தமிழகச் சகோதரர்களுக்கு ஒரு மடல்

தமிழகச் சகோதரர்களுக்கு ஒரு மடல்

வணக்கம் சகோதரர்களே

நான் பிறந்ததிலிருந்து தமிழ்நாட்டு புத்தகங்கள் திரைப்படங்கள் எனப் பல வாசித்தும் பார்த்தும் இருக்கிறேன். கடந்த சில வருடங்களாக தமிழ் சீரியல்கள் எம் கலாச்சாரத்தை சீரழிப்பது போல் அல்லது கொச்சைப் படுத்துவதுபோல் வந்துகொண்டிருக்கின்றன. திரைப்படங்கள் எமது கலாச்சாரத்தை இவ்வளவு கேவலப்படுத்தவில்லை.

நான் சீரியல்கள் பார்ப்பதில்லை ஆனாலும் வீட்டில் ஏனையோர் பார்க்கும் போது வசனங்கள் கேட்கும். சில நேரங்களில் பார்க்கவேண்டிய சூழ்நிலை நண்பர்கள் வீட்டிற்கோ அல்லது உறவினர்கள் வீட்டிற்கோ போனவேளையில் அவர்கள் சீரியல் பார்ப்பார்கள் போனதற்காக நானும் பார்க்கவேண்டிய நிர்ப்பந்தம். ஆதலால் நானும் சீரியல் ஓரளவு பார்த்தவன் என்ற வகையில்,
சகோதரர்களே உங்களிடம் சில கேள்விகள்.
1. சகல நாடகங்களிலும் யாரோ ஒரு மாமியார் மருமகளை கொடுமைப் படுத்திக் கொன்டேயிருப்பார். இன்றும் தமிழகத்தில் இந்த கொடுமை நிகழ்கிறதா?

2. பொலிஸ்சுடன் ரவுடிகளும் சேர்ந்து நல்லவர்களை தேடிச் சென்று கொடுமைசெய்வார்கள். தமிழக காவல்துறையைப் பற்றிய அவிப்பிராயம் இதனால் மாசுபடுகின்றது. இப்படியா தமிழக காவல்துறை?

3. அனேக கதாநாயகன்கள் இரண்டு மனைவி அல்லது ஒருத்தியை மற்றவருக்கு தெரியாமல் வைதிருப்பார். இப்படியா நம் தமிழக ஆண்கள் அனைவரும்?(சகல சீரியல்களிலும் யாரோ ஒரு ஆண் இரண்டு பெண்களுடன் தொடர்பிலிருப்பார்).

4. பெண் இனத்தையே வில்லியாக காட்டுவது ஏன்?

5. மிக முக்கியமான விடயம் அரசியல்வாதியாக வருபவர் எப்போதும் ரவுடிகளுடன் திரிவார். தமிழக அரசியல்வாதிகளை ஏன் இவர்கள் இப்படி கேவலமாகக் காட்டுகிறார்கள் இதனை எந்த அரசியல்வாதியும் எதிர்க்கவில்லையா?

6. கொலை செய்வது ஒருவரை எப்படி பழிவாங்குவது என விலாவாரியாகக் காட்டுவதால் இதனைப் பார்க்கும் மக்கள் அதனை பார்த்து உளவியல் ரீதியாகப் பாதிக்கப் படுகிறார்கள். இதெல்லாம் வன்மூறைகளை ஊக்குவிப்பவை ஆகாதா?

இதனை விட பல விடயங்கள் யதார்தத்தை மீறுவன. இவைகளை ஏன் எந்த தணிக்கை குழுவோ அல்லது ஏதும் பொது அமைப்போ இதுவரை கண்டிக்கவில்லை?

நன்றிகள்
மீண்டும் சந்திப்போம்

0 கருத்துக் கூறியவர்கள்: