொடுமை கலா மாஸ்டர்.