சமுத்திர சங்கீதம் - புதுமை , காதல் , அர்ப்பணிப்பு

சில புத்தகங்களை வாசிக்கத் ஆரம்பித்தால் அதன் கடைசிப் பக்கத்தில் முற்றும் வாசிக்கும் வரை நிறுத்தமுடியாது. என் வாசிப்பு அனுபவத்தில் பெரும்பாலான சுஜாதா கதைகள், பொன்னியின் செல்வன், செங்கைஆழியானின் நாவல்கள் இந்த அனுபவத்தை தந்தவை. அந்த வகையில் அண்மையில் சமுத்திர சங்கீதம் என்ற ஒரு புதுவகையான நாவலை அனுபவித்து வாசித்திருந்தேன்.

சமுத்திர சங்கீதம் திரு.புதுயுகன் என்ற எழுத்தாளரால் எழுதப்பட்ட ஃபாண்டசி அல்லது மெஜிக்கல் ரியலிசம் (தமிழ்ப் பெயர் தெரியவில்லை) எனப்படும் வகைக்குள் அடங்கும் நாவலாகும். ஒரு அம்புலிமாமா கருவினை பல தத்துவங்களுடனும் சிந்தனைகளுடனும் புதுயுகன் விறுவிறுப்பாகக் கொடுத்திருக்கின்றார்.

ஏட்ரியல் எட்மண்ட் என்ற இங்கிலாந்து நாட்டு எழுத்தாளர் இந்தியாவைப் பற்றி எழுதுவதற்கு தன் நண்பன் தாமஸின் ஊரான கன்னியாகுமரிக்கு வருகின்றார். அந்த அழகிய கடற்கரையில் அவர் ஒரு அழகிய மச்சக் கன்னியை சந்தித்து அவளின் மேல் அல்லது அதன் மேல் மையல் கொள்கின்றார். அதே நேரம் அவரது நண்பரான தாமஸின் சகோதரி கிறிஸ்டி ஏட்ரியலின் மேல் காதல் கொள்கின்றார். இடையில் வேதாச்சலம் என்ற பெரிய மனிதர் அந்த மச்சக் கன்னியை வைத்து பணம் சம்பாதிக்க நினைத்து வில்லனாக மாறுகின்றார். ஏட்ரியல் மச்சக் கன்னியுடன் சேர்ந்தாரா? கிறிஸ்டியின் காதல் நிறைவேறியதா? வேதாச்சலம் வெற்றி கண்டாரா? போன்ற விடயங்களை சுவாரசியமாக தனது கன்னி நாவலில் புதுயுகன் படைத்திருக்கின்றார். நாவலின் முடிவு எவராலும் எதிர்பார்க்க முடியாத‌து தான் இந்த நாவலின் வெற்றிக்கு காரணம் என நான் நினைக்கின்றேன்.

புதுயுகனின் கதை சொல்லும் பாணி வித்தியாசமானது ஒவ்வொரு அத்தியாய ஆரம்பங்களிலும் முதல் அத்தியாய முடிவுடன் ஒட்டியதான ஒரு தத்துவத்தை பாத்திரத்தினூடாக விளக்கி கதையைத் தொடர்கின்றார். வசனங்கள் யாதர்த்தமானவை மட்டுமல்ல ஆழமானதும் கூட. சில இடங்களில் ஆசிரியர் தன்னுடைய மெய்ஞான அறிவைக் காட்டியிருக்கின்றார். உதாரணமாக மரணத்தினை இலகுவாக விளக்கும் இடத்தைக் குறிப்பிடலாம்.

ஏட்ரியலும் தாமசும் மீனவக் குப்பம் ஒன்றில் எதிர்பாரத விதமாக சென்றபோது அவர்களின் விருந்தோம்பலை தவிர்க்கமுடியாமல் இருந்த இடத்தில் நடந்த உரையாடல் இது ;

"ஏட்ரியல் இவர்கள் அயல்நாட்டவரின் நட்புக் கிடைத்ததில் ரொம்ப பெருமை . அதனால் தான் உன்னை விடமாட்டேன் என்கின்றார்கள். எப்படி எங்கள் இந்தியர்களின் விருந்தோம்பல்?

உங்கள் விருந்தோம்பலைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? இருநூறு ஆண்டுகளாக நாங்கள் இங்கு விருந்தாளிகளாக இருந்தோமே! அதிலிருந்து தெரியவில்லையா?

தாமஸ் என்னை முறைத்தான்"

இதில் 200 ஆண்டுகளாக ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி செய்தமையை ஏட்ரியல் விருந்தோம்பல் என்ற ரீதியில் கிண்டலாகச் சொல்ல தாமஸ் முறைத்தான் என்பது இன்றைக்கும் இந்தியர்கள் அதனை மறக்கவில்லை என்பதையே உணர்த்துகின்றது.

இப்படிப் பல இடங்களில் புதுயுகன் சிந்திக்க வைக்கின்ற வரிகளை எழுதியிருக்கின்றார். அத்துடன் பல பாத்திரங்கள் இல்லாமல் ஒரு சில பாத்திரங்களூடு கதையைக் கொண்டு சென்றதும் அவரின் ஆற்றலுக்கு சான்று. சாமுத்திரிகாதேவி என்ற பாத்திரம் சாமுத்திரிகா லட்சணம் என்ற எண்ணக் கருவில் உருவானது போல காட்டியிருப்பது சிறப்பானது.

தத்துவமசி என்கின்ற உபநிடத தத்துவத்தை அதாவது நீ எதுவாக எண்ணுகின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்" என்ற எண்ணக்கருவை இந்தக் கதையின் நாயகன் ஏட்ரியலின் பாத்திரம் உணர்த்துகின்றது. அத்துடன் இன்பம் போலியானது, இயற்கையுடன் கூடவே மனிதன் வாழவேண்டும் என்பது போன்ற தத்துவங்கள் அல்லது சிந்தனைகள் மிகவும் இலகுவாகவும் எளிதாகவும் விளக்கப்பட்டிருக்கின்றது.

"தன் இயல்பான மொழியில் பாசங்கில்லாத வெளிப்பாட்டில் ஒரு நாட்குறிப்பின் தொனியில் இந்த நாவல் நடையைப் புதுயுகன் அமைத்திருக்கின்றார். அதனால் வாசிப்பவர் மனதுக்குள் சோர்வைத் தராது சுகமாய் இடம் பிடித்து விடுகின்றது இவரின் நடை.

இவர் தெறிப்பான சிந்தனைகளுக்குச் சொந்தக்காரர் என்பதனை இந்தப் படைப்பின் வழி அறியமுடிகின்றது "

என கவிப்பேரரசு வைரமுத்து தனது வாழ்த்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

"காதலுக்குரிய கண்ணியம், கெளரவம் ஆகியவற்றை அமரர் கல்கி போலவே இவரும் தருகின்றார். அத்தியாயங்களின் எண்ணிக்கை மட்டும் கூடவில்லை கதையின் போக்கில் எதிர்பார்ப்பும் கூடுகின்றது."

என கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலத்தின் நிர்வாக அறங்காவலர் திரு.அ.வேதரத்னம் தன்னுடைய அணிந்துரையில் குறிப்பிடுகின்றார்.

லண்டன் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.அசோகன் த‌ன் அணிந்துரையில் நாவலைப் பற்றி மிகவும் சுருக்கமாக குறிப்பிட்டு இந்தக் கதை காதல் கதை நிறைந்த அனுபவத்துடன் புதுமையாக எழுதப்பட்டுள்ளது எனக் குறிப்பிடுகின்றார்.

பிரபல ஓவியர் ஜெ... என அறியப்பட்ட திரு.ஜெயராஜ் தன்னுடைய அணிந்துரையில் புதுயுகன் நம்மை ஒரு புதிய உலகத்திற்கே அழைத்துச் செல்கின்றார். அவருடைய எழுத்து நடை கடலலையின் அடுக்குத் தன்மையை மென்மையை நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றது என்கிறார்.

அவருக்கும் என்னைப்போல் முடிவு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. அவரின் ஓவியங்களும் நாவலுக்கு வலு சேர்க்கின்றது என்றால் மிகையில்லை.

ஒரு வித்தியமாசமான களத்தில் எதிர்பாரத முடிவுடன் நிறைவடைந்துள்ள இந்த நாவல் வாசித்தமை எனக்கும் ஒரு வித்தியாசமான அனுபவம் தான். இந்த நாவலை வாசித்தபின்னர் இன்னமும் மனதில் கன்னியாகுமரிக் கடற்கரையும், ஜென்னியும் ஏட்ரியலும் நிற்கின்றது.

புதுயுகன் :
திரு.டி.கே.ராமனுஜம்(ராம்) என்கின்ற புதுயுகன் "காந்தி காவியம்" புகழ் கவிராஜர் ராமானுஜனார் அவர்களின் பேரனாவார். தற்போது லண்டனிலுள்ள கல்லூரி ஒன்றில் துணை முதல்வராக‌ பணியாற்றுகின்றார். அண்மையில் நடந்த உலகத் தமிழ்ச் சொம்மொழி மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை வழங்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவர் எனது விரிவுரையாளரும் கூட.

ஒருநாள் கல்லூரி உணவு அறையில் சும்மா பேசிக்கொண்டிருக்கும் போது என்னைத் தமிழர் என அறிந்தபின்னர் இலக்கியங்கள் பற்றி எம் பேச்சு திரும்பியபோது தான் திரு.ராம் அவர்கள் எனக்கு தன்னுடைய புத்தகத்தைப் பற்றியும் தன்னைப் பற்றியும் சின்ன அறிமுகம் செய்தார். இதுவரை அவரை ஒரு தொழில்சார் நிபுணராக பார்த்தேன் இனிமேல் அவரை ஒரு இலக்கியவாதியாகவும் பார்க்கவேண்டும்.

ஆங்கிலத்திலும் நிறையப் பாண்டித்தியம் பெற்றவர் என்பதால் இதனை பலர் கோரியதுபோல் ஆங்கிலத்திலும் விரைவில் மொழிபெயர்ப்பார் என நினைக்கின்றேன்.

சமுத்திர சங்கீதம் - புதுமை காதல் அர்ப்பணிப்பு

8 கருத்துக் கூறியவர்கள்:

கன்கொன் || Kangon சொல்வது:

தகவலுக்கு நன்றி... :)))

SShathiesh-சதீஷ். சொல்வது:

அடுத்தடுத்து பதிவுகள் மாம்ஸ் சந்தோசம்

Jana சொல்வது:

Magic realism - விநோத யதார்த்தவியல் என்று கூறிக்கொள்ளமுடியும் என நினைக்கின்றேன். பெரும்பாலும் ஜெர்மனிய டச்சு எழுத்தாளர்கள் இந்த வகையிலான புனைகதைகளை பெரும்பாலும் இயற்றியுள்ளனர்.

நூல் தொடர்பான தங்களின் வாசிப்பனுபவ எழுத்துக்கள் நூலை வாசிக்கத்தூண்டுகின்றன. சமுத்திர சங்கீதம் வாசிக்கவேண்டிய புத்தகம்தான். வாசித்துவிடவேண்டும். பகிர்வுக்கு நன்றி.

யோ வொய்ஸ் (யோகா) சொல்வது:

வாசிச்சா மட்டும் போதாது, அப்படியே ஒரு பிரதியை எங்களுக்கும் அனுப்ப வேண்டும்,


நாங்களும் வாசிக்கனுமில்ல

ராம்ஜி_யாஹூ சொல்வது:

nice

Bavan சொல்வது:

when show your kolaiyuthir kaalam post oneday, and i search that Book for a long time and now only i got that and reading..

but now you wrote another book review wow looking good.. will read..

thanks for sharing Guru...:-)

kangon is a cricket analyst,
you are the book analyst...:p

Bavan சொல்வது:

when i show your kolaiyuthir kaalam post oneday, and i search that Book for a long time and now only i got that and reading..

but now you wrote another book review wow looking good.. will read..

thanks for sharing Guru...:-)

kangon is a cricket analyst,
you are the book analyst...:p

Ram சொல்வது:

Dear Mayooran [Vanthiyathevan],

Your penname is the name of one of my favourite characters as well.

Nice to read your திறனாய்வு about சமுத்திர சங்கீதம்.
I should say it has been structured and written well.
As per a good review you have introduced the plot without revealing the ending and also the author. You have also used PEC : Point, Evidence, Comment about aspects from the novel. ex: Adrieal and Thomas conversation about விருந்தோம்பல். To back these up you have included comments made on the novel by eminent people as well.
So you have done a good job – thanks and kudos!
I read about your profile too.

However there are some spelling mistakes in the article , kindly rectify them. Also the title of my job is துணை முதல்வர். I liked the way you mentioned that I am your விரிவுரையாளர் as well. On the whole, excellent.

Also you can hear my speech on magical realism rendered in the World Classical Tamil Conference 2010 as a youtube video using these links;
http://www.youtube.com/watch?v=UFxfVt_sczg&feature=player_embedded
http://www.youtube.com/watch?v=SpbrMjaukTQ&feature=related

Also you can read a coverage about me in the Indian national Newspaper ‘The Hindu’, below;

http://hindu.com/2010/07/02/stories/2010070250780200.htm

Kind Regards

Ram