tag:blogger.com,1999:blog-30827493.post7927597173252152773..comments2023-10-24T18:46:20.199+05:30Comments on என் உளறல்கள்: அடுத்த முதல்வன் யார்?வந்தியத்தேவன்http://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comBlogger69125tag:blogger.com,1999:blog-30827493.post-68409704466695130642010-06-21T02:05:40.504+05:302010-06-21T02:05:40.504+05:30இத்தனைக்கும் அன்று சுவர்ண ஒலி வானொலியை கடுமையாக வி...இத்தனைக்கும் அன்று சுவர்ண ஒலி வானொலியை கடுமையாக விமர்சித்த பல ஊடகங்களில் சக்தி வானொலியும் ஒன்று. ஆனால் இன்று சக்தி வானொலியின் நிலை என்ன? அவ்வகையில் சூரியன் எப் எம்மை பாராட்ட வேண்டும். அவர்கள் வழி எப்போதும் தனி வழியாகத்தான் இருக்கின்றது. சுவர்ண ஒலியை விமர்சித்த சில மூத்த சக்திமிக்க ஊடகவியலாளர்கள் அதே சுவர்ணஒலி ஏற்படுத்திய வர்த்தக போட்டி காரணமாக அவ்வானொலி நிறுவனங்களால் ஓரம் கட்டப்பட்டதும், பின்னர் போட்டி வானொலிகளின் காலடியில் விழுந்ததும் இங்கு நான் சொல்லி யாரும் அறிய வேண்டியதில்லை. <br /><br />அத்தோடு அதே சக்தி மிக்க அறிவிப்பாளர்கள் அன்று சுவர்ண ஒலி செய்த அதே நிகழ்ச்சித்தரத்தில்தானே இன்றும் நிகழ்ச்சி படைத்க்துக்கொண்டு இருக்கின்றார்கள். நிகழ்ச்சிகள் பெயர் தமிழில் இருந்துவிட்டால் மட்டும் போதுமா? இது கருணாநிதியின் தமிழில் பெயர்வைத்த படங்களுக்கு வரி விலக்கு அறிவிப்பு போன்றதுதான்! சரியாக சிந்தனை செய்துபாருங்கள்..................... உண்மைகள் உங்களுக்கும் புரியவரும். <br /><br />அறிவிப்பாளர்களில் பலர் இன்று வலைப்பதிவர்களாக உலா வருகின்றார்கள் நல்லது! வானொலியில் வளர்க்க முடியாத தமிழை வலையூடாக வளர்க்கின்றார்கள் போலும். அதற்காக அவர்கள் சார்ந்த வானொலிகள் மட்டும் தமிழை வளர்ப்பது போல "பம்மாத்து" காட்டுவதும் இவர்களே தமிழினத்தின் காவலர்கள் போல பதிவுகள் இடுவதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள். இவர்களுக்கு வக்காலத்து வாங்கி பிரபலமாக நினைக்கும் ஜால்ராக்களையும் இங்கு காண்கின்றேன். அத்தோடு சில அறிவிப்பாளர்களே வேறு பெயர்களில் ஒழிந்துகொண்டு பதிவுகள் இடுவதையும் காண்கின்றேன். எனவே உங்கள் ஏமாற்று வித்தைகளை ஓரம் கட்டுங்கள் உலகுக்கு உண்மையாக இருங்கள். உங்கள் வானொலிகள் யாருக்கு சாமரம் வீச ஆரம்பிக்கப்பட்டது..... அதை மறைக்க நீங்கள் ஆடிய நாடகம் என்ன? அதன் இன்றைய நிலை என்ன என்பதை விபரம் அறிந்தவர்கள் அறிவார்கள். <br /><br />ஆயிரம் கைகள் கூடி மறைத்தாலும் சூரியனை மறைத்துவிட முடியாது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்... கண்ணாடி மாளிகைக்களுக்குள் இருந்து கொண்டு கல்லெறியாதீர்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-7763795660561861042010-06-21T02:04:46.896+05:302010-06-21T02:04:46.896+05:30இங்கு வானொலிகள் பற்றியும் அதில் பேசப்படும் தமிழ் ப...இங்கு வானொலிகள் பற்றியும் அதில் பேசப்படும் தமிழ் பற்றியும் பலர் பலவித கருத்துக்களையும் எழுதியிருக்கின்றார்கள் வரவேற்கத்தக்க கருத்துக்கள் காணப்படுகின்றன்.வரவேற்கின்றேன்.......... ஆனால் வானொலிபற்றியும் அதுசார்பான கண்ணோட்டத்தையும் இங்குள்ளவர்கள் அனைவருமே ஒரே நோக்கில் மட்டும் பார்ப்பது எனக்கு கவலையளிக்கின்ற ஒரு விடயமாக படுகின்றது.<br /><br />இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தால் தேசிய சேவை என்று ஒரு ஒலிபரப்பு ஒலிபரப்பப்படுகிறது உள்ளத்தில் கை வைத்துச்சொல்லுங்கள் நீங்கள் குற்றாம் சாட்டும் குறித்த வானொலிகளை நீங்கள் கேட்கும் நேரம் அதிகமா? அல்லது நீங்கள் எதிர்பார்க்கும் அத்தனை தரங்களையும் உள்ளடக்கி நிகழ்ச்சி நடத்தும் தேசிய சேவையை நீங்கள் கேட்கும் நேரம் அதிகமா? இங்குள்ளவர்கள் பலருக்கு தேசிய சேவை என்று ஒன்று இருப்பதாக தெரியுமோ என்னமோ?<br /><br />காய்த்த மரத்துக்குத்தான் கல்லடி என்பதுபோல ஜனரஞ்சக வானொலி எதுவோ அதுபற்றியதாகத்தான் உங்களனைவரதும் கவலையும் இருக்கின்றது. அவ்வாரான நிகழ்ச்சிகளை கேட்பதை தவிருங்கள். நல்ல வானொலிகளை கேளுங்கள். யார் உங்களை தடுத்தார்கள்? அவர்களை திருத்த நீங்கள் யார்? உங்களது விமர்சனங்கள் அவர்களை ஒன்றும் செய்துவிடப்போவதில்லை. மாறாக அவர்களை பிரபல்யப்படுத்துவதை தவிர.<br /><br />உங்களைப்போன்றவர்களை கடுப்பேத்தேயே பிரபலமான ஊடகங்கள் பல இருக்கின்றன. அவர்களுக்கு நன்கு தெரியும். எப்படி நிகழ்ச்சி செய்தால் எப்படி விமர்சனம் வரும்.... அந்த விமர்சனங்களை சரிபார்க்க எத்தனை புதியவர்கள் அந்த வானொலியை கேட்பார்கள் என்பதையெல்லாம் புள்ளிவிபரக்கணக்காகவே வைத்திருக்கின்றார்கள் வானொலி நிலையத்தார். <br /><br />அடுத்து உங்களனைவரதும் பார்வை ஒரு பிரதேசவாதியான தமிழைப்பேசினால் அது தான் தூய தமிழ் என்பது போல் உள்ளது. அது நீங்கள் அனைவரும் பிறந்த மண் மீது நீங்கள் கொண்ட பற்றாக இருக்கலாம் அதை வானொலிகள் மீது திணிக்க நினைப்பது உங்கள் பிரதேசவாத மேலாண்மைப்போக்கையே காட்டுகின்றது. <br /><br />இன்று வானொலிகளை அதிகம் கேட்பவர்கள் உங்களைப்போன்ற வலைப்பதிவர்கள் அல்ல. நகைக்கடைகளிலும் ஹோட்டல்களிலும் வேலை செய்யும் சராசரி மலையக இளைஞர்கள். தோட்டத்தொழிலாளிகள் மற்றும் சாதாரண தரத்து பாமர மக்கள் எனவே வானொலிகள் அவர்களை நோக்காக வைத்து நிகழ்ச்சி செய்வதில் என்ன தப்பை காண்கின்றீர்கள்? <br /><br />வானொலிகள் நீங்கள் குற்றம் சாட்ட ஒன்றும் பொதுச்சொத்தல்ல..... அவை 100% இலாப நோக்கை கருத்தில் கொண்டு பெரும்பாலான வானொலிகள் சகோதர மொழி பேசுபவர்களது நிர்வாகத்தில் நடத்தப்படுபவை. எனவே அவர்களிடம் தமிழை எதிர்பார்ப்பது உங்கள் தப்பும் முட்டாள்தனமும் ஏமாளித்தனத்தையுமே காட்டுகின்றது. அத்தோடு பிரபலமான ஒன்றைப்பற்றி பேசியும் விமர்சித்தும் உங்களை பிரபலப்படுத்திக்கொள்ள முனையும் உங்களது குறுக்குப்புத்தியையுமே காட்டுகின்றது. <br /><br />தமிழர்களது நிர்வாகத்தில் இயங்கும் ஷக்தி வானொலியும் உங்களைப்போன்றவர்களது குற்றச்சாட்டுக்களனைத்தும் புரம் தள்ளிவிட்டு இன்று அன்று சுவர்ணஒலி வானொலி செய்ததாக நீங்கள் அனைவரும் குற்றம் சாட்டும் அதே இந்திய அறிவிப்பாளர்களையே நம்பி நிகழ்ச்சி நடத்துகின்றது. வியாபார ரீதியாக அது அவர்களுக்குன் வெற்றியை தேடித்தந்திருப்பது வேறு விடயம். அங்கு குறித்த இந்திய அறிவிப்பாளர் செய்யும் நிகழ்ச்சி தான் அவ்வானொலியின் முதல்தர நிகழ்ச்சி என்பது உங்களில் எத்தனை பேருக்குத்தெரியும்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-90501188053641695512009-10-25T00:27:04.022+05:302009-10-25T00:27:04.022+05:30//M.Kuruparan said...
நல்ல பதிவு நண்பரே....//
நன்...//M.Kuruparan said...<br />நல்ல பதிவு நண்பரே....//<br /><br />நன்றிகள் நண்பரே.<br /><br />//தமிழை கொலை செய்வதில் எம் பல அறிவிப்பாளர்களுக்கு அப்படியொரு பிரியம். //<br /><br />சிலவேளை இது ஒரு வித்தியாசமான நோயோ தெரியவில்லை, தமிழ்க் கொலை செய்தால் பலர் தம்மைப் பற்றி அடிக்கடி பேசுவார்கள் என்ற போபியாவோ தெரியாது. மருத்துவர்கள் விளக்கம் கொடுத்தால் புண்ணியம் கிடைக்கும்.<br /><br />//காலங்காத்தால ரிவிய போட்டா தலைவிரி கோலமா நின்று "குட்மோர்ணிங் சிறிலங்கா' என்று சொல்லுறத கேட்டு இன்னுமொருக்கா காலை கடனை கழித்தால் என்ன என்ற உணர்வுகளை பெற்றவனில் நானும் ஒருவன். //<br /><br />காலையில் டிஸ்கவரி, விளையாட்டு அல்லது தொலைக்காட்சிகளில் பாடல் ஒளிபரப்பானால் பாருங்கள். சிலவேளை குத்துப்பாட்டு ஒளிபரப்பாக்கி வதைப்பார்கள்.<br /><br />//அதைவிட கலாச்சாரம் இல்லாத அலங்காரங்கள் வேறு. //<br /><br />அலங்காரங்களை விட இவர்கள் நடந்துகொள்ளும் சில விடயங்களும் முகம் சுழிக்கவைக்கும்.<br /><br />//சகோதர இன தொலைக்காட்டிகளில் கலாச்சாரம் இல்லாமல் தானே காட்டுகிறார்கள் என்று வாதிடலாம் ஆனால் அது கிட்டத்தட்ட அவர்களது 'வியாபார தந்திரம்' என்று கூட சொல்லலாம் ஏனொனில் சிங்கள அரசி ஒருவருடை தவறான நடத்தையை 'போராட்ட தந்திரம்' என்று மகாவம்சம் வாதிட்டிருப்பது யாவரும் அறிந்ததே. ஆனால் எமக்கப்படியில்லையே இதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். //<br /><br />சிலர் இதனைத் தான் சொல்கின்றார்கள் அவர்கள் அப்படிச் செய்கின்றார்களே அப்படி உடுக்கின்றார்களே என ஆனால் அவர்கள் தங்கள் மொழியைக் கொலை செய்வதில்லை.<br /><br />//சக்தியின் "கிறாண்ட் மாஸ்டர்" நிகழ்ச்சி. எவ்வளவு பிரயோசனமான நிகழ்ச்சி என்றாலும் தமிழ்மக்களை சென்றடைய கூடியவாறு எவ்வளவு தயாரிக்கப்பட்டுள்ளது என்பதே என் ஜயப்பாடு. //<br /><br />கிராண்ட் மாஸ்டரிலும் நடுவர்களுக்குத் தெரிந்த பிரபலங்கள் மட்டும் அனுமதிக்க படுவார்கள். நானும் இந்த நிகழ்ச்சியை பார்த்து பங்கு பற்றி ஏமாந்தவன்.<br /><br />//சனல் ஜ.. தென்றல் என்பன தமிழை எவ்வளவு கொல்லமுடியுமோ அவ்வளவுக்கும் முயற்சி செய்கின்றன என்றே படுகிறது. சனல் ஜ யின் பத்திரிகை செய்திகள் வாசிக்கும் பகுதி மிக மோசம்....//<br /><br />பத்திரிகைச் செய்திகளில் சிலர் செய்தியை விமர்சனமும் செய்வார்கள். அதாவது அவர் சார்ந்த கட்சி என்றால் தூக்கிவைத்து செய்தியை வாசித்து தன் கருத்தையும் சொல்லுவார்.<br /><br />// எவர் எதை செய்தாலும் தமிழை கொல்லாமல் செய்தால் சந்தோசம் தான்.//<br /><br />அதைத்தான் பலரும் கேட்கின்றார்கள். பொறுத்திருந்துபார்ப்போம்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-67874846541772158902009-10-25T00:17:19.223+05:302009-10-25T00:17:19.223+05:30// Subankan said...
அண்ணா, இப்போதுதான் சத்தி சூப்ப...// Subankan said...<br />அண்ணா, இப்போதுதான் சத்தி சூப்பர்ஸ்டார் நிகழ்ச்சி தற்செயலாக முதன்முதலாக பார்க்கக்கிடைத்தது. நிக.ச்சி நடத்துபவரின் நடத்தையைப் பார்த்து சிரித்துச் சிரித்து சாப்பாடு புரைக்கேறியதுதான் மிச்சம். பாவம் போட்டியாளர்கள்.//<br /><br />இத்தால் சகலருக்கும் அறியத் தருவது என்னவென்றால் சாப்பிடும்போது தயவு செய்தி சில நிகழ்ச்சிகளைப் பாராதீர்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-50421168378787142032009-10-25T00:15:20.781+05:302009-10-25T00:15:20.781+05:30//என்.கே.அஷோக்பரன் said...
அண்மையில் சக்தி பண்பலை ...//என்.கே.அஷோக்பரன் said...<br />அண்மையில் சக்தி பண்பலை நடாத்திய “சக்தி சுப்பர் வொய்ஸஸ்“ போட்டியில் நானும் பங்குபற்றியிருந்தேன் //<br /><br />வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள் அசோக்பரன். <br /><br />//பங்குபற்றப் போன கதை வில்லங்கமானது - வித்தியாசமானது - அதை இந்த பகிரங்க மேடையில் பலரின் தனித்தன்மை கருதி சொல்லமுடியவில்லை - மன்னிக்கவும்.<br /><br />இதனால் தான் நானும் கிராண்ட் மாஸ்டரில் ஏமாற்றப்பட்டதை எழுதவில்லை. <br /><br /><br />//அந்த ரேட்டிங் முறையைப் பற்றி பேச்சு வலுக்கும் போது மக்கள் எதை விரும்புகிறார்களோ நாங்களும் அதையே கொடுக்கின்றோம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. //<br /><br />ஒரு நிறுவனம் சில தனியார் வானொலிகளின் சிறந்த நிகழ்ச்சிகளைப் பற்றி எழுந்தமானமாக சிலரிடம் கேள்விக்கொத்துகள் மூலம் ஒரு தரவு எடுத்த போது பலர் சொன்ன விடயம் இதுதான் பிரபலமான நிக்ழ்ச்சி தரமற்றது என்றாலும் அந்த நிகழ்ச்சியின் பெயருக்காக பார்க்கின்றார்களாம். <br /><br />//ஒரு நல்ல சிறந்த அறிவிப்பாளனுக்கு அழகு தனக்கேற்ப மககளின் இரசனையை மாற்றுவதேயன்றி மக்களின் இரசனைக் கேற்ப தன்னை மாற்றிக்கொள்வதல்ல என்றேன் //<br /><br />நிச்சயமாக சிறந்த உதாரணம் பி.எச்.அப்துல் ஹமீது அவர்கள் அவர் இந்தியாவில் செய்யும் எந்த நிகழ்ச்சிகளிலும் தன் பாணியை மாற்றுவதில்லை. பலர் அவரை ரசிக்கத் தான் செய்கின்றார்கள். <br /><br />//இவர்கள் வர்க்க நோக்கத்துக்காக தங்கள் தார்மீகப் பொறுப்புக்களையும் விற்றுவிடுவது மிகவும் கவலையளிக்கிறது. //<br /><br />இதனைத்தான் எல்லோரும் சொல்கின்றார்கள் ஆனால் சில அறிவுஜீவிகள் மட்டும் அவன் தன் வியாபாரத்திறாக என்ன செய்தாலும் நீங்கள் பொறுத்துக்கொள்ளததான் வேண்டும் என்கிறார்கள். <br /><br />//அடுத்ததாக இந்தியத் தமிழின் ஆதிக்கம். - இது எல்லா வானொலிகளையும் விட சக்தியில் அதிகம் இருக்கிறது காரணம் சக்தி பண்பலையின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர், வாரஇறுதி நிகழ்ச்சிப் பொறுப்பாளர் உட்பட சில அறிவிப்பாளர்கள் இந்தியர்களே - இதைப்பார்த்தபோது இலங்கையில் திறமைக்குப் பஞ்சமோ எனத் தான் எனக்கு எண்ணத்தோன்றுகிறது. //<br /><br />இலங்கையில் பஞ்சமில்லை அல்ல, இவர்களுக்கு அவர்களின் புகழையும் பிரபலத்தையும் வைத்து வியாபாரம் செய்யத் தெரியும். இதனால் மிகவும் திறமையானவர்கள் மறைக்கப்படுகின்றார்கள். <br /><br />//சரி சக்தியை பார்த்தாச்சு - மற்றவை மட்டும் என்ன மேலா? சூரியன் முன்பிருந்த தரத்தில் இப்போது இல்லை - இங்கும் இந்தியத் தமிழ் வாடை. தென்றல் இந்தியத்தமிழுக்கும், நவீன பண்பலைப் பாணிக்குமு் கிட்டத்தட்ட முழுவதுமாக மாறிவிட்டது, வெற்றியும் கொஞ்சம் இந்தியச் சாயலில் நனைகிறது - அதுவும் அந்த பகல்பந்தி நிகழ்ச்சி கேட்கச்சகிக்கவில்லை.//<br /><br />உங்கள் கருத்துகளை சம்பந்தப்பட்டவர்கள் கவனத்தில் எடுப்பார்கள் என நினைக்கின்றேன்.<br /><br />//மாற்றங்கள் தாமாக நடப்பதில்லை - நாமாக ஏற்படுத்துவதுதான் - அன்புள்ள ஊடகத்துறை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து இவற்றைக் கவனத்திற் கொண்டு கொஞ்சம் சிந்தியுங்கள்.//<br /><br />பொறுத்திருந்துபார்ப்போம். <br /><br />உங்கள் நீண்ட பின்னூட்டத்திற்க்கு நன்றிகள் இதனை நீங்கள் ஒரு தனிப்பதிவாகவே இட்டிருக்கலாம்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-449117979314032312009-10-25T00:00:04.976+05:302009-10-25T00:00:04.976+05:30//ஆதித்தன் said...
அருமையான விமர்சனம் வந்தி!//
நன...//ஆதித்தன் said...<br />அருமையான விமர்சனம் வந்தி!//<br /><br />நன்றிகள் ஆதித்தன், உங்களுக்கு இன்னொருதடவை நன்றிகள் காரணம் மூஞ்சிப் புத்தகத்தில் இந்தப் பதிவின் தொடுப்பை இணைத்தமைக்கு. <br /><br />//எவ்வளவு தரம் எழுதினாலும் அவர்கள் திருந்தமாட்டார்கள் என்பதால் எழுதுவதை நிறுத்துவது பற்றி எனக்கு உடன்பாடு இல்லை. திருப்பி திருப்பி பிழையை சொன்னால்தான் இதைப்பற்றிய தெளிவு மக்களுக்காவது போய்ச்சேரும். //<br /><br /> நீங்கள் சொல்வதும் சரிதான் இவர்களை என்னவாவது செய்யட்டும் என விட்டுவிட்டுப்போககூடாது அடிக்கடி தவறுகளைச் சுட்டிக்காட்டவேண்டும் இல்லையென்றால் சில வரலாற்றுப் பிழைகளுக்கு காரணமானவர்களாக அனைவரும் மாறவேண்டிவரும். ஆனாலும் மக்கள் தெளிவாகத் தான் இருக்கின்றார்கள்.<br /><br />//அறிவிப்பாளர்களுக்கும் நிகழ்ச்சித்தயாரிபாளர்களுக்கும் பின்னால் இருந்து ஏதோ ஒரு வலிமையான மேல்மட்டச் சக்தி தான், இப்படி ஆங்கிலம் கலந்த தமிழை பிரயோகிக்கச்சொல்லி உந்துகிறது என்பதையும் மறுக்க முடியாது.//<br /><br />நிச்சயமாக அந்த சக்தி அந்நியசக்தி என அறியக்கூடியதாக இருக்கின்றது.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-33063613593260117772009-10-24T23:54:49.439+05:302009-10-24T23:54:49.439+05:30//சந்ரு said...
நல்ல இடுகை எப்போதோ எதிர்பார்த்த இட...//சந்ரு said...<br />நல்ல இடுகை எப்போதோ எதிர்பார்த்த இடுகை. நன்றாக எழுதப்பட்டிருக்கின்றது. நீங்கள் என்ன சொன்னாலும் எங்கள் விருப்பம்போல் நடப்பதில் நாங்கள்தான் முதல்வன் என்று சொல்லும் ஊடகங்கள்தான் இன்று இலங்கையில் அதிகம். //<br /><br />இன்னொரு ஊடகவியளாளரிடம் இருந்து கிடைத்த பாராட்டுகளுக்கு நன்றிகள் சந்ரு. ஏற்கனவே முதலில் எழுதிய இடுகையில் சில விடயங்கள் விடுபட்டிருந்தன அதனால் தான் இந்த இன்னொரு இடுகை.<br /><br />//அவர்கள் இலவசமாக சேவை வழங்குகின்றோம் என்பதற்காக எதனையும் செய்ய முடியாதல்லவா? தமிழ் கொலை செய்யப்படும்போது தட்டிக்கேட்க, சுட்டிக்காட்ட வேண்டியது எமது தமிழர் ஒவ்வொருவரது கடமை. //<br /><br />நிச்சயமாக தாய்மொழியை அழியவிடாமல் இருப்பது ஒவ்வொருவரினதும் கடமை. <br /><br />//இன்றைய அறிவிப்பாளர்கள் நல்ல தமிழ் அறிவிப்பாளர்களாக இருந்து எமது தமிழின் பெருமையினை உலகுக்கு எடுத்துச் சென்ற எமது மூத்த அறிவிப்பாளர்களின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்பதே எனது அவா. //<br /><br />நான் குறிப்பிட்டது போல் ஒரு சிலர் அந்த இடங்களுக்கு சென்றுகொண்டிருக்கின்றார்கள் ஆனால் எண்ணிக்கையில் மிகவும் குறைவு என்பது கவலைக்குரிய விடயம். <br /><br />//உலகம் முழுவதும் இலங்கை அறிவிப்பாளர்கள் என்றாலே ஒரு சிறப்பு இருக்கின்றது அதனை இன்றைய அறிவிப்பாளர்கள் காப்பாற்ற வேண்டும். //<br /><br />அதே தான், அண்மையில் கூட ஒரு இளம் அறிவிப்பாளருக்கு இந்தியாவில் ஒரு நேரடி நிகழ்ச்சியைத் தொகுத்தளிக்கும் வாய்ப்பு வந்தது சில தடங்கல்களால் அவரினால் செல்லமுடியவில்லை.<br /><br />//இன்று தாங்கள் விடுகின்ற பிழைகளை சுட்டிக்காட்டும்போது எத்தனை அறிவிப்பாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஒரு சிலரே.//<br /><br />கேள்வியை நீங்களே கேட்டு பதிலையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-18615437525664612952009-10-24T23:39:47.238+05:302009-10-24T23:39:47.238+05:30// Balavasakan said...
வந்தி அண்ணே வணக்கம் ..........// Balavasakan said...<br />வந்தி அண்ணே வணக்கம் ...........!உங்கட பார்வை நடுநிலையாக இருக்கலாம் ஆனால் என்னை பொறுத்தவரை ஒரே ஒரு முதல்வன்தான் நம்ம ARV எங்க இருக்கிறாரோ அதுதான் முதல்வன் அவர்தான் நான் அறிய முதன் முதலில் வானொலி நிக்கழ்சிகளை பொழுதுபோக்கு என்பதை தாண்டி நல்ல நாலு விடயங்கள் கிடைக்கும் ஒன்றாக மாற்றியவர் <br />அதாவது பாட்டு கேட்பதற்கும் அரட்டை அடிப்பதற்கு மட்டும் தான் வானொலி என்பதை மாற்றியவர் அவருடைய முத்துகள் பாத்து கேட்டு கவிதை எழுத தொடங்கியவர்கள் பலர் இதயோ ஒரு புகழ்ச்சிக்காக சொல்லவில்லை உண்மை அதுதான் ...........//<br /><br />பாலவாசகன் உங்கள் கருத்துகளுக்கு நன்றி.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-67624567256690999432009-10-24T23:35:32.567+05:302009-10-24T23:35:32.567+05:30நல்ல பதிவு நண்பரே....
தமிழை கொலை செய்வதில் எம் பல...நல்ல பதிவு நண்பரே....<br />தமிழை கொலை செய்வதில் எம் பல அறிவிப்பாளர்களுக்கு அப்படியொரு பிரியம். காலங்காத்தால ரிவிய போட்டா தலைவிரி கோலமா நின்று "குட்மோர்ணிங் சிறிலங்கா' என்று சொல்லுறத கேட்டு இன்னுமொருக்கா காலை கடனை கழித்தால் என்ன என்ற உணர்வுகளை பெற்றவனில் நானும் ஒருவன். அதைவிட கலாச்சாரம் இல்லாத அலங்காரங்கள் வேறு. சகோதர இன தொலைக்காட்டிகளில் கலாச்சாரம் இல்லாமல் தானே காட்டுகிறார்கள் என்று வாதிடலாம் ஆனால் அது கிட்டத்தட்ட அவர்களது 'வியாபார தந்திரம்' என்று கூட சொல்லலாம் ஏனொனில் சிங்கள அரசி ஒருவருடை தவறான நடத்தையை 'போராட்ட தந்திரம்' என்று மகாவம்சம் வாதிட்டிருப்பது யாவரும் அறிந்ததே. ஆனால் எமக்கப்படியில்லையே இதை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். <br /><br />சக்தியின் "கிறாண்ட் மாஸ்டர்" நிகழ்ச்சி. எவ்வளவு பிரயோசனமான நிகழ்ச்சி என்றாலும் தமிழ்மக்களை சென்றடைய கூடியவாறு எவ்வளவு தயாரிக்கப்பட்டுள்ளது என்பதே என் ஜயப்பாடு. <br /><br />சனல் ஜ.. தென்றல் என்பன தமிழை எவ்வளவு கொல்லமுடியுமோ அவ்வளவுக்கும் முயற்சி செய்கின்றன என்றே படுகிறது. சனல் ஜ யின் பத்திரிகை செய்திகள் வாசிக்கும் பகுதி மிக மோசம்....<br /><br />சூரியன் மற்றும் வெற்றி வானொலிகள் நன்றாக தான் உள்ளன. எவர் எதை செய்தாலும் தமிழை கொல்லாமல் செய்தால் சந்தோசம் தான்.மா.குருபரன்https://www.blogger.com/profile/16509074425259473713noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-6939822396204646842009-10-24T23:32:04.106+05:302009-10-24T23:32:04.106+05:30//புல்லட்டின் ரசிகன் said...
”உன்னுடைய தாயை இன்னொ...//புல்லட்டின் ரசிகன் said...<br /><br />”உன்னுடைய தாயை இன்னொருவன் பிழைபிழையாக சொன்னால் ப்ரீயாத்தானே சொல்லுறான் எண்டு பொறுத்துக்கொண்டிருக்கப்போவதில்லை அதே பொலத்தான் தம்பி இதுவும்”//<br /><br />நல்லதொரு உவமை, தாயும் மொழியும் ஒன்று அதனால் தான் தாய்மொழி என்பார்கள். <br /><br />//காற்றில் கலக்கும் விஷம் போன்றது இது.. போதை மருந்துக்குட்பட்டவனை அதனின்றும் மீட்பது ஒரு தூய மனிதனின் கடமை... ””//<br /><br />இதனால் தான் ஒரு இனத்தை அழிக்கவேண்டும் என்றால் முதலில் அவனின் மொழியை அழி என்கிறார்கள் சர்வாதிகாரிகள்.<br /><br />//புல்லட்டிடம் இருந்து இப்படியான பதில்கள் எதிர்பார்க்கவில்லை.//<br /><br />புல்லட் இன்னொரு கோணத்தில் சிந்தித்திருக்கின்றாரே ஒழிய அவர் என்றைக்கும் தப்பான வழியில் போனது கிடையாது.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-50354708062930542182009-10-24T23:22:50.726+05:302009-10-24T23:22:50.726+05:30// இறக்குவானை நிர்ஷன் said...
குறிப்பிடத்தக்க நல்ல...// இறக்குவானை நிர்ஷன் said...<br />குறிப்பிடத்தக்க நல்ல மாற்றங்கள் இலத்திரனியல் ஊடகங்களில் இடம்பெற்றிருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் சமுதாயப் பங்கு என்று நோக்கும்போது பல விடங்கள் ஊடகங்களினால் தவறவிடப்பட்டுள்ளன.//<br /><br />நிச்சயமாக மிகச் சில நிகழ்ச்சிகள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தித்தான் உள்ளன. அதே நேரம் தொழில்நுட்ப ரீதியாக சிறந்த முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கின்றது/<br /><br />///தலைவிரிகோலம் என்பதற்கு பின்புலத்தில் உயரதிகாரிகள் தான் காரணகர்த்தாக்கள். ஆங்கில மோகம் தான் இதற்குக் காரணம். ஆங்கிலத்தில் பேசுவது, ஆங்கிலத்தை உண்ணுவது, ஆங்கிலத்தையே துப்புவதன் பின்விளைவுதான் இது. தவிர்க்க முடியாததாலும் தாங்கள் பெரும்பாலும் விரும்புவதாலும் சிலர் இதைப் பின்பற்றுகிறார்கள்.//<br /><br />இதே கருத்தைப் பலர் இங்கேயும் என்னிடம் நேரிலும் சொல்லியிருக்கின்றார்கள். இவர்களின் மேலதிகாரிகள் தமிழர் அல்லாதது அல்லது இலங்கையைச் சேர்ந்தவர் அல்லாததுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆங்கிலம் கட்டாயம் தேவை, ஆனால் தமிழ்த் தொலைக்காட்சியில் ஏன் ஆங்கிலம். <br /><br />//தனிப்பட்ட ரீதியில் அந்த அறிவிப்பாளர்களின் நற்பெயர் களங்கப்படுகிறது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். “ஐயோ இந்த டீவியா ஒரே அறுவல் தான் மாத்துங்கப்பா” என்ற குரல் அடிக்கடி வீடுகளில் ஒலிப்பதை நான் கேட்டிருக்கிறேன்.//<br /><br />நிச்சயமாக நானும் கண்டிருக்கின்றேன், நேரில் அழகாக தமிழை உச்சரிக்கும் அறிவிப்பாளர்கள் தாம் சார்ந்த ஊடகங்களில் ஒரு ஸ்டைலான டமிழ் பேசுவார்கள். இதனால் அவர்களின் பெயர் கெடுவதுடன் பலராலும் வெறுக்கப்படுகின்றனர்.<br /><br />//குடும்பத் தலைவியர் மாத்திரம் தொலைக்காட்சி பார்ப்பதில்லை. எத்தனையோ வேலைகளுக்கு மத்தியிலும் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மாலையில் வீடுவந்துசேரும் குடும்பத் தலைவர்கள், இளைஞர்களுக்கு காத்திரமான நிகழ்ச்சி படைக்கப்படுகின்றனவா? அவர்களுக்கு மேலும் தலையிடியாய் அமையும் அறுவல்களாக இருந்தால் எப்படி விரும்புவார்கள்? எத்தனையோ புதிய விடயங்களை தொலைக்காட்சிகளில் பகிரலாம். நாளுக்கு நாள் எத்தனையோ மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை பயனுள்ள தகவல்களைக் கொண்டு மாற்றியமைக்கலாம்.//<br /><br />நடக்குமா? நடந்தால் நல்லது.<br /><br />//இதற்கெல்லாம் புதிய திட்டமிடல்கள் அவசியம். வெறும் இந்திய தொலைக்காட்சிகளை மையமாக வைத்துக்கொண்டு பார்ப்பதால் குறுகிய வட்டத்துக்குள்ளேயே நாம் இருந்துகொண்டிருக்கிறோம்.//<br /><br />உண்மை உண்மை. ஆனால் அவர்கள் புதிது புதிதாக நிகழ்ச்சிகள் படைக்கின்றார்கள் அங்கே ஆறின கஞ்சியை இங்கே புதிய கஞ்சியாக சுடவைத்துத் தருகின்றார்கள் அதுதான் வித்தியாசம். <br /><br />//(அதிகம் எழுதிவிட்டேன் போல. நல்ல பதிவு வந்தி. நமது பின்னு}ட்டதாரர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்பதாற்காக பொறுத்திருந்து பின்னு}ட்டம் தந்தேன்)//<br /><br />நீங்கள் ஏற்கனவே செய்திகள் சம்பந்தப்பட்ட ஒரு பதிவும் எழுதியிருக்கின்றீர்கள் அத்துடன் இந்த விடயங்களையும் சேர்த்து அல்லது இவற்றைத் தனியாக ஒரு பதிவாக போட்டிருக்கலாம்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-52446298221329680982009-10-24T23:13:39.180+05:302009-10-24T23:13:39.180+05:30// மருதமூரான். said...
இலங்கை இலத்திரணியல் ஊடகத்து...// மருதமூரான். said...<br />இலங்கை இலத்திரணியல் ஊடகத்துறையில் தொழிநுட்ப ரீதியிலான முன்னேற்றங்கள் அதிகமுள்ளன. அதனை பாராட்ட வேண்டும். அதுவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒளிப்பதிவு, காட்சித்தொகுப்பு என்பன அற்புதம். (சகோதர மொழி பேசுகின்றவர்களே அதிகம் தொழிநுட்ப கலைஞர்களாக இருக்கின்றனர். //)<br /><br />நிச்சயமாக பாராட்டவேண்டும், நான் சில காலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சம்பந்தமான தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் வேலை செய்தபோது அவதானித்த விடயத்தை நீங்களும் சொல்கின்றீர்ர்கள் என்னவென்றால் தொழில் நுட்பம் சம்பந்தமான பயிற்சிக்கு வந்தவர்கள் பெரும்பாலும் சகோதர மொழிகாரர்களே. ஏனோ நம்மவர்கள் வருவதில்லை அல்லது குறைவு,<br /><br />//நிகழ்ச்சி தயாரிப்;பு, அல்லது நிகழ்ச்சி வடிவமைப்பு என்ற முக்கிய விடயங்களில் இலத்திரணியல் ஊடகங்கள் பல இடங்களில் தவறிழைக்கின்றன. இதற்கு உதாரணங்களை தேடி செல்ல தேவையில்லை. //<br /><br />இவர்களின் நிகழ்ச்சி தயாரிப்பு பக்கத்து வீடுகளை எட்டிப்பார்ப்பதாகவே பெரும்பாலும் இருக்கின்றது, வானொலிகளில் வித்தியாசமான நிகழ்ச்சிகள் சில இருந்தாலும் தொலைக்காட்சிகள் கொப்பிதான் அதிகம்.<br /><br />//ஊடகங்களுக்கிடையில் போட்டிகள் இருக்க வேண்டும். அப்பொழுது தான் தரமான நிகழ்ச்சிகள் வரும் என்ற தப்புக்கணக்கு நம்நாட்டு ஊடகங்களுக்கு பொருந்தாது. ஆந்த ஊடகம் இந்திய கலைஞர்களை வைத்து நிகழ்ச்சி செய்தால், நாங்களும் அவர்களை வரவழைத்து நிகழ்ச்சி செய்வோம் என்கிற நிலையே இங்கு உள்ளது. இவற்றை யாவரும் புரிந்துகொள்ள வேண்டும். //<br /><br />சம்பந்தப்பட்டவர்கள் புரிந்துகொள்வார்கள் என நினைக்கின்றோம்.<br /><br />//ஆனால், நம்நாட்டு மொழிப் பாரம்பரியத்தை பலர் சிதறடித்தாலும், சிலர் கட்டிக்காக்க முனைகிறார்கள் என்பது சிறு மகிழ்ச்சியைத் தருகிறது.//<br /><br />இதில் சிலர் பலராகவும் பலர் சிலராகவும் மாறினால் மகிழ்ச்சி.<br /><br />//மற்றப்படி, அடுத்த முதல்வன் யார்? என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஊடகங்கள் அல்ல.//<br /><br />அதே அதே, மக்கள் மனதில் அதிகம் எந்த ஊடகம் இடம் பிடித்திருக்கின்றதோ அந்த ஊடகம் தான் முதல்வன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-52410147469815788522009-10-24T19:59:56.711+05:302009-10-24T19:59:56.711+05:30அண்ணா, இப்போதுதான் சத்தி சூப்பர்ஸ்டார் நிகழ்ச்சி த...அண்ணா, இப்போதுதான் சத்தி சூப்பர்ஸ்டார் நிகழ்ச்சி தற்செயலாக முதன்முதலாக பார்க்கக்கிடைத்தது. நிக.ச்சி நடத்துபவரின் நடத்தையைப் பார்த்து சிரித்துச் சிரித்து சாப்பாடு புரைக்கேறியதுதான் மிச்சம். பாவம் போட்டியாளர்கள்.Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-39694975922352125022009-10-24T18:32:16.840+05:302009-10-24T18:32:16.840+05:30அண்மையில் சக்தி பண்பலை நடாத்திய “சக்தி சுப்பர் வொய...அண்மையில் சக்தி பண்பலை நடாத்திய “சக்தி சுப்பர் வொய்ஸஸ்“ போட்டியில் நானும் பங்குபற்றியிருந்தேன் - பங்குபற்றப் போன கதை வில்லங்கமானது - வித்தியாசமானது - அதை இந்த பகிரங்க மேடையில் பலரின் தனித்தன்மை கருதி சொல்லமுடியவில்லை - மன்னிக்கவும். இந்தப் போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றிய போது - போட்டி தவிர்ந்த நேரத்தில் சில சக்தி அறிவிப்பாளர்களுடன் உரையாடும் சந்தர்ப்பமும் சக போட்டியாளர்களுடன் கலந்துரையாடும் அனுபவமும் கிடைத்தது - இதன் போது அங்கு வந்திருந்த அனைவரும் சக்தி பண்பலையைக் தினமும் கேட்பவர்கள். நானும் எனது நண்பர்கள் இருவரும் தான் வானொலிப் பக்கம் காது வைக்காதவர்கள் ஆக சம்பாஷணைகளின் போது அவர்கள் சக்தி நிகழ்ச்சிகள் பற்றிப் பேசும் போது எனக்கும் என்னருமை நண்பர்களுக்கும் அது எல்லாம் சூனியமாகத் தெரியும். ஆனால் இலங்கை வானொலிகளின் தமிழ்ப்பிழைகளை ஆங்காங்கே நான் கவனித்திருக்கின்றேன் ஆக அதை நான் அப்படியொரு சம்பாணையின் போது சுட்டிக்காட்டுகையில் புதியதொரு தர்க்கம் பிறந்தது. நான் சரியில்லை என்று சொன்ன (அதாவது மொழிப்பழையும் தரமுமற்ற) அந்தக் குறிப்பிட்ட நிகழ்ச்சிதான் தரப்படுத்தலில் முதலிடத்தில் உள்ளதாம் என அதிகாரபூர்வமான ஒருவர் தெரிவித்தார் - நான் வியந்து போனேன் - அந்த ரேட்டிங் முறையைப் பற்றி பேச்சு வலுக்கும் போது மக்கள் எதை விரும்புகிறார்களோ நாங்களும் அதையே கொடுக்கின்றோம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. நான் அந்தக் கருத்தை முற்றாக மறுத்தேன் - ஒரு நல்ல சிறந்த அறிவிப்பாளனுக்கு அழகு தனக்கேற்ப மககளின் இரசனையை மாற்றுவதேயன்றி மக்களின் இரசனைக் கேற்ப தன்னை மாற்றிக்கொள்வதல்ல என்றேன் - ஆனால் வர்த்தகத்தை மையப்படுத்திய வானொலிச் சேவையில் இது சாத்தியமில்லை - மக்கள் விரும்புவதை நாம் போடாவிட்டால் அடுத்த பண்பலைக்காரன் போடுவான் மக்களும் எங்கள் பண்பலையைக் கேட்பதைவிட்டு அடுத்த பண்பலைக்கு மாறிவிடுவார்கள் என்று தங்கள் கருத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தார். இந்த கட்டத்தில் எனக்கு ஆழமாகச் சிந்திக்கத் தோன்றியது - இது வெறுமனே தனிப்பட்ட வானொலிச் சேவையின் பிழையல்ல - இது ஒட்டு மொத்த வானொலிச் சேவை நிலையங்களின் கூட்டுப்பிழை. சந்தையைக் கைப்பற்றும் போட்டியிலே ஆளுக்காள் அடித்துத்துவைத்துக்கொண்டு தரத்தை மறந்து விடுகிறார்கள். ஆக வானொலிச் சேவையிலுள்ள அறிவிப்பாளர்கள் நினைத்தாலும் அதை மாற்ற வர்த்தகம் ரீதியான காரணங்கள் தடையாக இருக்கிறது என்பது ஏற்கத்தக்க உண்மைதான் ஆனாலும் இவர்கள் வர்க்க நோக்கத்துக்காக தங்கள் தார்மீகப் பொறுப்புக்களையும் விற்றுவிடுவது மிகவும் கவலையளிக்கிறது. <br /><br />அடுத்ததாக இந்தியத் தமிழின் ஆதிக்கம். - இது எல்லா வானொலிகளையும் விட சக்தியில் அதிகம் இருக்கிறது காரணம் சக்தி பண்பலையின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர், வாரஇறுதி நிகழ்ச்சிப் பொறுப்பாளர் உட்பட சில அறிவிப்பாளர்கள் இந்தியர்களே - இதைப்பார்த்தபோது இலங்கையில் திறமைக்குப் பஞ்சமோ எனத் தான் எனக்கு எண்ணத்தோன்றுகிறது. இந்த இந்திய அறிவிப்பாளர்களின் திறமை பற்றி எனக்கு முரண்பாடு எதுவுமில்லை ஆனால் தனித்துவமான தேசம், மொழி என்ற அடிப்படையில் பார்க்கும் போது இது இந்தியத்துவத்தின் திணிப்பாக ஆகுமோ என்னுமு் அச்சம் என்னிடமுண்டு - இது தொடர்பில் மஹாராஜா கூட்டு நிறுவனத் தலைமைகள் சிந்திக்க வேண்டும்.<br /><br />சரி சக்தியை பார்த்தாச்சு - மற்றவை மட்டும் என்ன மேலா? சூரியன் முன்பிருந்த தரத்தில் இப்போது இல்லை - இங்கும் இந்தியத் தமிழ் வாடை. தென்றல் இந்தியத்தமிழுக்கும், நவீன பண்பலைப் பாணிக்குமு் கிட்டத்தட்ட முழுவதுமாக மாறிவிட்டது, வெற்றியும் கொஞ்சம் இந்தியச் சாயலில் நனைகிறது - அதுவும் அந்த பகல்பந்தி நிகழ்ச்சி கேட்கச்சகிக்கவில்லை.<br /><br />மாற்றங்கள் தாமாக நடப்பதில்லை - நாமாக ஏற்படுத்துவதுதான் - அன்புள்ள ஊடகத்துறை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து இவற்றைக் கவனத்திற் கொண்டு கொஞ்சம் சிந்தியுங்கள்.என்.கே.அஷோக்பரன்https://www.blogger.com/profile/08246084263994173082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-23508428070432201862009-10-24T17:51:04.892+05:302009-10-24T17:51:04.892+05:30அருமையான விமர்சனம் வந்தி!
எவ்வளவு தரம் எழுதினாலும்...அருமையான விமர்சனம் வந்தி!<br />எவ்வளவு தரம் எழுதினாலும் அவர்கள் திருந்தமாட்டார்கள் என்பதால் எழுதுவதை நிறுத்துவது பற்றி எனக்கு உடன்பாடு இல்லை. திருப்பி திருப்பி பிழையை சொன்னால்தான் இதைப்பற்றிய தெளிவு மக்களுக்காவது போய்ச்சேரும். <br /><br />அறிவிப்பாளர்களுக்கும் நிகழ்ச்சித்தயாரிபாளர்களுக்கும் பின்னால் இருந்து ஏதோ ஒரு வலிமையான மேல்மட்டச் சக்தி தான், இப்படி ஆங்கிலம் கலந்த தமிழை பிரயோகிக்கச்சொல்லி உந்துகிறது என்பதையும் மறுக்க முடியாது.ஆதித்தன்https://www.blogger.com/profile/00030260673149286554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-23313435229617251162009-10-24T13:00:07.261+05:302009-10-24T13:00:07.261+05:30நல்ல இடுகை எப்போதோ எதிர்பார்த்த இடுகை. நன்றாக எழுத...நல்ல இடுகை எப்போதோ எதிர்பார்த்த இடுகை. நன்றாக எழுதப்பட்டிருக்கின்றது. நீங்கள் என்ன சொன்னாலும் எங்கள் விருப்பம்போல் நடப்பதில் நாங்கள்தான் முதல்வன் என்று சொல்லும் ஊடகங்கள்தான் இன்று இலங்கையில் அதிகம். <br /><br /><br />அவர்கள் இலவசமாக சேவை வழங்குகின்றோம் என்பதற்காக எதனையும் செய்ய முடியாதல்லவா? தமிழ் கொலை செய்யப்படும்போது தட்டிக்கேட்க, சுட்டிக்காட்ட வேண்டியது எமது தமிழர் ஒவ்வொருவரது கடமை. <br /><br /><br />இன்றைய அறிவிப்பாளர்கள் நல்ல தமிழ் அறிவிப்பாளர்களாக இருந்து எமது தமிழின் பெருமையினை உலகுக்கு எடுத்துச் சென்ற எமது மூத்த அறிவிப்பாளர்களின் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்பதே எனது அவா. <br /><br />உலகம் முழுவதும் இலங்கை அறிவிப்பாளர்கள் என்றாலே ஒரு சிறப்பு இருக்கின்றது அதனை இன்றைய அறிவிப்பாளர்கள் காப்பாற்ற வேண்டும். <br /><br /><br />இன்று தாங்கள் விடுகின்ற பிழைகளை சுட்டிக்காட்டும்போது எத்தனை அறிவிப்பாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஒரு சிலரே.Adminhttps://www.blogger.com/profile/17298278254384962552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-85900223809927509212009-10-23T20:57:15.283+05:302009-10-23T20:57:15.283+05:30வந்தி அண்ணே வணக்கம் ...........!உங்கட பார்வை நடுநி...வந்தி அண்ணே வணக்கம் ...........!உங்கட பார்வை நடுநிலையாக இருக்கலாம் ஆனால் என்னை பொறுத்தவரை ஒரே ஒரு முதல்வன்தான் நம்ம ARV எங்க இருக்கிறாரோ அதுதான் முதல்வன் அவர்தான் நான் அறிய முதன் முதலில் வானொலி நிக்கழ்சிகளை பொழுதுபோக்கு என்பதை தாண்டி நல்ல நாலு விடயங்கள் கிடைக்கும் ஒன்றாக மாற்றியவர் <br />அதாவது பாட்டு கேட்பதற்கும் அரட்டை அடிப்பதற்கு மட்டும் தான் வானொலி என்பதை மாற்றியவர் அவருடைய முத்துகள் பாத்து கேட்டு கவிதை எழுத தொடங்கியவர்கள் பலர் இதயோ ஒரு புகழ்ச்சிக்காக சொல்லவில்லை உண்மை அதுதான் ...........balavasakanhttps://www.blogger.com/profile/00370004566704459147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-38700553429379742972009-10-23T15:30:59.955+05:302009-10-23T15:30:59.955+05:30@ புல்லட்
”உன்னுடைய தாயை இன்னொருவன் பிழைபிழையாக ...@ புல்லட் <br /><br />”உன்னுடைய தாயை இன்னொருவன் பிழைபிழையாக சொன்னால் ப்ரீயாத்தானே சொல்லுறான் எண்டு பொறுத்துக்கொண்டிருக்கப்போவதில்லை அதே பொலத்தான் தம்பி இதுவும்”<br /><br />காற்றில் கலக்கும் விஷம் போன்றது இது.. போதை மருந்துக்குட்பட்டவனை அதனின்றும் மீட்பது ஒரு தூய மனிதனின் கடமை... ””<br /><br />புல்லட்டிடம் இருந்து இப்படியான பதில்கள் எதிர்பார்க்கவில்லை.புல்லட்டின் ரசிகன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-68638890160893790212009-10-23T11:17:34.082+05:302009-10-23T11:17:34.082+05:30//சவரிமுத்து தயாளன் said...
யார் இந்த என்ன கொடும ச...//சவரிமுத்து தயாளன் said...<br />யார் இந்த என்ன கொடும சார் என்ற ரோதனை பிடிச்சவன்?<br />தன்னை தனியனாகக் காட்டிக் கொள்வதில் ஈன விருப்பம் கொண்ட ஒரு ஈகோ கேசா?//<br /><br />அவர் ஒரு பிரபலம் விரும்பி அவரின் பதிவுகளில் இலங்கைப் பதிவர்களைச் சீண்டுவதுதான் அவரின் நோக்கம்<br /><br />//இவன்டை ப்லோக்கைப் பார்த்தாலே ரசனை தெரியுதே. //<br /><br />ஹாஹா <br /><br />//இவரும் இப்பிடியோ?<br />பகிடியா சொன்னாரோ இல்லாட்டி இவர் ரசனையும் இப்பிடியோ?//<br /><br />அவர் என்னைக் நக்கலடிக்க எழுதியவை இவை. <br /><br />//ஆண்டாவா தமிழ் மக்களைக் காப்பாத்தும்//<br /><br />நல்ல கோரிக்கை ஆனால் அவர் காப்பாத்தமாட்டார்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-79212800339123094382009-10-23T11:12:25.372+05:302009-10-23T11:12:25.372+05:30// Paheerathan said...
நல்ல விமர்சனம் வந்தி, எழுதவ...// Paheerathan said...<br />நல்ல விமர்சனம் வந்தி, எழுதவேணும் என்று நினைத்து எழுதாமல் போன ஒரு பதிவு இது.//<br /><br />உங்களது நீண்ட விளக்கத்துக்கும் நன்றிகள் பகீ, நீங்கள் மட்டுமல்ல பலர் எழுத நினைத்து இவர்கள் திருந்தமாட்டார்கள என எழுதாத விடயம்.<br /><br />//பதிவுலகத்துக்கு வரமுதல் வீரகேசரிக்கு ஒன்று எழுதி அவர்கள் பிரசுரிக்க வில்லை.//<br /><br />வீரகேசரி எந்த இலத்திரனியல் ஊடகம் பற்றி எழுதினாலும் பிரசுரிக்கமாட்டார்கள். தினக்குரலுக்கு அனுப்புங்கள்.<br /><br />//ஆங்கிலம் இந்தியத்தமிழ் என்பவற்றை இந்த அறிவிப்பாளர் /அறிவிப்பாளினிகள் (சக்தியில்)தாங்களாக விரும்பித்தான் கதைக்கிறார்களா இல்லை மேலிடத்தின் அழுத்தமாக இருக்குமா என்று ஏதாவது விசாரித்து பார்த்தீர்களா ? //<br /><br />ஆமாம் இந்த பிரச்சனை இருக்கிறதாக கேள்விப்பட்டேன், காரணம் மேலிடம் இந்தியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. நம் நாட்டில் திறமைசாலிகள் இல்லையாம் அக்கரைக்கு இக்கரை பச்சை.<br /><br /><br />//நமக்கு தெரிஞ்சவங்க ரெண்டு மூணு பேர் இருக்கிறாங்கதானே? ஏனெனில் முதல்வன் கோசங்களையும் மேலிடங்கள்தான் போடவைக்கின்றன, அறிவிப்பாளர்கள் என்ன செய்வார்கள் பாவம்.//<br /><br />எனக்குத் தெரிந்தவர்கள் பலர் இருந்தார்கள் இருக்கின்றார்கள். சில விடயங்கள் மட்டும் கேட்டறிந்தேன்.<br /><br />//எழுவாய் பயனிலை தெரியாமல் பேசினால், அதற்க்கு எவ்வளவு எழுதினாலும் தகும். <br /><br />உண்மை உண்மை. <br /><br />//ஆனால் இந்தியதமிழ் ஆங்கிலம் என்று வரும்போது அது, அவர்கள் கையில் இல்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில் தொலைக்காட்சி, வானொலி இரண்டுக்கும் இந்திய இறக்குமதிகள்தான் தலைமை என்று கேள்விப்பட்டிருக்கிறேன் உண்மை தெரியவில்லை. ///<br /><br />நானும் கேள்விப்பட்டேன் <br /><br />//எந்தவிதமான தயாரிப்புக்களுமில்லாமல் நிகழ்ச்சி செய்ய வருகிறார்கள் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. நான் கூட நினைப்பதுண்டு இப்பிடி கதைக்கிறாங்களே இவர்கள் தாங்கள் செய்யும் நிகழ்ச்சியை திரும்ப தொலைக்கட்சியில் பார்ப்பார்களா என்று,//<br /><br />இல்லையாம் நிகழ்ச்சி செய்பவர்கள் தேடல் இல்லாமல் டொக்டர் ஒருவரைப் பேட்டிகாண டொக்டராக இருக்கவேண்டும் என ஒரு அறிவு ஜீவி சொல்கின்றார். ஒருவனின் அறிவு அவனது படிப்பை வைத்து அளக்கப்படுவதில்லை என்பது ஏனோ அந்த புத்திசாலிக்கு தெரியவில்லை. <br /><br />//நான் சிங்கள, ஆங்கில தொலைக்காட்சிகளின் ரசிகனாக மாறுவதற்கு காரணமே இந்த அருவிப்பாலர்கல்தான் ( தெரியாமல் விட்ட எழுத்துப்பிழை அல்ல). //<br /><br />இவர்களை விட சில நல்ல நிகழ்சிகளை மட்டும் பார்க்கலாம் இல்லையென்றால் கிரிக்கெட், டிஸ்கவரி பக்கம் பார்வையைத் திருப்புங்கள்.<br /><br />//கொஞ்சம் உள்வீட்டு இரகசியங்களை அறிய முடிந்தால் அறிந்து பார்த்து இன்னொரு பதிவு போடுங்கள்.//<br /><br />இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தித்தான் உடம்பை ரணகளமாக்கிவிட்டீர்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-57605641108341481482009-10-23T10:39:32.703+05:302009-10-23T10:39:32.703+05:30வந்தி,
குறிப்பிடத்தக்க நல்ல மாற்றங்கள் இலத்திரனியல...வந்தி,<br />குறிப்பிடத்தக்க நல்ல மாற்றங்கள் இலத்திரனியல் ஊடகங்களில் இடம்பெற்றிருக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் சமுதாயப் பங்கு என்று நோக்கும்போது பல விடங்கள் ஊடகங்களினால் தவறவிடப்பட்டுள்ளன.<br /><br />தலைவிரிகோலம் என்பதற்கு பின்புலத்தில் உயரதிகாரிகள் தான் காரணகர்த்தாக்கள். ஆங்கில மோகம் தான் இதற்குக் காரணம். ஆங்கிலத்தில் பேசுவது, ஆங்கிலத்தை உண்ணுவது, ஆங்கிலத்தையே துப்புவதன் பின்விளைவுதான் இது. தவிர்க்க முடியாததாலும் தாங்கள் பெரும்பாலும் விரும்புவதாலும் சிலர் இதைப் பின்பற்றுகிறார்கள்.<br /><br />தனிப்பட்ட hPதியில் அந்த அறிவிப்பாளர்களின் நற்பெயர் களங்கப்படுகிறது என்பதையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். “ஐயோ இந்த டீவியா ஒரே அறுவல் தான் மாத்துங்கப்பா” என்ற குரல் அடிக்கடி வீடுகளில் ஒலிப்பதை நான் கேட்டிருக்கிறேன்.<br /><br />குடும்பத் தலைவியர் மாத்திரம் தொலைக்காட்சி பார்ப்பதில்லை. எத்தனையோ வேலைகளுக்கு மத்தியிலும் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மாலையில் வீடுவந்துசேரும் குடும்பத் தலைவர்கள், இளைஞர்களுக்கு காத்திரமான நிகழ்ச்சி படைக்கப்படுகின்றனவா? அவர்களுக்கு மேலும் தலையிடியாய் அமையும் அறுவல்களாக இருந்தால் எப்படி விரும்புவார்கள்? எத்தனையோ புதிய விடயங்களை தொலைக்காட்சிகளில் பகிரலாம். நாளுக்கு நாள் எத்தனையோ மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை பயனுள்ள தகவல்களைக் கொண்டு மாற்றியமைக்கலாம்.<br /><br />இதற்கெல்லாம் புதிய திட்டமிடல்கள் அவசியம். வெறும் இந்திய தொலைக்காட்சிகளை மையமாக வைத்துக்கொண்டு பார்ப்பதால் குறுகிய வட்டத்துக்குள்ளேயே நாம் இருந்துகொண்டிருக்கிறோம்.<br /><br />(அதிகம் எழுதிவிட்டேன் போல. நல்ல பதிவு வந்தி. நமது பின்னு}ட்டதாரர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்பதாற்காக பொறுத்திருந்து பின்னு}ட்டம் தந்தேன்)இறக்குவானை நிர்ஷன்https://www.blogger.com/profile/09161661004030566386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-18703673996538502522009-10-23T09:57:45.470+05:302009-10-23T09:57:45.470+05:30வணக்கம் வந்தி,
இலங்கை இலத்திரணியல் ஊடகத்துறையில் ...வணக்கம் வந்தி,<br /><br />இலங்கை இலத்திரணியல் ஊடகத்துறையில் தொழிநுட்ப ரீதியிலான முன்னேற்றங்கள் அதிகமுள்ளன. அதனை பாராட்ட வேண்டும். அதுவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் ஒளிப்பதிவு, காட்சித்தொகுப்பு என்பன அற்புதம். (சகோதர மொழி பேசுகின்றவர்களே அதிகம் தொழிநுட்ப கலைஞர்களாக இருக்கின்றனர். அவர்களின் திறன் பாராட்டத்தக்கது) ஆனால், நிகழ்ச்சி தயாரிப்;பு, அல்லது நிகழ்ச்சி வடிவமைப்பு என்ற முக்கிய விடயங்களில் இலத்திரணியல் ஊடகங்கள் பல இடங்களில் தவறிழைக்கின்றன. இதற்கு உதாரணங்களை தேடி செல்ல தேவையில்லை. <br /><br />ஊடகங்களுக்கிடையில் போட்டிகள் இருக்க வேண்டும். அப்பொழுது தான் தரமான நிகழ்ச்சிகள் வரும் என்ற தப்புக்கணக்கு நம்நாட்டு ஊடகங்களுக்கு பொருந்தாது. ஆந்த ஊடகம் இந்திய கலைஞர்களை வைத்து நிகழ்ச்சி செய்தால், நாங்களும் அவர்களை வரவழைத்து நிகழ்ச்சி செய்வோம் என்கிற நிலையே இங்கு உள்ளது. இவற்றை யாவரும் புரிந்துகொள்ள வேண்டும். <br /><br />நுpகழ்ச்சி தயாரிப்பாளராக அல்லது வடிவமைப்பாளராக இருப்பவருக்கு என்னென்ன கடமைகள் இருக்கின்றன என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆதற்கு அவர்களுக்கு முறையான பயிற்சி அவசியம். வேலைக்கு வந்த சில நாட்களிலேயே நிகழ்ச்சி தயாரிப்பு பணிகளில் அவர்களை அமர்த்தியவுடன், அவர்கள் இந்திய ஊடகங்களுக்கு பின்னால் செல்ல முனைகின்றனர். ஆதனால், நேர்த்தியும் இல்லாமல், தரமின்றி நிகழ்ச்சிகள் வருகின்றன. இது நம்நாட்டு அனைத்து ஊடகங்களுக்கும் பொருந்தும். ஆனால், நம்நாட்டு மொழிப் பாரம்பரியத்தை பலர் சிதறடித்தாலும், சிலர் கட்டிக்காக்க முனைகிறார்கள் என்பது சிறு மகிழ்ச்சியைத் தருகிறது.<br /><br />மற்றப்படி, அடுத்த முதல்வன் யார்? என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். ஊடகங்கள் அல்ல.maruthamooranhttps://www.blogger.com/profile/17276277226862920501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-62837658173755667812009-10-23T08:50:24.083+05:302009-10-23T08:50:24.083+05:30என்ன கொடுமை சார் என்ற காழ்ப்புணர்சிக்கு
நீங்கள் ப...என்ன கொடுமை சார் என்ற காழ்ப்புணர்சிக்கு<br /><br />நீங்கள் பதிவர் சந்திப்புக்கு வரவில்லை என்ற ஆதாரம் எம்மிடம் இருக்கின்றது. அப்படி வந்திருந்தால் நீங்கள் பொய் பெயரில் வந்திருப்பீர்கள். ஒரு ஏமாற்றுக்காரரிடம் எங்கள் கருத்துகளை கேட்க நாம் தயாரில்லை. <br /><br />Image resize செய்வது எனக்கும் தெரியும் ஆனால் நான் எழுதுவதே ஒழிய படங்களில் மாற்றம் செய்து என் நேரத்தை வீண்டிக்கமுயலவில்லை. உங்களின் காழ்ப்புணர்சிகளை எல்லாம் உங்கள் வலையில் வைத்துக்கொள்ளுங்கள் இங்கே வந்து குப்பை போடாதீர்கள்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-66077405597461587382009-10-23T08:38:20.393+05:302009-10-23T08:38:20.393+05:30//இதுவரை எந்த நிகழ்ச்சிகளையும் மக்களிடம் கேட்டுப் ...//இதுவரை எந்த நிகழ்ச்சிகளையும் மக்களிடம் கேட்டுப் பெயர் வைப்பதில்லை//<br />ஏன் இல்லை? R&D department எதற்கு இருக்கு?<br /><br />//கந்தசாமி ஏன் இங்கே?//<br />பதிவுலகுக்கும் சாமானிய மனிதர்கட்கும் இருக்கும் இடைவெளியை காட்ட.. புரியலையா? <br /><br />//மற்றவர்களையும் பதிவர் சந்திப்புகளையும் பொய் எனச் சொல்லிக்கொண்டு திரியும்//<br />உங்கள் பிரச்சனை புரிகின்றது.<br /><br />அதாவது விமர்சனத்துக்கு நீங்கள் தயாரில்லை.. அப்படியானால் சக்திக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் அப்பு?<br />http://eksaar.blogspot.com/2009/10/iam-not-afraid-to-be-alone.html<br /><br />//என்ன மண்ணாங்கட்டிக்கு தமிழ் நிகழ்ச்சிகள்.//<br />சும்மா இருக்கிற நேரத்தில் காசு உழைக்க.. :D<br /><br />//நான் சன் ரிவி பார்க்கின்றேன் என எங்கே சொன்னேன். மீண்டும் நீங்கள் ஒரு அரைகுறை என்பதை நிரூபித்துவிட்டீர்கள்.//<br /><br />இவர்களின் சொந்த தயாரிப்புகளை தவிர்த்து ஏனையவற்றை சன்னிலையே பார்த்துவிடுகின்றார்கள். <br />என்று சொல்லியிருக்கிறீர்கள் இல்லையா? இந்திய பாணியை மக்கள் புறக்கணித்திருந்தால் சன் பார்ப்பார்களா? கேபிள் எடுப்பார்களா? <br /><br />/அறிவிப்பாளர்கள் படித்தவர்கள் பட்டதாரிகள் /<br />பட்டம் ஒருதுறையில் தான் எடுப்பார்கள். BBA என்றால் வர்த்தகம். BA என்றால் கலை. இவர்களிடம் ஒரு வைத்தியரிடம் கேள்விகேட்கும் அளவுக்கு அறிவு இருக்குமா அப்பு? <br /><br />/அப்படியா எந்த கிராமத்தில் பேசுகின்றார்கள்./<br />கிராமத்தில் வேலைமெனக்கெட்டு தொழிலுக்கு போகாம ரேடியோவா கேக்கிறாங்க? கேக்கெறவங்க அப்படித்தான் பேசுறாங்க.. நீங்க வெள்ளவத்தயில போய் பாருங்கோ..<br /><br />//அப்ப ஏன் வர்த்தக சேவை, தேசிய சேவை என வைத்திருக்கின்றார்கள//<br />வெச்சவங்க கிட்ட கேளுங்கோ..தேசிய சேவை தேசிய நலனுக்காக நல்ல தமிழில் தானே செய்றாங்க..எத்தன பேர் கேக்கிறாங்க அத? <br /><br />//இணையத்தில் கிடைத்த படங்களைப் போட்டுள்ளேன்//<br />ஐயா அறிவுக்கொழுந்தே image resize பண்ண தெரியாதோ,,,என்ன கொடும சார்http://eksaar.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-30827493.post-8224719320762346542009-10-23T01:09:11.142+05:302009-10-23T01:09:11.142+05:30//என்ன கொடும சார் said...
சுவர்ண ஒலிதான் இன்றைய வா...//என்ன கொடும சார் said...<br />சுவர்ண ஒலிதான் இன்றைய வானொலிக்கெல்லாம் முன்மாதிரி.. அதைத்தானே எல்லாரும் இன்று கொப்பி பண்ணி செய்துகொண்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் சக்தியில் வள்.. என்று எரிந்து விழுந்துகொண்டும்.. கெக்கே பிக்கே என்று சிரித்துக்கொண்டுமல்லவா இருந்தார்கள்.//<br /><br />ஐயோ ஐயோ தயவு செய்து இரு நாட்கள் தரவும் இதனை நினைத்துச் சிரித்துவிட்டுவருகின்றேன்.வந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.com